என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் - கயல் ஆனந்தி - சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியாக இருக்கும் `மன்னர் வகையறா' படத்தின் முன்னோட்டம்.
    ஏ3வி சினிமாஸ் மற்றும் அரசு பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் மன்னர் வகையறா. 

    பூபதி பாண்டியன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விமல் கதாநாயகனாகவும், கயல் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, சாந்தினி தமிழரசன், கார்த்திக், நாசர், நீலிமா ராணி, சரண்யா பொன்வண்ணன், ரோபோ ஷங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், ரேதிகா ஸ்ரீனிவாஸ், பிக்பாஸ் ஜூலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ஒளிப்பதிவு - பி.ஜி.முத்தையா, சுராஜ் நல்லுசாமி, இசை - ஜேக்ஸ் பிஜோய், கலை இயக்குநர்- கே.சம்பத் திலக், எடிட்டிங் - எம்.கோபி கிருஷ்ணா, சண்டைப்பயிற்சி - சுப்ரீம் சுந்தர், தயாரிப்பு - என்.விமல். எழுத்து, இயக்கம் - பூபதி பாண்டியன்.



    படம் குறித்து இயக்குநர் பூபதி பாண்டியன் பேசம் போது,

    “மன்னர் வகையறா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக, அதேசமயம் அனைத்தையும் பாசிடிவாகவே இதில் அணுகியிருக்கிறோம் என்றார்.

    படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

    பிரியதர்‌ஷன் இயக்கத்தில் உதயநிதி - நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நிமிர்’ படத்தின் முன்னோட்டம்.
    மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள படம் ‘நிமிர்’.

    இதில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இவர்களுடன் நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    போட்டோகிராபராக நடிக்கும் உதயநிதிக்கு, இந்த படத்தில் தன் சுயபலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழி வாங்கும் கதாபாத்திரம்.

    ஒளிப்பதிவு - என்.கே.ஏகாம்பரம், கதை - சுயாம் புஸ்கரன், வசனம் - சமுத்திரக்கனி, இசை - தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத், படத்தொகுப்பு - நாயர் எம்.எஸ்., கலை - மோகன்தாஸ், தயாரிப்பு - சந்தோஷ் டி.குருவில்லா, இயக்கம் - பிரியதர்‌ஷன்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “இது எனக்கு ஒரு ஸ்பெ‌ஷல் படம். இவ்வளவு ஆண்டு காலம் திரைதுறையில் இருந்தாலும் இயக்குனர் மகேந்திரனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில்லை. முதலில் அவருக்கு உதவி இயக்குனராக இருக்க ஆசைப்பட்டேன். அது நடக்காமல் போனது. இந்த படத்தில் தான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக அவர் நடித்துள்ளார்.

    சமுத்திரகனியின் நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். கதாநாயகி நமீதா பிரமோத் அருமையாக நடித்துள்ளார். சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். ‘நிமிர்’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

    பிராகிரண்ட் நேச்சர் பிலிம் கிரியே‌ஷன்ஸ் சார்பாக சஜீவ் பி.கே, ஆன்சஜீவ் தயாரித்துள்ள படம் ‘கேணி’. இந்த படத்தில் ஜெயப்ரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

    பிராகிரண்ட் நேச்சர் பிலிம் கிரியே‌ஷன்ஸ் சார்பாக சஜீவ் பி.கே, ஆன்சஜீவ் தயாரித்துள்ள படம் ‘கேணி’. இந்த படத்தில் ஜெயப்ரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் பார்த்திபன், நாசர். இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.


    ஒளிப்பதிவு- நெளஷாத் ஷெரிப், இசை- எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை-சாம் சி.எஸ்., எடிட்டிங்- ராஜாமுகமது, பாடல்கள்- பழனிபாரதி, கதை, திரைக்கதை, இயக்கம்- எம்.ஏ.நிஷாத். இவர் 7 மலையாள படங்களை இயக்கியவர்.


    இந்த படம் குறித்து இயக்குனர் எம்.ஏ.நிஷாத் கூறுகையில்....


    “தமிழ்நாடு- கேரளா எல்லையில் நடக்கும் சம்பவங்களை கொண்டு ‘கேணி’ உருவாகி இருக்கிறது. இது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். முழுக்க முழுக்க சமூகத்திற்கான படம். எதிர் காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சினையாக மாறப் போகிற தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை ‘கேணி’ ஏற்படுத்தும். எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீர் பொதுவானது. அதை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை என்பதை இந்த படத்தின் மூலம் ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். 25 ஆண்டுகளுக்கு பிறகு இதில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து பாடி இருக்கிறார்கள்” என்றார்.


    ‘கேணி’ தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - பிரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகி வரும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் முன்னோட்டம்.
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    இதில், கார்த்தி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    இசை - டி.இமான் ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பு - சூர்யா, இயக்கம் - பாண்டிராஜ்.

    விவசாயத்தை பெருமைபடுத்தும் படமாக இது உருவாகிறது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் பொங்கல் தினத்தையொட்டி வெளியானது. அதில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார்த்தி உட்கார்ந்து இருக்கிறார். அதில் லுங்கி, தலைப்பாகை கட்டி  கிராமத்து இளைஞராக காட்சி அளிக்கிறார். 



    மோட்டார் சைக்கிளின் முன்னால் `விவசாயி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. `கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்தின் தலைப்பின் கீழே `பயிர் செய்யவிரும்பு' என்ற துணைத்தலைப்பு இடம் பெற்றுள்ளது. எனவே, இது முழுக்க முழுக்க விவசாயத்தை கருவாக கொண்ட கதை என்பது உறுதியாகி உள்ளது. சூர்யா  தயாரிப்பில், அவரது தம்பி கார்த்தி நடிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இதனால் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    எல்.எஸ்.கே.மூவிஸ் வழங்கும் மோரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘மோகனா’. பேயை பின்னணியாக கொண்டு இது உருவாகிறது. இதில் மொட்டை ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன், கல்யாணி நாயர், அஸ்மித்தா, கிங்காங், உமா, மோரா, மும்பை ஸ்ரீனுஸ்ரீ ஹரிஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
    எல்.எஸ்.கே.மூவிஸ் வழங்கும் மோரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘மோகனா’. பேயை பின்னணியாக கொண்டு இது உருவாகிறது. இதில் மொட்டை ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன், கல்யாணி நாயர், அஸ்மித்தா, கிங்காங், உமா, மோரா, மும்பை ஸ்ரீனுஸ்ரீ ஹரிஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு-ஆர்.ஏ.ஆனந்த். படப்பிடிப்பு அனுபவம் பற்றி மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும் போது....

    “இந்தப்படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு காஞ்சீபுரத்தை அடுத்த மருதம் கிராமத்தில் ஒரு பாழடைந்த பங்களாவில் நடந்தது. தொடர்ந்து முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருந்ததால், இரவு அங்கேயே தங்கினோம். இரவு 12 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த எங்கள் இருவரையும் ஒரு அழகான பெண் எழுப்பியது. நாங்கள் தூக்க கலக்கத்தில் எழுந்து அந்த அழகான பெண் பின்னாடியே மொட்டை மாடிக்கு சென்றோம். மாடிக்கு போய் கண் விழித்த போது நாங்கள் மொட்டைமாடியின் சுவரின் மீது ஏறி நின்றிருப்பது தெரிய வந்தது. அப்போது அந்த பெண் இந்த மாடியிலிருந்து குதியுங்கள் என்று பயமுறுத்தினாள். அலறிய நாங்கள் இருவரும் பதட்டத்துடன் மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடி வந்தோம்.

    இந்த சம்பவத்தால் அன்று இரவே அந்த ஊரையும் பாழடைந்த பங்களாவையும் விட்டு விட்டு அவுட்டோர் யூனிட் வண்டியிலும், வேனிலும், காரிலும் ஏறி தப்பி வந்தோம். இந்த நிகழ்ச்சியை இன்று வரை எங்களால் மறக்க முடிய வில்லை” என்றார்கள்.

    ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இந்த படத்தை ரசாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.
    ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இந்த படத்தை ரசாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.

    கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர்அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய இயக்குனர்கள் இதில் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

    படம் பற்றி இயக்குனர் ரசாக் கூறுகிறார்...

    “வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் 4 முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று வருகிறது. இதை முடிக்க நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்களும் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இறுதியில் நான்கு பேரும் இந்த குற்றச்சாட்டிலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்பதே கதை. இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டு வாசித்தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இது திரில்லர், ஆக்‌‌ஷன், திகில் கலந்து உருவாகி இருக்கிறது”.
    விஜய்சரண் இயக்கத்தில் குழந்தை கடத்தலை கருவாக கொண்டு காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கும் ‘லக்கா மாட்டிக்கிச்சு’ படத்தின் முன்னோட்டம்.
    சூப்பர் பிரண்ட்ஸ் மூவீஸ் தயாரிக்கும் படம் ‘லக்கா மாட்டிக்கிச்சு’.

    ‘நான் அப்படியே ஷாக்காகிட்டேன்’ படத்தின் இயக்குனர் விஜய் சரண் இயக்கும் அடுத்த படம் இது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் விஜய் சரண் களம் இறங்கி உள்ளார்.

    ‘வாண்டு’ படத்தில் அறிமுகமான ஆனந்த் இந்த படத்தில் முழுநேர காமெடியனாகி இருக்கிறார். இவரோடு லொல்லு சபா மனோகர், கொட்டாச்சி ஆகியோரும் காமெடியில் கலக்குகிறார்கள். தப்பாட்ட நாயகன் சுதாகர் வில்லனாக நடிக்கிறார்.

    இவர்களுடன் ஆரீஸ், சுரேஷ், பார்வதி, அஞ்சு, மஞ்சு, சுப்ரஜா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ராம்குமார், இசை - மோகன், நடனம் - சுரேஷ். 

    படம் பற்றி கூறிய இயக்குனர் விஜய்சரண், “நாயகன் பணத்திற்காக குழந்தையை கடத்துகிறான். அவனை துரத்திக் கொண்டு 4 பேர் செல்கிறார்கள். அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பி ஓடும் போது குழந்தையின் மீது நாயகனுக்கு பாசம் வருகிறது. அந்த நால்வரும் அவனை சுற்றி வளைக்கின்றனர்.

    அப்போது அவர்களும் அந்த குழந்தையை கடத்த வந்தவர்கள் என்பது தெரிகிறது. நாயகன் குழந்தையை எப்படி காப்பாற்றினார்? கடத்திய அவரே குழந்தையை பெற்றோரிடம் எப்படி ஒப்படைத்தார்? என்று நகைச்சுவையாக சொல்லும் படம் தான் ‘லக்கா மாட்டிக்கிச்சு’.

    நகைச்சுவை கலாட்டாவாக இந்த படம் உருவாகி வருகிறது என்றார்.

    ராம்ஷேவா இயக்கத்தில் ராமகிருஷ்ணன் - தருஷி நடிப்பில் சென்டிமென்ட் - காமெடி கலவையாக உருவாகி இருக்கும் ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தின் முன்னோட்டம்.
    அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘டீக்கடை பெஞ்ச்’.

    இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். இவர்களுடன் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ரா லட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - வெங்கடேஸ்வர் ராவ், இசை - வி.ஸ்ரீசாய்தேவ், கலை - அன்பு, எடிட்டிங் - ஆனந்த், நடனம் - கிரீஷ், ஹபீப், தயாரிப்பு - வி.ஜே.ரெட்டி, எஸ்.செந்தில்குமார், என்.செந்தில் குமார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - ராம்ஷேவா.



    இயக்குனரிடம் படம் பற்றி கேட்ட போது...

    “இது சென்டிமென்ட் கலந்த நகைச்சுவை படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகனுக்கு தெரியாமல் நாயகி தருஷி எடுத்துச்செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க, இருவருக்கும் மோதல் உண்டாகிறது. இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பகையாகிறான். இறுதியில் நட்பு வென்றதா? இல்லை காதல் வென்றதா? என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். இது ஜனரஞ்சகமான படம். ஐந்து பாடல்கள் உள்ளன. கானா பாலா ஒரு பாடலை பாடி நடனமாடி இருக்கிறார்” என்றார்.

    படப்பிடிப்பு பழனி, கொடைக்கானல், பொள்ளாச்சி, சென்னையில் நடந்துள்ளது.

    ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த் இயக்கத்தில் அப்பு கிருஷ்ணா - முக்‌ஷா நடிப்பில் ஓலைச்சுவடியை கண்டு பிடிக்கும் ‘முந்தல்’ படத்தின் முன்னோட்டம்.
    ஹார்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘முந்தல்’.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ள ஜெயந்த், ‘முந்தல்’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

    அப்பு கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகும் இதில், நாயகியாக முக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ரிஷா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

    ஒளிப்பதிவு - ராஜா, இசை - கே.ஜெய்கிருஷ், எடிட்டிங் - சாய் சுரேஷ், நடனம் - ஜாய்மதி, தயாரிப்பு - கே.பாலகுமரன், இயக்கம் - ஜெயந்த்.



    “புற்று நோயை குணப்படுத்த கூடிய மருந்துகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டனர். வியாபார நோக்கில் சிலர் மறைத்து வைக்கும் அந்த ஓலைச்சுவடியை தேடி ஹீரோ செல்கிறார். அதே ஓலைச்சுவடியை தேடி வேறு சிலரும் செல்கிறார்கள். இறுதியில் அது யார் கையில் கிடைத்தது என்பது கதை.

    சமூக அக்கறையுடன் கூடிய, இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், எந்தவித கட்டும் செய்யாமல் ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். படத்தை பாராட்டி இயக்குனர் ஜெயந்துக்கு இனிப்பும் வழங்கினார்கள். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ‘முந்தல்’ படத்தை விரைவில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

    எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா - ஹன்சிகா நடிப்பில் காமெடி படமாக உருவாகி இருக்கும் `குலேபகாவலி' படத்தின் முன்னோட்டம்.
    கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. 

    முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா, மதுசூதனன் ராவ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ஒளிப்பதிவு - ஆனந் குமார், இசை - மெர்வின் சாலமோன் - விவேக் சிவா, பாடலாசிரியர் - பா.விஜய், கலை இயக்குநர் - கே.கதிர், படத்தொகுப்பு - விஜய் வேலுகுட்டி, நடன இயக்குனர் ஜானி, சண்டைப்பயிற்சி - பீட்டர் ஹெய்ன், தயாரிப்பு நிறுவனம், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர் - கோட்டப்பாடி ராஜேஷ், எழுத்து, இயக்கம் - எஸ்.கல்யாண். 



    `அறம்' படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸின் அடுத்த படமாக இந்த படம் வெளியாகிது. எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

    சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ல் ரிலீசாக இருக்கிறது. 

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முன்னோட்டம்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம் `தானா சேர்ந்த கூட்டம்'.

    நாயகன், நாயகியாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. 

    இசை - அனிருத், ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், படத்தொகுப்பு - ஏ ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, சூர்யா, தயாரிப்பு நிறுவனம் - ஸ்டூடியோ கிரீன், வெளியீடு - பரதன் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - விக்னேஷ் சிவன்.



    படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது சூர்யா பேசும் போது,

    விக்னேஷ் சிவனை சந்திக்கப் போவதாக ஹரி சாரிடம் கூறினேன். அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கபட்டது என்றாலும், அதை மையாக வைத்து தான் `ஸ்பெஷல் 26' என்ற படம் உருவானது. முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்கின்றது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் என்ற Disclaimer card எங்கள் படத்தில் வராது, அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார்.

    படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

    7 சீஸ் எண்டர்டெயின்மென்ட், அமீநாராயணா எண்டர்டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. இதில் விஜய்சேதுபதியுடன் கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    7 சீஸ் எண்டர்டெயின்மென்ட், அமீநாராயணா எண்டர்டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. இதில் விஜய்சேதுபதியுடன் கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.


    ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு, ஸ்ரீசர வணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத் தொகுப்பை கவனித்து இருக்கிறார்.


    இயக்கம்- ஆறுமுககுமார். படம் பற்றி அவர் கூறுகிறார்...


    “இது விஜய்சேதுபதிக்கு பெயர் சொல்லும் வித்தியாசமான படம். அட்வெஞ்சர் காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில், விஜய்சேதுபதி ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இனத்தலைவராக நடித்திருக்கிறார். 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கி இருக்கிறார்.


    இந்த படத்தின் இயக்குனராக மட்டுமல்ல விஜய்சேதுபதியின் தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பை நான் ரசித்தேன். இதில் அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. இன்னொரு நாயகனாக கவுதம் கார்த்திக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது அனைவரும் ரசித்து மகிழும் படமாக உருவாகி இருக்கிறது”.

    ×