என் மலர்
கார்
ஜீப் நிறுவனம் தனது மெரிடியன் எஸ்.யு.வி. மாடல் இந்திய வினியோகம் பற்றி புது தகவலை வெளியிட்டு உள்ளது.
ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்தின் ஜீப் பிராண்டு சமீபத்தில் இந்திய சந்தைக்கான மெரிடியன் எஸ்.யு.வி.-யை அறிமுகம் செய்தது. இது ஜீப் காம்பஸ் மாடலின் ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மெரிடியன் மாடல் இண்டீரியரில் அதிக இடவசதியை வழங்குகிறது. மேலும் இதில் மூன்றாவது அடுக்கு இருக்கைகளை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

காம்பஸ் மாடலை விட அதிக விலை கொண்டிருக்கும் என்றாலும் கொடுக்கும் விலைக்கு அதிகளவு பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஜீப் மெரிடியன் மாடல் இந்திய சந்தையில் பெருமளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என ஜீப் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இதைத் தொடர்ந்து வினியோகம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் மாடலில் இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய CNG காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்.பி.வி. மாடலை இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்து இருந்தது. கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் கவர்ச்சிகர விலையில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து கியா கரென்ஸ் மாடலை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருந்தனர்.
பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து இந்த மாடல் விலையில் ரூ. 70 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், கியா நிறுவனம் தனது கரென்ஸ் மாடலின் CNG வேரியண்டை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்பை புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Photo Courtesy:V3Cars.com
அதன்படி கியா கரென்ஸ் பூட் பகுதியில் CNG சிலிண்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெளிப்புறம் பியூவல் லிட் அருகில் கியாஸ் செலுத்துவதற்கான குழாய் காணப்படுகிறது. இத்துடன் குவாட்டர் கிளாஸ் லேபல் இடம்பெற்று இருப்பதால், இது கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியண்ட் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்திய சந்தையில் கியா கரென்ஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.5 லிட்டரெ என்ஜின் பிரீமியம் மற்றும் பிரெஸ்டிஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 1.4 லிட்டர் என்ஜின் பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் பிளஸ், லக்சரி மற்றும் லக்சரி பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது.
1.5 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸமிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது. புதிய கரென்ஸ் CNG மாடல் அனைவருக்கும் விற்பனை செய்யப்படுமா அல்லது வாடகை கார் ஓட்டுனர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேச்பேக் மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா டியாகோ மாடல் இந்திய சந்தை உற்பத்தியில் நான்கு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. டியாகோ 4 லட்சமாவது யூனிட் சனந்த் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் டாடா டியாகோ மாடல் 2016 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்த சமயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்த இம்பேக்ட் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டது. இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
2018 வாக்கில் இந்த மாடலுடன் டாடா டியாகோ NRG எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2020 ஆண்டு டியாகோ ஹேச்பேக் மாடல் அப்டேட் செய்யப்பட்டு பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அசத்தல் மாற்றங்களுடன் அறிமுகமானது. மேம்பட்ட டியாகோ NRG எடிஷன் 2021 வாக்கில், டாடா டியாகோ CNG மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

"இத்தகைய சாதனையை மிக குறுகிய காலக்கட்டத்தில் எட்டிய முதல் கார் என்ற வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இது வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல் ஆகும். டியாகோ மாடல் எங்களின் Turnaround 2.0 யுக்தியின் மிக முக்கிய மாடல் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டது முதல், இந்த மாடலின் விற்பனை மூலம் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்று இருக்கிறோம்."
"ஸ்டைலிஷ் லுக் மற்றும் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் பாதுகாப்பான கார் என்ற வகையில் இளைஞர்கள் விரும்பும் தேர்வாக இந்த மாடல் இருக்கிறது. முதல் முறை கார் வாங்குவோரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் டியாகோ மாடலை தேர்வு செய்கின்றனர்," என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விளம்பரம், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மைய பிரிவுகளின் துணை தலைவர் ராஜன் அம்பா தெரிவித்தார்.
கியா நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் கிராஸ்-ஓவர் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.
கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கியா EV6 எலெக்ட்ரிக் கிராஸ்-ஓவர் மாடல் இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி கியா EV6 மாடலுக்கான இந்திய முன்பதிவு மே மாதம் 26 ஆம் தேதி துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து கியா EV6 வெளியீடு நடைபெறும்.
இந்திய சந்தையில் கியா EV6 மாடல் சி.பி.யு. (முழுமையாக உருவாக்கப்பட்ட மாடல்) வடிவில் இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்தியா கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை கியா EV6 மாடல் GT-லைன் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் e-AWD சிஸ்டம், 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இது காரின் திறனை 320 ஹெச்.பி., 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்த செய்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 425 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.
இதே கார் 55.8 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட வேரியண்டிலும் கிடைக்கிறது. இது ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டூயல் மோட்டார் செட்டப் 235 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது.
ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தி துவங்கி விட்டது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தியை துவங்கி இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தி ராஜஸ்தானில் உள்ள தபுகாரா உற்பத்தி ஆலையில் நடைபெற்று வருகிறது. ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஹோண்டா சிட்டி eHEV மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு ஹோண்டா அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் விற்பனை மையத்தில் ரூ. 21 ஆயிரம் என்றும் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹோண்டா சிட்டி eHEV மாடலில் 1.5 லிட்டர், அட்கின்சன் சைக்கிள் iVTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 124 பி.ஹெச்.பி. திறன், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 26.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய X4 சில்வர் ஷேடோ எடிஷன் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் X4 சில்வர் ஷேடோ எடிஷன் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய X4 சில்வர் ஷேடோ எடிஷன் மாடல் விலை ரூ. 71 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
முன்னதாக பிளாக் ஷேடோ எடிஷன் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது சில்வர் ஷேடோ எடிஷன் மாடல் எக்ஸ்-டிரைவ் 30 ஐ மற்றும் எக்ஸ்-டிரைவ் 30 டி விடிவில் கிடைக்கிறது. இந்த மாடலை வாங்க விரும்புவோர் பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். புதிய சில்வர் ஷேடோ எடிஷன் விலை முந்தைய பிளாக் ஷேடோ எடிஷனை விட ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

பிளாக் தீமிற்கு முற்றிலும் எதிராக, புதிய மாடல்- கார்பன் பிளாக், பைடோனிக் புளூ மற்றும் ஆல்பைன் வைட் என மூன்று வித எக்ஸ்டீரியர் ஷேட்களில் கிடைக்கிறது. இத்துடன் சிக்னேச்சர் கிரில், டூயல் எக்சாஸ்ட் பைப்கள் குரோம் ராப் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பம்ப்பர்கள் அசென்ச்சுவேட் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. X4 சில்வர் ஷேடோ எடிஷன் மாடலிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் என்ஜின் 251 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 261 பி.ஹெச்.பி. பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இருவித என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு உற்பத்தி ஆலையை வாங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நிறுவனங்கள் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் விற்பனை விவகாரத்தில் அனுமதி வழங்க கோரி இரு நிறுவனங்களும் குஜராத் அரசிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என கூறப்படுகிறது.
இதன் இடையே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் உற்பத்தி ஆலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு செய்து 2026 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது.

முன்னதாக ஃபோர்டு சனந்த் ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் அரசிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 23 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
குஜராத் மாநிலத்தின் சனந்த் நகரில் உற்பத்தியை துவங்கிய முதல் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் ஒன்றாக இருந்தது. நானோ காரை உற்பத்தி செய்ய ரூ. 4 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்து இருந்தது. தற்போது இந்த ஆலையில் டியாகோ, டிகோர் மற்றும் டிகோர் EV போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சனந்த் ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல் விலையை திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. 2022 ஆண்டில் முதல் முறையாக விலை உயர்வை ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. விலை உயர்வின் படி ஜீப் காம்பஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள், டிரையல்ஹாக் வேரியண்ட் உள்பட ரூ. 25 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
விலை உயர்வு கணமாக ஜீப் காம்பஸ் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 04 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் டிரையல்ஹாக் மாடல் விலை ரூ. 30 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடல் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4x4 சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. தோற்றத்தில் ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடலில் டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு, முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ரி-வொர்க் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் பூட் மற்றும் முன்புற ஃபெண்டரில் டிரையல்-ரேட் செய்யப்பட்ட பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது.
ஜீப் காம்பஸ் ஸ்டாண்டர்டு மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 161 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.சி.டி. யூனிட், டீசல் என்ஜினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் செட்டப் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
கியா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றி புது தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
கியா நிறுவனம் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் இரு முக்கிய டிரெண்டிற்கு ஏற்ற வாகனங்களை வெளியிடுவதில் கவனமாக உள்ளது. அதன்படி எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பெரிய எஸ்.யு.வி. போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க சந்தையில் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் கியா EV9 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய EV9 மாடல் மூன்று ரோ எஸ்.யு.வி. கார் ஆகும். இது உலகிற்கான EV மாடல்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாடலாக இருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற LA ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட EV9 மாடல் சமீபத்தில் நியூ யார்க் சர்வதேச ஆட்டோ விழாவில் அமெரிக்க வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹூண்டாய் மோட்டாக் குழுமத்தின் E-GMP பிளாட்பார்மில் உருவாகி வரும் கியா EV9 மாடல் EV6, EV7 மற்றும் இதர மாடல்களின் மேல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
கான்செப்ட் வடிவில் கியா EV9 அறிமுகம் செய்யும் போதே இந்த மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதுமானது என கியா நிறுவனம் தெரிவித்து இருந்தது. புதிய கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 500 கிலோமீட்டர்களுக்கான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடலின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்கோடா நிறுவனம் புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை இந்திய சந்தையில் மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் மற்ற மாண்ட் கர்லோ மாடல்களை போன்றே குஷக் மாண்ட் கர்லோ மாடலிலும் பிளாக்டு-அவுட் எக்ஸ்டீரியர், உள்புறம் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனின் வெளிப்புறம் விங் மிரர்கள், ரூஃப், கிரில் மற்றும் பம்ப்பர் இன்சர்ட்களில் பிளாக்-அவுட் டிரீட்மெண்ட் செய்யப்படுகிறது.

இதன் முன்புற ஃபெண்டர்கள் மற்றும் டெயில் கேட்களில் மாண்ட் கர்லோ பேட்ஜிங் பொருத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 205/55 R17 ரக டையர்கள் மற்றும் வித்தியாசமாக காட்சியளிக்கும் அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது.
ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 115 ஹெச்.பி. பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1 லிட்டர் TSI என்ஜின் மற்றும் 150 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய சி கிளாஸ் மாடல் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒருவழியாக 2022 சி கிளாஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய தேதி குறித்து விட்டது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள செமிகண்டக்டர் குறைபாடு போன்ற காரணங்களால் இந்த மாடலின் இந்திய வெளியீடு தாமதம் ஆகி வந்தது.
புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் இந்திய வேரியண்ட் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே அருகில் உள்ள சக்கன் ஆலையில் அசெம்பில் செய்யப்பட இருக்கிறது. புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் வெளியீடு மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

"வெளியீட்டுக்கு முன்பே எங்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் புது சி கிளாஸ் மாடல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எங்களின் மீது வைத்துள்ள விசுவாசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் வரலாற்றில் முதல் முறையாக எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் புதிய சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவை அனுமதித்து இருக்கிறோம்," என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்டின் ஸ்கிவென்க் தெரிவித்தார்.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படுகிறது. மேலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் மிகப் பெரும் அப்டேட்களில் ஒன்றாக ரியர் வீல் ஸ்டீரிங் உள்ளது. எனினும் இந்திய மாடலில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹோண்டா சிட்டி மாடல் டாப் எண்ட் ZX வேரியண்டில் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் 97 பி.ஹெச்.பி. பவர், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள இரு மோட்டார்களில் ஒன்று இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் போன்று செயல்படும்.
இரண்டாவது மோட்டார் முன்புற ஆக்சில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 108 பி.ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.






