என் மலர்tooltip icon

    கார்

    • ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது காரின் என்ஜின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விவரங்களை வெளியிட்டு உள்ளது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.


    புதிய வென்யூ மாடல் மொத்தம் 16 வேரியண்ட்களில், மூன்று வித என்ஜின் மற்றும் மூன்று வித டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் ஏராளமான அதிரடி அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்சான் மாடல் இந்திய சந்தையில் அதிகளவு விற்பனையாகி வருகிறது.

    வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் என்ஜின் அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ GDi மற்ரும் 1.2 லிட்டர் Mpi கப்பா பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது iMT மற்றும் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் நார்மல், இகோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித டிரைவிங் ஆப்ஷ்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

    நிசான் மோட்டார் இந்தியா தனது மேக்னைட் சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் புது மைல்கல் எட்டியுள்ளது. இந்த மாடலின் விற்பனை 2020 டிசம்பர் மாத வாக்கில் துவங்கியது.

    நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய முன்பதிவில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. 

    நிசான் நிறுவனத்தின் வாகன விற்பனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் மாடலாக மேக்னைட் அமைந்தது. கடந்த டிசம்பர் 2020 வாக்கில் நிசான் மேக்னைட் மாடலின் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய இரண்டறை ஆண்டுகளில் நிசான் மேக்னைட் மாடல் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

     நிசான் மேக்னைட்

    இந்தியாவில் அறிமுகமான முதல் மாதத்திலேயே நிசான் மேக்னைட் மாடல் 32 ஆயிரம் முன்பதிவுகளை கடந்தது. இதை அடுத்து 2021 பிப்ரவரி மாதத்தில் நிசான் மேக்னைட் மாடலை வாங்க 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த மாடலை வாங்க சுமார் 78 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இன்றும் நிசான் மேக்னைட் மாடலை வாங்க சுமார் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

    நிசான் மேக்னைட் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 4 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் இந்த காரின் விலை பலமுறை மாற்றப்பட்டு தற்போது இதன் விலை ரூ. 5 லட்சத்து 88 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 56 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  
    கியா இந்தியா நிறுவனத்தின் புதிய EV6 எலெக்ட்ரிக் கார் விற்றுத் தீர்ந்தது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.


    கியா இந்தியா நிறுவனம் 2022 ஆண்டிற்கான கியா EV6 மாடல்கள் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை கியா EV6 வெளியீட்டு நிகழ்வில் கியா இந்தியா மேற்கொண்டது. இந்தியாவில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இந்த ஆண்டிற்கு விற்பனை செய்ய கியா நிறுவனம் மொத்தத்தில் 100 யூனிட்களையே கொண்டு வருவதாக அறிவித்து இருந்தது.

    அதின்படி இந்த ஆண்டிற்கான 100 கியா EV6 யூனிடிகளும் விற்றுத் தீர்ந்தன. இந்த மாடலுக்கான முன்பதிவு மே 26 ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக கியா EV6 மாடலை வாங்க 335 முன்பதிவுகள் பெறப்பட்டதாக கியா இந்தியா அறிவித்து உள்ளது.

    கியா EV6

    சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கியா EV6 மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். இதனுடன் வழங்கப்படும் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தும் போது காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும். 
    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை இம்மமாதம் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.


    ஜூன் மாதத்தில் கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சிறப்பு சலுகைகள் ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் பெரும்பாலான மாடல்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சில கார் மாடல்களுக்கான சலுகை பலன்கள் குறைக்கப்பட்டு உள்ளன. 

    எனினும், சில மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு சலுகைகள், தள்ளுபடி உள்ளிட்டவை வேரியண்ட், கிரேடு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன.

    ஹோண்டா சிட்டி (5th Gen) - இந்தியாவில் ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 27 ஆயிரத்து 396 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் கேஷ் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரத்து 396 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், கார் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 5 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 7 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

     ஹோண்டா கார்

    ஹோண்டா WR-V - மே மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதம் ஹோண்டா WR-V மாடலுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி கார் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 10 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ஹோண்டா கார் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 7 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ஹோண்டா ஜாஸ் - இந்தியாவில் புதிய ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 5 ஆயிரம் கேஷ் தள்ளுபடி அல்லது ரூ. 5 ஆயிரத்து 947 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் கார் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 7 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     ஹோண்டா கார்

    ஹோண்டா சிட்டி (4th Gen) - 4th Gen ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் ஹோண்டா கார் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. 

    ஹோண்டா அமேஸ்- ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் காரப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலும் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ பேஸ்லிப்ட் மாடலை ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன் இந்த மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுபவை ஆகும். ஹூண்டாய் தரப்பில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டு புது தோற்றம் கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலில் குரோம் இன்சர்ட்கள் கொண்ட புதிய கிரில், முன்புறம் மற்றும் பின்புறம் புது பம்ப்பர்கள், புதிய அலாய் வீல்கள், ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள், சில்வர் ஸ்கிட் பிலேட்கள் மற்றும் காண்டிராஸ்ட் கலர் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன.

     2022 ஹூண்டாய் வென்யூ

    புதிய ஹூண்டாய் பேஸ்லிப்ட் மாடலின் உள்புறம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் புது வகை இருக்கைகள், ரிவைஸ்டு டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், 4 ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்றே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு பெட்ரோல் என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். 
    மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலுக்கான உற்பத்தி பணிகள் ஜூன் மாதத்தில் துவங்கும் என அறிவித்து இருக்கிறது. தற்போது பிரீ-ப்ரோடக்‌ஷன் யூனிட்கள் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இதன் ப்ரோடக்‌ஷன் ரெடி வெர்ஷன் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ N

    முற்றிலும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஜூன் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்கார்பியோ N அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய மாடல், ஸ்கார்பியோ கிளாசிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அறிவித்து உள்ளது. 

    புதிய 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலில் 2.0 லிட்டர் M-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் M-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 4x4 வெர்ஷனும் வழங்கப்படலாம். 
    ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது. முன்னதாக வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இது குறித்து ஹூண்டாய் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் டிசைன் விவரங்களு்ம இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த நிலையில், ஹூண்டாய் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது.

     ஹூண்டாய் வென்யூ

    தற்போது இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 82 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை தவிர ஹூண்டாய் வென்யூ டீசல் வேரியண்டில் 99 ஹெச்.பி. பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு M3 மற்றும் M4 கார்களின் M50 ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் பிரத்யேக அப்டேட்கள் செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வருகிறது. இது மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. 1 சீரிஸ் மற்றும் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல்களையும் எடிஷன் கலர் விஷனில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் M4 50 ஜாரெ எடிஷன் மாடல்கள் - சான் மரினோ புளூ, கார்பன் பிலாக், இமோலா ரெட், மேகோ புளூ மற்றும் ஹேட்ச் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முன்புறம் 19 இன்ச் M ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள், பின்புறம் 20 இன்ச் 2 ஸ்போக் டிசைன் கொண்ட வீல் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த வீல்களை கோல்டு பிரான்ஸ் மேட் மற்றும் ஆர்பிட் மேட் பினிஷ் கொண்டுள்ளன.

     பி.எம்.டபிள்யூ. M50 ஜாரெ எடிஷன்

    உள்புறம் M4 ஜாரெ எடிஷன் ஸ்டாண்டர்டு M4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், உள்புறங்களில் விசேஷமாக ஸ்பெஷல் எடிஷனை குறிக்கும் பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஸ்டாண்டர்டு M ஸ்போர்ட் ஹெட்ரெஸ்ட், ஆப்ஷனல் கார்பன் பைபர் பக்கெட் முன்புற இருக்கைகள் உள்ளன. 

    M3 ஜாரெ ஸ்பெஷல் எடிஷன் கார் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 500 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. பி.எம்.டபிள்யூ. M3 ஜாரெ எடிஷன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. இந்த கார்- லைம்ராக் கிரே, சினிபார் ரெட், டெக்னோ வைலண்ட், ஃபயர் ஆரஞ்சு மற்றும் இண்டர்லகோஸ் புளூ ஷேட்களில் கிடைக்கிறது. 
    கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய EV6 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்த கார் 528 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் கியா EV6 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. கியா EV6 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 3 லட்சம் ஆகும். கியா EV6 முன்பதிவு நாட்டின் 12 நகரங்களில் உள்ள 15 விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

    கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    கியா EV6

    இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 425 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும். 
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது டக்சன் மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி, முன்பதிவையும் அதிரடியாக நிறுத்தி இருக்கிறது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடலில் முற்றிலும் புது டிசைன், ஏராளமான அம்சங்கள் மற்றும் அதீத சௌகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் புதிய கிரில் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் புது பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீண்டாய் டக்சன்

    காரின் உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூ லின்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு டச் கண்ட்ரோல், ஆம்பிண்ட் லைட்டிங், இ பார்க்கிங் பிரேக், ஸ்விட்ச் கியர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய 2022 ஹூண்டாய் டக்சன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற ஆப்ஷ்ன்கள் வழங்கப்படலாம்.  
    முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்தியாவில் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்க முடிவு செய்து உள்ளது.


    ஆடம்பர கார் உற்பத்தியாளர்களில் முன்னணி நிறுவனம் போர்ஷே. இந்தியாவில் போர்ஷே நிறுவனம் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்குகிறது. போர்ஷே நிறுவனத்தின் முதல் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் மையம் ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் திறக்கப்பட இருக்கிறது. இந்த விற்பனை மையங்கள் ‘Porsche Approved' பெயரின் கீழ் இயங்க இருக்கின்றன.

    போக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக போர்ஷே அப்ரூவ்டு செண்டர், போக்வ்கேன் தாஸ் வெல்ட் ஆட்டோ மற்றும் ஆடி அப்ரூவ்டு பிளஸ் திட்டங்களின் வரிசையில் இணைகிறது. இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்திய கார்களை விற்பனை, வாங்குவது அல்லது எக்சேன்ஜ் செய்ய ஒற்றை தளமாக இவை மாறும். 

     போர்ஷே கார்

    போர்ஷே அப்ரூவ்டு மையங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் எக்சேன்ஜ் செய்வது போன்ற பணிகள் நடைபெறும். இதன் மூலம் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் வழங்குவதோடு, ஒரிஜினல் அக்சஸரீ, இன்சூரன்ஸ் மற்றும் நிதியுதவி உள்ளிட்டவைகளை வழங்கவும் போர்ஷே முடிவு செய்துள்ளது.

    போர்ஷே கார்களை புதிய முறையில் அனுபவிக்க வழி வகுக்கும் படி இந்த விற்பனை மையங்கள் செயல்படும் என போர்ஷே நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்த மற்ற தகவல்கள் விற்பனை மையம் துவங்கப்படும் போது அறிவிக்கப்படும் என போர்ஷே தெரிவித்துள்ளது.  
    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 19 லேண்ட் ரோவர் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் இலவசமாக சரிசெய்து தரப்பட இருக்கின்றன.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2022 ரேன்ஜ் ரோவர் மாடல்களின் கிராஷ் சென்சார் சரியாக பொருத்தப்படவில்லை என்பதை கண்டறிந்து உள்ளது. இதனை சரி செய்யவில்லை எனில் மோசமான பின் விளைவுகள் ஏற்படலாம் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கருதுகிறது. 

    இதனால் அமெரிக்க சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 முதல் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யப்பட்ட ரேன்ஜ் ரோவர் எஸ்.யு.வி. மாடல்களை ரிகால் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களில் 100 சதவீதம் கோளாறு உள்ளன. 

     ரேன்ஜ் ரோவர்

    இந்த கோளாறு காரணமாக காரின் முன்புற கிராஷ் சென்சார் செயலிழக்கலாம். இதனால் காரின் ஆக்டிவ் ரெசிஸ்டண்ட் சிஸ்டம்களும் சரியாக இயங்காமல் போகும். முன்புற கிராஷ் சென்சார்கள் இயங்காமல் போனால், காரணம் ஏர்பேக் சரியாக செயல்படாது. இது ஓட்டுனர் மட்டும் இன்றி காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கடும் காயங்களை ஏற்படுத்தி விடும்.

    இந்த கோளாறை ஏப்ரல் மாத வாக்கில் கண்டறிந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆலையில் இதுபற்றிய விசாரணையை நடத்தியது. அதன் பின் தற்போது கோளாறு பாதுகாப்பு விஷயத்தில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்களை ரிகால் செய்யும் நடவடிக்கையை ஜாகுவார் லேண்ட் ரோவர் மேற்கொண்டு வருகிறது. 
    ×