என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
அங்கு உற்பத்தி செய்தால், இங்கு விற்பனை செய்யக்கூடாது - மத்திய மந்திரி அதிரடி
Byமாலை மலர்9 Oct 2021 10:40 AM GMT (Updated: 9 Oct 2021 10:40 AM GMT)
இந்தியாவுக்கு சி.பி.யு. முறையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
'சீனாவில் உற்பத்தி செய்த எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது. எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்,' என அவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு டெஸ்லா எழுதியிருக்கும் கடிதத்தில் 'இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும். தற்போது சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படும் கார்களுக்கு 60 முதல் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது,' என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X