என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையில் திடீரென மாற்றங்களை செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹூண்டாய் நிறுவனம்  தனது ஹேச்பேக் கார் மாடல்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி ஹூணன்டாய் கார் மாடல்கள் விலை ரூ. 3 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வு மட்டுமின்றி கார் மாடல்களின் வேரியண்ட் அப்டேட்டும் செய்யப்பட்டு உள்ளது. 

    விலை உயர்வின் படி ஹூண்டாய் சாண்ட்ரோ ஹேச்பேக் மாடல் விலை ரூ. 4 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். அதன்படி ஹூண்டாய் சாண்ட்ரோ விலை இந்தியாவில் தற்போது ரூ. 4 லட்சத்து 89 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6 லட்சத்து 41 ஆயிரம் என மாறி இருக்கிறது. 

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடல் விலை ரூ. 9 ஆயிரம் அதிகரித்துள்ளது. இந்த மாடலின் புதிய விலை ரூ. 5 லட்சத்து 39 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 69 ஆயிரம் என மாறி இருக்கிறது. ஹூண்டாய் i20 மாடலின் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 7 லட்சத்து 03 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 87 ஆயிரம் என மாறி உள்ளது. 

    அனைத்து விலைகளும் கார்களின் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    மெர்சிடிஸ் சி கிளாஸ் மாடல், சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்போது தான் அறிமுகமாகி இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய C கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஆறாவது தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் இந்த மாடல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. 

    புதிய C கிளாஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டனன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் விலை விவரங்கள் மே 10 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய C கிளாஸ் மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி ஒரு பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. டீசல் என்ஜின் இருவித டியுனிங்கில் கிடைக்கிறது.

     2022 மெர்சிடிஸ் C கிளாஸ்

    இதன் பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 2 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக அமைந்துள்ளது. டீசல் என்ஜின் 2 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் ஆகும். இது 200 ஹெச்.பி. திறன், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இதே என்ஜின் 265 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் டியுனிங்கிலும் கிடைக்கிறது. மூன்று என்ஜின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இது 20 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் அதிக திறன் வழங்குகிறது. 

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் பெட்ரோல் கார் லிட்டருக்கு 16.9 கிலோமீட்டர்களும், டீசல் என்ஜின் லிட்டருக்கு 23 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
    ஆடி நிறுவனம் தனது 2022 A8 L மாடலின் இந்திய முன்பதிவை துவங்கி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் செடான் மாடலான 2022 ஆடி A8 L காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புதிய காருக்கான முன்பதிவுகளை ஆடி நிறுவனம் துவங்கி இருக்கிறது. புதிய 2022 ஆடி A8 L மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். 

    2022 ஆடி A8 L மாடல் 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலின் மிட்-சைக்கிள் அப்டேட் ஆகும். 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆடி A8 L விலை ரூ. 1 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த காரில் ஏராளமான புது அம்சங்கள், அசத்தலான என்ஜின் மற்றும் ஆடம்பர சவுகரிய வசதிகள் இடம்பெற்று இருந்தன. 

     2022 ஆடி A8 L

    புதிய 2022 ஆடி A8 L மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் கூர்மையான டிசைன் உள்ளது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முன்புறம் சிங்கில் பிரேம் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் மேட்ரிஸ் எல்.இ.டி. ஹெட்லைட்கள் புது டிசைன் கொண்டிருக்கின்றன. 

    2022 ஆடி A8 L மாடலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3.0 லிட்டர் வி6 என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். 

    இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 209 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதே கார் 4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட TFSI என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஸ்கார்பியோ மாடல் இந்திய வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மஹிந்திராவின் 2022 ஸ்கார்பியோ மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. சமீப காலங்களில் பலமுறை இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடலின் 20 ஆண்டு விழாவை கொண்டாட திட்டமிட்டு வருவதால், இதே நாளில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களின் படி, புதிய ஸ்கார்பியோ மாடல் அளவில் பெரியதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா XUV700 மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. 

    புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் அதிரடியான டிசைன் எலிமண்ட்கள் வழங்கப்பட இருக்கின்றன. சமீபத்திய ஸ்பை படங்களின் படி 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் இறுதி வடிவத்தை பெற்று விட்டது என்றே தெரிகிறது. இந்த காரின் இறுதிக்கட்ட சோதனைகளே தற்போது நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.
    ஜீப் நிறுவனம் ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட மெரிடியன் எஸ்.யு.வி. முதல் யூனிட்டை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஜீப் நிறுவனம் தனது புதிய மெரிடியன் எஸ்.யு.வி.-யின் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவும் துவங்கி உள்ளது. முன்னதாக சில விற்பனையாளர்கள் ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவை துவங்கி மேற்கொண்டு வந்தனர். புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாரப்பூர்வ முன்பதிவு கட்டணமும் ரூ. 50 ஆயிரம் தான் என ஜீப் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

    வரும் வாரங்களில் புதிய ஜீப் மெரிடியன் மாடல் விற்பனையகங்களை வந்தடையும் என ஜீப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் இருந்து இந்த மாடலுக்கான வினியோகம் துவங்க இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலுக்கான விலை விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட இருக்கின்றன.

    ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் மாடலில் இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்திற்கு சலுகை வழங்குவது பற்றி மத்திய மந்திரி நிதின் கட்கரி புது விளக்கம் அளித்து இருக்கிறார். இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
     

    டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தியை மேற்கொண்டால் நிச்சயம் சலுகைகளை பெற முடியும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார். 

    இதுதவிர இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார் மாடல்களை விட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விலை குறையும் என்றும் அவர் உறுதியளித்து இருக்கிறார். டெஸ்லாவுக்கு இந்தியா நிச்சயம் உற்பத்தி தளமாக இருக்கும் என நிதின் கட்கரி பலமுறை தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நிச்சயம் வரிச்சலுகை அளிக்கப்பட மாட்டாது என்பதையும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    2020 ஆம் ஆண்டு முதல் டெஸ்லா நிறுவனம் மற்றும் மத்திய அரசிடையே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 2020 ஆண்டிலேயே இந்தியாவில் டெஸ்லா கார் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் டெஸ்லா கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என எலான் மஸ்க் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

     டெஸ்லா

    டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை முழுமையாக உற்பத்தி செய்த நிலையில் (Completely Build Units-CBUs) இங்கு இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. எனினும், சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதை மத்திய அரசு விரும்பவில்லை. இந்த நிலையை மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு தயாராக இல்லை.

    அதிக இறக்குமதி வரிகள் காரணமாக தனது கார்களை இருமடங்கு விலையில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனமும் விரும்பவில்லை. உலகின் பெரிய நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும் தான் இறக்குமதி வரிகள் அதிகளவில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். 40 ஆயிரம் டாலர்கள் விலை கொண்ட கார்களுக்கு இறக்குமதி வரி 60 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது. இதை விட அதிக விலை கொண்ட கார்களுக்கு வரி மேலும் அதிகமாகும்.

    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய 2022 ZS EV மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் சமீபத்தில் புதிய 2022 ZS EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய 2022 ZS EV எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

    மார்ச் மாத விற்பனையிலும் 2022 ZS EV மாடல் அமோக வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், 2022 மார்ச் மாதத்தில் 2022 எம்.ஜி. ZS EV மாடலை வாங்க ஆயிரத்து 500 பேர் மட்டுமே முன்பதிவு செய்து இருந்தனர். ஒவ்வொரு மாதமும் முன்பதிவு யூனிட்கள் அதிகரித்து வருவதை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரிப்பதை உணர முடிகிறது. 

    எனினும், சீனாவில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு காரணமாகவும், செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாகவும் புதிய ZS EV மாடலின் வினியோக பணிகளில் தொய்வு ஏற்படும் என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய 2022 எம்.ஜி. ZS EV மாடல் விலை ரூ. 21 லட்சத்து 09 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 25 லட்சத்து 88 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    2022 எம்.ஜி. ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் நிரந்தர மேக்னட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 174 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும். 

    ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சிட்டி eHEV ஹைப்ரிட் கார் மாடல் மிக விரைவில் இந்திய சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது. இந்த மாடல் மே 4 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். சமீபத்தில் இந்த மாடல் விற்பனையகம் வரத் துவங்கியது.

    ஹோண்டா சிட்டி மாடல் டாப் எண்ட் ZX வேரியண்டில் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் 97 பி.ஹெச்.பி. பவர், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட்

    இதில் உள்ள இரு மோட்டார்களில் ஒன்று இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் போன்று செயல்படும். இரண்டாவது மோட்டார் முன்புற ஆக்சில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 108 பி.ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    புதிய ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவின்யா EV கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய அவின்யா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'Born Electric' பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய 'Born Electric' பிளாட்பார்மின் கீழ் வெவ்வேறு EV பாடி ஸ்டைல்களில் புது மாடல்கள் உருவாக்கப்படுகின்றன. 

    புது கான்செப்ட்களின் முதல் ப்ரோடக்‌ஷன் மாடல் 2025 வாக்கில் சாலைகளில் வலம்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அவின்யா கான்செப்ட் மாடலுடன் TPEML-இன் புதிய பிராண்டு லோகோவுடன் வருகிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் எல்.இ.டி. பார் இடம்பெற்று இருக்கிறது. இதன் நடுவே T எனும் வார்த்தை தெரிகிறது.

      டாடா அவின்யா EV கான்செப்ட்

    சமஸ்கிருத மொழியில் அவின்யா என்ற வார்த்தைக்கு புதுமை என அர்த்தமாகும். இந்த கான்செப்ட் மாலில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. மேலும் இந்த கான்செப்ட் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புது டிசைன் மொழியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

    இந்த கான்செப்ட் மாடல் பியூர் EV ஜென் 3 தொழில்நுட்பத்தை சார்ந்து உருவாக்கப்பட இருக்கிறது. இந்த காரை DC பாஸ்ட் சார்ஜர் கொண்டு 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது ஸ்விப்ட் ஸ்போர்ட் காரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் கார்களின் பேஸ்லிப்ட் வெர்ஷன்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டம் தீட்டி இருக்கிறது. இந்த வரிசையில், புது மாடல்களும் இடம்பெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த நிலையில், மாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடல் பூனேவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த காரின் பின்புற விண்ட் ஸ்கிரீனில் ‘On test by ARAI’ ஸ்டிக்கர் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் புது மாடல் கொண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கு போட்டியை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என தெரிகிறது.
    மாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட்
    Photo Source: Rushlane

    தோற்றத்தில் புதிய ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலில் புதிய மற்றும் ரி-ப்ரோபைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள், டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பின்புறம் ஸ்பாயிலர், டூயல் டோன் அலாய் வீல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பூட் பகுதியில் ஸ்போர்ட் பேட்ஜ் உள்ளிட்டவை காணப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 127 பி.ஹெச்.பி. பவர், 235 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த எலெக்ட்ரிக் கார் மாடல் எப்போது வெளியாகும் என அறிவித்து இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஐயோனிக் 5EV மாடலை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் புதிய எலெக்ட்ரிக் கார் இங்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    புதிய ஐயோனிக் 5 மாடல் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஐயோனிக் 5 மாடலை காட்சிப்படுத்திய போதே, இதன் இந்திய வெளியீட்டை ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. 

    ஹூண்டாய் ஐயோனிக் 5

    அந்த வகையில் தற்போது ஐயோனிக் 5 வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவித்து விட்டது. இது மட்டுமின்றி 2028 ஆம் ஆண்டிற்குள் இந்திய சந்தையில் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 2WD மற்றும் AWD வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 2WD மாடலில் ரியர் ஆக்சில் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் 217 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இதன் AWD மாடலில் உள்ள மோட்டார் 305 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 2WD முழு சார்ஜ் செய்தால் 451 கிலோமீட்டர் வலரை செல்லும். ஐயோனிக் 5 AWD வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 430 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும். 

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்களில் வழங்க இருக்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்து எல்க்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    புது எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக நடைபெற்று வருவதாக ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்லோகர்த் டேஷ் தெரிவித்து இருக்கிறார். இந்த கார் இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்களுடன், குறைந்த விலையில் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஓலா எலெக்ட்ரிக் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தானியங்கி தொழில்நுட்பமும் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கென மாடிபை செய்யப்பட்ட கொல்ஃப் கார்ட் பயன்படுத்தப்பட்டது. புது தொழில்நுட்பம் கொண்ட கார் அதிகபட்சமாக மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. 

    இந்த தானியங்கி வாகனத்தில் இரண்டு LiDAR கேமராக்கள், ஒரு வீடியோ கேமரா, GPS பொருத்தப்பட்டு இருந்தது. இந்த தானியங்கி கார் வழியில் யாரேனும் வந்தால் சாமர்த்தியமாக நின்றதோடு, வளைவுகளில் மிகச் சரியாக தானாகவே திரும்பி சென்றது. கான்செப்ட் என்ற முறையில் இந்த மாடல் அதிக நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.
    ×