என் மலர்
கார்
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை டக்சன் மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த மாடல் முற்றிலும் புது டிசைன் மற்றும் அதிக அம்சங்களை கொண்டிருக்கும்.
முற்றிலும் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 2022 இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டக்சன் மாடல் இதுவரை உலகம் முழுக்க 70 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இவற்றில் ஐரோப்பாவில் மட்டும் சுமார் 17 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடலில் முற்றிலும் புது டிசைன், ஏராளமான அம்சங்கள் மற்றும் அதீத சௌகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் புதிய கிரில் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் புது பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூ லின்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு டச் கண்ட்ரோல், ஆம்பிண்ட் லைட்டிங், இ பார்க்கிங் பிரேக், ஸ்விட்ச் கியர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய ஹூண்டாய் டக்சன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற ஆப்ஷ்ன்கள் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜீப் மெரிடியன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் மாடல் விலை ரூ. 29 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய ஜீப் மெரிடியன் 3-ரோ எஸ்.யு.வி மாடல்- லிமிடெட் மேனுவல் முன்புற வீல் டிரைவ் (FWD) மற்றும் ஆட்மோடேிக் 4 வீல் டிரைவ் (FWD) ஆப்ஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
முன்னதாக ஜீப் மெரிடியன் மாடலுக்கான உற்பத்தி பணிகள் இந்திய ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்துடன் ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலில் 2 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புற வீல் டிரைவ் சிஸ்டம் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பானரோமிக் சன்ரூப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் போன் சார்ஜிங், பவர்டு சீட்கள், பவர்டு டெயில்கேட் உள்ளது. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், 360-டிகிரி கேமரா மற்றும் டையர் பிரெஷர் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்தியாவில் ஜீப் மெரிடியன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 36 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜீப் மெரிடியன் மாடல் இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர், எம்.ஜி. குளோஸ்டர் மற்றும் ஸ்கோடா கோடியக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஸ்டெலாண்டிஸ் இந்தியா குழுமத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தைக்கான எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு திட்டம் பற்றி பேசும் போது இந்த தகவலை ஸ்டெலாண்டிஸ் தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் டவாரஸ் தெரிவித்து இருக்கிறார்.
“சிட்ரோயன் பிராண்டுக்கான ஸ்மார்ட் கார் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் கார் வெர்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் வாகனங்களை எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு மாற்றுவதில் சிட்ரோயன் முன்னணி பிராண்டாக இருக்கும்,” என டவாரஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார் மாடல்களுடன் ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில் புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் மாடல்களின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்பது கேளிவிக்குறியாகவே இருந்த வந்தது.
தற்போது இது பற்றிய கேள்விக்கும் டவாரஸ் பதில் அளித்துள்ளார். அதில்,“எங்கள் வினியோகஸ்தர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றி, உற்பத்திக்கான கூடுதல் செலவீனங்களை தவிர்த்து, காரின் விலை அதிகரிப்பதை பெருமளவு குறைத்து, நடுத்தர மக்களும் இந்த காருக்கு பணம் செலுத்த வைக்க வேண்டும். இதன் காரணமாக காம்பேக்ட் கார் மாடல்கள் மட்டுமின்றி எம்.பி.வி. மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.
எலெக்ட்ரிக் மாடல் தவிர சிட்ரோயன் நிறுவனம் அடுத்த மாதம் தனது சிட்ரோயன் C3 காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர மேலும் சில எலெக்ட்ரிக் மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கார் மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை நிறுத்தி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது சாண்ட்ரோ மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை நிறுத்தி இருக்கிறது. ஹூண்டாய் ஹேச்பேக் மாடலின் விலை இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டே இருக்கிறது. எனினும், சாண்ட்ரோ மாடல் ஹூண்டாய் வலைதளத்தின் ‘Click to Buy’ முன்பதிவு தளத்தில் இடம்பெறவில்லை.
முன்னதாக இம்மாத துவக்கத்தில் ஹூண்டாய் சாண்ட்ரோ மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 800 வரை அதிகரிக்கப்பட்டது. புது ஹேச்பேக் மாடலான சாண்ட்ரோ விற்பனை நிறுத்தம் பற்றி ஹூண்டாய் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், ஆன்லைன் தளம் போன்றே விற்பனை மையங்களிலும் இந்த மாடலுக்கான முன்பதிவுகள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் 2018 வாக்கில் ரி-எண்ட்ரி கொடுத்த ஹூண்டாய் சாண்ட்ரோ எண்ட்ரி-லெவல் ஹேச்பேக் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், ரியர் ஏர்கான் வெண்ட்கள், கீலெஸ் எண்ட்ரி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.
ஹூண்டாய் சாண்ட்ரோ மாடலின் விலை தற்போது ரூ. 4 லட்சத்து 89 ஆயிரம் என துவங்கி அதிகபட்சமாக ரூ. 6 லட்சத்து 41 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹேரியர் மாடலை அப்டேட் செய்து மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை தொடர்ச்சியாக அப்டேட் செய்து வருகிறது. கடந்த மாதம் ஹேரியர் மாடலை ஆறு புது நிறங்களில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், தற்போது டாடா ஹேரியர் மாடலை மூன்று புது வேரியண்ட்களில் அறிமுகம் செய்து உள்ளது.
அந்த வகையில் டாடா ஹேரியர் மாடல் தற்போது XZS, XZS டூயல் டோன் மற்றும் XZS டார்க் எடிஷன் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த புது வேரியண்ட்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷ் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. புது வேரியண்ட்களில் XZS மாடல் XZ வேரியண்டின் மேல், XZ பிளஸ் வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த வேரியண்டில் பானரோமிக் சன்ரூப், ஆட்டோ டிம்மிங் IRVM, 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், டூயல் டோன் பெயிண்ட் (ஆப்ஷனல்), ஓட்டுனர் இருக்கையை 6 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று புதிய வேரியண்ட்களிலும் 2 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய டாடா ஹேரியர் XZS மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் விலை ரூ. 20 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் XZS டார்க் எடிஷன் விலை ரூ. 21 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் பிரபல எஸ்.யு.வி. மாடல் எலெக்ட்ரிக் வடிவம் கொண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் அதிக பிரபலமான எஸ்.யு.வி. மாடல் உருஸ் விளங்குகிறது. லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகி வரும் உருஸ் மாடலை, விரைவில் முழுமையான எலெக்ட்ரிக் மாடல் வெர்ஷனில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் மிட்ஜா பரோகெர்ட் ஆல்-எலெக்ட்ரிக் லம்போர்கினி உருஸ் எஸ்.யு.வி. வெளியீடு பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். எனினும், இதற்கு இன்னும் சில காலம் ஆகும் என தெரிகிறது.

“இப்போதா அல்லது தாமதம் ஆகுமோ என தெரியாது, உருஸ் மாடல் நிச்சயம் எலெக்ட்ரிக் வடிவம் பெறும்... உண்மையை சொல்லப் போனால், உலகில் இந்த டிரெண்ட் நிச்சயம் சூடுப் பிடித்துக் கொண்டு தான் வருகிறது. இப்போதே உருஸ் எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாகும் என்று நான் கூற மாட்டேன், ஆனால் இதுபோன்ற கார்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றுவது அர்த்தமுள்ள காரியமாக இருக்கும்,” என பரோகெர்ட் தெரிவித்தார்.
2027 வாக்கில் லம்போர்கினி நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ர்க் கார் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக லம்போர்கினி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. கடந்த ஆண்டு தனது கார் மாடல்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றவும், எலெக்ட்ரிக் வாகன துறையில் கவனம் கால் பதிக்கவும் லம்போர்கினி நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதாக தெரிவித்தது.
மஹிந்திரா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் முற்றிலும் புது டிசைன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன் படி தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை இந்த மாதம் முழுக்க அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்பட இருக்கின்றன. சலுகைகள் கேஷ் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.
மேத மாத சலுகைகளின் கீழ் மஹிந்திரா அல்டுராஸ் G4 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. மஹிந்திரா XUV300 மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரையிலான சலுகை, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்கார்பியோ மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 13 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா XUV700 மற்றும் தார் மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்னதாக இந்த மாடல்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி ரூ. 78 ஆயிரத்து 311 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பார்ச்சூனர் வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா இந்தியா நிறுவனம் பார்ச்சூனர் GR-S அல்லது கசூ ரேசிங் ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பார்ச்சூனர் GR-S மாடல் விலை ரூ. 48 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் டீசல் 4x4 AT ட்ரிம் வடிவில் ஒற்றை லோடட் வேரியண்ட்-இல் கிடைக்கிறது.
வழக்கமான வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது டொயோட்டா பார்ச்சூனர் GR-S மாடலில் பிளாக்டு-அவுட் அலாய் வீல்கள், டூயல் டோன் ரேடியேட்டர் கிரில், GR ஸ்போர்ட்ஸ் டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், GR ஸ்பெக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், GR ஸ்பெக் சீட்கள், GR ஸ்பெக் எனஅஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை குவாட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மெண்ட் வசதி கொண்ட ORVM-கள், ABS EBD, VSC, TRC, BA, HAC, ஏழு ஏர்பேக், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பவர்டு டெயில் கேட், டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய டொயோட்டா பார்ச்சூனர் GR-S மாடலில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் ஆட்டிட்யூட் பிளாக் மற்றும் வைட் பியல் க்ரிஸ்டல் ஷைன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் தனது கார் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை மே மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்பட இருக்கிறது. தள்ளுபடி சலுகைகள் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், டிரைபர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் கார் மாடல்களுடன் ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூரல் சலுகையின் கீழ் ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூரல் சலுகை விவசாயிகள், சார்பன்ச் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் கீழ் பயன்பெற ரெனால்ட் அங்கீகரித்த தரவுகள் வைத்திருக்க வேண்டும்.
ரெனால்ட் க்விட்:
2021 ரெனால்ட் க்விட் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரூ. 37 ஆயிரம் வரையிலான லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.
ரெனால்ட் க்விட் 2022 மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள், ரூ. 37 ஆயிரம் மதிப்பிலான லாயல்டி பலன்கள், ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது.

ரெனால்ட் டிரைபர்:
ரெனால்ட் டிரைபர் 2021 எம்.பி.வி. மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள், ரூ. 44 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. 2022 ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 44 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரெனால்ட் கைகர்:
ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. நீண்ட ரேன்ஜ் மட்டுமின்றி டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் அசத்தலான அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் XZ+ மற்றும் ZX+ லக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் இண்டென்சி டீல், டேடோனா கிரே மற்றும் ப்ரிஸ்டைன் வைட் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இண்டென்சி டீல் நிறம் நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
தோற்றத்தில் புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் முந்தைய நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் வித்தியாசப்படுத்தும் வகையில் மேக்ஸ் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. புதிய நெக்சான் EV மேக்ஸ் அதன் ஸ்டாண்டர்டு மாடலுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் உள்ள 40.5Kwh லித்தியம் அயன் பேட்டரி பேக், முந்தைய நெக்சான் EV மாடலில் உள்ளதை விட 33 சதவீதம் பெரியது. இதன் காரணமாக புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த கார் 141 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இது முந்தைய நெக்சான் EV மாடலை விட 100 கிலோ எடை அதிகம் ஆகும். புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலுடன் 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் AC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது கார் மாடல்களை கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் இன்றி விற்பனை செய்து வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான பி.எம்.டபிள்யூ. தனது பிரபல கார் மாடல்களான 3 சீரிஸ், 4 சீரிஸ், Z4 மற்றும் பல்வேறு கிராஸ் ஓவர் மாடல்களை இண்டர்நெட் கனெக்டி ஆப்ஷன்களான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இன்றி விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த கனெக்டிவிட்டி அம்சங்கள் இன்றி விற்பனை செய்யப்படும் கார்களுக்கு எதிர்காலத்தில் அப்டேட் வழங்கப்படும் என பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தெரிவித்து உள்ளது.
2022 ஜூன் மாத இறுதியில் கனெக்டிவிட்டி அம்சங்கள் அனைத்தும் ஓவர் தி ஏர் அப்டேட்கள் மூலம் கார்களுக்கு வழங்கப்படும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து இருக்கிறது. புதிய சிப்செட்களில் வைபை வசதி இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த பிரச்சினை எத்தனை மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்ற விவரங்களை பி.எம்.டபிள்யூ. இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், இந்த பிரச்சினை உள்ள கார் மாடல்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப அம்சங்கள் இன்றி கார்களை விற்பனை செய்வது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்திற்கு புதிய விஷயம் இல்லை. முன்னதாக பல்வேறு கார் மாடல்களில் தொடுதிரை வசதி இன்றி பி.எம்.டபிள்யூ. விற்பனை செய்து இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. குழுமத்தை சேர்ந்த மினி மற்றும் இதர பிராண்டுகளும் சிப்செட் குறைபாடு காரணமாக கார் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்து உள்ளன.
டொயோட்டா குழும நிறுவனங்கள் கர்நாடக மாநில அரசுடன் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
டொயோட்டா குழுமத்தின் அங்கமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் மற்றும் டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் என்ஜின்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து உள்ள. இந்த தொகையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனங்கள் மட்டும் இணைந்து ரூ. 4 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்கின்றன.

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் தனது 25 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது, புதிய வேலை வாய்ப்பு உருவாக்க இந்த முதலீடு வழிவகை செய்யும்.
அதன் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகளை கட்டமைத்து, இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இருக்கின்றன. இந்த முதலீடு பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு எதிராக மாற்று எரிபொருள் சார்ந்த புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட இருக்கிறது.
இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான பணிகளும் இந்த முதலீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.






