என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • இங்கிலாந்து நாட்டில் திருடு போன பெண்ட்லி நிறுவனத்தின் முஸ்லேன் கார் பாகிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
    • காணாமல் போன காரை சுங்கத் துறை அதிகாரிகள் பாகிஸ்தானில் மீட்டுள்ளனர்.

    உலகம் முழுக்க ஆடம்பர கார் மாடல்களை திருடர்களிடம் பறிகொடுக்காமல் இருக்க அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சூழல் தான் நிலவுகிறது. இந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. இங்கிலாந்தில் காணாமல் போன பெண்ட்லி முஸ்லேன் மாடல் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த சுங்கத் துறை அதிகாரிகள் இந்த காரை மீட்டுள்ளனர்.

    திருடப்பட்ட கார் பற்றி இங்கிலாந்து தேசிய குற்றவியல் ஆணையத்துக்கு பாகிஸ்தான் சுங்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கராச்சியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டில் இந்த கார் கண்டறியப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி காரை திருடியவர்கள் அதில் இருந்த டிராக்கிங் கருவியை நீக்கவோ அல்லது ஆப் செய்யவோ இல்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    டிராக்கர் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததை அடுத்து இங்கிலாந்தில் இருந்த அதிகாரிகள் கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தை சரியாக கண்டறிந்துள்ளனர். பின் திருடப்பட்ட கார் பற்றிய விவரங்களை இங்கிலாந்து அதிகாரிகள் பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண்ட்லி முஸ்லேன் கண்டறியப்பட்டு இருக்கிறது.

    கண்டறியப்பட்ட காருக்கு பாகிஸ்தானில் பயன்படுத்தி வந்த நபர் சரியான ஆவணங்களை கொடுக்காத காரணத்தால் சுங்கத்துறை அதிகாரிகள் காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரை திருட்டுத் தனமாக பயன்படுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். இவருடன் காரை அவருக்கு விற்ற முகவரும் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட காரின் நம்பர் பிளேட் சட்டவிரோதமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் தான் புதிய G 310 RR மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • இது அபாச்சி RR 310 மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆகும்.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய G 310 RR மோட்டார்சைக்கிள் இந்திய வினியோகத்தை துவங்கி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டிவிஎஸ் அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் என துவங்குகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட், ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்டைல் ஸ்போர்ட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டாண்டர்டு பெயிண்ட் ஆப்ஷனில் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக் ஷேட் கொண்டிருக்கிறது. பிரீமியம் ஸ்டைல் ஸ்போர்ட் மாடலில் ரேசிங் புளூ மெட்டாலிக் மற்றும் ரேசிங் ரெட் நிறம் உள்ளது.


    இரு நிறங்களின் விலை முறையே ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் ஒற்றை வித்தியாசம் அதன் நிறங்கள் மட்டுமே. மற்றப்படி ஹார்டுவேர், அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் உபகரணங்கள் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ G 310 RR மோட்டார்சைக்கிளில் ஃபுல் எல்இடி லைட்டிங், 5 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு பை வயர் திராட்டில், நான்கு வித ரைடிங் மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரியர் வீல் லிப்ட் ஆப் ப்ரோடெக்‌ஷன் போன்ற அம்சங்கள் உள்ளது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் டிராக் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்களில் 33.5 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ரெயின் மற்றும் அர்பன் மோட்களில் செயல்திறன் 25.4 ஹெத்பி பவர், 25 நியூட்டன் மீட்டர் டார்க் என குறைந்து விடும்.

    • ஹோண்டா நிறுவன கார் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இந்த சலுகைகள் இம்மாத இறுதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்த அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. பண்டிகை காலத்தை குறி வைத்து சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை மற்றும் பலன்கள் கிரேடு, வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். இந்த சலுகைகள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

    சலுகைகளின் படி ஹோண்டா சிட்டி 5ஆம் தலைமுறை மாடலுக்கு ரூ. 27 ஆயிரத்து 496 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 5 ஆயிரத்து 496 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    ஹோண்டா WR-V மாடலுக்கு ரூ. 27 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை அடங்கும்.

    ஹோண்டா ஜாஸ் வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பலன்களை பெறலாம். இதில் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் உள்ளிட்டவை அடங்கும். ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா சிட்டி நான்காம் தலைமுறை மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் வழஙஅகப்படுகிறது. இந்த காருக்கு எக்சேன்ஜ், கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படவில்லை.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது வாகன உற்பத்தியில் புது மைல்கல் எட்டி அசத்தி உள்ளது.
    • ஏத்தர் நிறுவன வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது வாகன உற்பத்தி 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையில் ஏத்தர் எனர்ஜி வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. மைல்கல் மட்டுமின்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜூன் மாத விற்பனையில் 800 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2022 ஜூன் மாத வாக்கில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 3 ஆயிரத்து 200-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    இந்திய சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர கடந்த ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன துறையில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி காரணமாக பலர் இவற்றை வாங்க துவங்கி உள்ளனர். வழக்கமான பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மாடல்கள் மாறி வருகின்றன.


    முன்னதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எளிய நிதி சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பலர் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக நிதி சிக்கல் இன்றி வாங்கி வருகின்றனர்.

    சமீபத்தில் தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450X ஜென் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.66 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா டீசல் மாடல் முன்பதிவு சமீபத்தில் நிறுத்தப்பட்டது இந்திய சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • தற்போது இந்த முடிவுக்கான காரணம் பற்றி டொயோட்டா நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

    இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் டொயோட்டா விற்பனையாளர்கள், இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவை திடீரென நிறுத்துவதாக அறிவித்தன. இதை அடுத்து ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான டொயோட்டா தனது அதிக பிரபலமான எம்பிவி மாடலை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    மேலும் இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு மாற்றாக ஹைப்ரிட் மாடல் ஒன்று இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தியதற்கான காரணம் பற்றி டொயோட்டா நிறுவனம் மௌனம் காத்து வந்தது. இந்த நிலையில், இதற்கான காரணத்தை விளக்கி அறிக்கை ஒன்றை டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது.


    அதன்படி, "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, இந்திய சந்தையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் மாடல் ஆகும். 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்த கார் நீண்ட பயணத்தை எதிர்கொண்டு வந்துள்ளது. சந்தையில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்ட இன்னோவா இந்த பிரிவில் மற்ற மாடல்களை விட ஒருபடி மேலாகவே இருந்து வந்துள்ளது."

    "கடந்த ஆண்டுகளில் இந்த மாடல் பலமுறை அதிகளவு மாற்றங்களை எதிர்கொண்டு இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஆடம்பரம், சவுகரியம் மற்றும் செயல்திறன் என எல்லாவற்றிலும் இந்த கார் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்று வந்துள்ளது. இதே வரிசையில் இரண்டாம் தலைமுறை இன்னோவா க்ரிஸ்டா தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது."

    "எனினும், தொடர்ந்து கிடைத்து வரும் அமோக வரவேற்பு காரணமாக இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்டுக்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவை நிறுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர் நலன் சார்ந்த நிறுவனமாக தொடர்ந்து வாகன வினியோகத்தை வேகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெறும்." என தெரிவித்துள்ளது.

    • மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலின் வினியோக விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • இந்தியாவில் புதிய ஸ்கார்பியோ N மாடலின் துவக்க விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் ஜூன் மாத வாக்கில் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருந்தது. புதிய ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோக விவரங்களை மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. அதன்படி ஸ்கார்பியோ N மாடலின் வினியோகம் அடுத்த மாதம் 26 ஆம் தேதி துவங்ககிறது.

    முதற்கட்டமாக ஸ்கார்பியோ N Z8L வேரியண்ட் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்கார்பியோ N மற்ற வேரியண்ட் வினியோகம் அதன் பின் தொடங்கும். இந்த காரை முதலில் முன்பதிவு செய்த 25 ஆயிரம் பேருக்கு தற்போது வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்த முன்பதிவுகளின் போது காரின் வினியோகம் நான்கு மாதங்களில் துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


    இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் 25 ஆயிரம் முன்பதிவுகளையும் வினியோகம் செய்து முடிக்க மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. மேலும் வினியோகம் துவங்கிய பத்து நாட்களுக்குள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் ஆறு மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் கிடைக்கிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • காவசகி நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த மாடல் அடுத்த மாதத்தின் கடைசி வாரத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்தியா கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் செப்டம்பர் 25 ஆம் தேதி இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புது மோட்டார்சைக்கிள் W175 ஆகவே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் நின்ஜா 300 மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது.

    முன்னதாக கவாசகி W175 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக W175 அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய கவாசகி W175 விலை ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.


    இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. கவசாகி நிறுவனம் புதிய W175 தான் இந்தியாவில் அறிமுகமாகும் என இதுவரை தெரிவிக்கவில்லை. அந்த வகையில் கவாசகி நிறுவனம் Z400 மாடலையும் இந்தியாவுக்கு கொண்டு வரலாம். ஏற்கனவே நின்ஜா 400 மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் புதிய கவாசகி Z400 மாடல் இந்திய சந்தையில் கேடிஎம் 390 டியூக் மற்றும் பிஎம்டபிள்யூ G310 R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த மாடலின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் கவாசகி நிறுவனம் பிஎஸ் 6 புகை விதிகளுக்கு பொருந்தும் நின்ஜா 400 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 399சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 45 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மாடல் இந்திய முன்பதிவில் புது மைல்கல் எட்டி அசத்தி உள்ளது.
    • இந்த காரின் வினியோகம் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்து இருந்தது. அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுக்க இயங்கி வரும் நெக்சா விற்பனை மையங்களில் புது கிராண்ட் விட்டாரா வரத் தொடங்கி உள்ளது.

    இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வரும் நிலையில், டெஸ்ட் டிரைவ்களும் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், புதிய கிராண்ட் விட்டாரா காரை வாங்க இதுவரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து இருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    வெளியீட்டை தொடர்ந்து இந்த காரின் வினியோகம் செப்டம்பர் மாதத்திலேயே துவங்கும் என எதிர்பார்க்கலாம். டொயோட்டா நிறுவனம் கிராண்ட் விட்டாரா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக அர்பன் குரூயிசர் காரை இந்த மாதம் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது.

    எனினும், திடீரென இந்த காரின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு விட்டது. அந்த வகையில் புதிய டொயோட்டா ஹைரைடர் மாடலும் செப்டம்பர் மாதத்திலேயே வெளியாக இருக்கிறது. டொயோட்டா ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. வெளியீட்டை தொடர்ந்து இந்த காரின் வினியோகமும் செப்டம்பர் மாதத்திலேயே துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    டொயோட்டா நிறுவனம் புதிய ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா மாடல்களை பெங்களூருவில் உள்ள பிடாடி ஆலையில் உற்பத்தி செய்ய இருக்கிறது. இரு கார்களிலும் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் ஸ்டிராங் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய XUV700 மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த காரை டெலிவரி எடுப்பதற்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV700 மாடலில் ஆப்பிள் கார்பிளே அம்சம் வழங்குவது பற்றி முக்கிய தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் மஹிந்திரா XUV700 மாடலில் ஆப்பிள் கார்பிளே அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV700 மாடல் அக்டோபர் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    நாடு முழுக்க இயங்கி வரும் எந்த விற்பனை மையத்திற்கு சென்றாலும் XUV700 மாடலில் ஆப்பிள் கார்பிளே வசதியை பெற முடியும். இந்த அம்சம் கொண்டு மேம்பட்ட சிரி சப்போர்ட், கார் பிளே நேவிகேஷன் மற்றும் பல்வேறு வசதிகளை பெறலாம்.

    புதிய மஹிந்திரா XUV700 மாடல் கடந்த மாதம் தான் விற்பனையில் 1.50 லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி இருந்தது. இந்த காலக்கட்டத்தில் கார் வேரியண்டில் உள்ள அம்சங்களை மாற்றியமைக்கும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வந்தது. இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV700 மாடல் MX, AX3, AX5 மற்றும் AX7 போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் மஹிந்திரா XUV700 மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.
    • இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் செடான் மாடல் ஆகும்.

    மெர்சிடிஸ் AMG EQS 53 4மேடிக் பிளஸ் எலெக்ட்ரிக் செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 2 கோடியே 45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவுக்கு முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் EQC மாடலை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இரண்டாவது மெர்சிடிஸ் எலெக்ட்ரிக் மாடலாக AMG EQS 53 அமைந்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் AMG EQS 53 4 மேடிக் பிளஸ் மாடல் ஆடி இ டிரான் RS மற்றும் போர்ஷே டேகேன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இது தவிர மெர்சிடிஸ் நிறுவனம் 580 எலெக்ட்ரிக் செடான் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    புதிய மெர்சிடிஸ் AMG EQS 53 4 மேடிக் பிளஸ் மாடல் AMG.EA பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் பேஸ் வேரியண்ட் 658 ஹெச்பி பவர், 950 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார்- ஸ்லிப்பரி, கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இண்டிவிஜூவல் என ஐந்து விதமான டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேச்பேக் மாடல் டியாகோ அதன் பாதுகாப்பு திறனுக்கு பெயர் பெற்ற மாடல் ஆகும்.
    • டாடா நிறுவனத்தின் பெரும்பாலான கார் மாடல்களும் பாதுகாப்பு சோதனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றன.

    டாடா டியாகோ கார் பயன்படுத்தும் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர், குடும்பத்துடன் அதில் பயணம் செய்து கொண்டு இருந்தார். சம்பவத்தன்று டியாகோ காரில் மொத்தம் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். கார் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருந்த போது, நிலை தடுமாறியதை அடுத்து கார், 25 அடி ஆழத்தில் விழுந்தது.

    கோர விபத்தை அடுத்து காரில் பயணித்தவர்கள் அதில் இருந்து வெளியேறி உள்ளனர். 25 அடி ஆழத்தில் கார் விழுந்த நிலையிலும், அதில் பயணம் செய்தவர்களுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கிய கார் ஓனர், அதில் பயணம் செய்தவர்களுக்கு பேட்-ஏய்ட் போடும் அளவுக்கு கூட காயம் ஏற்படவில்லை என தெரிவித்து இருக்கிறார்.


    காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையில் ஏதோ வருவதை பார்த்து, ஸ்டீரிங்கை திருப்பியதில் கார் நிலை தடுமாறி கீழே விழுந்து வீடு மற்றும் கான்க்ரீட் தரையில் வேகமாக மோதி இருக்கிறது. விபத்தில் சிக்கிய டியாகோ கார் மிக மோசமாக சேதமடைந்து இருக்கிறது.

    கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அதில் இருந்தவர்கள், தாங்களாகவே வெளியேறி விட்டனர். அனைவரும் டாடா கார் வாங்க அறிவுறுத்தியதால், இந்த காரை வாங்கியதாக காரின் ஓனர் தெரிவித்து இருக்கிறார். டாடா கார்கள் இவ்வளவு தரமாக உருவாக்கப்படுவதற்கு காரின் ஓனர் தனது சமூக வலைதள பதிவில் நன்றியை தெரிவித்துள்ளார். இதோடு பாதுகாப்பை கருத்தில் கொள்பவர்கள் நிச்சயம் டாடா டியாகோ வாங்கலாம் என தெரிவித்து இருக்கிறார்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஹேச்பேக் மாடல் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • இந்த காரின் CNG வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது C3 ஹேச்பேக் மாடலின் புது வேரியண்டை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. விரைவில் சிட்ரோயன் C3 காரின் CNG வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சிட்ரோயன் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கணிசமான பங்குகளை பெற முடியும்.


    Photo Courtesy: GaadiWaadi 

    CNG கிட் பொருத்தப்படும் பட்சத்தில் இந்த காரில் குறைந்த அளவு பூட் ஸ்பேஸ் மற்றும் செயல்திறன் அளவுகள் குறைந்து இருக்கும். புதிய சிட்ரோயன் C3 CNG வேரியண்டிலும் 1.2 லிட்டர், NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 80.8 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. CNG-ஐ பயன்படுத்தும் போது செயல்திறன் மற்றும் டார்க் அளவுகள் கணிசமாக குறைந்து விடும். இந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுவதை பார்க்கும் போது பிரென்ச் நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரத்தை நீட்டிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதை அறிய முடிகிறது.

    ×