என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் வயதான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. அவற்றில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்வதற்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
    சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களே வயதான தோற்றத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கலந்த உணவுகளை சாப்பிடுவது சுருக்கங்களை தடுக்கும். இளமையாக தோன்ற விரும்புபவர்கள் குளிர்பானங்கள், ஜூஸ் போன்ற திரவ உணவு வகைகளை பருகுவதற்கு ஸ்ட்ராக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவைகளை கொண்டு உறிஞ்சும்போது உதடுகளை சுற்றியுள்ள கோடுகளுக்குபாதிப்பு நேரும். முகத்திலும் சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கிவிடும். அதேபோல் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு விரைவாகவே சரும சுருக்கம் ஏற்படும்.

    தலையணையில் முகத்தை அழுத்தமாக பதித்து தூங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தூங்குவதை பழக்கமாக கொண்டிருந்தால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். மல்லாந்து படுத்து தூங்குவதே நல்லது. முதுகெலும்பு வளையும் அளவிற்கு சாய்ந்தவாறு உட்கார்ந்து லேப்டாப் பார்ப்பது, வேலை செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் எலும்புகளுக்கும், தசைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அதன் தாக்கமாக வலி, சோர்வு போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

    சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் வயதான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. அவற்றில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்வதற்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். அதேவேளையில் தினமும் சன் ஸ்கிரீன் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும். வெளி இடங்களுக்கு செல்லும்போதும், வெயில் அதிகமாக சருமத்தில் படும்போதும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதுமானது.

    குளிர்காலத்தில் நெருப்பை பற்ற வைத்து அருகில் அதிக நேரம் அமர்ந்திருப்பதும் கூடாது. செயற்கையாக உருவாக்கப்படும் அத்தகைய வெப்பம் சருமத்தையும், கூந்தலையும் வறட்சிக்குள்ளாக்கிவிடும். சரும சுருக்கத்திற்கும் வழிவகுத்துவிடும். மிதமான சூடுதான் சருமத்திற்கு நல்லது.

    குளித்துமுடித்த பிறகு ‘ஹேர் டிரையர்’ பயன்படுத்தி கூந்தலை உலர வைப்பதாக இருந்தால் 6 அங்குலம் இடைவெளி விட்டே உலர்த்த வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் பாதிப்புக்குள்ளாகிவிடும். அதுவும் வயதான தோற்ற பொலிவுக்கு காரணமாகிவிடும்.

    சாப்பிடும் உணவுகள், பலகாரங்களில் சர்க்கரை அதிகம் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும்.

    ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூங்கும் நேரம் குறைவதால் சோர்வு ஏற்படுவதோடு ஆயுளும் குறையும்.

    மன அழுத்த பாதிப்பும் வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.
    எந்த வகையான உணவாக இருந்தாலும் அதனை சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளித்து உமிழ வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் பருகி வாய் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    சாக்லெட், ஐஸ்கிரீம், பிஸ்கெட், இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது.

    சோடா, செயற்கை குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். சூடாக காபி, டீ அருந்துவதோ, சில்லென்று அருந்துவதோ கூடாது. இதனால் நரம்புகள் பாதிப்படைந்து பற்கூச்சம் ஏற்படும்.

    பழச்சாறுகளுக்கு பதில் பழங்களை கடித்துமென்று சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றை மென்று சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

    உணவின் ஜீரணம் வாய் பகுதியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. அதனால் உணவை நன்குமென்று சுவைத்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

    சுண்ணாம்பு சத்துள்ள பால், பாதாம் பருப்பு, எள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை எழுந்தவுடனும், இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் பல் மற்றும் வாய் பகுதிகளை துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

    எந்த வகையான உணவாக இருந்தாலும் அதனை சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளித்து உமிழ வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் பருகி வாய் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நாவறட்சி, தொண்டை வறட்சி ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இன்று தினை, முருங்கை கீரை சேர்த்து சுவையான சத்தான இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலைப்பருப்பு - 1/2 கப்
    உளுத்தம்பருப்பு - 1/2 கப்
    தினை - 1/2 கப்
    கருப்பு எள் - கால் கப்
    காயா வைத்த முருங்கை இலை - அரை கப்
    கறிவேப்பிலை - அரை கப்
    கட்டி பெருங்காயம் - 5 கிராம்
    மிளகாய் வற்றல் - 50 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    பூண்டு - 10 பல்

    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, தினையை தனித்தனியாக போட்டு வறுத்து எடுக்கவும்.

    அடுத்து அதில் முருங்கை கீரை, கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு வறுத்து எடுக்கவும்.

    அடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.

    அனைத்து பருப்பு வகைகள் சேர்த்து நன்றாக ஆறவிடவும்.

    நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இப்போது சுவையான சத்து நிறைந்த தினை முருங்கை கீரை இட்லி பொடி ரெடி.
    பிறந்த குழந்தையின் உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேறும் என்பதால் பிள்ளையின் தலையையும், கூடவே பாதத்தையும் மூடியே வைக்க வேண்டும்.
    ‘‘நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ, பிறந்த 48 மணி நேரத்துக்குள் குழந்தை கருப்பாக முதல் மலம் கழிக்க வேண்டும். இதுதான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அப்படி இல்லாவிட்டால் மலத்துவாரம் இருக்கிறதா என்று கவனியுங்கள். அடுத்தது, உங்கள் உடல்சூட்டிலேயே குழந்தையை வைத்திருங்கள்.

    ஒரு மணி நேரத்திற்குள் ‘சீம்பால்’ என்று சொல்லப்படும் முதல்பால் கொடுப்பதை மறந்து விடாதீர்கள். பிறந்த குழந்தையின் உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேறும் என்பதால் பிள்ளையின் தலையையும், கூடவே பாதத்தையும் மூடியே வைக்க வேண்டும்.’’

    வீட்டிற்கு கொண்டு சென்றபிறகு என்ன செய்ய வேண்டும்?

    ‘‘குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், எவ்வளவு இடைவெளிகளில் தாய்ப்பால் எப்படி கொடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை மருத்துவமனைகளிலேயே சொல்லிக் கொடுத்து அனுப்புவார்கள். இதுதவிர, பச்சிளம் பாப்பா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

    குழந்தையை குளிப்பாட்டும் போது பூப்போல கையாள வேண்டும். எண்ணெய் மசாஜ் செய்கிறேன் என்று தலையை தட்டுவது, மூக்கு, காதில் துணியால் சுத்தம் செய்வது, கண்களில் எண்ணெய் வைப்பது போன்ற தவறுகளை செய்யக் கூடாது.

    குழந்தையின் உடல் முழுவதும் பவுடரைக் கொட்டினால், தொடை இடுக்குகளில் தங்கி மேலும் அழுக்கை அதிகரிக்கும். இதனால் அங்கு புண் வரலாம். அடுத்து குழந்தை மருத்துவர் பரிந்துரைப்படி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக அவசியம்.”
    பெண்களாகிய நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால்தான், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நம்மால் மகிழ்ச்சியை அளிக்க முடியும். அதன் மூலம் வீடும், நாடும் வளம் பெறும்.
    * எதற்கெடுத்தாலும் புலம்புவது.

    * தேவையில்லாமல் திடீர் திடீரென்று கோபம்கொள்வது.

    * மற்றவர்கள் மீது பழி சுமத்திக்கொண்டே இருப்பது.

    * அவ்வப்போது வேலைக்கு லீவுபோடுதல்.

    * அடிக்கடி பணிக்கு தாமதமாக செல்லுதல்.

    * வேலையில் கவனக்குறைவு.

    * உறக்கமின்மை.

    * பசியின்மை

    * நெருக்கமானவர்களிடம் கூட பேச்சை நிறுத்திக் கொள்வது.

    * வழக்கமான பொழுதுபோக்கில் இருந்து விடுபடுதல்.

    * அவ்வப்போது தலைவலி.

    * எதிலும் விருப்பம் இல்லாமல் இருப்பது.

    * மற்றவர்கள் தன்னை பற்றி தவறாகப் பேசுவதாக கருதுவது.

    * மற்றவர்களிடமிருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளுதல்.

    * கண்டபடி பணத்தை செலவிடுதல்.

    * அலட்சியமாக வாகனம் ஓட்டுதல்.

    * முக்கியமான விஷயங்களைகூட மறந்துவிடுதல்.

    * எதையோ இழந்ததுபோல் எப்போதும் கவலையாக காணப்படுதல்!

    ... இப்படி இந்த அறிகுறிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

    இந்த மாதிரியான அறிகுறிகளில் நாலைந்து இருந்தால் உங்களையே நீங்கள் சுயபரிசோதனை செய்து பாருங்கள். ‘ஆம் நானும் மன அழுத்தத்தில் சிக்கியிருக்க கூடும்’ என்று நீங்கள் கருதினால், பயம்கொள்ளவேண்டியதில்லை. ‘அதில் இருந்துவிடுபட முடியும்’ என்ற நம்பிக்கையோடு குடும்ப உறவுகளை மேம்படுத்த முயற்சியுங்கள். அலுவலக பணியிலும் அதிக கவனத்தை செலுத்த முன்வாருங்கள்.

    உங்கள் மனநலனிலும், உடல் நலனிலும் அதிக அக்கறைகொள்ளுங்கள். யாருக்காகவோ வாழ்கிறோம் என்று நினைக்காமல், உங்களுக்காக நீங்கள் மகிழ்ச்சியாக வாழ முன்வாருங்கள். குடும்பம்-வேலைச்சூழல்கள் எப்படி இருந்தாலும் தினமும் இரண்டு மணி நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். உங்கள் பிரச்சினைகள், கவலைகள், எண்ணங்கள் போன்றவைகளை நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான மகிழ்ச்சி, அமைதி, திருப்தி போன்றவைகளை தர உங்களுக்கு நெருக்கமானவர்களால் மட்டுமே முடியும். அது உங்கள் மனபாரத்தைக் குறைத்து, மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுவிக்கும்.

    பயமும், கவலையும் உங்களிடம் அதிகம் இருக்கிறது என்றால், உங்களிடம் தன்னம்பிக்கை குறைந்திருக்கிறது என்று அர்த்தம். தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் வழிமுறைகளைத் தேடுங்கள். அதற்கு யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவை உதவும். தியானத்துடன் கூடிய மியூசிக் தெரபியும் கைகொடுக்கும். அவைகளுக்கு நேரம் ஒதுக்கி முழுமனதோடு ஈடுபடுங்கள்.

    நாம் பெண்களாக பிறந்தது பெருமைக்குரிய விஷயம். மனித இனத்தை உருவாக்கும் படைப்பு என்கிற மிகப்பெரிய ஆற்றலை, இயற்கை நம்மிடம் தந்திருக்கிறது. குழந்தைகளை உருவாக்கி அவர்களை முறையாக வளர்த்து, வழிகாட்டியாக இருக்கவேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காக நாம் மகிழவேண்டும். பெண்களாகிய நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால்தான், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நம்மால் மகிழ்ச்சியை அளிக்க முடியும். அதன் மூலம் வீடும், நாடும் வளம் பெறும். அதனால் ஒவ்வொரு பெண்ணும் பயத்தையும் கவலையையும் கைவிட்டு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ முன்வர வேண்டும்.

    -விஜயலட்சுமி பந்தையன்.
    உங்கள் வீட்டில் முதல் உதவி பெட்டியை அமைத்து மேற்கொண்ட பொருட்களை அதில் வாங்கிவையுங்கள். அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
    சாதாரண காயம் முதல்-உயிருக்கு ஆபத்தான விபத்துக்கள் வரை அனைத்துக்குமே முதல் உதவி அவசியம். அந்த முதல் உதவிக்கு தேவையான மருந்துபொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டிக்குதான் முதலுதவி பெட்டி என்று பெயர். இந்த பெட்டி அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருக்கவேண்டும்.

    முதலுதவி பெட்டியில் ஒரு ஜோடி சுத்தமான கையுறைகள், டிஸ்போசபிள் பேஸ் மாஸ்க், ஸ்டெரிலைஸ்டு காட்டன் ரோல், ஸ்டெரிலைஸ்டு டிரஸ்சிங் துணி, ரோலர் பேண்டேஜ், நுண்ணிய துளைகள் கொண்ட ஒட்டக்கூடிய மருத்துவ டேப், தரமான ஆன்டிசெப்டிக் லோஷன், ஆயின்மெண்ட், துரு இல்லாத கத்தரிக்கோல், குளுக்கோஸ், எலெக்ட்ரால் போன்ற நீர்ச்சத்துக்கான பவுடர் பாக்கெட்டுகள், பாரசிட்டமால் மாத்திரை, வலி நீக்கும் மாத்திரை மற்றும் அவரவர் உடல் நிலையை பொறுத்து ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை போன்ற பொருட்கள் இருக்கவேண்டும்.

    உங்கள் வீட்டில் முதல் உதவி பெட்டியை அமைத்து மேற்கொண்ட பொருட்களை அதில் வாங்கிவையுங்கள். அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

    காயமடைந்தவருக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு, உங்களை அறியாமலே அவருக்கு கூடுதல் வலியை கொடுத்து விடக்கூடாது. உதாரணமாக இருசக்கர வாகன விபத்தில் அடிபட்டவரின் தலைக்கவசத்தை கழற்றும்போது கூட, மிக கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் அவர் கழுத்தில் அடிபட்டிருக்கலாம். அது தெரியாமல் அவசரமாக கழற்றினால், அந்த பாதிப்பு அதிகரித்துவிடக்கூடும். அதனால் ஒவ்வொரு உதவியையும் மிக கவனமாக செய்யவேண்டும்.

    உயரமான கட்டிடத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்து விட்டால், அவரை தூக்கும்போது கழுத்து பகுதியை அசையாமல் அப்படியே தாங்கலாக பிடித்து மெதுவாக கொண்டு போக வேண்டும்.

    நெருக்கடியான நேரங்களில் சமயோசித அறிவும், பொது அறிவும் வேலை செய்யவேண்டும். சம்பவம் நடந்த அந்த இடத்தில் உடனடியாக கிடைக்கக் கூடிய அல்லது இருக்கக்கூடிய வசதிகளை வைத்து உடனே உதவுவதே சமயோசிதம், விவேகம்.

    குழந்தைகள் விளையாடும்போது கீழே விழுந்து சிறிய அளவில் காயம் ஏற்பட்டால், உடனே காயம்பட்ட இடத்தை சுத்தமான நீரால் கழுவவேண்டும். சோப் போட்டு கூட கழுவி சுத்தப்படுத்தலாம். காயத்தில் இருந்து ரத்தம் அதிகம் வந்தால் சுத்தமான துணியால் அழுத்தி கட்டு போடவேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித்தூள் என்று எந்த பொருளையும் காயத்தின் மீது வைக்கக்கூடாது. அது தவறு. காயம் பெரி தாகிவிடும்.

    டெட்டனஸ் டெக்ஸாய்டு (டி.டி) தடுப்பூசி ஏற்கனவே போட்டிருந்தால் காயத்துக்கு என்று தனியாக ஊசி போடவேண்டிய தேவையில்லை. 10 வருடங்களுக்கு ஒரு முறை டி.டி. ஊசி போட்டால் போதுமானது.

    முதல் உதவி அளித்ததும், பாதிக்கப்பட்டவரை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    பிளேடு அல்லது கத்தியால் வெட்டி ரத்தக் கசிவு ஏற்பட்டால், ரத்தம் வரும் பகுதியில் சுத்தமான துணியை வைத்து அழுத்தி ரத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    ரத்தம் மூக்கில் இருந்து வந்தால், அவரை முன் நோக்கி குனிய செய்து மூக்கின் முன் பகுதியை விரல்களால் பிடித்து கொண்டு, வாயால் மூச்சு விடச்செய்ய வேண்டும். மூக்கில் இருந்து வரும் ரத்தத்தை விழுங்கி விடக்கூடாது. தலையை பின்பக்கமாக சாய்த்து விடக்கூடாது. அப்படி சாய்த்தால் ரத்தம் வாய்க்குள் சென்று நுரையீரலில் புகுந்து விடும். எனவே நிமிரவும், மூக்கு சீந்தவும் கூடாது.

    காதில் இருந்து ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியை வைத்து ரத்தத்தை நிறுத்த வேண்டும். காதுக்குள் எதையும் போட்டு சுழற்றக்கூடாது.

    கை, கால் விரல் போன்ற உறுப்புகள் விபத்தில் துண்டிக்கப்பட்டு விட்டால், உடனே அந்த உறுப்பை சுத்தமான ஈரத்துணியில் சுற்றி, ஒரு பாலித்தீன் கவரில் போட்டு அதை ஐஸ் கட்டிகள் நிரம்பிய பெட்டியில் போட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு பாதிக்கப்பட்டவருடன் எடுத்து செல்ல வேண்டும்.

    துண்டிக்கப்பட்ட உறுப்பை நேரடியாக ஐஸ் பெட்டிக்குள் போடக்கூடாது. சுற்றிலும் ஐஸ் இருக்கும் பையில் வைத்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவேண்டும்.

    காதுக்குள் ஏதாவது பொருள் விழுந்து விட்டால் எடுக்க முயற்சிக்க வேண்டாம். உடனே டாக்டரிடம் கொண்டு செல்வது நல்லது.

    காதுக்குள் ஏதேனும் பூச்சி போய்விட்டால், டர்பன்டைன் எண்ணெய் சில துளிகள் விடலாம். பூச்சி உடனே இறந்து விடும். பிறகு அதுவே வெளியே வரவில்லை எனில், டாக்டரிடம் சென்று எடுத்து விடவேண்டும்.

    குழந்தைகள் விளையாடும்போது ஏதேனும் சிறு மணிகள் அல்லது பயறுகள் மூக்கினுள் போய் விடக்கூடும். அதை எடுக்க முயற்சித்தால் அந்த பொருள் இன்னும் உள்ளே தள்ளி சென்று ஆபத்து நிலைக்கு கொண்டு வந்து விடும். அதனால் உடனே டாக்டரிடம் சென்றுவிட வேண்டும். மூக்கை சீந்த வைக்க கூடாது.

    குழந்தைகள் தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி கொண்டால், அதை எடுப்பதற்கு ஹீம்லிக் மெனுவர் என்ற செய்முறை இருக்கிறது. இந்த முதல் உதவி சிகிச்சையை முறைப்படி தெரிந்தவர்கள் அதை பயன்படுத்தி பொருளை எடுக்கலாம். இல்லாவிட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்வதே சிறந்த வழி.

    முதல் உதவி என்பது மிக முக்கியமானது. சரியான நேரத்தில் அதனை செய்து, உயிரைக் காப்பாற்றுவது என்பது மிகப்பெரிய சேவை. அதை செய்ய ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்.
    லேசாக குளிர்ச்சியாக தாய்ப்பால் இருந்தாலோ இளஞ்சூடாக தாய்ப்பால் இருந்தாலோ குழந்தை தாய்ப்பாலை குடிக்காது. குழந்தைக்கு வித்தியாசம் தெரிந்துவிடும்.
    தாய்ப்பாலை சேமித்து வைத்திருந்தால், அதை ஃபிரிட்ஜிலிருந்து வெளியில் எடுத்துவிட்டு மீண்டும் அந்த தாய்ப்பால் அறையின் வெப்பநிலைக்கு வந்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

    அதாவது, குளிர்ச்சியோ சூடாகவோ தாய்ப்பால் இருக்க கூடாது. தாய்ப்பால் எப்படி ரூம் டெம்பரேச்சர் (அறையின் வெப்ப நிலைத்தன்மையில் இருக்கிறதோ) அதே தன்மையில் மாறிய பிறகே சேமித்து வைத்தப் பாலை கொடுக்க வேண்டும்.

    சாதாரண நீர், அல்லது இளஞ்சூடான நீரில் சேமித்து வைத்த பாட்டிலை வைத்து குளிர்ச்சியைத் தணித்து அறை வெப்பநிலைக்கு தாய்ப்பாலை கொண்டு வர வேண்டும். இதற்கு 20-40 நிமிடங்கள்கூட ஆகலாம். ஆனால், இதுவே சரியான முறை.

    எக்காரணத்துக்கும் தாய்ப்பாலை சூடு செய்யவே கூடாது. இது மிக மிக முக்கியம்.

    தற்போது கடைகளில் பாட்டில் வாம்மர் கிடைக்கிறது. அதை வாங்கியும் நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலின் குளிர்ச்சித்தன்மையை நீக்கலாம்.
    தாய்ப்பால் சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள்… தீர்வுகள்…

    தாய்ப்பால் சேமித்து வைத்து, அதை சூடாக்கினால் தாய்ப்பாலில் உள்ள தன்மை நீங்கிவிடும். இதைக் குழந்தைக்கு கொடுக்க கூடாது.

    லேசாக குளிர்ச்சியாக தாய்ப்பால் இருந்தாலோ இளஞ்சூடாக தாய்ப்பால் இருந்தாலோ குழந்தை தாய்ப்பாலை குடிக்காது. குழந்தைக்கு வித்தியாசம் தெரிந்துவிடும்.

    சிறிதளவு குளிர்ச்சியான தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுத்தாலும், குழந்தையின் தொண்டையில் புண்கள் வரக்கூடும்.

    சேமித்து வைத்த தாய்ப்பாலை குழந்தை சுவைத்துவிட்டு, மிச்சமிருக்கும் பாலை மீண்டும் ஃபிரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ சேமித்து வைக்க கூடாது. குழந்தையின் உமிழ்நீர் பட்ட தாய்ப்பாலில் கிருமிகள் படர்ந்துகொண்டே போகும். இதைக் குழந்தைக்கு மீண்டும் கொடுக்க கூடாது.

    நீங்கள் சேமித்து வைக்கும் தாய்ப்பால் பாட்டிலை அவசியம் ஸ்டெரிலைஸ் செய்யுங்கள். சுகாதாரமற்ற பாட்டிலில் தாய்ப்பாலை சேமித்து வைக்க கூடாது.

    சேமித்து வைத்த தாய்ப்பாலை குளிர்ச்சி நீங்கி விட்டதா என அறிய, உங்களது கைகளில் 2-3 சொட்டு விட்டு பாருங்கள். பின் அதை சுவைத்துப் பாருங்கள். குளிர்ச்சி நீங்கிவிட்டதா எனத் தெரியும்.

    பிரெஸ்ட் பம்பை நன்கு ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும். ஏனெனில் பிரெஸ்ட் பம்பில் தாய்ப்பால் இருக்கும் அல்லவா… எனவே நன்கு சுத்தப்படுத்தி, ஸ்டெரிலைஸ் செய்வது மிக மிக அவசியம்.

    எப்போது ஃபீடிங் பாட்டில் வேறு, தாய்ப்பால் சேகரித்து வைக்கின்ற பாட்டில் வேறு எனப் பிரித்துக் கொள்ளுங்கள்.

    தாய்ப்பால் சேமிப்பதற்கென பிரத்யேகமான பாட்டில்கள் விற்கின்றன. அதைப் பயன்படுத்துவது நல்லது.

    ஃபீடிங் பாட்டிலில் தாய்ப்பால் சேகரிக்க வேண்டாம். ஏனெனில் அதில் நிப்பிள் இருக்கிறது. சிறு ஓட்டையும் இருக்கிறது. அதை ஃபிரிட்ஜிலோ ஃபிரிசரிலோ வைக்க வேண்டாம். அவ்வளவு பாதுகாப்பானது கிடையாது.
    எந்த ஒரு விஷயத்தையும் தன்னம்பிக்கையோடும், முனைப்போடும் செயல்பட முடியாது. தன்னை மற்றவர்கள் எந்தளவு மதிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துவிடும்.
    * வயதான தோற்றம் வந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் குறிப்பிட்ட வயதை விட அதிகமாக கணிக்கிறார்கள். இது அவர்கள் தன்னம்பிக்கையை குறைத்து விடுகிறது.

    * திருமணத்திற்கு பிறகு, தன் மனைவியின் நேசிப்பு எங்கே குறைந்து விடுமோ என்ற பதற்றம் உருவாகிறது.

    * மற்றவர்களின் சாதாரண விமர்சனம் கூட தன்னை கேலி செய்வது போன்று தோன்றும்.

    * மற்றவர்களை அழகான தோற்றத்தில் பார்க்கும்போது ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றும். இது வாழ்க்கையின் முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

    * எந்த ஒரு விஷயத்தையும் தன்னம்பிக்கையோடும், முனைப்போடும் செயல்பட முடியாது. தன்னை மற்றவர்கள் எந்தளவு மதிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துவிடும்.

    * உடல்பருமன் தனக்கு ஒரு அசவுகரியமான விஷயம் என்று தெரிந்த பிறகு அதை சரிசெய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சி வாழ்க்கையின் பெரும்பகுதியை விழுங்கிவிடும்.

    * உடல் எடை உடல் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கிறது என்ற எண்ணம் அதிகமாக மனதை பாதிக்கும்.

    * நம்பிக்கையாக காதலை வெளிப்படுத்த முடியாது. ஒரு குற்ற உணர்ச்சி கூடவே வரும். தவிர்க்க முடியாது.

    * மற்றவர்கள் முன் தன் காதலரை ஹீரோ போல காண்பிக்கவே பெண்கள் விரும்புவார்கள். அதற்கு தான் தகுதியில்லையோ என்று நினைப்பார்கள்.

    * தகுந்த நேரத்தில் உடல் எடையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டால் காதல் வாழ்க்கையும், கல்யாண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
    இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் இரத்தம் தூய்மை அடையும். பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்சனை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்சனை நீங்கும்.
    தேவையான பொருட்கள் :

    கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
    கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
    வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 20
    புளி - எலுமிச்சை அளவு
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

    இதை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

    மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும். கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

    இறுதியாகப் முதலில் அரைத்தவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.

    சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் இந்தத் தொக்கு ஜோராக இருக்கும்.
    சிறு குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு கிட்ட பார்வை குறைபாடு அதிகரித்து இருப்பதை கண்சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
    உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் மாற்றிவிட்டது.

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு மூடப்பட்ட வகுப்புகள் இப்போதுதான் திறக்கப்பட்டு வருகிறது. அதுவும் தொடக்க கல்வி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போதும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்து வருகிறது.

    வீடுகளில் தொடர்ச்சியாக சுமார் 5 முதல் 8 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்பதால் அவர்களின் கண்களில் கோளாறு ஏற்படுவதாக பெற்றோர் அவர்களை டாக்டர்களிடம் அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக அவர்கள் செல்போன், லேப் டாப் மற்றும் டி.வி.க்களின் முன் அமர்ந்து பல மணி நேரம் தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சலும், கண்களில் நீர்வடிவதும் அதிகரித்து இருப்பதாக பெற்றோர் கூறினர்.

    கேரளாவில் குழந்தைகளுக்கு அதிகஅளவு கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து கண் சிகிச்சை நிபுணர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இதில் தெரியவந்த விபரங்கள் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சிறு குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு கிட்ட பார்வை குறைபாடு அதிகரித்து இருப்பதை கண்சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

    கிட்டபார்வை குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருள்கள் மற்றும் எழுத்துக்கள் தெளிவாக தெரிவது இல்லை. ஆனால் தூரத்தில் இருக்கும் பொருள்கள், எழுத்துக்களை அவர்களால் தெளிவாக பார்க்க முடியும்.

    அதே நேரம் கம்யூட்டர் மற்றும் லேப் டாப்பில் தொடர்ச்சியாக வேலை பார்க்கும் இளைஞர்கள் சிலருக்கு தூரப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இவர்களுக்கு தூரத்தில் இருக்கும் பொருள்கள் தெரிவதில்லை. ஆனால் அருகில் இருக்கும் பொருள்கள், எழுத்துக்களை தெளிவாக பார்க்க முடியும். இக்குறைபாடு காரணமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தொடர்ந்து தலைவலி, கண் வலி மற்றும் கண்களில் நீர்வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    இதுபற்றி கொச்சியை சேர்ந்த கண் சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர் கோபால் எஸ் பிள்ளை கூறியதாவது:-

    கொரோனா பரவலுக்கு பின்னர் அதிக அளவில் கண் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் பலரையும் ஆய்வு செய்ததில் அவர்களுக்கு கண்ணில் திசு வளர்ச்சி பாதிப்பு அதிகஅளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் பிற்காலத்தில் பார்வை இழப்பை சந்திக்க நேரிடும். எனவே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் கண் பார்வை குறைபாட்டையும், இது தொடர்பாக வரும் நோய்களில் இருந்தும் தப்பிக்க முடியும், என்றார்.
    சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கும், எண்ணெய் சருமத்திற்கும் கோதுமை மாவை கொண்டு தீர்வு காண முடியும். கோதுமை மாவில் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    எண்ணெய் சருமத்திற்கு...

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 4 டீஸ்பூன்

    தேன் - 2 டீஸ்பூன்

    ஆடை நீக்கிய பால்

    (ஸ்கிம்டு மில்க்) - 3 டீஸ்பூன்

    ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்

    செய்முறை: அகன்ற பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி, ஆற வைத்துக்கொள்ளவும். பின்பு ஆறிய பாலில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் கோதுமை மாவை சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இந்த பேஸ் பேக் நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும்.

    கரும்புள்ளி நீங்குவதற்கு...

    தேவையானவை:

    கோதுமை மாவு - 2 டீஸ்பூன்

    மில்க் கிரீம் - 3 டீஸ்பூன்

    ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்

    செய்முறை: அகன்ற கிண்ணத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் மில்க் கிரீம் கலந்து குழைத்துக்கொள்ளவும். ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசவும். நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
    கேரட்டை சாப்பிடும்போது, ​​அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம். அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும்.
    கொரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியவை. ஆனாலும் சில காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நன்மையை விட தீங்குதான் விளைவிக்கும். அத்தகைய காய்கறிகள் பற்றி பார்ப்போம்.

    காலிபிளவர்

    முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காலிபிளவர், பிராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பலரும் சாலட்டுகளில் இந்த காய்கறிகளை சேர்த்து பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடுவது வாயு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும். காலிபிளவரை பச்சையாக சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இந்த காய்கறிகளில் வயிற்றில் கரையாத ஒருவகை சர்க்கரை இருக்கிறது. சமைத்து உட்கொண்டால் மட்டுமே அந்தவகை சர்க்கரை எளிதாக கரையும்.

    கத்திரிக்காய்

    கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவது வாந்தி, தலைசுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கத்தரிக்காயில் காணப்படும் சோலனைன், நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, கத்தரிக்காயை எப்போதும் சமைத்துதான் உண்ண வேண்டும். பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    பீட்ரூட்

    பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனை சிலர் சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் கலந்து சாப்பிடுகிறார்கள். பலர் பீட்ரூட்டை சாறு எடுத்து பருகுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்றாலும் அளவோடுதான் பருக வேண்டும். பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்கு காரணம் பீட்ரூட்டிற்குள் காணப்படும் மூலக்கூறுகள்தான். அதுபற்றி பயப்படத்தேவையில்லை என்றாலும் பீட்ரூட்டை குறைந்த அளவு உட்கொள்வதுதான் நல்லது.

    காளான்கள்

    வைட்டமின் டி அதிகம் காணப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக காளான்கள் கருதப்படுகிறது. இதனை உட்கொள்ளும்போது சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், காளான்களை முழுமையாக சமைத்து சாப்பிடுவது நல்லது.

    கேரட்

    கேரட்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் கேரட்டை சாப்பிடும்போது, ​​அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம். அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும். ஏனென்றால், கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும். அதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.
    ×