என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை.
மூலவர்: – தலையாட்டி விநாயகர்(காவல் கணபதி)
தீர்த்தம்: – வசிஷ்ட நதி
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
மாவட்டம்: – சேலம்
தலவரலாறு
சிவதல யாத்திரை சென்ற வசிட்ட முனிவர், வசிட்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை நிறுவனம் செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் நிறுவிய லிங்கத்தில் ஒளிப்பிழம்பு வடிவாக அமர்ந்தார் சிவன்.
காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டி முதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான்.
இவ்வாறு மன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு சிவனிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே, பணியைத் துவங்கினான். சிவனே கோயில் திருப்பணிக்குப் பாதுகாவலராகவும் இருந்தார். மன்னன் கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து “பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?” என்று கேட்டான். அதற்கு சிவன், “நன்றாகவே கட்டியிருக்கிறாய்‘ என்று சொல்லும்விதமாகத் தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்குத் “தலையாட்டிப் பிள்ளையார்” என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.
தலப்பெருமை
புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை.
பொதுத்தகவல்
முற்காலத்தில் இப்பகுதியில் வசிட்டநதி, சுவேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் “ஆற்றூர்‘ என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் “ஆத்தூர்” என்று மருவியுள்ளது. இவரது கோயிலுக்கு அருகில் சிவன், காயநிர்மாலேசுவரராக அருளுகிறார்.
திருவிழா: – விநாயகர் சதுர்த்தி.
கோரிக்கைகள்:
திருமண, புத்திர, கிரக தோடம் நீங்க இங்கு வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு புத்தாடை சாத்தி, பூசைகள் செய்து வழிபடுகிறார்கள்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில்,
ஆத்தூர் -636102,
சேலம் மாவட்டம்
தீர்த்தம்: – வசிஷ்ட நதி
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
மாவட்டம்: – சேலம்
தலவரலாறு
சிவதல யாத்திரை சென்ற வசிட்ட முனிவர், வசிட்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை நிறுவனம் செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் நிறுவிய லிங்கத்தில் ஒளிப்பிழம்பு வடிவாக அமர்ந்தார் சிவன்.
காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டி முதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான்.
இவ்வாறு மன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு சிவனிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே, பணியைத் துவங்கினான். சிவனே கோயில் திருப்பணிக்குப் பாதுகாவலராகவும் இருந்தார். மன்னன் கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து “பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?” என்று கேட்டான். அதற்கு சிவன், “நன்றாகவே கட்டியிருக்கிறாய்‘ என்று சொல்லும்விதமாகத் தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்குத் “தலையாட்டிப் பிள்ளையார்” என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.
தலப்பெருமை
புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை.
பொதுத்தகவல்
முற்காலத்தில் இப்பகுதியில் வசிட்டநதி, சுவேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் “ஆற்றூர்‘ என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் “ஆத்தூர்” என்று மருவியுள்ளது. இவரது கோயிலுக்கு அருகில் சிவன், காயநிர்மாலேசுவரராக அருளுகிறார்.
திருவிழா: – விநாயகர் சதுர்த்தி.
கோரிக்கைகள்:
திருமண, புத்திர, கிரக தோடம் நீங்க இங்கு வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு புத்தாடை சாத்தி, பூசைகள் செய்து வழிபடுகிறார்கள்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில்,
ஆத்தூர் -636102,
சேலம் மாவட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமை ஆகிய 3 நாட்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவிலின் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவுடன் கூடிய சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முகூர்த்த நாளையொட்டி அதிகாலை முதல் திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் நேற்று காலை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சிக்கு வந்த வெளியூர் மக்கள் பலர் நேற்று முன்தினமே அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று வந்த மக்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் முன்பதிவு செய்து இருந்த திருமண நிகழ்ச்சிகள் மட்டும் கோவில் வளாகத்தில் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது மணமக்களின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மட்டும் சமூக இடைவெளியுடன் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மண்டபங்களில் திருமணம் செய்த மணமக்கள் கோவில் ராஜகோபுரம், 16 கால் மண்டபம் முன்பு நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
அதன்படி நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவிலின் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவுடன் கூடிய சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முகூர்த்த நாளையொட்டி அதிகாலை முதல் திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் நேற்று காலை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சிக்கு வந்த வெளியூர் மக்கள் பலர் நேற்று முன்தினமே அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று வந்த மக்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் முன்பதிவு செய்து இருந்த திருமண நிகழ்ச்சிகள் மட்டும் கோவில் வளாகத்தில் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது மணமக்களின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மட்டும் சமூக இடைவெளியுடன் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மண்டபங்களில் திருமணம் செய்த மணமக்கள் கோவில் ராஜகோபுரம், 16 கால் மண்டபம் முன்பு நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதி தேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில் சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ஆதி இரட்டை விநாயகர் என்று போற்றப்படுபவரும் இவரே.
அது போலவே திருச்சி பாலக்கரைப் பக்கத்திலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.
தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார்போக அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.
திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும்.
விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
பொதுவாக, செவ்வாய்க் கிழமைகளில் வழிபட நாக தோஷம் விலகும், சனிக்கிழமைகளில் கனிவகைகளில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.
தஞ்சை, திருவையாறு, ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட்டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும். சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.
இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும்.
அது போலவே திருச்சி பாலக்கரைப் பக்கத்திலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.
தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார்போக அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.
திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும்.
விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
பொதுவாக, செவ்வாய்க் கிழமைகளில் வழிபட நாக தோஷம் விலகும், சனிக்கிழமைகளில் கனிவகைகளில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.
தஞ்சை, திருவையாறு, ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட்டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும். சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.
இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மராட்டா- வலம்புரி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தஞ்சை பெரியகோவிலில் பிள்ளையாருக்கு 25 கிலோ சந்தனம் பூசப்பட்டது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில், மன்னர் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு கட்டப்பட்டது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் இந்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.பின்னர் 13-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் அம்மன் சன்னதியும், விஜயநகர அரசர்களால் சுப்பிரமணியர் சன்னதியும் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து மராட்டியர் ஆட்சியில், இரண்டாம் சரபோஜி மன்னரால், 5 அடி உயரத்தில் பிரமாண்ட தோற்றத்தில், விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டது. இது மராட்டா விநாயகர் என்று அழைக்கப்படுகிறது.
அவருடைய ஆட்சிக்காலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. பின்னர் அவருடைய காலத்திற்கு பிறகு சிறப்பு வழிபாடுகள் மட்டுமே நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரம் எதுவும் நடைபெறவில்லை.கடந்த 2018-ம் ஆண்டு முதல், விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 25 கிலோ சந்தனத்தை கொண்டு விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி போன்றவை வைத்து படைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை காலங்களில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவில்கள் மூடப்பட்டதால் கோவிலின் வாயிலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சை கவாஸ்கார தெருவில் உள்ள அழகிக்குளக்கரையில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன், பெரியகோவில் கட்டுவதற்கு முன்பு கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று வலம்புரி விநாயகருக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைக்கப்பட்டது.
அவருடைய ஆட்சிக்காலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. பின்னர் அவருடைய காலத்திற்கு பிறகு சிறப்பு வழிபாடுகள் மட்டுமே நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரம் எதுவும் நடைபெறவில்லை.கடந்த 2018-ம் ஆண்டு முதல், விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 25 கிலோ சந்தனத்தை கொண்டு விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி போன்றவை வைத்து படைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை காலங்களில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவில்கள் மூடப்பட்டதால் கோவிலின் வாயிலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சை கவாஸ்கார தெருவில் உள்ள அழகிக்குளக்கரையில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன், பெரியகோவில் கட்டுவதற்கு முன்பு கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று வலம்புரி விநாயகருக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைக்கப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் ஜெபமாலை, சிறப்புத்திருப்பலிகள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது.
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் அனைத்து மக்களும் வழிபடும் வகையில் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தங்கத்தேர் கெபி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தங்கத்தேர் கெபியின் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் பங்கு மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்தவாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் ஜெபமாலை, சிறப்புத்திருப்பலிகள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தேர்ப்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாதாவின் தேர்ப்பவனியானது பங்குமக்கள், பக்தர்கள் யாரும் இன்றி மிகவும் எளிமையாக நடந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தூய அன்னை வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், தூய பூண்டிமாதா அன்பிய மக்கள், தங்கத்தேர் கெபித்திருவிழா கமிட்டியினர், பங்குமக்கள், எஸ்.எஸ்.மாணிக்கபுரம் பொதுமக்கள் மற்றும் இளைஞர் குழுவினர் செய்து இருந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் ஜெபமாலை, சிறப்புத்திருப்பலிகள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தேர்ப்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாதாவின் தேர்ப்பவனியானது பங்குமக்கள், பக்தர்கள் யாரும் இன்றி மிகவும் எளிமையாக நடந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தூய அன்னை வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், தூய பூண்டிமாதா அன்பிய மக்கள், தங்கத்தேர் கெபித்திருவிழா கமிட்டியினர், பங்குமக்கள், எஸ்.எஸ்.மாணிக்கபுரம் பொதுமக்கள் மற்றும் இளைஞர் குழுவினர் செய்து இருந்தனர்.
புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மணக்குள விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு அனுமதி அளித்தது. அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது.
கொரோனா விதிமுறைகளுடன் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நுழைவாயிலில் வெப்ப பரிசோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. அர்ச்சனை செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது.
கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வரும் இடத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கொரோனா குறித்து போலீசார் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே இருந்தனர்.
கோவில் வளாகத்தில் பக்தர்கள் யாரையும் அமர அனுமதிக்கவில்லை. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி தரிசனம் செய்ததும் உடனடியாக வெளியேற பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில், கணபதி நகர் பெரியாண்டவர் கோவில், திருவள்ளுவர் நகர் குரு வேலாயுதம் ஈஸ்வரர் கோவில், நெல்லித்தோப்பு வரசித்தி விநாயகர் உள்பட பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காந்தி வீதி, பாரதி வீதி, பழைய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட், கடலூர் ரோடு, நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள், பூஜைப்பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. சிறிய விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் வீட்டில் வைத்து வழிபட தங்களுக்கு பிடித்த சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர். இதுதவிர விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்ய தேவையான வண்ணக்குடைகள், அருகம்புல் மாலை, எருக்கம் பூ மற்றும் பூஜைக்கு தேவையான அவல், பொரி, பழங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
தொடர் விடுமுறை காரணமாக நேற்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதிபூங்கா, தாவரவியல் பூங்கா நோணாங்குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது.
கொரோனா விதிமுறைகளுடன் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நுழைவாயிலில் வெப்ப பரிசோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. அர்ச்சனை செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது.
கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வரும் இடத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கொரோனா குறித்து போலீசார் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே இருந்தனர்.
கோவில் வளாகத்தில் பக்தர்கள் யாரையும் அமர அனுமதிக்கவில்லை. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி தரிசனம் செய்ததும் உடனடியாக வெளியேற பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில், கணபதி நகர் பெரியாண்டவர் கோவில், திருவள்ளுவர் நகர் குரு வேலாயுதம் ஈஸ்வரர் கோவில், நெல்லித்தோப்பு வரசித்தி விநாயகர் உள்பட பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காந்தி வீதி, பாரதி வீதி, பழைய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட், கடலூர் ரோடு, நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள், பூஜைப்பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. சிறிய விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் வீட்டில் வைத்து வழிபட தங்களுக்கு பிடித்த சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர். இதுதவிர விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்ய தேவையான வண்ணக்குடைகள், அருகம்புல் மாலை, எருக்கம் பூ மற்றும் பூஜைக்கு தேவையான அவல், பொரி, பழங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
தொடர் விடுமுறை காரணமாக நேற்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதிபூங்கா, தாவரவியல் பூங்கா நோணாங்குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்-மாணிக்க விநாயகருக்கு 60 கிலோ கொழுக்கட்டை படையல் வைத்து வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விழா களை இழந்து காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புகழ் பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மலையின் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு தலா 30 கிலோ எடையிலான 60 கிலோ கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு இந்த கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து செல்லப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது. இதேபோல, காலை 10.15 மணிக்கு அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு கொழுக்கட்டை எடுத்து செல்லப்பட்டு படையலிடப்பட்டது.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழாவன்று அதிகாலை முதலே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றனர். இதனால், பக்தர்கள் இன்றி விழா களை இழந்து காணப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்சவர் திருக்குளம் கரையில் எழுந்தருளி அங்கு அங்குச தேவருக்கு திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடைபெற்று, காலை 9.20 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. கோவிலில் மதியம் மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் வழிபாடு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் தயாரான ‘மெகா’ கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு காரணமாக முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை இணையதளம், கோவில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழாவன்று அதிகாலை முதலே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றனர். இதனால், பக்தர்கள் இன்றி விழா களை இழந்து காணப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்சவர் திருக்குளம் கரையில் எழுந்தருளி அங்கு அங்குச தேவருக்கு திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடைபெற்று, காலை 9.20 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. கோவிலில் மதியம் மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் வழிபாடு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் தயாரான ‘மெகா’ கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு காரணமாக முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை இணையதளம், கோவில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா எளிமையாக நடைபெற்றது.
இதேபோல் இந்த ஆண்டும் எளிமையாகவே நடைபெற்றது. விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 6-ம் திருநாள் அன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் 10-ம் திருநாளான நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருகில் சண்டிகேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் உற்சவர் திருக்குளம் கரையில் எழுந்தருளி அங்கு அங்குச தேவருக்கு திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடைபெற்று, காலை 9.20 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவிலில் மதியம் மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் வழிபாடு நடைபெற்றது.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பதால், நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தெப்பக்குளம் கரையோரம் நின்றபடி தீர்த்தவாரி நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர். கோவில் வாசல் முன்பு நின்று மூலவரை வணங்கி விட்டு சென்றனர். இரவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் இந்த ஆண்டும் எளிமையாகவே நடைபெற்றது. விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 6-ம் திருநாள் அன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் 10-ம் திருநாளான நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருகில் சண்டிகேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் உற்சவர் திருக்குளம் கரையில் எழுந்தருளி அங்கு அங்குச தேவருக்கு திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடைபெற்று, காலை 9.20 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவிலில் மதியம் மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் வழிபாடு நடைபெற்றது.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பதால், நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தெப்பக்குளம் கரையோரம் நின்றபடி தீர்த்தவாரி நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர். கோவில் வாசல் முன்பு நின்று மூலவரை வணங்கி விட்டு சென்றனர். இரவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.
எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் ‘சுக்லாம்பரதரம்’ சொல்வோம். இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த ஸ்லோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும்.
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
‘சுக்லாம்பரதர’ - வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
‘விஷ்ணு’ என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர். ‘சசிவர்ண’- நிலா மாதிரி நிறம் உடையவர்-.
‘சதுர்புஜ’ - நான்கு கை உள்ளவர்.
‘ப்ரஸந்த வதந’- நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது. இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.
மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது. மேலும் சிரசில் இருக்கும் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று, முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜையும், ‘மெகா’ கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகர் சன்னதியும் சிறப்பு வாய்ந்தது. அங்கு வீற்றிருக்கும் 8 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்தது. திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்தில் அவரது அரண்மனையை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டியபோது, பூமியன் அடியில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் இந்த விநாயகர் சிலை எடுக்கப்பட்டது.
அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். விநாயகர் சதுர்த்தி அன்று, இந்த முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜையும், ‘மெகா’ கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.
நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், காலையில் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் 18 படி பச்சரிசி, வெல்லம், தேங்காய், கடலை, எள், நெய் ஆகியவை கலந்து பெரிய கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. அந்த மெகா கொழுக்கட்டையை 2 பேர் பேர் சுமந்து வந்து, பகல் 11.15 மணிக்கு மேல் விநாயகருக்கு படைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை இருப்பதால் நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை இணையதளம், திருக்கோவில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். விநாயகர் சதுர்த்தி அன்று, இந்த முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜையும், ‘மெகா’ கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.
நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், காலையில் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் 18 படி பச்சரிசி, வெல்லம், தேங்காய், கடலை, எள், நெய் ஆகியவை கலந்து பெரிய கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. அந்த மெகா கொழுக்கட்டையை 2 பேர் பேர் சுமந்து வந்து, பகல் 11.15 மணிக்கு மேல் விநாயகருக்கு படைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை இருப்பதால் நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை இணையதளம், திருக்கோவில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் வராக மூர்த்திக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் ஸ்நாபன திருமஞ்சனமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடந்தது.
திருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் நேற்று வராக ஜெயந்தி விழா நடந்தது. அதையொட்டி காலை கலச ஸ்தாபனம், கலச பூஜை, உற்சவருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் ஸ்நாபன திருமஞ்சனமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடந்தது.
விழாவில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, கோவில் அதிகாரி பாலசேஷாத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.
செல்வத்திற்கு அதிபதி லட்சுமிதேவி. அந்த லட்சுமிதேவியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால்தான் நமக்கு செல்வம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து லட்சுமிதேவியை பூஜை செய்பவர் லட்சுமியின் அருளைப் பெறுவார்கள். நம்முடைய பெண் தெய்வங்கள்தான் கல்விக்கும், செல்வத்திற்கும் வீரத்திற்கும் உரியவர்களாக விளங்குகிறார்கள். கல்விக்கு அதிபதி, நாமகளான சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி அலைமகளான லட்சுமிதேவி வீரத்திற்கு அதிபதி பார்வதிதேவி. இவளே துர்காதேவியும் ஆவாள்.
எல்லா செல்வங்களும் நிரம்பி இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்டலட்சுமி. என்றாலும் எத்தனையோ லட்சுமிகள் இருக்கிறார்கள். ஆனந்தலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, ஜோதிலட்சுமி, அனந்தலட்சுமி என்று பல லட்சுமிகள் இருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் ஜோதியாக விளக்கு பூஜை செய்வார்கள். அதனால்தான் தூபலட்சுமி என்று அழைத்து வணங்குகிறோம். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி பூஜை செய்யும்பொழுது தீபத்தில் பூக்களையோ, குங்குமத்தையோ போட்டு லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லலாம்.
அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்பவர்கள் ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசியை போட்டு அதில் அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்வார்கள். அரிசியை தானிய லட்சுமி என்றும், சாதமாக வடித்து விட்டால் அன்னலட்சுமி என்றும் கூறுவார்கள்.
அஷ்டலட்சுமிகளிலும் ஒவ்வொரு வகையிலும் நம் வாழ்விற்குரிய செல்வத்தையும், இன்பத்தையும், நிம்மதியையும் தேவையையும் பூர்த்தி செய்கிறாள். அன்னபூரணி சிலைக்கு அடியில் வைத்த அரிசியை மறுநாள் சமையலில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
பதவியைத் தருபவள் கஜலட்சுமி. குழந்தை பேற்றைத் தருபவள் சந்தானலட்சுமி. செல்வத்தை தருபவள் தான்ய லட்சுமி. வித்தையை தருபவள் வித்யாலட்சுமி. வீரத்தை தருபவள் வீரலட்சுமி. வெற்றியைத தருபவள் விஜயலட்சுமி.
லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.
பலவகைகளிலும் லட்சுமி பூஜையை செய்தாலும் மகாலட்சுமி பூஜையை வருடத்திற்கு ஏழு முறைதான் செய்ய வேண்டும். இந்த பூஜையை செய்ய சில முறைகள் இருக்கின்றன.
திருமணமான பெண்கள்தான் மகாலட்சுமி பூஜையை செய்யவேண்டும். பிறந்த வீட்டில் இந்த பூஜையை செய்யும் வழக்கம் இருந்தாலும் புகுந்த வீட்டில் செய்யும் வழக்கம் இருந்தால்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அஷ்டோத்திர மந்திரங்களை சொல்லி பூ போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரை பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், சாதம் இவைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜையை பார்க்க வந்தவர்களுக்கு தாம்பூலமும் பிரசாதமும் கொடுக்க வேண்டும்.
எல்லா செல்வங்களும் நிரம்பி இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்டலட்சுமி. என்றாலும் எத்தனையோ லட்சுமிகள் இருக்கிறார்கள். ஆனந்தலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, ஜோதிலட்சுமி, அனந்தலட்சுமி என்று பல லட்சுமிகள் இருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் ஜோதியாக விளக்கு பூஜை செய்வார்கள். அதனால்தான் தூபலட்சுமி என்று அழைத்து வணங்குகிறோம். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி பூஜை செய்யும்பொழுது தீபத்தில் பூக்களையோ, குங்குமத்தையோ போட்டு லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லலாம்.
அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்பவர்கள் ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசியை போட்டு அதில் அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்வார்கள். அரிசியை தானிய லட்சுமி என்றும், சாதமாக வடித்து விட்டால் அன்னலட்சுமி என்றும் கூறுவார்கள்.
அஷ்டலட்சுமிகளிலும் ஒவ்வொரு வகையிலும் நம் வாழ்விற்குரிய செல்வத்தையும், இன்பத்தையும், நிம்மதியையும் தேவையையும் பூர்த்தி செய்கிறாள். அன்னபூரணி சிலைக்கு அடியில் வைத்த அரிசியை மறுநாள் சமையலில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
பதவியைத் தருபவள் கஜலட்சுமி. குழந்தை பேற்றைத் தருபவள் சந்தானலட்சுமி. செல்வத்தை தருபவள் தான்ய லட்சுமி. வித்தையை தருபவள் வித்யாலட்சுமி. வீரத்தை தருபவள் வீரலட்சுமி. வெற்றியைத தருபவள் விஜயலட்சுமி.
லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.
பலவகைகளிலும் லட்சுமி பூஜையை செய்தாலும் மகாலட்சுமி பூஜையை வருடத்திற்கு ஏழு முறைதான் செய்ய வேண்டும். இந்த பூஜையை செய்ய சில முறைகள் இருக்கின்றன.
திருமணமான பெண்கள்தான் மகாலட்சுமி பூஜையை செய்யவேண்டும். பிறந்த வீட்டில் இந்த பூஜையை செய்யும் வழக்கம் இருந்தாலும் புகுந்த வீட்டில் செய்யும் வழக்கம் இருந்தால்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அஷ்டோத்திர மந்திரங்களை சொல்லி பூ போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரை பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், சாதம் இவைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜையை பார்க்க வந்தவர்களுக்கு தாம்பூலமும் பிரசாதமும் கொடுக்க வேண்டும்.






