என் மலர்tooltip icon

    கார்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹேரியர் மாடலை அப்டேட் செய்து மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.
     

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை தொடர்ச்சியாக அப்டேட் செய்து வருகிறது. கடந்த மாதம் ஹேரியர் மாடலை ஆறு புது நிறங்களில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், தற்போது டாடா ஹேரியர் மாடலை மூன்று புது வேரியண்ட்களில் அறிமுகம் செய்து உள்ளது. 

    அந்த வகையில் டாடா ஹேரியர் மாடல் தற்போது XZS, XZS டூயல் டோன் மற்றும் XZS டார்க் எடிஷன் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த புது வேரியண்ட்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷ் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. புது வேரியண்ட்களில் XZS மாடல் XZ வேரியண்டின் மேல், XZ பிளஸ் வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. 

     டாடா ஹேரியர்

    இந்த வேரியண்டில் பானரோமிக் சன்ரூப், ஆட்டோ டிம்மிங் IRVM, 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், டூயல் டோன் பெயிண்ட் (ஆப்ஷனல்), ஓட்டுனர் இருக்கையை 6 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று புதிய வேரியண்ட்களிலும் 2 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் புதிய டாடா ஹேரியர் XZS மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் விலை ரூ. 20 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் XZS டார்க் எடிஷன் விலை ரூ. 21 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    லம்போர்கினி நிறுவனத்தின் பிரபல எஸ்.யு.வி. மாடல் எலெக்ட்ரிக் வடிவம் கொண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    லம்போர்கினி நிறுவனத்தின் அதிக பிரபலமான எஸ்.யு.வி. மாடல் உருஸ் விளங்குகிறது. லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகி வரும் உருஸ் மாடலை, விரைவில் முழுமையான எலெக்ட்ரிக் மாடல் வெர்ஷனில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    லம்போர்கினி நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் மிட்ஜா பரோகெர்ட் ஆல்-எலெக்ட்ரிக் லம்போர்கினி உருஸ் எஸ்.யு.வி. வெளியீடு பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். எனினும், இதற்கு இன்னும் சில காலம் ஆகும் என தெரிகிறது.

     லம்போர்கினி உருஸ்

    “இப்போதா அல்லது தாமதம் ஆகுமோ என தெரியாது, உருஸ் மாடல் நிச்சயம் எலெக்ட்ரிக் வடிவம் பெறும்... உண்மையை சொல்லப் போனால், உலகில் இந்த டிரெண்ட் நிச்சயம் சூடுப் பிடித்துக் கொண்டு தான் வருகிறது. இப்போதே உருஸ் எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாகும் என்று நான் கூற மாட்டேன், ஆனால் இதுபோன்ற கார்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றுவது அர்த்தமுள்ள காரியமாக இருக்கும்,” என பரோகெர்ட் தெரிவித்தார். 

    2027 வாக்கில் லம்போர்கினி நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ர்க் கார் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக லம்போர்கினி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. கடந்த ஆண்டு தனது கார் மாடல்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றவும், எலெக்ட்ரிக் வாகன துறையில் கவனம் கால் பதிக்கவும் லம்போர்கினி நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதாக தெரிவித்தது.
    மஹிந்திரா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் முற்றிலும் புது டிசைன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.


    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன் படி தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை இந்த மாதம் முழுக்க அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்பட இருக்கின்றன. சலுகைகள் கேஷ் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. 

    மேத மாத சலுகைகளின் கீழ் மஹிந்திரா அல்டுராஸ் G4 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. மஹிந்திரா XUV300 மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரையிலான சலுகை, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. 

     மஹிந்திரா கார்

    மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்கார்பியோ மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 13 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா XUV700 மற்றும் தார் மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்னதாக இந்த  மாடல்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி ரூ. 78 ஆயிரத்து 311 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பார்ச்சூனர் வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டொயோட்டா இந்தியா நிறுவனம் பார்ச்சூனர் GR-S அல்லது கசூ ரேசிங் ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பார்ச்சூனர் GR-S மாடல் விலை ரூ. 48 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் டீசல் 4x4 AT ட்ரிம் வடிவில் ஒற்றை லோடட் வேரியண்ட்-இல் கிடைக்கிறது.

    வழக்கமான வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது டொயோட்டா பார்ச்சூனர் GR-S மாடலில் பிளாக்டு-அவுட் அலாய் வீல்கள், டூயல் டோன் ரேடியேட்டர் கிரில், GR ஸ்போர்ட்ஸ் டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், GR ஸ்பெக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், GR ஸ்பெக் சீட்கள், GR ஸ்பெக் எனஅஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

     டொயோட்டா பார்ச்சூனர் GR-S

    மற்ற அம்சங்களை பொருத்தவரை குவாட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மெண்ட் வசதி கொண்ட ORVM-கள், ABS EBD, VSC, TRC, BA, HAC, ஏழு ஏர்பேக், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பவர்டு டெயில் கேட், டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டொயோட்டா பார்ச்சூனர் GR-S மாடலில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் ஆட்டிட்யூட் பிளாக் மற்றும் வைட் பியல் க்ரிஸ்டல் ஷைன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் தனது கார் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை மே மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்பட இருக்கிறது. தள்ளுபடி சலுகைகள் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், டிரைபர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் கார் மாடல்களுடன் ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூரல் சலுகையின் கீழ் ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூரல் சலுகை விவசாயிகள், சார்பன்ச் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் கீழ் பயன்பெற ரெனால்ட் அங்கீகரித்த தரவுகள் வைத்திருக்க வேண்டும்.

    ரெனால்ட் க்விட்:

    2021 ரெனால்ட் க்விட் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரூ. 37 ஆயிரம் வரையிலான லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. 

    ரெனால்ட் க்விட் 2022 மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள், ரூ. 37 ஆயிரம் மதிப்பிலான லாயல்டி பலன்கள், ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது. 
     ரெனால்ட் கார்

    ரெனால்ட் டிரைபர்:

    ரெனால்ட் டிரைபர் 2021 எம்.பி.வி. மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள், ரூ. 44 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. 2022 ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 44 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் கைகர்:

    ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம்  வரையிலான லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. நீண்ட ரேன்ஜ் மட்டுமின்றி டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் அசத்தலான அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     டாடா நெக்சான் EV மேக்ஸ்

    இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் XZ+ மற்றும் ZX+ லக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் இண்டென்சி டீல், டேடோனா கிரே மற்றும் ப்ரிஸ்டைன் வைட் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இண்டென்சி டீல் நிறம் நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. 

    தோற்றத்தில் புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் முந்தைய நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் வித்தியாசப்படுத்தும் வகையில் மேக்ஸ் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. புதிய நெக்சான் EV மேக்ஸ் அதன் ஸ்டாண்டர்டு மாடலுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

     டாடா நெக்சான் EV மேக்ஸ்

    புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் உள்ள 40.5Kwh லித்தியம் அயன் பேட்டரி பேக், முந்தைய நெக்சான் EV மாடலில் உள்ளதை விட 33 சதவீதம் பெரியது. இதன் காரணமாக புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த கார் 141 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இது முந்தைய நெக்சான் EV மாடலை விட 100 கிலோ எடை அதிகம் ஆகும். புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலுடன் 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் AC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது கார் மாடல்களை கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் இன்றி விற்பனை செய்து வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான பி.எம்.டபிள்யூ. தனது பிரபல கார் மாடல்களான 3 சீரிஸ், 4 சீரிஸ், Z4 மற்றும் பல்வேறு கிராஸ் ஓவர் மாடல்களை இண்டர்நெட் கனெக்டி ஆப்ஷன்களான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இன்றி விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த கனெக்டிவிட்டி அம்சங்கள் இன்றி விற்பனை செய்யப்படும் கார்களுக்கு எதிர்காலத்தில் அப்டேட் வழங்கப்படும் என பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    2022 ஜூன் மாத இறுதியில் கனெக்டிவிட்டி அம்சங்கள் அனைத்தும் ஓவர் தி ஏர் அப்டேட்கள் மூலம் கார்களுக்கு வழங்கப்படும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து இருக்கிறது. புதிய சிப்செட்களில் வைபை வசதி இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த பிரச்சினை எத்தனை மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்ற விவரங்களை பி.எம்.டபிள்யூ. இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், இந்த பிரச்சினை உள்ள கார் மாடல்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தொழில்நுட்ப அம்சங்கள் இன்றி கார்களை விற்பனை செய்வது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்திற்கு புதிய விஷயம் இல்லை. முன்னதாக பல்வேறு கார் மாடல்களில் தொடுதிரை வசதி இன்றி பி.எம்.டபிள்யூ. விற்பனை செய்து இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. குழுமத்தை சேர்ந்த மினி மற்றும் இதர பிராண்டுகளும் சிப்செட் குறைபாடு காரணமாக கார் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்து உள்ளன. 
    டொயோட்டா குழும நிறுவனங்கள் கர்நாடக மாநில அரசுடன் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.


    டொயோட்டா குழுமத்தின் அங்கமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் மற்றும் டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் என்ஜின்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன. 

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து உள்ள. இந்த தொகையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனங்கள் மட்டும் இணைந்து ரூ. 4 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்கின்றன. 

     டொயோட்டா எலெக்ட்ரிக் வாகனம்

    இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் தனது 25 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது, புதிய வேலை வாய்ப்பு உருவாக்க இந்த முதலீடு வழிவகை செய்யும். 

    அதன் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகளை கட்டமைத்து, இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இருக்கின்றன. இந்த முதலீடு பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு எதிராக மாற்று எரிபொருள் சார்ந்த புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட இருக்கிறது. 

    இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான பணிகளும் இந்த முதலீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையில் திடீரென மாற்றங்களை செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹூண்டாய் நிறுவனம்  தனது ஹேச்பேக் கார் மாடல்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி ஹூணன்டாய் கார் மாடல்கள் விலை ரூ. 3 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வு மட்டுமின்றி கார் மாடல்களின் வேரியண்ட் அப்டேட்டும் செய்யப்பட்டு உள்ளது. 

    விலை உயர்வின் படி ஹூண்டாய் சாண்ட்ரோ ஹேச்பேக் மாடல் விலை ரூ. 4 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். அதன்படி ஹூண்டாய் சாண்ட்ரோ விலை இந்தியாவில் தற்போது ரூ. 4 லட்சத்து 89 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6 லட்சத்து 41 ஆயிரம் என மாறி இருக்கிறது. 

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடல் விலை ரூ. 9 ஆயிரம் அதிகரித்துள்ளது. இந்த மாடலின் புதிய விலை ரூ. 5 லட்சத்து 39 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 69 ஆயிரம் என மாறி இருக்கிறது. ஹூண்டாய் i20 மாடலின் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 7 லட்சத்து 03 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 87 ஆயிரம் என மாறி உள்ளது. 

    அனைத்து விலைகளும் கார்களின் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    மெர்சிடிஸ் சி கிளாஸ் மாடல், சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்போது தான் அறிமுகமாகி இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய C கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஆறாவது தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் இந்த மாடல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. 

    புதிய C கிளாஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டனன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் விலை விவரங்கள் மே 10 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய C கிளாஸ் மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி ஒரு பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. டீசல் என்ஜின் இருவித டியுனிங்கில் கிடைக்கிறது.

     2022 மெர்சிடிஸ் C கிளாஸ்

    இதன் பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 2 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக அமைந்துள்ளது. டீசல் என்ஜின் 2 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் ஆகும். இது 200 ஹெச்.பி. திறன், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இதே என்ஜின் 265 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் டியுனிங்கிலும் கிடைக்கிறது. மூன்று என்ஜின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இது 20 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் அதிக திறன் வழங்குகிறது. 

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் பெட்ரோல் கார் லிட்டருக்கு 16.9 கிலோமீட்டர்களும், டீசல் என்ஜின் லிட்டருக்கு 23 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
    ஆடி நிறுவனம் தனது 2022 A8 L மாடலின் இந்திய முன்பதிவை துவங்கி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் செடான் மாடலான 2022 ஆடி A8 L காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புதிய காருக்கான முன்பதிவுகளை ஆடி நிறுவனம் துவங்கி இருக்கிறது. புதிய 2022 ஆடி A8 L மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். 

    2022 ஆடி A8 L மாடல் 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலின் மிட்-சைக்கிள் அப்டேட் ஆகும். 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆடி A8 L விலை ரூ. 1 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த காரில் ஏராளமான புது அம்சங்கள், அசத்தலான என்ஜின் மற்றும் ஆடம்பர சவுகரிய வசதிகள் இடம்பெற்று இருந்தன. 

     2022 ஆடி A8 L

    புதிய 2022 ஆடி A8 L மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் கூர்மையான டிசைன் உள்ளது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முன்புறம் சிங்கில் பிரேம் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் மேட்ரிஸ் எல்.இ.டி. ஹெட்லைட்கள் புது டிசைன் கொண்டிருக்கின்றன. 

    2022 ஆடி A8 L மாடலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3.0 லிட்டர் வி6 என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். 

    இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 209 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதே கார் 4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட TFSI என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஸ்கார்பியோ மாடல் இந்திய வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மஹிந்திராவின் 2022 ஸ்கார்பியோ மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. சமீப காலங்களில் பலமுறை இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடலின் 20 ஆண்டு விழாவை கொண்டாட திட்டமிட்டு வருவதால், இதே நாளில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களின் படி, புதிய ஸ்கார்பியோ மாடல் அளவில் பெரியதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா XUV700 மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. 

    புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் அதிரடியான டிசைன் எலிமண்ட்கள் வழங்கப்பட இருக்கின்றன. சமீபத்திய ஸ்பை படங்களின் படி 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் இறுதி வடிவத்தை பெற்று விட்டது என்றே தெரிகிறது. இந்த காரின் இறுதிக்கட்ட சோதனைகளே தற்போது நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.
    ×