search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேணி"

    • கிணற்றில் உடல் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் இருந்தது
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலுார்:பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் நேற்று மாலை ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதனை கண்டவர்கள் இதுகுறித்து உடனடியாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இறந்து கிடந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில்,விசாரணையில், கிணற்றில் இறந்து கிடந்தவர் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பச்சை மலையில் உள்ள நெசக்குளம் பகுதியை சேர்ந்த சேகரின் மகன் சிவா(வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் சிவாவின் நண்பரான பச்சை மலையில் உள்ள சிலையூர் கிராமத்தை சேர்ந்த ரவி (43) என்பவர் டி.களத்தூரில் வீராசாமியின் வயலுக்கு அருகே உள்ள அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் 4 ஏக்கர் வயலை கடந்த 1½ ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு நண்பர் சிவாவை ரவி தன்னுடன் இருந்து வேலை செய்ய ஊரில் இருந்து டி.களத்தூருக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் முதல் சிவாவையும், ரவியையும் காணவில்லையாம். இதனால் அவர்கள் 2 பேரையும், அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிவா கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. சிவாவின் நண்பர் ரவியையும் போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் சிவாவின் இறப்புக்கான காரணம் கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×