தினமும் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.நீரிழிவு நோயாளிகளுக்கு பேரீச்சம் பழம் ஏற்புடையதல்ல.
தினமும் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
Published on

தினமும் 2 அல்லது 3 பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். 3 பேரீச்சம் பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் என்னவாகும் என்கிறீர்களா? அப்படி அதிகம் சாப்பிடுவது பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

ஏனெனில் பேரீச்சம்பழங்கள் கலோரிகள் நிறைந்தவை. ஒரு பேரீச்சம் பழத்திலேயே 20 முதல் 30 கலோரிகள் இருக்கும். அதனை அதிகமாக உட்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக நார்ச்சத்து காரணமாக வயிறு வீக்கம், வாயுத்தொல்லை போன்ற செரிமான கோளாறுகளும் உண்டாகும்.

பேரீச்சம் பழம் அதிக கிளைசெமிக் குறியீடுகளை (சுமார் 55) கொண்டிருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்புடையதல்ல.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com