என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புதிதாக கேபின் ஏர் பில்ட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது.
     

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களில் புதிதாக ஆண்டிவைரஸ் கேபின் ஏர் பில்ட்டர் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த பில்ட்டர் காரினுள் இருக்கும் கிருமிகளை கொன்றுகுவிக்கும். இதனால் பயனர்களின் ஆரோக்கியம் கிருமிகளால் பாழாகாமல் இருக்கும். 

    உலகம் முழுக்க நோய்த்தொற்று அபாயம் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. புதிய கேபின் ஏர் பில்ட்டர் நாடு முழுவதிலும் இயங்கி வரும் ஹோண்டா விற்பனை மையங்களில் கிடைக்கிறது. 

     ஹோண்டா கேபின் ஏர் பில்ட்டர்

    வாடிக்கையாளர்கள் விற்பனை மையங்களுக்கு சென்று இவற்றை தங்களின் கார்களில் பொறுத்திக் கொள்ள முடியும். ஒருவரின் இருமலில் இருந்தே நோய் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவும். காரினுள் இதற்கான சாத்தியக்கூறுகள் சற்று அதிகமே. புதிய ஏர்பில்ட்டர் நோய் கிருமி பரவுதலை கட்டுப்படுத்துகிறது.

    டொயோட்டா நிறுவனம் உதிரிபாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பணிகளை குறைக்கிறது.


    டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனம் தனது சர்வதேச கார் உற்பத்தி பணிகளை 15 சதவீதம் குறைக்கிறது. முன்னதாக நவம்பர் மாதம் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய டொயோட்டா திட்டமிட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை 8.5 லட்சம் முதல் 9 லட்சம் யூனிட்களாக குறைக்கிறது.

    கார் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஜப்பானில் 50 ஆயிரம் யூனிட்கள், வெளிநாட்டு சந்தைகளில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் யூனிட்கள் வரை குறையும். 

     டொயோட்டா கார்

    முன்னதாக செப்டம்பர் மாத வாக்கில் டொயோட்டா கார் உற்பத்தியை மூன்று சதவீதம் வரை குறைத்தது. சீனாவில் தொடர்ச்சியான மின்வெட்டு காரணமாகவும் கார் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுவதாக டொயோட்டா அறிவித்து இருக்கிறது.
    இருசக்கர வாகனங்களை அதன் உற்பத்தியாளர்கள் ஆலோசனைப்படி சீரான இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும்.


    இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அவ்வப்போது அதனை பராமரித்தல் அவசியம் ஆகும். இவ்வாறு செய்வதால், வாகனம் அடிக்கடி பழுதாகாது. ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் அல்லது மொபட் போன்ற இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதை பராமரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

    வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது பெட்ரோல், ரிசர்வ் நிலையில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன் பின் டயர்களில் சரியான அளவு காற்று இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். டயர்களில் உள்ள சிறு சிறு கற்களை அகற்ற வேண்டும்.

    ஆயிலுக்கு தனியாக டேங்க் இருந்தால் அதையும் சரி பார்க்க வேண்டும். பிரேக், கிளட்ச் ஆக்சிலேட்டர் சரியாக செயல்படுகிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும். ஹாரன், லைட் ஆகியவை சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

     கோப்புப்படம்

    வண்டியை உற்பத்தியாளர்களின் ஆலோசனைப்படி சர்வீஸ் செய்ய வேண்டும். பொதுவாக 2 ஆயிரம் கிலோமீட்டர் ஓடியதும் சர்வீஸ் செய்வது நல்லது. இதேபோல் உற்பத்தியாளர்கள் கொடுத்த ஆலோசனைப்படி என்ஜினிலும், கியர் பாக்சிலும் ஆயில் மாற்றம் செய்ய வேண்டும்.

    எந்த சிறு பிரச்சினையையும் உடனடியாக கவனித்து ரிப்பேர் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். இது அதிக சேதத்தை தவிர்க்க உதவும். அங்கீகாரம் பெற்ற டீலர் மற்றும் சர்வீஸ் நிலையங்களில் வாகனத்தை பழுது பார்க்கவும், சர்வீஸ் செய்யவும் வேண்டும்.

    உதிரி பாகங்களை மாற்றும் போது போலியானவைகளை உபயோகிக்க கூடாது. தரமானவைகளையே பயன்படுத்த வேண்டும். மோட்டார்சைக்கிள், மொபட் ஸ்கூட்டர்களில் 2டி ஆயில்களை உபயோகிக்க வேண்டும். அவை தான் என்ஜின் ஆயுளை நீட்டிக்க செய்யும். லூஸ் ஆயில் உபயோகிப்பது என்ஜினுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிராஜக்ட் ஒன் ஹைப்பர்கார் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.


    மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. பிராஜக்ட் ஒன் 2017 ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.ஏ. மொபிலிட்டி நிகழ்வில் கான்செப்ட் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எப்1 சார்ந்த ஹைப்ரிட் பவர்டிரெயின் போன்று உருவாக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டதால், மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஹைப்பர்கார் உற்பத்தி பணிகள் தாமதமாகி இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் பிராஜக்ட் ஒன் பார்முலா 1 மாடல்களில் உள்ளதை போன்ற பிளக்-இன் ஹைப்ரிட் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது.

     மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. பிராஜக்ட் ஒன்

    மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. பிராஜக்ட் ஒன் மாடலில் ஒரு ஹைப்ரிட், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட கம்பஷன் என்ஜின் வழங்கப்படுகிறது. இதில் மொத்தத்தில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இதில் இரு மோட்டார்கள் முன்புற சக்கரங்களில் மவுண்ட் செய்யப்படுகிறது. மற்றொரு மோட்டார் நேரடியாக கம்பஷன் என்ஜினில் வழங்கப்படுகிறது.

    ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்ட 1.6 லிட்டர் டர்போ வி6 என்ஜின் 1000-க்கும் அதிக ஹார்ஸ்பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தை 6 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 350 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது ஆகும். மொத்தத்தில் இந்த கார் 275 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இவை அனைத்தும் ஏற்கனவே விற்றுத்தீர்ந்தன. 
    புதிதாக கார் வாங்குவோர், முன்கூட்டியே கவனிக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடம்பர பட்டியலில் இருந்து அத்தியாவசிய பட்டியலுக்கு கார்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் கார் வாங்குவது ஒவ்வொருவரின் கனவாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படி அல்ல. வீடுகள் தோறும் கார்கள் நிற்கும் காட்சியை பார்க்க முடிகிறது. 

    அதேநேரத்தில் கார் வாங்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியவை என்பதால் கார் வாங்கும் முன் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும். நீண்ட காலம் பயன்படுத்த வேண்டும் எனில், கார் உதிரிபாகங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

     கார் கோப்புப்படம்

    அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார் மாடல்கள், ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார் மாடல்களுக்கு உதிரிபாகங்கள் எளிதில் கிடைத்துவிடும். அதிகமாக விற்பனையாகும் கார்களை கணக்கில் கொண்டே உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. 

    ‘நான் தான் ஊரிலேயே  இந்த காரைப் பயன்படுத்துகிறேன்' என்று அறிமுகம் இல்லாத காரை பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற மாடல்களில் பழுது ஏற்பட்டாலோ, தேய்மானம் அடைந்தாலோ அதன் உதிரி பாகங்களை மாற்றும் நிலை வந்தால் அவை கிடைப்பது கடினம். பராமரிப்பு செலவும் அதிகமாகும்.
    நிசான் நிறுவனம் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை வழங்குகிறது.

    நிசான் இந்தியா நிறுவனம் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலை வாங்குவோருக்கு ரூ. 1 லட்சம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், ஆன்லைன் முன்பதிவு போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது.

    சிறப்பு சலுகை நிசான் கிக்ஸ் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். ஆன்லைன் முன்பதிவு போனஸ், கார் முன்பதிவை நிசான் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மேற்கொள்வோருக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் பலன்கள் விற்பனை மையங்கள் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும்.

     நிசான் கிக்ஸ்

    இந்த சலுகைகள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் காரை வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் எக்சேன்ஜ் சலுகை என்.ஐ.சி. சார்ந்த விற்பனை மையங்களில் மட்டுமே வழங்கப்படும். மாத தவணையில் கார் வாங்குவோருககு 7.99 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பாதுகாப்பு சோதனையில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பன்ச் மாடலின் விற்பனை அக்டோபர் 20 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 5.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டாடா பன்ச் மாடல் ஆல்பா பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. புதிய பன்ச் மாடல் குளோபல் என்கேப் சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் குறைந்த விலையில் கிடைக்கும் பாதுகாப்பான கார் மாடல் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது. 

     டாடா பன்ச்

    இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் மஹிந்திரா கே.யு.வி. என்.எக்ஸ்.டி. மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.  

    இந்தியாவுக்கு சி.பி.யு. முறையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.


    டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    'சீனாவில் உற்பத்தி செய்த எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது. எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்,' என அவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

     டெஸ்லா எலெக்ட்ரிக் கார்

    மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு டெஸ்லா எழுதியிருக்கும் கடிதத்தில் 'இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும். தற்போது சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படும் கார்களுக்கு 60 முதல் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது,' என தெரிவித்துள்ளது.


    ஜெனிவா சர்வதேச ஆட்டோ விழா தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


    ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமான ஜெனிவா மோட்டார் விழா மூன்றாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டது. ஆட்டோ நிறுவனங்கள் மற்றும் விழாவில் கலந்து கொள்வோரின் நலன் கருதி ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பட்டாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

    முன்னதாக ஆண்டு 2020 மற்றும் 2021 ஜெனிவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது 2022 மோட்டார் விழாவும் ரத்து செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

     ஜெனிவா மோட்டார் விழா

    "2022 ஆம் ஆண்டிற்கான ஆட்டோ விழாவை நடத்த எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டோம். எனினும், பெருந்தொற்று காலக்கட்டத்தில் நிலைமை எங்களின் கட்டுக்குள் இல்லை. 2023 ஆண்டு ஜெனிவா சர்வதேச ஆட்டோ விழா நிச்சயம் சிறப்பான முறையில் நடைபெறும் என நம்புகிறோம்," என விழா ஏற்பாட்டு குழுவின் தலைவரான மௌரிஸ் டுரெடினி தெரிவித்தார்.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலின் முதல்நாளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டது.


    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.700 மாடலுக்கான முன்பதிவை இன்று (அக்டோபர் 7) துவங்கியது. முன்பதிவு துவங்கிய 57 நிமிடங்களில் 25 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிவேகமாக 25 ஆயிரம் முன்பதிவுகளை கடந்த கார் என்ற பெருமையை எக்ஸ்.யு.வி.700 பெற்று இருக்கிறது.

    அமோக வரவேற்பு காரணமாக முதல்நாள் முன்பதிவு நிறுத்தப்பட்டது. புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம். புதிய எக்ஸ்.யு.வி.700 பெட்ரோல் மாடல்களின் வினியோகம் முதலில் துவங்கும் என மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இதன் முதற்கட்ட வினியோகம் ஏற்கனவே துவங்கிய நிலையில், இரண்டாம் கட்ட வினியோகம் இன்று நடைபெறுகிறது.
    சென்னை நிறுவனம் உருவாக்கி இருக்கும் பறக்கும் கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.


    லண்டனில் நடைபெற்ற உலகின் மிகப்பெரும் ஹெலிடெக் விழாவில் சென்னையை சேர்ந்த விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரின் ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்தது.

    பறக்கும் காரின் டிஜிட்டல் ப்ரோடோடைப் வீடியோவை அந்நிறுவனம் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. அதில் காரின் கேபின் மற்றும் இருக்கை அமைப்பு எவ்வாறு உள்ளது என தெளிவாக தெரிகிறது. இந்த காரில் இருவர் பயணிக்க முடியும். இதன் கதவுகள் இறக்கை போன்று திறக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

     விணாடா பறக்கும் கார்

    இந்த பறக்கும் கார் தொடர்ச்சியாக 60 நிமிடங்களுக்கு மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது தரையில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இந்த கார் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் கொண்டு இயங்குகிறது.

    விணாடாவின் பறக்கும் கார் ப்ரோடோடைப் 2023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கொண்டு பொதுமக்கள் போக்குவரத்து, அவசர தேவை மற்றும் பொருட்களை வினியோகம் செய்ய பயன்படுத்தலாம்.

    ஜாகுவார் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் எப் பேஸ் எஸ்.வி.ஆர். எஸ்.யு.வி. மாடலின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. புதிய எப் பேஸ் எஸ்.வி.ஆர். மாடல் ஜாகுவார் நிறுவனத்தின் புதிய பெர்பார்மன்ஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இதன் துவக்க விலை ரூ. 1.51 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர். மாடலில் 5 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 543 பி.ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4 நொடிகளில் எட்டிவிடும்.

     ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர்.

    ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர். மாடலில் மெல்லிய எல்.இ.டி. குவாட் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 11.4 இன்ச் வளைந்த கிளாஸ் ஹெச்.டி. தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் உள்ளது. இது முந்தைய மாடலில் இருந்ததை விட 48 சதவீதம் பெரியதாகும். இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    ×