என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீர்ப்பை"

    • பாரம்பரிய இந்திய கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் முழு குந்து நிலை மிகவும் ஆரோக்கியமானது.
    • முழு குந்து நிலையில் இடுப்பு தசைகள் ஓய்வு எடுக்கின்றன.

    சிறுநீரை அதிகநேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பொதுமக்கள் பலரும் பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழித்தால் கிருமிகளால் பாதிப்பு வரக்கூடும் என கருதி பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழிப்பதையோ அல்லது பொது இடங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதையோ தவிர்த்து வருகின்றனர்.

    இவ்வாறு சிறுநீரை அடக்குவது அல்லது நீண்ட நேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், பெண்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும் அரை குந்து நிலை முழு சிறுநீர் பை காலியாவதை தடுக்கிறது. சிறுநீர் திரும்புதல், சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    இது சிறுநீர்ப்பை அழுத்தத்தை அதிகரிக்கிறது. மற்றும் சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள், சிறுநீர்ப்பை எரிச்சல் மற்றும் நீண்டகால பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.



    மேலும் சிறுநீர்ப்பை தசைகள் ஏற்படும் செயல்படும் விதத்தை பாதிக்கிறது. சிறுநீர் சேமிப்பது பாக்டீரியாக்கள் வளர ஒரு நல்ல சூழலை வழங்குகிறது. இது மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சிறுநீரக தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    சிறுநீரை அடக்கி வைத்திருந்தாலும் அல்லது சரியாக உட்காராவிட்டாலும் 2 பழக்கங்களிலும் இடுப்பு, தலை, தசை பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் மேலும் கூறுகையில், பாரம்பரிய இந்திய கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் முழு குந்து நிலை மிகவும் ஆரோக்கியமானது. முழு குந்து நிலையில் இடுப்பு தசைகள் ஓய்வு எடுக்கின்றன என்றனர்.

    • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படக்கூடிய உணர்வாகும்.
    • ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

    நீர் கடுப்பு என்பது சிறுநீர் கழிக்கும் போது வலி, அசவுகரியம், எரிச்சல் ஏற்படக்கூடிய ஒரு உணர்வாகும். இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. சிறுநீர் கடுப்புக்கு முக்கிய காரணமாக கீழ்கண்டவை கருதப்படுகிறது.

    சிறுநீர் பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், புரோஸ்டேட் சுரப்பி போன்றவற்றில் தொற்று, இன்டர்ஸ்டீடியல் சிஸ்டைடிட்ஸ், சிறுநீரக, சிறு நீர்ப்பை கற்கள், சில மருந்துகளின் பக்க விளைவு, புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோ தெரபி சிகிச்சை, சிறுநீர்ப்பை புற்றுநோய், சோப்பு மற்றும் லோஷனில் உள்ள ரசாயனங்களால் ஏற்படும் ஒவ்வாமை. இதற்கு தீர்வாக தினசரி குறைந்தபட்சம் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, பச்சை பூ கோஸ் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிக காரமான உணவு, அமிலம் அதிகமுள்ள உணவு, காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களை தவிர்க்க வேண்டும்.

    சிறுநீர் பாதை தொற்றுக்கு பாக்டீரியா ஒரு காரணமாக இருந்தால் மருத்துவர் உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம். சிறுநீரக கற்கள் காரணமாக நீர்கடுப்பு இருந்தால், கற்களின் அளவை பொறுத்து சிகிச்சை மாறுபடும். ஆகையால் உங்களுக்கு நீர் கடுப்பு பிரச்சினை ஏற்படும் போது மருத்துவரை கலந்து ஆலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

    ×