என் மலர்
ஆரோக்கியம்
குழந்தைகள் குறைந்த இடைவெளியில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்க செல்வதற்குள் அடங்காமல் வெளியேறுவது என எல்லாமே கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வளரும் பிள்ளைகள் சிறுநீர் வரும் போது பெரும்பாலும் அடக்காமல் வெளியேற்றுவார்கள். ஆனால் குறைந்த இடைவெளியில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்க செல்வதற்குள் அடங்காமல் வெளியேறுவது என எல்லாமே கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வளரும் பிள்ளைகள் அதாவது 3 வயதுக்கு மேற்பட்ட 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு 30 நிமிடங்கள் இடைவெளியில் இவர்கள் சிறுநீர் கழிக்க கழிப்பறை சென்றால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் அது என்று சொல்லலாம்.
சிறுநீர் கழிக்கும் போது சிறிய அளவு மட்டுமே வெளியேறும். சிறுநீர் கழிக்கும் போது அவர்கள் வலியை அனுபவிக்க மாட்டார்கள். பெரும்பாலும் பகல் நேரத்தில் தான் இந்த பிரச்சனை என்பதால் இரவு நேரங்களில் ஆடையை நனைக்க மாட்டார்கள். அதே நேரம் அதிக தண்ணீரும் குடிக்க மாட்டார்கள்.
காரணம் என்ன?
பிள்ளைகளுக்கு அதிகப்படியான சிறுநீர்ப்பை இருப்பதால் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது பொல்லாகுரியா என்று அழைக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அதாவது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை கூட சிறுநீர் கழிப்பார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு 10 முதல் 30 முறைவரை சிறுநீர் கழிப்பார்கள். இந்த பொல்லாகுரியா குறைபாடு 8 வயது வரையான குழந்தைகளை பாதிக்க செய்கிறது.
இது பகல் நேரங்களில் மட்டுமே வெளிப்படும். இது வேறு அறிகுறிகளை கொண்டிருக்காது. இது பெரும்பாலும் மன அழுத்தத்துடன் தொடர்பு கொண்டது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த குறைபாடு கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்காத நிலையில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பிறகு இந்த குறைபாடு நீங்கும். முதலில் உங்கள் பிள்ளையின் மன அழுத்தத்தை போக்கும் விஷயங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு செய்தால் விரைவில் சரியாகும்.
சிறுநீர்ப்பை தசைகள் கட்டுப்படுத்தமுடியாத பிடிப்புகளை கொண்டிருப்பதால் சிறிதளவு சிறுநீர் இருந்தாலும் வெளியேறிவிடும். சிறுநீர்க்குழாயை சுற்றியிருக்கும் தசைகள் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் குழாய் வழியாக வெளியேறுவதை தடுக்கும். அதற்கு சிறுநீர்ப்பை சுருக்கமடையவேண்டும். இதில் தடங்கல் உண்டாகும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.
சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும். குழந்தைகளின் நரம்பில் ஏதேனும் குறை இருந்தாலும் இந்த சிறுநீர் கழிக்கும் அறிகுறிகள் உண்டாகும். எனினும் இது தீவிரமானவை அல்ல. நீங்கள் இதை உணர்ந்து கவனித்தாலே குழந்தைகள் சரியாக கூடும்.
குழந்தைகளுக்கு காஃபின் நிறைந்த பொருள்கள் தருவதும் சிறுநீர் பிரிவை அதிகரிக்கிறது. ஒவ்வாமை பொருட்கள் குழந்தைகளுக்கு பதட்டத்தை உண்டாக்கி அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும். சில குழந்தைகள் சிறுநீர் வரும் போது அடக்கி வைப்பதாலும், மலச்சிக்கல் போன்றவையும் கூட சொல்லலாம்.
என்ன செய்யலாம்
குழந்தைகள் வளர வளர 15 % வரை இதன் பாதிப்பு குறையும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உடலின் சமிக்ஞைகளை குழந்தைகள் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப்பை குழந்தைகள் வளர வளர அதிகரிக்க கூடும்.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தாலும் நாளடைவில் அவர்கள் வளர்ச்சிக்கு பிறகு தானாகவே சரியாக கூடும். சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும். சிறுநீர்ப்பை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை தொடர்ந்து பழக்க வேண்டும்.
சீரான இடைவெளியில் குழந்தைகளை சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். முதலில் இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை அவர்களை பழக்க வேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரித்து 4 மணி நேரத்துக்கு ஒரு முறை பழக்கலாம். சிறுநீரை வெளியேற்ற தூண்டும் காஃபின் பானங்களை தவிர்ப்பது மிகவும் உதவியாக இருக்கும்.
இவையெல்லாம் தாண்டி குழந்தை அவசர அவசரமாக சிறுநீரை வெளியேற்றுவதோ, சிறுநீரை அடக்க முடியாமல் அவதிப்படும் நிலைமை வந்தாலோ தவிர்க்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
வளரும் பிள்ளைகள் அதாவது 3 வயதுக்கு மேற்பட்ட 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு 30 நிமிடங்கள் இடைவெளியில் இவர்கள் சிறுநீர் கழிக்க கழிப்பறை சென்றால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் அது என்று சொல்லலாம்.
சிறுநீர் கழிக்கும் போது சிறிய அளவு மட்டுமே வெளியேறும். சிறுநீர் கழிக்கும் போது அவர்கள் வலியை அனுபவிக்க மாட்டார்கள். பெரும்பாலும் பகல் நேரத்தில் தான் இந்த பிரச்சனை என்பதால் இரவு நேரங்களில் ஆடையை நனைக்க மாட்டார்கள். அதே நேரம் அதிக தண்ணீரும் குடிக்க மாட்டார்கள்.
காரணம் என்ன?
பிள்ளைகளுக்கு அதிகப்படியான சிறுநீர்ப்பை இருப்பதால் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது பொல்லாகுரியா என்று அழைக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அதாவது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை கூட சிறுநீர் கழிப்பார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு 10 முதல் 30 முறைவரை சிறுநீர் கழிப்பார்கள். இந்த பொல்லாகுரியா குறைபாடு 8 வயது வரையான குழந்தைகளை பாதிக்க செய்கிறது.
இது பகல் நேரங்களில் மட்டுமே வெளிப்படும். இது வேறு அறிகுறிகளை கொண்டிருக்காது. இது பெரும்பாலும் மன அழுத்தத்துடன் தொடர்பு கொண்டது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த குறைபாடு கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்காத நிலையில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பிறகு இந்த குறைபாடு நீங்கும். முதலில் உங்கள் பிள்ளையின் மன அழுத்தத்தை போக்கும் விஷயங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு செய்தால் விரைவில் சரியாகும்.
சிறுநீர்ப்பை தசைகள் கட்டுப்படுத்தமுடியாத பிடிப்புகளை கொண்டிருப்பதால் சிறிதளவு சிறுநீர் இருந்தாலும் வெளியேறிவிடும். சிறுநீர்க்குழாயை சுற்றியிருக்கும் தசைகள் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் குழாய் வழியாக வெளியேறுவதை தடுக்கும். அதற்கு சிறுநீர்ப்பை சுருக்கமடையவேண்டும். இதில் தடங்கல் உண்டாகும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.
சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும். குழந்தைகளின் நரம்பில் ஏதேனும் குறை இருந்தாலும் இந்த சிறுநீர் கழிக்கும் அறிகுறிகள் உண்டாகும். எனினும் இது தீவிரமானவை அல்ல. நீங்கள் இதை உணர்ந்து கவனித்தாலே குழந்தைகள் சரியாக கூடும்.
குழந்தைகளுக்கு காஃபின் நிறைந்த பொருள்கள் தருவதும் சிறுநீர் பிரிவை அதிகரிக்கிறது. ஒவ்வாமை பொருட்கள் குழந்தைகளுக்கு பதட்டத்தை உண்டாக்கி அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும். சில குழந்தைகள் சிறுநீர் வரும் போது அடக்கி வைப்பதாலும், மலச்சிக்கல் போன்றவையும் கூட சொல்லலாம்.
என்ன செய்யலாம்
குழந்தைகள் வளர வளர 15 % வரை இதன் பாதிப்பு குறையும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உடலின் சமிக்ஞைகளை குழந்தைகள் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப்பை குழந்தைகள் வளர வளர அதிகரிக்க கூடும்.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தாலும் நாளடைவில் அவர்கள் வளர்ச்சிக்கு பிறகு தானாகவே சரியாக கூடும். சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும். சிறுநீர்ப்பை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை தொடர்ந்து பழக்க வேண்டும்.
சீரான இடைவெளியில் குழந்தைகளை சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். முதலில் இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை அவர்களை பழக்க வேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரித்து 4 மணி நேரத்துக்கு ஒரு முறை பழக்கலாம். சிறுநீரை வெளியேற்ற தூண்டும் காஃபின் பானங்களை தவிர்ப்பது மிகவும் உதவியாக இருக்கும்.
இவையெல்லாம் தாண்டி குழந்தை அவசர அவசரமாக சிறுநீரை வெளியேற்றுவதோ, சிறுநீரை அடக்க முடியாமல் அவதிப்படும் நிலைமை வந்தாலோ தவிர்க்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைகள் அறியாமல் செய்யும் தவறுகளை அம்மாக்கள் ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதாக அதை திருத்த முடியும். அப்படி குழந்தைகள் செய்யும் பொதுவான தவறுகள் குறித்து பார்க்கலாம்.
குழந்தைகள் ஒரு வயதுக்குள்ளாகவே விரல் சூப்பும் பழக்கத்தை கற்றுகொள்கிறார்கள். இதை கவனிக்காமல் இருக்கும் போது இதிலிருந்து விடுபடுவதற்கு அவர்களுக்கு நான்கு முதல் ஆறு வயது கூட ஆகிவிடுகிறது. குழந்தை எப்போதும் தூங்கும் போதும் கூட விரல் சூப்புவதை நிறுத்துவதில்லை.
குழந்தைக்கு பற்கள் வளரும் வரை அவர்கள் கட்டை விரல் சூப்பும் பழக்கம் கொண்டிருப்பது பிரச்சனையில்லை. ஆனால் அதன் பிறகும் அவர்கள் இதை செய்துவந்தால் பற்கள் வரிசை பாதிக்கப்படும். பல் பிரச்சனையை உண்டாக்கும். வெகு சில குழந்தைகள் தானாக இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டாலும் சில குழந்தைகள் பலவிதமான மிரட்டல் தண்டித்தல் போன்றவற்றுக்கு பிறகே விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துகிறார்கள்.
குழந்தைகள் விரல் சூப்பும் போது பாதுகாப்பாக இருப்பதை போன்ற உணர்வை பெறுகிறார்கள். இதை தடுக்க குழந்தையை அரவணைத்தப்படி ஒருவர் உடன் இருக்க வேண்டும். குழந்தைக்கு புரியக்கூடிய வயதாக இருந்தால் அதன் விளைவுகள் குறித்து பேசி அவர்களை வேறு திசைக்கு திருப்பலாம். குழந்தைகளை எப்போதும் உங்கள் மீது கவனம் வைக்கும்படி இருக்க செய்தால் இதை ஆரம்ப கட்டட்திலேயே தடுத்து நிறுத்திவிட முடியும்.
மூக்கில் விரல் விட்டு குடைதல்
எல்லா குழந்தைகளும் கண்டிப்பாக இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு சளி அல்லது சலிப்பு காரணமாக இந்த பழக்கம் உருவாகலாம். சளியை வெளியே எடுக்கும் பழக்கத்தை குழந்தைகள் செய்யும் போது அடிக்கடி விரலை மூக்கு துவாரத்தில் விட்டு நோண்டி கொண்டே இருப்பார்கள். இதனால் சமயத்தில் மூக்கின் உள்ளே விரல்களில் ஒட்டியிருக்கும் கிருமிகள் உள்ளே செல்ல கூடும். அரிதாக மூக்கினுள் ரத்தகசிவும் வருவதற்கான வாய்ப்புண்டு.
எப்படி தடுத்து நிறுத்துவது
சிறு குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு மூக்கு குடைதலின் விளைவுகள் புரியாது. அம்மாக்கள் தினமும் குளிப்பாட்டும் போது அந்தரங்க உறுப்பு சுத்தம் சொல்லிதருவது போல் மூக்கை சுத்தம் செய்யும் வழிமுறைகளை கற்றுதந்து தினமும் குளிக்கும் போது இதை செய்தால் போதும் என்று அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டி விரல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவர்களது மூக்கு காய்ந்து உலர்ந்திருந்தால் மூக்கு ஈரப்பதமாக இருக்க ஈரப்பதமூட்டும் ஜெல் பயன்படுத்தலாம். அவர்கள் விரல்களுக்கு வேலை கொடுத்துகொண்டே இருந்தால் அவர்களது விரல்கள் மூக்கின் அருகே செல்லாது.
நகம் கடித்தல்
நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பான்மையினரிடம் உள்ளது. மன அழுத்தம் இருக்கும் போது நகம் கடிப்பது உண்டு. வளரும் பருவத்திலேயே இந்த பழக்கத்தை தடுக்காவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகும் இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். மன அழுத்தம் அல்லது பதற்றத்தால் இது உருவாவதாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் வளர்ந்த பிள்ளைகள் தான் இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள் மன அழுத்தம் அவர்களை ஆட்கொண்டிருந்தால் அதை போக்க முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளின் கை விரல் நகங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். நகங்களுக்கு நெயில் பாலிஷ் வைத்து விடலாம். வளர்ந்தவர்களாக இருந்தால் மன அழுத்தம் குறைக்க முயற்சி செய்வது நல்லது.
குழந்தைகள் சில விஷயங்கள் செய்யும் போது அவர்களுக்கு அது பிடிக்காமல் இருந்தாலோ அல்லது பிடிக்காத நபராக இருந்தாலோ அவர்கள் மீது புகார் சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் வயதை ஒத்த குழந்தைகளிடம் விளையாடும் போது கூட தங்களது தவறை மறைத்து மற்றவர்கள் செய்யும் தவறை மட்டும் மிகைப்படுத்தி சொல்வார்கள். இந்த பழக்கம் பள்ளியிலும் தொடரும். கூடுதலாகவே இருக்கும்.
குழந்தைகள் முன்பு மற்றவர்களை குறை கூறுவதை செய்யாதீர்கள். குழந்தைகள் சண்டையிடும் போது நேரிடையாகவே இருவருக்கும் சமரசம் செய்யுங்கள். பொறுமையும், சமரச குணங்களையும் அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். நேர்மறையான சிந்தனைகளையும், நேர்மறையான வாழ்க்கை முறையையும் கற்றுகொடுங்கள்.
குழந்தைக்கு பற்கள் வளரும் வரை அவர்கள் கட்டை விரல் சூப்பும் பழக்கம் கொண்டிருப்பது பிரச்சனையில்லை. ஆனால் அதன் பிறகும் அவர்கள் இதை செய்துவந்தால் பற்கள் வரிசை பாதிக்கப்படும். பல் பிரச்சனையை உண்டாக்கும். வெகு சில குழந்தைகள் தானாக இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டாலும் சில குழந்தைகள் பலவிதமான மிரட்டல் தண்டித்தல் போன்றவற்றுக்கு பிறகே விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துகிறார்கள்.
குழந்தைகள் விரல் சூப்பும் போது பாதுகாப்பாக இருப்பதை போன்ற உணர்வை பெறுகிறார்கள். இதை தடுக்க குழந்தையை அரவணைத்தப்படி ஒருவர் உடன் இருக்க வேண்டும். குழந்தைக்கு புரியக்கூடிய வயதாக இருந்தால் அதன் விளைவுகள் குறித்து பேசி அவர்களை வேறு திசைக்கு திருப்பலாம். குழந்தைகளை எப்போதும் உங்கள் மீது கவனம் வைக்கும்படி இருக்க செய்தால் இதை ஆரம்ப கட்டட்திலேயே தடுத்து நிறுத்திவிட முடியும்.
மூக்கில் விரல் விட்டு குடைதல்
எல்லா குழந்தைகளும் கண்டிப்பாக இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு சளி அல்லது சலிப்பு காரணமாக இந்த பழக்கம் உருவாகலாம். சளியை வெளியே எடுக்கும் பழக்கத்தை குழந்தைகள் செய்யும் போது அடிக்கடி விரலை மூக்கு துவாரத்தில் விட்டு நோண்டி கொண்டே இருப்பார்கள். இதனால் சமயத்தில் மூக்கின் உள்ளே விரல்களில் ஒட்டியிருக்கும் கிருமிகள் உள்ளே செல்ல கூடும். அரிதாக மூக்கினுள் ரத்தகசிவும் வருவதற்கான வாய்ப்புண்டு.
எப்படி தடுத்து நிறுத்துவது
சிறு குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு மூக்கு குடைதலின் விளைவுகள் புரியாது. அம்மாக்கள் தினமும் குளிப்பாட்டும் போது அந்தரங்க உறுப்பு சுத்தம் சொல்லிதருவது போல் மூக்கை சுத்தம் செய்யும் வழிமுறைகளை கற்றுதந்து தினமும் குளிக்கும் போது இதை செய்தால் போதும் என்று அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டி விரல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவர்களது மூக்கு காய்ந்து உலர்ந்திருந்தால் மூக்கு ஈரப்பதமாக இருக்க ஈரப்பதமூட்டும் ஜெல் பயன்படுத்தலாம். அவர்கள் விரல்களுக்கு வேலை கொடுத்துகொண்டே இருந்தால் அவர்களது விரல்கள் மூக்கின் அருகே செல்லாது.
நகம் கடித்தல்
நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பான்மையினரிடம் உள்ளது. மன அழுத்தம் இருக்கும் போது நகம் கடிப்பது உண்டு. வளரும் பருவத்திலேயே இந்த பழக்கத்தை தடுக்காவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகும் இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். மன அழுத்தம் அல்லது பதற்றத்தால் இது உருவாவதாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் வளர்ந்த பிள்ளைகள் தான் இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள் மன அழுத்தம் அவர்களை ஆட்கொண்டிருந்தால் அதை போக்க முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளின் கை விரல் நகங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். நகங்களுக்கு நெயில் பாலிஷ் வைத்து விடலாம். வளர்ந்தவர்களாக இருந்தால் மன அழுத்தம் குறைக்க முயற்சி செய்வது நல்லது.
குழந்தைகள் சில விஷயங்கள் செய்யும் போது அவர்களுக்கு அது பிடிக்காமல் இருந்தாலோ அல்லது பிடிக்காத நபராக இருந்தாலோ அவர்கள் மீது புகார் சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் வயதை ஒத்த குழந்தைகளிடம் விளையாடும் போது கூட தங்களது தவறை மறைத்து மற்றவர்கள் செய்யும் தவறை மட்டும் மிகைப்படுத்தி சொல்வார்கள். இந்த பழக்கம் பள்ளியிலும் தொடரும். கூடுதலாகவே இருக்கும்.
குழந்தைகள் முன்பு மற்றவர்களை குறை கூறுவதை செய்யாதீர்கள். குழந்தைகள் சண்டையிடும் போது நேரிடையாகவே இருவருக்கும் சமரசம் செய்யுங்கள். பொறுமையும், சமரச குணங்களையும் அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். நேர்மறையான சிந்தனைகளையும், நேர்மறையான வாழ்க்கை முறையையும் கற்றுகொடுங்கள்.
கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் வயிற்று போக்கு, குறைப்பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை சந்திக்கின்றனர். எனவே பாகற்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா இல்லையா என்பதை அறிந்து கொள்வோம்.
பாகற்காயின் கசப்புத் தன்மைக்கு காரணமான கெமிக்கல்கள் பெண்களுக்கு இரத்த போக்கை ஏற்படுத்தி கருக்கலைப்பை உண்டாக்குகிறது. இது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு, ஃபோலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பல பி வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் நிரம்பிய பாகற்காய் நமக்கு நிறைய நன்மைகளை அளித்தால் கூட கர்ப்பிணி பெண்கள் இதை பார்த்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் என்ன மாதிரியான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என அறிந்து கொள்வோம்.
பாகற்காயில் உள்ள கசப்பான தன்மைக்கு காரணமான மூலக்கூறுகள் குடலிறக்கத்தை ஏற்படுத்தும். இது உங்கள் உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் சிவப்பு இரத்த அணுக்களை அழிக்கிறது. இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும் மற்றும் கர்ப்ப சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் கடுமையான இரத்த சோகை முன்கூட்டிய பிறப்புக்கான ஆபத்து, குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தை, மற்றும் பிறப்பதற்கு முன்பே அல்லது அதற்குப் பிறகு உடனடியாக குழந்தை இறப்பு ஆகிய விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
பாகற்காயில் மோமார்டிகா மற்றும் கிளைகோசைடுகள் போன்ற மூலக்கூறுகளும் உள்ளன. அவை உடலில் விஷத்தை ஏற்படுத்தும். இந்த பொருட்களை உட்கொள்வது குடல் வலி, பார்வை கோளாறுகள், வாந்தி, சோர்வு, தசை சோர்வு, குமட்டல் மற்றும் உமிழ்நீரின் அதிக உற்பத்தி போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் கசப்பு அல்லது கசப்பான விதைகளை சாப்பிடுவதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படுகிறது. சில நிபுணர்கள் கர்ப்ப காலத்தில் கசப்பான சாறு குடிப்பதால் சுருக்கங்களைத் தூண்டும் மற்றும் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம், இது கருக்கலைப்புக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.
பாகற்காயை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கசப்பை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடுங்கள். சிறிய அளவு எடுத்துக் கொள்வதே சிறந்தது. ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு கப் பாகற்காயை சாப்பிடலாம்.
முடிந்த வரை கர்ப்ப காலத்தில் கசப்பு உணவுகளை முற்றிலுமாக தவிருங்கள். உங்களுக்கு குளுக்கோஸ் -6-பாஸ்பேட் டீஹைட்ரஜனேஸ் என்ற நொதி குறைபாடு இருந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. காரணம் இந்த நொதி தான் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பாதுகாக்கிறது.
பாகற்காய் விதைகளில் வைரசின் என்ற கெமிக்கல் உள்ளது. இது காய்ச்சல், குமட்டல், அனிமியா, வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் 3 மாதங்களில் பாகற்காய் சாப்பிடுவது சிலருக்கு செரிமான உளைச்சலை ஏற்படுத்தும். சில நிபுணர்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கசப்பான உணவை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், இந்த கோட்பாடு தொடர்பான ஆய்வக தகவல்கள் குறைவாகவே உள்ளன.
கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் என்ன மாதிரியான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என அறிந்து கொள்வோம்.
பாகற்காயில் உள்ள கசப்பான தன்மைக்கு காரணமான மூலக்கூறுகள் குடலிறக்கத்தை ஏற்படுத்தும். இது உங்கள் உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் சிவப்பு இரத்த அணுக்களை அழிக்கிறது. இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும் மற்றும் கர்ப்ப சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் கடுமையான இரத்த சோகை முன்கூட்டிய பிறப்புக்கான ஆபத்து, குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தை, மற்றும் பிறப்பதற்கு முன்பே அல்லது அதற்குப் பிறகு உடனடியாக குழந்தை இறப்பு ஆகிய விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
பாகற்காயில் மோமார்டிகா மற்றும் கிளைகோசைடுகள் போன்ற மூலக்கூறுகளும் உள்ளன. அவை உடலில் விஷத்தை ஏற்படுத்தும். இந்த பொருட்களை உட்கொள்வது குடல் வலி, பார்வை கோளாறுகள், வாந்தி, சோர்வு, தசை சோர்வு, குமட்டல் மற்றும் உமிழ்நீரின் அதிக உற்பத்தி போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் கசப்பு அல்லது கசப்பான விதைகளை சாப்பிடுவதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படுகிறது. சில நிபுணர்கள் கர்ப்ப காலத்தில் கசப்பான சாறு குடிப்பதால் சுருக்கங்களைத் தூண்டும் மற்றும் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம், இது கருக்கலைப்புக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.
பாகற்காயை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கசப்பை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடுங்கள். சிறிய அளவு எடுத்துக் கொள்வதே சிறந்தது. ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு கப் பாகற்காயை சாப்பிடலாம்.
முடிந்த வரை கர்ப்ப காலத்தில் கசப்பு உணவுகளை முற்றிலுமாக தவிருங்கள். உங்களுக்கு குளுக்கோஸ் -6-பாஸ்பேட் டீஹைட்ரஜனேஸ் என்ற நொதி குறைபாடு இருந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. காரணம் இந்த நொதி தான் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பாதுகாக்கிறது.
பாகற்காய் விதைகளில் வைரசின் என்ற கெமிக்கல் உள்ளது. இது காய்ச்சல், குமட்டல், அனிமியா, வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் 3 மாதங்களில் பாகற்காய் சாப்பிடுவது சிலருக்கு செரிமான உளைச்சலை ஏற்படுத்தும். சில நிபுணர்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கசப்பான உணவை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், இந்த கோட்பாடு தொடர்பான ஆய்வக தகவல்கள் குறைவாகவே உள்ளன.
80 வயதைக் கடந்தவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், மனைவியை இழந்தவர்கள் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், கணவரை இழந்தவர்கள் எண்ணிக்கை 84 சதவீதமாகவும் இருக்கிறது.
தென்னிந்தியாவில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இங்கு ஆயுட்காலத்தை பொறுத்தவரையில் ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழ்கிறார்கள். பெண்கள் தங்களைவிட வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்துகொள்வதால், கணவன்மார் முதலில் இறந்துபோகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 60 வயதைக்கடந்த ஆண்களின் மனைவிகள் கிட்டத்தட்ட 9 சதவீதம் பேர்தான் இறந்திருக்கிறார்கள். ஆனால் கணவனை இழக்கும் பெண்களின் எண்ணிக்கையோ மிக அதிகமாக இருக்கிறது. 60 வயதைக் கடந்த பெண்களில் 2 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விதவைகளாக இருக்கிறார்கள். 80 வயதைக் கடந்தவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், மனைவியை இழந்தவர்கள் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், கணவரை இழந்தவர்கள் எண்ணிக்கை 84 சதவீதமாகவும் இருக்கிறது.
பிள்ளைகள் வெளிநாட்டிலோ, வெளியூர்களிலோ வசிக்கும் சூழலில் கணவரையும் இழந்துவிடும் பெண்கள் வீட்டில் தனித்து வாழும் சூழல் ஏற்படுகிறது. ஒரு புறம், வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது பெருந்தவறாக நமது சமூகத்தில் கருதப்படுகிறது. இன்னொரு புறம், தான் கணவரோடும், குழந்தைகளோடும் வசித்த வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லவும் முதிய தாய்மார்கள் விரும்புவதில்லை. பிள்ளைகளுடனோ, உறவினர்களுடனோ சேர்ந்து மீதமுள்ள காலத்தை கழிக்க விரும்பாத தாய்மார்களும் இருக்கிறார்கள். அதனால் வீட்டில் தனித்து வாழும் முதிய தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் குறைவாக இருக்கிறது.
தனியாக வாழும் முதியோர்கள் எல்லா செயல்களுக்கும் முறையானதொரு ‘டைம் டேபிள்’ வைத்திருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட நாட்களில் மருத்துவமனைக்கு செல்வார்கள். வழிபாட்டு தலங்கள், வங்கிகளுக்கும் குறிப்பிட்ட நாட்களில் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். உறவினர்கள் அவர்களை சந்திக்கக்கூட குறிப்பிட்ட நேரத்தில்தான் வருவார்கள். இப்படி எல்லாவற்றிற்குமே அவர்கள் ஒரு வரைமுறை வைத்திருப்பதால், அவர்கள் வசிக்கும் வீடுகளில் திருடுவதற்கு திருடர்களால் எளிதாக திட்டமிட முடிகிறது. அவர்கள் திருடுவது ஒருவேளை தனிமையில் வசிக்கும் முதிய பெண்களுக்கு தெரிந்துவிட்டாலும் அவர்களை சமாளிப்பது திருடர்களுக்கு எளிதாகிவிடுகிறது. அதனால்தான் தனித்திருக்கும் முதியோர்களின் வீடுகளை குறிவைத்து திருடர்கள் நுழைகிறார்கள்.
முதியோர்கள் பெரும்பாலும் கருணை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். எல்லோரையும் அவர்கள் எளிதாக நம்புவதால்தான் தண்ணீர் கேட்பதுபோலவோ, வியாபாரம் செய்பவர்கள் போலவோ அவர்களது கவனத்தை திசைதிருப்பி ஏமாற்றுவதும், திருடுவதும் அதிகமாக நடக்கிறது. அத்தகைய திருடர்கள் சில நேரங்களில் கொலைகாரர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.
தனியாக வசிப்பவர்களை வங்கி ஊழியர்கள் போல் அணுகி வங்கி கணக்கு விவரங்களையும், பாஸ்வேர்டுகளையும் பெற்று மோசடி செய்வதும் நடக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் மகனோ, மகளோ கொரியரில் பார்சல் அனுப்பியிருக்கிறார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியும் மோசடி செய்கிறார்கள்.
தனிமையில் வசிக்கும் முதியோர்கள் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
* முதியோர்கள் தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை முதலில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது போன்று தங்கள் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். முதியோர்களை தனிமைப்படுத்துவதையும் அவர்களது பிள்ளைகள் தவிர்ப்பது அவசியம்.
* தனிமையில் வசிப்பவர்களை பராமரிக்கவோ, உதவி செய்யவோ வருகிறவர்களின் முழுவிவரங்களையும் சேகரித்து வையுங்கள். நிரந்தரமாக வீட்டிலேயே தங்கியிருந்து பராமரிப்பவர்களின் விவரங்களை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொடுத்துவையுங்கள். அவரது போட்டோ, போன் நம்பரை முதியவரின் உறவினர்களும் சேகரித்துவைத்துக்கொள்வது நல்லது.
* தனியாக இருப்பவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பது பாதுகாப்பானது. அடுக்குமாடி என்றாலும், தனி வீடு என்றாலும் முதியோர்கள் பக்கத்து வீட்டினருடன் நல்லுறவை பேணவேண்டும். தினமும் ஒருமுறையாவது அவர்கள் பக்கத்து வீட்டினருடன் பேசும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்வது நல்லது.
* தினமும் இருமுறை பிள்ளைகளோடும், நெருங்கிய உறவினர்களோடும் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுவும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பேசவேண்டும். அந்த நேரத்தில் ஒரு மணி நேரம் கடந்தும் பேசாவிட்டால், முதியவருடனோ, அவரது வீட்டின் அருகில் இருக்கும் உறவினரிடமோ, குடியிருப்பு செக்யூரிட்டியுடனோ பேசி முதியவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம். யாரிடமும் பேச முடியாவிட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தர வேண்டும்.
* தனியாக வசிப்பவர்கள் டாக்சி, ஆட்டோ போன்றவைகளை பயன்படுத்தும்போது, தனியாக இருப்பதை எந்த விதத்திலும் வெளிப்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பிற்கு ஏற்றது.
* பேஸ்புக், இன்டர்நெட் வழியாகவும் மோசடிகள் நடக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் தயங்காமல் அது பற்றி குடும்பத்தினருக்கு உடனே தகவல் கொடுத்துவிடுங்கள்.
* தானாகவே பூட்டிக்கொள்ளும் ஆட்டோமேட்டிக் லாக்குகளை வீட்டில் பயன்படுத்தக்கூடாது. ஆனால் செக்யூரிட்டி கேமரா, பாதுகாப்பு அலாரம் போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.
* வீட்டிற்குள் திருடன் யாராவது புகுந்திருப்பது தெரியவந்தால், அவனை எதிர்கொண்டு துணிச்சலை காட்ட முயற்சிக்க வேண்டாம். இருக்கும் அறையை உடனடியாக பூட்டி சுயபாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு பக்கத்து வீட்டினருக்கோ, அருகில் உள்ள உறவினர்களுக்கோ, போலீசுக்கோ தகவல் தெரிவியுங்கள்.
பிள்ளைகள் வெளிநாட்டிலோ, வெளியூர்களிலோ வசிக்கும் சூழலில் கணவரையும் இழந்துவிடும் பெண்கள் வீட்டில் தனித்து வாழும் சூழல் ஏற்படுகிறது. ஒரு புறம், வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது பெருந்தவறாக நமது சமூகத்தில் கருதப்படுகிறது. இன்னொரு புறம், தான் கணவரோடும், குழந்தைகளோடும் வசித்த வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லவும் முதிய தாய்மார்கள் விரும்புவதில்லை. பிள்ளைகளுடனோ, உறவினர்களுடனோ சேர்ந்து மீதமுள்ள காலத்தை கழிக்க விரும்பாத தாய்மார்களும் இருக்கிறார்கள். அதனால் வீட்டில் தனித்து வாழும் முதிய தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் குறைவாக இருக்கிறது.
தனியாக வாழும் முதியோர்கள் எல்லா செயல்களுக்கும் முறையானதொரு ‘டைம் டேபிள்’ வைத்திருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட நாட்களில் மருத்துவமனைக்கு செல்வார்கள். வழிபாட்டு தலங்கள், வங்கிகளுக்கும் குறிப்பிட்ட நாட்களில் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். உறவினர்கள் அவர்களை சந்திக்கக்கூட குறிப்பிட்ட நேரத்தில்தான் வருவார்கள். இப்படி எல்லாவற்றிற்குமே அவர்கள் ஒரு வரைமுறை வைத்திருப்பதால், அவர்கள் வசிக்கும் வீடுகளில் திருடுவதற்கு திருடர்களால் எளிதாக திட்டமிட முடிகிறது. அவர்கள் திருடுவது ஒருவேளை தனிமையில் வசிக்கும் முதிய பெண்களுக்கு தெரிந்துவிட்டாலும் அவர்களை சமாளிப்பது திருடர்களுக்கு எளிதாகிவிடுகிறது. அதனால்தான் தனித்திருக்கும் முதியோர்களின் வீடுகளை குறிவைத்து திருடர்கள் நுழைகிறார்கள்.
முதியோர்கள் பெரும்பாலும் கருணை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். எல்லோரையும் அவர்கள் எளிதாக நம்புவதால்தான் தண்ணீர் கேட்பதுபோலவோ, வியாபாரம் செய்பவர்கள் போலவோ அவர்களது கவனத்தை திசைதிருப்பி ஏமாற்றுவதும், திருடுவதும் அதிகமாக நடக்கிறது. அத்தகைய திருடர்கள் சில நேரங்களில் கொலைகாரர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.
தனியாக வசிப்பவர்களை வங்கி ஊழியர்கள் போல் அணுகி வங்கி கணக்கு விவரங்களையும், பாஸ்வேர்டுகளையும் பெற்று மோசடி செய்வதும் நடக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் மகனோ, மகளோ கொரியரில் பார்சல் அனுப்பியிருக்கிறார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியும் மோசடி செய்கிறார்கள்.
தனிமையில் வசிக்கும் முதியோர்கள் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
* முதியோர்கள் தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை முதலில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது போன்று தங்கள் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். முதியோர்களை தனிமைப்படுத்துவதையும் அவர்களது பிள்ளைகள் தவிர்ப்பது அவசியம்.
* தனிமையில் வசிப்பவர்களை பராமரிக்கவோ, உதவி செய்யவோ வருகிறவர்களின் முழுவிவரங்களையும் சேகரித்து வையுங்கள். நிரந்தரமாக வீட்டிலேயே தங்கியிருந்து பராமரிப்பவர்களின் விவரங்களை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொடுத்துவையுங்கள். அவரது போட்டோ, போன் நம்பரை முதியவரின் உறவினர்களும் சேகரித்துவைத்துக்கொள்வது நல்லது.
* தனியாக இருப்பவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பது பாதுகாப்பானது. அடுக்குமாடி என்றாலும், தனி வீடு என்றாலும் முதியோர்கள் பக்கத்து வீட்டினருடன் நல்லுறவை பேணவேண்டும். தினமும் ஒருமுறையாவது அவர்கள் பக்கத்து வீட்டினருடன் பேசும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்வது நல்லது.
* தினமும் இருமுறை பிள்ளைகளோடும், நெருங்கிய உறவினர்களோடும் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுவும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பேசவேண்டும். அந்த நேரத்தில் ஒரு மணி நேரம் கடந்தும் பேசாவிட்டால், முதியவருடனோ, அவரது வீட்டின் அருகில் இருக்கும் உறவினரிடமோ, குடியிருப்பு செக்யூரிட்டியுடனோ பேசி முதியவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம். யாரிடமும் பேச முடியாவிட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தர வேண்டும்.
* தனியாக வசிப்பவர்கள் டாக்சி, ஆட்டோ போன்றவைகளை பயன்படுத்தும்போது, தனியாக இருப்பதை எந்த விதத்திலும் வெளிப்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பிற்கு ஏற்றது.
* பேஸ்புக், இன்டர்நெட் வழியாகவும் மோசடிகள் நடக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் தயங்காமல் அது பற்றி குடும்பத்தினருக்கு உடனே தகவல் கொடுத்துவிடுங்கள்.
* தானாகவே பூட்டிக்கொள்ளும் ஆட்டோமேட்டிக் லாக்குகளை வீட்டில் பயன்படுத்தக்கூடாது. ஆனால் செக்யூரிட்டி கேமரா, பாதுகாப்பு அலாரம் போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.
* வீட்டிற்குள் திருடன் யாராவது புகுந்திருப்பது தெரியவந்தால், அவனை எதிர்கொண்டு துணிச்சலை காட்ட முயற்சிக்க வேண்டாம். இருக்கும் அறையை உடனடியாக பூட்டி சுயபாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு பக்கத்து வீட்டினருக்கோ, அருகில் உள்ள உறவினர்களுக்கோ, போலீசுக்கோ தகவல் தெரிவியுங்கள்.
கடலைப்பருப்பு சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றால் உணவு உண்ட திருப்தி கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 8 முதல் 10,
பெருங்காயம் - சிறு துண்டு,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
தேங்காய்த் துருவல் - கால் மூடி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - அரை டீஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.
ஆறியதும் அவற்றுடன் புளியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு அரைத்தெடுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளபொருட்களை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் போட்டு கலந்து பரிமாறவும்.
கடலைப் பருப்பு - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 8 முதல் 10,
பெருங்காயம் - சிறு துண்டு,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
தேங்காய்த் துருவல் - கால் மூடி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - அரை டீஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.
ஆறியதும் அவற்றுடன் புளியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு அரைத்தெடுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளபொருட்களை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் போட்டு கலந்து பரிமாறவும்.
இதைத் துவையல் போல கெட்டியாகவும் வைத்துக்கொள்ளலாம் அல்லது சிறிது நீர் சேர்த்து சட்னியாகவும் சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரலை பாதுகாப்பதற்கு உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நுரையீரலை பாதுகாப்பதற்கு உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நுரையீரல் புற்றுநோயை தடுப்பதில் கிரீன் டீ முக்கிய பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுபவர்களுடன் ஒப்பிடும்போது மற்றவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கிரீன் டீ பருகி வந்தால் நுரையீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் சற்று குறைவாக இருக்கும் என்பதும் தெரியவந்திருக்கிறது. கிரீன் டீ முக்கிய ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளதால் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் அழற்சியை குறைக்க அவை உதவும்.
உடலில் நீரிழப்பு ஏற்படாமலும் கவனித்துக்கொள்ளவேண்டும். நீரிழப்பு ஏற்பட்டால் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு நேரும். சுவாச மண்டலமும் பாதிப்புக்குள்ளாகும். இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவதில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் அல்லது திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்வது மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை, சுவாசப் பிரச்சினைகளை போக்க உதவும். நுரையீரலுக்கும் நலம் சேர்க்கும். மஞ்சளும் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதில் இருக்கும் குர்குமின் நச்சுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும். சளி, இருமலை போக்குவதற்கும் உதவும்.
இஞ்சிக்கு சுவாசத்திறனை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. இதில் பல அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. அவை நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்த உதவும். காற்றை சுத்திகரித்து நச்சுகளை அகற்றும் சிறந்த வடிகட்டியாக துளசி செயல்படுகிறது.
புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கிரீன் டீ பருகி வந்தால் நுரையீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் சற்று குறைவாக இருக்கும் என்பதும் தெரியவந்திருக்கிறது. கிரீன் டீ முக்கிய ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளதால் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் அழற்சியை குறைக்க அவை உதவும்.
உடலில் நீரிழப்பு ஏற்படாமலும் கவனித்துக்கொள்ளவேண்டும். நீரிழப்பு ஏற்பட்டால் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு நேரும். சுவாச மண்டலமும் பாதிப்புக்குள்ளாகும். இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவதில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் அல்லது திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்வது மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை, சுவாசப் பிரச்சினைகளை போக்க உதவும். நுரையீரலுக்கும் நலம் சேர்க்கும். மஞ்சளும் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதில் இருக்கும் குர்குமின் நச்சுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும். சளி, இருமலை போக்குவதற்கும் உதவும்.
இஞ்சிக்கு சுவாசத்திறனை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. இதில் பல அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. அவை நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்த உதவும். காற்றை சுத்திகரித்து நச்சுகளை அகற்றும் சிறந்த வடிகட்டியாக துளசி செயல்படுகிறது.
பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. அதனால் டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன.
காலம் மாறினாலும் பட்டுப் பாவாடையில் பெண்களுக்கு இருக்கும் ஆசை குறையவில்லை. அதனால் டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன. விழாக்காலங்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறுமிகள் பட்டுப் பாவாடையுடன் உலா வருவதை பார்க்கவே அழகாக இருக்கும். பளிச்சென்ற நிறத்தில் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப் பாவாடை அணிந்து அழகுக் குழந்தைகள் நடந்துசெல்லும்போது மின்னல்வெட்டியதுபோல் இருக்கும்.
பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. பொருத்தமான ஜாக்கெட்டுகள் அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும். சிவப்பு பட்டில் தயாரான மேலாடைக்கு, கை பகுதியில் ‘பப்’வைத்து அதன் இறுதியில் சூரிய கதிர்கள் ஜொலிப்பதுபோல் ஜரிகை வேலைப்பாடு செய்திருந்தால் அது கண்களை பறிக்கும்.
இப்போது பட்டுப் பாவாடைக்கான ஜாக்கெட்டில் டிசைனர் மெட்டீரியலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். கலம்காரி, டிஜிட்டல், பத்திக், காயின் டாட், இக்காத் போன்ற பல வகை பிரிண்ட் மெட்டீரியல்களை பட்டுப் பாவாடை- ஜாக்கெட்களில் பயன்படுத்துகிறார்கள். ஜாக்கெட் துணி பாவாடைக்கு பார்டர் ஆகிவிடுகிறது. ஸ்கர்ட்டுக்கு பதில் பலாசோ பயன்படுத்துவது புதிய பேஷனாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான ஜாக்கெட் ‘க்ரோப் டாப்’ போன்றிருக்கும். இப்போது பட்டுப் பாவாடை- ஜாக்கெட்டுடன் தாவணியையும் இணைத்து தருகிறார்கள். டீன்ஏஜ் பெண்களை இது வெகுவாக கவர்கிறது.
அடர்த்தியான நிறங்களை கொண்ட பட்டுப்பாவாடைகளே முந்தைய ஸ்டைலாக இருந் தது. அந்த பாரம்பரிய ஸ்டைல் இப்போதும் பெண்களை ஈர்க்கத்தான் செய்கிறது. பச்சை- மஞ்சள், நீலம்- சிவப்பு, மெருன்- நீலம், நீலம்-பிங்க், பிங்க்- கிளிப்பச்சை போன்றவைகளே அதற்கான கலர் காம்பினேஷன்களாக இருக்கின்றன. பிராக்கெட் ஜாக்கெட்களுக்கு பாவாடையின் பார்டரில் இருந்து வெட்டி எடுத்த துண்டுகளை ‘ஸ்லீவ்’ ஆக பயன்படுத்துகிறார்கள். அதன் நெக்லைனில் எம்ப்பிராய்டரி, ஸ்டோன் ஒர்க் போன்றவைகளை செய்கிறார்கள்.
3 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு ஆன்லைனில் ரெடிமேடு பட்டுப்பாவாடைகளை வாங்கலாம். சில்க் காட்டன் மெட்டீரியலில் தயாரான லைனிங் செய்த டாப்பும், பேன்சி நெக்கும், எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகளும் அதில் இருக்கும். ஆன்லைனில் வாங்கும்போது நம்பகமான பிராண்ட்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. துணியின் தரத்தையும், டிசைனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்த இணையதளத்தில் இருந்து அதனை வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். குறைந்தது ஐந்து வெப்சைட்டுகளையாவது பார்த்துவிட்டு நிதானமாகவே ஆர்டர் செய்யவேண்டும். ரிட்டர்ன் செய்வது, எக்சேஞ்ச் செய்வது போன்ற சவுகரியங்கள் இருக்கவேண்டும்.
துணியின் தரத்தை பற்றிய விவரங்களையும் வாசித்து பார்க்கவேண்டும். துல்லியமான அளவில் ஒருபோதும் ஆர்டர்கொடுக்கக்கூடாது. துல்லிய அளவின் அடுத்த சைஸ்க்கு ஆர்டர் கொடுப்பதே சிறந்தது. துல்லிய அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கினால் அது இறுக்கமாக தோன்றலாம். சற்று அளவு அதிகமான பட்டுப்பாவாடை என்றால் அதன் அளவை சுருக்குவது மிக எளிது.
மெலிந்து உயரமாக தோன்றும் பெண்கள் குறுக்கான கோடுகளை கொண்ட பிரிண்டுகள் அமைந்த டிசைன்களை வாங்கக்கூடாது. அகலமான பார்டரும், பெரிய பூக்களை கொண்ட டிசைன்களும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பாவாடைக்கும்- ஜாக்கெட்டுக்கும் கான்ட்ராஸ்ட் நிறங்களை தேர்ந்தெடுங்கள். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பாவாடையில் அதிக சுருக்கங்கள் வைத்துக்கொள்ளலாம். ஜாக்கெட்டுகளில் ‘பப் ஸ்லீவ்’ வைத்துக்கொள்ளலாம். குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு சிறிய பிரிண்டுகளை கொண்ட டிசைன்கள் பொருத்தமாக இருக்கும். சிறிய செக் டிசைன்களும் அவர்களுக்கு கூடுதல் அழகு தரும்.
பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. பொருத்தமான ஜாக்கெட்டுகள் அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும். சிவப்பு பட்டில் தயாரான மேலாடைக்கு, கை பகுதியில் ‘பப்’வைத்து அதன் இறுதியில் சூரிய கதிர்கள் ஜொலிப்பதுபோல் ஜரிகை வேலைப்பாடு செய்திருந்தால் அது கண்களை பறிக்கும்.
இப்போது பட்டுப் பாவாடைக்கான ஜாக்கெட்டில் டிசைனர் மெட்டீரியலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். கலம்காரி, டிஜிட்டல், பத்திக், காயின் டாட், இக்காத் போன்ற பல வகை பிரிண்ட் மெட்டீரியல்களை பட்டுப் பாவாடை- ஜாக்கெட்களில் பயன்படுத்துகிறார்கள். ஜாக்கெட் துணி பாவாடைக்கு பார்டர் ஆகிவிடுகிறது. ஸ்கர்ட்டுக்கு பதில் பலாசோ பயன்படுத்துவது புதிய பேஷனாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான ஜாக்கெட் ‘க்ரோப் டாப்’ போன்றிருக்கும். இப்போது பட்டுப் பாவாடை- ஜாக்கெட்டுடன் தாவணியையும் இணைத்து தருகிறார்கள். டீன்ஏஜ் பெண்களை இது வெகுவாக கவர்கிறது.
அடர்த்தியான நிறங்களை கொண்ட பட்டுப்பாவாடைகளே முந்தைய ஸ்டைலாக இருந் தது. அந்த பாரம்பரிய ஸ்டைல் இப்போதும் பெண்களை ஈர்க்கத்தான் செய்கிறது. பச்சை- மஞ்சள், நீலம்- சிவப்பு, மெருன்- நீலம், நீலம்-பிங்க், பிங்க்- கிளிப்பச்சை போன்றவைகளே அதற்கான கலர் காம்பினேஷன்களாக இருக்கின்றன. பிராக்கெட் ஜாக்கெட்களுக்கு பாவாடையின் பார்டரில் இருந்து வெட்டி எடுத்த துண்டுகளை ‘ஸ்லீவ்’ ஆக பயன்படுத்துகிறார்கள். அதன் நெக்லைனில் எம்ப்பிராய்டரி, ஸ்டோன் ஒர்க் போன்றவைகளை செய்கிறார்கள்.
3 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு ஆன்லைனில் ரெடிமேடு பட்டுப்பாவாடைகளை வாங்கலாம். சில்க் காட்டன் மெட்டீரியலில் தயாரான லைனிங் செய்த டாப்பும், பேன்சி நெக்கும், எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகளும் அதில் இருக்கும். ஆன்லைனில் வாங்கும்போது நம்பகமான பிராண்ட்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. துணியின் தரத்தையும், டிசைனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்த இணையதளத்தில் இருந்து அதனை வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். குறைந்தது ஐந்து வெப்சைட்டுகளையாவது பார்த்துவிட்டு நிதானமாகவே ஆர்டர் செய்யவேண்டும். ரிட்டர்ன் செய்வது, எக்சேஞ்ச் செய்வது போன்ற சவுகரியங்கள் இருக்கவேண்டும்.
துணியின் தரத்தை பற்றிய விவரங்களையும் வாசித்து பார்க்கவேண்டும். துல்லியமான அளவில் ஒருபோதும் ஆர்டர்கொடுக்கக்கூடாது. துல்லிய அளவின் அடுத்த சைஸ்க்கு ஆர்டர் கொடுப்பதே சிறந்தது. துல்லிய அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கினால் அது இறுக்கமாக தோன்றலாம். சற்று அளவு அதிகமான பட்டுப்பாவாடை என்றால் அதன் அளவை சுருக்குவது மிக எளிது.
மெலிந்து உயரமாக தோன்றும் பெண்கள் குறுக்கான கோடுகளை கொண்ட பிரிண்டுகள் அமைந்த டிசைன்களை வாங்கக்கூடாது. அகலமான பார்டரும், பெரிய பூக்களை கொண்ட டிசைன்களும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பாவாடைக்கும்- ஜாக்கெட்டுக்கும் கான்ட்ராஸ்ட் நிறங்களை தேர்ந்தெடுங்கள். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பாவாடையில் அதிக சுருக்கங்கள் வைத்துக்கொள்ளலாம். ஜாக்கெட்டுகளில் ‘பப் ஸ்லீவ்’ வைத்துக்கொள்ளலாம். குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு சிறிய பிரிண்டுகளை கொண்ட டிசைன்கள் பொருத்தமாக இருக்கும். சிறிய செக் டிசைன்களும் அவர்களுக்கு கூடுதல் அழகு தரும்.
சிலர் நேராக மருந்துகடைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிடுகிறார்கள். இந்த பழக்கம்தான் சுயமருத்துவம் எனப்படுகிறது. இது விலைகொடுத்து கூடுதலாக நோயை வாங்கிக்கொள்ளும் ஆபத்தான செயலாகும்.
உடல் நிலை சரியில்லாதபோது, காத்திருந்து டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவதுதான் பலரது வழக்கம். சிலர் நேராக மருந்துகடைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிடுகிறார்கள். இந்த பழக்கம்தான் சுயமருத்துவம் எனப்படுகிறது. இது விலைகொடுத்து கூடுதலாக நோயை வாங்கிக்கொள்ளும் ஆபத்தான செயலாகும்.
படிக்காதவர்களே இந்த சுயமருத்துவத்தை அதிகம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் தவறு. படித்தவர்கள், என்னென்ன அறிகுறிகள் இருந்தால் அது என்ன பிரச்சினை என்பதை ‘கூகுள் சர்ச்’சில் தேடிவிட்டு, அதற்கு ஏற்றாற்போல் குறிப்பிடப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு சுயமருத்துவர்களாகிக் கொள்கிறார்கள். இது ஆபத்து நிறைந்த செயலாகும்.
பெரும்பாலான மக்கள் சுயமருத்துவமுறையில் மருந்துகடைகளில் வலி நிவாரண மாத்திரைகளைதான் வாங்குகிறார்கள். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் குறிப்பிட்ட வகை வலி நிவாரண மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக செயல்பாடு குறைதல், இதய பாதிப்புகள் ஏற்படுதல், அல்சர் போன்றவை ஏற்படும்.
வழக்கமாக ஏற்படும் ஜலதோஷம் என்றால், ஒரு வாரம் வரை தொந்தரவு தந்துவிட்டு அதுவாக குணமாகிவிடும். ஆனால் உடனடியாக அதில் இருந்து மீளவேண்டும் என்று நினைத்து பலர் மருந்து கடைகளுக்கு சென்று அறிகுறிகளை கூறி சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்கள் பொருத்தமற்ற மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டால் அது உடலில் ‘ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்சை’ உருவாக்கிவிடும். இது நோய்க்கு அளிக்கப்படும் மருந்தை எதிர்க்கும் தன்மையை கிருமிகள் பெறுவதற்கு காரணமாகி, ஆரோக்கிய சீர்கேட்டிற்கு அச்சுறுத்தலாகிவிடும்.
ஒருவரது நோயின்தன்மை, அவரது வயது, அவரது எடை, நோய் கிருமிகளின் எண்ணிக்கை போன்றவைகளை கருத்தில்கொண்டு நோயாளிக்கு, டாக்டர் மருந்துகளை பரிந்துரைக்கிறார். அவரால்தான் அந்த நோயாளிக்கு எந்த மருந்து, எந்த அளவுக்கு, எத்தனை நாட்களுக்கு சாப்பிடவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டாக்டர் ஐந்து நாட்களுக்கு மாத்திரைகள் எழுதிக்கொடுத்தால் சிலர் மூன்று நாட்களுக்கு மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள். மூன்று நாட்கள் சாப்பிட்டதும் அவர்களுக்கு நோய் குணமானதுபோல் தோன்றும். முழு நிவாரணம் கிடைத்துவிட்டதாக நம்பிவிடுகிறார்கள். உண்மையில், அந்த நோய் கிருமிகள் முழுவதுமாக அழிய ஐந்து நாட்களும் குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரைகள் எடுத்தாகவேண்டும். மூன்று நாட்கள் மட்டுமே சாப்பிட்டால் அந்த நோய்கிருமிகள் அழியாமல் உடலுக்கு உள்ளேயே இருந்து, அந்த மருந்துக்கு எதிராக செயல்படும் நிலையை அடைந்துவிடும். அதனால் மீண்டும் அந்த நோய் வரும்போது, அதே மாத்திரைகளை சாப்பிட்டால் பலன்கிடைக்காது.
அதுபோல் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்றவைகளுக்கு டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டை பயன்படுத்தி, மீண்டும் அதே நோய்கள் ஏற்படும்போது மருந்துகள் வாங்கிக்கொள்வதும் சரியானதல்ல. நோய்வாய்ப்படும் ஒவ்வொருமுறையும் டாக்டரின் ஆலோசனையை பெற்றுதான் மருந்துகள் வாங்கிசாப்பிடவேண்டும். அதுவே முழுமையான தீர்வுக்கு வழிகாட்டும்.
படிக்காதவர்களே இந்த சுயமருத்துவத்தை அதிகம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் தவறு. படித்தவர்கள், என்னென்ன அறிகுறிகள் இருந்தால் அது என்ன பிரச்சினை என்பதை ‘கூகுள் சர்ச்’சில் தேடிவிட்டு, அதற்கு ஏற்றாற்போல் குறிப்பிடப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு சுயமருத்துவர்களாகிக் கொள்கிறார்கள். இது ஆபத்து நிறைந்த செயலாகும்.
பெரும்பாலான மக்கள் சுயமருத்துவமுறையில் மருந்துகடைகளில் வலி நிவாரண மாத்திரைகளைதான் வாங்குகிறார்கள். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் குறிப்பிட்ட வகை வலி நிவாரண மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக செயல்பாடு குறைதல், இதய பாதிப்புகள் ஏற்படுதல், அல்சர் போன்றவை ஏற்படும்.
வழக்கமாக ஏற்படும் ஜலதோஷம் என்றால், ஒரு வாரம் வரை தொந்தரவு தந்துவிட்டு அதுவாக குணமாகிவிடும். ஆனால் உடனடியாக அதில் இருந்து மீளவேண்டும் என்று நினைத்து பலர் மருந்து கடைகளுக்கு சென்று அறிகுறிகளை கூறி சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்கள் பொருத்தமற்ற மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டால் அது உடலில் ‘ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்சை’ உருவாக்கிவிடும். இது நோய்க்கு அளிக்கப்படும் மருந்தை எதிர்க்கும் தன்மையை கிருமிகள் பெறுவதற்கு காரணமாகி, ஆரோக்கிய சீர்கேட்டிற்கு அச்சுறுத்தலாகிவிடும்.
ஒருவரது நோயின்தன்மை, அவரது வயது, அவரது எடை, நோய் கிருமிகளின் எண்ணிக்கை போன்றவைகளை கருத்தில்கொண்டு நோயாளிக்கு, டாக்டர் மருந்துகளை பரிந்துரைக்கிறார். அவரால்தான் அந்த நோயாளிக்கு எந்த மருந்து, எந்த அளவுக்கு, எத்தனை நாட்களுக்கு சாப்பிடவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டாக்டர் ஐந்து நாட்களுக்கு மாத்திரைகள் எழுதிக்கொடுத்தால் சிலர் மூன்று நாட்களுக்கு மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள். மூன்று நாட்கள் சாப்பிட்டதும் அவர்களுக்கு நோய் குணமானதுபோல் தோன்றும். முழு நிவாரணம் கிடைத்துவிட்டதாக நம்பிவிடுகிறார்கள். உண்மையில், அந்த நோய் கிருமிகள் முழுவதுமாக அழிய ஐந்து நாட்களும் குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரைகள் எடுத்தாகவேண்டும். மூன்று நாட்கள் மட்டுமே சாப்பிட்டால் அந்த நோய்கிருமிகள் அழியாமல் உடலுக்கு உள்ளேயே இருந்து, அந்த மருந்துக்கு எதிராக செயல்படும் நிலையை அடைந்துவிடும். அதனால் மீண்டும் அந்த நோய் வரும்போது, அதே மாத்திரைகளை சாப்பிட்டால் பலன்கிடைக்காது.
அதுபோல் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்றவைகளுக்கு டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டை பயன்படுத்தி, மீண்டும் அதே நோய்கள் ஏற்படும்போது மருந்துகள் வாங்கிக்கொள்வதும் சரியானதல்ல. நோய்வாய்ப்படும் ஒவ்வொருமுறையும் டாக்டரின் ஆலோசனையை பெற்றுதான் மருந்துகள் வாங்கிசாப்பிடவேண்டும். அதுவே முழுமையான தீர்வுக்கு வழிகாட்டும்.
சில நேரங்களில், உங்கள் உறவை முறித்துக் கொள்ளும் அல்லது இருவருக்கும் இடையில் கசப்பை ஏற்படுத்தும் சில விஷயங்களை பற்றி உங்கள் காதலனுடன் பேசாமல் இருப்பது நல்லது.
எல்லாவற்றையும் தனது காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் நேர்மையான காதலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தவறில்லை. இருப்பினும், மிகவும் நேர்மையாக இருப்பது, சில நேரங்களில் இருவரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய உணர்ச்சிகரமான உறவுகளை சேதப்படுத்தும். உங்கள் உறவை எந்தவொரு சேதத்திலிருந்தும் காப்பாற்ற, மற்றும் நீங்கள் உங்கள் காதலனுடன் கலந்துரையாடுவதை தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
உங்கள் காதலனின் குடும்பத்தை, குறிப்பாக அவரது தாயை நீங்கள் விரும்பவில்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்... அது ஆண்களுக்கு உண்மையிலேயே உள்ளூற கோபத்தை ஏற்படுத்தும். நம் பெற்றோர் என்று வரும்போது, நாம் அனைவரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவது என்பது பொதுவான ஒன்று தான். அவரது பெற்றோருடன் ஆரோக்கியமான பேச்சில் ஈடுபடுங்கள். சில நேரங்களில் அவரது தாயின் கருத்துக்களால் உங்கள் மனம் புண்படலாம்; இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதை காரணம் காட்டி கோவப்பட்டு சண்டைபோடுவதற்கு பதிலாக, இருவரும் பொறுமையாகப் பேசித் தீர்த்து கொள்வது தான் நல்லது. அவர், அவரது பெற்றோருடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளைப் பற்றி விவாதிப்பது இயல்பு; ஆனால், அவர்களைப் பற்றி புகார் செய்யும்போது நீங்கள் அமைதியாக இருப்பது தான் நல்லது. ஏனெனில் நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறினால் அது அவர்களுக்கு தவறாக தெரியலாம்.
நீங்கள் உங்கள் காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் சிறிய விஷயங்கள் தான் ஓர் நல்லஆரோக்கியமான உறவுகளுக்கு வழி வகுக்கிறது. அது உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வலுவான நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், உங்களின் நெருங்கிய நண்பர் தனது ஆழ்ந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதை பற்றி நீங்கள் உங்கள் காதலனுடன் கிசுகிசுக்க முடிவு செய்வது நல்ல விஷயம் அல்ல. அவ்வாறு செய்வது உங்கள் நண்பரின் நம்பிக்கையை மீறுவதாகும். உங்கள் காதலனை நீங்கள் நம்புவது சரி தான். ஆனால், அதற்காக உங்கள் நண்பரின் நம்பிக்கையை நீங்கள் உடைக்க நினைப்பது தவறு.
உங்கள் காதலனின் செலவுகள் பற்றி பேசுவதை தவிருங்கள், பணம் வரவு செலவு பற்றியெல்லாம் பேசாதீர்கள். அது எப்போதிருந்தாலும் சிக்கல் தான். ஒரு சரியான உறவு என்பது, இருவரும் ஒரே பாதையில் நடப்பது தான்; மற்றும் இருவரும் ஒரே பக்கத்தில் இருப்பது. ஆனால், உங்கள் காதலனின் செலவுகளைப் பற்றி விவாதிப்பது நல்ல யோசனையாக இருக்காது.
உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதை தவிருங்கள். ஒரு நல்ல காரணத்திற்காக, பழைய விஷயங்களை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. அவரது முன்னாள் காதலி, உங்களின் மோசமான கவலையாக இருக்கலாம். ஆனால், அவரது பேஷன் சென்ஸ் அல்லது அவரது தோற்றங்களைப் பற்றி விவாதிப்பது, உங்களை உங்கள் காதலனின் பார்வையில் கொஞ்சம் குறைத்து எடை போடா வழிவகுக்கும். மேலும், உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை மாற்றிவிடும். உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதனால், நீங்கள் இருவரும் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உறவின் வளர்ச்சியை தடுக்க நீங்களே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறீர்கள்.
உங்கள் காதலனின் குடும்பத்தை, குறிப்பாக அவரது தாயை நீங்கள் விரும்பவில்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்... அது ஆண்களுக்கு உண்மையிலேயே உள்ளூற கோபத்தை ஏற்படுத்தும். நம் பெற்றோர் என்று வரும்போது, நாம் அனைவரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவது என்பது பொதுவான ஒன்று தான். அவரது பெற்றோருடன் ஆரோக்கியமான பேச்சில் ஈடுபடுங்கள். சில நேரங்களில் அவரது தாயின் கருத்துக்களால் உங்கள் மனம் புண்படலாம்; இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதை காரணம் காட்டி கோவப்பட்டு சண்டைபோடுவதற்கு பதிலாக, இருவரும் பொறுமையாகப் பேசித் தீர்த்து கொள்வது தான் நல்லது. அவர், அவரது பெற்றோருடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளைப் பற்றி விவாதிப்பது இயல்பு; ஆனால், அவர்களைப் பற்றி புகார் செய்யும்போது நீங்கள் அமைதியாக இருப்பது தான் நல்லது. ஏனெனில் நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறினால் அது அவர்களுக்கு தவறாக தெரியலாம்.
நீங்கள் உங்கள் காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் சிறிய விஷயங்கள் தான் ஓர் நல்லஆரோக்கியமான உறவுகளுக்கு வழி வகுக்கிறது. அது உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வலுவான நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், உங்களின் நெருங்கிய நண்பர் தனது ஆழ்ந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதை பற்றி நீங்கள் உங்கள் காதலனுடன் கிசுகிசுக்க முடிவு செய்வது நல்ல விஷயம் அல்ல. அவ்வாறு செய்வது உங்கள் நண்பரின் நம்பிக்கையை மீறுவதாகும். உங்கள் காதலனை நீங்கள் நம்புவது சரி தான். ஆனால், அதற்காக உங்கள் நண்பரின் நம்பிக்கையை நீங்கள் உடைக்க நினைப்பது தவறு.
உங்கள் காதலனின் செலவுகள் பற்றி பேசுவதை தவிருங்கள், பணம் வரவு செலவு பற்றியெல்லாம் பேசாதீர்கள். அது எப்போதிருந்தாலும் சிக்கல் தான். ஒரு சரியான உறவு என்பது, இருவரும் ஒரே பாதையில் நடப்பது தான்; மற்றும் இருவரும் ஒரே பக்கத்தில் இருப்பது. ஆனால், உங்கள் காதலனின் செலவுகளைப் பற்றி விவாதிப்பது நல்ல யோசனையாக இருக்காது.
உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதை தவிருங்கள். ஒரு நல்ல காரணத்திற்காக, பழைய விஷயங்களை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. அவரது முன்னாள் காதலி, உங்களின் மோசமான கவலையாக இருக்கலாம். ஆனால், அவரது பேஷன் சென்ஸ் அல்லது அவரது தோற்றங்களைப் பற்றி விவாதிப்பது, உங்களை உங்கள் காதலனின் பார்வையில் கொஞ்சம் குறைத்து எடை போடா வழிவகுக்கும். மேலும், உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை மாற்றிவிடும். உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதனால், நீங்கள் இருவரும் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உறவின் வளர்ச்சியை தடுக்க நீங்களே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறீர்கள்.
குளிர்காலத்தில் நம் தோல் மற்றும் முடி ஆகியவற்றைப் பாதுகாக்க சில முயற்சிகளை நாம் செய்யவேண்டியுள்ளது. இந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
குளிர்காலத்தில் நம் தோல் மற்றும் முடி ஆகியவற்றைப் பாதுகாக்க சில முயற்சிகளை நாம் செய்யவேண்டியுள்ளது. பெரும்பாலானோருக்குக் குளிர்காலத்தில் சருமம் வறண்டு, அரிப்பு எடுக்கும். குளிர்காலத்தில் சருமம் பாதிப்படைவதைத் தவிர்ப்பதற்கு வைட்டமின் இ எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதில் சில செயற்கை மற்றும் வேதிப்பொருள்களும் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்பூச்சு தவிர, வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
வைட்டமின் இ சத்துக்கு நிலையற்ற அணுக்களான ஃப்ரீ ராடிகல்ஸை எதிர்த்துப் போரிடும் இயல்பு கொண்டது. ஃப்ரீ ராடிகல்ஸ் உடலின் செல்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. சருமத்திற்கு வயதான தோற்றம், வறட்சி, கரும்புள்ளிகள் இவை தோன்றுவதற்கு ஃப்ரீ ராடிகல்ஸ் காரணமாகின்றன. வைட்டமின் இ, அந்த ஃப்ரீ ராடிகல்ஸின் செயல்பாட்டுக்குச் சருமத்தைப் பாதுகாக்கிறது..
5 பாதாம் பருப்புகளை இரவு நீரில் ஊற வைத்து காலையில் அவற்றைத் தோல் உறித்து சாப்பிட வேண்டும். காலை டீ அருந்தும்போது அல்லது காலை உணவுடன் இவற்றைச் சாப்பிட்டால் உடலுக்கு வைட்டமின் இ சத்து கிடைக்கும். குளிர்கால தொல்லைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்..
பசலைக் கீரையைப் பயன்படுத்தி காலையில் சாப்பிடக்கூடிய பல உணவுகளைச் சமைக்கலாம். பசலை கீரையை நறுக்கி அல்லது அவித்து முட்டையுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். பசலைக் கீரை மற்றும் பனீரை சாண்ட்விச்சின் உள்ளே வைத்துச் சாப்பிடலாம். ஏதாவது ஒரு வகையில் இக்கீரையைக் காலை உணவில் சேர்த்துச் சாப்பிடுவது பலன் தரும்..
அவகாடோ பழத்தை மசித்து முட்டை, இறைச்சி அல்லது வேறு காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். அவகாடோ பழத்தைக் காலை உணவுடன் சேர்க்கும்போது உணவும் அழகு பெறும். வைட்டமின் இ சத்து உடலில் சேர்ந்து சருமத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்..
சூரியகாந்தி விதைகளில் அதிக அளவு வைட்டமின் இ சத்து உள்ளது. சூரியகாந்தி விதையை வறுத்து தின்பண்டமாகச் சாப்பிடலாம். காலையில் தேநீர் அருந்தும்போது சாப்பிடலாம் அல்லது காலை உணவாக ஓட்மீல்ஸ் போன்றவை சாப்பிடும்போது அதனுடன் சேர்த்துச் சாப்பிடலாம்..
பீநட் பட்டரை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். வேர்க்கடலையை காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பீநட் பட்டரை பானங்களுடன் சேர்த்து அருந்தலாம். வைட்டமின் இ சத்து உடம்பில் சேர்ந்தால் குளிர்காலத்தில் கூந்தல் மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்..
வைட்டமின் இ சத்துக்கு நிலையற்ற அணுக்களான ஃப்ரீ ராடிகல்ஸை எதிர்த்துப் போரிடும் இயல்பு கொண்டது. ஃப்ரீ ராடிகல்ஸ் உடலின் செல்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. சருமத்திற்கு வயதான தோற்றம், வறட்சி, கரும்புள்ளிகள் இவை தோன்றுவதற்கு ஃப்ரீ ராடிகல்ஸ் காரணமாகின்றன. வைட்டமின் இ, அந்த ஃப்ரீ ராடிகல்ஸின் செயல்பாட்டுக்குச் சருமத்தைப் பாதுகாக்கிறது..
5 பாதாம் பருப்புகளை இரவு நீரில் ஊற வைத்து காலையில் அவற்றைத் தோல் உறித்து சாப்பிட வேண்டும். காலை டீ அருந்தும்போது அல்லது காலை உணவுடன் இவற்றைச் சாப்பிட்டால் உடலுக்கு வைட்டமின் இ சத்து கிடைக்கும். குளிர்கால தொல்லைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்..
பசலைக் கீரையைப் பயன்படுத்தி காலையில் சாப்பிடக்கூடிய பல உணவுகளைச் சமைக்கலாம். பசலை கீரையை நறுக்கி அல்லது அவித்து முட்டையுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். பசலைக் கீரை மற்றும் பனீரை சாண்ட்விச்சின் உள்ளே வைத்துச் சாப்பிடலாம். ஏதாவது ஒரு வகையில் இக்கீரையைக் காலை உணவில் சேர்த்துச் சாப்பிடுவது பலன் தரும்..
அவகாடோ பழத்தை மசித்து முட்டை, இறைச்சி அல்லது வேறு காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். அவகாடோ பழத்தைக் காலை உணவுடன் சேர்க்கும்போது உணவும் அழகு பெறும். வைட்டமின் இ சத்து உடலில் சேர்ந்து சருமத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்..
சூரியகாந்தி விதைகளில் அதிக அளவு வைட்டமின் இ சத்து உள்ளது. சூரியகாந்தி விதையை வறுத்து தின்பண்டமாகச் சாப்பிடலாம். காலையில் தேநீர் அருந்தும்போது சாப்பிடலாம் அல்லது காலை உணவாக ஓட்மீல்ஸ் போன்றவை சாப்பிடும்போது அதனுடன் சேர்த்துச் சாப்பிடலாம்..
பீநட் பட்டரை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். வேர்க்கடலையை காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பீநட் பட்டரை பானங்களுடன் சேர்த்து அருந்தலாம். வைட்டமின் இ சத்து உடம்பில் சேர்ந்தால் குளிர்காலத்தில் கூந்தல் மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்..
கொத்தமல்லி தோசை, வெங்காய தோசை, சிக்கன் கறி தோசை... என விதமான தோசைகள் உள்ளது. தக்காளியில் கூட சுவையான மொறு மொறு தோசை செய்யலாம்.
தேவையான பொருள்கள் :
தக்காளி - 3
கேழ்வரகு மாவு - 250 கிராம்
வெங்காயம் - 1
இட்லி மாவு - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் கேழ்வரகு மாவு, தக்காளி, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி மாவில் அரைத்த கலவையை தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெங்காயத்தையும் மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
தக்காளி - 3
கேழ்வரகு மாவு - 250 கிராம்
வெங்காயம் - 1
இட்லி மாவு - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் கேழ்வரகு மாவு, தக்காளி, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி மாவில் அரைத்த கலவையை தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெங்காயத்தையும் மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் மாவை ஊற்றி பொன்னிறமாக வரும் வேளையில் தோசையை திருப்பி எடுத்தால் சுவையான மொறு மொறு கேழ்வரகு தக்காளி தோசை தயார்..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முதல் மூணு மாசத்தில் சரியான உணவு மூலமே கர்ப்பிணிகள் தங்களையும் வயிற்றில் இருக்கும் கருவையும் பாதுகாக்க முடியும். இந்த முக்கிய காலங்களில் கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
ஒரு பெண் கர்ப்பமான முதல் மூன்று மாதம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த மாதங்களில் தான் பெரும்பாலும் கருச்சிதைவு உண்டாகிறது. அதே போல் இந்த மாதங்களில் தான் கருவின் வளர்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. கருவின் வளர்ச்சியில் அடித்தளமான இந்த காலம் கர்ப்பிணிகள் தங்களை வலிமையோடு வைத்திருக்க வேண்டிய காலமும் கூட.
இப்போது உடலுக்கு ஆற்றலும் அதிக ஊட்டச்சத்தும் நிறைவாக தேவை. இந்த நேரத்தில் சரியான உணவு மூலமே கர்ப்பிணிகள் தங்களையும் வயிற்றில் இருக்கும் கருவையும் பாதுகாக்க முடியும். இந்த முக்கிய காலங்களில் கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
கீரைகள்
வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவருக்குமே இது மிகவும் தேவையானது. அதிலும் கருவை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு அதிகம் தேவை. கீரைகள் வைட்டமின் பி என்னும் ஃபோலிக் அமிலம் நிறைந்தவை. ஒரு பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் உணவில் சேர்க்க வேண்டிய முதல் பொருள் கீரையாகத்தான இருக்க வேண்டும். கீரையில் நிறைவாக இருக்கும் ஃபோலிக் அமிலமானது கருவின் மூளை மற்றும் முதுகெலும்பு தொடர்பான நரம்புக் குழாய் குறைபாடுகள் அல்லது கருவின் பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது. தினம் ஒரு கீரையாக முருங்கைக்கீரை, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி என்று வகைவகையாக எடுத்துகொள்ளுங்கள். ஒரு கப் அளவு போதுமானது. கீரையை சூப் ஆக்கியும் எடுத்துகொள்ளலாம். மிளகு சேர்ப்பதால் குமட்டல் உணர்வும் சற்று குறையகூடும்.
சிட்ரஸ் பழங்கள்
இதை சொல்லிதான் எடுக்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் கர்ப்பிணி குமட்டலை தடுக்க சிட்ரஸ் பழங்களை தான் விரும்புகிறார்கள். சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி கொண்டவை. தினமும் ஒவ்வொரு நாளும் 1 சிட்ரஸ் பழத்தை எடுத்துகொள்ளுங்கள். இதைசாறாக்கி குடிக்க விரும்பினால் தினம் 1 கப் அளவு எடுக்க வேண்டும். ஏனெனில் சாறுகளில் கலோரிகள் அதிகம், நார்ச்சத்து குறைவு என்பதால் அளவை அதிகரிக்க வேண்டாம். எலுமிச்சை பழம், ஆரஞ்சு,நெல்லிக்காய் போன்றவை எடுத்துகொள்ளலாம். இது வைட்டமின் சி நிறைந்தது என்பதால் எதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகரிக்க கூடும்.
கொட்டைகள்
நட்ஸ் வகைகள் கர்ப்பகாலம் முழுமையுமே தேவை. அளவாக இதை எடுத்துகொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யலாம். கருவுற்ற முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிக்கு புரதம் அவசியம். ஒவ்வொரு நாளும் 60 கிராம் அல்லது அதற்கு மேல் புரதம் தேவை என்று அறிவுறுத்தப்படுகிறது. அக்ரூட், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டைகளில் ஆரோக்கியமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதங்கள் உள்ளது. கர்ப்பிணிகள் கொட்டையை சாப்பிடுவதன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஒவ்வாமையை தடுக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தயிர்
கர்ப்பிணிகள் தயிர், மோர் சாப்பிட்டால் குளுமை வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் தயிர் கால்சியத்தின் சிறந்த ஆதாரம். கர்ப்பிணிக்கு கால்சியம் குறைபாடு இருக்கும் போது வயிற்றில் வளரும் கருவுக்கு கால்சியம் தேவை என்னும் போது அது கர்ப்பீயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சப்படுகிறது. தினம் ஒரு கப் தயிர் சேர்ப்பதன் மூலம் கருவின் எலும்புகள் வலுவாக வைத்திருக்க முடியும். குழந்தை வளர வளர குழந்தைக்கு வேண்டிய கால்சியம் பற்றாக்குறையில்லாமல் கிடைக்கும். உறுதியான எலும்புகளோடு குழந்தை வளர கருவுற்ற தொடக்கத்தில் ஒரு கப் தயிர் அவசியம் எடுத்துகொள்ளுங்கள்.
பீன்ஸ் வகைகள்
கர்ப்பிணி முதல் மற்றும் மூன்றாம் ட்ரை மெஸ்டர் காலங்களில் அதிகமாக மலச்சிக்கலை சந்திக்கிறார்கள். இந்த காலங்களில் அவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து உணவில் பீன்ஸ் சிறந்த தேர்வு. இது கர்ப்பிணிக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குவதோடு மலச்சிக்கலையும் வராமல் செய்கிறது. பீன்ஸ் வகைகள் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க செய்யும். கர்ப்பிணிக்கு மலச்சிக்கல் கவனிக்காத போது அது மூலநோய் வரை உண்டாக்கிவிடும். மேலும் மலக்குடல் பகுதியில் இருக்கும் நரம்புகள் வீங்குவதால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்க செய்யும். அதனால் உணவில் ஒரு வேளை பீன்ஸ் வகைகளை சேர்ப்பது நல்லது.
முட்டை
கர்ப்பிணி அசைவப்பிரியராக இருந்தால் முட்டையை அவ்வபோது உணவில் சேர்க்க வேண்டும். முட்டை கர்ப்பிணிக்கு வேண்டிய புரத அளவை பூர்த்தி செய்கிறது. இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியமும் உள்ளது. இதனால் குழந்தையின் எலும்புகள் உறுதியாக வைத்திருக்க உதவும். கருவுற்ற காலத்தில் எல்லா உணவுகளுமே ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம் சில உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி சேர்ப்பது மேலும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
இப்போது உடலுக்கு ஆற்றலும் அதிக ஊட்டச்சத்தும் நிறைவாக தேவை. இந்த நேரத்தில் சரியான உணவு மூலமே கர்ப்பிணிகள் தங்களையும் வயிற்றில் இருக்கும் கருவையும் பாதுகாக்க முடியும். இந்த முக்கிய காலங்களில் கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
கீரைகள்
வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவருக்குமே இது மிகவும் தேவையானது. அதிலும் கருவை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு அதிகம் தேவை. கீரைகள் வைட்டமின் பி என்னும் ஃபோலிக் அமிலம் நிறைந்தவை. ஒரு பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் உணவில் சேர்க்க வேண்டிய முதல் பொருள் கீரையாகத்தான இருக்க வேண்டும். கீரையில் நிறைவாக இருக்கும் ஃபோலிக் அமிலமானது கருவின் மூளை மற்றும் முதுகெலும்பு தொடர்பான நரம்புக் குழாய் குறைபாடுகள் அல்லது கருவின் பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது. தினம் ஒரு கீரையாக முருங்கைக்கீரை, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி என்று வகைவகையாக எடுத்துகொள்ளுங்கள். ஒரு கப் அளவு போதுமானது. கீரையை சூப் ஆக்கியும் எடுத்துகொள்ளலாம். மிளகு சேர்ப்பதால் குமட்டல் உணர்வும் சற்று குறையகூடும்.
சிட்ரஸ் பழங்கள்
இதை சொல்லிதான் எடுக்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் கர்ப்பிணி குமட்டலை தடுக்க சிட்ரஸ் பழங்களை தான் விரும்புகிறார்கள். சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி கொண்டவை. தினமும் ஒவ்வொரு நாளும் 1 சிட்ரஸ் பழத்தை எடுத்துகொள்ளுங்கள். இதைசாறாக்கி குடிக்க விரும்பினால் தினம் 1 கப் அளவு எடுக்க வேண்டும். ஏனெனில் சாறுகளில் கலோரிகள் அதிகம், நார்ச்சத்து குறைவு என்பதால் அளவை அதிகரிக்க வேண்டாம். எலுமிச்சை பழம், ஆரஞ்சு,நெல்லிக்காய் போன்றவை எடுத்துகொள்ளலாம். இது வைட்டமின் சி நிறைந்தது என்பதால் எதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகரிக்க கூடும்.
கொட்டைகள்
நட்ஸ் வகைகள் கர்ப்பகாலம் முழுமையுமே தேவை. அளவாக இதை எடுத்துகொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யலாம். கருவுற்ற முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிக்கு புரதம் அவசியம். ஒவ்வொரு நாளும் 60 கிராம் அல்லது அதற்கு மேல் புரதம் தேவை என்று அறிவுறுத்தப்படுகிறது. அக்ரூட், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டைகளில் ஆரோக்கியமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதங்கள் உள்ளது. கர்ப்பிணிகள் கொட்டையை சாப்பிடுவதன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஒவ்வாமையை தடுக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தயிர்
கர்ப்பிணிகள் தயிர், மோர் சாப்பிட்டால் குளுமை வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் தயிர் கால்சியத்தின் சிறந்த ஆதாரம். கர்ப்பிணிக்கு கால்சியம் குறைபாடு இருக்கும் போது வயிற்றில் வளரும் கருவுக்கு கால்சியம் தேவை என்னும் போது அது கர்ப்பீயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சப்படுகிறது. தினம் ஒரு கப் தயிர் சேர்ப்பதன் மூலம் கருவின் எலும்புகள் வலுவாக வைத்திருக்க முடியும். குழந்தை வளர வளர குழந்தைக்கு வேண்டிய கால்சியம் பற்றாக்குறையில்லாமல் கிடைக்கும். உறுதியான எலும்புகளோடு குழந்தை வளர கருவுற்ற தொடக்கத்தில் ஒரு கப் தயிர் அவசியம் எடுத்துகொள்ளுங்கள்.
பீன்ஸ் வகைகள்
கர்ப்பிணி முதல் மற்றும் மூன்றாம் ட்ரை மெஸ்டர் காலங்களில் அதிகமாக மலச்சிக்கலை சந்திக்கிறார்கள். இந்த காலங்களில் அவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து உணவில் பீன்ஸ் சிறந்த தேர்வு. இது கர்ப்பிணிக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குவதோடு மலச்சிக்கலையும் வராமல் செய்கிறது. பீன்ஸ் வகைகள் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க செய்யும். கர்ப்பிணிக்கு மலச்சிக்கல் கவனிக்காத போது அது மூலநோய் வரை உண்டாக்கிவிடும். மேலும் மலக்குடல் பகுதியில் இருக்கும் நரம்புகள் வீங்குவதால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்க செய்யும். அதனால் உணவில் ஒரு வேளை பீன்ஸ் வகைகளை சேர்ப்பது நல்லது.
முட்டை
கர்ப்பிணி அசைவப்பிரியராக இருந்தால் முட்டையை அவ்வபோது உணவில் சேர்க்க வேண்டும். முட்டை கர்ப்பிணிக்கு வேண்டிய புரத அளவை பூர்த்தி செய்கிறது. இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியமும் உள்ளது. இதனால் குழந்தையின் எலும்புகள் உறுதியாக வைத்திருக்க உதவும். கருவுற்ற காலத்தில் எல்லா உணவுகளுமே ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம் சில உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி சேர்ப்பது மேலும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.






