என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய எப் பேஸ் மாடல் வினியோகத்தை துவங்கிய ஜாகுவார்
Byமாலை மலர்5 Oct 2021 8:55 AM GMT (Updated: 5 Oct 2021 8:55 AM GMT)
ஜாகுவார் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் எப் பேஸ் எஸ்.வி.ஆர். எஸ்.யு.வி. மாடலின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. புதிய எப் பேஸ் எஸ்.வி.ஆர். மாடல் ஜாகுவார் நிறுவனத்தின் புதிய பெர்பார்மன்ஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இதன் துவக்க விலை ரூ. 1.51 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர். மாடலில் 5 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 543 பி.ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4 நொடிகளில் எட்டிவிடும்.
ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர். மாடலில் மெல்லிய எல்.இ.டி. குவாட் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 11.4 இன்ச் வளைந்த கிளாஸ் ஹெச்.டி. தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் உள்ளது. இது முந்தைய மாடலில் இருந்ததை விட 48 சதவீதம் பெரியதாகும். இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X