என் மலர்
ஆரோக்கியம்
கொரோனா கால நெருக்கடிகள், நமது பொருளாதார லட்சியத்தில் எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்படும் போது எத்தகைய நெருக்கடியையும் நம்மால் சமாளித்து மீண்டு வர முடியும்.
கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க போடப்பட்ட பொது முடக்கத்தால் பலரின் பொருளாதாரமும் முடக்கப்பட்டது. சென்ற வருட தாக்குதலில் இருந்து இப்போது தான் மீண்டு எழ ஆரம்பித்தோம். அதற்குள் இரண்டாம் அலை நம்மை தாக்கிவிட்டது. இதிலிருந்து பொருளாதாரரீதியாக பாதுகாப்பாக இருப்பது முக்கியம். இந்த குறுகிய கால நெருக்கடி, நீண்டகால நிதி நெருக்கடியாக மாறுவதை தடுக்க ஒரு சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான நேரம் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் நம்மை மீறி ஆன்லைனில் தேவையற்ற பொருட்களை வாங்க முயற்சிப்போம். இதை தடுக்க ஒவ்வொருநாளும் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். ஆசைகளையும் தேவைகளையும் பிரித்தறிய வேண்டும். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றும் போது குறைந்தது மூன்று நாட்கள் அந்த ஆர்வத்தை தள்ளிப்போட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதன் பிறகும் அது நமக்கு தேவையென்று தோன்றினால் மட்டுமே வாங்க வேண்டும்.
பொது முடக்கத்தினால் ஜிம், அழகு நிலையம் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன. இவற்றில் உறுப்பினராக இருப்பவர்கள் பொது முடக்க காலத்தில் அதற்கான மாத சந்தா கட்டுவதை தவிர்க்கலாம். அந்த பணத்தை அவசர கால நிதியில் சேர்த்து பயன்படுத்தலாம்.
செலவு குறித்த தெளிவான யோசனை அவசியம். டெபிட்மற்றும் கிரெடிட் கார்டுகளின் அறிக்கைகளை பெற்று எவற்றுக்கெல்லாம் செலவு செய்திருக்கிறோம் என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அதிக வட்டி செலுத்தும் கடன்களை அடைத்தல் குறிப்பாக கடன் அட்டைகளுக்கான தொகையை முழுவதுமாக செலுத்தி விடுதல் மிகவும் நல்லது. இதனால் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
உணவுக்கான செலவுகளை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். வெளியில் இருந்து உணவு வாங்குவதை விடுத்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது உடலுக்கும், பட்ஜெட்டுக்கும் நல்லது. வீட்டில் சமைப்பதிலும் ஆடம்பர உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான சத்தான உணவுகளை மட்டுமே சமைத்து சாப்பிட வேண்டும்.
பயன்படுத்தாத பொருட்களை விற்பதன் மூலமும், சேமிப்பை அதிகப்படுத்த முடியும். மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு பொருளை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அது உங்களுக்கு தேவையற்றது என்று எடுத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு உங்கள் பிள்ளைகள் பள்ளி செல்ல பயன்படுத்திய மிதி வண்டிவை அவர்களை கல்லூரி படிப்பை முடித்த பின்னும் கூட அப்படியே பயன்படுத்தாமல் வைத்திப்பீர்கள். அதனை ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்கலாம்.
நம்மிடம் இருக்கும் திறமைகளை கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேறலாம். பொது முடக்கத்தில் ஆன்லைனில் சங்கீதம் கற்றுத்தருவது, மொழி வகுப்புகள் எடுப்பது சமையல் கற்றுக்கொடுப்பது, போன்றவற்றால் நமது திறமையும் வருமானமும் அதிகரிக்கும்.
கொரோனா கால நெருக்கடிகள்,நமது பொருளாதார லட்சியத்தில் எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்படும் போது எத்தகைய நெருக்கடியையும் நம்மால் சமாளித்து மீண்டு வர முடியும்.
பெரும்பாலான நேரம் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் நம்மை மீறி ஆன்லைனில் தேவையற்ற பொருட்களை வாங்க முயற்சிப்போம். இதை தடுக்க ஒவ்வொருநாளும் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். ஆசைகளையும் தேவைகளையும் பிரித்தறிய வேண்டும். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றும் போது குறைந்தது மூன்று நாட்கள் அந்த ஆர்வத்தை தள்ளிப்போட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதன் பிறகும் அது நமக்கு தேவையென்று தோன்றினால் மட்டுமே வாங்க வேண்டும்.
பொது முடக்கத்தினால் ஜிம், அழகு நிலையம் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன. இவற்றில் உறுப்பினராக இருப்பவர்கள் பொது முடக்க காலத்தில் அதற்கான மாத சந்தா கட்டுவதை தவிர்க்கலாம். அந்த பணத்தை அவசர கால நிதியில் சேர்த்து பயன்படுத்தலாம்.
செலவு குறித்த தெளிவான யோசனை அவசியம். டெபிட்மற்றும் கிரெடிட் கார்டுகளின் அறிக்கைகளை பெற்று எவற்றுக்கெல்லாம் செலவு செய்திருக்கிறோம் என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அதிக வட்டி செலுத்தும் கடன்களை அடைத்தல் குறிப்பாக கடன் அட்டைகளுக்கான தொகையை முழுவதுமாக செலுத்தி விடுதல் மிகவும் நல்லது. இதனால் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
உணவுக்கான செலவுகளை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். வெளியில் இருந்து உணவு வாங்குவதை விடுத்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது உடலுக்கும், பட்ஜெட்டுக்கும் நல்லது. வீட்டில் சமைப்பதிலும் ஆடம்பர உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான சத்தான உணவுகளை மட்டுமே சமைத்து சாப்பிட வேண்டும்.
பயன்படுத்தாத பொருட்களை விற்பதன் மூலமும், சேமிப்பை அதிகப்படுத்த முடியும். மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு பொருளை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அது உங்களுக்கு தேவையற்றது என்று எடுத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு உங்கள் பிள்ளைகள் பள்ளி செல்ல பயன்படுத்திய மிதி வண்டிவை அவர்களை கல்லூரி படிப்பை முடித்த பின்னும் கூட அப்படியே பயன்படுத்தாமல் வைத்திப்பீர்கள். அதனை ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்கலாம்.
நம்மிடம் இருக்கும் திறமைகளை கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேறலாம். பொது முடக்கத்தில் ஆன்லைனில் சங்கீதம் கற்றுத்தருவது, மொழி வகுப்புகள் எடுப்பது சமையல் கற்றுக்கொடுப்பது, போன்றவற்றால் நமது திறமையும் வருமானமும் அதிகரிக்கும்.
கொரோனா கால நெருக்கடிகள்,நமது பொருளாதார லட்சியத்தில் எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்படும் போது எத்தகைய நெருக்கடியையும் நம்மால் சமாளித்து மீண்டு வர முடியும்.
நாடு முழுக்க கருப்பு பூஞ்சையும், வெள்ளை பூஞ்சை தொற்று அபாயமும் இருக்கும் நிலையில் அவற்றைவிட ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று என்னும் ஆபத்தான தொற்றுநோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி
கொரோனாவின் 2-வது அலை கடந்த ஆண்டைவிட மிகத்தீவிரமாகி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா நோயாளிகளை தீவிரமான பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள கருப்பு பூஞ்சை நோயை தொடர்ந்து, வெள்ளை பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று நோய் அறியப்பட்டிருப்பது மருத்துவ துறையை சவாலாகவும் அச்சத்திலும் மாற்றியுள்ளது.
நாடு முழுக்க கருப்பு பூஞ்சையும், வெள்ளை பூஞ்சை தொற்று அபாயமும் இருக்கும் நிலையில் அவற்றைவிட ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று என்னும் ஆபத்தான தொற்றுநோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 45 வயதான ஒரு நோயாளிக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளைவிட இந்த மஞ்சள் பூஞ்சை மிகுந்த ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
தற்போது அந்த நோயாளி பிரபல கண், காது, மூக்கு சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரிஜ் பால் தியாகி கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மருத்துவர் பிரிஜ் பால் கூறியுள்ளதாவது:-
பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சி.டி.ஸ்கேன் செய்து பரிசோதித்த போது நார்மலாக இருந்தது. ஆனால் அவருக்கு எண்டோஸ்கோபி செய்த போது அவருக்கு கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்று இருப்பது தெரியவந்தது. மஞ்சள் பூஞ்சை பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ரெப்டைல்ஸ் வகை உயிரினங்களிடம் மட்டுமே காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவின் மூலம் இந்த மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக உபயோகப்படுத்தும் ஸ்டெராய்டு, பூஞ்சை தடுப்பு மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவினால் குணமானவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.
மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதீத சோர்வு, பசியின்மை ஏற்பட்டு அதன் மூலம் உடல் எடை குறைவு, உள்ளே ரத்தம் கசியும் மற்றும் உடல் உறுப்புகள் செயல் இழப்பு போன்றவை நேரும். ஆம்போடெட்ரிசின் பி எனப்படும் பூஞ்சை தடுப்பு மருந்து இதற்கு முதன்மையான சிகிச்சை ஆகும்.
தற்போது இந்த மருந்து தான் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முக வீக்கம், மங்கும் பார்வை, இரண்டாக தெரியும் காட்சிகள், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், இருமலின் போது ரத்தம் வருவது, அதீத தலைவலி போன்ற பாதிப்புகள் இருக்கும்.
ஆனால் மஞ்சள் பூஞ்சை பாதித்தவர்களுக்கு உடலின் உள்ளே பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டாலோ, பசியின்மை, உடல் எடை குறைவு ஆகிய மாற்றங்கள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
மஞ்சள் பூஞ்சை தொற்று புதிதானதோ அல்ல அரிதானவையோ அல்ல. சற்று முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இதை தவிர்க்க முடியும்.
வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கழிவு பொருள்களில் பூஞ்சை தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குள் அதிகப்படியான ஈரம் இருக்க கூடாது.
ஈரமான இடங்களில் பூஞ்சை தொற்று அதிகமாக இருக்கும். வீட்டுக்குள் சூரிய ஒளி படர வேண்டும். வீட்டில் காற்றோட்டம் இருக்க வேண்டும். தரையை ஈரமாக வைத்திருக்க வேண்டாம். மொத்தத்தில் உங்கள் வீடு மற்றும் நீங்கள் புழங்கக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்துகொண்டாலே பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொரோனாவின் 2-வது அலை கடந்த ஆண்டைவிட மிகத்தீவிரமாகி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா நோயாளிகளை தீவிரமான பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள கருப்பு பூஞ்சை நோயை தொடர்ந்து, வெள்ளை பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று நோய் அறியப்பட்டிருப்பது மருத்துவ துறையை சவாலாகவும் அச்சத்திலும் மாற்றியுள்ளது.
நாடு முழுக்க கருப்பு பூஞ்சையும், வெள்ளை பூஞ்சை தொற்று அபாயமும் இருக்கும் நிலையில் அவற்றைவிட ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று என்னும் ஆபத்தான தொற்றுநோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 45 வயதான ஒரு நோயாளிக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளைவிட இந்த மஞ்சள் பூஞ்சை மிகுந்த ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
தற்போது அந்த நோயாளி பிரபல கண், காது, மூக்கு சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரிஜ் பால் தியாகி கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மருத்துவர் பிரிஜ் பால் கூறியுள்ளதாவது:-
பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சி.டி.ஸ்கேன் செய்து பரிசோதித்த போது நார்மலாக இருந்தது. ஆனால் அவருக்கு எண்டோஸ்கோபி செய்த போது அவருக்கு கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்று இருப்பது தெரியவந்தது. மஞ்சள் பூஞ்சை பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ரெப்டைல்ஸ் வகை உயிரினங்களிடம் மட்டுமே காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவின் மூலம் இந்த மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக உபயோகப்படுத்தும் ஸ்டெராய்டு, பூஞ்சை தடுப்பு மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவினால் குணமானவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.
மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதீத சோர்வு, பசியின்மை ஏற்பட்டு அதன் மூலம் உடல் எடை குறைவு, உள்ளே ரத்தம் கசியும் மற்றும் உடல் உறுப்புகள் செயல் இழப்பு போன்றவை நேரும். ஆம்போடெட்ரிசின் பி எனப்படும் பூஞ்சை தடுப்பு மருந்து இதற்கு முதன்மையான சிகிச்சை ஆகும்.
தற்போது இந்த மருந்து தான் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முக வீக்கம், மங்கும் பார்வை, இரண்டாக தெரியும் காட்சிகள், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், இருமலின் போது ரத்தம் வருவது, அதீத தலைவலி போன்ற பாதிப்புகள் இருக்கும்.
ஆனால் மஞ்சள் பூஞ்சை பாதித்தவர்களுக்கு உடலின் உள்ளே பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டாலோ, பசியின்மை, உடல் எடை குறைவு ஆகிய மாற்றங்கள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
மஞ்சள் பூஞ்சை தொற்று புதிதானதோ அல்ல அரிதானவையோ அல்ல. சற்று முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இதை தவிர்க்க முடியும்.
வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கழிவு பொருள்களில் பூஞ்சை தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குள் அதிகப்படியான ஈரம் இருக்க கூடாது.
ஈரமான இடங்களில் பூஞ்சை தொற்று அதிகமாக இருக்கும். வீட்டுக்குள் சூரிய ஒளி படர வேண்டும். வீட்டில் காற்றோட்டம் இருக்க வேண்டும். தரையை ஈரமாக வைத்திருக்க வேண்டாம். மொத்தத்தில் உங்கள் வீடு மற்றும் நீங்கள் புழங்கக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்துகொண்டாலே பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன.
(ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை படைப்பின் வித்தியாசங்களை நாம் அறிவோம்). ஆனால் ஆண், பெண் தூக்கம் முறையிலும் படைப்பின் வித்தியாசத்தினால் சில தாக்குதல்கள் இருக்கின்றன. இதனை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதன் காரணம் அவர்களுள் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் என ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் அவைகூறுவது ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன.
* பெண்கள் அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய அதிகம் மூளையை உபயோகிக்கின்றனர். அநேகமாக இவ்வாறு பகல் பொழுதில் அவர்கள் வேலை செய்வதால் இரவில் அவர்கள் கூடுதல் நேரம் தூங்க வேண்டியது அவசியமாகின்றது என்பது ஆய்வுகளின் முடிவு.
* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான அளவு தூக்கம் இருப்பதில்லை. இது அவர்களுக்கு குறைந்த சக்தியினை அளித்து விடுகின்றது. இக்காலங்களில் இவர்கள் பகலில் 20-30 நிமிடங்கள் வரை (ழிணீஜீ) எனப்படும் ஓய்வினை எடுக்க வேண்டும். இரவும் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே தூங்கச் செல்ல வேண்டும்.
* மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக அதிக மறதி அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவேதான் முந்தைய காலங்களில் இக்காலங்களில் அவர்களை வீட்டு வேலைகள் செய்ய விடாமல் ஓய்வு கொடுத்திருந்திருக்கலாம். ஆனால் அதன் உண்மையான பொருளை ஆராயாமல்-அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவர்களை மேலும் பலவீனமாக்கி விட்டது அறியாமையே.
* ஆபீஸ், குடும்பம் என விடாது வேலை செய்வது அவர்களை மிகவும் சோர்வானவர்கள் ஆக்கி விடுகின்றதாம். எனவே அவர்களுக்கு கூடுதல் ஓய்வும், தூக்கமும் தேவைப்படுகின்றது என்பதனை அறிவோமாக.
மேலும் அவைகூறுவது ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன.
* பெண்கள் அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய அதிகம் மூளையை உபயோகிக்கின்றனர். அநேகமாக இவ்வாறு பகல் பொழுதில் அவர்கள் வேலை செய்வதால் இரவில் அவர்கள் கூடுதல் நேரம் தூங்க வேண்டியது அவசியமாகின்றது என்பது ஆய்வுகளின் முடிவு.
* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான அளவு தூக்கம் இருப்பதில்லை. இது அவர்களுக்கு குறைந்த சக்தியினை அளித்து விடுகின்றது. இக்காலங்களில் இவர்கள் பகலில் 20-30 நிமிடங்கள் வரை (ழிணீஜீ) எனப்படும் ஓய்வினை எடுக்க வேண்டும். இரவும் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே தூங்கச் செல்ல வேண்டும்.
* மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக அதிக மறதி அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவேதான் முந்தைய காலங்களில் இக்காலங்களில் அவர்களை வீட்டு வேலைகள் செய்ய விடாமல் ஓய்வு கொடுத்திருந்திருக்கலாம். ஆனால் அதன் உண்மையான பொருளை ஆராயாமல்-அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவர்களை மேலும் பலவீனமாக்கி விட்டது அறியாமையே.
* ஆபீஸ், குடும்பம் என விடாது வேலை செய்வது அவர்களை மிகவும் சோர்வானவர்கள் ஆக்கி விடுகின்றதாம். எனவே அவர்களுக்கு கூடுதல் ஓய்வும், தூக்கமும் தேவைப்படுகின்றது என்பதனை அறிவோமாக.
சங்க காலத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு நவதானியங்களுள் ஒன்றான சுண்டக்கடலையை நெய்யிலே பொரித்துக் கொடுப்பார்களாம். சுண்டல் வருவலை எப்படி செய்திருப்பார்கள் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
சுண்டல் - 100 கிராம்
மிளகுத்தூள் -1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 50 மி.லி
கறிவேப்பிலை- சிறிதளவு
தேங்காய் துருவல் - 50 கிராம்
சீரகம் - ½ டீஸ்பூன்
செய்முறை :
கடாயில் நெய்யைச் சேர்த்து, சுத்தம் செய்த சுண்டலை நெய்யில் நன்கு பொரித்துக் கொள்ளவும்.
கூடவே கறிவேப்பிலையைச் சேர்த்து பொரிக்கவும்.
இதன் சுவையை அதிகரிக்க தேங்காய் துருவல் போதுமான உப்பு, சீரகம், மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இதனை வேக வைத்த சாதத்துடன் சேர்த்து உண்டார்களாம்.
குறிப்பு :
* சங்க கால மக்கள் தங்களுக்கு கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு சமைத்தார்கள்.
* சுண்டல் ஒரு பழமையான நவதானியமாகும்.
* சங்க காலத்தில் சமையலுக்குப் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு தக்காளி, சர்க்கரை, ரீபெண்ட் ஆயில், உருளைக்கிழங்கு பயன்படுத்தவில்லை. காரத்துக்கு மிளகைப் பயன்படுத்தி உள்ளனர்.
* சுங்க காலத்தில் தேங்காயை சமையலில் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
சுண்டல் - 100 கிராம்
மிளகுத்தூள் -1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 50 மி.லி
கறிவேப்பிலை- சிறிதளவு
தேங்காய் துருவல் - 50 கிராம்
சீரகம் - ½ டீஸ்பூன்
செய்முறை :
கடாயில் நெய்யைச் சேர்த்து, சுத்தம் செய்த சுண்டலை நெய்யில் நன்கு பொரித்துக் கொள்ளவும்.
கூடவே கறிவேப்பிலையைச் சேர்த்து பொரிக்கவும்.
இதன் சுவையை அதிகரிக்க தேங்காய் துருவல் போதுமான உப்பு, சீரகம், மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இதனை வேக வைத்த சாதத்துடன் சேர்த்து உண்டார்களாம்.
குறிப்பு :
* சங்க கால மக்கள் தங்களுக்கு கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு சமைத்தார்கள்.
* சுண்டல் ஒரு பழமையான நவதானியமாகும்.
* சங்க காலத்தில் சமையலுக்குப் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு தக்காளி, சர்க்கரை, ரீபெண்ட் ஆயில், உருளைக்கிழங்கு பயன்படுத்தவில்லை. காரத்துக்கு மிளகைப் பயன்படுத்தி உள்ளனர்.
* சுங்க காலத்தில் தேங்காயை சமையலில் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள்.
நாம் இயல்பாக செய்யும் காரியங்கள் கூட குழந்தைகளின் மனதை காயப்படுத்திவிடும். நாமும் குழந்தைகளாக மாறி சிந்தித்தால் மட்டுமே அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். தன்னை விட யாருக்காவது அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோபம், வருத்தம், பொறாமை இவையெல்லாம் வெளிப்பட்டு அவர்களது மனதை அலைக்கழிக்கும். அந்த சமயத்தில் பக்குவமாக பேசி புரிய வைக்க வேண்டும். பொறாமை குணம் தோன்றும்போது சமாதானப்படுத்தி, அவர்களுக்கு பொறுப்புணர்வை புரியவைக்க வேண்டும். தான் நிராகரிக்கப்படவில்லை என்பதை உணரும்போதுதான் அவர்களது மனம் அமைதி அடையும்.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.
வெறுப்பு: எந்தவொரு சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது வெறுப்பை காண்பிப்பதற்கு அனுமதிக்காதீர்கள். அது அவர்களை பலவீனப்படுத்திவிடும். தனிமையிலும் ஆழ்த்திவிடும். தங்களை சூழ்ந்திருக்கும் நட்பு வட்டத்தை நேசிக்க கற்றுக்கொடுங்கள். சிறு வயதிலேயே நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். நேசிப்புதான் சுற்றி இருக்கும் நட்பை பலப்படுத்தும். வெறுப்பு உணர்வோ எதிரிகளைத்தான் உருவாக்கும்.
கோபம்: அடிக்கடி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஏதோ ஒரு வகையில் கோபம் இருந்து கொண்டிருக்கும். அது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். அதை வெளியே சொல்ல முடியாமல் வேறு விதத்தில் பெற்றோர் மீது கோபத்தை வெளிப்படுத்தலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காதீர்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசு பொருட்கள் கூட அவர்களை கோபப்படுத்தலாம். அந்த சமயத்தில் அவர்களுக்கும் பரிசு பொருள் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துங்கள். சில சமயங்களில் எதற்கு கோபித்துக்கொள்கிறார்கள் என்பதை பெற்றோரால் கண்டுபிடிக்கவே முடியாது.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.
வெறுப்பு: எந்தவொரு சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது வெறுப்பை காண்பிப்பதற்கு அனுமதிக்காதீர்கள். அது அவர்களை பலவீனப்படுத்திவிடும். தனிமையிலும் ஆழ்த்திவிடும். தங்களை சூழ்ந்திருக்கும் நட்பு வட்டத்தை நேசிக்க கற்றுக்கொடுங்கள். சிறு வயதிலேயே நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். நேசிப்புதான் சுற்றி இருக்கும் நட்பை பலப்படுத்தும். வெறுப்பு உணர்வோ எதிரிகளைத்தான் உருவாக்கும்.
கோபம்: அடிக்கடி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஏதோ ஒரு வகையில் கோபம் இருந்து கொண்டிருக்கும். அது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். அதை வெளியே சொல்ல முடியாமல் வேறு விதத்தில் பெற்றோர் மீது கோபத்தை வெளிப்படுத்தலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காதீர்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசு பொருட்கள் கூட அவர்களை கோபப்படுத்தலாம். அந்த சமயத்தில் அவர்களுக்கும் பரிசு பொருள் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துங்கள். சில சமயங்களில் எதற்கு கோபித்துக்கொள்கிறார்கள் என்பதை பெற்றோரால் கண்டுபிடிக்கவே முடியாது.
ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சரும பாதிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க எலுமிச்சையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எளிய அழகு குறிப்புகள்...
கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்பவர்களுக்கு மட்டுமே சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சரும பாதிப்புகள் ஏற்படலாம். வெப்பம், வியர்வை, உடலின் நீர் வறட்சி மற்றும் மின் விளக்கு வெளிச்சம் போன்றவற்றாலும் பாதிப்பு வரலாம். இதை தடுக்க எலுமிச்சையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எளிய அழகு குறிப்புகள்...
எலுமிச்சை சாறுடன் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர முகத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவடையும்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேய்த்தால் சருமம் பளபளக்கும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர சூரிய ஒளியால் ஏற்படும் கருமையான சரும நிறம் மாறும்.
முதல் நாள இரவு எலுமிச்சை சாருடன் பாலாடை சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை அந்த கலவையை தடவி உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.
எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தின் மாஸ்க் போன்று தடவினால் சருமத்தின் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி மென்மையடையும்.
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சில நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் மாஸ்க் போன்று தடவலாம்.
முதல் நாள் இரவில் ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் புளித்த தயிரை கலந்து சருமத்தில் தடவினால் அழுக்கு மற்றும் மாசு ஆகியவற்றை அகற்றி புத்துணர்ச்சி தரும்.
எலுமிச்சை தோலை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதில் ஒரு ஸ்பூன் எடுத்து கால் ஸ்பூன் கிரீன் டீ இலை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அதனால் எண்ணெய் பிசுபிசுப்பு அகன்று முகம் குளிர்ச்சி பெறுவதால் முகப்பரு வராது.
கடலை மாவு மற்றும் எலுமிச்சை பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு நீருடன் கலந்து முகத்தில் பூசலாம். எலுமிச்சை பொடி, சந்தனப்பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவலாம். இவை வறட்சியை நீக்கி எண்ணெய் சுரப்பை குறைக்க செய்வதால் மென்மையான மற்றும் பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.
எலுமிச்சை சாறுடன் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர முகத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவடையும்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேய்த்தால் சருமம் பளபளக்கும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர சூரிய ஒளியால் ஏற்படும் கருமையான சரும நிறம் மாறும்.
முதல் நாள இரவு எலுமிச்சை சாருடன் பாலாடை சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை அந்த கலவையை தடவி உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.
எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தின் மாஸ்க் போன்று தடவினால் சருமத்தின் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி மென்மையடையும்.
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சில நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் மாஸ்க் போன்று தடவலாம்.
முதல் நாள் இரவில் ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் புளித்த தயிரை கலந்து சருமத்தில் தடவினால் அழுக்கு மற்றும் மாசு ஆகியவற்றை அகற்றி புத்துணர்ச்சி தரும்.
எலுமிச்சை தோலை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதில் ஒரு ஸ்பூன் எடுத்து கால் ஸ்பூன் கிரீன் டீ இலை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அதனால் எண்ணெய் பிசுபிசுப்பு அகன்று முகம் குளிர்ச்சி பெறுவதால் முகப்பரு வராது.
கடலை மாவு மற்றும் எலுமிச்சை பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு நீருடன் கலந்து முகத்தில் பூசலாம். எலுமிச்சை பொடி, சந்தனப்பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவலாம். இவை வறட்சியை நீக்கி எண்ணெய் சுரப்பை குறைக்க செய்வதால் மென்மையான மற்றும் பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.
நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனாவை நினைத்து பயப்படுவதா? இல்லை கருப்பு பூஞ்சை நோயை நினைத்து பயப்படுவதா? என்று தெரியவில்லை. கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
கருப்பு பூஞ்சை என்பது ஒரு பூஞ்சை. இது எப்போதும் காற்றில் இருப்பது தான். ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறையும் போது இந்த பூஞ்சை மூச்சு வழியாக உடலில் ஏறி அதிக பிரச்சனை ஏற்படுகிறது. உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த நோய் அதிகளவில் பரவி உள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த நோய் பரவலாம். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அதனால் நுரையீரலில்
பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு ஸ்டிராய்டு மருந்து கொடுத்தால் மட்டுமே அவர்களை காப்பாற்றும் நிலை உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்டிராய்டு மருந்து அதிகமாக கொடுக்கும் போது சர்க்கரையின் அளவும் அதிகரித்து இதன் காரணமாக கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு டியூப் மூலமாக வெண்டிலேட்டர் வழியாக ஆக்சிஜன் செலுத்தும் போதும் இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கலாம்.
இந்த நோய் குறித்து பயப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த நோய் மூக்கு வழியாக முன்னேறி கண்களுக்கு பரவி கண் பார்வை பறிபோகவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும் மூளையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
மருத்துவர்கள் அந்த நோயை முன்கூட்டியே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே எந்த பிரச்சனையும், உயிரிழப்பும் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.
மேலும் இந்த நோயை கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஆரோக்கிமான சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே எந்த பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும் என்றார்.
வெளியில் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொண்டு செல்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் இந்த நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்றும் அவர் கூறினார்.
கருப்பு பூஞ்சை என்பது ஒரு பூஞ்சை. இது எப்போதும் காற்றில் இருப்பது தான். ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறையும் போது இந்த பூஞ்சை மூச்சு வழியாக உடலில் ஏறி அதிக பிரச்சனை ஏற்படுகிறது. உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த நோய் அதிகளவில் பரவி உள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த நோய் பரவலாம். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அதனால் நுரையீரலில்
பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு ஸ்டிராய்டு மருந்து கொடுத்தால் மட்டுமே அவர்களை காப்பாற்றும் நிலை உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்டிராய்டு மருந்து அதிகமாக கொடுக்கும் போது சர்க்கரையின் அளவும் அதிகரித்து இதன் காரணமாக கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு டியூப் மூலமாக வெண்டிலேட்டர் வழியாக ஆக்சிஜன் செலுத்தும் போதும் இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கலாம்.
இந்த நோய் குறித்து பயப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த நோய் மூக்கு வழியாக முன்னேறி கண்களுக்கு பரவி கண் பார்வை பறிபோகவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும் மூளையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
மருத்துவர்கள் அந்த நோயை முன்கூட்டியே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே எந்த பிரச்சனையும், உயிரிழப்பும் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.
மேலும் இந்த நோயை கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஆரோக்கிமான சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே எந்த பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும் என்றார்.
வெளியில் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொண்டு செல்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் இந்த நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி, யோகா போன்ற உடல் இயக்கம் சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடலாமா? என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி, யோகா போன்ற உடல் இயக்கம் சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடலாமா? என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. இந்த கேள்விக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விளக்கம் அளித்துள்ளது.
அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜோத்பூரில் உள்ள தேசிய நோய்த்தொற்று நோய்களுக்கான நடைமுறை ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்.ஐ.ஆர்.என்.சி.டி) இயக்குனர் டாக்டர் அருண் சர்மா, ‘‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வழக்கமான உடற்பயிற்சி அல்லது யோகாசனம் போன்ற பயிற்சிகளை பெண்கள் தவிர்க்க வேண்டியதில்லை. இருப்பினும் ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் ஏதேனும் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டால், கைக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி வழக்கமான பயிற்சிகளை செய்யலாம்’’ என்கிறார்.
உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு உடலுக்கு நல்லது என்றும், அடிப்படையில், நோயெதிர்ப்பு சக்தியை அதிக அளவில் மேம்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. நீங்கள் தடுப்பூசி போட்ட பின்னர் அவ்வாறு செய்வது நல்லது என்றாலும், உடனடியாக செய்ய நிர்பந்திக்க வேண்டாம். எப்படி கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, நல்ல உயிர்வாழும் நோயெதிர்ப்பு சக்தியை பெற உங்கள் உடலுக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறதோ, தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் ஓய்வு அவசியம். தடுப்பூசி போடும் நாளில் அதிகமாக உழைப்பது அல்லது தீவிர உடற்பயிற்சி செய்வது நல்லது அல்ல. உங்களுக்கான ஓய்வு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜோத்பூரில் உள்ள தேசிய நோய்த்தொற்று நோய்களுக்கான நடைமுறை ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்.ஐ.ஆர்.என்.சி.டி) இயக்குனர் டாக்டர் அருண் சர்மா, ‘‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வழக்கமான உடற்பயிற்சி அல்லது யோகாசனம் போன்ற பயிற்சிகளை பெண்கள் தவிர்க்க வேண்டியதில்லை. இருப்பினும் ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் ஏதேனும் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டால், கைக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி வழக்கமான பயிற்சிகளை செய்யலாம்’’ என்கிறார்.
உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு உடலுக்கு நல்லது என்றும், அடிப்படையில், நோயெதிர்ப்பு சக்தியை அதிக அளவில் மேம்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. நீங்கள் தடுப்பூசி போட்ட பின்னர் அவ்வாறு செய்வது நல்லது என்றாலும், உடனடியாக செய்ய நிர்பந்திக்க வேண்டாம். எப்படி கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, நல்ல உயிர்வாழும் நோயெதிர்ப்பு சக்தியை பெற உங்கள் உடலுக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறதோ, தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் ஓய்வு அவசியம். தடுப்பூசி போடும் நாளில் அதிகமாக உழைப்பது அல்லது தீவிர உடற்பயிற்சி செய்வது நல்லது அல்ல. உங்களுக்கான ஓய்வு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது.
கோடையில் உஷ்ணமும், வறட்சியும் உடலை கஷ்டப்படுத்தும். சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்துவிடும். இதனால் சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் தோன்றலாம். வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது. வெயிலால் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்து விடும். இதுதான் சோர்வு, வறட்சிக்கு காரணமாகிறது. இளநீர், மோர் மற்றும் பானகம், கரும்புச்சாறு போன்றவற்றை பருகுவதால் பொட்டாசியம் இழப்பை ஈடுகட்டலாம்.
தமிழகத்தில் கோடைகாலத்தில் நீர்மோர், பானகம் போன்றவை முக்கியமாக பருகப்படுகின்றன. பானகத்தில் புளி, பனை வெல்லம், சுக்கு எல்லாம் கலந்து தருவார்கள். இது தாது உப்புகளை துரிதமாக சீர்செய்யும் சக்தி கொண்டது. மோரில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும். அதில் பொட்டாசியம், கால்சியம், லேக்டிக் அமிலம் இருப்பதால் வெயில் காலத்தில் ஏற்படும் தாதுகளை ஈடுகட்டும்.
வெயில் காலத்தில் குளிர்ச்சிக்காக ‘கூல்டிரிங்ஸ்’ குடிப்பது நல்லதல்ல. அவை ஜீரண சக்தியை குறைக்கும் தன்மை கொண்டவை. குடித்த உடன் குளிர்ச்சி கிடைப்பதுபோல இருந்தாலும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.
கோடையில் கண்நோய்களும் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. எனவே வெளியில் சென்று வந்தவுடன் முகம் மற்றும் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். கோடைகாலத்தில் பகல் பொழுது நீண்டும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும். எனவே பகலிலும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் தப்பில்லை. வெயில் காலத்தில் அதிக உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
மண்பானைத் தண்ணீரில் நன்னாரி, விலாமிச்சை வேர், வெட்டிவேர், சந்தனத்தூள் கலந்து பருகி வந்தால் உஷ்ணம் உடலில் ஏறாது. சிலருக்கு வெப்பம் தாங்காமல் பித்தம் அதிகரிக்கும். இந்த உஷ்ண பித்தத்தை தணிக்க தர்ப்பூசணி, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சாப்பிடலாம்.
சிலருக்கு இந்தக் காலத்தில் சிறுநீர் கடுத்துப்போகும். இந்த சிறுநீர் சுருக்கத்திற்கு கொத்தமல்லி மற்றும் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். குளிக்கும்போது குளிர்ச்சிக்காக சந்தனாதி தைலம் தேய்த்து குளிக்கலாம். பூலாங்கிழங்கு, வெட்டிவேர், கார்போக அரிசி, பொடாமஞ்சள், சந்தனம், ரோஜா இதழ், காய்ந்த எலுமிச்சைப்பழத் தோல், பச்சைப்பயிறு ஆகியவற்றை அரைத்து அந்த மாவை தேய்த்து குளித்தால் சருமத்தில் வறட்சி ஏற்படாது. குழம்புகளில் பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை தினமும் சேர்த்துக்கொள்ளலாம். காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
தமிழகத்தில் கோடைகாலத்தில் நீர்மோர், பானகம் போன்றவை முக்கியமாக பருகப்படுகின்றன. பானகத்தில் புளி, பனை வெல்லம், சுக்கு எல்லாம் கலந்து தருவார்கள். இது தாது உப்புகளை துரிதமாக சீர்செய்யும் சக்தி கொண்டது. மோரில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும். அதில் பொட்டாசியம், கால்சியம், லேக்டிக் அமிலம் இருப்பதால் வெயில் காலத்தில் ஏற்படும் தாதுகளை ஈடுகட்டும்.
வெயில் காலத்தில் குளிர்ச்சிக்காக ‘கூல்டிரிங்ஸ்’ குடிப்பது நல்லதல்ல. அவை ஜீரண சக்தியை குறைக்கும் தன்மை கொண்டவை. குடித்த உடன் குளிர்ச்சி கிடைப்பதுபோல இருந்தாலும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.
கோடையில் கண்நோய்களும் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. எனவே வெளியில் சென்று வந்தவுடன் முகம் மற்றும் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். கோடைகாலத்தில் பகல் பொழுது நீண்டும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும். எனவே பகலிலும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் தப்பில்லை. வெயில் காலத்தில் அதிக உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
மண்பானைத் தண்ணீரில் நன்னாரி, விலாமிச்சை வேர், வெட்டிவேர், சந்தனத்தூள் கலந்து பருகி வந்தால் உஷ்ணம் உடலில் ஏறாது. சிலருக்கு வெப்பம் தாங்காமல் பித்தம் அதிகரிக்கும். இந்த உஷ்ண பித்தத்தை தணிக்க தர்ப்பூசணி, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சாப்பிடலாம்.
சிலருக்கு இந்தக் காலத்தில் சிறுநீர் கடுத்துப்போகும். இந்த சிறுநீர் சுருக்கத்திற்கு கொத்தமல்லி மற்றும் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். குளிக்கும்போது குளிர்ச்சிக்காக சந்தனாதி தைலம் தேய்த்து குளிக்கலாம். பூலாங்கிழங்கு, வெட்டிவேர், கார்போக அரிசி, பொடாமஞ்சள், சந்தனம், ரோஜா இதழ், காய்ந்த எலுமிச்சைப்பழத் தோல், பச்சைப்பயிறு ஆகியவற்றை அரைத்து அந்த மாவை தேய்த்து குளித்தால் சருமத்தில் வறட்சி ஏற்படாது. குழம்புகளில் பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை தினமும் சேர்த்துக்கொள்ளலாம். காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
முகத்தில் உள்ள சில தழும்புகள் ஆங்காங்கே திட்டுதிட்டாக படிந்த கருமை நிறம் மற்றும் பொலிவற்ற தோற்றத்தினால் அதிகளவில் பெண்கள் பாதிப்படுகிறார்கள்.
முகத்தில் உள்ள சில தழும்புகள் ஆங்காங்கே திட்டுதிட்டாக படிந்த கருமை நிறம் மற்றும் பொலிவற்ற தோற்றத்தினால் அதிகளவில் பெண்கள் பாதிப்படுகிறார்கள். அவர்களுக்காகவே கொழுந்து வெற்றிலை கொண்டு எவ்வாறு பேசியல் செய்யலாம் என பார்ப்போம்.
முடி உதிர்தல்: வெற்றிலையை நன்றாக அரைத்து நல்லெண்ணெய்யுடன் குழைத்து கூந்தல் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்துவிடவும். பின்பு சிறிது நேரம் கழித்து, குளித்து விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
பொடுகு: வெற்றிலையை அரைத்து அத்துடன் பச்சை கற்பூரம், துளசி இலை சாற்றை கலந்து தலையில் நன்றாக தேய்த்து விடவும். சிறிது நேரம் கழித்து கூந்தலை கழுவி விடலாம். பொடுகு காணாமல் போய்விடும்.
முகப்பரு: இரண்டு, மூன்று வெற்றிலையை விழுதாக அரைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி விட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். நாளடைவில் முகப்பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போய்விடும். வெற்றிலை சாறை கொண்டு முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் மீண்டும் வராது.
வியர்வை நாற்ற்றம்: உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தையும் வெற்றிலை நீக்கக்கூடியது. கொதிக்கும் நீரில் வெற்றிலையை கலந்து அந்த சாறை வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்துவிட்டு குளிக்கலாம். வியர்வை நாற்றம் அடியோடு அகலும். அணியும் உடைகளில் படிந்திருக்கும் வியர்வை நாற்றத்தை நீக்குவதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். வெற்றிலை சாறு கலந்திருக்கும் நீரில் ஆடைகளை முக்கி உலர்த்தலாம்.
முடி உதிர்தல்: வெற்றிலையை நன்றாக அரைத்து நல்லெண்ணெய்யுடன் குழைத்து கூந்தல் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்துவிடவும். பின்பு சிறிது நேரம் கழித்து, குளித்து விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
பொடுகு: வெற்றிலையை அரைத்து அத்துடன் பச்சை கற்பூரம், துளசி இலை சாற்றை கலந்து தலையில் நன்றாக தேய்த்து விடவும். சிறிது நேரம் கழித்து கூந்தலை கழுவி விடலாம். பொடுகு காணாமல் போய்விடும்.
முகப்பரு: இரண்டு, மூன்று வெற்றிலையை விழுதாக அரைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி விட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். நாளடைவில் முகப்பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போய்விடும். வெற்றிலை சாறை கொண்டு முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் மீண்டும் வராது.
வியர்வை நாற்ற்றம்: உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தையும் வெற்றிலை நீக்கக்கூடியது. கொதிக்கும் நீரில் வெற்றிலையை கலந்து அந்த சாறை வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்துவிட்டு குளிக்கலாம். வியர்வை நாற்றம் அடியோடு அகலும். அணியும் உடைகளில் படிந்திருக்கும் வியர்வை நாற்றத்தை நீக்குவதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். வெற்றிலை சாறு கலந்திருக்கும் நீரில் ஆடைகளை முக்கி உலர்த்தலாம்.
மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகவும் கொழுப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்க வல்லது.
தேவையான பொருட்கள் :
மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம்
தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டி
உப்பு - 1 டீஸ்பூன்
தேன் - 3 மேஜைகரண்டி
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை :
கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.
வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.
குறிப்பு :
உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம்.
மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம்
தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டி
உப்பு - 1 டீஸ்பூன்
தேன் - 3 மேஜைகரண்டி
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை :
கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.
வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.
குறிப்பு :
உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம்.
குழந்தைகள் மனதில் என்ன விதமான எண்ண ஓட்டம் நிலவுகிறது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியாது. ஒருசில விஷயங்களை புரிய வைப்பதன் மூலம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக மாற்றி விடலாம்.
குழந்தைகள் மனதில் என்ன விதமான எண்ண ஓட்டம் நிலவுகிறது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியாது. நாம் இயல்பாக செய்யும் காரியங்கள் கூட அவர்கள் மனதை காயப்படுத்திவிடும். நாமும் குழந்தைகளாக மாறி சிந்தித்தால் மட்டுமே அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். தன்னை விட யாருக்காவது அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோபம், வருத்தம், பொறாமை இவையெல்லாம் வெளிப்பட்டு அவர்களது மனதை அலைக்கழிக்கும். அந்த சமயத்தில் பக்குவமாக பேசி புரிய வைக்க வேண்டும். பொறாமை குணம் தோன்றும்போது சமாதானப்படுத்தி, அவர்களுக்கு பொறுப்புணர்வை புரியவைக்க வேண்டும். தான் நிராகரிக்கப்படவில்லை என்பதை உணரும்போதுதான் அவர்களது மனம் அமைதி அடையும்.
தங்களை விட இளையவர்கள் மீது அன்பு, அக்கறை கொள்ள வேண்டும் என்பது நாளடைவில்தான் புரியும். ஆனால் அதற்குள் பொறாமை உணர்வு அவர் களுக்குள் வளர்ந்து மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்துவிடக்கூடாது. ஒருசில விஷயங்களை புரிய வைப்பதன் மூலம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக மாற்றி விடலாம்.
பகிர்தல்: அன்பின் அடுத்தக் கட்டம் பகிர்தல். தம்மிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நல்ல பண்பாகும். இந்த பண்பு குழந்தை களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் பகிர்தலின் மகிழ்ச்சியை புரியவைக்கலாம். பகிர்ந்து வாழும் குழந்தைகள் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள்.
தனிமை: குழந்தைகளை எப்போதும் தனிமைப்படுத்திவிடாதீர்கள். தனிமை அவர்களை எதிர்மறையாக சிந்திக்க தூண்டும். தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் மனதுக்குள் குடிகொண்டுவிடும். அதீத கற்பனை மன நோயாளியாக்கி விடக்கூடும். மனதில் ஏற்படும் காயங்களும், மாற்றங்களும் அவர்களை பாதிக்காமல் இருப்பதற்கு தைரியமான வார்த்தைகளை சொல்ல வேண்டும். அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங் களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.
சகிப்புத்தன்மை: உறவை வளர்ப்பதற்கு சகிப்பு தன்மை வித்திடும். மற்றவர்களை அனுசரித்து போவது சற்று கஷ்டமான விஷயம்தான். அதனால் குழந்தை பருவத் திலேயே பழக்கப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் வெளி நபர்களிடமும் சகிப்பு தன்மையுடன் பழகும் சுபாவம் உண்டாகும்.
உறவை வளர்த்தல்: உறவுகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வது, அவர்களை எப்படி பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் தாங்கள் காண்பிக்கும் அன்பு தங்களுக்கே திரும்ப கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். நாளடைவில் உறவுகளின் மதிப்பையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உறவுகளுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் வழக்கம் கொண்டவர்களாக வளர்வார்கள். உறவுகள் மத்தியிலும் அவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டாகும்.
கவனம்: தாய்-தந்தை இருவரும் தங்கள் மேல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பெற்றோர் கவனம் தங்கள் மீது திரும்புவதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் தயங்கமாட்டார்கள். குழந்தைகள் வெகு நேரம் அமைதியாக இருந்தால் ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தில் அவர்களிடம் பேச்சு கொடுத்து மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
பொறாமை: தனது முன்னிலையில் சகோதர, சகோதரிகளை பெற்றோர் அர வணைத்து பேசினால் உடனே பொறாமை கொள்வார்கள். பெற்றோர் தன்னை தவிர வேறு யாருடனும் நெருக்கம் காட்டக்கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும்போது எங்கே தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் அதற்கு முக்கிய காரணம். அத்தகைய அச்சத்தை போக்கி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டியது பெற்றோரின் கடமை. ஏனெனில் பொறாமை குணம் மேலோங்கும்போது அன்பு செலுத்தும் நபர்கள், அவர்களுக்கு எதிரிகளாகிவிடுவார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். ஆரம்பநிலையிலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.
தங்களை விட இளையவர்கள் மீது அன்பு, அக்கறை கொள்ள வேண்டும் என்பது நாளடைவில்தான் புரியும். ஆனால் அதற்குள் பொறாமை உணர்வு அவர் களுக்குள் வளர்ந்து மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்துவிடக்கூடாது. ஒருசில விஷயங்களை புரிய வைப்பதன் மூலம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக மாற்றி விடலாம்.
பகிர்தல்: அன்பின் அடுத்தக் கட்டம் பகிர்தல். தம்மிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நல்ல பண்பாகும். இந்த பண்பு குழந்தை களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் பகிர்தலின் மகிழ்ச்சியை புரியவைக்கலாம். பகிர்ந்து வாழும் குழந்தைகள் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள்.
தனிமை: குழந்தைகளை எப்போதும் தனிமைப்படுத்திவிடாதீர்கள். தனிமை அவர்களை எதிர்மறையாக சிந்திக்க தூண்டும். தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் மனதுக்குள் குடிகொண்டுவிடும். அதீத கற்பனை மன நோயாளியாக்கி விடக்கூடும். மனதில் ஏற்படும் காயங்களும், மாற்றங்களும் அவர்களை பாதிக்காமல் இருப்பதற்கு தைரியமான வார்த்தைகளை சொல்ல வேண்டும். அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங் களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.
சகிப்புத்தன்மை: உறவை வளர்ப்பதற்கு சகிப்பு தன்மை வித்திடும். மற்றவர்களை அனுசரித்து போவது சற்று கஷ்டமான விஷயம்தான். அதனால் குழந்தை பருவத் திலேயே பழக்கப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் வெளி நபர்களிடமும் சகிப்பு தன்மையுடன் பழகும் சுபாவம் உண்டாகும்.
உறவை வளர்த்தல்: உறவுகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வது, அவர்களை எப்படி பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் தாங்கள் காண்பிக்கும் அன்பு தங்களுக்கே திரும்ப கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். நாளடைவில் உறவுகளின் மதிப்பையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உறவுகளுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் வழக்கம் கொண்டவர்களாக வளர்வார்கள். உறவுகள் மத்தியிலும் அவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டாகும்.
கவனம்: தாய்-தந்தை இருவரும் தங்கள் மேல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பெற்றோர் கவனம் தங்கள் மீது திரும்புவதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் தயங்கமாட்டார்கள். குழந்தைகள் வெகு நேரம் அமைதியாக இருந்தால் ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தில் அவர்களிடம் பேச்சு கொடுத்து மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
பொறாமை: தனது முன்னிலையில் சகோதர, சகோதரிகளை பெற்றோர் அர வணைத்து பேசினால் உடனே பொறாமை கொள்வார்கள். பெற்றோர் தன்னை தவிர வேறு யாருடனும் நெருக்கம் காட்டக்கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும்போது எங்கே தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் அதற்கு முக்கிய காரணம். அத்தகைய அச்சத்தை போக்கி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டியது பெற்றோரின் கடமை. ஏனெனில் பொறாமை குணம் மேலோங்கும்போது அன்பு செலுத்தும் நபர்கள், அவர்களுக்கு எதிரிகளாகிவிடுவார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். ஆரம்பநிலையிலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.






