என் மலர்
ஆரோக்கியம்
அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும்.
மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' என்று அழைக்கிறார்கள்.
சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டு உள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியில் இருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்கு தேவையான வெப்பநிலைக்கு மாற்றி உடலுக்குள் அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.
மூக்கு பார்ப்பதற்கு பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. இதன் ஆரம்பத்தில், முகத்தின் பல பகுதிகளில் இருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா' என்று பெயர். இது ஒரு தொட்டால் சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்றும் சொல்வார்கள். மூக்கில் இருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீத காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.
குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்த கசிவு ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கில் இருந்து ரத்தம் வடியலாம்.
சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டு உள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியில் இருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்கு தேவையான வெப்பநிலைக்கு மாற்றி உடலுக்குள் அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.
மூக்கு பார்ப்பதற்கு பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. இதன் ஆரம்பத்தில், முகத்தின் பல பகுதிகளில் இருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா' என்று பெயர். இது ஒரு தொட்டால் சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்றும் சொல்வார்கள். மூக்கில் இருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீத காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.
குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்த கசிவு ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கில் இருந்து ரத்தம் வடியலாம்.
உணவு விஷயங்களில் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்.
துரித உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது, வேகமாக சாப்பிடுவது, உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்குவது போன்றவை அசிடிட்டி பிரச்சினை ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். உணவு விஷயங்களில் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம். முதலில் உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும். மூன்று வேளை உணவையும் சீரான இடைவெளியில் சாப்பிட வேண்டும். ஒருபோதும் அதிக இடைவெளி விட்டு சாப்பிடக்கூடாது.
உலர் திராட்சை அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க உதவும். உலர்திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு பின்பு ஊற வைத்த உலர்திராட்சையை மென்று சாப்பிடலாம். பனங்கற்கண்டும் அசிடிட்டியை போக்கும்தன்மை கொண்டது. இயற்கையாகவே உடலில் அமிலத்தன்மையை சமநிலையில் பராமரிப்பதற்கு பனங்கற்கண்டு உதவும்.
கற்கண்டு நீரை பருகிவந்தால் உடலில் நீர்ச்சத்து சீராக பராமரிக்கப்படும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டுவையும், சிறிது ரோஜா இதழ்களையும் கலந்து பருகலாம். அசிடிட்டி மற்றும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் இரவு சாப்பிட்டு முடித்ததும் கற்கண்டு நீரை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
உலர் திராட்சை அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க உதவும். உலர்திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு பின்பு ஊற வைத்த உலர்திராட்சையை மென்று சாப்பிடலாம். பனங்கற்கண்டும் அசிடிட்டியை போக்கும்தன்மை கொண்டது. இயற்கையாகவே உடலில் அமிலத்தன்மையை சமநிலையில் பராமரிப்பதற்கு பனங்கற்கண்டு உதவும்.
கற்கண்டு நீரை பருகிவந்தால் உடலில் நீர்ச்சத்து சீராக பராமரிக்கப்படும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டுவையும், சிறிது ரோஜா இதழ்களையும் கலந்து பருகலாம். அசிடிட்டி மற்றும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் இரவு சாப்பிட்டு முடித்ததும் கற்கண்டு நீரை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கை பல்வேறு விதங்களில் பெண்களிடம் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதும் இந்த சர்வே மூலம் தெரியவந்திருக்கிறது.
வீடுகளில் பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் இப்போதும் ஆண்களிடமே இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் குடும்பத்தில் எடுக்கப்படும் முக்கியமான முடிவுகளில் தங்கள் கருத்துக்களுக்கு கணவர் மதிப்பளிப்பதாக 70 சதவீத பெண்கள், சமீபத்திய சர்வே ஒன்றில் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் குடும்ப நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பு தங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பது கவலைதருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை பல்வேறு விதங்களில் பெண்களிடம் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதும் இந்த சர்வே மூலம் தெரியவந்திருக்கிறது.
‘திருமணத்திற்கு முன்பே காதல் அனுபவம் உண்டுமா?’ என்ற கேள்வியும் இந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. முன்பு பெண்களிடம் இந்த கேள்வியை கேட்டால் ‘பதிலளிக்க விரும்புவதில்லை’ என்று கூறி நழுவிவிடுவார்கள். இப்போது பெண்கள் அந்த கேள்விக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.
பிரபல நிறுவனம் ஒன்று எடுத்து வெளியிட்டிருக்கும் இந்த சர்வேயில், 38 சதவீத பெண்கள் ‘தங்களுக்கு காதல் அனுபவம் உண்டு’ என்று சம்மதித்திருக்கிறார்கள். இதை கணவரிடம் சொன்ன பெண்களில் 88 சதவீதத்தினருக்கு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கிறது. அவர்கள் ‘கணவர் சண்டைபோடும் போதெல்லாம் அதையே கூறி தங்களை குற்றவாளி போன்று கருதுவதாக’ கூறியிருக்கிறார்கள். ‘அதனால் பெண்கள் யாரும் தங்கள் பழைய காதல் அனுபவங்களை கணவரிடம் கூறக்கூடாது’ என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
‘கணவர் தங்கள் செல்போனை பரிசோதிப்பதுண்டு’ என்பது 57 சதவீத பெண்களின் ஆதங்கமாக இருக்கிறது. அதில் 32 சதவீத பெண்கள் ‘அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்றும், தங்களை பற்றிய எல்லா விஷயங்களையும் கணவர் புரிந்துகொள்ள அது உதவும் என்பதால் கண்டுகொள்வதில்லை என்றும்’ கூறியிருக்கிறார்கள்.
‘உங்கள் மனைவிக்கு பிரச்சினைக்குரிய விதத்தில் இன்னொரு ஆணுடன் தொடர்பு இருந்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, 80 சதவீத ஆண்கள் ‘மனைவியை விவாகரத்து செய்துவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார்கள். இதே விஷயத்தை பெண்களிடம் கேட்டபோது, 90 சதவீத பெண்கள் ‘கணவருக்கு அப்படி ஒரு தொடர்பு இருந்தாலும் அவரை திருத்த முயற்சிப்போம்’ என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் ‘தாம்பத்ய திருப்தி’ விஷயத்தில் பெண்களின் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தங்களை திருப்திப்படுத்தும் பொறுப்பு கணவரை சார்ந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ‘திருப்தி குறைபாடு ஏற்பட்டால் கணவரிடம் அதை சுட்டிக்காட்டுவதாக’ 32 சதவீத பெண்கள் அதிரடி காட்டுகிறார்கள். ‘தாம்பத்ய உறவில் தாங்களே ஆதிக்கம் செலுத்துவதாக’ 15 சதவீத பெண்கள் பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மகிழ்ச்சிக்குரியது என்று செக்ஸாலஜிஸ்டுகள் குறிப்பிடுகிறார்கள். ‘இப்போது பாலியல் அறிவு பெண்களிடம் அதிகரித்திருக்கிறது. அது அவர்களிடம் மிகுந்த விழிப்புணர்வை தோற்றுவித்துள்ளது. ஆண்கள் இதில் எதை எல்லாம் அறிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் விரும்புகிறார்களோ அவைகளில் எல்லாம் பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். திருப்தி, உச்சகட்டம் போன்றவைகளை பற்றி அவர்கள் கணவருடனும் உரையாடுகிறார்கள். இது வரவேற்கத் தகுந்தது. சமூகத்தில் இது நல்ல மாற்றங்களை உருவாக்கும்’ என்று கூறுகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், குழந்தை பிறந்த பின்பு பெரும்பாலான பெண்களிடம் தாம்பத்ய ஆர்வம் குறைந்து வருவதை இந்த சர்வே சுட்டிக்காட்டுகிறது. ‘குழந்தை பிறந்த பின்பு இயல்பாகவே தாம்பத்ய உறவின் மீதான ஆர்வம் குறைந்துவிடுவதாக’ 62 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தகுந்தது.
‘திருமணத்திற்கு முன்பே காதல் அனுபவம் உண்டுமா?’ என்ற கேள்வியும் இந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. முன்பு பெண்களிடம் இந்த கேள்வியை கேட்டால் ‘பதிலளிக்க விரும்புவதில்லை’ என்று கூறி நழுவிவிடுவார்கள். இப்போது பெண்கள் அந்த கேள்விக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.
பிரபல நிறுவனம் ஒன்று எடுத்து வெளியிட்டிருக்கும் இந்த சர்வேயில், 38 சதவீத பெண்கள் ‘தங்களுக்கு காதல் அனுபவம் உண்டு’ என்று சம்மதித்திருக்கிறார்கள். இதை கணவரிடம் சொன்ன பெண்களில் 88 சதவீதத்தினருக்கு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கிறது. அவர்கள் ‘கணவர் சண்டைபோடும் போதெல்லாம் அதையே கூறி தங்களை குற்றவாளி போன்று கருதுவதாக’ கூறியிருக்கிறார்கள். ‘அதனால் பெண்கள் யாரும் தங்கள் பழைய காதல் அனுபவங்களை கணவரிடம் கூறக்கூடாது’ என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
‘கணவர் தங்கள் செல்போனை பரிசோதிப்பதுண்டு’ என்பது 57 சதவீத பெண்களின் ஆதங்கமாக இருக்கிறது. அதில் 32 சதவீத பெண்கள் ‘அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்றும், தங்களை பற்றிய எல்லா விஷயங்களையும் கணவர் புரிந்துகொள்ள அது உதவும் என்பதால் கண்டுகொள்வதில்லை என்றும்’ கூறியிருக்கிறார்கள்.
‘உங்கள் மனைவிக்கு பிரச்சினைக்குரிய விதத்தில் இன்னொரு ஆணுடன் தொடர்பு இருந்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, 80 சதவீத ஆண்கள் ‘மனைவியை விவாகரத்து செய்துவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார்கள். இதே விஷயத்தை பெண்களிடம் கேட்டபோது, 90 சதவீத பெண்கள் ‘கணவருக்கு அப்படி ஒரு தொடர்பு இருந்தாலும் அவரை திருத்த முயற்சிப்போம்’ என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் ‘தாம்பத்ய திருப்தி’ விஷயத்தில் பெண்களின் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தங்களை திருப்திப்படுத்தும் பொறுப்பு கணவரை சார்ந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ‘திருப்தி குறைபாடு ஏற்பட்டால் கணவரிடம் அதை சுட்டிக்காட்டுவதாக’ 32 சதவீத பெண்கள் அதிரடி காட்டுகிறார்கள். ‘தாம்பத்ய உறவில் தாங்களே ஆதிக்கம் செலுத்துவதாக’ 15 சதவீத பெண்கள் பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மகிழ்ச்சிக்குரியது என்று செக்ஸாலஜிஸ்டுகள் குறிப்பிடுகிறார்கள். ‘இப்போது பாலியல் அறிவு பெண்களிடம் அதிகரித்திருக்கிறது. அது அவர்களிடம் மிகுந்த விழிப்புணர்வை தோற்றுவித்துள்ளது. ஆண்கள் இதில் எதை எல்லாம் அறிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் விரும்புகிறார்களோ அவைகளில் எல்லாம் பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். திருப்தி, உச்சகட்டம் போன்றவைகளை பற்றி அவர்கள் கணவருடனும் உரையாடுகிறார்கள். இது வரவேற்கத் தகுந்தது. சமூகத்தில் இது நல்ல மாற்றங்களை உருவாக்கும்’ என்று கூறுகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், குழந்தை பிறந்த பின்பு பெரும்பாலான பெண்களிடம் தாம்பத்ய ஆர்வம் குறைந்து வருவதை இந்த சர்வே சுட்டிக்காட்டுகிறது. ‘குழந்தை பிறந்த பின்பு இயல்பாகவே தாம்பத்ய உறவின் மீதான ஆர்வம் குறைந்துவிடுவதாக’ 62 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தகுந்தது.
குளிர் காலத்தில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காது. இப்போது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதுதான் சரியான சரும பராமரிப்பு வழிமுறையாகும்.
குளிர் காலத்தில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காது. அதனால் இப்போது சருமம் வறண்டு போவது தவிர்க்கமுடியாதது. சருமத்தின் மேல் அடுக்கில் ஈரப்பதம் குறைவது, குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவுவது, சூடான தண்ணீரில் குளிப்பது, ஒவ்வாமை ஏற்படுவது, சோப்புகளை அதிகம் பயன்படுத்துவது போன்றவை வறண்ட சருமத்திற்கு காரணமாக இருக்கின்றன. அதனால் குளிர் காலத்தில் சருமத்தை பராமரிப்பதில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்போது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதுதான் சரியான சரும பராமரிப்பு வழிமுறையாகும்.
சருமத்தை உலரவிடாமல் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பார்ப்போம்!
* குளிர்காலத்தில் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம். சூடான நீரில் ஒரு கப் ஓட்ஸ் போட்டு கால் மணி நேரம் கழித்து அதை உடலில் பூசி, சிறிது நேரத்தில் கழுவவும் செய்யலாம். தினமும் ஒரு கப் தரமான பால் பருகலாம். சருமத்திற்கு கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம். இவை வறண்ட சருமத்திற்கு நிவாரணம் அளிக்க உதவுபவை. சருமத்தில் நீர்ச்சத்தையும், ஈரப்பதத்தையும் தக்கவைக்கவும் துணைபுரிபவை.
* குளிர்காலத்தில் அதிக நேரம் குளிக்க கூடாது. ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் குளித்துவிடவேண்டும். உடல் உள் உறுப்புகளை போலவே வெளிப்புற சருமத்திற்கும் போதுமான அளவு நீர் தேவை. அதிக நேரம் குளிப்பது சருமத்திற்கு ஏற்றதல்ல. குறிப்பாக குளிர்காலத்தில் சூடான நீரில் தினமும் குளிப்பது சருமத்திற்கு நல்லதல்ல. 15 நிமிடங்களைவிட கூடுதல் நேரம் குளித்தால், சருமத்தின் எண்ணெய் அடுக்கு பாதிப்புக்குள்ளாகும். அதனால் சருமம் ஈரப்பதத்தை இழக்க நேரிடும். சருமம் வறண்டால் எரிச்சலும் ஏற்படும். வெளிப்புற அடுக்கின் செல்களும் சேதமடையும். அதிக சூடும், குளிர்ச்சியும் இல்லாத நீரில் குளிப்பதுதான் சருமத்திற்கு ஏற்றது.
* குளித்த பின்பும், கை, கால்களை கழுவிய பிறகும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். சருமத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கவும் உதவும். மேலும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் திரவத்தை உறிஞ்சி சரும வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
* குளிர்காலத்திலும், கோடைகாலத்திலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால் குளிர்காலத்தில் சூரியன் பூமிக்கு நெருக்கமாகவும் அதன் கதிர்கள் இன்னும் வலுவாகவும் இருக்கும். சன்ஸ்கிரீன் உபயோகிப்பதன் மூலம் சூரிய கதிர்வீச்சுகளால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தை தவிர்த்துவிடலாம்.
* இப்போது குளியல் சோப் உபயோகிக்கும் விஷயத்திலும் கவனம் தேவை. சருமத்திற்கு பொருத்தமான சோப்பை தேர்ந்தெடுக்காவிட்டால் இயற்கையாகவே ஈரப்பதம் வழங்கும் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்ற நிலை உருவாகிவிடும். இதனால் சரும வறட்சி, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
* சருமத்தின் இயற்கையான அழகை பேணுவதற்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதுதான் சிறந்த வழியாகும். திரவ உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமத்திற்கு மென்மையையும், பிரகாசத்தையும் அளிக்கும்.
* கேரட், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவை சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடியவை. அவற்றை குளிர்காலத்தில் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சருமத்தை உலரவிடாமல் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பார்ப்போம்!
* குளிர்காலத்தில் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம். சூடான நீரில் ஒரு கப் ஓட்ஸ் போட்டு கால் மணி நேரம் கழித்து அதை உடலில் பூசி, சிறிது நேரத்தில் கழுவவும் செய்யலாம். தினமும் ஒரு கப் தரமான பால் பருகலாம். சருமத்திற்கு கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம். இவை வறண்ட சருமத்திற்கு நிவாரணம் அளிக்க உதவுபவை. சருமத்தில் நீர்ச்சத்தையும், ஈரப்பதத்தையும் தக்கவைக்கவும் துணைபுரிபவை.
* குளிர்காலத்தில் அதிக நேரம் குளிக்க கூடாது. ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் குளித்துவிடவேண்டும். உடல் உள் உறுப்புகளை போலவே வெளிப்புற சருமத்திற்கும் போதுமான அளவு நீர் தேவை. அதிக நேரம் குளிப்பது சருமத்திற்கு ஏற்றதல்ல. குறிப்பாக குளிர்காலத்தில் சூடான நீரில் தினமும் குளிப்பது சருமத்திற்கு நல்லதல்ல. 15 நிமிடங்களைவிட கூடுதல் நேரம் குளித்தால், சருமத்தின் எண்ணெய் அடுக்கு பாதிப்புக்குள்ளாகும். அதனால் சருமம் ஈரப்பதத்தை இழக்க நேரிடும். சருமம் வறண்டால் எரிச்சலும் ஏற்படும். வெளிப்புற அடுக்கின் செல்களும் சேதமடையும். அதிக சூடும், குளிர்ச்சியும் இல்லாத நீரில் குளிப்பதுதான் சருமத்திற்கு ஏற்றது.
* குளித்த பின்பும், கை, கால்களை கழுவிய பிறகும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். சருமத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கவும் உதவும். மேலும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் திரவத்தை உறிஞ்சி சரும வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
* குளிர்காலத்திலும், கோடைகாலத்திலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால் குளிர்காலத்தில் சூரியன் பூமிக்கு நெருக்கமாகவும் அதன் கதிர்கள் இன்னும் வலுவாகவும் இருக்கும். சன்ஸ்கிரீன் உபயோகிப்பதன் மூலம் சூரிய கதிர்வீச்சுகளால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தை தவிர்த்துவிடலாம்.
* இப்போது குளியல் சோப் உபயோகிக்கும் விஷயத்திலும் கவனம் தேவை. சருமத்திற்கு பொருத்தமான சோப்பை தேர்ந்தெடுக்காவிட்டால் இயற்கையாகவே ஈரப்பதம் வழங்கும் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்ற நிலை உருவாகிவிடும். இதனால் சரும வறட்சி, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
* சருமத்தின் இயற்கையான அழகை பேணுவதற்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதுதான் சிறந்த வழியாகும். திரவ உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமத்திற்கு மென்மையையும், பிரகாசத்தையும் அளிக்கும்.
* கேரட், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவை சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடியவை. அவற்றை குளிர்காலத்தில் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தக்காளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெள்ளரிக்காய், தக்காளியை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
வெள்ளரிக்காய் - 1/2 துண்டு,
செய்முறை :
தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.
பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
வெள்ளரிக்காய் - 1/2 துண்டு,
செய்முறை :
தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு: சாலட் செய்ய நாட்டுத்தக்காளி, ஹெப்பிரிட் தக்காளியைப் பயன்படுத்தாமல், பெங்களூர் தக்காளியை பயன்படுத்தினால் சாலட் புளிக்காது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளை கொசு கடித்தால் மென்மையான சருமம் வீக்கத்தையும், அரிப்பையும் அதிகமாக சந்திக்கும். இதை போக்க வீட்டில் இருக்கும் பொருள்களை அம்மாக்கள் பயன்படுத்தலாம்.
பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளை கொசு கடிக்கும் போது ஒவ்வாமை அல்லது தொற்றுகளுக்கு ஆட்படுகிறார்கள். குழந்தைக்கு கொசு கடிக்கும் போது சரும வீக்கம் இரண்டு நாட்கள் வரை இருக்க கூடும். இளஞ்சிவப்பு நிறத்தில் சருமம் தடித்திருக்கும். இதை போக்க வீட்டில் இருக்கும் பொருள்களை அம்மாக்கள் பயன்படுத்தலாம். எனினும் தீவிரம் அதிகமாக இருந்தால் கொசுக்களால் பரவும் நோயை தடுக்க மருத்துவ உதவி தேவைப்படலாம்.
குழந்தைகளுக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த நிலையில் இவை ரத்த நாளங்களை கட்டுப்படுத்த கூடும். இது ஒவ்வாமைக்கு எதிர்வினையாக செயல்படுவதோடு இது சருமத்தில் அரிப்பையும் போக்கும். ஐஸ்கட்டியை மெல்லிய துணியில் சுற்றி ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை கொசு கடித்து வீக்கமான சருமத்தில் ஒற்றி எடுக்கவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் போதும்.
க்ரீன் டீ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தின் வீக்கத்தை வேகமாக குறைக்கும். க்ரீன் டீ பேக் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருங்கள். அவை இலேசாக குளிர்ந்து போகும் போதே எடுத்து குழந்தைக்கு ஒத்தடம் கொடுக்கலாம். தினமும் 3 அல்லது நான்கு முறை வரை இப்படி செய்தால் போதுமானது.
அமிலத்தன்மை கொண்ட வினிகர் நச்சுத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது, இது கொசுக்கடி போன்று தேனிக்கள் போன்ற பூச்சிகளீருந்தும் சருமத்தை பாதுகாக்கிறது. வினிகர் அமிலத்தன்மை நிறைந்தது என்பதால் அதை சம அளவு நீரில் கலந்து சுத்தமான பருத்தி துணியால் துடைத்து எடுக்கவும். இரண்டு வேளை தடவினால் போதுமானது.
எலுமிச்சையில் தயாரிக்கப்படும் இந்த எலுமிச்சை தைலம் இயற்கை ஆண்டிஹிஸ்டமைன் என்று சொல்லலாம். இது சரும அரிப்பை நீக்க உதவுகிறது. எலுமிச்சை தைலம் இல்லையென்றால் எலுமிச்சை இலையை கசக்கி அதன் சாறைநீரில் கலந்து சருமத்தின் மீது நேரடியாக பூசவும். சருமத்துக்கு ஊறுவிளைவிக்காது என்றாலும் மென்மையான சருமம் என்பதால் நீங்கள் குழந்தையின் குளியல் தொட்டியில் ஒரு மூடி விட்டு சில நிமிடங்கள் கழித்து அந்த நீரில் குழந்தையை குளிப்பாட்டலாம்.
டீ ட்ரி ஆயிலில் உள்ள எண்ணெய்கள் ரசாயனங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கொல்வதால் இது கிருமிகளை வெளியேற்றுகிறது. இது சரும வீக்கத்தை குறைக்க செய்கிறது. இதன் வாடைக்கு கொசுக்கள் அருகில் வராது என்பதால் கொசு அதிகமாக இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் முன்கூட்டியே குழந்தைக்கு இதை தடவி விடுவது நல்லது.
குழந்தைகளுக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த நிலையில் இவை ரத்த நாளங்களை கட்டுப்படுத்த கூடும். இது ஒவ்வாமைக்கு எதிர்வினையாக செயல்படுவதோடு இது சருமத்தில் அரிப்பையும் போக்கும். ஐஸ்கட்டியை மெல்லிய துணியில் சுற்றி ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை கொசு கடித்து வீக்கமான சருமத்தில் ஒற்றி எடுக்கவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் போதும்.
க்ரீன் டீ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தின் வீக்கத்தை வேகமாக குறைக்கும். க்ரீன் டீ பேக் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருங்கள். அவை இலேசாக குளிர்ந்து போகும் போதே எடுத்து குழந்தைக்கு ஒத்தடம் கொடுக்கலாம். தினமும் 3 அல்லது நான்கு முறை வரை இப்படி செய்தால் போதுமானது.
அமிலத்தன்மை கொண்ட வினிகர் நச்சுத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது, இது கொசுக்கடி போன்று தேனிக்கள் போன்ற பூச்சிகளீருந்தும் சருமத்தை பாதுகாக்கிறது. வினிகர் அமிலத்தன்மை நிறைந்தது என்பதால் அதை சம அளவு நீரில் கலந்து சுத்தமான பருத்தி துணியால் துடைத்து எடுக்கவும். இரண்டு வேளை தடவினால் போதுமானது.
எலுமிச்சையில் தயாரிக்கப்படும் இந்த எலுமிச்சை தைலம் இயற்கை ஆண்டிஹிஸ்டமைன் என்று சொல்லலாம். இது சரும அரிப்பை நீக்க உதவுகிறது. எலுமிச்சை தைலம் இல்லையென்றால் எலுமிச்சை இலையை கசக்கி அதன் சாறைநீரில் கலந்து சருமத்தின் மீது நேரடியாக பூசவும். சருமத்துக்கு ஊறுவிளைவிக்காது என்றாலும் மென்மையான சருமம் என்பதால் நீங்கள் குழந்தையின் குளியல் தொட்டியில் ஒரு மூடி விட்டு சில நிமிடங்கள் கழித்து அந்த நீரில் குழந்தையை குளிப்பாட்டலாம்.
டீ ட்ரி ஆயிலில் உள்ள எண்ணெய்கள் ரசாயனங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கொல்வதால் இது கிருமிகளை வெளியேற்றுகிறது. இது சரும வீக்கத்தை குறைக்க செய்கிறது. இதன் வாடைக்கு கொசுக்கள் அருகில் வராது என்பதால் கொசு அதிகமாக இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் முன்கூட்டியே குழந்தைக்கு இதை தடவி விடுவது நல்லது.
பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை எந்த வகையான புற்றுநோய்கள் எதனால் இந்த நோய் வருகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை: மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய். உலக அளவில் கணக்கிட்டால் சுவாசப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பிடித்திருக்கிறது.
மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தன்மை கொண்டது என்று கருதப்படுகிறது. நெருங்கிய உறவினர்களில் யாருக்காவது வந்திருந்தாலும் அதே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். 12- வயதுக்கு முன்பு வயதுக்கு வந்துவிட்டாலும், 55-வயதுக்கு பின்பு மாதவிலக்கு நிலைத்துப்போனாலும் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நிலைத்த பின்பு உடல் எடை அதிகரிக்கும் பெண் களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசங்கள், மது போன்றவைகளை தவிர்ப்பது மார்பகபுற்று நோயை தடுக்கும். கர்ப்பத்தடை மாத்திரைகள், மாதவிலக்கு நாட்களை தள்ளிப்போடுவதற்காக உட்கொள்ளும் மாத்திரைகள், குழந்தையின்மைக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் ஹார்மோன் தன்மைகள் போன்றவை மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.
மார்பகங்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏதாவது தோன்றியிருந்தாலும், அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கியிருந்தாலும் கவனமாக இருங்கள். பிற்காலத்தில் ஒருவேளை அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.
கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் பகுதி, பெண்களின் பிறப்பு உறுப்பின் உள்பகுதியில் அமைந்திருக்கிறது. பெண்கள் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கடந்த பின்பு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். 30 வயதைக் கடந்த பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 65 முதல் 75 வயதுக்கு உள்பட்ட மூதாட்டிகள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியதில்லை.
பரிசோதனையில் பாதிப்பு இருப்ப தாக கண்டறிந்தால், அது முதல் நிலை அல்லது இரண்டாவது நிலையில் இருந்தால் 85 முதல் 95 சதவீத நோயாளிகளை குணப்படுத்தி விடலாம். அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
ஹுயூமன் பாபிலோமா என்ற ஒருவகை கிருமிகள்தான் இந்த நோய்க்கு காரணம். அவை கருப்பைவாய் திசுக்களை கடந்து சென்று, அந்த திசுக்களில் ஆபத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது திடீரென்று ஏற்படும் மாற்றமல்ல. பல வருடங்களாக நடப்பதாகும்.
இளம் பருவத்திலே பாலியல் தொடர்பில் ஈடுபடுகிற பெண்கள், இளம் வயதிலே பிரசவிக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
காலை உணவுடன் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்’’ என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
காலை உணவை நிறைய பேர் கடமைக்காக சாப்பிடுகிறார்கள். இரவு நேர தூக்கத்திற்கு பிறகு உடலுக்கும், மூளைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் காலை உணவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
காலை உணவில் போதுமான கார்போஹைட்ரேட் கொண்ட சமச்சீரான உணவுவகைகளை சாப்பிடுவது ரத்தத்தில் குளுக்கோஸ் சீராக இருப்பதை உறுதி செய்ய உதவும். காலை உணவு ஊட்டச்சத்து கொண்டதாக இல்லாவிட்டால் அதன் தாக்கம் குளுக்கோஸ் அளவில் வெளிப்பட்டு சோர்வையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். தெளிவில்லாத மன நிலையும் உண்டாகும்.
‘‘கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துகள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையாக காலை உணவு அமைந்திருக்க வேண்டும். காலை உணவுடன் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்’’ என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
பிரதான உணவாக கோதுமை, அரிசி, ஓட்ஸ், பார்லி போன்ற ஏதாவது ஒரு தானியத்தில் தயாரானதை எடுத்துக்கொள்ளலாம். அதோடு பழங்கள் அல்லது காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைவாக இருக்கின்றன. அந்தந்த பருவகாலத்தில் விளையும் பழங்களையும் சாப்பிடலாம். காலையில் சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் கழித்து பால் பொருட்களை சாப்பிடலாம். அதில் இருக்கும் கால்சியம் மற்றும் புரதம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். காலை உணவை தேர்ந்தெடுப்பதற்கு மெனக்கெடவேண்டியதில்லை.
நிறைய பேர் இட்லியைதான் விரும்பி சாப்பிடுவார்கள். அதனுடன் பருவ காலத்தில் கிடைக்கும் பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுபவர்கள், பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு ஆகியவற்றையும் சிறிதளவு உண்ணலாம். கோதுமை உணவு வகைகளை சாப்பிடுபவர்கள் ஒரு டம்ளர் பால் பருகுவது நல்லது. அதனுடன் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். காலை உணவாக பிரெட் சாப்பிடுபவர்கள் அதனுடன் வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், கேரட், கீரை போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு டம்ளர் மோரும் பருகலாம்.
இதுபோன்ற ஊட்டச்சத்து கொண்ட காலை உணவை சாப்பிடும் 20 முதல் 30 வயது கொண்ட இளைஞர்கள் இரவில் நன்றாக தூங்குவதும், காலையில் சோர்வின்றி உற்சாகமாக எழுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வாரத்திற்கு ஒரு முறை “டைட்னிங் பேஷியல்” செய்ய வேண்டும். டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.
உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைந்து முகம், கழுத்து, கைவிரல் பகுதிகளில் சுருக்கம் தோன்றும். முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வாரத்திற்கு ஒரு முறை “டைட்னிங் பேஷியல்” செய்ய வேண்டும். டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம். முட்டையின் வெள்ளைக் கரு, முல்தானிமிட்டி, தேன் மூன்றையும் கலந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தினாலே போதும்.
டைட்னிங் பேக்குகளும், டைட்னிங் மாஸ்க்குகளும் சரும சுருக்கங்களைப் போக்க உதவுகின்றன. சருமத்தின் அழகைப் பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை. முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு தினமும் பத்து டம்ளர் தண்ணீரும் குடித்தால் சருமம் வறண்டு சுருக்கம் தோன்றுவது தவிர்க்கப்படும்.
உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது.
தாத்தா-பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக உறுதியாகியுள்ளது.
வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டிகள் பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் சரியான நேரத்திற்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். அவர்களை விட அன்புடனும், அக்கறையுடனும் தாத்தா -பாட்டிகள் தங்கள் பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வார்கள். தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியமாக இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள்.
தாத்தா - பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். உறவுகளின் உன்னதத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பை கொடுப்பார்கள். குடும்ப சூழ்நிலை, பெற்றோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை தாத்தா-பாட்டிகள் குழந்தைகளுக்கு சொல்லி புரியவைப்பார்கள். பாசம், மரியாதை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களை அந்த குழந்தைகள் வளர்த்துக்கொள்வார்கள். மற்ற குழந்தைகளை விட புத்திசாலித் தனமாகவும், அறிவு முதிர்ச்சியுடனும் வளர்வார்கள்.
தாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் அறிந்துகொள்கிறார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தாத்தா-பாட்டிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட தனிமை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தை குழந்தைகளுக்கு எளிதாக தாத்தா-பாட்டிகள் புரியவைத் துவிடுவார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். நல்ல போதனைகளை கற்றுக் கொடுக்கும். அதன்படி ஒழுக்கம், சம்பிரதாயங்களை குழந்தைகள் கடைப்பிடிக்க தொடங்கி விடுவார்கள். சமூகத்தில் மற்றவர்கள் பாராட்டும் நபராகவும் வளர்வார்கள்.
வயதாகும்போது ஞாபகமறதி, மன சோர்வு போன்ற பாதிப்புக்கு நிறைய பேர் ஆளாகிறார்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த நோய்களெல்லாம் முதியவர்கள் தனிமையில் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இதனை பெற்றோர் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை தாத்தா - பாட்டியுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் தனிமை விலகி இனிமை நிலவும்.
இந்த கஷாயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்....
தேவையான பொருட்கள்
கிராம்பு - 10
வெண்ணெய் - கால் டீஸ்பூன்
பனை வெல்லம் - தேவையான அளவு
செய்முறை:
10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும்.
நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும்.
அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும்.
கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம்.
பலன்கள்: தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்னைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்....
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பக்கத்து வீட்டினரும் பாசம் காட்டினால்தான் உங்கள் வீட்டில் முழு மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் பக்கத்து வீட்டினருக்கு எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பக்கத்து வீட்டினரும் பாசம் காட்டினால்தான் உங்கள் வீட்டில் முழு மகிழ்ச்சி கிடைக்கும். அதை தவிர்த்து பக்கத்து வீட்டினரிடம் மோதிக்கொண்டே இருந்தால், இருக்கிற நிம்மதியையும் இழக்கவேண்டியதிருக்கும். எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் பக்கத்து வீட்டினரிடம் அன்பு செலுத்துங்கள். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால், அவராக வந்து உதவி கேட்டால் மட்டும் செய்தால் போதும் என்று காத்திருக்கவேண்டாம். அவருக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓடிப்போய் முதல் ஆளாக உதவுங்கள். நீங்கள் பக்கத்து வீட்டினருக்கு எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* பக்கத்து வீட்டுக்காரர் என்னதான் சகஜமாக பழக கூடியவராக இருந்தாலும் அடிக்கடி அவர் வீட்டில் போய் உட்கார்ந்துவிடாதீர்கள். உங்களுக்கு வேலை இல்லாவிட்டால் உங்கள் வீட்டோடு இருங்கள். மற்றவர்கள் வேலையை கெடுக்காதீர்கள்.
* பக்கத்து வீட்டினர் அவர்களது குடும்ப விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே செல்வதை தவிர்த்திடுங்கள். ஆலோசனை என்ற பெயரில் உங்கள் அனுபவங்களை எல்லாம் அள்ளி அவர்களது தலையில் கொட்டிவிடாதீர்கள்.
* ‘நேற்று வீடு பூட்டியிருந்ததே எங்கே போனீர்கள்?’ ‘உங்கள் வீட்டிற்கு நாலைந்து பேர் வந்தார்களே அவர்கள் யார்?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது. ‘நமது வீட்டை அவர் உளவு பார்ப்பது ஏன்?’ என்ற கேள்வி பக்கத்து வீட்டுக்காரருக்கு வந்துவிடும்.
* பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டை, சச்சரவு, பிரச்சினைகளை அரசல் புரசலாக கேட்டுவிட்டு அவர்களிடமே போய் அதை பற்றி விசாரிக்காதீர்கள். அவர்களாக கேட்டால் மட்டும் ஆலோசனை கூறுங்கள்.
* பக்கத்து வீட்டு பெண்மணி குண்டாக இருந்தாலும், சிறுமியோ சிறுவனோ குண்டாக இருந்தாலும் அதை சொல்லிக்காட்டவேண்டாம். அவர்கள் குண்டாக இருப்பது, ஏற்கனவே அவர்களுக்கு தெரியும். அதை நீங்களும் போய் சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் இல்லை.
* குறை இல்லாதவர்கள் யாரும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடமும் குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளை பற்றி பேசாமல், அவர்களது நிறைகளை பற்றி மட்டும் பேசுங்கள். பக்கத்து வீட்டுக்காரரை பற்றி அடுத்த வீட்டுக்காரரிடம் குறை சொல்லா தீர்கள். காலப்போக்கில் அந்த இரு வீட்டாருமே உங்களுக்கு எதிரியாகிவிடுவார்கள்.
* இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பு எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்வதும் அதிகரித்து வருகிறது. அப்படி யாராவது உங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தால் அவர்களைப் பற்றி தவறாக பேசிவிடாதீர்கள். அடுத்தவர்கள் அந்தரங்கத்தை பற்றி விவாதிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தைகளிடம் பக்கத்து வீட்டுக்காரர் அன்பு செலுத்துகிறார் என்பதற்காக, அடிக்கடி அவர்களிடம் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிடாதீர்கள். அது நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தொல்லையாகிவிடும்.
* உங்கள் வீட்டு நாய் அண்டை வீட்டிற்கு சென்று அசுத்தம் செய்துவிட்டால் அதை சுத்தம் செய்யும் பொறுப்பை நீங்கள் தான் ஏற்கவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
* பக்கத்து வீட்டுக்காரரின் சுபாவத்தை புரிந்து கொள்ளுங்கள். அவர் அளவோடு பேசுபவர் என்றால் நீங்களும் அந்த அளவை கடைப்பிடியுங்கள். வளவளவென அவரிடம் பேசி அவரை வருத்தப்படவைத்துவிடாதீர்கள்.
* பக்கத்து வீட்டினர் அனைவரும் நல்லவராக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவதில் தவறில்லை. அதற்கு முதலில் நீங்கள் நல்லவராக இருக்கவேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.






