என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கோதுமை மாவும் சருமத்தை அழகாக்கும்
Byமாலை மலர்14 Sep 2021 3:46 AM GMT (Updated: 14 Sep 2021 3:46 AM GMT)
சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கும், எண்ணெய் சருமத்திற்கும் கோதுமை மாவை கொண்டு தீர்வு காண முடியும். கோதுமை மாவில் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
எண்ணெய் சருமத்திற்கு...
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 4 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
ஆடை நீக்கிய பால்
(ஸ்கிம்டு மில்க்) - 3 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி, ஆற வைத்துக்கொள்ளவும். பின்பு ஆறிய பாலில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் கோதுமை மாவை சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இந்த பேஸ் பேக் நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும்.
கரும்புள்ளி நீங்குவதற்கு...
தேவையானவை:
கோதுமை மாவு - 2 டீஸ்பூன்
மில்க் கிரீம் - 3 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
செய்முறை: அகன்ற கிண்ணத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் மில்க் கிரீம் கலந்து குழைத்துக்கொள்ளவும். ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசவும். நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 4 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
ஆடை நீக்கிய பால்
(ஸ்கிம்டு மில்க்) - 3 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி, ஆற வைத்துக்கொள்ளவும். பின்பு ஆறிய பாலில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் கோதுமை மாவை சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இந்த பேஸ் பேக் நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும்.
கரும்புள்ளி நீங்குவதற்கு...
தேவையானவை:
கோதுமை மாவு - 2 டீஸ்பூன்
மில்க் கிரீம் - 3 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
செய்முறை: அகன்ற கிண்ணத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் மில்க் கிரீம் கலந்து குழைத்துக்கொள்ளவும். ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசவும். நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X