என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    டியட்டில் இருப்பவர்கள் இந்த அடையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சத்தானது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
    தேவையான பொருட்கள்
     
    புழுங்கலரிசி - 1 கப்,
    முளை கட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா 1/2 கப்,
    தோல் சீவி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 3/4 கப்,
    காய்ந்தமிளகாய் - 4,
    இஞ்சி - சிறு துண்டு,
    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
    நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    புழுங்கலரிசியை ஊறவைத்து அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்தமிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். 

    முக்கால் பதம் அரைந்ததும், வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து நன்கு கலக்கவும். 

    கறிவேப்பிலை சேர்த்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடையை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சத்தான வெள்ளரிக்காய் அடை ரெடி. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பை குறைத்து, கொழுப்பு உணவுகளை தவிர்த்து, உடல் பயிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
    நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பது அனைவரும் உணர்ந்து உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது உடல் பருமன். கொழுப்பை குறைத்து கொழுப்பு உணவுகளை தவிர்த்து உடல் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்று ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் மற்றும் இயக்குனர் டாக்டர் பிரவீன்ராஜ் கூறுகிறார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான். கோவிட்-19 என்னும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பதை உலகமும், இந்திய குடிமக்களும் உணர்ந்து உள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் இருக்கிறது.

    நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது உடல் பருமன். கொழுப்பை குறைத்து, கொழுப்பு உணவுகளை தவிர்த்து, உடல் பயிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்கிறார். அனைத்து டாக்டர்களும், உடல் நல நிபுணர்களும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் தான் நோய்களுக்கு எதிராக போராட முக்கியமானது என கூறுகின்றனர். அதேசமயம் உடல் பருமன், உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலை குறைந்து விடுகிறது. 

    உடல் பருமன் உள்ளவர்களை தசை எலும்பு மற்றும் கொழுப்பு கொண்டவர்கள் என வகைப்படுத்தலாம். உதாரணமாக 100 கிலோ அளவுக்கு அதிகமான எடையுள்ள ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் குறைந்த கொழுப்புடன் வலிமையாக இருந்தால் அவர் நல்ல ஆரோக்கியமானவர் தான். அதேசமயம் ஒல்லியாக இருப்பர் அதிக கொழுப்புடன் இருந்தால் அவர் ஆரோக்கியமானவர் அல்ல. ஒருவர் தனது கொழுப்பு அளவை அறிந்து அதை குறைக்க உடல் பயிற்சி செய்ய வேண்டும். உணவை கட்டுப்படுத்த கூடாது.

    இந்த தொற்று காலம். நாம் நல்ல நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கிறோமா, நோயை எதிர்த்து போராட முடியுமா என்பதை உணர்த்தியுள்ளது.

    உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உடல் பயிற்சி, நடைபயிற்சி, மூச்சு பயிற்சி, நீச்சல் போன்றவைகளை மேற்கொள்ளலாம். இவை உடலில் உள்ள கொழுப்பு சத்தை எரிக்கும். என்பதே எனது மாபெரும் அறிவுரை. உடல் பயிற்சிக்கு பதிலாக உணவை கட்டுப்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    உங்களை பற்றிய விமர்சனங்களுக்கு பயப்படவேண்டாம். ஏன்என்றால் விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும். விவேகமாக்கும்.
    உங்கள் பேச்சையோ, செயலையோ இன்னொருவர் விமர்சிக்கும்போது, உடனடியாக கோபம் வந்துவிடுகிறதா? கோபம் வந்தால், அது விவேகமல்ல! உங்களை நோக்கி வரும் விமர்சனம் என்பது வேகத்தடை போன்றது. அதில் சற்று நிதானித்து கடக்க வேண்டும். ஆனால் நின்று விடக்கூடாது.

    உங்களை பற்றிய விமர்சனங்களுக்கு பயப்படவேண்டாம். ஏன்என்றால் விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும். விவேகமாக்கும். உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் உங்களை மன உளைச்சலுக்குள்ளாக்கினாலும் மற்றவர்கள் பார்வையில் நீங்கள் மிக முக்கியமான நபராக மாறிவிட்டீர்கள் என்று கருதவேண்டும்.

    விமர்சனம் என்பது சில நேரங்களில் விமர்சிப்பவரின் இயலாமையை காட்டும். அவரால் முடியாததை நீங்கள் செய்து முடிக்கும்போது நீங்கள் அவரது விமர்சனத்துக்குள்ளாவீர்கள். மற்றவர்களை தொடர்ந்து விமர்சிப்பவர்கள் மனதளவில் பலவீனமாக இருப்பார்கள். உங்களை நோக்கி வரும் விமர்சனத்தை நீங்கள் எதிர்கொள்வதும், ஜீரணித்துக்கொள்வதும், பதிலளிப்பதும் ஒரு கலை.

    விமர்சனங்கள் ஒருபோதும் உங்களை காயப்படுத்தி விடக்கூடாது. உங்களை சுற்றி பலர் இருக்கும்போது நீங்கள் விமர்சனங்களில் இருந்து விலகி இருக்க முடியாது. உங்களை பற்றி நான்கு பேர் விமர்சிக்கிறார்கள் என்றால், நாற்பது பேர் கண்களை உங்கள் செயல் உறுத்தியிருக்கிறது என்று அர்த்தம். உங்கள் மீதான எரிச்சலை அவர்கள் குறையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை விமர்சிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏதோ ஒருவித மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால் அவர்களது விமர்சனம் உங்களுக்கு விளம்பரத்தை தேடித்தருகிறது. உங்களை விமர்சித்து அவர்கள் உங்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

    தமது விமர்சனம் யாரிடமும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விமர்சிப்பவர்களுக்கே தெரியும். ஆனாலும் தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை நினைத்து நீங்கள் பரிதாபம்தான்கொள்ளவேண்டும். ஏன்என்றால் அவர்கள், தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு உங்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களது குழந்தைகளையும், மனைவியையும் கவனிக்காமல் உங்களை கவனிக்கிறார்கள். அதனால் அவர்களது குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். அவர்கள் தினசரி வேலைகளை மறந்துவிட்டு உங்களை கண்காணிப்பதால் அந்த வேலையில் அவர்களது கவனம் இல்லாமல் போய்விடும். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது அவர்கள் முன்னேற்றத்துக்கு அவர்களே தடையாக இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

    அதனால்தான் அடுத்தவர்களை விமர்சித்துக்கொண்டே இருப்பவர்கள் காலம் முழுக்க விமர்சிப்பவர்களாகவே இருக்கிறார்கள். விமர்சிக்கப்படும் நிலைக்கு அவர்களால் உயர முடியாது. குறை சொல்லியே வாழ்ந்து, குறை சொல்லியே மடிந்துபோவார்கள்.

    நன்றாக பூத்து, காய்க்கும் செடிக்கு உரம் இடுவதைப் போன்றதுதான் விமர்சனமும்! அதை உரமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருக்கவேண்டும். வென்னீராக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கு சென்றுவிடக்கூடாது.

    விமர்சனங்களை நீங்கள் ஒரு கலையாக கருதினால், அதை பற்றிய பயம் உங்களுக்கு போய்விடும். பயம் போய்விடும்போது, யார் விமர்சிக்கிறார்? என்பதை பார்க்காமல், விமர்சிக்கப்படும் கருத்து என்ன? என்பதில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவீர்கள். அப்போது உண்மையான அக்கறையோடு சொல்லப்படும் விமர்சனமா? அல்லது பொறாமையால் கிளப்பப்படும் குமுறலா? என்பது உங்களுக்கு தெரிந்துவிடும். உண்மையான அக்கறையுடன் சொல்லும் பயனுள்ள விமர்சனங்களை கேட்டு உங்களையே நீங்கள் திருத்திக்கொள்ளவேண்டும். தேவையற்ற விமர்சனங்கள் என்றால் அப்படியே அதை அலட்சியம் செய்திடவேண்டும்.

    ஒருவர் உங்களை விமர்சிக்கிறார் என்றால், அவருக்கு எந்த தகுதியும் தேவையில்லை. ஆனால் விமர்சிக்கப்படும் நீங்கள் தகுதியானவராக இருப்பீர்கள். காய்த்த மரம்தான் கல்லடிபடும். அதனால் விமர்சனங்களை நினைத்து சோர்ந்து போகாமல் அதனை பக்குவமாக கையாளத் தெரிந்து கொள்ளுங்கள்.

    முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், சொந்த நாட்டிலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் காதுபடவே விமர்சித்தார்கள். எல்லாவற்றுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்தார். தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எட்வர்ட் எம் ஸ்டைன் என்பவர் ஆப்ரகாம் லிங்கனை பார்த்து ‘மகா முட்டாள்’ என்று விமர்சித்தார்.

    ஆப்ரகாம் லிங்கன் சிறிதும் பதற்றப்படவில்லை. ‘என்னை முட்டாள் என்று தெரிந்து வைத்திருக்கும் எட்வர்ட் அதி புத்திசாலி. ஆனால் ஒரு முட்டாள் வந்து தான் தங்களை வழிநடத்த வேண்டும் என்று அமெரிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்களே, நான் என்ன செய்வது’ என்று, அமெரிக்க மக்களை தன்னோடு இணைத்து பதிலடி கொடுத்தார்.

    அதற்கு பதில்சொல்ல முடியாமல் எட்வர்ட் தலைகவிழ்ந்தார். பின்பு ஆப்ரகாம் லிங்கனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அப்போதும் லிங்கன் விடவில்லை. ‘ஒரு முட்டாளிடம் ஒரு புத்திசாலி மன்னிப்பு கேட்பது அமெரிக்காவில் மட்டும்தான் நடக்கும்’ என்று ஆத்திரப்படாமல் அமைதியாக குட்டுகொடுத்தார். இப்படித்தான் விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டும்.
    அழகு பராமரிப்பு என்பது முகம், கை கால்களோடு மட்டுமல்ல இப்படி அந்தரங்கப் பகுதிகளையும் பராமரித்து கவனித்துக்கொள்வதுதான் முழுமையான அழகுப் பராமரிப்பு.
    அழகு பராமரிப்பு என்பது முகம், கை கால்களோடு மட்டுமல்ல இப்படி அந்தரங்கப் பகுதிகளையும் பராமரித்து கவனித்துக்கொள்வதுதான் முழுமையான அழகுப் பராமரிப்பு. எனவே வீட்டுக் குறிப்புகளை பயன்படுத்தி அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

    * தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் 1 ஸ்பூன் எடுத்துக்கொண்டு சூடாக்கி அது குளிர்ந்ததும் அந்த இடத்தில் தேய்த்து மசாஜ் செய்து வாருங்கள். 15 நிமிடங்கள் ஊறிய பின் தண்ணீர் கொண்டு துடைத்துவிடலாம்.

    * பஞ்சை மோரில் மூழ்க வைத்து அதை கருமையாக உள்ள பகுதியில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.

    * வெள்ளரி மற்றும் கற்றாழை சதை இரண்டையும் மிக்ஸியில் மைய அரைத்து அந்த இடத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊறியதும் எடுத்துவிடுங்கள்.

    * தயிரை தினமும் தடவி 7 நிமிடங்கள் ஊற வைத்து துடைத்துவிடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

    * ஆலிவ் எண்ணெய்யை அந்தரங்கப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்து வர கருமை மட்டுமல்ல சுருக்கங்களும் நீங்கும்.
    தாய்க்கும் மகளுக்கும் இடையே இடைவெளி உருவாகாமல் இருக்கவேண்டும் என்றால் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதை தாயார் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
    தாயின் வயிற்றில் பிறந்து, மடியில் தவழ்ந்து, அவளது முந்தானையை பிடித்துக்கொண்டே அகலாமல் வளரும் மகள் பத்து வயதை தாண்டும்போது மெல்ல மெல்ல தாயிடம் இருந்து விலகுகிறாள். பெரும்பாலான வீடுகளில் அந்த விலகல் இல்லை என்றாலும் பல குடும்பங்களில் தாய்க்கும் மகளுக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. அந்த இடைவெளி உருவாகாமல் இருக்கவேண்டும் என்றால் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதை தாயார் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

    அம்மாவிடம் மகள் ‘என் பள்ளிக்கூட நண்பர்களில் சில மாணவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமும் நான் நட்பு கொண்டிருக்கிறேன்..’ என்று சொன்னால், பெரும்பாலான அம்மாக்கள் உடனே, ‘ஏய்.. அதெல்லாம் கூடவே கூடாது. ஆண்களோடு நட்புவைப்பது நல்ல பழக்கம் இல்லை’ என்று சொல்வார்கள். அது மகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ‘நீ ஒரு பழைய பஞ்சாங்கம். உன்னிடம் என் நட்பு பற்றி பேசியதே தப்பு’ என்பார்கள். இதுபோன்ற கருத்து வேறுபாடுகள்தான் தாய்-மகள் விலகலுக்கு காரணமாக இருக்கின்றன. அந்த விலகல் ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

    ‘உன்னுடன் படிக்கும் மாணவர்களோடு நீ நட்பு கொள்வதில் தப்பில்லை. ஆனால் நட்பு கொள்வது ஆணிடம் என்றாலும், பெண்ணிடம் என்றாலும் நீ தெளிவாக இருக்கவேண்டும். எல்லையோடு பழகவேண்டும். அந்த நட்பில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டாலோ, சிக்கல் ஏற்பட்டாலோ என்னிடம் மறைக்காமல் சொல்..’ என்று கூறி ஆதரவும், விழிப்புணர்வும் ஊட்டவேண்டும்.

    இப்படி தாய் சொன்னால், மகள் ‘அம்மா நமக்கு ஆண் நண்பர்களிடம் பேச சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அந்த சுதந்திரத்தை நாம் எல்லை மீறாமல் பயன்படுத்தவேண்டும்’ என்று நினைப்பாள், தாய்மீது மதிப்பும் கொள்வாள். அந்த நட்பில் எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், அதற்கு விடைதேடி அம்மா முன்னால் வந்து நிற்பாள்.

    தாய்க்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் இருந்தால், வேறு மாதிரியான பிரச்சினைகள் எழுகின்றன. மகள், அம்மாவிடம் ‘அம்மா நீ அவனை (அண்ணன் அல்லது தம்பியை) இஷ்டம்போல் நடந்துகொள்ள அனுமதிக்கிறாய். நினைத்த நேரம் வெளியே செல்ல அனுமதி கொடுக்கிறாய். எனக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கிறாய்’ என்பாள்.

    அதற்கு பெரும்பாலான அம்மாக்கள், ‘அவன் ஆண். சைக்கிள் ஓட்டுவான்.. வண்டி ஓட்டுவான்.. என்ன வேண்டுமானாலும் செய்வான். நீ பெண், அடக்க ஒடுக்கமாக நடக்கவேண்டும்’ என்பார்கள். எல்லா பெண்களையும் இந்த பதில் எரிச்சலூட்டும். அவள் பெண்ணாக பிறந்ததை குற்றமாக சொல்வதுபோல் அமைந்துவிடும். அதற்கு பதிலாக, ‘நீ என் செல்ல மகள். அவன் என் செல்ல மகன். நான் உங்கள் இருவரிடையே ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை. நான் இருவரையும் சமமாகவே பாவிக்கிறேன். சைக்கிள் ஓட்ட ஆசைப்படுகிறாயா? ஓட்டு. நீ பெண்ணாக பிறந்ததால் அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டியதில்லை. உன்னிடம் இருக்கும் திறமையை நீ வெளிக்காட்டு. அதற்கு தேவையான எல்லா வாய்ப்புகளையும் நான் உருவாக்கித் தருகிறேன்’ என்று கூறி ஊக்குவிக்கவேண்டும்.

    பெண்களுக்கு சில அம்மாக்கள் கண்காணிப்பு வளையம் போட்டுவிடுகிறார்கள். தங்கையை பின்தொடர்ந்து அண்ணன் கண்காணிப்பான். ‘என்னம்மா இது கொடுமை. நான் எங்கு போனாலும் இவன் என்னோடு வந்துகொண்டே இருக்கிறான். ஏதோ ஒரு போலீஸ் அதிகாரி போன்று என்னை பின்தொடர்கிறான். இது எனக்கு பிடிக்கவே இல்லை’ என்று மகள் கோபம் கொள்வாள்.

    பதிலுக்கு அம்மா, ‘அவன் உன் அண்ணன். நீ ஏதாவது தப்பு செய்தால் அவனும் சேர்ந்துதான் பாதிக்கப்படுவான். அதனால் நீ சரியான வழியில் சென்று கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக அவன் உன்னை பின் தொடர்கிறான். அது அவன் கடமை’ என்று பேசி, மகளின் கோபத்தை அதிகரிக்கச் செய்து விடுகிறார்கள்.

    அதற்கு பதிலாக, ‘உன் அண்ணனோ, தம்பியோ யாரும் உன்னை பின்தொடர்ந்து வந்து எந்த பலனும் இருக்கப்போவதில்லை. உன்னை உன்னால் மட்டுமே பாதுகாக்க முடியும். அதனால் நீதான் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும். உன் அண்ணன் சந்தேகத்தோடு உன்னை பின்தொடர்வதாக நீ நினைப்பது தவறு. ஒருவேளை அந்த எண்ணத்தில் அவன் இருந்திருந்தால் அது தவறு என்று அவனுக்கு நான் உணர்த்துகிறேன். நீ எப்போதும் போல் கவனமாக இரு..’ என்று தான் கூறவேண்டும்.

    இப்படி பக்குவமாக பதில் அளிக்க அம்மாக்கள் கற்றுக்கொண்டால், அம்மா-மகள் உறவு அற்புதமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.
    அதிக நாட்கள் முட்டையை சேமித்து வைக்காமல் ஓரிரு நாட்களுக்குள் உபயோகிப்பது நல்லது. வாங்கி வரும் முட்டை புதியதா? பழையதா? என்பதையும் எளிய சோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
    தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. நிறைய பேர் முட்டையை வாங்கி பிரிட்ஜில் வைத்து உபயோகிப்பார்கள். அடிக்கடி கதவை திறந்து மூடும்போது வெளிப்பகுதியிலும், பிரிட்ஜின் உள்பகுதியிலும் நிலவும் வெப்பநிலை மாற்றம் முட்டையின் தன்மையை எதிர்மறையாக பாதிக்கும்.

    அதிக நாட்கள் முட்டையை சேமித்து வைக்காமல் ஓரிரு நாட்களுக்குள் உபயோகிப்பது நல்லது. வாங்கி வரும் முட்டை புதியதா? பழையதா? என்பதையும் எளிய சோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

    கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி அதனுள் முட்டையை மெதுவாக போட வேண்டும். முட்டை முழுவதுமாக மூழ்கி டம்ளரின் அடிப்பகுதியில் கிடைமட்டமாக ஒட்டியிருந்தால் அது புதிய முட்டை.

    டம்ளருக்குள் ஒருபக்கமாக சரிந்த நிலையில் இருந்தால் ஒரு வாரம் ஆகி விட்டது என்று அர்த்தம். நன்றாக சாய்ந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தால் 2 அல்லது 3 வாரம் பழையதான முட்டை என்று அர்த்தம். எனினும் அந்த முட்டை பயன்பாட்டுக்கு உகந்தது.

    ஆனால் தண்ணீருக்குள் போட்டதும் முட்டை மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை ரொம்ப பழையது அல்லது கெட்டுப்போனது என்று அர்த்தம். அதனால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது.

    நாளாக நாளாக முட்டைக்குள் இருக்கும் காற்று விரிவடையும். முட்டைக்குள் இருக்கும் நீர்பரப்பை காற்று நிரப்பிவிடும். அதனால் முட்டை மிதக்க தொடங்கும். கெட்டுப்போன அந்த முட்டையை சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.

    ஏனெனில் முட்டையின் உள்ளடுக்குகளில் இருக்கும் சால்மோனெல்லா எனும் ஒரு வகை பாக்டீரியா வளர்ச்சி அடைய தொடங்கிவிடும். அதனை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும்.

    முட்டையை காது பக்கத்தில் கொண்டு சென்று குலுக்கும்போது, சலசலவென்று சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம். முட்டையை உடைத்து பார்க்கும்போது வெள்ளைக்கரு நிறம் வெள்ளை நிறமாக இல்லாமல் மங்கி போய் இருந்தால் அந்த முட்டையும் கெட்டுப்போனதுதான்.

    அதுபோல் மஞ்சள் கரு சிதறிய நிலையிலோ, கலங்கிய நிலையிலோ இருந்தாலும் அது கெட்டுப்போன முட்டையாகும்.
    கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் சாமையில் அதிகம் உள்ளன. இன்று சாமை அரிசியில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 100 கிராம்
    பாசிப்பருப்பு - 50 கிராம்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 50 மில்லி
    பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - தேவையான அளவு (மிளகு 8-10)
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி - ஒரு துண்டு
    தண்ணீர் - 450 மில்லி.
    முந்திரி - 3  (பொடித்துக்கொள்ளவும்)

    செய்முறை:

    நன்கு கழுவி சுத்தம் செய்த  சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு, தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும். 

    வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம், பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும். 

    பிறகு, குழைய வேகவைத்த அரிசியுடன் இதைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். 

    சுவையான சாமைப் பொங்கல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் கரு முட்டைகளை இளம் வயதிலேயே சேமித்துவைத்து அவர்கள் கருத்தரிக்க விரும்பும்போது உபயோகிக்கும் நடைமுறை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
    இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் படிப்பை முடித்ததும், நல்லவேலைக்கு சென்ற பிறகுதான் திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புகிறார்கள். 30 வயதை நெருங்கும்போதுதான் திருமணத்தை பற்றி யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். இளம் வயதில் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுபவர்களும் உண்டு. காலதாமதமாக திருமணம் செய்து கொள்வது, குழந்தை பேற்றை தள்ளிப்போடுவது போன்றவை சில சமயங்களில் தாய்மை அடைவதில் சிக்கல்களை உருவாக்கும். அப்படிப்பட்ட பெண்கள் கரு முட்டைகளை இளம் வயதிலேயே சேமித்துவைத்து அவர்கள் கருத்தரிக்க விரும்பும்போது உபயோகிக்கும் நடைமுறை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

    அப்படி தாய்மை அடைந்து குழந்தை பெற்றவர்களுள் ஒருவர், டாக்டர் ரூபினா கே.டி. சிங். கருத்தரிப்பு நிபுணரான இவர், 28 வயதில் தனது கரு முட்டைகளை சேமித்து வைத்திருக்கிறார். பின்னர் இவரது திருமணம் நடந்திருக் கிறது. கருமுட்டைகளை சேமித்து வைத்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் அதனை பயன்படுத்தி கண வரின் உயிரணு மூலம் நவீன மருத்துவ முறையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியிருக்கிறார். காலதாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கரு முட்டைகளை சேமித்து வைப்பதன் அவசியம் குறித்தும் விளக்குகிறார்.

    “நான் மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்தேன். அப்போதே எனக்கு திருமண வயது கடந்துவிட்டது. படிப்பை முடித்துவிட்டு அப்போதுதான் வேலை பார்க்க தொடங்கி இருந்ததால் உடனே திருமணம் செய்து கொள்வதற்கு நான் விரும்பவில்லை. மருத்துவம் சார்ந்த படிப்பை தொடரவும் விரும்பினேன். கருத்தரிப்பு பற்றிய பெல்லோஷிப் திட்டம் என் கனவாக இருந்தது. அந்த வாய்ப்பும் கைகூடியது.

    ஒரு மருத்துவராக மட்டுமின்றி குடும்ப பெண்மணியாக, காலம் தாழ்ந்து திருமணம் செய்யும்போது கருத்தரிப்பில் இருக்கும் சிக்கல்களை பற்றி சிந்திக்க தொடங்கினேன். பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது உடலில் உற்பத்தியாகும் கரு முட்டைகளின் தரம் குறைய தொடங்கும். அதனால் கருத்தரிப்பு சாத்தியம் இல்லாத சூழ்நிலை கூட உருவாகலாம் என்பதையும் அறிவேன். அப்போது எனக்கு 28 வயது கடந்திருந்தது. அதுதான் கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கான சரியான தருணம் என்று முடிவு செய்தேன். உடனே கரு முட்டைகளை சேகரித்து பதப்படுத்தி வைத்தேன்” என்கிறார்.

    ரூபினா 2014-ம் ஆண்டு கரு முட்டையை சேமித்து வைத்திருக்கிறார். தான் விரும்பிய படிப்பை படித்து கருத்தரிப்பு நிபுணராகவும் ஆகிவிட்டார். அதன் பிறகு திருமணமும் செய்திருக்கிறார். அதேவேளையில் சேமித்துவைத்திருந்த கருமுட்டைகளை கொண்டு கருத்தரித்து 2018-ம் ஆண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

    “காலதாமதமாக திருமணம் செய்து கொள்ள நினைக்கும் பெண்கள் தங்கள் கருமுட்டைகளை எடுத்து அதற்குரிய நவீன முறையில் சேமித்து பாதுகாப்பது தவறில்லை. ஆனால் அப்படி செய்வது தவறானது என்ற எண்ணம் பெரும்பாலான குடும்பத்தினரிடம் இருக்கிறது. என் பெற்றோருக்கு கூட அச்சங்கள் இருந்தன. எனது உடல் இயல்பான முறையில் குழந்தையை பெற்றெடுக்கும் தன்மையுடன் இருக்கும்போது ‘இதை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று ஆதங்கப்பட்டார்கள். ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தினேன். பொதுவாகவே 25 முதல் 30 வயதுக்குள்தான் பெண்களின் கருமுட்டைகள் ஆரோக்கியமானதாகவும், தரமாகவும் இருக்கும். அத்தகைய கருமுட்டைகள்தான் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்தவை.

    அந்த வயதுக்குள் கருமுட்டைகள் செழுமையாக இருப்பதால் பெண்கள் எளிதில் கர்ப்பம் அடைந்துவிடுவார்கள். திருமணத்தை தாமதப்படுத்தும்போது கரு முட்டைகளை வெளியே எடுத்து அதற்காக பிரத்யேகமாக உள்ள கருத்தரிப்பு மையங்களில் சேமித்து வைக்கமுடியும். சுமார் 10 ஆண்டுகள் வரை அந்த கருமுட்டைகளை பயன்படுத்தி கணவரின் உயிரணுவுடன் சேர்த்து கருவுறச் செய்யமுடியும். அதனை விரும்பாத பட்சத்தில் கருமுட்டைகளை தானமும் கொடுக் கலாம்” என்கிறார்.
    குழந்தைகளின் உணர்வுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். மாறாக குழந்தைகளை அடிமைப்படுத்தி வளர்க்க பெற்றோர் முயற்சிக்கக்கூடாது.
    குழந்தைகள் பெற்றோர்களால் உருவாக்கப்படும் பொம்மைகள் அல்ல. அவர்களும் உணர்வுள்ள மனிதர்கள். அதனால் குழந்தைகளின் உணர்வுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். மாறாக குழந்தைகளை அடிமைப்படுத்தி வளர்க்க பெற்றோர் முயற்சிக்கக்கூடாது. அவர்களிடம் அன்பு செலுத்தவேண்டும். ஆனால் அளவுக்கு மீறிய அன்பு செலுத்தி, அவர்களிடம் பெற்றோர் அடிமையாகிவிடவும்கூடாது. அதே நேரத்தில் எல்லைகடந்து அடக்குமுறையை கையாளுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. குழந்தைகளை வார்த்தைகளால் காயப்படுத்துவதும் தவிர்க்கப்படவேண்டும்.

    இப்போது கூட்டுக்குடும்ப வாழ்க்கை நடைமுறையில் இல்லை. எங்கு பார்த்தாலும் தனித்தனி குடித்தனங்கள். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளையே பெற்றுக்கொள்கிறார்கள். அந்த குழந்தைகளும் தோல்விகளை தாங்கிக்கொள்ளும் பக்குவத்திலோ, சூடான வார்த்தைகளை ஜீரணித்துக்கொள்ளும் மனநிலையிலோ இல்லை. பெற்றோர்களின் வார்த்தைகளால் அவர்கள் எளிதாக காயமடைந்து கவலைப்படுகிறார்கள். கவலை அதிகமாகும்போது, பெற்றோரிடமிருந்து விலகி காணாமலும் போய்விடுகிறார்கள். அதன் மூலம் பெற்றோருக்கு தண்டனை கொடுப்பதாக கருதி தங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள்.

    பள்ளிப் பருவத்தில் இருக்கும் சிறுவர்- சிறுமியர்கள் திடீரென்று காணாமல் போய்விடுவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மும்பையை சேர்ந்த இரண்டு பள்ளிச் சிறுவர்கள் காணாமல் போனதும், யாரோ பணத்திற்காக அவர்களை கடத்திச் சென்றுவிட்டார்கள் என்ற பயத்தில் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தார்கள். இரண்டு சிறுவர்களும் நண்பர்கள். இருவரது பெற்றோரும் சுயதொழில் செய்து வருகிறார்கள்.

    போலீஸ் பல வழிகளில் தேடுதல் வேட்டை நடத்தியும், உடனடியாக சிறுவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் நிம்மதியைத் தொலைத்த பெற்றோர் தங்கள் குழந்தைகள் இறந்துவிட்டார்களோ என்று அஞ்சினார்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு பக்கத்து மாநிலத்தில் அந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம், வீட்டை விட்டு ஏன் வெளியேறினீர்கள்? என்று கேட்டபோது, தங்கள் பெற்றோர்கள் மீது அடுக்கடுக்காய் குற்றஞ்சாட்டினார்கள். ‘எதற்கெடுத்தாலும் திட்டுகிறார்கள். சில நேரங்களில் அடிக்கிறார்கள். எப்போதாவது அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்துகிறார்கள். அவ்வப்போது அடிமைகள் போலவும் நடத்துகிறார்கள். அதனால் அவர்களை கவலைப்படவைத்து பழிவாங்கவேண்டும் என்பதற்காகத்தான் வீட்டைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலத்திற்கு வந்தோம்’ என்றிருக்கிறார்கள்.

    வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னால் இருவரும், அதற்காக வெளிப்படையாக பலமுறை விவாதித்து திட்டமிட்டிருக்கிறார்கள். பக்கத்தில் உள்ள மைதானத்திற்கு சென்று, தங்களுக்கு பெற்றோர் மீதிருக்கும் கோபத்தை வெளிப்படுத்த என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று விவாதித்திருக்கிறார்கள். காயப்படுத்தியவர்களை கலங்கடிக்கச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, அந்த காணாமல் போகும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்கள் நினைத்துப்பார்க்கவே இல்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்றபோது அவர்கள் சமூக விரோதிகளின் கண்களில்பட்டிருந்தால் தங்கள் நிலை என்னவாகியிருக்கும் என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருக்கவே இல்லை.

    டெல்லியில் இதேபோன்று ஒன்றாக சில பள்ளிச்சிறுமிகள் காணாமல் போனார்கள். பதறிப்போன பெற்றோர் காவல் துறையின் உதவியை நாட, அவர்கள் அதிவேகமாக நகரெங்கும் தேடி, அந்த சிறுமிகளை கண்டுபிடித்து வீடு கொண்டுபோய் சேர்த்தனர். ‘உங்கள் எதிர்காலத்திற்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஏன் இப்படி எங்களை கண்ணீர்விட வைத்துவிட்டீர்கள்?’ என்று கேட்டபோது, பதிலுக்கு அந்த சிறுமிகளும் அழுதுகொண்டு, ‘நாங்கள் வெளியே செல்ல நீங்கள் அனுமதிப்பதில்லை. ஆன்லைன் வகுப்புகளும் எங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. வீட்டிற்குள்ளே அடைந்துகிடக்க பிடிக்காததால் நாங்கள் விளையாட்டுத்தனமாகத்தான் வெளியே கிளம்பினோம். ஆனால் பெற்றோரிடம் சண்டையிட்டு வந்த தோழி ஒருத்தி எங்களை தவறாக வழிநடத்தி வெகுதூரம் அழைத்துச்சென்றுவிட்டாள். ஒருகட்டத்தில் என்னசெய்வதென்று தெரியாமல் பயந்துபோய் அங்கே இருந்த போலீஸ்காரர் உதவியை நாடினோம்’ என்றிருக்கிறார்கள். மனங்குழம்பிய நிலையில் இருந்த அந்த சிறுமிகளை, அவர்களது தோழி தூண்டிவிட்டு ‘வீட்டைவிட்டு வெளியேறுவோம்’ என்று கூறியதால் இவர்களும் அவள் பின்னால் சென்றிருக்கிறார்கள்.

    இதில் கவலைக்குரிய இன்னொரு விஷயம் என்னவென்றால், முன்பு குழந்தைகளை கடத்திச்செல்பவர்கள்தான் குழந்தைகளை விடுவிக்க பேரம் பேசுவார்கள். இப்போது ஒரு சில சிறுவர்- சிறுமியர்கள் வெளியே எங்காவது போய் உட்கார்ந்துகொண்டு, தாங்கள் வீடு திரும்ப பெற்றோருக்கே நிபந்தனை விதிக்கிறார்கள். இவைகளை கருத்தில் கொண்டு குழந்தை வளர்ப்பில் பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    கொரோனா தொற்றுக்கு மத்தியில் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்தபடி அலுவலக வேலைகளை செய்வது ஆண்களை விட பெண்களுக்குத்தான் சவாலானதாக அமைந்திருக்கிறது.
    வீட்டில் அலுவலகப் பணி என்பது இயல்பான விஷயமாக மாறிப்போனாலும் அதனால் உருவாகியிருக்கும் புதிய ஆபத்துகளை எதிர்கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டுமோ என்ற அச்சமே பல ஊழியர்களின் மனநிலையாக உள்ளது. ஆம்...இந்த பழகிப்போன Work From Home வாழ்க்கைமுறையால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது.

    பெண்களில் 20 - 60 வயது கொண்ட பெண்கள் வரை முதுகு வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி ஆகிய குறைகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. அந்த ஆய்வில் ஆரம்பத்தில் வீட்டில் அலுவலக வேலை என்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதை அனுபவிக்கும்போது அதில் உள்ள சிக்கல்கள் புரிகிறது எனக் கூறியுள்ளனர். மேலும் நீண்ட நேர வேலை சுமை, தவறான அமரும் அமைப்பு, சரியான நாற்காலி, அமர்ந்து வேலை செய்யும் சூழலின்மை , லாப்டாப், கணினி வேலை செய்ய ஏதுவாக இல்லை என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

    இது தவிர வீட்டு வேலைகளையும் தாங்கள்தான் செய்ய வேண்டிய நிர்பந்தம், குழந்தைகள் இருந்தால் அவர்களின் கல்வி, ஆன்லைன் பாடங்களுக்காக ஒத்துழைப்பு அளித்து கற்றுத்தருவது, அதிக எடை கொண்ட சிலிண்டர், தண்ணீர் கேன் போன்றவற்றையும் தாங்களே தூக்கும் நிலை என இவை அலுவலகப் பணி தாண்டிய கூடுதல் சுமையாக அதிகரித்துள்ளன.

    இவை ஒட்டுமொத்தமும் சேர்ந்து அவர்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி என பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    ஆண்கள் வெளியே சென்று வருவதும் , பெண்கள் வீட்டு வேலைகள் மொத்தமாக கவனித்துக்கொள்வதுமாக இருப்பதால் அவர்கள் நடக்கும் நேரம் கூட குறைந்துவிட்டது. அவர்களுக்கான நேரம் என்பதும் இல்லாமல் போய்விட்டது. 
    நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும்போது சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
    கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமானது. அதுதான் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க உதவும். நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். உச்சந்தலையிலும் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஏனெனில் உச்சந்தலையில் எண்ணெய் தடவினால்தான் முடிக்கு ஊட்டம் கிடைக்கும். கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி கூந்தலில் தடவுவது நல்லது. குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவுவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் கூந்தலில் அழுக்கு படிந்திருந்தால் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்பு, சிகைக்காய் போன்றவற்றை கொண்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபிறகு எண்ணெய் தேய்ப்பதுதான் முடியின் வளர்ச்சிக்கு நல்லது. உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி உச்சந்தலையில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முடியின் வேர்ப்பகுதிகளில் லேசாக எண்ணெய் தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

    தலைமுடியில் நீண்ட நேரம் எண்ணெய் இருந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறானது. தலைமுடியில் அதிக நேரமோ, அதிக அளவிலோ எண்ணெய் இருக்கக் கூடாது. குளிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம்.

    தலைமுடியில் எண்ணெய் தேய்த்த பிறகு கூந்தல் சார்ந்த மற்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தலைமுடிக்கு குறைவான அளவிலேயே எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தடவும்போதெல்லாம் மென்மையாக மசாஜ் செய்துவிடுவதும் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

    தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதற்கு வீட்டு உபயோக பொருட்களை கொண்டு கிரீம் கலந்த ‘ஹேர் மாஸ்க்’ தயார் செய்வது நல்லது. கறிவேப்பிலை, வேப்ப இலை, வெந்தயம், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம்.

    குளித்ததும் தலைமுடியை உலர்த்துவதற்கு மென்மையான காட்டன் டவல்களை பயன்படுத்த வேண்டும். கனமான, அடர்த்தியான டவல்களை பயன்படுத்தக்கூடாது. அதுபோல் ஈரமான தலையில் சீப்பு கொண்டு சீவக்கூடாது. அது முடி உடைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும். இளம் வயதிலேயே ரசாயனம் கலந்த ‘ஹேர் டை’களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது தலைமுடியை விரைவில் சேதப்படுத்திவிடும்.

    தேங்காய் எண்ணெய்யை நிறைய பேர் கூந்தலுக்கு மட்டும்தான் உபயோகிப்பார்கள். அதனை சருமத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் அழகும் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள், திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.

    குழந்தைகளை குளிப்பாட்டியதும் தலைக்கு மட்டுமின்றி கழுத்து, முதுகு பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தடவி வருவது நல்லது. ஒவ்வாமை பிரச்சினை காரணமாக சிலரது சருமம் பாதிப்புக்குள்ளாகும். தேங்காய் எண்ணெய் அதற்கு நிவாரணம் தரும். அதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும அழகை மேம்படுத்தும் தன்மை கொண்டவை.

    தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் கிருமிகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். வியர்வை, நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர்ச்சத்தை மீட்டெடுத்து சருமத்திற்கு நலம் சேர்க்கும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகம் கழுவுவதற்கு பதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம். முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சிடும்.
    உலகம் முழுவதும் ஆயுர்வேத, சித்த மருத்துவர்களால், பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவது திரிபலா. தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும்.
    திரிபலா என்பது அற்புதமான மருந்து. உலகம் முழுவதும் ஆயுர்வேத, சித்த மருத்துவர்களால், பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவது திரிபலா. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை காயகல்பமாகி, நோய்களை தீர்க்கும் அற்புத சக்தியை பெற்றுள்ளது.

    திரிபலா சூரணத்தை தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரண கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா இருப்பவர்களுக்கு ஏற்றது. தோலில் அரிப்பு, கருமை, சிவப்பு புள்ளிகள் இருந்தால், இந்த சூரணத்தை தடவிவந்தால் விரைவில் சரியாகும். 

    தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும், நோய்கள் அண்டாது. காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்கு போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக்கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி திரிபலா சூரணத்தைக் கலந்து, காலை நேரத்தில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

    கடுக்காயை ஹரீதகி என்று அழைப்பார்கள். இதற்கு விஜயா, அமிர்தா, காயஸ்தா, ஹேமவதி, பத்யா, சிவா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. பிராணனை அளிக்க வல்லதால், இதனை பிராணதா என்றும் அழைப்பார்கள். அறுசுவையில் உப்பை தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. 

    கடுக்காயின் விதைப்பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகை உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகிணி, திருவிருதுதம். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை ஆகியவற்றை பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனவும் உள்ளன.
    ×