என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
யமஹா நிறுவனத்தின் E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.
பல்வேறு சர்வதேச சந்தைகளில் காட்சிப்படுத்தப்பட்டதை அடுத்து, யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது டெஸ்டிங் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக மலேசியா, தாய்லாந்து, தாய்வான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த ஸ்கூட்டர் ஐரோப்பா மற்றும் ஜப்பானிலும் டெஸ்டிங் செய்யப்படும் என ப்ரூஃப் ஆப் கான்செப்ட் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள யசுஷி நொமுரா தெரிவித்து இருக்கிறார். ஐரோப்பிய நெடுஞ்சாலைகளில் யமஹா E01 டெஸ்டிங் செய்யப்பட்டு, வானிலை சூழ்நிலைகளில் ஸ்கூட்டர் எவ்வாறு தாக்குப்பிடிக்கிறது என்பதை அறிந்து கொள்ள யமஹா ஜப்பான் முடிவு செய்து இருக்கிறது.

இதே போன்று மலேசிய டெஸ்டிங்கில் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெப்ப மண்டலங்களில் சோதனை செய்யப்பட இருக்கிறது. ரேன்ஜ், சார்ஜிங் வழிமுறைகள் மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்ட விவரங்கள் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸ்டிங்கின் போது கணக்கிடப்பட இருக்கிறது.
யமஹா என் மேக்ஸ் மாடலுக்கு இணையான எலெக்ட்ரிக் வெர்ஷனாக புதிய யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும். இதில் 4.9 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.
ஜீப் நிறுவனம் தனது மெரிடியன் எஸ்.யு.வி. மாடல் இந்திய வினியோகம் பற்றி புது தகவலை வெளியிட்டு உள்ளது.
ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்தின் ஜீப் பிராண்டு சமீபத்தில் இந்திய சந்தைக்கான மெரிடியன் எஸ்.யு.வி.-யை அறிமுகம் செய்தது. இது ஜீப் காம்பஸ் மாடலின் ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மெரிடியன் மாடல் இண்டீரியரில் அதிக இடவசதியை வழங்குகிறது. மேலும் இதில் மூன்றாவது அடுக்கு இருக்கைகளை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

காம்பஸ் மாடலை விட அதிக விலை கொண்டிருக்கும் என்றாலும் கொடுக்கும் விலைக்கு அதிகளவு பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஜீப் மெரிடியன் மாடல் இந்திய சந்தையில் பெருமளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என ஜீப் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இதைத் தொடர்ந்து வினியோகம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் மாடலில் இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கைக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி வெடித்து சிதறும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன.
இந்த நிலையில், தான் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அலட்சியம் காட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதோடு பிழை இருக்கும் பட்சத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை உடனடியாக ரி-கால் செய்து அவற்றை சரி செய்யவும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.
மத்திய அரசு எச்சரிக்கைக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் பதில் அளித்துள்ளார். அதன்படி, "எலெக்ட்ரிக் அல்லது கசோலின் என எந்த வாகனத்தை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் பிரச்சினை ஏற்படுவது மிகவும் சாதாரண விஷயம் தான். பிரச்சினை எதுவும் இல்லை என நான் கூற மாட்டேன், பெரும்பாலான பிரச்சினைகள் மென்பொருள் சார்ந்தது என்பதால் எங்களால் அதனை மிகவும் சிறப்பாக சரி செய்ய முடியும்." என அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1441 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை ரி-கால் செய்வதாக அறிவித்து இருந்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த நடவடிக்கையை அதரடியாக எடுத்து உள்ளது. "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கூட்டர்களின் மீது முழுமையான ஆய்வு செய்து, உதிரி பாகங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இருக்கிறோம். இதன் காரணமாக 1441 வாகனங்களை ரி-கால் செய்கிறோம்," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
புது விலை உயர்வின் படி டாடா நிறுவன கார் மாடல்கள் விலை 1.1 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன மாடல்கள் விலை நேற்று (ஏப்ரல் 23) அமலுக்கு வந்தது. மற்ற நிறுவனங்களை போன்றே டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதை விலை உயர்வுக்கான காரணமாக தெரிவித்து இருக்கிறது. புது விலை உயர்வின் படி டாடா நிறுவன கார் மாடல்கள் விலை 1.1 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலான டாடா டியாகோ விலை ரூ. 5 லட்சத்து 22 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 67 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
காம்பேக்ஸ் எஸ்.யு.வலி. மாடலான டாடா பன்ச் விலை ரூ. 5 லட்சத்து 67 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
டாடா டிகோர் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 44 ஆயிரம் என மாறி இருக்கிறது. டாடா டிகோர் EV மாடல் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிரீமியம் ஹேச்பேக் கார் டாடா அல்ட்ரோஸ் மாடல் விலை ரூ. 6 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சம் என மாறி இருக்கிறது. டாடா நெக்சான் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 73 ஆயிரம் என அதிகரித்துள்ளது. டாடா நெக்சான் EV மாடல் விலை ரூ. 14 லட்சத்து 54 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 15 ஆயிரம் என மாறி இருக்கிறது.
டாடா ஹேரியர் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 52 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 81 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டாடா சஃபாரி மாடல் விலை ரூ. 15 லட்சத்து 02 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
இந்த விலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அதிரடி திட்டம் தீட்டி இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்தும் நோக்கிலும், சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரூ. 200 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
இந்த நிதியாண்டுக்குள், ரூ. 200 கோடி முதலீட்டில் நாடு முழுக்க 100 சார்ஜிங் மையங்களில் சுமார் 2 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் திட்டமிட்டுள்ளது. மார்ச் 2023 ஆண்டிற்குள் நாட்டின் மிக முக்கிய நெடுஞ்சாலைகளில் 2 ஆயிரம் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை சென்னை - திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்து பெட்ரோல் பங்க்களில் அமைத்தது. 900 கிலோமீட்டர்கள் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் அமைந்து இருக்கும் பெட்ரோல் பங்க்களில் பாரத் பெட்ரோலியம் சார்பில் CCS-2 DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நாடு முழுக்க முக்கிய நகரங்கள் மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளில் சீரான இடைவெளியில் CCS-2 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. எனினும், இதன் விலை பற்றி இதுவரை எந்த தகவலையும் ரோல்ஸ் ராய்ஸ் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு யூனிட்டின் விலையும் வாடிக்கையாளர் முன்பதிவு செய்யும் போது, தேர்வு செய்யும் ஆப்ஷ்களுக்கு ஏற்ப அவர்களிடமே தெரிவிக்கப்படும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்து இருக்கிறது.
ஸ்டாண்டர்டு மாடலை விட புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடல் ஓட்டுவோருக்கு முற்றிலும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும். மேலும் இதில் உள்ள டார்க் காஸ்மெடிக் அம்சங்கள் இளையோருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. பிளாக் பேட்ஜ் மாடலில் ஏராளமான டார்கென்டு ஸ்டைலிங் செய்யப்பட்டு இருக்கிறது.

பிளாக் பேட்ஜ் மாடலில் பி-ஸ்போக் 21 இன்ச் கார்பன் பைபர் கம்போசிட் வீல்கள், ஃபுளோட்டிங் ஹப் கேப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் இந்த காரின் வெளிப்புற நிறத்தை வாடிக்கையாளர்கள் 44 ஆயிரம் நிற ஆப்ஷ்களில் இருந்து தேர்வு செய்து கொள்ள முடியும். தற்போது காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலின் வெளிப்புறம் பிளாக் நிறத்திலும், உள்புறம் மண்டரின் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாடலில் 6.75 லிட்டர், டுவின் டர்போ V12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 592 ஹெச்.பி. திறன், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது கோஸ்ட் ஸ்டாண்டர்டு மாடலை விட 29 ஹெச்.பி. மற்றும் 50 நியீட்டன் மீட்டர்கள் அதிகம் ஆகும். இத்துடன் 4 வீல் ஸ்டீரிங், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
கியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய CNG காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்.பி.வி. மாடலை இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்து இருந்தது. கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் கவர்ச்சிகர விலையில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து கியா கரென்ஸ் மாடலை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருந்தனர்.
பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து இந்த மாடல் விலையில் ரூ. 70 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், கியா நிறுவனம் தனது கரென்ஸ் மாடலின் CNG வேரியண்டை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்பை புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Photo Courtesy:V3Cars.com
அதன்படி கியா கரென்ஸ் பூட் பகுதியில் CNG சிலிண்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெளிப்புறம் பியூவல் லிட் அருகில் கியாஸ் செலுத்துவதற்கான குழாய் காணப்படுகிறது. இத்துடன் குவாட்டர் கிளாஸ் லேபல் இடம்பெற்று இருப்பதால், இது கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியண்ட் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்திய சந்தையில் கியா கரென்ஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.5 லிட்டரெ என்ஜின் பிரீமியம் மற்றும் பிரெஸ்டிஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 1.4 லிட்டர் என்ஜின் பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் பிளஸ், லக்சரி மற்றும் லக்சரி பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது.
1.5 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸமிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது. புதிய கரென்ஸ் CNG மாடல் அனைவருக்கும் விற்பனை செய்யப்படுமா அல்லது வாடகை கார் ஓட்டுனர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ஷாட்கன் 650 மற்றும் Meteor 650 மாடல்களை சோதனை செய்ய துவங்கி இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷாட்கன் 650 மாடல் சமீபத்தில் தான் சர்வதேச சந்தையில் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், புதிய ஷாட்கன் 650 மாடல் இந்திய சந்தையிலும் சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடலுன் புதிய Meteor 650 மாடலும் சோதனை செய்யப்படுகிறது.
புதிய 650 டுவின் மாடல்கள் தற்போது ராயல் என்பீல்டு விற்பனை செய்து வரும் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 மாடல்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய Meteor 650 மற்றும் ஷாட்கன் 650 மாடல்களில் 650சிசி, பேரலல் டுவின், ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்படுகிறது. எனினும், இவற்றின் செயல்திறன் வெவ்வேறாக இருக்கும் படி டியூன் செய்யப்பட இருக்கிறது.
Meteor 650 டிசைன் தற்போது விற்பனை செய்யப்படும் Meteor 350 டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் சிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்படும் என தெரிகிறது. இத்துடன் குரூயிசர் ஸ்டான்ஸ் மற்றும் ஏராளமான குரோம் பிட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு இந்த மாடலில் முன்புறம் USD ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.
ஷாட்கன் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிடில்வெயிட் பிரிவில் பிரீமியம் மாடலாக இருக்கும். இதில் எல்.இ.டி. ஹெட்லைட், டுவின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சேடில் ஸ்டே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் Meteor 650 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும்.
அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்Kளை அறிமுகம் செய்யும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிய Meteor 650 மற்றும் ஷாட்கன் 650 மாடல்கள் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ஒகினவா, பியூர் EV போன்ற நிறுவன மாடல்களும் வெடித்து சிதறின. இதன் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், வாகன உற்பத்தியில் அலட்சியம் காட்டும் பட்சத்தில் கடும் அபராதங்களை விதிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
இதே சமயம் நிறுவனங்கள், பிரச்சினை ஏற்பட்டுள்ள வாகனங்களை விரைந்து ரீ-கால் செய்து அவற்றை சரி செய்து கொடுக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார். நாட்டின் ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பும் அரசாங்கத்திற்கு மிக முக்கியமான ஒன்று என அவர் மேலும் தெரிவித்தார்.

"கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு எலெக்ட்ரிக் வாகன விபத்து சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏதேனும் நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளில் அலட்சியம் காட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும் பிரச்சினை ஏற்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக ரீ-கால் செய்யப்பட உத்தரவிடப்படும்," என நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
சமீப காலங்களில் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுதியது. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ஒகினவா, பியூர் EV போன்ற நிறுவன மாடல்களும் வெடித்து சிதறின. இதன் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் இ ஸ்கூட்டர் வெடித்து சிதறியதை அடுத்து பியூர் EV நிறுவனம் தனது வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது.
ஐதராபாத் நகரை சேர்ந்த பியூர் EV நிறுவனம் தனது இ-டிரான்ஸ் பிளஸ் மற்றும் இ-புளூடோ 7ஜி ஸ்கூட்டர் மாடல்களில் 2 ஆயிரம் யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் பியூர் EV நிறுவன ஸ்கூட்டர் மாடல் வெடித்து சிதறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் பியூர் EV ஸ்கூட்டர் மாடலை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து சிதறியதை அடுத்து 80 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்து பேட்டரி ஆரோக்கியத்தை முழுமையாக ஆய்வு செய்ய இருப்பதாக பியூர் EV நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
"பேட்டரியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து, ஏதேனும் பிர்ச்சினைகள் இருந்தால் அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்," என பியூர் EV நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேச்பேக் மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா டியாகோ மாடல் இந்திய சந்தை உற்பத்தியில் நான்கு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. டியாகோ 4 லட்சமாவது யூனிட் சனந்த் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் டாடா டியாகோ மாடல் 2016 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்த சமயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்த இம்பேக்ட் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டது. இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
2018 வாக்கில் இந்த மாடலுடன் டாடா டியாகோ NRG எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2020 ஆண்டு டியாகோ ஹேச்பேக் மாடல் அப்டேட் செய்யப்பட்டு பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அசத்தல் மாற்றங்களுடன் அறிமுகமானது. மேம்பட்ட டியாகோ NRG எடிஷன் 2021 வாக்கில், டாடா டியாகோ CNG மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

"இத்தகைய சாதனையை மிக குறுகிய காலக்கட்டத்தில் எட்டிய முதல் கார் என்ற வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இது வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல் ஆகும். டியாகோ மாடல் எங்களின் Turnaround 2.0 யுக்தியின் மிக முக்கிய மாடல் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டது முதல், இந்த மாடலின் விற்பனை மூலம் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்று இருக்கிறோம்."
"ஸ்டைலிஷ் லுக் மற்றும் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் பாதுகாப்பான கார் என்ற வகையில் இளைஞர்கள் விரும்பும் தேர்வாக இந்த மாடல் இருக்கிறது. முதல் முறை கார் வாங்குவோரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் டியாகோ மாடலை தேர்வு செய்கின்றனர்," என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விளம்பரம், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மைய பிரிவுகளின் துணை தலைவர் ராஜன் அம்பா தெரிவித்தார்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 XL6 பேஸ்லிப்ட் மாடல் ஏராளமான புது அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 2022 மாருசி சுசுகி XL6 பேஸ்லிப்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி XL6 பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2022 மாருதி சுசுகி XL6 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் அதிகளவு காஸ்மெடிக் மாற்றங்கள், உள்புறம் மற்றும் என்ஜின் என அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. 2022 மாருதி சுசுகி XL6 காரில் உள்ள என்ஜினுடன் புது கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய மாருதி சுசுகி XL6 பேஸ்லிப்ட் மாடலில் 4 ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
2022 XL6 பேஸ்லிப்ட் கார் புதிய 1.5 லிட்டர் K15C சீரிஸ், டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் மற்றும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்திறது.
இத்துடன் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. 2022 மாருதி சுசுகி XL6 மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.97 கிலோமீட்டர் மைலேஜ், ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 20.27 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.






