என் மலர்
நீங்கள் தேடியது "parvathy nair"
- நடிகை பார்வதி நாயர், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார்.
- இவரின் புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர்.
நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

பார்வதி நாயர்
இந்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பார்வதி நாயர்
கடந்த அக்டோபர் 20-ம் தேதி தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.

பார்வதி நாயர்
இந்த புகார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது தனது புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வேலைக்கார வாலிபர் சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர்.
- சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்திலும் நடித்திருந்தார்.
- ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.
என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பார்வதி நாயர். இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் என்பவரை பார்வதி நாயர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

"என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நான் ஆவலுடன் இருக்கிறேன். ஆஷ்ரித்தை ஒரு விருந்தில் தற்செயலாக சந்தித்தேன். நாங்கள் அன்று பேச ஆரம்பித்தோம். ஆனால் உண்மையாக நெருங்கி வர சில மாதங்கள் ஆனது. தற்போது இருவரும் காதலித்து வருகிறோம்.
பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் மலையாள மற்றும் தெலுங்கு பாரம்பரியம் இரண்டையும் கலந்து நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி தொடங்கும் ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய அனைத்து விழாக்களும் சென்னையில் நடைபெறும். திருமணத்திற்குப் பிந்தைய வரவேற்பு கேரளாவில் நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.







