என் மலர்
ஆரோக்கியம்
கொழுப்பு அமிலங்கள்தான் ஒவ்வொரு செல்லைச் சுற்றியும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது.
ஆரோக்கியத்தின் மீது அதிக ஆர்வம்கொண்ட பலரும், கொழுப்பை முதல் எதிரியாக கருதுகிறார்கள். ஆனால் அப்படி கருதவேண்டியதில்லை. ஏன் என்றால் கொழுப்பும் உடலுக்கு அவசியமான ஒரு சத்துதான். கொழுப்பும், கொலஸ்ட்ராலும் ஒன்றல்ல. கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பின் ஒரு பகுதிதான். கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை குறிப்பிட்ட அளவில் இணைந்த சேர்மம்தான் கொழுப்பாகும்.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது உப்பு ஆகியவை உடலுக்கு சக்தி தரும் சத்துக்களாகும். இவற்றில் புரதமும், கார்போஹைட்ரேட்டும் ஒரு கிராமிற்கு 4 கலோரி ஆற்றலை உடலுக்கு அளிக்கும். ஆனால் ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரிகளை உடலுக்கு வழங்குகிறது. இதிலிருந்து கொழுப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
மெழுகுபோன்ற ஒருவகை கொழுப்பை கொலஸ்ட்ரால் என்கிறோம். இதய நோய் உருவாக அடிப்படை கொலஸ்ட்ரால்தான். செல்களின் அமைப்புக்கும், வளர்ச்சிக்கும் கொலஸ்ட்ரால் இன்றியமையாதது. கல்லீரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் உறுப்பாகும். உணவின் மூலமும் கொலஸ்ட்ரால் உடம்பில் சேரும். மேலும் பாலின ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், டெஸ்டிரோஜென், புரோஜெஸ்டிரான் மற்றும் பித்தநீர் உற்பத்திக்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகும்.
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் லிப்போ புரோட்டின் என்ற புரதத்துடன் இணைந்து உடலெங்கும் பயணிக்கிறது. அப்போது குறைந்த அடர்த்தி உள்ள புரதத்துடன் இணைந்து எல்.டி.எல். கொலஸ்ட்ரால் உருவாகும். இதுதான் தீமையான கொலஸ்ட்ராலாகும். இது ரத்த நாளங்களில் படிவதால் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும். கொலஸ்ட்ரால் அதிக அடர்த்தி உள்ள புரதத்துடன் இணைந்து (எச்.டி.எல்.) பயணம் செய்தால் இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். ஆக சதிசெய்வதும், சதியறுப்பதும் கொலஸ்ட்ரால்தான்.
கொழுப்பு, 3 வகைப்படும். பூரிதமான கொழுப்பு, பூரிதமாகாத கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு என அவை அழைக்கப்படுகிறது. கொழுப்பு அமிலங்களின் தன்மைக்கேற்ப இப்படி வகைப்படுத்தப்படுகிறது. கொழுப்பு அமிலங்கள்தான் ஒவ்வொரு செல்லைச் சுற்றியும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இவை தகவல்களைக் கடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது உப்பு ஆகியவை உடலுக்கு சக்தி தரும் சத்துக்களாகும். இவற்றில் புரதமும், கார்போஹைட்ரேட்டும் ஒரு கிராமிற்கு 4 கலோரி ஆற்றலை உடலுக்கு அளிக்கும். ஆனால் ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரிகளை உடலுக்கு வழங்குகிறது. இதிலிருந்து கொழுப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
மெழுகுபோன்ற ஒருவகை கொழுப்பை கொலஸ்ட்ரால் என்கிறோம். இதய நோய் உருவாக அடிப்படை கொலஸ்ட்ரால்தான். செல்களின் அமைப்புக்கும், வளர்ச்சிக்கும் கொலஸ்ட்ரால் இன்றியமையாதது. கல்லீரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் உறுப்பாகும். உணவின் மூலமும் கொலஸ்ட்ரால் உடம்பில் சேரும். மேலும் பாலின ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், டெஸ்டிரோஜென், புரோஜெஸ்டிரான் மற்றும் பித்தநீர் உற்பத்திக்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகும்.
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் லிப்போ புரோட்டின் என்ற புரதத்துடன் இணைந்து உடலெங்கும் பயணிக்கிறது. அப்போது குறைந்த அடர்த்தி உள்ள புரதத்துடன் இணைந்து எல்.டி.எல். கொலஸ்ட்ரால் உருவாகும். இதுதான் தீமையான கொலஸ்ட்ராலாகும். இது ரத்த நாளங்களில் படிவதால் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும். கொலஸ்ட்ரால் அதிக அடர்த்தி உள்ள புரதத்துடன் இணைந்து (எச்.டி.எல்.) பயணம் செய்தால் இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். ஆக சதிசெய்வதும், சதியறுப்பதும் கொலஸ்ட்ரால்தான்.
கொழுப்பு, 3 வகைப்படும். பூரிதமான கொழுப்பு, பூரிதமாகாத கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு என அவை அழைக்கப்படுகிறது. கொழுப்பு அமிலங்களின் தன்மைக்கேற்ப இப்படி வகைப்படுத்தப்படுகிறது. கொழுப்பு அமிலங்கள்தான் ஒவ்வொரு செல்லைச் சுற்றியும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இவை தகவல்களைக் கடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பெரும்பாலான பெண்கள் விளம்பரம் செய்யப்படும் விதவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலே தங்கள் கூந்தல் அடர்த்தியும், வளர்ச்சியும் பெற்றுவிடும் என்று நினைக்கிறார்கள்.
பெண்கள் இப்போது அழகியல் விஷயத்தில் இயற்கையை அதிகமாகவே சார்ந்திருக்க தொடங்கிவிட்டார்கள். பக்கவிளைவுகள் இல்லாத அழகிற்கு, இயற்கை மூலிகைகளில் தயார் செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களே சிறந்தது என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்கள். அதனால் இயற்கை அழகு சாதனப்பொருட்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்களில் கூந்தலுக்கானவையும், சருமத்திற்கானவையும் முக்கிய இடங்களை வகிக்கின்றன. ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்தும்போது, காலப்போக்கில் முடி பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் வறண்டு போகுதல், இறுதிப் பகுதியில் அறுந்து போகுதல், பிளந்து விடுதல் போன்றவைகளோடு கூந்தலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அத்தகைய கூந்தல் பிரச்சினைகளுக்கு தீர்வாக பெண்கள் இப்போது ‘ஆர்கானிக் கரோட்டின் ட்ரீட்மென்ட்டை’ நம்புகிறார்கள். இயற்கை மூலிகைகளில் இருந்து பெறும் கரோட்டினை முடியிலும், முடிவேரிலும் பூசி இந்த அழகு சிகிச்சையை கொடுக்கிறார்கள். வேரில் இருந்து தொடங்குவதால், ஒவ்வொரு முடியிலும் மோயிஸ்சரைஸ் செய்வதால், கூந்தலுக்கு மென்மையும், ஜொலிப்பும் கிடைக்கிறது.
முதலில் புரோட்டீன் ஜெல்லை முடியின் வேர் பகுதியில் பூசி, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது வேரில் இருந்து செயல்பட்டு முடிக்கு பலம் கொடுக்கும். ஐந்து நிமிடங்கள் கழித்து கரோட்டின் ஆயில் தேய்க்கவேண்டும். இது முடியை மென்மையாக்கும். ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக மசாஜ் செய்துவிட்டு, அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆவிபிடிக்கவேண்டும். அதன் பிறகு மண்டை ஓட்டு சருமத்தில் கெரா புரோட்டீன் மாஸ்க் பூசவேண்டும். இது கூந்தலுக்கு ஜொலிப்பு தரும். இருபது நிமிடங்கள் கடந்த பிறகு கெரோட்டின் ஷாம்புவும், கண்டிஷனரும் பயன் படுத்தி மண்டைஓட்டு சருமப்பகுதியையும், கூந்தலையும் கழுவ வேண்டும். ஒவ்வொருவரின் கூந்தலுக்கு தக்கபடி இந்த சிகிச்சையை இரண்டு அல்லது மூன்று முறை பெறவேண்டும். இந்த அழகு சிகிச்சையை தொடரும்போதே ஊட்டச்சத்து நிறைந்த உணவையும் உண்ணவேண்டும். கூந்தலையும் நன்றாக பராமரிக்கவேண்டும்.
பெரும்பாலான பெண்கள் விளம்பரம் செய்யப்படும் விதவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலே தங்கள் கூந்தல் அடர்த்தியும், வளர்ச்சியும் பெற்றுவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. கூந்தலை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே அது ஆரோக்கியமான வளர்ச்சியை பெறும். அதனால் கூந்தலை முதலில் இயற்கையான முறையில் சுத்தமாக பராமரியுங்கள். பின்பு தேவைக்கு தக்கபடி மட்டும் எண்ணெய், ஜெல், கிரீம், ஷாம்பு போன்றவைகளை பயன் படுத்துங்கள்.
இயற்கை ஷாம்புவை நீங்கள் வீட்டிலே தயாரிக்கலாம். ஒரு கிலோ பச்சை பயறு மாவு, வேப்பிலையை காயவைத்து அரைத்த தூள் அரை கிலோ, ஒரு கிலோ சீயக்காய்தூள், துளசி இலையை காயவைத்து அரைத்த தூள் அரை கிலோ ஆகியவைகளை கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வையுங்கள். இதனை தேவைக்கு தக்கபடி எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலக்கி, ஷாம்புபோல் பயன்படுத்தவேண்டும்.
பொடுகை அகற்றும் பவுடரையும் வீட்டிலே தயாரிக்கலாம். உளுந்து மாவு அரை கிலோ, வெந்தயதூள் கால் கிலோ, உலரவைத்த ஆரஞ்சு தோல் தூள் நூறு கிராம் ஆகியவைகளை கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பயன்படுத்தும் போது அதில் சிறிதளவு எடுத்து அரை கப் நீரில் கலக்கி, அரை மணி நேரம் வைத்திருங்கள். அதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் தூள் கலந்து தலையை கழுவுங்கள். பொடுகு நீங்கும்.
பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்களில் கூந்தலுக்கானவையும், சருமத்திற்கானவையும் முக்கிய இடங்களை வகிக்கின்றன. ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்தும்போது, காலப்போக்கில் முடி பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் வறண்டு போகுதல், இறுதிப் பகுதியில் அறுந்து போகுதல், பிளந்து விடுதல் போன்றவைகளோடு கூந்தலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அத்தகைய கூந்தல் பிரச்சினைகளுக்கு தீர்வாக பெண்கள் இப்போது ‘ஆர்கானிக் கரோட்டின் ட்ரீட்மென்ட்டை’ நம்புகிறார்கள். இயற்கை மூலிகைகளில் இருந்து பெறும் கரோட்டினை முடியிலும், முடிவேரிலும் பூசி இந்த அழகு சிகிச்சையை கொடுக்கிறார்கள். வேரில் இருந்து தொடங்குவதால், ஒவ்வொரு முடியிலும் மோயிஸ்சரைஸ் செய்வதால், கூந்தலுக்கு மென்மையும், ஜொலிப்பும் கிடைக்கிறது.
முதலில் புரோட்டீன் ஜெல்லை முடியின் வேர் பகுதியில் பூசி, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது வேரில் இருந்து செயல்பட்டு முடிக்கு பலம் கொடுக்கும். ஐந்து நிமிடங்கள் கழித்து கரோட்டின் ஆயில் தேய்க்கவேண்டும். இது முடியை மென்மையாக்கும். ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக மசாஜ் செய்துவிட்டு, அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆவிபிடிக்கவேண்டும். அதன் பிறகு மண்டை ஓட்டு சருமத்தில் கெரா புரோட்டீன் மாஸ்க் பூசவேண்டும். இது கூந்தலுக்கு ஜொலிப்பு தரும். இருபது நிமிடங்கள் கடந்த பிறகு கெரோட்டின் ஷாம்புவும், கண்டிஷனரும் பயன் படுத்தி மண்டைஓட்டு சருமப்பகுதியையும், கூந்தலையும் கழுவ வேண்டும். ஒவ்வொருவரின் கூந்தலுக்கு தக்கபடி இந்த சிகிச்சையை இரண்டு அல்லது மூன்று முறை பெறவேண்டும். இந்த அழகு சிகிச்சையை தொடரும்போதே ஊட்டச்சத்து நிறைந்த உணவையும் உண்ணவேண்டும். கூந்தலையும் நன்றாக பராமரிக்கவேண்டும்.
பெரும்பாலான பெண்கள் விளம்பரம் செய்யப்படும் விதவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலே தங்கள் கூந்தல் அடர்த்தியும், வளர்ச்சியும் பெற்றுவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. கூந்தலை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே அது ஆரோக்கியமான வளர்ச்சியை பெறும். அதனால் கூந்தலை முதலில் இயற்கையான முறையில் சுத்தமாக பராமரியுங்கள். பின்பு தேவைக்கு தக்கபடி மட்டும் எண்ணெய், ஜெல், கிரீம், ஷாம்பு போன்றவைகளை பயன் படுத்துங்கள்.
இயற்கை ஷாம்புவை நீங்கள் வீட்டிலே தயாரிக்கலாம். ஒரு கிலோ பச்சை பயறு மாவு, வேப்பிலையை காயவைத்து அரைத்த தூள் அரை கிலோ, ஒரு கிலோ சீயக்காய்தூள், துளசி இலையை காயவைத்து அரைத்த தூள் அரை கிலோ ஆகியவைகளை கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வையுங்கள். இதனை தேவைக்கு தக்கபடி எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலக்கி, ஷாம்புபோல் பயன்படுத்தவேண்டும்.
பொடுகை அகற்றும் பவுடரையும் வீட்டிலே தயாரிக்கலாம். உளுந்து மாவு அரை கிலோ, வெந்தயதூள் கால் கிலோ, உலரவைத்த ஆரஞ்சு தோல் தூள் நூறு கிராம் ஆகியவைகளை கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பயன்படுத்தும் போது அதில் சிறிதளவு எடுத்து அரை கப் நீரில் கலக்கி, அரை மணி நேரம் வைத்திருங்கள். அதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் தூள் கலந்து தலையை கழுவுங்கள். பொடுகு நீங்கும்.
குளிர் காலத்தில் வழக்கத்தை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் உடல் நலனை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குளிர் காலத்தில் வழக்கத்தை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் உடல் நலனை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குளிரில் அவர்களது சருமம் வறட்சிக்குள்ளாகும்.
அப்போது தோல் அரிப்பு பிரச்சினை ஏற்படும். குளித்த பிறகு சருமத்தை நன்றாக துடைக்காவிட்டால், அதுவும் தோல் அரிப்பு பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். கர்ப்ப காலத்தில் உடலை தூய்மையாக பராமரிக்க வேண்டியதும் அவசியமானது. சுத்தமான உடைகளை அணிய வேண்டும். அதுவும் நோய் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். போதுமான நேரம் தூங்குவதும் அவசியமானது. அது வயிற்று சிசுவின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.
குளிர்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க உப்பு, சர்க்கரையின் பயன்பாடுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். காபின் கலந்திருக்கும் காபி, டீ, குளிர் பானங்கள், சாக்லேட் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் அயோடின் பங்களிப்பு இன்றியமையாதது. அது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு தேவை. மேலும் சிசுவின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தவும் துணை புரிகிறது. இரும்பு சத்து அதிகமுள்ள பச்சை இலை காய்கறிகள், பீன்ஸ் போன்றவற்றை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் மற்றும் புரத சத்துக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கு பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டு வருவதும் நல்லது. தானிய வகைகளை சாப்பிடுவதும் உடல்நலத்தை மேம்படுத்த உதவும். நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், பீன்ஸ், சூரிய காந்திவிதைகள், பூசணி விதைகள் போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் நல்லது.
குளிர்ந்த காற்று சருமத்தில்படும்போது நீரிழப்பு பிரச்சினை ஏற்படக்கூடும். தோல் வியாதிகளும் உண்டாகும். சிறுநீர் தொற்று பிரச்சினையும் உருவாகும். உடலில் நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு இளநீர், சூப் வகைகள் பருகி வரலாம். குளிர்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
அப்போது தோல் அரிப்பு பிரச்சினை ஏற்படும். குளித்த பிறகு சருமத்தை நன்றாக துடைக்காவிட்டால், அதுவும் தோல் அரிப்பு பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். கர்ப்ப காலத்தில் உடலை தூய்மையாக பராமரிக்க வேண்டியதும் அவசியமானது. சுத்தமான உடைகளை அணிய வேண்டும். அதுவும் நோய் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். போதுமான நேரம் தூங்குவதும் அவசியமானது. அது வயிற்று சிசுவின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.
குளிர்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க உப்பு, சர்க்கரையின் பயன்பாடுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். காபின் கலந்திருக்கும் காபி, டீ, குளிர் பானங்கள், சாக்லேட் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் அயோடின் பங்களிப்பு இன்றியமையாதது. அது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு தேவை. மேலும் சிசுவின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தவும் துணை புரிகிறது. இரும்பு சத்து அதிகமுள்ள பச்சை இலை காய்கறிகள், பீன்ஸ் போன்றவற்றை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் மற்றும் புரத சத்துக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கு பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டு வருவதும் நல்லது. தானிய வகைகளை சாப்பிடுவதும் உடல்நலத்தை மேம்படுத்த உதவும். நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், பீன்ஸ், சூரிய காந்திவிதைகள், பூசணி விதைகள் போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் நல்லது.
குளிர்ந்த காற்று சருமத்தில்படும்போது நீரிழப்பு பிரச்சினை ஏற்படக்கூடும். தோல் வியாதிகளும் உண்டாகும். சிறுநீர் தொற்று பிரச்சினையும் உருவாகும். உடலில் நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு இளநீர், சூப் வகைகள் பருகி வரலாம். குளிர்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும். சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும்.
முகம், கண்கள், நாக்கு போன்றவைகளை பார்த்து அவருக்கு உடலில் எத்தகைய பாதிப்புகள் இருக்கின்றன என்பதை அனுபவ டாக்டர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அதுபோல் நகங்களும் உடல் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. நகங்கள் வெளிப்படுத்தும் நோய் அறிகுறிகளை காண்போம்!
நகங்களின் நடுப்பகுதியில் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்பட்டால் அவை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கும். அதனால் அவர்கள் உடல்நலத்தில் அக்கறைகாட்டி மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
மஞ்சள் நிறம் மற்றும் வெளிறிய நிறத்தில் ஒருசிலரின் நகங்கள் காட்சியளிக்கும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக தென்படும். புகைபிடித்தல், நீரிழிவு நோய், சுவாச நோய் போன்ற பாதிப்புக்களின் அறிகுறியாக இதனை உணரலாம்.
சிலருக்கு நகங்களின் நடுப்பகுதியில் குழி விழுந்து காணப்படும். அழுத்தமான கோடுகள் போன்றும் பதிந்திருக்கும். இது ஒருவகை திசுக்கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பாகும். இப்படிப்பட்டவர்களுக்கு தோல் அழற்சி பிரச்சினையும் இருக்கலாம்.
நகம் வெடித்து காணப்பட்டால், நகப்பூச்சு ஒத்துக்கொள்ளவில்லை என்று கருதலாம். ஆனால் வெடித்து நகங்கள் பிசிறுபோல் உதிர்ந்துகொண்டிருந்தால் இரும்பு சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். உடனே பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
நகங்களில் சிலருக்கு நீள்வாக்கிலும், பக்கவாட்டிலும் வரிசையாக கோடுகள் காணப்படும். நகத்தின் நிறமும் மாறுபட தொடங்கியிருக்கும். அது சிறுநீரக நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சோர்வு, கவலை எடை இழப்பு, நீரிழிவு, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது போன்ற பாதிப்புகளும் அவர்களுக்கு இருக்கலாம்.
சிலருக்கு நகங்கள் வலுவே இல்லாமல் உடைந்துபோய் கொண்டிருக்கும். அது உடல்நலப்பிரச்சினைக்கான ஆரம்பகட்ட அறிகுறியாகும். தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும். சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த வைட்டமின் சத்துக்களைகொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
நகங்களில் கருமை படிந்திருந்தாலோ, நகங்களை சுற்றி ரத்தக்கட்டு தோன்றியிருந்தாலோ, அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
நகங்களின் நடுப்பகுதியில் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்பட்டால் அவை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கும். அதனால் அவர்கள் உடல்நலத்தில் அக்கறைகாட்டி மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
மஞ்சள் நிறம் மற்றும் வெளிறிய நிறத்தில் ஒருசிலரின் நகங்கள் காட்சியளிக்கும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக தென்படும். புகைபிடித்தல், நீரிழிவு நோய், சுவாச நோய் போன்ற பாதிப்புக்களின் அறிகுறியாக இதனை உணரலாம்.
சிலருக்கு நகங்களின் நடுப்பகுதியில் குழி விழுந்து காணப்படும். அழுத்தமான கோடுகள் போன்றும் பதிந்திருக்கும். இது ஒருவகை திசுக்கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பாகும். இப்படிப்பட்டவர்களுக்கு தோல் அழற்சி பிரச்சினையும் இருக்கலாம்.
நகம் வெடித்து காணப்பட்டால், நகப்பூச்சு ஒத்துக்கொள்ளவில்லை என்று கருதலாம். ஆனால் வெடித்து நகங்கள் பிசிறுபோல் உதிர்ந்துகொண்டிருந்தால் இரும்பு சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். உடனே பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
நகங்களில் சிலருக்கு நீள்வாக்கிலும், பக்கவாட்டிலும் வரிசையாக கோடுகள் காணப்படும். நகத்தின் நிறமும் மாறுபட தொடங்கியிருக்கும். அது சிறுநீரக நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சோர்வு, கவலை எடை இழப்பு, நீரிழிவு, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது போன்ற பாதிப்புகளும் அவர்களுக்கு இருக்கலாம்.
சிலருக்கு நகங்கள் வலுவே இல்லாமல் உடைந்துபோய் கொண்டிருக்கும். அது உடல்நலப்பிரச்சினைக்கான ஆரம்பகட்ட அறிகுறியாகும். தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும். சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த வைட்டமின் சத்துக்களைகொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
நகங்களில் கருமை படிந்திருந்தாலோ, நகங்களை சுற்றி ரத்தக்கட்டு தோன்றியிருந்தாலோ, அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 2 டீஸ்பூன்
கேரட், கோஸ், பீன்ஸ், பருப்பு - 1 கப்
உப்பு - சுவைக்கு
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை போட்டு கட்டி விழாமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். ராகி முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைபோட்டு வேக வைக்கவும்.
கடைசியாக உப்பு, மிளகு தூள் தூவி இறக்கவும்.
இதை காலையில் உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடலாம். உடலுக்கும் மிகவும் நல்லது. சற்று தண்ணீராக இருந்தால் தான் இது நன்றாக இருக்கும்.
சூப்பரான சத்தான கேழ்வரகு வெஜிடபிள் சூப் ரெடி.
ராகி மாவு - 2 டீஸ்பூன்
கேரட், கோஸ், பீன்ஸ், பருப்பு - 1 கப்
உப்பு - சுவைக்கு
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை போட்டு கட்டி விழாமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். ராகி முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைபோட்டு வேக வைக்கவும்.
கடைசியாக உப்பு, மிளகு தூள் தூவி இறக்கவும்.
இதை காலையில் உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடலாம். உடலுக்கும் மிகவும் நல்லது. சற்று தண்ணீராக இருந்தால் தான் இது நன்றாக இருக்கும்.
சூப்பரான சத்தான கேழ்வரகு வெஜிடபிள் சூப் ரெடி.
அழகுடன், தன்னம்பிக்கை கலந்தால்தான் அது கம்பீரத்தை தரும். கம்பீர அழகுதான் வயதை புறந்தள்ளிவிட்டு வனப்பைக்கூட்டும். வயதை மீறிய வனப்புடன் நீங்களும் திகழ விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்..
வயதுக்கும், அழகுக்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லை. இளம் பெண்கள் மட்டும்தான் ஜீன்ஸ்- டாப் அணிந்து அழகுடன் வலம் வருவார்கள் என்றும் சொல்வதற்கில்லை. பெண்களால் வயதை மீறிய வனப்புடன் திகழ முடியும். ‘ஏய் இவங்களை பாரு.. எவ்வளவு அழகாக இருக்கிறாங்க..’ என்று, மற்றவர்கள் புகழும் அளவுக்கும் நடந்துகொள்ள முடியும். நிறைய பேர் கூடியிருக்கும் அரங்குகளில்கூட ஒரு சில பெண்கள் மட்டும் மின்னல்போல் பளிச்சென்று காணப்படுவார்கள். பலரது பார்வையும் அவர்களை நோக்கி ஈர்க்கப்படும்.
அப்படி நீங்களும் மற்றவர்களால் ஈர்க்கப்படவேண்டும் என்றால், உங்களுக்கு தன்னம்பிக்கையுடன் கூடிய அழகு தேவை. அழகுடன், தன்னம்பிக்கை கலந்தால்தான் அது கம்பீரத்தை தரும். கம்பீர அழகுதான் வயதை புறந்தள்ளிவிட்டு வனப்பைக்கூட்டும். வயதை மீறிய வனப்புடன் நீங்களும் திகழ விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்..
புன்னகையும்.. பேச்சும்..
நீங்கள் ஒருவரை முதன்முதலாவதாக சந்திக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவரோடும் உங்களால் இதயபூர்வமாக சிரித்துப்பேச முடியுமா? முடியாவிட்டால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். முதல் அறிமுகத்திலேயே உங்களால் மற்றவர்களிடம் உணர்வுபூர்வமாக சிரித்துப்பேச முடியவேண்டும். சிரிப்பு என்றதும் உங்கள் உதடுகளும், பற்களும் உங்கள் நினைவுக்கு வரும். உதடுகள் கவர்ச்சியாக இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். பற்கள் வரிசையாக இல்லையே, இடைவெளி இருக்கிறதே என்றெல்லாம், இருக்கிற குறைபாட்டை நினைத்து வருந்தவேண்டியதில்லை. ஏனென்றால் சிரிப்பு பற்களில் இருந்தும்- உதடுகளில் இருந்தும் வருவதில்லை. அது இதயத்தில் இருந்து வரவேண்டியது. இதயத்தில் இருந்து சிரிப்பு வந்தால்தான் அது அறிமுகமாகும் உங்களுக்கும்- அவருக்கும் இடையே ஒரு நட்பு பாலத்தை பலமாக அமைக்கும்.
உங்களிடம் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை மற்றவர்கள் நீங்கள் பேசும் போது தான் தெரிந்துகொள்கிறார்கள். அதனால் உங்களை நீங்களே நன்றாக வெளிப்படுத்த, உங்களது பேச்சு ஸ்டைலை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் பேசவிரும்பும் கருத்தை சுவாரஸ்யப்படுத்தி, தமாஷாக சொல்வது நல்லது. ஆனால் வேண்டுமென்றே தமாஷை புகுத்தினால், உங்கள் கருத்து வலுவிழந்து, பேச்சு மற்றவர்களை ஈர்க்காமல்போய்விடும். கிராமிய மணம் கமழும் வார்த்தைகளை பிரயோகிப்பது நல்லதுதான். ஆனால் அலுவலகரீதியான அபீஷியல் மீட்டிங்குகளில் கிராமிய வார்த்தைகளை தவிர்ப்பதுதான் நல்லது.
முன்னால் இருப்பவரின் கண்களை பார்த்து நேருக்கு நேர் பேசவேண்டும். பார்வையை அங்கும் இங்கும் அசைக்காமல் பேசினால்தான் அந்த கருத்து கவனிக்கத்தக்கதாக இருக்கும். பேசும்போது கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்துகொண்டிருந்தால் கருத்து வலுவிழக்கும். பொய் சொல்வதாகக்கூட கருதிவிட வாய்ப்பிருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும்போது உங்கள் கைகளை இறுக்கமாக பற்றிப் பிடித்துக்கொண்டிருப்பது, கைகளை பிசைந்துகொண்டிருப்பது, கால்களை அங்கும் இங்குமாக ஆட்டிக்கொண்டிருப்பது போன்றவைகள் தவிர்க்கப்படவேண்டும்.
உட்காரும் விதம்
பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் நீங்கள் உட்காரும் விதத்திலும் தன்னம்பிக்கை பளிச்சிடவேண்டும். முதுகை நிமிர்த்தி நேராக உட்காரவேண்டியது அவசியம். முதுகை வளைத்துக்கொண்டு, தோள்களை மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் கம்பீரம் இருக்காது என்பது மட்டுமின்றி, உங்களை அதிக வயதுகொண்டவராகவும் காட்டிவிடும். தோள்களை இயல்பாக வைத்துக்கொள்ளவேண்டும். அளவுக்கு மீறி தோள்கள் நிமிரும்படி உட்காருவதும் சரியானதல்ல. உட்கார்ந்துகொண்டு அங்கும் இங்குமாக பார்ப்பதும், திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருப்பதும் சரியான அணுகுமுறையல்ல. முன்பு பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டிருப்பது கர்வத்திற்குரியதாக கருதப்பட்டது. இப்போது அதுவே தன்னம்பிக்கையின் அடையாளமாக சொல்லப்படுகிறது. அதனால் சூழலுக்குதக்கபடி உங்களுக்கு பிடித்தமான முறையை கடைப்பிடியுங்கள்.
நிற்பதும், நடப்பதும்
பெண்கள் நிற்கும்போது இரண்டு கால்களுக்கும் சமமான அழுத்தம்கொடுத்து நிற்கவேண்டும். கைகளை கட்டிக்கொண்டு நிற்பது எல்லைமீறிய பணிவாக கருதப்படுகிறது. சிலருக்கு கைகளை கட்டிக்கொண்டு நிற்பது புதிய கம்பீரத்தை தரும். கிடைத்த இடத்தில் சாய்ந்து கொண்டு நிற்பதும், எதையாவது பிடித்துக்கொண்டு நிற்பதும், நீங்கள் மனதளவிலோ உடல் அளவிலோ சோர்ந்து போயிருப்பதை காட்டிக்கொடுத்துவிடும். கால்களை பலமாக ஊன்றி, கைகளை இயல்பாக வைத்துக்கொண்டு நிற்பதே, தன்னம்பிக்கையுடையதாக இருக்கும்.
உங்கள் நடை மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கவேண்டும். அதற்காக கண்ணாடி முன்பு நின்று நடந்து பார்த்து, உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற நடையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஹைஹீல்ஸ் செருப்பு அணிகிறவர்கள், முதலில் வீட்டில் கண்ணாடி முன்பு அதை அணிந்து நடந்து பார்த்துவிட்டு, பொது இடங்களுக்கு அதனை அணிந்துசெல்லுங்கள். தட்டையான செருப்பு அணிந்து நடக்கும்போது சிலருக்கு கம்பீரம் கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் ஹைஹீல்ஸ் அணிந்து கம்பீரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.
உடையில் அழகு
பேஷனுக்கு தகுந்தபடி பெண்கள் உடைகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் பேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா? உங்கள் உடல் அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா? என்பது குறிப்பிடத்தக்கது. பேஷனுக்குள் உங்கள் உடலைகொண்டுபோய் திணிக்கக் கூடாது. உங்கள் உடலுக்கு பொருத்தமான பேஷனை தேர்ந்தெடுங்கள். இடுப்பு, கை கால், முதுகு அழகை எடுத்துக்காட்டும் விதத்தில் ஆடைகளை அணிய இப்போது பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அலுவலகத்திற்கு கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே ‘பார்மல்’ உடைகளை அணியத்தான் ஆசைப்படுகிறார்கள். ஜீன்ஸ் இப்போது கேஷூவல் உடையாகிவிட்டதால் பயணம் செய்யும்போதும், ஷாப்பிங் செல்லும்போதும் அதை அணிந்து செல்கிறார்கள். அது இப்போது பெண்களின் சவுகரிய உடையாகிவிட்டது.
புடவை எப்போதுமே பெண்களுக்கு அழகுதான். அதை நேர்த்தியாக பிளீட்ஸ் எடுத்து ‘பின்’ செய்து அணியவேண்டும். ஜரிகை கொண்ட உடைகளை அலுவலகத்திற்கு அணிந்து செல்வதை தவிர்க்கவேண்டும். பூக்கள் மற்றும் பெரிய பிரிண்டுகள் கொண்ட உடைகள் பார்க்க அழகு தரும். பீச், சுற்றுலா பயணங்களின்போது அதனை உடுத்திக்கொள்ளலாம். உடல் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு பெரும்பாலும் எல்லாவிதமான நிற உடைகளும் பொருந்தும். குண்டாக இருப்பவர்கள் கறுப்பு நிற உடைகளில் கவனம் செலுத்தவேண்டும். மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் தொளதொளப்பான உடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும்.
அப்படி நீங்களும் மற்றவர்களால் ஈர்க்கப்படவேண்டும் என்றால், உங்களுக்கு தன்னம்பிக்கையுடன் கூடிய அழகு தேவை. அழகுடன், தன்னம்பிக்கை கலந்தால்தான் அது கம்பீரத்தை தரும். கம்பீர அழகுதான் வயதை புறந்தள்ளிவிட்டு வனப்பைக்கூட்டும். வயதை மீறிய வனப்புடன் நீங்களும் திகழ விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்..
புன்னகையும்.. பேச்சும்..
நீங்கள் ஒருவரை முதன்முதலாவதாக சந்திக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவரோடும் உங்களால் இதயபூர்வமாக சிரித்துப்பேச முடியுமா? முடியாவிட்டால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். முதல் அறிமுகத்திலேயே உங்களால் மற்றவர்களிடம் உணர்வுபூர்வமாக சிரித்துப்பேச முடியவேண்டும். சிரிப்பு என்றதும் உங்கள் உதடுகளும், பற்களும் உங்கள் நினைவுக்கு வரும். உதடுகள் கவர்ச்சியாக இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். பற்கள் வரிசையாக இல்லையே, இடைவெளி இருக்கிறதே என்றெல்லாம், இருக்கிற குறைபாட்டை நினைத்து வருந்தவேண்டியதில்லை. ஏனென்றால் சிரிப்பு பற்களில் இருந்தும்- உதடுகளில் இருந்தும் வருவதில்லை. அது இதயத்தில் இருந்து வரவேண்டியது. இதயத்தில் இருந்து சிரிப்பு வந்தால்தான் அது அறிமுகமாகும் உங்களுக்கும்- அவருக்கும் இடையே ஒரு நட்பு பாலத்தை பலமாக அமைக்கும்.
உங்களிடம் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை மற்றவர்கள் நீங்கள் பேசும் போது தான் தெரிந்துகொள்கிறார்கள். அதனால் உங்களை நீங்களே நன்றாக வெளிப்படுத்த, உங்களது பேச்சு ஸ்டைலை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் பேசவிரும்பும் கருத்தை சுவாரஸ்யப்படுத்தி, தமாஷாக சொல்வது நல்லது. ஆனால் வேண்டுமென்றே தமாஷை புகுத்தினால், உங்கள் கருத்து வலுவிழந்து, பேச்சு மற்றவர்களை ஈர்க்காமல்போய்விடும். கிராமிய மணம் கமழும் வார்த்தைகளை பிரயோகிப்பது நல்லதுதான். ஆனால் அலுவலகரீதியான அபீஷியல் மீட்டிங்குகளில் கிராமிய வார்த்தைகளை தவிர்ப்பதுதான் நல்லது.
முன்னால் இருப்பவரின் கண்களை பார்த்து நேருக்கு நேர் பேசவேண்டும். பார்வையை அங்கும் இங்கும் அசைக்காமல் பேசினால்தான் அந்த கருத்து கவனிக்கத்தக்கதாக இருக்கும். பேசும்போது கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்துகொண்டிருந்தால் கருத்து வலுவிழக்கும். பொய் சொல்வதாகக்கூட கருதிவிட வாய்ப்பிருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும்போது உங்கள் கைகளை இறுக்கமாக பற்றிப் பிடித்துக்கொண்டிருப்பது, கைகளை பிசைந்துகொண்டிருப்பது, கால்களை அங்கும் இங்குமாக ஆட்டிக்கொண்டிருப்பது போன்றவைகள் தவிர்க்கப்படவேண்டும்.
உட்காரும் விதம்
பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் நீங்கள் உட்காரும் விதத்திலும் தன்னம்பிக்கை பளிச்சிடவேண்டும். முதுகை நிமிர்த்தி நேராக உட்காரவேண்டியது அவசியம். முதுகை வளைத்துக்கொண்டு, தோள்களை மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் கம்பீரம் இருக்காது என்பது மட்டுமின்றி, உங்களை அதிக வயதுகொண்டவராகவும் காட்டிவிடும். தோள்களை இயல்பாக வைத்துக்கொள்ளவேண்டும். அளவுக்கு மீறி தோள்கள் நிமிரும்படி உட்காருவதும் சரியானதல்ல. உட்கார்ந்துகொண்டு அங்கும் இங்குமாக பார்ப்பதும், திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருப்பதும் சரியான அணுகுமுறையல்ல. முன்பு பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டிருப்பது கர்வத்திற்குரியதாக கருதப்பட்டது. இப்போது அதுவே தன்னம்பிக்கையின் அடையாளமாக சொல்லப்படுகிறது. அதனால் சூழலுக்குதக்கபடி உங்களுக்கு பிடித்தமான முறையை கடைப்பிடியுங்கள்.
நிற்பதும், நடப்பதும்
பெண்கள் நிற்கும்போது இரண்டு கால்களுக்கும் சமமான அழுத்தம்கொடுத்து நிற்கவேண்டும். கைகளை கட்டிக்கொண்டு நிற்பது எல்லைமீறிய பணிவாக கருதப்படுகிறது. சிலருக்கு கைகளை கட்டிக்கொண்டு நிற்பது புதிய கம்பீரத்தை தரும். கிடைத்த இடத்தில் சாய்ந்து கொண்டு நிற்பதும், எதையாவது பிடித்துக்கொண்டு நிற்பதும், நீங்கள் மனதளவிலோ உடல் அளவிலோ சோர்ந்து போயிருப்பதை காட்டிக்கொடுத்துவிடும். கால்களை பலமாக ஊன்றி, கைகளை இயல்பாக வைத்துக்கொண்டு நிற்பதே, தன்னம்பிக்கையுடையதாக இருக்கும்.
உங்கள் நடை மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கவேண்டும். அதற்காக கண்ணாடி முன்பு நின்று நடந்து பார்த்து, உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற நடையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஹைஹீல்ஸ் செருப்பு அணிகிறவர்கள், முதலில் வீட்டில் கண்ணாடி முன்பு அதை அணிந்து நடந்து பார்த்துவிட்டு, பொது இடங்களுக்கு அதனை அணிந்துசெல்லுங்கள். தட்டையான செருப்பு அணிந்து நடக்கும்போது சிலருக்கு கம்பீரம் கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் ஹைஹீல்ஸ் அணிந்து கம்பீரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.
உடையில் அழகு
பேஷனுக்கு தகுந்தபடி பெண்கள் உடைகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் பேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா? உங்கள் உடல் அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா? என்பது குறிப்பிடத்தக்கது. பேஷனுக்குள் உங்கள் உடலைகொண்டுபோய் திணிக்கக் கூடாது. உங்கள் உடலுக்கு பொருத்தமான பேஷனை தேர்ந்தெடுங்கள். இடுப்பு, கை கால், முதுகு அழகை எடுத்துக்காட்டும் விதத்தில் ஆடைகளை அணிய இப்போது பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அலுவலகத்திற்கு கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே ‘பார்மல்’ உடைகளை அணியத்தான் ஆசைப்படுகிறார்கள். ஜீன்ஸ் இப்போது கேஷூவல் உடையாகிவிட்டதால் பயணம் செய்யும்போதும், ஷாப்பிங் செல்லும்போதும் அதை அணிந்து செல்கிறார்கள். அது இப்போது பெண்களின் சவுகரிய உடையாகிவிட்டது.
புடவை எப்போதுமே பெண்களுக்கு அழகுதான். அதை நேர்த்தியாக பிளீட்ஸ் எடுத்து ‘பின்’ செய்து அணியவேண்டும். ஜரிகை கொண்ட உடைகளை அலுவலகத்திற்கு அணிந்து செல்வதை தவிர்க்கவேண்டும். பூக்கள் மற்றும் பெரிய பிரிண்டுகள் கொண்ட உடைகள் பார்க்க அழகு தரும். பீச், சுற்றுலா பயணங்களின்போது அதனை உடுத்திக்கொள்ளலாம். உடல் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு பெரும்பாலும் எல்லாவிதமான நிற உடைகளும் பொருந்தும். குண்டாக இருப்பவர்கள் கறுப்பு நிற உடைகளில் கவனம் செலுத்தவேண்டும். மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் தொளதொளப்பான உடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும்.
நாம் பேசுவது பச்சிளம் குழந்தைகளுக்கு புரியாது என்ற எண்ணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. உரையாடல் அவர்கள் மனநிலையை மேம்படுத்த உதவும். பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைக்கு மூளை வளர்ச்சி தூண்டப்படும்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த பெற்றோர் ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அவைகளுக்கு மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும். அது குழந்தைகளின் தசைகள் மற்றும் மனதை இலகுவாக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடல் பக்குவப்படுவதற்கும் வழிவகை செய்யும். குழந்தைகளிடம் அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கவும் வேண்டும்.
நாம் பேசுவது பச்சிளம் குழந்தைகளுக்கு புரியாது என்ற எண்ணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. உரையாடல் அவர்கள் மனநிலையை மேம்படுத்த உதவும். பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைக்கு மூளை வளர்ச்சி தூண்டப்படும். பாடல்கள் கேட்பதும் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தாலும் புத்தகங்களில் இருக்கும் படங்களை காண்பித்து விளக்கம் அளிக்கலாம். அந்த படங்கள் குழந்தைகளின் மனதில் பதிய தொடங்கிவிடும். குழந்தைகளை ஒரே இடத்தில் இருப்பதற்கு பழக்கப்படுத்திவிடக்கூடாது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர வேண்டும். சுழலும் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் அங்கும், இங்கும் நகரும் போது அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும்.
தூரத்தில் இருக்கும் பொருட்களை காண்பித்து தொட்டு வரும்படி குழந்தைகளிடம் கூற வேண்டும். அது கை, கால்களை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கு பயிற்சியாக அமையும். குழந்தைகள் படுத்திருக்கும்போது அவர்களின் தலைக்கு மேல் கண்கவர் பொருட்களை தொங்கவிட வேண்டும். அந்த பொருளை உற்று நோக்கவும், கையால் எடுக்கவும் பழகுவார்கள். அது கண்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். எல்லா பொருட்களையும் கூர்ந்து பார்க்கவும் பார்வையை ஓரிடத்தில் குவிப்பதற்கும் கற்றுக்கொள்வார்கள்.
நாம் பேசுவது பச்சிளம் குழந்தைகளுக்கு புரியாது என்ற எண்ணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. உரையாடல் அவர்கள் மனநிலையை மேம்படுத்த உதவும். பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைக்கு மூளை வளர்ச்சி தூண்டப்படும். பாடல்கள் கேட்பதும் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தாலும் புத்தகங்களில் இருக்கும் படங்களை காண்பித்து விளக்கம் அளிக்கலாம். அந்த படங்கள் குழந்தைகளின் மனதில் பதிய தொடங்கிவிடும். குழந்தைகளை ஒரே இடத்தில் இருப்பதற்கு பழக்கப்படுத்திவிடக்கூடாது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர வேண்டும். சுழலும் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் அங்கும், இங்கும் நகரும் போது அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும்.
தூரத்தில் இருக்கும் பொருட்களை காண்பித்து தொட்டு வரும்படி குழந்தைகளிடம் கூற வேண்டும். அது கை, கால்களை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கு பயிற்சியாக அமையும். குழந்தைகள் படுத்திருக்கும்போது அவர்களின் தலைக்கு மேல் கண்கவர் பொருட்களை தொங்கவிட வேண்டும். அந்த பொருளை உற்று நோக்கவும், கையால் எடுக்கவும் பழகுவார்கள். அது கண்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். எல்லா பொருட்களையும் கூர்ந்து பார்க்கவும் பார்வையை ஓரிடத்தில் குவிப்பதற்கும் கற்றுக்கொள்வார்கள்.
காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும்.
காற்று இல்லாமல் நம்மால் 5 நிமிடம்கூட இருக்க முடியாது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்சிஜனும் மீதமுள்ள 1 சதவீதம் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன. வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது.
காற்று மாசுபடுவதால் ஒரு வருடத்துக்கு 90 லட்சம் முதல் 120 லட்சம் பேர் வரை இறக்கிறார்கள். பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய் போன்ற நோய்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. காற்று மாசுபடுவதால் நுரையீரல் நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும்.
நமது மூக்கில் உள்ள ஆல்பாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு, நாம் வாசனையை உணர்வதற்கு உதவுகிறது. இதுவே நம் மூளையையும் காற்றையும் தொடர்புபடுத்துகிறது. நமது மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசு அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மாசுத்துகளின் அளவு அதிகமாக இருந்தால், நமது மூக்கில் இருக்கும் முடியானது துகள் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. இந்த துகளானது கொஞ்சம் சிறியதாக இருந்தால் நமது தொண்டைப் பகுதிவரை செல்கிறது. ஆனால், இந்த துகள் நுரையீரலை சென்றடையாமல், நாம் இதை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளியே தள்ளுகிறோம்.
இந்த துகள், மிகவும் நுண்ணிய அளவில் இருந்தால் ஆல்பாக்டரி எபிதீலியம் வழியாகச் சென்று மூளையில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே ஞாபகத்திறன் குறைந்து மூளை தன்னிலை இழந்து நிற்கும். எனவே, காற்றைச் சுத்தமாக வைக்க முயல்வோம்!
குழந்தைகளின் மூளையானது முதல் ஆயிரம் நாட்களில்தான் (அதாவது 2¾ வயதுக்குள்) 90 சதவீத வளர்ச்சியை பெறுகிறது. இந்த நாட்களில் குழந்தை, மாசுபட்ட காற்றை சுவாசித்தால், இந்த நச்சுப் பொருட்கள் மூளையில் உள்ள வெள்ளைப் படலத்தை பாதிக்கிறது. இதனால் குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின் நடவடிக்கையிலும் மாறுதல் ஏற்படுகிறது.
அந்தக் குழந்தையிடம் கோபமும் சமூகத்துக்கு எதிரான சிந்தனைகளும் அதிகரிக்கின்றன. மாசுபட்ட காற்று, நமது மரபணுவையே பாதிக்கும் தன்மை கொண்டது. இதனால் நாம், கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு சிறுவயதிலேயே பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.
நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர். உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.
நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர்; அது விளையாடும் இடத்திலோ, 1 பள்ளியிலோ அல்லது வீட்டில் கூட இருக்கலாம். உங்களது குழந்தைகள் போகும் அனைத்து இடத்தையும் நீங்கள் கிருமிநீக்கம் செய்ய முடியாது, ஆதேபோல் உங்களது குழந்தைகள் வெளியே போய் விளையாடுவதையும் நீங்கள் தடுக்க முடியாது. அதனால், பெற்றோராக, நீங்கள் தொற்றுகள் மற்றும் ஒருசில நோய்களின் பாதிப்புகளை எவ்வாறு குறைக்க முடியும்? குழந்தைகள் இயற்கையாகவே பலமுள்ள நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்வது ஒரு முறையாகும். அதனால், உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.
மிதமான உடற்பயிற்சி செய்வது இயற்கையான செல் அழிவு முறையில் (நோய் பாதிப்பை எதிர்க்கும் புரதங்கள்) ஒரு நல்ல பலனை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. 2 இது மன அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. 3 இவ்வாறு அவர்களது வயதுக்கு ஏற்ப உடற்பயிற்சியை தொடர்ந்து உங்களது குழந்தைகள் செய்யும்படி சொல்வது அவர்களது உடலை கட்டுறுதியாக வைத்திருப்பதோடு அவர்களது நோயெதிர்ப்புத் திறனையும் மேம்படுத்தும். நீண்ட நேரம் மிகவும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும் என்பதும் பரவலாக ஏற்கப்பட்ட கருத்தாகும்; அதேவேளை, தொடர்ந்து மிதமான கடினத்தன்மை கொண்ட உடற்பயிற்சியை செய்வது பலனளிக்கக்கூடியதாகும். அதனால் பெற்றோராக நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.
நோயெதிர்ப்புத் திறனில் ஊட்டச்சத்து ஒரு முக்கியமான பங்காற்றுகிறது. உலகம் முழுவதும் நோயெதிர்ப்புத்திறன்-குறைபாட்டுக்கு காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடுதான் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, சி, இ, பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் குறைபாடு நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டிற்கு காரணமாக கருதப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கு துத்தநாகம், செலினியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களும் முக்கியமானவையாகும். 5 இவற்றில் ஒரு ஊட்டச்சத்து குறைந்தாலும் அவை உடலின் நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும். ஆகையால், அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு சமச்சீரான உணவைச் சாப்பிடுவது அதிலும் முக்கியமாக நோயெதிர்ப்புத் திறன் வளர்ச்சி அடைந்து வரும் சமயத்தில் அவ்வாறு செய்வது மிகவும் முக்கியமாகும்.
நோயெதிர்ப்பு சக்தி முறையாக செயல்படுவதற்கு உடலை சீரமைக்கும் மிகவும் முக்கியமான ஒரு செயல்முறை தூக்கமாகும். தூக்கம் குறைவது நோயெதிர்ப்புக் கட்டமைப்பை பலகீனமாக்கும் அத்துடன் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். 6 உண்மையில், சரியான அளவு தூக்க நேரத்தைக் காட்டிலும் குறைவாக தூங்கினால் அதிகமாக சளி பிடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 7 டி-செல்கள் மற்றும் வீக்கத்துடன் சம்மந்தமான சைட்டோகின்கள் இரவில் அதிகம் தோன்றும். 8 ஆகையால் உங்களது குழந்தைகளுக்கு போதுமான அளவுக்கு தூங்கும் பழக்கத்தை உருவாக்கி ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழச்செய்வது மிகவும் முக்கியமாகும்.
குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான். அவர்கள் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு பிடித்தது போல்தான் செய்வார்கள். பெற்றோர்களாக, அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறையாக இருப்பது நம்முடைய பொறுப்பாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கூட அவர்கள் மறுப்பார்கள். அதை எதிர்கொள்வதற்கு, அவர்களது உணவில் காய்கறிகளை அறிமுகப்படுத்த நீங்கள் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் மேலும் அவர்களது ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சுவைமிக்க இணையுணவு பானங்களைக் கொடுக்க வேண்டும். நினைவிருக்கட்டும், அவர்களது வாழ்வில் இருந்து கிருமிகள் அல்லது தொற்றுகளை முற்றிலும் அகற்றுவது சாத்தியமில்லை, ஆனால் ஒருசில சிறிய முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வதன் மூலம் நாம் அவர்களது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவி செய்யலாம்.
மிதமான உடற்பயிற்சி செய்வது இயற்கையான செல் அழிவு முறையில் (நோய் பாதிப்பை எதிர்க்கும் புரதங்கள்) ஒரு நல்ல பலனை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. 2 இது மன அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. 3 இவ்வாறு அவர்களது வயதுக்கு ஏற்ப உடற்பயிற்சியை தொடர்ந்து உங்களது குழந்தைகள் செய்யும்படி சொல்வது அவர்களது உடலை கட்டுறுதியாக வைத்திருப்பதோடு அவர்களது நோயெதிர்ப்புத் திறனையும் மேம்படுத்தும். நீண்ட நேரம் மிகவும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும் என்பதும் பரவலாக ஏற்கப்பட்ட கருத்தாகும்; அதேவேளை, தொடர்ந்து மிதமான கடினத்தன்மை கொண்ட உடற்பயிற்சியை செய்வது பலனளிக்கக்கூடியதாகும். அதனால் பெற்றோராக நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.
நோயெதிர்ப்புத் திறனில் ஊட்டச்சத்து ஒரு முக்கியமான பங்காற்றுகிறது. உலகம் முழுவதும் நோயெதிர்ப்புத்திறன்-குறைபாட்டுக்கு காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடுதான் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, சி, இ, பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் குறைபாடு நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டிற்கு காரணமாக கருதப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கு துத்தநாகம், செலினியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களும் முக்கியமானவையாகும். 5 இவற்றில் ஒரு ஊட்டச்சத்து குறைந்தாலும் அவை உடலின் நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும். ஆகையால், அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு சமச்சீரான உணவைச் சாப்பிடுவது அதிலும் முக்கியமாக நோயெதிர்ப்புத் திறன் வளர்ச்சி அடைந்து வரும் சமயத்தில் அவ்வாறு செய்வது மிகவும் முக்கியமாகும்.
நோயெதிர்ப்பு சக்தி முறையாக செயல்படுவதற்கு உடலை சீரமைக்கும் மிகவும் முக்கியமான ஒரு செயல்முறை தூக்கமாகும். தூக்கம் குறைவது நோயெதிர்ப்புக் கட்டமைப்பை பலகீனமாக்கும் அத்துடன் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். 6 உண்மையில், சரியான அளவு தூக்க நேரத்தைக் காட்டிலும் குறைவாக தூங்கினால் அதிகமாக சளி பிடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 7 டி-செல்கள் மற்றும் வீக்கத்துடன் சம்மந்தமான சைட்டோகின்கள் இரவில் அதிகம் தோன்றும். 8 ஆகையால் உங்களது குழந்தைகளுக்கு போதுமான அளவுக்கு தூங்கும் பழக்கத்தை உருவாக்கி ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழச்செய்வது மிகவும் முக்கியமாகும்.
குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான். அவர்கள் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு பிடித்தது போல்தான் செய்வார்கள். பெற்றோர்களாக, அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறையாக இருப்பது நம்முடைய பொறுப்பாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கூட அவர்கள் மறுப்பார்கள். அதை எதிர்கொள்வதற்கு, அவர்களது உணவில் காய்கறிகளை அறிமுகப்படுத்த நீங்கள் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் மேலும் அவர்களது ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சுவைமிக்க இணையுணவு பானங்களைக் கொடுக்க வேண்டும். நினைவிருக்கட்டும், அவர்களது வாழ்வில் இருந்து கிருமிகள் அல்லது தொற்றுகளை முற்றிலும் அகற்றுவது சாத்தியமில்லை, ஆனால் ஒருசில சிறிய முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வதன் மூலம் நாம் அவர்களது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவி செய்யலாம்.
குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்களும், இதய நோயாளிகளும் குங்குமப்பூவை தவிர்க்க வேண்டும். அப்படி உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும்.
உலகில் விலை உயர்ந்த நறுமண பொருட்களில் ஒன்றாக குங்குமப்பூ கருதப்படுகிறது. ஒரு பவுண்டு (454 கிராம்) குங்குமப்பூ உற்பத்தி செய்வதற்கு 750 குங்குமப்பூ இதழ்கள் தேவைப்படுகிறது. அதனால் அதன் விலையும் அதிகமாக இருக்கிறது. குங்குமப்பூ பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது. ஆஸ்துமா, இருமல், தொண்டை வலி, தூக்கமின்மை, புற்றுநோய், தமனி பாதிப்பு, வாந்தி, வாயு தொந்தரவு, மனச்சோர்வு, பதற்றம், அல்மைசர் போன்ற நோய் பாதிப்புகளுக்கு மருந்தாக குங்குமப்பூ விளங்குகிறது. மாதவிடாய் பாதிப்புகளுக்கு நிவாரணியாகவும் விளங்குகிறது.
சுடுநீரில் ஐந்து குங்குமப்பூ பிசிறுகளை போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். குங்குமப்பூவுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. மனநிலையை மாற்றவும் செய்யும்.
சரும பளபளப்புக்கும் குங்குமப்பூ உதவும். கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தொடர்ந்து குங்குமப்பூ குடிநீர் பருகி வந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
ஆனாலும் குங்குமப்பூவை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும். தலைசுற்றல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரும். ஒரே நேரத்தில் 12 முதல் 20 கிராம் குங்குமப்பூ சாப்பிட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்களும், இதய நோயாளிகளும் குங்குமப்பூவை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அனைத்து தரப்பினரும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று குங்குமப்பூவை பயன்படுத்த வேண்டும்.
சுடுநீரில் ஐந்து குங்குமப்பூ பிசிறுகளை போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். குங்குமப்பூவுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. மனநிலையை மாற்றவும் செய்யும்.
சரும பளபளப்புக்கும் குங்குமப்பூ உதவும். கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தொடர்ந்து குங்குமப்பூ குடிநீர் பருகி வந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
ஆனாலும் குங்குமப்பூவை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும். தலைசுற்றல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரும். ஒரே நேரத்தில் 12 முதல் 20 கிராம் குங்குமப்பூ சாப்பிட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்களும், இதய நோயாளிகளும் குங்குமப்பூவை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அனைத்து தரப்பினரும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று குங்குமப்பூவை பயன்படுத்த வேண்டும்.
வடஇந்தியாவில் மட்டுமே பிரபலமான இவ்வகை சேலைகள் மெல்ல மெல்ல தென்னிந்தியப் பெண்களின் மனதையும் வசீகரிக்கத் துவங்கி விட்டது என்றே சொல்லலாம்.
இந்தியக் கலைகளில் பிரபலமான ஒன்று மதுபானி பெயிண்டிங் என்று சொன்னால் அது மிகையாகாது. பீகாரின் மிதிலா நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவை மதுபானி பெயிண்டிங்குகளாகும்.
இராமாயாணத்தில் ஜனக மஹாராஜா தனது மகள் சீதாவின் திருமணத்திற்கு ஓவியர்களை வரவழைத்து மதுபானி ஓவியங்களை வரைய வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. முதலில் சுவர்களையும், தரையையும் அலங்கரித்த இவ்வகை ஓவியங்கள் மெல்ல மெல்ல காகிதங்கள் மற்றும் துணிகளில் இடம் பெற ஆரம்பித்தன.
இவ்வகை ஓய்வியங்கள் பெரும்பாலும் ஏதாவது கருப்பொருளை விளக்கும் விதமாகவே வரையப்படுகின்றன. பெரும்பாலும், கிருஷ்ணர், ராமர், லஷ்மி, சிவன், துர்கா, சரஸ்வதி, சூரியன் மற்றும் சந்திர உருவங்களானது முக்கிய பாத்திரங்களாக வரையப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் ஜயாமெட்ரிகள் மற்றும் மேத்தமேட்டிகல் வடிவங்களும் மதுபானி ஓவியத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன.
இவ்வகை ஓவியங்கள் சேலைகளில் இடம் பெறும் போது அவற்றை மக்கள் பெரிதும் விரும்பி வாங்குவதற்கான காரணம் அதன் எளிமை மற்றும் இயற்கையான மூலப்பொருள்களான அரிசித்தூள், மஞ்சள், மகரந்தத்தூள் அவுரி இலைச்சாறு பல்வேறு பூக்கள், சந்தனம் மற்றும் தாவரங்கள் மற்றும் மரங்களின் இலைகளிலிருந்து பெறப்பட்ட வண்ணங்களை கொண்டு ஓவியம் தீட்டப்படுவதுமாகும்.
இவ்வகை வண்ணங்கள் மிகவும் அடர்த்தியாக இருப்பதுடன் பளிச்சென்றும் காட்சியளிக்கின்றன. மேலும், பர்ஷர்களுக்கு பதிலாக குச்சிகள் (தாவர), தீக்குச்சிகள் மற்றும் விரல்களையும் ஓவியங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
தந்திரிக், கோபர், பர்னி, கோத்னா மற்றும் கட்சினி என வேறுபட்ட ஸ்டைல்களைக் கொண்டவை இவ்வகை ஓவியங்களாகும்.
மதுபானி ஓவியங்களானது காட்டன் மற்றும் சில்க் சேலைகளில் மிகவும் அற்புதமாக தயாரிக்கப்படுவதுடன் பெண்களால் பெரிதும் விரும்பி வாங்கக்கூடிய சேலையாகவும் உள்ளது.
மதுபானி வேலைப்பாடானது சேலையின் முந்தி, ப்ளஸ்ட் மற்றும் பார்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்டு வருவது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
செமி சில்க் சேலைகளில் சிக்கலான மதுபானி ஓவியங்களை கைகளால் வண்ணம் பூசி முந்தி மற்றும் பார்டரில் அட்டகாசமாகத் தயாரிக்கப்படும் சேலைகளின் அழகை வார்த்தைகளால் கூற முடியாது.
இக்கத் மற்றும் மதுபானி ஓவியங்களை கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் பிரத்யேகமான சந்தேரி சேலைகளும் அற்புதம் என்றே சொல்லலாம்.
தூய டஸ்ஸர் சில்க் சேலைகளில் கைகலால் மதுபானி ஓவியங்கள் தீட்டப்பட்டு, முந்தி மற்றும் ப்ளட்ஸானது காட்டன் சில்க்கில் உருவாக்கப்படும் சேலைகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
உடல் நிறம் கருப்பு, பார்டர் மற்றும் முந்தியானது இரத்தச் சிவப்பு இதில் ஆங்காங்கே கோல்டன் மற்றும் சிவப்பு நிறங்களில் மதுபானி ஓவியங்களைக் கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் சேலைகளை திருமண வரவேற்பு மற்றும் பார்ட்களுக்கு அணிந்து சென்றால் அனைவரின் கவனமும் நம் பக்கம் திரும்பும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
சேலையின் மேற்புறம் மதுபானி ஓவியங்கள் சேலையின் கீழ்ப்புறம் இக்கத் பார்டர்களுடன் ஆரஞ்சு மற்றும் கருமை நிறத்தில் வரும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
கைத்தறி கோட்டா சேலகளில் உடல் ஒரு நிறம் பார்டர் ஒரு நிறமாக இருக்க முந்தியில் மட்டும் மதுபானி ஓவியங்கள் அச்சிடப்பட்டு இணைக்கப்பட்டிருப்பது புதுமையாகவும் அழகாகவும் உள்ளது.
மதுபானி ஓவியங்களைத் தீட்டி வண்ணம் பூசிய பின்னரும், பிளெயினாக இருக்கும் இடங்களில் வண்ணங்களைப் பூசி நிரப்புவது அந்த ஓவியர் மற்றும் ஓவியத்தின் தனிச் சிறப்பாாகக் கூறப்படுகின்றது.
மதுபானி ஓவியத்தை எம்ராய்டிங் செய்தும் பிரிண்ட் செய்தும் சேலைகளில் பார்க்கும் பொழுது அது ஒருவிதமான அழகைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.
வடஇந்தியாவில் மட்டுமே பிரபலமான இவ்வகை சேலைகள் மெல்ல மெல்ல தென்னிந்தியப் பெண்களின் மனதையும் வசீகரிக்கத் துவங்கி விட்டது என்றே சொல்லலாம். அதற்குக் காரணம் டிசைனர் சேலைகளிலும் இந்த ஓவியங்கள் தனது முத்திரையைப் பதிக்கத் துவங்கி விட்டன.
இராமாயாணத்தில் ஜனக மஹாராஜா தனது மகள் சீதாவின் திருமணத்திற்கு ஓவியர்களை வரவழைத்து மதுபானி ஓவியங்களை வரைய வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. முதலில் சுவர்களையும், தரையையும் அலங்கரித்த இவ்வகை ஓவியங்கள் மெல்ல மெல்ல காகிதங்கள் மற்றும் துணிகளில் இடம் பெற ஆரம்பித்தன.
இவ்வகை ஓய்வியங்கள் பெரும்பாலும் ஏதாவது கருப்பொருளை விளக்கும் விதமாகவே வரையப்படுகின்றன. பெரும்பாலும், கிருஷ்ணர், ராமர், லஷ்மி, சிவன், துர்கா, சரஸ்வதி, சூரியன் மற்றும் சந்திர உருவங்களானது முக்கிய பாத்திரங்களாக வரையப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் ஜயாமெட்ரிகள் மற்றும் மேத்தமேட்டிகல் வடிவங்களும் மதுபானி ஓவியத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன.
இவ்வகை ஓவியங்கள் சேலைகளில் இடம் பெறும் போது அவற்றை மக்கள் பெரிதும் விரும்பி வாங்குவதற்கான காரணம் அதன் எளிமை மற்றும் இயற்கையான மூலப்பொருள்களான அரிசித்தூள், மஞ்சள், மகரந்தத்தூள் அவுரி இலைச்சாறு பல்வேறு பூக்கள், சந்தனம் மற்றும் தாவரங்கள் மற்றும் மரங்களின் இலைகளிலிருந்து பெறப்பட்ட வண்ணங்களை கொண்டு ஓவியம் தீட்டப்படுவதுமாகும்.
இவ்வகை வண்ணங்கள் மிகவும் அடர்த்தியாக இருப்பதுடன் பளிச்சென்றும் காட்சியளிக்கின்றன. மேலும், பர்ஷர்களுக்கு பதிலாக குச்சிகள் (தாவர), தீக்குச்சிகள் மற்றும் விரல்களையும் ஓவியங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
தந்திரிக், கோபர், பர்னி, கோத்னா மற்றும் கட்சினி என வேறுபட்ட ஸ்டைல்களைக் கொண்டவை இவ்வகை ஓவியங்களாகும்.
மதுபானி ஓவியங்களானது காட்டன் மற்றும் சில்க் சேலைகளில் மிகவும் அற்புதமாக தயாரிக்கப்படுவதுடன் பெண்களால் பெரிதும் விரும்பி வாங்கக்கூடிய சேலையாகவும் உள்ளது.
மதுபானி வேலைப்பாடானது சேலையின் முந்தி, ப்ளஸ்ட் மற்றும் பார்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்டு வருவது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
செமி சில்க் சேலைகளில் சிக்கலான மதுபானி ஓவியங்களை கைகளால் வண்ணம் பூசி முந்தி மற்றும் பார்டரில் அட்டகாசமாகத் தயாரிக்கப்படும் சேலைகளின் அழகை வார்த்தைகளால் கூற முடியாது.
இக்கத் மற்றும் மதுபானி ஓவியங்களை கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் பிரத்யேகமான சந்தேரி சேலைகளும் அற்புதம் என்றே சொல்லலாம்.
தூய டஸ்ஸர் சில்க் சேலைகளில் கைகலால் மதுபானி ஓவியங்கள் தீட்டப்பட்டு, முந்தி மற்றும் ப்ளட்ஸானது காட்டன் சில்க்கில் உருவாக்கப்படும் சேலைகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
உடல் நிறம் கருப்பு, பார்டர் மற்றும் முந்தியானது இரத்தச் சிவப்பு இதில் ஆங்காங்கே கோல்டன் மற்றும் சிவப்பு நிறங்களில் மதுபானி ஓவியங்களைக் கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் சேலைகளை திருமண வரவேற்பு மற்றும் பார்ட்களுக்கு அணிந்து சென்றால் அனைவரின் கவனமும் நம் பக்கம் திரும்பும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
சேலையின் மேற்புறம் மதுபானி ஓவியங்கள் சேலையின் கீழ்ப்புறம் இக்கத் பார்டர்களுடன் ஆரஞ்சு மற்றும் கருமை நிறத்தில் வரும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
கைத்தறி கோட்டா சேலகளில் உடல் ஒரு நிறம் பார்டர் ஒரு நிறமாக இருக்க முந்தியில் மட்டும் மதுபானி ஓவியங்கள் அச்சிடப்பட்டு இணைக்கப்பட்டிருப்பது புதுமையாகவும் அழகாகவும் உள்ளது.
மதுபானி ஓவியங்களைத் தீட்டி வண்ணம் பூசிய பின்னரும், பிளெயினாக இருக்கும் இடங்களில் வண்ணங்களைப் பூசி நிரப்புவது அந்த ஓவியர் மற்றும் ஓவியத்தின் தனிச் சிறப்பாாகக் கூறப்படுகின்றது.
மதுபானி ஓவியத்தை எம்ராய்டிங் செய்தும் பிரிண்ட் செய்தும் சேலைகளில் பார்க்கும் பொழுது அது ஒருவிதமான அழகைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.
வடஇந்தியாவில் மட்டுமே பிரபலமான இவ்வகை சேலைகள் மெல்ல மெல்ல தென்னிந்தியப் பெண்களின் மனதையும் வசீகரிக்கத் துவங்கி விட்டது என்றே சொல்லலாம். அதற்குக் காரணம் டிசைனர் சேலைகளிலும் இந்த ஓவியங்கள் தனது முத்திரையைப் பதிக்கத் துவங்கி விட்டன.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு ஆரோக்கியமான வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை செய்து இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 200 கிராம்,
கேரட்- 2
பீன்ஸ் - 100 கிராம்,
குடைமிளகாய் - ஒன்று,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
கேரட், பீன்ஸ், இஞ்சி, ப,மிளகாய், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை ரவை போல மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அவை சிறிது வதங்கியவுடன கேரட், குடைமிளகாய், பீன்ஸ், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
ஒரு பங்கு அரிசி ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்துக் கிளறி வேகவிட்டு எடுக்கவும்.
இந்தக் கலவை நன்கு ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
அரிசி - 200 கிராம்,
கேரட்- 2
பீன்ஸ் - 100 கிராம்,
குடைமிளகாய் - ஒன்று,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
கேரட், பீன்ஸ், இஞ்சி, ப,மிளகாய், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை ரவை போல மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அவை சிறிது வதங்கியவுடன கேரட், குடைமிளகாய், பீன்ஸ், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
ஒரு பங்கு அரிசி ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்துக் கிளறி வேகவிட்டு எடுக்கவும்.
இந்தக் கலவை நன்கு ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
அருமையான சுவையில் வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை தயார்.
இதையும் படிக்கலாம்.. கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை






