என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு இன்று முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு இன்று முதல் 19-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
17-ந் தேதி பவுர்ணமியன்று சுந்தரமகாலிங்கசுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அத்துடன் முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. நீர் ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
17-ந் தேதி பவுர்ணமியன்று சுந்தரமகாலிங்கசுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அத்துடன் முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. நீர் ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
நவம்பர் மாதம் 16-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 22-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
16-ம் தேதி செவ்வாய் கிழமை :
* பிரதோஷம்
* திருவண்ணமலை அருணாச்சல நாயகர் மஹாரதோற்சவம்
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
17-ம் தேதி புதன் கிழமை :
* கரிநாள்
* ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்
18-ம் தேதி வியாழக்கிழமை :
* பவுர்ணமி
* பரணி தீபம்
* கார்த்திகை கௌரி விரதம்
* நத்தம் மாரியம்மன் லட்சதீப காட்சி
* சந்திராஷ்டமம்- சித்திரை
19-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* திருக்கார்த்திகை தீபம்
* திருவண்ணாமலை தீபம்
* சந்திராஷ்டமம் - சுவாதி
20-ம் தேதி சனிக்கிழமை :
* அமிர்த யோகம்
* ஸ்ரீபாஞ்சராத்திர தீபம்
* திருப்பரங்குன்றம், சுவாமிமலை இத்தலங்களில் முருகப்பெருமான தீர்த்தவாரி
* திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு ஆராதனை
* கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - விசாகம்
21-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சித்தயோகம்
* சுபமுகூர்த்தநாள்
* கண்ணூறு கழித்தல் நன்று
* சந்திராஷ்டமம் - அனுஷம்
22-ம் தேதி திங்கள் கிழமை :
* கரிநாள்
* திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுகுன்றம் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்
* சந்திராஷ்டமம் - கேட்டை
இதையும் படிக்கலாம்.... இந்த வார விசேஷங்கள்: 9.11.21 முதல் 15.11.21 வரை
* பிரதோஷம்
* திருவண்ணமலை அருணாச்சல நாயகர் மஹாரதோற்சவம்
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
17-ம் தேதி புதன் கிழமை :
* கரிநாள்
* ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்
18-ம் தேதி வியாழக்கிழமை :
* பவுர்ணமி
* பரணி தீபம்
* கார்த்திகை கௌரி விரதம்
* நத்தம் மாரியம்மன் லட்சதீப காட்சி
* சந்திராஷ்டமம்- சித்திரை
19-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* திருக்கார்த்திகை தீபம்
* திருவண்ணாமலை தீபம்
* சந்திராஷ்டமம் - சுவாதி
20-ம் தேதி சனிக்கிழமை :
* அமிர்த யோகம்
* ஸ்ரீபாஞ்சராத்திர தீபம்
* திருப்பரங்குன்றம், சுவாமிமலை இத்தலங்களில் முருகப்பெருமான தீர்த்தவாரி
* திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு ஆராதனை
* கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - விசாகம்
21-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சித்தயோகம்
* சுபமுகூர்த்தநாள்
* கண்ணூறு கழித்தல் நன்று
* சந்திராஷ்டமம் - அனுஷம்
22-ம் தேதி திங்கள் கிழமை :
* கரிநாள்
* திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுகுன்றம் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்
* சந்திராஷ்டமம் - கேட்டை
இதையும் படிக்கலாம்.... இந்த வார விசேஷங்கள்: 9.11.21 முதல் 15.11.21 வரை
நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.
குருவைப் பற்றிய ‘ஸ்ரீகாண்டேயா’ என்ற சுலோகம், 7 வகையான குரு இருப்பதாக சொல்கிறது. அதாவது தேவகுரு - பிரகஸ்பதி, அசுரகுரு - சுக்ராச்சாரியார், ஞானகுரு - சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு - பிரம்மா, விஷ்ணு குரு - வரதராஜர், சக்தி குரு - சவுந்தர்யநாயகி, சிவகுரு - தட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளனர்.
இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், பிரம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், பிரம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) கைசிக துவாதசி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை கோவிலில் சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகள் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை சூரிய உதயத்துக்கு முன்பாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) கைசிக துவாதசி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை கோவிலில் சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகள் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை சூரிய உதயத்துக்கு முன்பாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார்த்திகை மாத திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழாவில் லட்சதீபம் வருகிற 19-ந் தேதி ஏற்றப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாதத்திற்கான திருவிழா 14-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சுவாமி கொடிமரத்தில் கார்த்திகை மாத திருவிழா கொடியேற்றம் நடந்தது. அப்போது அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
முக்கிய திருவிழாவான 19-ந் தேதி பெரியகார்த்திகை அன்று கோவிலில் மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதிகளில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளி அங்கு சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.
திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
முக்கிய திருவிழாவான 19-ந் தேதி பெரியகார்த்திகை அன்று கோவிலில் மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதிகளில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளி அங்கு சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.
திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை மயூரநாதர்கோவிலில் நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர்கோவில் நாயன்மார்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த புகழ்பெற்ற கோவிலாகும். மயிலாடுதுறையில் துலாக்கட்ட காவிரிக்கரையில் புனித நீராடி அம்மன் மயிலாக இறைவனை பூஜித்ததாகவும், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாதத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவச்சுமைகளை போக்கி கொண்டதாகவும் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ஐப்பசி மாதத்தில் கடைசி 10 நாட்கள் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து கோவில்களின் சாமி மற்றும் அம்மன் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு மயூரநாதர் கோவில், வதாண்யேஸ்வரர் கோவில், படித்துறை விஸ்வநாதர் கோவில், அய்யாரப்பர் கோவில், காசி விஸ்நாதர்கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் துலா உற்சவ விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அப்போது மயூரநாதர், அவையாம்பிகையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண விழா நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு ஐப்பசி மாதத்தில் கடைசி 10 நாட்கள் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து கோவில்களின் சாமி மற்றும் அம்மன் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு மயூரநாதர் கோவில், வதாண்யேஸ்வரர் கோவில், படித்துறை விஸ்வநாதர் கோவில், அய்யாரப்பர் கோவில், காசி விஸ்நாதர்கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் துலா உற்சவ விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அப்போது மயூரநாதர், அவையாம்பிகையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண விழா நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தரிசன டிக்கெட்களை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும்.
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், நேரடியாக வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன் அளிப்பது அல்லது ஆன்லைனில் டிக்கெட் வழங்குவது குறித்தும் இன்னும் 2, 3 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. திருப்பதியில் பக்தர்களை அதிக அளவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே விரைவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 30-ந்தேதி வரை ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அதை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தரிசன டிக்கெட்களை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும்.
மாநிலத்தில் கொரோனா குறைந்தாலும் சித்தூர் மாவட்டத்தில் எண்ணிக்கை தொடர்ந்து குறையாமல் உள்ளது. இதற்கான காரணத்தை தேவஸ்தானம் ஆராய்ந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு எண்ணிகையை வைத்து விரைவில் ஏழுமலையானுக்கு நடக்கும் சுப்பரபாதம், அர்ச்சனை போன்ற ஆர்ஜித் சேவைகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.
திருப்பதியில் தற்போது தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. திருப்பதியில் பக்தர்களை அதிக அளவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே விரைவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 30-ந்தேதி வரை ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அதை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தரிசன டிக்கெட்களை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும்.
மாநிலத்தில் கொரோனா குறைந்தாலும் சித்தூர் மாவட்டத்தில் எண்ணிக்கை தொடர்ந்து குறையாமல் உள்ளது. இதற்கான காரணத்தை தேவஸ்தானம் ஆராய்ந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு எண்ணிகையை வைத்து விரைவில் ஏழுமலையானுக்கு நடக்கும் சுப்பரபாதம், அர்ச்சனை போன்ற ஆர்ஜித் சேவைகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.
திருப்பதியில் தற்போது தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.
இன்று சிவனை வணங்குவோர் விரதம் இருந்து அப்பனை காலையில் வீட்டில் நித்ய பூஜையிலும் மாலையில் கோயிலுக்கு சென்று சிவனை வணங்குவோருக்கு மறுபிறவியே இல்லை...
அந்த அளவுக்கு சிவனுக்கு பிடித்த நாள் திங்கள் கிழமை...
விரதம் என்றால் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...
அசைவம் தொடாமல் வேறு ஏதும் தவறான பழக்கங்களை செய்யாமலும் அன்றைய தினம் தீருநிறு அணிந்து சிவனை வணங்கிணாலே போதும்....
அதே போல் தங்கம் வைரம் இவற்றால் பயமே தவிர பாதுகாப்பு இல்லை...
ஆனால் கழுத்தில் அணியும் ருத்திராச்சம் இருக்கிறதே அதற்கு உள்ள சக்தி உலகத்தில் எதற்கும் இல்லை...
32 ருத்திராச்சம் கொண்ட ஐந்து முகம் கொண்ட ருத்திராச்ச மாலையை அணிந்தால் எதிரியும் உன்னை பார்த்து வணங்குவான்...
தினமும் தவறாது நெற்றில் திருநீறு பூசுபவர்களுக்கு நான் என்ற அகந்தை முற்றிலும் அழிக்கப்ட்டு அன்பே வடிவாய் வாழ்பார்கள்..
சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.
சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை உபவாசம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். ரொம்பவே எளிமையான விரதமுறை தான் இது. ஆனால் பலனை பார்த்தால் அதிசயிக்கும் வண்ணம் பெரிதாகவே இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் உருவாக்கித் தருவார்.
அன்றைய நாளில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். வில்வ இலைகள் கிடைக்காதவர்கள் தோஷம் போக்கும் செவ்வரளி மலர்கள், சங்கு பூக்கள் அல்லது உங்கள் வீட்டில் பூக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் எதுவாயினும் அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம்.
நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். அன்றைய நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் உச்சரித்து வரவேண்டும். பின்னர் மாலையில் விளக்கேற்றி தூப, தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் உங்களுடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். இந்த விரதத்தை நீங்கள் முடிப்பதற்குள் கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும், அன்னோன்யம் அதிகரிக்கும்.
அந்த அளவுக்கு சிவனுக்கு பிடித்த நாள் திங்கள் கிழமை...
விரதம் என்றால் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...
அசைவம் தொடாமல் வேறு ஏதும் தவறான பழக்கங்களை செய்யாமலும் அன்றைய தினம் தீருநிறு அணிந்து சிவனை வணங்கிணாலே போதும்....
அதே போல் தங்கம் வைரம் இவற்றால் பயமே தவிர பாதுகாப்பு இல்லை...
ஆனால் கழுத்தில் அணியும் ருத்திராச்சம் இருக்கிறதே அதற்கு உள்ள சக்தி உலகத்தில் எதற்கும் இல்லை...
32 ருத்திராச்சம் கொண்ட ஐந்து முகம் கொண்ட ருத்திராச்ச மாலையை அணிந்தால் எதிரியும் உன்னை பார்த்து வணங்குவான்...
தினமும் தவறாது நெற்றில் திருநீறு பூசுபவர்களுக்கு நான் என்ற அகந்தை முற்றிலும் அழிக்கப்ட்டு அன்பே வடிவாய் வாழ்பார்கள்..
சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.
சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை உபவாசம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். ரொம்பவே எளிமையான விரதமுறை தான் இது. ஆனால் பலனை பார்த்தால் அதிசயிக்கும் வண்ணம் பெரிதாகவே இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் உருவாக்கித் தருவார்.
அன்றைய நாளில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். வில்வ இலைகள் கிடைக்காதவர்கள் தோஷம் போக்கும் செவ்வரளி மலர்கள், சங்கு பூக்கள் அல்லது உங்கள் வீட்டில் பூக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் எதுவாயினும் அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம்.
நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். அன்றைய நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் உச்சரித்து வரவேண்டும். பின்னர் மாலையில் விளக்கேற்றி தூப, தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் உங்களுடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். இந்த விரதத்தை நீங்கள் முடிப்பதற்குள் கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும், அன்னோன்யம் அதிகரிக்கும்.
இன்று திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மேலும் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து கொல்லம் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு கேரள அரசு விடுமுறை அளித்து உள்ளது.
நேற்று பெய்த கன மழையால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகள், வீடுகள் மூழ்கும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மந்திரிகள், மாவட்ட காலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) வரை முன்பதிவு செய்த பக்தர்களுக்கு வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். தற்காலிக அவசர முன்பதிவு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10-ந் தேதி முதல் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் இல்லை. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று பெய்த கன மழையால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகள், வீடுகள் மூழ்கும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மந்திரிகள், மாவட்ட காலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) வரை முன்பதிவு செய்த பக்தர்களுக்கு வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். தற்காலிக அவசர முன்பதிவு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10-ந் தேதி முதல் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் இல்லை. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் பாராயணம் செய்தால் ராகு, கேது தோஷங்கள் நீங்கும். எல்லா செயல்களிலும் வெற்றி கிட்டும்.
ஸிந்தூராருணமிந்துகாந்திவதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம்
அம்போஜாபயசக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
ஸுப்ரஹ்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்
சுப்ரமண்ய த்யானம்.
பொதுப்பொருள்:
சிந்தூரம் போல் சிவந்த வண்ணம் கொண்டவரே, சந்திரன் போன்ற பேரழகு முகத்தவரே, தோள்வளை, முக்தாஹாரம் முதலான திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரே, ஸ்வர்க்க போகம் முதலான சுகத்தை அளிப்பவரே, தாமரைப்பூ, அபயஹஸ்தம், சக்திவேல், சேவல் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரே, சிவந்த வாசனைப் பொடிகளால் நறுமணம் கமழ்பவரே, பக்தி செலுத்துவோரின் பயத்தைப் போக்குபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம்.
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம்
அம்போஜாபயசக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
ஸுப்ரஹ்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்
சுப்ரமண்ய த்யானம்.
பொதுப்பொருள்:
சிந்தூரம் போல் சிவந்த வண்ணம் கொண்டவரே, சந்திரன் போன்ற பேரழகு முகத்தவரே, தோள்வளை, முக்தாஹாரம் முதலான திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரே, ஸ்வர்க்க போகம் முதலான சுகத்தை அளிப்பவரே, தாமரைப்பூ, அபயஹஸ்தம், சக்திவேல், சேவல் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரே, சிவந்த வாசனைப் பொடிகளால் நறுமணம் கமழ்பவரே, பக்தி செலுத்துவோரின் பயத்தைப் போக்குபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம்.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் பக்தர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளது. எனவே வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
இதேபோல் 19-ந்தேதி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை. மேலும் வருகிற 16-ந் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவதால் பக்தர்கள் அன்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. எனவே அந்த நாட்களில் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது திருவிழாவை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையங்கள் 4 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையங்கள் வருகிற 23-ந் தேதி வரை செயல்படும். ஈசானியம், செங்கம் ரோடு, காஞ்சி ரோடு, திருக்கோவிலூர் ரோடு ஆகியவற்றில் இந்த பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் பக்தர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளது. எனவே வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
இதேபோல் 19-ந்தேதி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை. மேலும் வருகிற 16-ந் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவதால் பக்தர்கள் அன்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. எனவே அந்த நாட்களில் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது திருவிழாவை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையங்கள் 4 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையங்கள் வருகிற 23-ந் தேதி வரை செயல்படும். ஈசானியம், செங்கம் ரோடு, காஞ்சி ரோடு, திருக்கோவிலூர் ரோடு ஆகியவற்றில் இந்த பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் பக்தர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. சாதாரண நாட்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. மேலும் தொடர் மழையும் பக்தர்கள் வருகை குறையக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்...அரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பலன் தரும்
பழனியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயில் தாக்கம் இன்றி பக்தர்கள் ஆனந்தமுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் குடும்பத்துடன் வந்தவர்கள் ஆங்காங்கே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை மற்றும் முகூர்த்தநாள் என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.
அதிகாலை முதலே அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்ததை பார்க்க முடிந்தது.
இதேபோல் படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட தரிசன வழிகளிலும், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பழனியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயில் தாக்கம் இன்றி பக்தர்கள் ஆனந்தமுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் குடும்பத்துடன் வந்தவர்கள் ஆங்காங்கே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அதிகாலை முதலே அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்ததை பார்க்க முடிந்தது.
இதேபோல் படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட தரிசன வழிகளிலும், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பழனியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயில் தாக்கம் இன்றி பக்தர்கள் ஆனந்தமுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் குடும்பத்துடன் வந்தவர்கள் ஆங்காங்கே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.






