என் மலர்
சினிமா செய்திகள்
- எல்லாருக்கும் ரஜினி சார் படத்துல ஒரு ஸ்டைல் மற்றும் சீன் பிடிக்கும்.
- எனக்கு படையப்பா ஊஞ்சல் சீன் தான் ரொம்ப பிடிக்கும் என்றார்.
சென்னை:
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஞானவேல் பேசியதாவது:
ஜெய்பீம் பட வாய்ப்பு கொடுத்த சூர்யா சாருக்கு இந்த மேடையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நான் இப்போது நின்றுகொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் சூர்யாதான்.
எல்லாருக்கும் ரஜினி படத்தில் ஒரு ஸ்டைல் மற்றும் காட்சி பிடிக்கும் எனக்கு படையப்பா படத்தில் வரும் ஊஞ்சல் சீன் மிகவும் பிடிக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதினேன்
தலைவருக்கு தெரிந்த ரசிகர்களை விட தெரியாத ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தன்.
அமிதாப் பச்சன் எப்போதெல்லாம் செட்டில் இருக்கிறாரோ, நான் அதற்கு முன்பாக நான் இருக்க வேண்டும் என்பதுதான் ரஜினி எனக்கு கொடுத்த முதல் அறிவுரை. ஆனால் என்னால் அதை செய்யவே முடியவில்லை. காரணம் அமிதாப் பச்சன் கேரவனுக்கு செல்லவே மாட்டார். எப்போதுமே ரஜினி வருவதற்கு முன்பே அவர் செட்டுக்கு வர விரும்புவார். இரு சூப்பர் ஸ்டார்களின் அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது.
ரஜினி சார் எனக்கு கிடைச்ச கோல்டன் விசா என தெரிவித்தார்.
- சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.
- அமிதாப் டப்பிங் எல்லாம் செய்து படிப்படியாக கடின உழைப்பால் மிக பெரிய ஸ்டாராக உயர்ந்தார் என்றார்.
சென்னை:
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பேசியதாவது:
நமக்கு மெசேஜ் சொல்றது செட் ஆகாது... படம் கமர்ஷியலா இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு இயக்குனர் ஞானவேலு கிட்ட சொன்னேன்..
சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இப்போதெல்லாம் நல்ல இயக்குநர்கள் கிடைப்பதில்லை. அந்த காலங்களில், கதை, திரைக்கதை வேறு ஒரு ஆள் எழுதுவார். இயக்கம் வேறு ஒரு ஆள் செய்வார். இப்போது எல்லாவற்றையும் ஒரே ஆள்தான் செய்ய வேண்டும். அது மிகவும் கடினமாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கிறது. இயக்குநர்கள் உடனான காம்பினேஷனும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி விடுகிறது.
இந்த படத்தில் 100 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் சொன்னார். அதற்கு உங்களுக்கு 100 சதவீதம் என்றால் எனக்கு 1000 சதவீதம் அவர்தான் வேண்டும் என்று சொன்னேன் என தெரிவித்தார்.
- வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் இன்று வெளியானது.
- வேட்டையன் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
சென்னை:
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அனிருத், வக்கீல் சார்... ஆண்டவன் கோர்ட்ன்ணு ஒன்னு இருக்கு.. அங்க இந்த அண்ணாமலை ஜெயிப்பான்.. இது அந்த திருவண்ணாமலை சிவன் மேல சத்தியம் என பஞ்ச் டயலாக் பேசி அசத்தினார்.
மேலும், நான் தலைவருடன் 4 படம் ஒர்க் பன்னிருக்கேன். இது என்னுடைய 34-வது படம். இந்த மாதிரி எந்தப் படத்துக்கும் நான் மியூசிக் போட்டதில்லை. தலைவர் இந்த மாதிரி படம் பண்ணினது சினிமாவுக்கு ரொம்ப நல்லது.
நிறைய படத்தோட இசை வெளியீட்டு விழாவில் கலந்துருக்கேன். ஆனா, எந்தப் படத்துக்கும் ரஜினி சார் படம் போல கூட்டத்தையும், விசில் சத்தத்தையும் பார்த்தது கேட்டது இல்லை என தெரிவித்தார்.
- ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
- இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. படத்தின் டீசர் மற்றும் இசை நாளை வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
- படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது பகீரா திரைப்படம்.
இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
திரைத்துறையில் நடிகனாக ஆகவேண்டும் என கனவுடையவராக பிரபு தேவா கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. இதற்கிடையே நடக்கும் மோதல், காதல் , நடனம் நகைச்சுவை என டிரைலர் காட்சிகள் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.
- கவியூர் பொன்னம்மாவின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாகும் என்று முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா (80) காலமானார்.
மலையாள நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளவர் கவியூர் பொன்னம்மா. இவர், 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.
அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். கவியூர் பொன்னம்மா மறைவிற்கு கேரள திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- போலி டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு நிறைய பேர் அரங்கிற்குள் சென்றதாக புகார்.
- ரசிகர்கள் போலீசாருகடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் போலி டிக்கெட்டுடன் ரசிகர்கள் வந்ததால் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
போலி டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு நிறைய பேர் அரங்கிற்குள் சென்றதாக புகார் எழுந்துள்ளது. போலி டிக்கெட்டை வைத்து அரங்கிற்குள் சென்றவர்களால், விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் பூட்டு போட்டு பூட்டப்பட்ட நிலையில் டிக்கெட்டுடன் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, ரசிகர்கள் போலீசாருகடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் இன்று வெளியானது.
- வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழாவில் வைத்து வேட்டையன் படத்தின் பிரீவியூ வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த படத்தின் "மனசிலாயோ" மற்றும் "ஹண்டர் வண்டார்" பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
- வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்த தொடர் வெளியாகும் எனவும் நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு ஸ்குவிட் கேம். கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் பெயரும் அதுவே. முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகி வருகிறது.
வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்த தொடர் வெளியாகும் எனவும் நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், 2 வது சீசனின் சிறப்பு டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மும்பையில் நடந்த சம்பவத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது.
- ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை.
திருப்பதி:
பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்கிற ஷேக் ஜானி பாஷா. இவரிடம் துணை நடன இயக்குனராக வேலை செய்து வந்த பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா என்கிற ஆயிஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாலியல் புகார் அளித்த பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது சினிமா துறையை பார்த்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார். பின்னர் ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குனராக வேலை பார்த்து வந்தார்.

ஐதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியனில் உறுப்பினராக பணம் கட்டக் கூட முடியவில்லை. அவருக்கு எனது கணவர் ஜானி மாஸ்டர் பண உதவி செய்தார். அப்போது பெண் உதவி நடன இயக்குனர் தான் சிறந்த நடன அமைப்பாளராக ஆக வேண்டும் அல்லது சிறந்த கதாநாயகியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதனால் ஜானி மாஸ்டர் தன்னுடைய பட வாய்ப்புகளில் அந்த பெண்ணுக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். இப்போது அவர் மீது பாலியல் புகார் கூறுகிறார்.
மைனர் பெண்ணாக இருந்தபோது மும்பையில் நடந்த சம்பவத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை யாராவது பார்த்தீர்களா? ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை. பாலியல் தொல்லைக்கு ஆளானால் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அப்படியானால் ஜானி மாஸ்டரிடம் வேலை செய்வது அதிர்ஷ்டம் என ஏன் கூறினார்.
பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபுதேவா நடித்திருக்கும் பேட்ட ராப் படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
- பக்கத்துல சன்னி லியோன் உக்காந்துருக்காங்க, 2 வார்த்தை இந்தி-ல பேச முடியல
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய பேரரசு, "2,3 வருஷத்துக்கு முன்னாடி "இந்தி தெரியாது போடா"-னு சொல்லுவாங்க, கேட்கும்போது சந்தோஷமா இருந்தது. நிறைய பேர் "இந்தி தெரியாது போடா" அப்படினு டி-சர்ட் போட்டாங்க அதை பார்க்கும்போதும் சந்தோஷமா இருந்தது. இப்போதான் இந்தி தெரியாதது கவலையா போச்சு, பக்கத்துல சன்னி லியோன் உக்காந்துருக்காங்க, 2 வார்த்தை இந்தி-ல பேச முடியல. இதுக்காகவே இந்தி கத்துக்கணும்" என்று கிண்டலாக பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.
- வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ" சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் பாடலைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடலான "ஹண்டர் வண்டார்" நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இதுதவிர படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் படக்குழு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் 'சத்யதேவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து உள்ளது.
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (செப்டம்பர் 20) நடைப்பெறவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






