search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு கண்களில் கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிப்பு
    X
    குழந்தைகளுக்கு கண்களில் கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிப்பு

    ஆன்லைன் வகுப்பு: குழந்தைகளுக்கு கண்களில் கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிப்பு

    சிறு குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு கிட்ட பார்வை குறைபாடு அதிகரித்து இருப்பதை கண்சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
    உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் மாற்றிவிட்டது.

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு மூடப்பட்ட வகுப்புகள் இப்போதுதான் திறக்கப்பட்டு வருகிறது. அதுவும் தொடக்க கல்வி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போதும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்து வருகிறது.

    வீடுகளில் தொடர்ச்சியாக சுமார் 5 முதல் 8 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்பதால் அவர்களின் கண்களில் கோளாறு ஏற்படுவதாக பெற்றோர் அவர்களை டாக்டர்களிடம் அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக அவர்கள் செல்போன், லேப் டாப் மற்றும் டி.வி.க்களின் முன் அமர்ந்து பல மணி நேரம் தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சலும், கண்களில் நீர்வடிவதும் அதிகரித்து இருப்பதாக பெற்றோர் கூறினர்.

    கேரளாவில் குழந்தைகளுக்கு அதிகஅளவு கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து கண் சிகிச்சை நிபுணர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இதில் தெரியவந்த விபரங்கள் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சிறு குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு கிட்ட பார்வை குறைபாடு அதிகரித்து இருப்பதை கண்சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

    கிட்டபார்வை குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருள்கள் மற்றும் எழுத்துக்கள் தெளிவாக தெரிவது இல்லை. ஆனால் தூரத்தில் இருக்கும் பொருள்கள், எழுத்துக்களை அவர்களால் தெளிவாக பார்க்க முடியும்.

    அதே நேரம் கம்யூட்டர் மற்றும் லேப் டாப்பில் தொடர்ச்சியாக வேலை பார்க்கும் இளைஞர்கள் சிலருக்கு தூரப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இவர்களுக்கு தூரத்தில் இருக்கும் பொருள்கள் தெரிவதில்லை. ஆனால் அருகில் இருக்கும் பொருள்கள், எழுத்துக்களை தெளிவாக பார்க்க முடியும். இக்குறைபாடு காரணமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தொடர்ந்து தலைவலி, கண் வலி மற்றும் கண்களில் நீர்வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    இதுபற்றி கொச்சியை சேர்ந்த கண் சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர் கோபால் எஸ் பிள்ளை கூறியதாவது:-

    கொரோனா பரவலுக்கு பின்னர் அதிக அளவில் கண் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் பலரையும் ஆய்வு செய்ததில் அவர்களுக்கு கண்ணில் திசு வளர்ச்சி பாதிப்பு அதிகஅளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் பிற்காலத்தில் பார்வை இழப்பை சந்திக்க நேரிடும். எனவே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் கண் பார்வை குறைபாட்டையும், இது தொடர்பாக வரும் நோய்களில் இருந்தும் தப்பிக்க முடியும், என்றார்.
    Next Story
    ×