என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கோவில் கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
கோவிலுக்குச் சென்று வழிபடும் நம்மவர்கள், இறைவனை தரிசித்து விட்டு, பிரகாரத்தை வலம் வருவார்கள். சிலர் வெளிப்பிரகாரத்தை ஆலயத்தோடு வலம் வந்து வழிபட்டு விட்டு, கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். இந்த வழிபாட்டையும் சேர்த்து மொத்தம் மூன்று வகையான இறை வழிபாடுகள் இருக்கின்றன. அதைப் பற்றி பார்ப்போம்.
பஞ்சாங்க நமஸ்காரம்:- இந்த வகையான வழிபாட்டு முறை பெண்களுக்கு உரித்தானது. இப்படி இறைவனை வணங்கும்போது, பெண்கள் தங்களுடைய பஞ்ச அங்கங்கள் (பஞ்சம்- ஐந்து, அங்கம்- உடற்பாகம்) தரையில் படும்படி விழுந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் தலை, இரண்டு முழங்கால்கள், இரண்டு பாத நுனிகள் பூமியில்படும் படி விழுந்து வணங்க வேண்டும். இப்படி வழிபாடு செய்வதால் இறைவனுடைய பூரண நல்லாசி கிடைக்கும்.
அஷ்டாங்க நமஸ்காரம்:- இந்த வகையில் இறைவனை வணங்குவது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இந்த வழிபாட்டு முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம்-எட்டு, அங்கம்- உடற்பாகம்) தரையில் படும்படியாக விழுந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாத நுனி ஆகிய எட்டு பகுதிகளும் தரையில் படும்படியாக படுத்துக் கொண்டு இறைவனின் திருப்பாதத்தை சரணடைவதாக நினைத்து வணங்க வேண்டும். இந்த வகை வழிபாட்டால், நம்முடைய வாழ்வில் உண்டான பாவங்கள் நீங்கி நமக்கு நற்கதி கிடைக்கும்.
உத்தம நமஸ்காரம்:- நம்முடைய கரங்களின் ஓடும் கைரேகையில் லட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதனை வேத ரேகைகள் என்றும் அழைப்பார்கள். அந்த வேத ரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களையும் இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பின் மையத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மனதில் இறைவனின் மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்கும்போது, அதை இறைவன் செவிசாய்த்துக் கேட்பான் என்பது ஐதீகம். இந்த முறைக்கு ‘உத்தம நமஸ்காரம்’ என்று பெயர்.
பஞ்சாங்க நமஸ்காரம்:- இந்த வகையான வழிபாட்டு முறை பெண்களுக்கு உரித்தானது. இப்படி இறைவனை வணங்கும்போது, பெண்கள் தங்களுடைய பஞ்ச அங்கங்கள் (பஞ்சம்- ஐந்து, அங்கம்- உடற்பாகம்) தரையில் படும்படி விழுந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் தலை, இரண்டு முழங்கால்கள், இரண்டு பாத நுனிகள் பூமியில்படும் படி விழுந்து வணங்க வேண்டும். இப்படி வழிபாடு செய்வதால் இறைவனுடைய பூரண நல்லாசி கிடைக்கும்.
அஷ்டாங்க நமஸ்காரம்:- இந்த வகையில் இறைவனை வணங்குவது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இந்த வழிபாட்டு முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம்-எட்டு, அங்கம்- உடற்பாகம்) தரையில் படும்படியாக விழுந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாத நுனி ஆகிய எட்டு பகுதிகளும் தரையில் படும்படியாக படுத்துக் கொண்டு இறைவனின் திருப்பாதத்தை சரணடைவதாக நினைத்து வணங்க வேண்டும். இந்த வகை வழிபாட்டால், நம்முடைய வாழ்வில் உண்டான பாவங்கள் நீங்கி நமக்கு நற்கதி கிடைக்கும்.
உத்தம நமஸ்காரம்:- நம்முடைய கரங்களின் ஓடும் கைரேகையில் லட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதனை வேத ரேகைகள் என்றும் அழைப்பார்கள். அந்த வேத ரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களையும் இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பின் மையத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மனதில் இறைவனின் மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்கும்போது, அதை இறைவன் செவிசாய்த்துக் கேட்பான் என்பது ஐதீகம். இந்த முறைக்கு ‘உத்தம நமஸ்காரம்’ என்று பெயர்.
மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலோடு சேர்த்து, மல்லீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மொத்தம் 7 சிவாலயங்கள் உள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
சென்னையில் கபாலீஸ்வரர் கோவில் அமைந்த மயிலாப்பூர் பகுதி, முக்கியமான இடமாக இருக்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பலரும் மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் மட்டுமே இருப்பதாக எண்ணி, அதை மட்டுமே வழிபட்டுச் செல்வார்கள். ஆனால் மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலோடு சேர்த்து, மல்லீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மொத்தம் 7 சிவாலயங்கள் உள்ளன. மயிலாப்பூரின் சப்த சிவாலயங்களாகத் திகழும் இவற்றை, சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். மேலும் மற்ற ஆறு சிவாலயங்களையும் தரிசித்தபிறகு, இறுதியாகவே கபாலீஸ்வரர் திருக்கோவிலை தரிசிக்க வேண்டும் என்ற வழிமுறையும் முன்னோர்களால் வகுத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த 7 சிவாலயங்களையும் சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
காரணீஸ்வரர்
சென்னையின் மையப் பகுதியான மயிலாப்பூரில், கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது. இத்தல இறைவியின் நாமம், சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்கால சோழர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்திருப்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில், முதலாவதாக வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.
தீர்த்தபாலீஸ்வரர்
மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில், நடேசன் சாலை உள்ளது. இங்குதான், சப்த சிவாலயங்களில் 2-வதாக வழிபட வேண்டிய தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் தீர்த்த நீராட்ட விழாவின்போது, சப்த சிவாலயங்களின் தெய்வங்களும் கடலில் இருந்து எழுந்தருள்வார்கள். அவர்களில் இத்தல இறைவனுக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். எனவேதான் இந்த இறைவனுக்கு ‘தீர்த்தபாலீஸ்வரர்’ என்று பெயர். முன் காலத்தில் இந்தக் கோவிலில் 64 வகையான தீர்த்தக் குளங்கள் இருந்திருக்கின்றன. சப்த சிவாலய தெய்வங்களும் கடல் நீராடுவதற்கு முன்பாக, இந்த தீர்த்தங்களில்தான் நீராடுவார்களாம். தெய்வீக சக்தி வாய்ந்த தீர்த்தங்களாக அவை கருதப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது அவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்தக் கோவிலில் அகத்திய முனிவரும், அத்ரி மகரிஷியும் வழிபாடு செய்திருக்கிறார்கள்.
வெள்ளீஸ்வரர்
மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே, வெள்ளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் உரித்தான ஆலயமாக இது கருதப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது, மகாபலி நடத்திய யாகத்தில் யாசகம் கேட்டுச் சென்றார். அவர் ‘தன் பாதங்கள் அளப்பது வரையான மூன்று அடி மண் வேண்டும்’ என்று கேட்டார். அதைத் தருவதாக மகாபாலியும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகாபலியின் அசுர குருவான சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து மகாபலியை தடுத்தார். ஆனாலும் கமண்டல நீர் கொண்டு நிலத்தை தாரை வார்க்க முன்வந்தார், மகாபலி. உடனே சுக்ராச்சாரியார், வண்டாக உருவெடுத்து, கமண்டல நீர் வரும் பாதையை தடுத்தார். இதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். அதில் தர்ப்பைப் புல் குத்தி, வண்டின் கண் பார்வை பறிபோனது. இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் இதுவாகும். சுக்ரனுக்கு ‘வெள்ளி’ என்ற பெயரும் உண்டு. இதனால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
விருபாட்சீஸ்வரர்
மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில் 4-வதாக வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்குள்ள இறைவன்- விருபாட்சீஸ்வரர், இறைவி- விசாலாட்சி அம்மன். இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதி முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பைரவர், சூரியனார் சன்னிதிகள், அம்பாள் சன்னிதி அருகிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்தபோது, அவருக்கு நடராஜர் தரிசனத்தை இறைவனை காட்டியருளி இருக்கிறார். உலக உயிர்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியை அளிக்கும் வல்லமை கொண்டவர்களாக இத்தல இறைவனும், இறைவியும் திகழ்கிறார்கள். இந்தக் கோவிலில் வழிபாடு செய்தால், ஆத்ம பலம் அதிகரிக்கும்.
வாலீஸ்வரர்
மயிலாப்பூரின் காவல் தெய்வமாக கருதப்படுபவள், கோலவிழி அம்மன். இந்த அம்மன் கோவிலின் அருகில்தான், வாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இது சப்த சிவாலயங்களில் 5-வது தலம். கவுதம முனிவர் வழிபட்டதாக சொல்லப்படும் இந்த சிவாலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராமாயணத்தில் கிஷ்கிந்தையை ஆட்சி செய்ததாக கூறப்படும் வாலி என்னும் வானர அரசன் வழிபாடு செய்த தலம் இதுவாகும். இத்தல இறைவனை வழிபட்டுதான், பல அரிய வரங்களை வாலி பெற்றதாக சொல்லப்படுகிறது. எனவே தான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ ஆனார். நிலத்தின் அடியில் இருந்து வெளிப்பட்ட பஞ்ச லிங்கங்கள் இந்தக் கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.
மல்லீஸ்வரர்
காரணீஸ்வரர் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்திருக்கிறது, இந்தக் கோவில். சப்த சிவாலயங்களில் 6-வது தலம் இது. முன் காலத்தில் இந்தப் பகுதியில் மல்லிகைச் செடிகள் நிறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இங்கு கோவில் கொண்ட இறைவன் ‘மல்லீஸ்வரர்’ ஆனார். இறைவியின் திருநாமம், மரகதவல்லி என்பதாகும். பிருகு முனிவர் வழிபட்ட சிறப்புமிக்க தலம் இது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கபாலீஸ்வரர்
மயிலாப்பூரின் முக்கிய அடையாளமாகவும், சப்த சிவ தலங்களில் ஏழாவதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் இதுவாகும். இங்கு கற்பகாம்பிகை உடனாய கபாலீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். காசியப முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயம் இது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற ஆலயமாகவும் இது திகழ்கிறது. ஈசன், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் ஆலயங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. புன்னை மரத்தின் அடியில் வீற்றிருந்த இறைவனை, பார்வதிதேவி மயில் வடிவில் வந்து வழிபட்ட தலம் என்பதால், இது ‘மயிலாப்பூர்’ என்று பெயர் பெற்றது. ஆதிகாலத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கியதாகவும், அதன் காரணமாக 350 ஆண்டுகளுக்கு முன்பாக தற்போதைய இடத்தில் கபாலீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
காரணீஸ்வரர்
சென்னையின் மையப் பகுதியான மயிலாப்பூரில், கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது. இத்தல இறைவியின் நாமம், சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்கால சோழர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்திருப்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில், முதலாவதாக வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.
தீர்த்தபாலீஸ்வரர்
மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில், நடேசன் சாலை உள்ளது. இங்குதான், சப்த சிவாலயங்களில் 2-வதாக வழிபட வேண்டிய தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் தீர்த்த நீராட்ட விழாவின்போது, சப்த சிவாலயங்களின் தெய்வங்களும் கடலில் இருந்து எழுந்தருள்வார்கள். அவர்களில் இத்தல இறைவனுக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். எனவேதான் இந்த இறைவனுக்கு ‘தீர்த்தபாலீஸ்வரர்’ என்று பெயர். முன் காலத்தில் இந்தக் கோவிலில் 64 வகையான தீர்த்தக் குளங்கள் இருந்திருக்கின்றன. சப்த சிவாலய தெய்வங்களும் கடல் நீராடுவதற்கு முன்பாக, இந்த தீர்த்தங்களில்தான் நீராடுவார்களாம். தெய்வீக சக்தி வாய்ந்த தீர்த்தங்களாக அவை கருதப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது அவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்தக் கோவிலில் அகத்திய முனிவரும், அத்ரி மகரிஷியும் வழிபாடு செய்திருக்கிறார்கள்.
வெள்ளீஸ்வரர்
மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே, வெள்ளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் உரித்தான ஆலயமாக இது கருதப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது, மகாபலி நடத்திய யாகத்தில் யாசகம் கேட்டுச் சென்றார். அவர் ‘தன் பாதங்கள் அளப்பது வரையான மூன்று அடி மண் வேண்டும்’ என்று கேட்டார். அதைத் தருவதாக மகாபாலியும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகாபலியின் அசுர குருவான சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து மகாபலியை தடுத்தார். ஆனாலும் கமண்டல நீர் கொண்டு நிலத்தை தாரை வார்க்க முன்வந்தார், மகாபலி. உடனே சுக்ராச்சாரியார், வண்டாக உருவெடுத்து, கமண்டல நீர் வரும் பாதையை தடுத்தார். இதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். அதில் தர்ப்பைப் புல் குத்தி, வண்டின் கண் பார்வை பறிபோனது. இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் இதுவாகும். சுக்ரனுக்கு ‘வெள்ளி’ என்ற பெயரும் உண்டு. இதனால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
விருபாட்சீஸ்வரர்
மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில் 4-வதாக வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்குள்ள இறைவன்- விருபாட்சீஸ்வரர், இறைவி- விசாலாட்சி அம்மன். இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதி முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பைரவர், சூரியனார் சன்னிதிகள், அம்பாள் சன்னிதி அருகிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்தபோது, அவருக்கு நடராஜர் தரிசனத்தை இறைவனை காட்டியருளி இருக்கிறார். உலக உயிர்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியை அளிக்கும் வல்லமை கொண்டவர்களாக இத்தல இறைவனும், இறைவியும் திகழ்கிறார்கள். இந்தக் கோவிலில் வழிபாடு செய்தால், ஆத்ம பலம் அதிகரிக்கும்.
வாலீஸ்வரர்
மயிலாப்பூரின் காவல் தெய்வமாக கருதப்படுபவள், கோலவிழி அம்மன். இந்த அம்மன் கோவிலின் அருகில்தான், வாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இது சப்த சிவாலயங்களில் 5-வது தலம். கவுதம முனிவர் வழிபட்டதாக சொல்லப்படும் இந்த சிவாலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராமாயணத்தில் கிஷ்கிந்தையை ஆட்சி செய்ததாக கூறப்படும் வாலி என்னும் வானர அரசன் வழிபாடு செய்த தலம் இதுவாகும். இத்தல இறைவனை வழிபட்டுதான், பல அரிய வரங்களை வாலி பெற்றதாக சொல்லப்படுகிறது. எனவே தான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ ஆனார். நிலத்தின் அடியில் இருந்து வெளிப்பட்ட பஞ்ச லிங்கங்கள் இந்தக் கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.
மல்லீஸ்வரர்
காரணீஸ்வரர் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்திருக்கிறது, இந்தக் கோவில். சப்த சிவாலயங்களில் 6-வது தலம் இது. முன் காலத்தில் இந்தப் பகுதியில் மல்லிகைச் செடிகள் நிறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இங்கு கோவில் கொண்ட இறைவன் ‘மல்லீஸ்வரர்’ ஆனார். இறைவியின் திருநாமம், மரகதவல்லி என்பதாகும். பிருகு முனிவர் வழிபட்ட சிறப்புமிக்க தலம் இது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கபாலீஸ்வரர்
மயிலாப்பூரின் முக்கிய அடையாளமாகவும், சப்த சிவ தலங்களில் ஏழாவதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் இதுவாகும். இங்கு கற்பகாம்பிகை உடனாய கபாலீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். காசியப முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயம் இது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற ஆலயமாகவும் இது திகழ்கிறது. ஈசன், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் ஆலயங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. புன்னை மரத்தின் அடியில் வீற்றிருந்த இறைவனை, பார்வதிதேவி மயில் வடிவில் வந்து வழிபட்ட தலம் என்பதால், இது ‘மயிலாப்பூர்’ என்று பெயர் பெற்றது. ஆதிகாலத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கியதாகவும், அதன் காரணமாக 350 ஆண்டுகளுக்கு முன்பாக தற்போதைய இடத்தில் கபாலீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பூமியில் அஸ்திவாரம் அமைத்து கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களும் பஞ்ச பூதங்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது.
பூமியில் அஸ்திவாரம் அமைத்து கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களும் பஞ்ச பூதங்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது. பஞ்ச பூத சக்திகளை முறைப்படுத்தி நல்ல பலன்களை அடைவதற்காக, எட்டு திசைகளையும் அடிப்படையாக கொண்டு, கட்டுமான வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. வாஸ்து ரீதியாக எட்டு திசைகளை ஆளும் தேவர்கள் மற்றும் உப தேவர்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
இந்திர திசை
கிழக்கு திசை இந்திரனுக்கு உரிய திசையாகவும், சூரியன் உதிக்கும் திசையாகவும் இருப்பதால் மற்ற எல்லா திசைகளையும் விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்கு திசையின் கடவுளர்கள் ஈசானன், பர்ஜன்யன், ஜயந்தன், இந்திரன், சூரியன், ஸத்யன், பிருசன், அக்னி, வாயு ஆகிய ஒன்பது பேர்கள் ஆவார்கள். அவர்களில் இந்திரன் முதன்மை பெற்றவர் என்பதால், கிழக்கு திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள் புகழும், செல்வ வளமும் பெறுவதாக ஐதீகம்.
அக்னி திசை
ஆக்கினேயம் என்று சொல்லப்படக்கூடிய, கிழக்கு-தெற்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்த தென்கிழக்கின் அதிபதி அக்னி ஆவார். வீடுகளின் இத்திசை அக்னிக்கு உரியது என்பதால் சமையலறை, மின்சாரம் சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றுக்கு உரிய பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எம திசை
தெற்கு திசையின் பிரதான அதிபதி எமன் ஆவார். அவருடன் சேர்த்து பூஷா, விததன், கிருகக்ஷதன், கந்தர்வன், பிருங்கராஜன், மிருகன் ஆகிய ஏழு கடவுளர்கள் இத்திசையில் உள்ளனர். தென் திசை நோக்கி சுப காரியங்கள் செய்வது ஐதீகமாக கடைபிடிக்கப்படுவதில்லை.
நைருதி திசை
தெற்கு-மேற்கு ஆகிய இரண்டு திசைகளுக்கும் இடைப்பட்ட பகுதியான தென்மேற்கின் அதிபதி நிருதி (நைருதி) ஆவார். அரக்க குணம் படைத்த நிருதிக்கு உரிய இந்த திசை சுப பலன்களை அளிப்பதில்லை. வீட்டின் தென்மேற்கு திசையான நிருதியில் கனமான பொருட்களை வைப்பது, மேல்நிலை தண்ணீர்த் தொட்டி மற்றும் படுக்கையறை ஆகியவை அமைக்க ஏற்றது.
வருண திசை
மேற்கு திசை வருணனுக்கு உரியது. மழை மற்றும் நீர் ஆகியவற்றிற்கு உரிய மேல் திசை கடவுளர்களில் வருணன் முக்கியமானவர். மேற்கு திசை கடவுளர்கள் பித்ரு, தவ்வாரிக, சுக்ரீவ, புஷ்பதந்த, வருணன், அசுர, சோஷ, பாப, ரோக ஆகிய ஒன்பது பேர்களில், ரோக, பாப. அசுர, தவ்வாரிக, பித்ரு ஆகியோர் அசுப தன்மை பெற்றவர்கள். சுக்ரீவ, புஷ்பதந்த, வருணன், சோஷ ஆகியோர்கள் சுபத்தன்மை பெற்றவர்கள்.
வாயு திசை
மேற்கு-வடக்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்த வடமேற்கு திக்கின் அதிபதி வாயு ஆவார். காற்று, இப்பகுதியில் நுழைவதைத் தடுக்கும் விதத்தில் உயரமான மரங்களை இப்பகுதியில் வளர்ப்பது, இந்த பகுதியில் உள்ள வீட்டின் மேல்தளத்தை உயர்த்திக் கட்டுவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
குபேர திசை
வடக்கு திசையின் பிரதான கடவுள் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் ஆவார். வடக்கு திசைக்கு திதி, அதிதி, உதிதி என்ற பெயர்கள் உண்டு. சர்ப்ப, சோம, பல்லாட, முக்கிய, அஹி ஆகிய ஐந்து கடவுளர்கள் வடக்கு திசையில் உள்ளனர். வாஸ்து ரீதியாக வடக்கு சுப திசையாக கருதப்படுவது ஐதீகம்.
ஈசான திசை
வடக்கு-கிழக்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்துள்ள வடகிழக்கு திசையின் அதிபதி ஈசானன் ஆவார். இத்திசையில், கழிவறை, உபயோகமற்ற பொருள்களை வைக்கும் ஸ்டோர் ரூம் போன்றவற்றை அமைப்பது கூடாது. கிணறு, நிலத்தடி நீரை எடுக்கும் ‘போர்வெல்’, பூஜை அறை மற்றும் படிப்பறை ஆகியவற்றை இப்பகுதியில் அமைப்பது ஐதீகமாக உள்ளது.
இந்திர திசை
கிழக்கு திசை இந்திரனுக்கு உரிய திசையாகவும், சூரியன் உதிக்கும் திசையாகவும் இருப்பதால் மற்ற எல்லா திசைகளையும் விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்கு திசையின் கடவுளர்கள் ஈசானன், பர்ஜன்யன், ஜயந்தன், இந்திரன், சூரியன், ஸத்யன், பிருசன், அக்னி, வாயு ஆகிய ஒன்பது பேர்கள் ஆவார்கள். அவர்களில் இந்திரன் முதன்மை பெற்றவர் என்பதால், கிழக்கு திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள் புகழும், செல்வ வளமும் பெறுவதாக ஐதீகம்.
அக்னி திசை
ஆக்கினேயம் என்று சொல்லப்படக்கூடிய, கிழக்கு-தெற்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்த தென்கிழக்கின் அதிபதி அக்னி ஆவார். வீடுகளின் இத்திசை அக்னிக்கு உரியது என்பதால் சமையலறை, மின்சாரம் சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றுக்கு உரிய பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எம திசை
தெற்கு திசையின் பிரதான அதிபதி எமன் ஆவார். அவருடன் சேர்த்து பூஷா, விததன், கிருகக்ஷதன், கந்தர்வன், பிருங்கராஜன், மிருகன் ஆகிய ஏழு கடவுளர்கள் இத்திசையில் உள்ளனர். தென் திசை நோக்கி சுப காரியங்கள் செய்வது ஐதீகமாக கடைபிடிக்கப்படுவதில்லை.
நைருதி திசை
தெற்கு-மேற்கு ஆகிய இரண்டு திசைகளுக்கும் இடைப்பட்ட பகுதியான தென்மேற்கின் அதிபதி நிருதி (நைருதி) ஆவார். அரக்க குணம் படைத்த நிருதிக்கு உரிய இந்த திசை சுப பலன்களை அளிப்பதில்லை. வீட்டின் தென்மேற்கு திசையான நிருதியில் கனமான பொருட்களை வைப்பது, மேல்நிலை தண்ணீர்த் தொட்டி மற்றும் படுக்கையறை ஆகியவை அமைக்க ஏற்றது.
வருண திசை
மேற்கு திசை வருணனுக்கு உரியது. மழை மற்றும் நீர் ஆகியவற்றிற்கு உரிய மேல் திசை கடவுளர்களில் வருணன் முக்கியமானவர். மேற்கு திசை கடவுளர்கள் பித்ரு, தவ்வாரிக, சுக்ரீவ, புஷ்பதந்த, வருணன், அசுர, சோஷ, பாப, ரோக ஆகிய ஒன்பது பேர்களில், ரோக, பாப. அசுர, தவ்வாரிக, பித்ரு ஆகியோர் அசுப தன்மை பெற்றவர்கள். சுக்ரீவ, புஷ்பதந்த, வருணன், சோஷ ஆகியோர்கள் சுபத்தன்மை பெற்றவர்கள்.
வாயு திசை
மேற்கு-வடக்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்த வடமேற்கு திக்கின் அதிபதி வாயு ஆவார். காற்று, இப்பகுதியில் நுழைவதைத் தடுக்கும் விதத்தில் உயரமான மரங்களை இப்பகுதியில் வளர்ப்பது, இந்த பகுதியில் உள்ள வீட்டின் மேல்தளத்தை உயர்த்திக் கட்டுவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
குபேர திசை
வடக்கு திசையின் பிரதான கடவுள் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் ஆவார். வடக்கு திசைக்கு திதி, அதிதி, உதிதி என்ற பெயர்கள் உண்டு. சர்ப்ப, சோம, பல்லாட, முக்கிய, அஹி ஆகிய ஐந்து கடவுளர்கள் வடக்கு திசையில் உள்ளனர். வாஸ்து ரீதியாக வடக்கு சுப திசையாக கருதப்படுவது ஐதீகம்.
ஈசான திசை
வடக்கு-கிழக்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்துள்ள வடகிழக்கு திசையின் அதிபதி ஈசானன் ஆவார். இத்திசையில், கழிவறை, உபயோகமற்ற பொருள்களை வைக்கும் ஸ்டோர் ரூம் போன்றவற்றை அமைப்பது கூடாது. கிணறு, நிலத்தடி நீரை எடுக்கும் ‘போர்வெல்’, பூஜை அறை மற்றும் படிப்பறை ஆகியவற்றை இப்பகுதியில் அமைப்பது ஐதீகமாக உள்ளது.
‘நிர்ஜலா’ என்ற பெயருடைய ஏகாதசிக்கு, ‘பீம ஏகாதசி’ என்றும் பெயர் உண்டு. அதற்கு ‘பீம ஏகாதசி’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்குப்பின்னால் ஒரு சிறு கதை உள்ளது. அதனைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பெருமாளை வழிபடும் பக்தர்களால் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்று ‘ஏகாதசி.’ வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். இதில் ஆனி மாதத்தின் வளர்பிறையில் வரும் ‘நிர்ஜலா’ என்ற பெயருடைய ஏகாதசிக்கு, ‘பீம ஏகாதசி’ என்றும் பெயர் உண்டு. அதற்கு ‘பீம ஏகாதசி’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்குப்பின் ஒரு சிறு கதை உள்ளது. அதனைப் பற்றி இங்கே பார்ப்போம்.
ஒரு முறை வியாச முனிவரைச் சந்தித்தார், பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர். அவரை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து சகல மரியாதையையும் செய்து, சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டார்.
அப்போது “முனிவரே.. மனிதர் களுக்கு ஏராளமான துன்பங்கள் ஏற்படுகின்றன. இனி வரும் கலியுகத்தில் அது அதிகரிக்கவே செய்யும். அதுபோன்ற தருணங்களில் துன்பங்களில் இருந்து சுலபமாக விடுபடுவதற்கான வழியை சொல்லுங்கள்” என்று கேட்டார், யுதிஷ்டிரர்.
அதற்கு வியாசர், “எல்லா துன்பங்களையும் நீக்கக்கூடிய மகிமை, ஏகாதசி விரதத்திற்கு மட்டுமே உண்டு. அந்த தினத்தில் உபவாசம் இருந்து பெருமாளை பூஜித்து வருவதைத் தவிர இதற்கு வேறு வழி எதுவும் இல்லை” என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பீமன், “முனிவர்களில் சிறந்தவரே.. நீங்கள் சொன்ன விரதத்தை இங்கிருக்கும் அனைவருமே கடைப்பிடித்து விடுவார்கள். அவர்களால் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் உணவருந்தாமல் இருந்து விட முடியும். ஆனால் என்னால் உணவருந்தாமல் ஒரு வேளை கூட இருக்க முடியாது. அதிலும் வருடம் முழுவதும் பல ஏகாதசிகள் அப்படி இருப்பதென்றால் இயலாத காரியம். ஏனெனில் என்னுடைய வயிற்றில் ‘விருகம்’ என்னும் தீ எரிந்துகொண்டே இருக்கிறது. அது என் பசியைத் துண்டிக் கொண்டே இருக்கிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் விரதம் இருந்து, நீங்கள் சொன்ன பலனை அடைய வழி இருக்கிறதா?” என்று கேட்டான்.
அப்போது வியாசர் சொன்ன பதில், பீமனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. “பீமா.. கவலைப் படாதே. ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து வா. நீர்கூட அருந்தாமல் இருக்கும் விரதம் என்பதாலேயே அது ‘நிர்ஜலா’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஒரு ஏகாதசியை கடைப்பிடித்தாலே, அனைத்து ஏகாதசியையும் கடைப்பிடித்த பலன் கிடைத்து விடும்” என்று கூறினார்.
இதையடுத்து பீமன், நிர்ஜலா ஏகாதசி அன்று மட்டும் உணவு, நீர் ஆகியவற்றைத் துறந்து, மறுநாள் துவாதியில் உணவை உட்கொண்டான். பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட விரதம் என்பதால் இது ‘பீம ஏகாதசி’ என்று பெயர் பெற்றது.
ஒரு முறை வியாச முனிவரைச் சந்தித்தார், பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர். அவரை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து சகல மரியாதையையும் செய்து, சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டார்.
அப்போது “முனிவரே.. மனிதர் களுக்கு ஏராளமான துன்பங்கள் ஏற்படுகின்றன. இனி வரும் கலியுகத்தில் அது அதிகரிக்கவே செய்யும். அதுபோன்ற தருணங்களில் துன்பங்களில் இருந்து சுலபமாக விடுபடுவதற்கான வழியை சொல்லுங்கள்” என்று கேட்டார், யுதிஷ்டிரர்.
அதற்கு வியாசர், “எல்லா துன்பங்களையும் நீக்கக்கூடிய மகிமை, ஏகாதசி விரதத்திற்கு மட்டுமே உண்டு. அந்த தினத்தில் உபவாசம் இருந்து பெருமாளை பூஜித்து வருவதைத் தவிர இதற்கு வேறு வழி எதுவும் இல்லை” என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பீமன், “முனிவர்களில் சிறந்தவரே.. நீங்கள் சொன்ன விரதத்தை இங்கிருக்கும் அனைவருமே கடைப்பிடித்து விடுவார்கள். அவர்களால் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் உணவருந்தாமல் இருந்து விட முடியும். ஆனால் என்னால் உணவருந்தாமல் ஒரு வேளை கூட இருக்க முடியாது. அதிலும் வருடம் முழுவதும் பல ஏகாதசிகள் அப்படி இருப்பதென்றால் இயலாத காரியம். ஏனெனில் என்னுடைய வயிற்றில் ‘விருகம்’ என்னும் தீ எரிந்துகொண்டே இருக்கிறது. அது என் பசியைத் துண்டிக் கொண்டே இருக்கிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் விரதம் இருந்து, நீங்கள் சொன்ன பலனை அடைய வழி இருக்கிறதா?” என்று கேட்டான்.
அப்போது வியாசர் சொன்ன பதில், பீமனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. “பீமா.. கவலைப் படாதே. ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து வா. நீர்கூட அருந்தாமல் இருக்கும் விரதம் என்பதாலேயே அது ‘நிர்ஜலா’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஒரு ஏகாதசியை கடைப்பிடித்தாலே, அனைத்து ஏகாதசியையும் கடைப்பிடித்த பலன் கிடைத்து விடும்” என்று கூறினார்.
இதையடுத்து பீமன், நிர்ஜலா ஏகாதசி அன்று மட்டும் உணவு, நீர் ஆகியவற்றைத் துறந்து, மறுநாள் துவாதியில் உணவை உட்கொண்டான். பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட விரதம் என்பதால் இது ‘பீம ஏகாதசி’ என்று பெயர் பெற்றது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா வலியபடுக்கை பூஜையுடன் நடைபெற உள்ளது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9 - ந்தேதி வரை பத்து நாட்கள் நடந்தது.
இந்த விழாவின் எட்டாம் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணி முதல் பூமாலை சடங்குகள், 8 மணிக்கு வில்லுப்பாட்டு, மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு பஜனை, 6.30 மற்றும் இரவு 8.30 மணிக்கு தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் தீர்த்தமாடி பொங்கலிட்டு வழிபடுவார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா வலியபடுக்கை பூஜையுடன் நடைபெற உள்ளது.
வலியபடுக்கை பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது. பங்குனி மாத பரணியை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு உருள் நேர்ச்சை, காலை 9.30 மணி மற்றும் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருகை, பகல் 11 மணிக்கு பருத்திவிளையில் இருந்து சந்தனகுடம் பவனி, 12 மணிக்கு குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
இந்த விழாவின் எட்டாம் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணி முதல் பூமாலை சடங்குகள், 8 மணிக்கு வில்லுப்பாட்டு, மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு பஜனை, 6.30 மற்றும் இரவு 8.30 மணிக்கு தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் தீர்த்தமாடி பொங்கலிட்டு வழிபடுவார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா வலியபடுக்கை பூஜையுடன் நடைபெற உள்ளது.
வலியபடுக்கை பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது. பங்குனி மாத பரணியை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு உருள் நேர்ச்சை, காலை 9.30 மணி மற்றும் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருகை, பகல் 11 மணிக்கு பருத்திவிளையில் இருந்து சந்தனகுடம் பவனி, 12 மணிக்கு குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ள செம்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள சேவுகப்பெருமாள் அய்யனார், கருப்பர் சாமி, உடையம்மைதாய் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கோவில் அருகே யாக சாலை அமைக்கப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் ஆகியோர் அருளாசியுடன் கங்கா பூஜை, விக்னேஷ்வர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை வேதமந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சுமந்து சென்று காலை 9.30 மணியிலிருந்து 10.20 மணிக்குள் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம், தச தரிசன நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை செம்பனூர் சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய தர்ம பரிபாலன சங்க தலைவர் சுப்ரமணியன் செட்டியார், செயலாளர் சுப்பிரமணியன் அம்பலம், பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
பின்னர் நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை வேதமந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சுமந்து சென்று காலை 9.30 மணியிலிருந்து 10.20 மணிக்குள் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம், தச தரிசன நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை செம்பனூர் சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய தர்ம பரிபாலன சங்க தலைவர் சுப்ரமணியன் செட்டியார், செயலாளர் சுப்பிரமணியன் அம்பலம், பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
யூதர்கள் காலை, மதியம், மாலை என மூன்று முறை தேவாலயம் தேடிச் சென்று பிரார்த்தனை செய்வதை அன்றாட ஆன்மிகக் கடமையாகக் கொண்டிருந்தனர். அது கடவுளை விரைவாகச் சென்றடையும் வழி என்றும் யூதர்கள் நம்பினார்கள்.
கடவுளுக்கும் மனிதர்களுக்குமான ஒரே பாலம் பிரார்த்தனை. அதனால் யூதர்கள் காலை, மதியம், மாலை என மூன்று முறை தேவாலயம் தேடிச் சென்று பிரார்த்தனை செய்வதை அன்றாட ஆன்மிகக் கடமையாகக் கொண்டிருந்தனர். அது கடவுளை விரைவாகச் சென்றடையும் வழி என்றும் யூதர்கள் நம்பினார்கள்.
அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை ‘தசம பாக’மாக ஆலயத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று யூதர்களின் இணைச்சட்டம் (14:22), கூறுகிறது. இதைப் பின்பற்றி வந்த யூதர்கள், இதுபோன்ற பாரம்பரிய ஆலயச் சடங்குகளை ஏழைகளும், மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பிரார்த்தனை செய்வது, தசமபாகம் தருவது, பலிசெலுத்துவது ஆகியவற்றை ஆரவாரத்துடன் செய்து ஆலயத்தின் அமைதியைக் கெடுத்து வந்தார்கள்.
தாங்கள் நோன்பிருப்பது தெரிய வேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள். அதேபோல் கொடுக்கத் தேவையில்லாத விளைபொருட்களிலும் பத்திலொரு பங்கைக் கொடுத்தார்கள். கடவுள் காரியத்தில் இப்படி விளம்பரப் பிரியர்களாக இருந்த பரிசேயர்களை முன்வைத்து இயேசு கூறிய உவமை; நம் தந்தையைத் தொடர்புகொள்ளப் பிரார்த்தனை என்ற உறவுப் பாலத்தை எத்தனை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது.
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களை விமர்சிக்கும் விதமாக இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்ட, கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிவசூலிப்பவர். பரிசேயர் ஆலய வாசலில் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் உரத்த குரலில் வேண்டினார்: ‘கடவுளே, கொள்ளையர், நேர்மையற்றோர், பாலியல் தொழில் செய்வோர் போலவோ இல்லாதது குறித்து நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் எல்லா வருவாயிலிருந்தும் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று ஜெபித்தார்.
ஆனால், வரிவசூலிப்பவர் தொலைவில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று கடவுளுக்கு மட்டுமே கேட்கும் தன் மனக்குரல் கொண்டு ஜெபித்தார். இந்த இருவரில் பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.
பரிசேயர் ஆலய வாசலில் நின்றபடி பிரார்த்தனை என்ற பெயரால் உரத்துச் சொன்ன அனைத்தையும் உண்மையிலே அவர் கடைப்பிடித்தார். தினமும் பிரார்த்தனை செய்தார், வாரம் இருமுறை நோன்பிருந்தார், பத்தில் ஒரு பங்கை ஆலயத்துக்குக் கொடுத்தார். ஆனால், பிரார்த்தனை என்பது தான் செய்வதைச் சொல்வது அல்ல, தன்னைப் புகழுவதும் அல்ல, அல்லது தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுவதும் அல்ல.
மாறாக, பிரார்த்தனை என்பது கடவுளைப் புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணையை நாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்ச்சியான தேடல் என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். பிரார்த்தனை என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதன் வழியே கடவுள் என் மனம் எனும் கண்ணாடியில் இருப்பது அனைத்தையும் காண்கிறார்.
இயேசு தன் பூமி வாழ்வில் கடவுளாகிய தந்தையிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை இருமுறை தன் சீடர்களுக்கும் மக்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். பிரார்த்தனை என்பது எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இருக்கக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டிய இயேசு, சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, “பிதாவே இவர்களை மன்னியும், ஏனெனில் இவர் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் மரணத்தை விரும்பிய எதிரிகளை மன்னிக்கும்படி தன் தந்தையிடம் கோரினார்.
இது எத்தனை உன்னதமான தாழ்ச்சி. ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு எளிதான போதனைதான். ஆனால், அதைக் கடைப்பிடிக்கும்போதுதான் நமக்கும் இயேசுவின் மேன்மை புரியத் தொடங்குகிறது.
அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை ‘தசம பாக’மாக ஆலயத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று யூதர்களின் இணைச்சட்டம் (14:22), கூறுகிறது. இதைப் பின்பற்றி வந்த யூதர்கள், இதுபோன்ற பாரம்பரிய ஆலயச் சடங்குகளை ஏழைகளும், மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பிரார்த்தனை செய்வது, தசமபாகம் தருவது, பலிசெலுத்துவது ஆகியவற்றை ஆரவாரத்துடன் செய்து ஆலயத்தின் அமைதியைக் கெடுத்து வந்தார்கள்.
தாங்கள் நோன்பிருப்பது தெரிய வேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள். அதேபோல் கொடுக்கத் தேவையில்லாத விளைபொருட்களிலும் பத்திலொரு பங்கைக் கொடுத்தார்கள். கடவுள் காரியத்தில் இப்படி விளம்பரப் பிரியர்களாக இருந்த பரிசேயர்களை முன்வைத்து இயேசு கூறிய உவமை; நம் தந்தையைத் தொடர்புகொள்ளப் பிரார்த்தனை என்ற உறவுப் பாலத்தை எத்தனை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது.
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களை விமர்சிக்கும் விதமாக இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்ட, கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிவசூலிப்பவர். பரிசேயர் ஆலய வாசலில் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் உரத்த குரலில் வேண்டினார்: ‘கடவுளே, கொள்ளையர், நேர்மையற்றோர், பாலியல் தொழில் செய்வோர் போலவோ இல்லாதது குறித்து நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் எல்லா வருவாயிலிருந்தும் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று ஜெபித்தார்.
ஆனால், வரிவசூலிப்பவர் தொலைவில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று கடவுளுக்கு மட்டுமே கேட்கும் தன் மனக்குரல் கொண்டு ஜெபித்தார். இந்த இருவரில் பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.
பரிசேயர் ஆலய வாசலில் நின்றபடி பிரார்த்தனை என்ற பெயரால் உரத்துச் சொன்ன அனைத்தையும் உண்மையிலே அவர் கடைப்பிடித்தார். தினமும் பிரார்த்தனை செய்தார், வாரம் இருமுறை நோன்பிருந்தார், பத்தில் ஒரு பங்கை ஆலயத்துக்குக் கொடுத்தார். ஆனால், பிரார்த்தனை என்பது தான் செய்வதைச் சொல்வது அல்ல, தன்னைப் புகழுவதும் அல்ல, அல்லது தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுவதும் அல்ல.
மாறாக, பிரார்த்தனை என்பது கடவுளைப் புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணையை நாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்ச்சியான தேடல் என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். பிரார்த்தனை என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதன் வழியே கடவுள் என் மனம் எனும் கண்ணாடியில் இருப்பது அனைத்தையும் காண்கிறார்.
இயேசு தன் பூமி வாழ்வில் கடவுளாகிய தந்தையிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை இருமுறை தன் சீடர்களுக்கும் மக்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். பிரார்த்தனை என்பது எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இருக்கக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டிய இயேசு, சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, “பிதாவே இவர்களை மன்னியும், ஏனெனில் இவர் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் மரணத்தை விரும்பிய எதிரிகளை மன்னிக்கும்படி தன் தந்தையிடம் கோரினார்.
இது எத்தனை உன்னதமான தாழ்ச்சி. ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு எளிதான போதனைதான். ஆனால், அதைக் கடைப்பிடிக்கும்போதுதான் நமக்கும் இயேசுவின் மேன்மை புரியத் தொடங்குகிறது.
களக்காடு வரதராஜ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
களக்காடு வரதராஜ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா வரும் 20-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 6.30 மணிக்கு திருக்கொடி ஏற்றம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினசரி காலையில் பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு திருமஞ்சனமும், இரவில் வரதராஜபெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.
விழாவின் 7-ம் நாளான 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 27-ந் தேதி (சனிக்கிழமை) இரவில் வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்.
மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11ம் நாளான 30-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7 மணிக்கு தீர்த்தவாரி இடம்பெறுகிறது.
விழாவின் 7-ம் நாளான 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 27-ந் தேதி (சனிக்கிழமை) இரவில் வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்.
மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11ம் நாளான 30-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7 மணிக்கு தீர்த்தவாரி இடம்பெறுகிறது.
மேல்கோட்டை செலுவநாராயணசாமி கோவிலில் நடைபெறும் வைரமுடி உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற செலுவ நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வைர முடி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சாமிக்கு தங்க கவசம் அணிவித்து வீதி உலா வரும் நிகழ்வே வைரமுடி உற்சவம் என அழைக்கப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வைரமுடி உற்சவம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அதோடு அண்டை மாநிலங்களான மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா 2-வது கட்ட அலை தொடங்கியுள்ளது.
இதனால் இந்த ஆண்டு மேல்கோட்டை செலுவநாராயணசாமி கோவில் வைரமுடி உற்சவம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அஸ்வதி தலைமையில் வைரமுடி உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு வைரமுடி உற்சவ விழாவை வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வைரமுடி உற்சவம் கொண்டாடப்படாததால், 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கலச பூஜை நடத்துவது என்றும், 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வைரமுடி உற்சவம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிற மாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு வைரமுடி உற்சவத்தை எளிமையாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது வைரமுடி விழாவில் பங்கேற்க கோவிலுக்குள் 100 பேரையும், கோவிலுக்கு வெளியே 2 ஆயிரம் பேரையும் அனுமதிப்பது எனவும், அவர்கள் அனைவருக்கும் கைகளில் முத்திரை குத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விடிய, விடிய நடைபெறும் வைரமுடி உற்சவத்தை இந்த ஆண்டு 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்குள் நடத்தி முடிப்பது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா நிகழ்ச்சி-நிரல் தொடர்பான அறிவிப்பு கோவில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வைரமுடி உற்சவம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அதோடு அண்டை மாநிலங்களான மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா 2-வது கட்ட அலை தொடங்கியுள்ளது.
இதனால் இந்த ஆண்டு மேல்கோட்டை செலுவநாராயணசாமி கோவில் வைரமுடி உற்சவம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அஸ்வதி தலைமையில் வைரமுடி உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு வைரமுடி உற்சவ விழாவை வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வைரமுடி உற்சவம் கொண்டாடப்படாததால், 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கலச பூஜை நடத்துவது என்றும், 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வைரமுடி உற்சவம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிற மாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு வைரமுடி உற்சவத்தை எளிமையாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது வைரமுடி விழாவில் பங்கேற்க கோவிலுக்குள் 100 பேரையும், கோவிலுக்கு வெளியே 2 ஆயிரம் பேரையும் அனுமதிப்பது எனவும், அவர்கள் அனைவருக்கும் கைகளில் முத்திரை குத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விடிய, விடிய நடைபெறும் வைரமுடி உற்சவத்தை இந்த ஆண்டு 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்குள் நடத்தி முடிப்பது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா நிகழ்ச்சி-நிரல் தொடர்பான அறிவிப்பு கோவில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
திருமால் எடுத்த அவதாரங்களில் வராஹி அவதாரத்தின் தியான ஸ்லோகத்தையும், மூலமந்திரத்தையும் அறிந்து கொள்ளலாம். இந்த மந்திர ஜபத்தினால் அரசியல் துறையில் உயர்ந்த பதவிகள் கிட்டும். புகழ் ஏற்படும்.
திருமால் எடுத்த மச்ச, கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.
அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்
முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம்
ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம்
ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே
பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் அரசியல் துறையில் உயர்ந்த பதவிகள் கிட்டும். புகழ் ஏற்படும்.
அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்
முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம்
ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம்
ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே
பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் அரசியல் துறையில் உயர்ந்த பதவிகள் கிட்டும். புகழ் ஏற்படும்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் வீரமாகாளியம்மன் கோவிலில் பச்சைக்காளி-பவளக்காளி திருநடனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தன
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கடந்த 7-ந்தேதி திருநடன விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கடந்த 10-ந்தேதி பவளக்காளி வீதிஉலா நடந்தது. அப்போது திருபுவனத்தில் பவளக்காளிக்கு மாவிளக்கு படைத்து அர்ச்சனை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
இந்தநிலையில் நேற்று பச்சைக்காளி-பவளக்காளி திருநடனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 10-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் சென்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் இருவேளை வாகன வீதிஉலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் பங்கேற்று ஆதி தம்பதியர்களான சிவன்-பார்வதியை வாழ்த்த வந்த கைலாசகிரி மலையில் வீற்றிருக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ேநற்று காலை உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கைலாசகிரி மலைக்கு கிரிவலம் சென்றனர்.
புதுமண தம்பதியர்களாக அலங்கரிக்கப்பட்ட சாமி, அம்பாள் ஜனதா அம்பாரி வாகனங்களில் எழுந்தருளினர். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் வில், அம்புகள் ஏந்தியும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் புதுப்ெபண் போலவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக ேகாவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சாமி, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோவிலில் இருந்து புறப்பட்ட கிரிவல ஊர்வலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த பங்காரம்மன் காலனி, ராமச்சந்திராபுரம், சிவநாதபுரம், கொத்தக்கண்டிகை, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்கள் வழியாகச் சென்றது. கிராமங்களை கடந்து செல்லும்போது 16 மண்டபங்களில் சாமி, அம்பாள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, கிரிவலத்தைத் தொடர்ந்தனர். சகஸ்ர லிங்கேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் சாமி, அம்பாளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
கிரிவலம் சென்று, அங்கிருந்து சாமி, அம்பாள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலை நோக்கி புறப்பட்டனர். கிரிவலத்தில் பங்ேகற்க முடியாத பக்தர்கள் பலர் சிவன், அம்பாள் திரும்பி வரும்போது, வழியில் எதிர்சேவை மண்டபம் அருகில் சென்று புதுமணத் தம்பதிகளான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை வரவேற்பதுபோல் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றுக்குச் சென்று தரிசனம் செய்தனர். சொர்ணமுகி ஆற்றில் சிறுவர், சிறுமிகள், பக்தர்கள் கூடி மகிழ்ந்ததுடன் சாமி தரிசனமும் செய்தனர்.
கிரிவல ஊர்வலத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர், ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு. மதுசூதன்ரெட்டி தம்பதியர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாமி, அம்பாள் கோவிலை அடைந்ததும் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ேநற்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
புதுமண தம்பதியர்களாக அலங்கரிக்கப்பட்ட சாமி, அம்பாள் ஜனதா அம்பாரி வாகனங்களில் எழுந்தருளினர். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் வில், அம்புகள் ஏந்தியும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் புதுப்ெபண் போலவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக ேகாவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சாமி, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோவிலில் இருந்து புறப்பட்ட கிரிவல ஊர்வலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த பங்காரம்மன் காலனி, ராமச்சந்திராபுரம், சிவநாதபுரம், கொத்தக்கண்டிகை, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்கள் வழியாகச் சென்றது. கிராமங்களை கடந்து செல்லும்போது 16 மண்டபங்களில் சாமி, அம்பாள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, கிரிவலத்தைத் தொடர்ந்தனர். சகஸ்ர லிங்கேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் சாமி, அம்பாளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
கிரிவலம் சென்று, அங்கிருந்து சாமி, அம்பாள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலை நோக்கி புறப்பட்டனர். கிரிவலத்தில் பங்ேகற்க முடியாத பக்தர்கள் பலர் சிவன், அம்பாள் திரும்பி வரும்போது, வழியில் எதிர்சேவை மண்டபம் அருகில் சென்று புதுமணத் தம்பதிகளான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை வரவேற்பதுபோல் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றுக்குச் சென்று தரிசனம் செய்தனர். சொர்ணமுகி ஆற்றில் சிறுவர், சிறுமிகள், பக்தர்கள் கூடி மகிழ்ந்ததுடன் சாமி தரிசனமும் செய்தனர்.
கிரிவல ஊர்வலத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர், ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு. மதுசூதன்ரெட்டி தம்பதியர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாமி, அம்பாள் கோவிலை அடைந்ததும் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ேநற்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.






