என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
அடுத்த மாதமும் கார் உற்பத்தியை குறைக்கும் டொயோட்டா
Byமாலை மலர்17 Oct 2021 4:45 AM GMT (Updated: 16 Oct 2021 11:33 AM GMT)
டொயோட்டா நிறுவனம் உதிரிபாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பணிகளை குறைக்கிறது.
டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனம் தனது சர்வதேச கார் உற்பத்தி பணிகளை 15 சதவீதம் குறைக்கிறது. முன்னதாக நவம்பர் மாதம் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய டொயோட்டா திட்டமிட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை 8.5 லட்சம் முதல் 9 லட்சம் யூனிட்களாக குறைக்கிறது.
கார் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஜப்பானில் 50 ஆயிரம் யூனிட்கள், வெளிநாட்டு சந்தைகளில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் யூனிட்கள் வரை குறையும்.
முன்னதாக செப்டம்பர் மாத வாக்கில் டொயோட்டா கார் உற்பத்தியை மூன்று சதவீதம் வரை குறைத்தது. சீனாவில் தொடர்ச்சியான மின்வெட்டு காரணமாகவும் கார் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுவதாக டொயோட்டா அறிவித்து இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X