என் மலர்
ஆரோக்கியம்
பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும்.
தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும். பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெங்காயமும், நாட்டுக்கோழி முட்டையும் பொடுகைப் போக்குவதில் சிறப்பான பங்காற்றும். முதலில் நான்கைந்து சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து ஆம்லெட்டுக்கு அடிப்பதுபோல அடித்து அதைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். முட்டை நாற்றம் போக சீயக்காய் பயன்படுத்த வேண்டும். இதை வாரத்தில் இரண்டு நாள் வீதம் செய்து வந்தால் பொடுகுப் பிரச்சினை தீரும்.
வெந்தயம் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து முதல் நாள் இரவே நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். அதை மறுநாள் காலை எடுத்து நன்றாக அரைத்து தலைமுடி மற்றும் மண்டை ஓட்டின்மீதும் படுமாறு தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து முடியை நீரில் அலச வேண்டும். தலைக்குக் குளிப்பது சிறப்பு. இதை வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பசலைக்கீரையை மையாக அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதை அவ்வப்போது செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். வசம்பை தட்டிப்போட்டு தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு அடிக்கடி தலையில் தடவி வந்தாலும் பொடுகுத்தொல்லை சரியாகும். சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்கும். குளிக்கும்போது தேவைப்பட்டால் சீயக்காய் பயன்படுத்தலாம்.
எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதன் சாற்றினால் தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்து 15-லிருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலையை அலசலாம். இது தலைமுடியின் பசைத்தன்மையைக் குறைத்து பொடுகை ஒழித்து கூந்தலை ஜொலிஜொலிக்க உதவும்.
கைப்பிடி வேப்ப இலையை எடுத்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போலச் செய்ய வேண்டும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரிலோ அல்லது சாதாரண நீரிலோ தலையைக் கழுவ வேண்டும்.
துளசி மற்றும் காய்ந்த நெல்லிக்காய்ப் பொடிகளை நீரில் கலந்து பசை போலச் செய்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற எளிய வழிமுறைகளால் பொடுகுத் தொல்லையில் இருந்து மீளலாம்.
வெங்காயமும், நாட்டுக்கோழி முட்டையும் பொடுகைப் போக்குவதில் சிறப்பான பங்காற்றும். முதலில் நான்கைந்து சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து ஆம்லெட்டுக்கு அடிப்பதுபோல அடித்து அதைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். முட்டை நாற்றம் போக சீயக்காய் பயன்படுத்த வேண்டும். இதை வாரத்தில் இரண்டு நாள் வீதம் செய்து வந்தால் பொடுகுப் பிரச்சினை தீரும்.
வெந்தயம் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து முதல் நாள் இரவே நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். அதை மறுநாள் காலை எடுத்து நன்றாக அரைத்து தலைமுடி மற்றும் மண்டை ஓட்டின்மீதும் படுமாறு தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து முடியை நீரில் அலச வேண்டும். தலைக்குக் குளிப்பது சிறப்பு. இதை வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பசலைக்கீரையை மையாக அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதை அவ்வப்போது செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். வசம்பை தட்டிப்போட்டு தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு அடிக்கடி தலையில் தடவி வந்தாலும் பொடுகுத்தொல்லை சரியாகும். சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்கும். குளிக்கும்போது தேவைப்பட்டால் சீயக்காய் பயன்படுத்தலாம்.
எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதன் சாற்றினால் தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்து 15-லிருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலையை அலசலாம். இது தலைமுடியின் பசைத்தன்மையைக் குறைத்து பொடுகை ஒழித்து கூந்தலை ஜொலிஜொலிக்க உதவும்.
கைப்பிடி வேப்ப இலையை எடுத்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போலச் செய்ய வேண்டும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரிலோ அல்லது சாதாரண நீரிலோ தலையைக் கழுவ வேண்டும்.
துளசி மற்றும் காய்ந்த நெல்லிக்காய்ப் பொடிகளை நீரில் கலந்து பசை போலச் செய்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற எளிய வழிமுறைகளால் பொடுகுத் தொல்லையில் இருந்து மீளலாம்.
இண்டர்வியூவை எதிர்கொண்டதால் வேலைக்கான ஆபர் லெட்டரும் வந்துவிட்டது. ஆனால், புதிய வேலை ஏற்று, பணியில் சேரும் முன் இந்த 5 விஷயங்களைச் கவனிக்க மறக்க வேண்டாம்.
நீங்கள் எதிர்பார்த்ததுபோலவே ஒரு வேலைக்கான இண்டர்வியூக்குச் சென்று வந்துவிட்டீர்கள். மிகச் சிறப்பாக இண்டர்வியூவை எதிர்கொண்டதால் வேலைக்கான ஆபர் லெட்டரும் வந்துவிட்டது. நல்ல விஷயம்தான். ஆனால், புதிய வேலை ஏற்று, பணியில் சேரும் முன் இந்த 5 விஷயங்களைச் செக் பண்ண மறக்க வேண்டாம்.
* நீங்கள் இதுவரை பார்த்த வேலைக்கு கிடைத்த சம்பளத்தைவிட அதிகமாக இருக்கிறதா அல்லது இப்போது பார்க்கப் போகும் வேலைக்கு ஏற்ற சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா என்பதை முதலில் செக் பண்ணுங்கள். ஏனெனில், ஊதிய உயர்வுகள் குறித்து கொடுக்கப்படும் நம்பிக்கைகள் எல்லாமே இப்போதைக்கு வெறும் சொற்கள்தான். கொடுக்கப்படும் சம்பளமே கவனிக்கத்தக்கது.
* உங்களின் எதிர்கால இலக்குகளுக்கு இந்த வேலை எந்த வகையில் உதவும் என்பதைப் பாருங்கள். ஏனெனில், சினிமா தொடர்பான இலக்கை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத வேலை ஒன்றில் பணியாற்றுவது சாத்தியமே இல்லை. ஏனெனில், மனம் ஒன்ற அந்த வேலையில் இணைய முடியாது. அதனால், முழு ஈடுபாட்டைக் காட்ட முடியாது. நல்ல பெயரையும் பெற முடியாது. பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகளை நினைத்தும் பார்க்க முடியாது. அதைவிடவும் முக்கியம் உங்கள் வாழ்க்கை இலக்குக்காக உழைக்கும் நேரத்தை வேறொன்றுக்காக செலவழித்துக் கழித்துக்கொண்டிருப்பீர்கள்.
* பணியில் சேர அழைப்பு தரும் நிறுவனத்தின் விதிகளை செக் பண்ணுங்கள். சில நிறுவனங்கள் தொழிலாளர்களை அங்குள்ள ஒரு கருவியைப் பார்ப்பதைப் போலவே கருதும். வார விடுப்பு, வேலை நேரம் நிர்ணயம் இவற்றில் கருணையே இல்லாமல் இருக்கும். கருணை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பணியாளர் விதிமுறைகளுக்கு எதிராகவும் இருக்கக்கூடும். அதனால், அப்படியான கெடுபிடி நிறுவனங்களில் சேர்ந்துவிட்டு பின் வருந்துவதில் அர்த்தமில்லை. எனவே வேலையில் சேர்வதற்கு முன் கவனிப்பதே சரியானது.
* உங்களை வளர்த்துக்கொள்ள அந்நிறுவனமோ அந்த வேலையோ உதவுமா? ஆம் இதுவும் முக்கியம். நீங்கள் செய்யும் வேலையினால் அந்த நிறுவனம் பொருளீட்டிக்கொள்ளும்; வளர்ந்துகொள்ளும். அதேபோல அங்கு பணிபுரியும் நீங்கள் சம்பளம் பெறுவதுடன், உங்களின் திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்றும் பாருங்கள். இல்லையெனில், அந்த வேலையிலிருந்து வெளியே வரும்போது இப்போதைய திறனோடு மட்டுமே மற்றொரு வேலையைத் தேட வேண்டியிருக்கும்.
* நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சமூகத்தில் நல்ல பெயரோடு இருக்கிறதா என்பதையும் பாருங்கள். இப்படிச் சொல்வதற்கு காரணம், தவறான காரியங்களில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தில் நீங்கள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்பதற்காகத்தான். ஏனெனில், மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சிக்கலைத் தரும் நிறுவனம் எனில், அதன் பெயர் கெடும்போது உங்களுக்கும் சிக்கலே. அடுத்த வேலை தேடவும் பெரும் இடையூறாகவே அமைந்துவிடும்.
* நீங்கள் இதுவரை பார்த்த வேலைக்கு கிடைத்த சம்பளத்தைவிட அதிகமாக இருக்கிறதா அல்லது இப்போது பார்க்கப் போகும் வேலைக்கு ஏற்ற சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா என்பதை முதலில் செக் பண்ணுங்கள். ஏனெனில், ஊதிய உயர்வுகள் குறித்து கொடுக்கப்படும் நம்பிக்கைகள் எல்லாமே இப்போதைக்கு வெறும் சொற்கள்தான். கொடுக்கப்படும் சம்பளமே கவனிக்கத்தக்கது.
* உங்களின் எதிர்கால இலக்குகளுக்கு இந்த வேலை எந்த வகையில் உதவும் என்பதைப் பாருங்கள். ஏனெனில், சினிமா தொடர்பான இலக்கை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத வேலை ஒன்றில் பணியாற்றுவது சாத்தியமே இல்லை. ஏனெனில், மனம் ஒன்ற அந்த வேலையில் இணைய முடியாது. அதனால், முழு ஈடுபாட்டைக் காட்ட முடியாது. நல்ல பெயரையும் பெற முடியாது. பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகளை நினைத்தும் பார்க்க முடியாது. அதைவிடவும் முக்கியம் உங்கள் வாழ்க்கை இலக்குக்காக உழைக்கும் நேரத்தை வேறொன்றுக்காக செலவழித்துக் கழித்துக்கொண்டிருப்பீர்கள்.
* பணியில் சேர அழைப்பு தரும் நிறுவனத்தின் விதிகளை செக் பண்ணுங்கள். சில நிறுவனங்கள் தொழிலாளர்களை அங்குள்ள ஒரு கருவியைப் பார்ப்பதைப் போலவே கருதும். வார விடுப்பு, வேலை நேரம் நிர்ணயம் இவற்றில் கருணையே இல்லாமல் இருக்கும். கருணை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பணியாளர் விதிமுறைகளுக்கு எதிராகவும் இருக்கக்கூடும். அதனால், அப்படியான கெடுபிடி நிறுவனங்களில் சேர்ந்துவிட்டு பின் வருந்துவதில் அர்த்தமில்லை. எனவே வேலையில் சேர்வதற்கு முன் கவனிப்பதே சரியானது.
* உங்களை வளர்த்துக்கொள்ள அந்நிறுவனமோ அந்த வேலையோ உதவுமா? ஆம் இதுவும் முக்கியம். நீங்கள் செய்யும் வேலையினால் அந்த நிறுவனம் பொருளீட்டிக்கொள்ளும்; வளர்ந்துகொள்ளும். அதேபோல அங்கு பணிபுரியும் நீங்கள் சம்பளம் பெறுவதுடன், உங்களின் திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்றும் பாருங்கள். இல்லையெனில், அந்த வேலையிலிருந்து வெளியே வரும்போது இப்போதைய திறனோடு மட்டுமே மற்றொரு வேலையைத் தேட வேண்டியிருக்கும்.
* நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சமூகத்தில் நல்ல பெயரோடு இருக்கிறதா என்பதையும் பாருங்கள். இப்படிச் சொல்வதற்கு காரணம், தவறான காரியங்களில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தில் நீங்கள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்பதற்காகத்தான். ஏனெனில், மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சிக்கலைத் தரும் நிறுவனம் எனில், அதன் பெயர் கெடும்போது உங்களுக்கும் சிக்கலே. அடுத்த வேலை தேடவும் பெரும் இடையூறாகவே அமைந்துவிடும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும் என்பதில், எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உணவில் இதை குறைப்பது மிகவும் அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும் என்பதில், எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உணவில் உப்பை குறைப்பது அவசியம். உப்பில் இருக்கும் சோடியம் குளோரைடு, இஇரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும். அது இதய நோய்க்கு வழிவகுக்கும். அதனால் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் அதிக உப்பு பயன்படுத்துவது நல்லதல்ல என்பது டாக்டர்களின் பரிந்துரையாக இருக்கிறது. புதிய ஆராய்ச்சி ஒன்றும் ‘நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உப்பு நல்லதல்ல’ என்று கூறுகிறது. இதுதொடர்பாக பான் பல்கலைக்கழகம் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் துறை பேராசிரியர் டாக்டர் கிறிஸ்டியன் குர்ட்ஸ், “அதிகப் படியான உப்பு உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதை முதல் முறையாக நிரூபித்துள்ளோம். தினமும் ஒருவர் 5 கிராமுக்கு அதிகமாக உப்பு சேர்க்கக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. நாங்கள் தினசரி சாப்பிடும் உப்பின் அளவுடன் கூடுதலாக 6 கிராம் உப்பை சேர்த்து சிலரை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
துரித உணவுகளான இரண்டு பர்கர்கள் மற்றும் பொரித்த உணவுகளில் உப்பை அதிகம் சேர்த்து சாப்பிட வைத்தோம். ஒரு வாரம் கழித்து அவர்களின் இஇரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தோம். பரிசோதனை முடிவில் உணவில் அதிக உப்பை சேர்த்து சாப்பிட ஆரம்பித்த பின்னர், அவர்களின் நோய் எதிர்ப்பு செல்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது” என்கிறார்.
உப்பில் இருக்கும் அதிகப்படியான சோடியம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இதயம், சிறுநீரகங்கள், மூளை மற்றும் இரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். உணவில் அதிகபடியான உப்பை சேர்த்தால் பருவமடைதல் தாமதமாகக்கூடும். கருத்தரிப்பதிலும் சிக்கல் ஏற்படக்கூடும். மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் துறை பேராசிரியர் டாக்டர் கிறிஸ்டியன் குர்ட்ஸ், “அதிகப் படியான உப்பு உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதை முதல் முறையாக நிரூபித்துள்ளோம். தினமும் ஒருவர் 5 கிராமுக்கு அதிகமாக உப்பு சேர்க்கக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. நாங்கள் தினசரி சாப்பிடும் உப்பின் அளவுடன் கூடுதலாக 6 கிராம் உப்பை சேர்த்து சிலரை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
துரித உணவுகளான இரண்டு பர்கர்கள் மற்றும் பொரித்த உணவுகளில் உப்பை அதிகம் சேர்த்து சாப்பிட வைத்தோம். ஒரு வாரம் கழித்து அவர்களின் இஇரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தோம். பரிசோதனை முடிவில் உணவில் அதிக உப்பை சேர்த்து சாப்பிட ஆரம்பித்த பின்னர், அவர்களின் நோய் எதிர்ப்பு செல்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது” என்கிறார்.
உப்பில் இருக்கும் அதிகப்படியான சோடியம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இதயம், சிறுநீரகங்கள், மூளை மற்றும் இரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். உணவில் அதிகபடியான உப்பை சேர்த்தால் பருவமடைதல் தாமதமாகக்கூடும். கருத்தரிப்பதிலும் சிக்கல் ஏற்படக்கூடும். மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் அன்றாடம் புதிய வரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. எத்னிக் உடைகள், பார்ட்டி உடைகள் போன்றவற்றிக்கு என்றுமே தனி மவுசுதான்.
பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் அன்றாடம் புதிய வரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. எத்னிக் உடைகள், பார்ட்டி உடைகள் போன்றவற்றிக்கு என்றுமே தனி மவுசுதான்.
பார்ட்டி உடைகளில் கவுன்களும், லாங் ஃப்ராக்குகளும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
* ஒன் ஷோல்டர் சீக்வின் எம்பிராய்டர்டு கவுன்கள்:
இந்த கவுன்களில் இருக்கும் ஒரு கைக்கும், கவுனின் கீழ்புறம் சுற்றிலும் ஃபிரில்கள் இணைக்ககப்பட்டு, இடுப்புப் பகுதியில் லேசானது இணைக்கப்பட்டு, ஜிப்பானது பக்கவாட்டில் பொருத்தப்பட்டு, பூக்கள் சீக்வின் எம்பிராய்டரி வேலைப்பாடு உடல் முழுவதும் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கவுன்கள் மென்மையான நிறங்களில் பார்ப்பதற்கு அம்சமாகவும், அழகாகவும் உள்ளன.
ஆர்கன்ஸா, காட்டன் மற்றும் ஷேட்டின் துணிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கவுன்கள் ஒரு வயது குழந்தை முதல் பதினோரு வயது குழந்தைகளுக்கேற்ற பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இவை பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிய ஏற்ற ஆடைகளாக உள்ளன.
விஸ்கோஸ் எம்பிராய்டரி நெட் கவுன்கள் இந்த கவுன்கள் பெரும்பாலும் நெட்டட் முழுக்கைகள் அல்லது கைகளே இல்லாமலும் வடிவமைக்கப்படுகின்றன. மார்பிலிருந்து கழுத்துப்பகுதியானது நெட்டட் துணியில் கழுத்தைச்சுற்றிலும் அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் தைக்கப்பட்டுள்ளன. உடலின் மேற்பகுதியில் கவுனானது உடலைப் பிட்டித்தவாறு சிக்கென்றும் இடுப்பிலிந்து குதிங்கால் வரை ஃப்ளேர்களுடனும், ஷேட்டின் துணியின் மேல் நெட்டில் எம்பிராய்டரி செய்யப்பட்ட மற்றொரு லேயரானது இணைக்கப்பட்டு மிகவும் பிரமாதமாக காட்சியளிக்கின்றது.
இவ்வகைக் கவுன்களிலும் இரண்டு வயது முதல் பதினான்கு வயதுவரை பெண் குழந்தைகள் அணிந்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பல்வேறு அளவுகள் உள்ளன. இவை வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அணியஏற்றவையாக இருக்கும்.
*ஸ்லீவ்லெஸ் கவுன்களுடன் வரும் போன்ச்சோ:-
ஷேடின் அல்லது சில்க் துணியில் கைகளில்லாமல் எளிமையான டிசைன்களில் தைக்கப்படும் கவுன்களின் மேலே கழுத்திலிருந்து மார்பு வரை மறைக்கும் மேலாடையே போன்ச்சோ என்று அழைக் கப்படுகிறது. இவ்வகை போன்ச்சோக்கள் பலவித வண்ணங்களில் தனியாகவும் விற்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வண்ணங்களில் இவற்றை வாங்கி வைத்துக் கொண்டோமானால் அவற்றை வெவ்வேறு கவுன்களின் மேல் மிக்ஸ் அண்டு மேட்ச் செய்து அணிந்து கொள்ளலாம்.
* ஹால்ட்டர் கழுத்துடன் வரும் கவுன் கள்:-
இவை பார்ட்டிகளுக்கும், வரவேற்பு விழாக்களுக்கும் அணிய ஏற்றவையாக இருக்கும். இவ்வகை ஆடையில் மார்பிலிருந்து கணுக்கால் வரை உட்புறம் லைனிங் கொடுத்து மேற்புறம் உள்ள துணியானது வயிற்றுப்பகுதியிலிருந்து ‘A’ வடிவில் பிரிந்து பின்புறம் தரையில் புரள்வது போல் மிகவும் கச்சிதமாக வடிவமைக்ப்பட்டிருக்கும். இடுப்பை இருக்கி பிடிக்கும் விதமாக அழகிய இடுப்பு பட்டைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். மேல் கழுத்திலிருந்து கழுத்தைச்சுற்றிலும் அழகிய வேலைப்பாடுகள் துணியில் செய்யப்பட்டிருக்கும். முன்புற கழுத்தில் இருந்து மெல்லிய துணியானது இணைக்கப்பட்டு அது மார்பை அந்தக் கவுனின் மேற்புறம் மறைப்பது போல் வடிவமைக்கபட்டிருக்கும்.
ஏழு, எட்டு வயதிலிருந்து பெரிய வயது பெண் குழந்தைகள் இந்த கவுனை அணியும் பொழுது அது அவர்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாகவே உள்ளது.
* ஷாப்ஃப் குர்த்தி மற்றும் டோத்தி சல்வார்:-
இது பெண் குழந்தைகளுக்கு ஏற்ற நவீன இணைவு உடை என்று சொல்லலாம். இது நவநாகரீகமாகவும் அதே சமயம் பாரம்பரியமான தோற்றத்தைத்தருவதாகவும் உள்ளது. மேலாடையானது ஸ்லீவ்ரெஸ் ஷார்ட் குர்த்தி அதன் கீழ்புறம் ஃபிரில்கள் வைத்து பார்க்க அழகாக உள்ளது. கீழாடையானது பஞ்சகச்சம் போல் அதிக ஃபிளிட்ஸ்களுடன் கூடிய பேன்ட்டாகும். இநத ஆடைகள் அனைத்து விதமான சமயங்களிலும் அணிய ஏற்றவையாக உள்ளது.
* டங்கரீஸ்: இது சாதாரணமான அதே சமயத்தில் நேர்த்தியான உடையாக உள்ளது. இவை சாதாரண துணிகளிலும் பெரும்பாலும் டெனிம் துணிகளிலும் கிடைக்கின்றன. இவை பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என இருபாலரும் அணிவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டங்கரீ உடையை டி-ஷர்ட் மற்றும் ஷர்ட்டுடன் அணிந்துகொள்ளலாம். இவை முழுக்கால் மற்றும் அரைக்கால், முக்கால் கால்வரை இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
* ஃப்ளவர் டிரஸ்:- இவை ட்யூலி ரகத்துணியால் வடிவமைக்கப்படும் ஆடையாகும். இந்த ஃப்ராக்கில் கைகளில்லாமல் வெறும் தோள்பட்டையை மறைப்பது போல் லேஸ் துணிகளில் மலர்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன இடுப்பை சுற்றிலும் அழகிய கற்கள் பதித்தோ அல்லது தோள்பட்டையில் இருக்கும் மலர்களைப் போன்றே இடுப்பைச்சுற்றிலும் பட்டைகள் அமைக்கப் பட்டு அணிந்துகொள்ளும் சிறு பிள்ளைகளுக்குவசதியாகவும் நேர்த்தியான தோற்றத்தைத்தருவதாகவும் உள்ளன.
பார்ட்டி உடைகளில் கவுன்களும், லாங் ஃப்ராக்குகளும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
* ஒன் ஷோல்டர் சீக்வின் எம்பிராய்டர்டு கவுன்கள்:
இந்த கவுன்களில் இருக்கும் ஒரு கைக்கும், கவுனின் கீழ்புறம் சுற்றிலும் ஃபிரில்கள் இணைக்ககப்பட்டு, இடுப்புப் பகுதியில் லேசானது இணைக்கப்பட்டு, ஜிப்பானது பக்கவாட்டில் பொருத்தப்பட்டு, பூக்கள் சீக்வின் எம்பிராய்டரி வேலைப்பாடு உடல் முழுவதும் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கவுன்கள் மென்மையான நிறங்களில் பார்ப்பதற்கு அம்சமாகவும், அழகாகவும் உள்ளன.
ஆர்கன்ஸா, காட்டன் மற்றும் ஷேட்டின் துணிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கவுன்கள் ஒரு வயது குழந்தை முதல் பதினோரு வயது குழந்தைகளுக்கேற்ற பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இவை பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிய ஏற்ற ஆடைகளாக உள்ளன.
விஸ்கோஸ் எம்பிராய்டரி நெட் கவுன்கள் இந்த கவுன்கள் பெரும்பாலும் நெட்டட் முழுக்கைகள் அல்லது கைகளே இல்லாமலும் வடிவமைக்கப்படுகின்றன. மார்பிலிருந்து கழுத்துப்பகுதியானது நெட்டட் துணியில் கழுத்தைச்சுற்றிலும் அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் தைக்கப்பட்டுள்ளன. உடலின் மேற்பகுதியில் கவுனானது உடலைப் பிட்டித்தவாறு சிக்கென்றும் இடுப்பிலிந்து குதிங்கால் வரை ஃப்ளேர்களுடனும், ஷேட்டின் துணியின் மேல் நெட்டில் எம்பிராய்டரி செய்யப்பட்ட மற்றொரு லேயரானது இணைக்கப்பட்டு மிகவும் பிரமாதமாக காட்சியளிக்கின்றது.
இவ்வகைக் கவுன்களிலும் இரண்டு வயது முதல் பதினான்கு வயதுவரை பெண் குழந்தைகள் அணிந்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பல்வேறு அளவுகள் உள்ளன. இவை வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அணியஏற்றவையாக இருக்கும்.
*ஸ்லீவ்லெஸ் கவுன்களுடன் வரும் போன்ச்சோ:-
ஷேடின் அல்லது சில்க் துணியில் கைகளில்லாமல் எளிமையான டிசைன்களில் தைக்கப்படும் கவுன்களின் மேலே கழுத்திலிருந்து மார்பு வரை மறைக்கும் மேலாடையே போன்ச்சோ என்று அழைக் கப்படுகிறது. இவ்வகை போன்ச்சோக்கள் பலவித வண்ணங்களில் தனியாகவும் விற்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வண்ணங்களில் இவற்றை வாங்கி வைத்துக் கொண்டோமானால் அவற்றை வெவ்வேறு கவுன்களின் மேல் மிக்ஸ் அண்டு மேட்ச் செய்து அணிந்து கொள்ளலாம்.
* ஹால்ட்டர் கழுத்துடன் வரும் கவுன் கள்:-
இவை பார்ட்டிகளுக்கும், வரவேற்பு விழாக்களுக்கும் அணிய ஏற்றவையாக இருக்கும். இவ்வகை ஆடையில் மார்பிலிருந்து கணுக்கால் வரை உட்புறம் லைனிங் கொடுத்து மேற்புறம் உள்ள துணியானது வயிற்றுப்பகுதியிலிருந்து ‘A’ வடிவில் பிரிந்து பின்புறம் தரையில் புரள்வது போல் மிகவும் கச்சிதமாக வடிவமைக்ப்பட்டிருக்கும். இடுப்பை இருக்கி பிடிக்கும் விதமாக அழகிய இடுப்பு பட்டைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். மேல் கழுத்திலிருந்து கழுத்தைச்சுற்றிலும் அழகிய வேலைப்பாடுகள் துணியில் செய்யப்பட்டிருக்கும். முன்புற கழுத்தில் இருந்து மெல்லிய துணியானது இணைக்கப்பட்டு அது மார்பை அந்தக் கவுனின் மேற்புறம் மறைப்பது போல் வடிவமைக்கபட்டிருக்கும்.
ஏழு, எட்டு வயதிலிருந்து பெரிய வயது பெண் குழந்தைகள் இந்த கவுனை அணியும் பொழுது அது அவர்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாகவே உள்ளது.
* ஷாப்ஃப் குர்த்தி மற்றும் டோத்தி சல்வார்:-
இது பெண் குழந்தைகளுக்கு ஏற்ற நவீன இணைவு உடை என்று சொல்லலாம். இது நவநாகரீகமாகவும் அதே சமயம் பாரம்பரியமான தோற்றத்தைத்தருவதாகவும் உள்ளது. மேலாடையானது ஸ்லீவ்ரெஸ் ஷார்ட் குர்த்தி அதன் கீழ்புறம் ஃபிரில்கள் வைத்து பார்க்க அழகாக உள்ளது. கீழாடையானது பஞ்சகச்சம் போல் அதிக ஃபிளிட்ஸ்களுடன் கூடிய பேன்ட்டாகும். இநத ஆடைகள் அனைத்து விதமான சமயங்களிலும் அணிய ஏற்றவையாக உள்ளது.
* டங்கரீஸ்: இது சாதாரணமான அதே சமயத்தில் நேர்த்தியான உடையாக உள்ளது. இவை சாதாரண துணிகளிலும் பெரும்பாலும் டெனிம் துணிகளிலும் கிடைக்கின்றன. இவை பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என இருபாலரும் அணிவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டங்கரீ உடையை டி-ஷர்ட் மற்றும் ஷர்ட்டுடன் அணிந்துகொள்ளலாம். இவை முழுக்கால் மற்றும் அரைக்கால், முக்கால் கால்வரை இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
* ஃப்ளவர் டிரஸ்:- இவை ட்யூலி ரகத்துணியால் வடிவமைக்கப்படும் ஆடையாகும். இந்த ஃப்ராக்கில் கைகளில்லாமல் வெறும் தோள்பட்டையை மறைப்பது போல் லேஸ் துணிகளில் மலர்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன இடுப்பை சுற்றிலும் அழகிய கற்கள் பதித்தோ அல்லது தோள்பட்டையில் இருக்கும் மலர்களைப் போன்றே இடுப்பைச்சுற்றிலும் பட்டைகள் அமைக்கப் பட்டு அணிந்துகொள்ளும் சிறு பிள்ளைகளுக்குவசதியாகவும் நேர்த்தியான தோற்றத்தைத்தருவதாகவும் உள்ளன.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை.
தாய்ப்பால் தானம், தாய் இல்லாத குழந்தைகளுக்கு உதவும் நல்ல திட்டம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை செய்ய சில மருத்துவ அலுவலர்களுக்கும் மனமில்லை, தாய்மார்களுக்கும் பொறுமை இல்லை. குழந்தை பிறந்தவுடன் ஒரே ஒரு முறை மாட்டுப்பால் அல்லது பால் பவுடரிலிருந்து பெறப்படும் பாலை கொடுப்பதே, தாய்ப்பால் சுரப்பை குறைக்க போதுமானதாக இருக்கும் என்கிறது அறிவியல்.
குழந்தை பிறந்த 60 நிமிடத்துக்குள் முதல் உணவாக தாய்ப்பாலை தர உதவ வேண்டும். இல்லையெனில் ஏன் 60 நிமிடத்துக்குள் தாய்ப்பால் தரவில்லை என்ற மருத்துவ காரணத்தை மருத்துவ பதிவேட்டிலும், தாய் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது தரும் ஆவணத்திலும் பதிவு செய்ய வேண்டும். இது மருத்துவரின் தார்மீக பொறுப்பு என்கிறார்கள், மருத்துவர்கள். குழந்தை பிறந்த நேரம், தாய்ப்பால் கொடுத்த நேரம் இரண்டையும் பதிவு செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மருத்துவமனையிலும் கடைபிடித்தால் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைக்க முடியும்.
வேலைக்கு போகும் பெண்களின் சிரமத்தை குறைப்பதற்காக அரசாங்கம் பேறுகால விடுமுறையாக 6 மாதங்களை ஊதியத்துடன் பரிந்துரைக்கிறது. ஆனாலும் 46.8 சதவீத தாய்மார்கள்தான், குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள். தாயின் மார்பை வற்றச்செய்ய ஒரு நாள், ஒருவேளை மாற்றுப்பால் போதும். தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை.
அதை தருவது தாயின் கடமை. வேலைக்கு செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் தருவது பற்றி முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குழந்தை ஒரு மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கும் போதே மறு மார்பில் பாலை எடுப்பது சுலபம். இப்படி சேகரிக்கப்பட்ட பால், அறை வெப்பநிலையில் 7 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் 24 மணி நேரம் வரை கெடாது. வேலைக்கு கிளம்பும் முன் அன்றைய தேவைக்கான பாலை தனித்தனி கப்புகளில் எடுத்து, அவற்றில் நேரத்தை குறித்து வைத்து செல்லலாம். சேகரித்து வைத்த பாலை ஸ்பூன் மூலம் குழந்தைக்கு புகட்ட வேண்டும் என்கிறது மருத்துவ வழிகாட்டி.
குழந்தை பிறந்த 60 நிமிடத்துக்குள் முதல் உணவாக தாய்ப்பாலை தர உதவ வேண்டும். இல்லையெனில் ஏன் 60 நிமிடத்துக்குள் தாய்ப்பால் தரவில்லை என்ற மருத்துவ காரணத்தை மருத்துவ பதிவேட்டிலும், தாய் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது தரும் ஆவணத்திலும் பதிவு செய்ய வேண்டும். இது மருத்துவரின் தார்மீக பொறுப்பு என்கிறார்கள், மருத்துவர்கள். குழந்தை பிறந்த நேரம், தாய்ப்பால் கொடுத்த நேரம் இரண்டையும் பதிவு செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மருத்துவமனையிலும் கடைபிடித்தால் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைக்க முடியும்.
வேலைக்கு போகும் பெண்களின் சிரமத்தை குறைப்பதற்காக அரசாங்கம் பேறுகால விடுமுறையாக 6 மாதங்களை ஊதியத்துடன் பரிந்துரைக்கிறது. ஆனாலும் 46.8 சதவீத தாய்மார்கள்தான், குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள். தாயின் மார்பை வற்றச்செய்ய ஒரு நாள், ஒருவேளை மாற்றுப்பால் போதும். தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை.
அதை தருவது தாயின் கடமை. வேலைக்கு செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் தருவது பற்றி முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குழந்தை ஒரு மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கும் போதே மறு மார்பில் பாலை எடுப்பது சுலபம். இப்படி சேகரிக்கப்பட்ட பால், அறை வெப்பநிலையில் 7 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் 24 மணி நேரம் வரை கெடாது. வேலைக்கு கிளம்பும் முன் அன்றைய தேவைக்கான பாலை தனித்தனி கப்புகளில் எடுத்து, அவற்றில் நேரத்தை குறித்து வைத்து செல்லலாம். சேகரித்து வைத்த பாலை ஸ்பூன் மூலம் குழந்தைக்கு புகட்ட வேண்டும் என்கிறது மருத்துவ வழிகாட்டி.
சேமியா புட்டு செய்வது மிகவும் எளிது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். சத்தானதும் கூட. இன்று இந்த புட்டு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நொறுக்கிய சேமியா - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதே கடாயில் சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த சேமியாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்த பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், நறுக்கிய முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
புட்டு குழலில் முதலில் தேங்காய் துருவலை போட்டு அதன் மேல் பிசறி வைத்த சேமியாவை போட்டு அதன் பின் தேங்காய் துருவல், சேமியா என்ற வகையில் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
நொறுக்கிய சேமியா - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதே கடாயில் சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த சேமியாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்த பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், நறுக்கிய முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
புட்டு குழலில் முதலில் தேங்காய் துருவலை போட்டு அதன் மேல் பிசறி வைத்த சேமியாவை போட்டு அதன் பின் தேங்காய் துருவல், சேமியா என்ற வகையில் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான சுவையான சேமியா புட்டு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
நகைகள் என்றால் அவை தங்கத்தினால் செய்ததாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? வெள்ளி நகைகளிலும் எத்தனையோ டிசைன்கள், வடிவங்கள் என்று அற்புதமான நகைகள் வந்து விட்டன.
நகைகள் என்றால் அவை தங்கத்தினால் செய்ததாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? வெள்ளி நகைகளிலும் எத்தனையோ டிசைன்கள், வடிவங் கள் என்று அற்புதமான நகைகள் வந்து விட்டன.
சாதாரணமாக வெள்ளி நகைகள் என்றாலே மெட்டி, கொலுசு அதிகபட்மாக கை மோதிரங்கள் இவற்றைத்தான் வாங்குவோம். ஆனால் வெள்ளியிலும் பழமையான நகைகள், எத்னிக் நகைகள் மணப்பெண் அலங்கார நகைகள், பாரம்பரிய நகைகள் என அனைத்தும் வந்துவிட்டன.
* வெள்ளி ஹாரத்தில் கையகல டாலர்கள். டாலர்களின் ஓரத்தில் சலங்கைகள். ஒரு டாலரின் கீழே இணைக்கப்பட்ட மற்றொரு பெரிய டாலர். இந்த ஒரு நகை மட்டும் போதும். இத்துடன் வேறு எந்த நகையும் அணியத்தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு ஆளுமையான தோற்றத்தைத் தருகிறது. அடர்த்தியான நிறமுள்ள பிளெயின் சேலைகளுடன் இந்த ஹாரமானது அணிந்து சென்றால் மிகவும் அருமையாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. பெரிய நிகழ்ச்சிகளுக்கு இதை அணிந்து செல்லலாம்.
* இரண்டு சரமாக மெல்லிய வெள்ளிச் செயின், அதன் இடையிடையே வெள்ளிக் குண்டுகள் கீழே அழகிய பெரிய அகலமான டாலர். அதன் கீழ்ப்புறத்தில் சலங்கைகளும், வெள்ளிச்செயினும் தொங்குவது போல் வடிவமைத்திருப்பது அற்புதம் என்று சொல்லலாம். கோவில்கள் மற்றும் சிறிய விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இவை இருக்கும்.
* சிறிய லக்ஷ்மியானது ஒன்றன் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்ட ஹாரத்திற்கு இரண்டு மயில்கள் ஒட்டிக்கொண்டிருக்க அதன் கீழே லக்ஷ்மி அருள் பாலிக்கிறார். இந்த டாலரின் கீழ் சிவப்பு கற்கள் பதித்திருக்க, அந்த ஒவ்வொரு கற்களின் கீழும் முத்துக்கள் தொங்குகின்றன. வரவேற்பு நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் இவற்றை அணிந்தால் நம்முடைய பெயர் ஏதுவாக இருந்தாலும் லக்ஷ்மிகரமான பெண் என்று பெயர் எடுக்கலாம்.
* காசுமாலையை வெள்ளியில் அணிந் தால் கட்டாயம் நன்றாகத்தான் இருக்கும். இவை ஒரே சரமாகவும், பல அடுக்குச் சரங்களாகவும் உள்ளன. இந்தக் காசுமாலைகளை சேலை, பாவாடை தாவணியோடு மட்டுமல்லாமல் சல்வார் சூட், லாங் ஃப்ராக், மட்டுமல்லாமல் குர்த்தி என எதனுடனும் பொருத்தி அணிந்து கொள்ளலாம்.
* வெள்ளி குந்தன் ஹாரங்களின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சிறிய குந்தன் கற்கள் பதித்த ஹாரங்கள் ஒரு விதமான அழகு என்றால் பெரிய குந்தன் வேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹாரங்கள் அழகோ அழகு. பதக்கங்கள் இல்லாமல் வரும் ஆரங்களும் பார்க்க ஒரு கவுரவமான மிடுக்கான தோற்றத்தைத் தருவதாக உள்ளன. காக்ரா சோளி, பட்டு சல்வார் செட், பட்டு குர்திகள் மற்றும் லெகங்காக்களுடன் இவற்றை அணிந்தால் விழா நாயகியாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
* வெள்ளியில் வரும் சோக்கர் செட்டுகளில் இத்தனை வகைகளா என்று வாய்பிளக்கும் அளவுக்கு ஏராளமான மாடல்கள் உள்ளன. இரண்டு விரல் அகல சோக்கர், குந்தன் வேலைப்பாடுடைய சோக்கர்களில் சலங்கைகள் தொங்குவது போல் உள்ள சோக்கர்கள், கையகல சோக்கர், கழுத்திலிருந்து துவங்கி மார்பை மறைப்பது போல் உள்ள மாலைகள் என்று வகை வகையான நகைகள்.
* சில தங்க கழுத்தணிகள் அதிக பவுனில் செய்யப்பட்டவையாக இருக்கும். அதுபோன்ற நகைகள் அணிய ஆசையாக இருக்கின்றது ஆனால் அவ்வளவு பணத்தை அதில் முதலீடு செய்ய வேண்டுமா? என்று நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பவை வெள்ளியில்அதே போன்று செய்யப்பட்டு தங்க முலாம் போடப்பட்ட நகைகளாகும். இந்திப் படமான ‘ ஜோதா அக்பர்’ படத்தில் ஐஸ்வர்யாராய் அவர்கள் அணிந்தது போன்ற பெரிய பெரிய நகைகள் கூட வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசி விற்பனை செய்யப்படுகின்றன. தங்க நகைகளுக்கு செய்யப்படும் அனைத்து வேலைப்பாடுகளும் வெள்ளி நகைகளிலும் கிடைக்கின்றன என்பது கூடுதல் தகவலாகும்.
* உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகளை அணிகிறார்கள்.
* வெள்ளியால் செய்யப்பட்ட காதணிகள் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை கிடைக்கின்றன. பெரிய அளவிலிருக்கும் ‘ஜிமிக்கிகள்’ பெண்கலால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.
* வெள்ளியில் “ஹூப்ஸ்” என்று சொல்லப்படும் வளையங்கள், தொங்கட்டான்கள், “டேங்கிள்ஸ்” என்று அழைக்கப்படும் நீளமாகத் தொங்கும் காதணிகள் “சான்டிலியர்” மாடல்கள், ஹக்கிஸ் மாடல், டியர் ட்ராப் மாடல், ‘இயர் கஃப்ஸ் எனப்படும் காது மடல்களுக்கும் செய்யப்பட்டிருக்கும் காதணிகள், கம்மல் அணிகின்ற துவாரம் வழியாக நுழைக்கப்படும் செயினானது துவாரத்தின் இருபக்கமும் தொங்குவது போல சில சமயங்களில் காதின் முன்புறத்தில் தொங்கும் செயினில் கற்கள் அல்லது மணிகள் இணைக்கப்பட்ட ‘த்ரெட்டர்’, “சந்த்பாலி” எனப்படும் சந்திர வடிவில் வட்டமாக இருக்கும் காதணிகள் எனப்பல மாடல்களில் வெள்ளியால் செய்யப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப் படுவதோடு அதைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
சாதாரணமாக வெள்ளி நகைகள் என்றாலே மெட்டி, கொலுசு அதிகபட்மாக கை மோதிரங்கள் இவற்றைத்தான் வாங்குவோம். ஆனால் வெள்ளியிலும் பழமையான நகைகள், எத்னிக் நகைகள் மணப்பெண் அலங்கார நகைகள், பாரம்பரிய நகைகள் என அனைத்தும் வந்துவிட்டன.
* வெள்ளி ஹாரத்தில் கையகல டாலர்கள். டாலர்களின் ஓரத்தில் சலங்கைகள். ஒரு டாலரின் கீழே இணைக்கப்பட்ட மற்றொரு பெரிய டாலர். இந்த ஒரு நகை மட்டும் போதும். இத்துடன் வேறு எந்த நகையும் அணியத்தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு ஆளுமையான தோற்றத்தைத் தருகிறது. அடர்த்தியான நிறமுள்ள பிளெயின் சேலைகளுடன் இந்த ஹாரமானது அணிந்து சென்றால் மிகவும் அருமையாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. பெரிய நிகழ்ச்சிகளுக்கு இதை அணிந்து செல்லலாம்.
* இரண்டு சரமாக மெல்லிய வெள்ளிச் செயின், அதன் இடையிடையே வெள்ளிக் குண்டுகள் கீழே அழகிய பெரிய அகலமான டாலர். அதன் கீழ்ப்புறத்தில் சலங்கைகளும், வெள்ளிச்செயினும் தொங்குவது போல் வடிவமைத்திருப்பது அற்புதம் என்று சொல்லலாம். கோவில்கள் மற்றும் சிறிய விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இவை இருக்கும்.
* சிறிய லக்ஷ்மியானது ஒன்றன் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்ட ஹாரத்திற்கு இரண்டு மயில்கள் ஒட்டிக்கொண்டிருக்க அதன் கீழே லக்ஷ்மி அருள் பாலிக்கிறார். இந்த டாலரின் கீழ் சிவப்பு கற்கள் பதித்திருக்க, அந்த ஒவ்வொரு கற்களின் கீழும் முத்துக்கள் தொங்குகின்றன. வரவேற்பு நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் இவற்றை அணிந்தால் நம்முடைய பெயர் ஏதுவாக இருந்தாலும் லக்ஷ்மிகரமான பெண் என்று பெயர் எடுக்கலாம்.
* காசுமாலையை வெள்ளியில் அணிந் தால் கட்டாயம் நன்றாகத்தான் இருக்கும். இவை ஒரே சரமாகவும், பல அடுக்குச் சரங்களாகவும் உள்ளன. இந்தக் காசுமாலைகளை சேலை, பாவாடை தாவணியோடு மட்டுமல்லாமல் சல்வார் சூட், லாங் ஃப்ராக், மட்டுமல்லாமல் குர்த்தி என எதனுடனும் பொருத்தி அணிந்து கொள்ளலாம்.
* வெள்ளி குந்தன் ஹாரங்களின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சிறிய குந்தன் கற்கள் பதித்த ஹாரங்கள் ஒரு விதமான அழகு என்றால் பெரிய குந்தன் வேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹாரங்கள் அழகோ அழகு. பதக்கங்கள் இல்லாமல் வரும் ஆரங்களும் பார்க்க ஒரு கவுரவமான மிடுக்கான தோற்றத்தைத் தருவதாக உள்ளன. காக்ரா சோளி, பட்டு சல்வார் செட், பட்டு குர்திகள் மற்றும் லெகங்காக்களுடன் இவற்றை அணிந்தால் விழா நாயகியாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
* வெள்ளியில் வரும் சோக்கர் செட்டுகளில் இத்தனை வகைகளா என்று வாய்பிளக்கும் அளவுக்கு ஏராளமான மாடல்கள் உள்ளன. இரண்டு விரல் அகல சோக்கர், குந்தன் வேலைப்பாடுடைய சோக்கர்களில் சலங்கைகள் தொங்குவது போல் உள்ள சோக்கர்கள், கையகல சோக்கர், கழுத்திலிருந்து துவங்கி மார்பை மறைப்பது போல் உள்ள மாலைகள் என்று வகை வகையான நகைகள்.
* சில தங்க கழுத்தணிகள் அதிக பவுனில் செய்யப்பட்டவையாக இருக்கும். அதுபோன்ற நகைகள் அணிய ஆசையாக இருக்கின்றது ஆனால் அவ்வளவு பணத்தை அதில் முதலீடு செய்ய வேண்டுமா? என்று நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பவை வெள்ளியில்அதே போன்று செய்யப்பட்டு தங்க முலாம் போடப்பட்ட நகைகளாகும். இந்திப் படமான ‘ ஜோதா அக்பர்’ படத்தில் ஐஸ்வர்யாராய் அவர்கள் அணிந்தது போன்ற பெரிய பெரிய நகைகள் கூட வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசி விற்பனை செய்யப்படுகின்றன. தங்க நகைகளுக்கு செய்யப்படும் அனைத்து வேலைப்பாடுகளும் வெள்ளி நகைகளிலும் கிடைக்கின்றன என்பது கூடுதல் தகவலாகும்.
* உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகளை அணிகிறார்கள்.
* வெள்ளியால் செய்யப்பட்ட காதணிகள் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை கிடைக்கின்றன. பெரிய அளவிலிருக்கும் ‘ஜிமிக்கிகள்’ பெண்கலால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.
* வெள்ளியில் “ஹூப்ஸ்” என்று சொல்லப்படும் வளையங்கள், தொங்கட்டான்கள், “டேங்கிள்ஸ்” என்று அழைக்கப்படும் நீளமாகத் தொங்கும் காதணிகள் “சான்டிலியர்” மாடல்கள், ஹக்கிஸ் மாடல், டியர் ட்ராப் மாடல், ‘இயர் கஃப்ஸ் எனப்படும் காது மடல்களுக்கும் செய்யப்பட்டிருக்கும் காதணிகள், கம்மல் அணிகின்ற துவாரம் வழியாக நுழைக்கப்படும் செயினானது துவாரத்தின் இருபக்கமும் தொங்குவது போல சில சமயங்களில் காதின் முன்புறத்தில் தொங்கும் செயினில் கற்கள் அல்லது மணிகள் இணைக்கப்பட்ட ‘த்ரெட்டர்’, “சந்த்பாலி” எனப்படும் சந்திர வடிவில் வட்டமாக இருக்கும் காதணிகள் எனப்பல மாடல்களில் வெள்ளியால் செய்யப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப் படுவதோடு அதைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
தோழிகளிடம் உள்ஒன்று வைத்து வெளிஒன்று பேசிக்கொண்டிருந்தாலும், அவர்களை எப்படி கவிழ்ப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாலும் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துவிடும். நிம்மதியை இழந்துவிடுவீர்கள்’ என்று விளக்குகிறது, அந்த ஆய்வு.
நீங்கள் உங்கள் தோழிகளிடம் நல்லமுறையில் பழகுங்கள். அவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்யுங்கள். அவ்வாறு நல்ல எண்ணங்களோடு நீங்கள் பழகினால், அவர்களுக்கு மட்டுமல்ல பழகும் உங்களுக்கும் மனநலமும், உடல் நலமும் மேம்படும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ‘நல்ல எண்ணங்களோடு நீங்கள் அடுத்தவர்களிடம் பழகினால் உங்கள் மனம் மகிழும். அதன் மூலம் உங்கள் ஆயுள் பெருகும். அமைதியாக தூங்குவீர்கள். மனஇறுக்கமின்றி நிம்மதியாக வாழ்வீர்கள். தோழிகளிடம் உள்ஒன்று வைத்து வெளிஒன்று பேசிக்கொண்டிருந்தாலும், அவர்களை எப்படி கவிழ்ப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாலும் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துவிடும். நிம்மதியை இழந்துவிடுவீர்கள்’ என்று விளக்குகிறது, அந்த ஆய்வு.
நீங்கள் உங்கள் தோழிகளுக்கு கெடுதல் செய்யக்கூடாது என்று கூறும் அந்த உளவியல் ஆய்வு, உங்களுக்கு கெடுதல் செய்ய நினைக்கும் தோழி களை எப்படி அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
ஒரு சிலரை நீங்கள் நெருக்கமான தோழிகள் பட்டியலில் வைத்திருப்பீர்கள். படிப்பிலோ, வேலை யிலோ, பதவியிலோ அவர்களுடன் போட்டிபோடும் சூழ்நிலை உருவாகும்போதுதான் அவர்களது உண்மையான குணாதிசயம் என்னவென்று உங்களுக்கு தெரியவரும். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போயிருக்கும். அதன் பின்னணியை ஆராய்ந்தால், அதற்கு உங்களுக்கு நெருக்கமான தோழிகளேகூட காரணமாக இருப்பது தெரியவரும்.
அப்படிப்பட்ட மோசமான தோழிகளை நீங்கள் அடையாளம் காண்பது எளிது. அவர்கள் உங்கள் மீது அதிக அக்கறைகொண் டவர் போன்று காட்டிக்கொண்டு, உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொள்வார்கள். குறிப்பாக உங்களது அந் தரங்க பக்கங்கள், ரகசிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவை உருவாக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் இருந்து விலகி விடவேண்டும்.
சில தோழிகள் அதிக உரிமை எடுத்து உங்களிடம் பழகுவதோடு, திட்டமிட்டு உங்களை தவறான வழிகளிலும் ஈடுபடுத்த முயற்சி செய்வார்கள். அவர்களிடம் சிக்கிக்கொண்டால் உங்கள் கவுரவமும், உடல் நலமும் பாதிக்கப்படும். உங்களுக்கு யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களால்தான், தேவையில்லாத பழக்கவழக்கங்களில் உங்களை ஈடுபடுத்த முடியும். மது, புகை, தவறான நட்பு போன்றவைகளை அறிமுகப்படுத்தும் தோழிகளி டமும், அவை தப்பில்லை என்று வாதிடும் தோழிகளிடமும் கவனமாக இருங்கள்.
சமூகம் புறக்கணிக்கும் தவறான விஷயங்களை, தவறல்ல என்று கூறிக்கொண்டு அதை அனுபவிக்க வலியுறுத்தும் நட்பு வட்டாரத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண் டும். இன்பம் என்ற பொறியை வைத்து உங்களை வசீகரித்து, உங்கள் வாழ்க்கையை சீரழிக்க நினைக்கும் தோழிகளிடம் ஒருபோதும் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
தோழிகளில் சிலர் புகழ்ந்து பேசியே குழிபறிக்கும் வேலையிலும் ஈடுபடுவார்கள். அவர்கள், தனது தகுதிக்கு ஏற்ற வேலையை செய்துகொண்டிருப்பவர்களிடம் ‘உன் திறமைக்கு இதைவிட நல்ல வேலை கிடைக்கும். இதை உதறித்தள்ளு.. வேறு வேலை நான் வாங்கித்தருகிறேன்’ என்று கூறி, வேலையை இழக்கவைத்து நடுரோட்டிற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு காணாமல் போய்விடுவார்கள். இப்படி வேலைக்கு வேட்டு வைப்பது மட்டுமல்ல, அந்த தோழிகள் காதலுக்குள் புகுந்து ‘உன் காதலன் மோசமானவன். அவனை கழற்றிவிட்டுவிடு’ என்று பேசி, குழப்பி, அந்த காதலுக்கே சமாதி கட்டிவிடுகிறவர்களும் இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான தோழிகளை தவிர்ப்பது சற்று கடினம்தான். ஏன்என்றால் நீங்கள், முக்கியமான விஷயங்களில் ஆலோசனை கேட்கும் அந்தஸ்தை அவர்களுக்கு ஏற்கனவே வழங்கியிருப்பீர்கள். எப்படி பேசினால் உங்களை நம்பவைக்க முடியும் என்ற அனுபவமும் அவர்களுக்கு இருக்கும். உங்கள் வளர்ச்சி பிடிக்காத இவர்கள் நீங்கள் எழுச்சி பெறும்போதெல்லாம், முரண்பாடான ஆலோசனைகளை கூறி உங்களை கவிழ்ப்பார்கள். இவர்களிடம் இருந்து முழுமையாக ஒதுங்கிவிடுங்கள்.
நீங்கள் உங்கள் தோழிகளுக்கு கெடுதல் செய்யக்கூடாது என்று கூறும் அந்த உளவியல் ஆய்வு, உங்களுக்கு கெடுதல் செய்ய நினைக்கும் தோழி களை எப்படி அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
ஒரு சிலரை நீங்கள் நெருக்கமான தோழிகள் பட்டியலில் வைத்திருப்பீர்கள். படிப்பிலோ, வேலை யிலோ, பதவியிலோ அவர்களுடன் போட்டிபோடும் சூழ்நிலை உருவாகும்போதுதான் அவர்களது உண்மையான குணாதிசயம் என்னவென்று உங்களுக்கு தெரியவரும். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போயிருக்கும். அதன் பின்னணியை ஆராய்ந்தால், அதற்கு உங்களுக்கு நெருக்கமான தோழிகளேகூட காரணமாக இருப்பது தெரியவரும்.
அப்படிப்பட்ட மோசமான தோழிகளை நீங்கள் அடையாளம் காண்பது எளிது. அவர்கள் உங்கள் மீது அதிக அக்கறைகொண் டவர் போன்று காட்டிக்கொண்டு, உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொள்வார்கள். குறிப்பாக உங்களது அந் தரங்க பக்கங்கள், ரகசிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவை உருவாக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் இருந்து விலகி விடவேண்டும்.
சில தோழிகள் அதிக உரிமை எடுத்து உங்களிடம் பழகுவதோடு, திட்டமிட்டு உங்களை தவறான வழிகளிலும் ஈடுபடுத்த முயற்சி செய்வார்கள். அவர்களிடம் சிக்கிக்கொண்டால் உங்கள் கவுரவமும், உடல் நலமும் பாதிக்கப்படும். உங்களுக்கு யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களால்தான், தேவையில்லாத பழக்கவழக்கங்களில் உங்களை ஈடுபடுத்த முடியும். மது, புகை, தவறான நட்பு போன்றவைகளை அறிமுகப்படுத்தும் தோழிகளி டமும், அவை தப்பில்லை என்று வாதிடும் தோழிகளிடமும் கவனமாக இருங்கள்.
சமூகம் புறக்கணிக்கும் தவறான விஷயங்களை, தவறல்ல என்று கூறிக்கொண்டு அதை அனுபவிக்க வலியுறுத்தும் நட்பு வட்டாரத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண் டும். இன்பம் என்ற பொறியை வைத்து உங்களை வசீகரித்து, உங்கள் வாழ்க்கையை சீரழிக்க நினைக்கும் தோழிகளிடம் ஒருபோதும் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
தோழிகளில் சிலர் புகழ்ந்து பேசியே குழிபறிக்கும் வேலையிலும் ஈடுபடுவார்கள். அவர்கள், தனது தகுதிக்கு ஏற்ற வேலையை செய்துகொண்டிருப்பவர்களிடம் ‘உன் திறமைக்கு இதைவிட நல்ல வேலை கிடைக்கும். இதை உதறித்தள்ளு.. வேறு வேலை நான் வாங்கித்தருகிறேன்’ என்று கூறி, வேலையை இழக்கவைத்து நடுரோட்டிற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு காணாமல் போய்விடுவார்கள். இப்படி வேலைக்கு வேட்டு வைப்பது மட்டுமல்ல, அந்த தோழிகள் காதலுக்குள் புகுந்து ‘உன் காதலன் மோசமானவன். அவனை கழற்றிவிட்டுவிடு’ என்று பேசி, குழப்பி, அந்த காதலுக்கே சமாதி கட்டிவிடுகிறவர்களும் இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான தோழிகளை தவிர்ப்பது சற்று கடினம்தான். ஏன்என்றால் நீங்கள், முக்கியமான விஷயங்களில் ஆலோசனை கேட்கும் அந்தஸ்தை அவர்களுக்கு ஏற்கனவே வழங்கியிருப்பீர்கள். எப்படி பேசினால் உங்களை நம்பவைக்க முடியும் என்ற அனுபவமும் அவர்களுக்கு இருக்கும். உங்கள் வளர்ச்சி பிடிக்காத இவர்கள் நீங்கள் எழுச்சி பெறும்போதெல்லாம், முரண்பாடான ஆலோசனைகளை கூறி உங்களை கவிழ்ப்பார்கள். இவர்களிடம் இருந்து முழுமையாக ஒதுங்கிவிடுங்கள்.
‘முன்பெல்லாம் ஆண்ட்ரோபாஸ் பிரச்சினைகளை ஆண்கள் 50 முதல் 60 வயதில் எதிர்கொண்டார்கள். இப்போது 40 வயதிலேயே அதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள்.
பெண்கள் கிட்டத்தட்ட 50 வயதுகளில் ‘மெனோபாஸ் ’ பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். மாதவிலக்கு முற்றிலுமாக நிலைத்துப்போகும் அந்த காலகட்டத்தில் பெண்கள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வார்கள். அப்போது சிலருக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், ஆர்வமும் குறைந்துபோகும். பெண்களுக்கு ஏற்படும் அதே போன்ற அவஸ்தைகள் ஆண்களுக்கும் குறிப்பிட்ட வயதில் ஏற்படுவதுண்டு. அதற்கு ‘ஆண்ட்ரோபாஸ்’ என்று பெயர்.
‘முன்பெல்லாம் ஆண்ட்ரோபாஸ் பிரச்சினைகளை ஆண்கள் 50 முதல் 60 வயதில் எதிர்கொண்டார்கள். இப்போது 40 வயதிலேயே அதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், வாழ்க்கையை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக அணுகுகிறவர்களும்-மாமிச உணவுகளை அதிகம் உண்கிறவர்களும் முன்னதாகவே ஆண்ட்ரோபாஸ் நிலையை அடைந்துவிடுகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள், வங்கி பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றவர்களிடம் ஆண்ட்ரோபாஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்று புதிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஆண்ட்ரோபாஸை பெரும்பாலான ஆண்கள் முதுமையின் அடையாளமாக கருதுகிறார்கள். அப்படியில்லை. ஆனாலும் அவர்களது ஆண்மை சார்ந்த செயல்பாடுகளில் பலவீனங்கள் தோன்றும். உற்சாகம் குறையும். வழக்கமான வேலைகளைகூட ஆர்வமின்றி செய்வார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆண்களிடம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படுவதுதான். இந்த குறைபாடு அவர்களது உடல் சக்தி இயக்கத்தில் மந்தநிலையை தோற்றுவிக்கிறது.
இப்போதெல்லாம் 40 வயதை கடக்கும்போதே ஆண்களின் உடலில் பலவீனங்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன. தசைகளின் பலம் குறைகிறது. மனஅழுத்தம் தோன்றுகிறது. முன்கோபம் அதிகரிக்கிறது. தூக்கமின்மை உருவாகிறது. எதிர்மறையான சிந்தனை தலைதூக்குகிறது. இதோடு உறுப்பு விரைப்புத்தன்மை குறைந்து, பாலியல் ஆர்வமும் கட்டுப்படுகிறது. ஆனால் இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் எல்லா ஆண்களுக்கும் தோன்றும் என்று கூறுவதற்கில்லை.
பெண்களுக்கு சினைமுட்டை உற்பத்தி முடங்குவதில் இருந்து மனோபாஸ் பிரச்சினை தொடங்குகிறது. அதன் அறிகுறிகள் அனைத்தையும் பெண்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் ஆண்களுக்கு அப்படியில்லை. மெல்ல மெல்ல அந்த மாற்றங்கள் உருவாகுவதால், அறிகுறிகளை அவர்கள் உணருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. ஆண்கள் உடல்ரீதியான பலவீனங்களை கவனமாக கருத்தில்கொண்டால் இதனை தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக படுக்கை அறை செயல்பாட்டு குறைபாடு ஆண்ட்ரோபாஸின் முதல் அறிகுறியாக இருக்கிறது.
வயதாகும்போது ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் சமச்சீரற்ற நிலைகளால் ஆண்களின் பாலியல் செயல்பாடுகளில் பாதிப்புகள் உருவாகும் என்றாலும் இப்போது 40 வயதுகளிலே அத்தகைய பிரச்சினைகள் உருவாகுவதற்கு சமூக சூழல்களும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது. கொரோனா நோய் பற்றிய அச்சம், வேலை இழப்பு, மனக்கவலை, தவறான வாழ்வியல் பழக்கங்கள், முரண்பாடான உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளும் இதற்கான காரணங்களாகும்.
குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாதவர்களும் விரைவாக ஆண்ட்ரோபாஸ் நெருக்கடியை சந்திக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியை சந்திப்பவர்களில் பலரும் தங்கள் அலுவலகப் பணிகளில் ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சிலர் வேலையே கதி என்று அதிலே மூழ்கிப்போய்விடுகிறார்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது. அதனால் உடல் குண்டாகிவிடுகிறார்கள். மதுப் பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் விரைவிலே ஆண்ட்ரோபாஸ் பிரச்சினையை சந்திக்க காரணமாகிவிடுகிறது.
இந்த பிரச்சினையை சந்திக்கும் ஆண்கள் மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது. இதற்கான மருத்துவரீதியிலான தீர்வுகளை காண முன்வரவேண்டும். கணவனும், மனைவியும் மனம்விட்டுப் பேசினால் இதற்கான தீர்வை எளிதாக காணமுடியும்.
‘முன்பெல்லாம் ஆண்ட்ரோபாஸ் பிரச்சினைகளை ஆண்கள் 50 முதல் 60 வயதில் எதிர்கொண்டார்கள். இப்போது 40 வயதிலேயே அதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், வாழ்க்கையை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக அணுகுகிறவர்களும்-மாமிச உணவுகளை அதிகம் உண்கிறவர்களும் முன்னதாகவே ஆண்ட்ரோபாஸ் நிலையை அடைந்துவிடுகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள், வங்கி பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றவர்களிடம் ஆண்ட்ரோபாஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்று புதிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஆண்ட்ரோபாஸை பெரும்பாலான ஆண்கள் முதுமையின் அடையாளமாக கருதுகிறார்கள். அப்படியில்லை. ஆனாலும் அவர்களது ஆண்மை சார்ந்த செயல்பாடுகளில் பலவீனங்கள் தோன்றும். உற்சாகம் குறையும். வழக்கமான வேலைகளைகூட ஆர்வமின்றி செய்வார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆண்களிடம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படுவதுதான். இந்த குறைபாடு அவர்களது உடல் சக்தி இயக்கத்தில் மந்தநிலையை தோற்றுவிக்கிறது.
இப்போதெல்லாம் 40 வயதை கடக்கும்போதே ஆண்களின் உடலில் பலவீனங்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன. தசைகளின் பலம் குறைகிறது. மனஅழுத்தம் தோன்றுகிறது. முன்கோபம் அதிகரிக்கிறது. தூக்கமின்மை உருவாகிறது. எதிர்மறையான சிந்தனை தலைதூக்குகிறது. இதோடு உறுப்பு விரைப்புத்தன்மை குறைந்து, பாலியல் ஆர்வமும் கட்டுப்படுகிறது. ஆனால் இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் எல்லா ஆண்களுக்கும் தோன்றும் என்று கூறுவதற்கில்லை.
பெண்களுக்கு சினைமுட்டை உற்பத்தி முடங்குவதில் இருந்து மனோபாஸ் பிரச்சினை தொடங்குகிறது. அதன் அறிகுறிகள் அனைத்தையும் பெண்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் ஆண்களுக்கு அப்படியில்லை. மெல்ல மெல்ல அந்த மாற்றங்கள் உருவாகுவதால், அறிகுறிகளை அவர்கள் உணருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. ஆண்கள் உடல்ரீதியான பலவீனங்களை கவனமாக கருத்தில்கொண்டால் இதனை தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக படுக்கை அறை செயல்பாட்டு குறைபாடு ஆண்ட்ரோபாஸின் முதல் அறிகுறியாக இருக்கிறது.
வயதாகும்போது ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் சமச்சீரற்ற நிலைகளால் ஆண்களின் பாலியல் செயல்பாடுகளில் பாதிப்புகள் உருவாகும் என்றாலும் இப்போது 40 வயதுகளிலே அத்தகைய பிரச்சினைகள் உருவாகுவதற்கு சமூக சூழல்களும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது. கொரோனா நோய் பற்றிய அச்சம், வேலை இழப்பு, மனக்கவலை, தவறான வாழ்வியல் பழக்கங்கள், முரண்பாடான உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளும் இதற்கான காரணங்களாகும்.
குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாதவர்களும் விரைவாக ஆண்ட்ரோபாஸ் நெருக்கடியை சந்திக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியை சந்திப்பவர்களில் பலரும் தங்கள் அலுவலகப் பணிகளில் ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சிலர் வேலையே கதி என்று அதிலே மூழ்கிப்போய்விடுகிறார்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது. அதனால் உடல் குண்டாகிவிடுகிறார்கள். மதுப் பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் விரைவிலே ஆண்ட்ரோபாஸ் பிரச்சினையை சந்திக்க காரணமாகிவிடுகிறது.
இந்த பிரச்சினையை சந்திக்கும் ஆண்கள் மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது. இதற்கான மருத்துவரீதியிலான தீர்வுகளை காண முன்வரவேண்டும். கணவனும், மனைவியும் மனம்விட்டுப் பேசினால் இதற்கான தீர்வை எளிதாக காணமுடியும்.
தம்பதியர்களே..அவசரப்படாதீர்கள்.. இரண்டாவது குழந்தைக்கு போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உங்களது முதல் பிரசவம் சிசேரியன் ஆபரேசனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது அடுத்த குழந்தைக்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். காரணம், ஆபரேசனால் உண்டான புண்கள் குறைந்தது 3 மாதமாகும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதிருக்கும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் 18 மாதம் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும். பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லை என்றால், பிறக்கப்போகும் குழந்தைக்கு தாயிடம் இருந்து சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
பிரவசவத்தின் போது நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பல உடல் நலக் குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, இரண்டாம் குழந்தைக்கு குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
குழந்தை பெற்றுக் கொள்வதில் கவனமும், அடுத்த குழந்தைக்கு கொஞ்சம் கால இடைவெளியும் எடுத்துக் கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி களை கட்டும்.
இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும். பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லை என்றால், பிறக்கப்போகும் குழந்தைக்கு தாயிடம் இருந்து சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
பிரவசவத்தின் போது நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பல உடல் நலக் குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, இரண்டாம் குழந்தைக்கு குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
குழந்தை பெற்றுக் கொள்வதில் கவனமும், அடுத்த குழந்தைக்கு கொஞ்சம் கால இடைவெளியும் எடுத்துக் கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி களை கட்டும்.
இளைய தலைமுறையினரை பொருத்தமட்டில் பெண்கள் அழகாக இருக்க வேண்டும். நன்றாக சம்பாத்திக்க வேண்டும். தன்னுடன் நல்ல நட்பு வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
“விண்ணை நோக்கி எகிறிக் கொண்டு போகும் தங்கத்தின் விலையை பார்த்தால் என் பெண் மகளை நான் எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரிய வில்லை. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”, என்று நினைக்கும் பெற்றோர்களே, கவலைப்படாதீர்கள். இதேபோல் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது? என்று கலங்கும் புதுமணத் தம்பதிகளும் கவலை கொள்ளாதீங்க…!
உங்களுக்குத் தெரியுமா? நமது தாத்தா, பாட்டி காலத்தில் பெண்களுக்கு சீதனம் கொடுத்துதான் மாப்பிள்ளை வீட்டார் திருமணங்களை நடத்தினர். காலப்போக்கில் எப்படியோ மணப்பெண் வீட்டார், மாப்பிள்ளைகளுக்கு நகை, நட்டு, ரொக்கம் தரும் சூழ்நிலை உருவாகி விட்டது. இப்போது காலம் மெது,மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் காவல்துறை குற்றப் பதிவேடுகளில் வரதட்சணைக் கொடுமைகள் வெகுவாக குறைந்து விட்டன. சற்றே சமூகத்தை உற்றுப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். நடுத்தர வர்க்கத்தினரை பொறுத்தவரையில் முன்பு போல் மாப்பிள்ளை வீட்டார் அதிக அளவு வரதட்சணைகளை எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் அது.
பெரும்பாலான திருமணங்கள் “போட நினைப்பதை போடுங்கள்’” என்ற ஒரு வரிக் கோரிக்கையிலேயே நடந்து முடிகின்றன. இதற்கு காரணங்கள் இருக்கிறது. பெண்கள் முன்பைப் போல் இல்லை. அவர்களும் ஆண்களுக்கு நிகராக பி.ஈ., எம்.பி.ஏ.,எம்.பி.பி.எஸ் என உயர் படிப்பு படிக்க ஆரம்பிக்க விட்டார்கள். அவர்களும் வேலைக்கு போகிறார்கள். கை நிறைய சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆண்களை பொறுத்தமட்டில் இன்றைய இளைய தலை முறையினர் அதிக வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. இன்னும் இது பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் பழைய காலத்து பெற்றோர்கள்தான். இளைய தலை முறையினரை பொருத்தமட்டில் பெண்கள் அழகாக இருக்க வேண்டும். நன்றாக சம்பாத்திக்க வேண்டும். தன்னுடன் நல்ல நட்பு வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்றைய இளைய தலை முறை ஆண்களும். பெண்களும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இது தவிர தமிழகத்தை பொறுத்தவரையில் ஆண்பால், பெண்பால் பிறப்பு விகிதாச்சார மாற்றமும் ஒரு காரணம் ஆகும். கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்..
இத்தகைய ஆண்- பெண் பிறப்பு விகித வேறுபாடு தவிர இன்றைய காலத்துப் பெண்கள் துணிச்சலாகப் புறப்பட்டு நகரத்தை நோக்கி படை எடுப்பதும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. படித்த கிராமத்து பட்டதாரிப் பெண்கள் இப்போது சென்னை, பெங்களூர். டெல்லி என முக்கிய நகரங்களுக்கு பணியாற்ற கிளம்பி இருப்பதும் ஒரு காரணமாகும். முன்பெல்லாம், திருமணங்கள் சொந்த பந்தத்திற்குள் அதிகம் நடந்தன. திருமணம் என்பது சொந்தக்காரர்களின் மிகப் பெரிய கவுரவ பிரச்னையாக இருந்தது. இதில் ஒவ்வொரு பெண்ணுக்கும் முறை மாப்பிள்ளை என்று ஒருவர் இருப்பார். அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும்.
இதன் எதிரொலியாக வருகிற 2025 க்கு பிறகு நடை பெறும் திருமணங்களில் வரதட்சணை என்ற பேச்சுக்கு இடமே இருக்காது. மணமகன் வீட்டார்தான் மணமகளுக்கு பணம் கொடுத்து பெண்ணை பெற வேண்டியது இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
உங்களுக்குத் தெரியுமா? நமது தாத்தா, பாட்டி காலத்தில் பெண்களுக்கு சீதனம் கொடுத்துதான் மாப்பிள்ளை வீட்டார் திருமணங்களை நடத்தினர். காலப்போக்கில் எப்படியோ மணப்பெண் வீட்டார், மாப்பிள்ளைகளுக்கு நகை, நட்டு, ரொக்கம் தரும் சூழ்நிலை உருவாகி விட்டது. இப்போது காலம் மெது,மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் காவல்துறை குற்றப் பதிவேடுகளில் வரதட்சணைக் கொடுமைகள் வெகுவாக குறைந்து விட்டன. சற்றே சமூகத்தை உற்றுப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். நடுத்தர வர்க்கத்தினரை பொறுத்தவரையில் முன்பு போல் மாப்பிள்ளை வீட்டார் அதிக அளவு வரதட்சணைகளை எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் அது.
பெரும்பாலான திருமணங்கள் “போட நினைப்பதை போடுங்கள்’” என்ற ஒரு வரிக் கோரிக்கையிலேயே நடந்து முடிகின்றன. இதற்கு காரணங்கள் இருக்கிறது. பெண்கள் முன்பைப் போல் இல்லை. அவர்களும் ஆண்களுக்கு நிகராக பி.ஈ., எம்.பி.ஏ.,எம்.பி.பி.எஸ் என உயர் படிப்பு படிக்க ஆரம்பிக்க விட்டார்கள். அவர்களும் வேலைக்கு போகிறார்கள். கை நிறைய சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆண்களை பொறுத்தமட்டில் இன்றைய இளைய தலை முறையினர் அதிக வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. இன்னும் இது பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் பழைய காலத்து பெற்றோர்கள்தான். இளைய தலை முறையினரை பொருத்தமட்டில் பெண்கள் அழகாக இருக்க வேண்டும். நன்றாக சம்பாத்திக்க வேண்டும். தன்னுடன் நல்ல நட்பு வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்றைய இளைய தலை முறை ஆண்களும். பெண்களும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இது தவிர தமிழகத்தை பொறுத்தவரையில் ஆண்பால், பெண்பால் பிறப்பு விகிதாச்சார மாற்றமும் ஒரு காரணம் ஆகும். கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்..
இத்தகைய ஆண்- பெண் பிறப்பு விகித வேறுபாடு தவிர இன்றைய காலத்துப் பெண்கள் துணிச்சலாகப் புறப்பட்டு நகரத்தை நோக்கி படை எடுப்பதும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. படித்த கிராமத்து பட்டதாரிப் பெண்கள் இப்போது சென்னை, பெங்களூர். டெல்லி என முக்கிய நகரங்களுக்கு பணியாற்ற கிளம்பி இருப்பதும் ஒரு காரணமாகும். முன்பெல்லாம், திருமணங்கள் சொந்த பந்தத்திற்குள் அதிகம் நடந்தன. திருமணம் என்பது சொந்தக்காரர்களின் மிகப் பெரிய கவுரவ பிரச்னையாக இருந்தது. இதில் ஒவ்வொரு பெண்ணுக்கும் முறை மாப்பிள்ளை என்று ஒருவர் இருப்பார். அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும்.
இப்போது அப்படி இல்லை. மணமக்களை தேடுவது பரந்து விரிந்த விசயமாகி விட்டது. நிறையத் திருமணங்கள் இணயதள தேடுதல் வழியாக நடக்கத் தொடங்கி விட்டன. பெண் படித்து வேலைக்கு போனால் போதும் வரதட்சணை ஒரு பொருட்டல்ல என்ற நியதிக்கு மனணமகன் வீட்டார் வந்து விட்டார்கள். இதுவல்லாமல் திருமணத்தை அதிக செலவில்லாமலும், அதிக கூட்டமில்லாமலும் நடத்தும்படியாக “கொரோனா” ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் அவலுக்கு முக்கிய பங்கு உண்டு. இன்று நாம் உடலுக்கு வலுசேர்க்கும் சுவையான அவல் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை பொருட்கள்
அவல் - 200 கிராம்,
அரிசி - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
கடுகு, இஞ்சி துருவல் - சிறிது,
மிளகாய் - 1.
செய்முறை
ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.
அவல் - 200 கிராம்,
அரிசி - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
கடுகு, இஞ்சி துருவல் - சிறிது,
மிளகாய் - 1.
செய்முறை
ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.
சூடான அவல் தோசையுடன் காரமான கெட்டிச்சட்னியை வைத்து சாப்பிட சுவை நன்றாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்






