என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சாதம் வடித்த கஞ்சியில் இவ்வளவு நன்மைகளா?
    X

    சாதம் வடித்த கஞ்சியில் இவ்வளவு நன்மைகளா?

    • நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
    • நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது.

    பொதுவாக சாதம் வடித்தவுடன் அந்த கஞ்சியை கீழே ஊற்றிவிடுகிறோம். அதன் நன்மைகள் தெரிந்தவர்கள் மட்டும் தான் அந்த கஞ்சியை கீழே ஊற்ற மாட்டார்கள். நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நீராகாரம் என சொல்லி அதை வீணாக்காமல் குடித்துவிடுவர். அவர்களைப் போல நீங்களும் வடித்த கஞ்சியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்துகொண்டால் அதை வீணாக கீழே ஊற்ற மாட்டீர்கள்.

    சாதம் வடித்த கஞ்சியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. சாதத்தில் எவ்வளவு ஆற்றல் இருக்கிறதோ அதே அளவு ஆற்றல் இந்த கஞ்சியிலும் உள்ளது. இளஞ்சூடான வடித்த கஞ்சியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குடித்தால் வயிறும் நிறைந்துவிடும் தேவையான ஆற்றலும் கிடைத்துவிடும்.

    சாதம் வடித்த இந்த கஞ்சியில் பி1,பி2,பி6 ஆகியவை உள்ளது. உங்கள் உடலுக்கு தேவையான பொட்டாசியம், மக்னீசியம் சத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் எலக்ரோலைட்டுகளை சமநிலைப்ப்படுத்துகிறது. சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கும், சில நேரத்தில் சருமத்தில் எரிச்சலை போக்கவும், முகப்பருக்களை குறைப்பதற்கும் கூட பயன்படுகிறது.

    இதிலுள்ள பொட்டாசியம் உடலில் உள்ள சோடியம் அளவை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது.

    காலையில் எழுந்தவுடன் வடித்த கஞ்சி குடித்தால் அந்த நாள் புத்துணர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதுமட்டுமின்றி வயிறு நிறைந்த உணர்வையும் பெறுவதால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது. அன்றைய நாளைக்கு தேவையான ஆற்றலும் கிடைத்து விடும்.

    Next Story
    ×