search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஷாயம்"

    • முதுகுத்தண்டு சார்ந்த அழுத்தத்தால் வரக்கூடிய வலிகள்.
    • மூட்டுகள் அனைத்தையும் பலப்படுத்த உதவும் மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உண்டு.

    மூட்டுவலி.. ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உடலில் தோள்பட்டை, கை மூட்டு, கால் மூட்டு என்று உடலில் எங்கெல்லாம் மூட்டுகளின் இணைப்புகள் உள்ளனவோ அங்கு பலவீனமடையும் இடத்தில் மூட்டுகளில் வலியை உணரலாம்.

    முடக்குவாதம் சார்ந்த மூட்டுவலிகள், முதுகுத்தண்டு சார்ந்த அழுத்தத்தால் வரக்கூடிய வலிகள், குனிய முடியாமல் இருப்பது, நிமிர முடியாமல் இருப்பது, சற்று கனமாக இருந்தாலும் எடை தூக்க முடியாமல் இருப்பது என்று பல வலிகள் அனுபவிப்பது எல்லாமே மோசமான அசெளகரியம். இந்த மூட்டு வலிகளின் தீவிரம் குறைய மூட்டுகள் அனைத்தையும் பலப்படுத்த உதவும்

    மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உண்டு. அப்படியான மூலிகைகளை ஒன்றிணைத்து செய்யகூடிய சரக்கொன்றை கஷாயம் தயாரிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.

    சிற்றரத்தை சூரணம் - 2 கிராம்

    நெருஞ்சில் சூரணம் - 2 கிராம்

    ஆமணக்கு சூரணம் - 2 கிராம்

    தேவதாரு சூரணம் - 2 கிராம்

    முக்கிரட்டை சூரணம் - 2 கிராம்

    சீந்தில்கொடி சூரணம் - 2 கிராம்

    சரக்கொன்றை சூரணம் - 2 கிராம்

    தண்ணீர் - 300 மில்லி

    செய்முறை:

    தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து அனைத்து மூலிகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். 100 மில்லியாக வந்ததும் வடிகட்டி குடிக்கவும். கசப்பு சுவை சார்ந்தது என்றாலும் கூட மூட்டுகளுக்கு அருமையான பலமான வலுவை அளிக்கும். எல்லா விதமான வலிகளை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. முதுகுத்தண்டு, மூட்டு வலி பாதிப்புக்கு அறுவைச் சிகிச்சைதான் தீர்வு என்று சொல்லப்பட்டாலும் இந்த மூலிகை கஷாயம் வலியற்ற வேதனையற்ற நிலையை அளிக்கிறது. இவை அனைத்தும் உடலின் தேய்மானத்தை குறைத்து உடல் ஆரோக்கியம் காக்கும். மூட்டுகளை பலப்படுத்தி உடலை பலப்படுத்த இந்த கஷாயம் உதவும்.

    மருந்துகள், களிம்புகள் கூட இந்த கஷாயம் குடித்து வருவதன் மூலம் வலிகள் குறையும். தொடர்ந்து 2 மண்டலங்கள் என சாப்பிட்டு வந்தால் வலிகள் 30-50 சதவீதம் வரை குறைவதை உணர்வீர்கள். இது உடல் அமைப்புக்கு மட்டும் அல்லாமல் உடல் செயல்பாடு அனைத்துக்கும் இவை முக்கியமானது. மூளை அனுப்பும் தகவல் சிறு மூளை வழியாக முதுகுத்தண்டுக்கு வந்து அங்கிருந்து உற்பத்தியாகும் நரம்புகளின் செயல்பாடு காரணமாக தான் உடல் சீராக இயங்குகிறது.

    ×