என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யக் கூடாது என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.


    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞஅசாலை துறை மந்திரி நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடை ஒன்றை கட்டமைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். மேலும் டெஸ்லா நிறுவனம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்யக் கூடாது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

    "எலான் மஸ்க் கார்களை இங்கு உற்பத்தி செய்ய தயாராக இருந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது... இந்தியாவுக்கு வந்து, உற்பத்தியை தொடங்குங்கள், இந்தியா மிகப் பெரும் சந்தை இங்கிருந்து அவர்கள் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் சீனாவில் உற்பத்தி செய்த கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய நினைத்தால், இந்தியாவுக்கு அது சிறப்பான ஒன்றாக இருக்காது," என நிதின் தெரிவித்து இருக்கிறார். 

     டெஸ்லா

    அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம் நீண்ட காலமாக தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் இதனை சாத்தியப்படுத்த இறக்குமதி வரிகள் அடிப்படையில் அதிக செலவாகும் என்பதால் டெஸ்லாவின் இந்திய வருகை தாமதமாகிக் கொண்டே வருகிறது. 

    தற்போது இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான லேண்டிங் கட்டணம் (காரின் விலை மற்றும் டெலிவரி கட்டணங்கள்) சேர்த்து 40 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30.6 லட்சம் வரை செலவாகும். 

    ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததை அடுத்து, ஸ்கூட்டருக்கு தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.


    தமிழகத்தில் ஓலா எலெக்ட்ரிக் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தி வந்த நபர் அதனை தீ வைத்து எரித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தனது ஓலா இ ஸ்கூட்டர் அடிக்கடி பிரச்சினை ஏற்படுத்தி வந்ததை அடுத்து இவ்வாறு செய்ததாக அந்த நபர் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக ஸ்கூட்டர் தானாக தீப்பிடித்து எரிவது மிகப் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், வாடிக்கையாளரே ஸ்கூட்டருக்கு தீ வைத்த சம்பவம் இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.

    வாடிக்கையாளர் ஆத்திரத்தில் தனது ஸ்கூட்டர் மீது பெட்ரோலை ஊற்றி, அதற்கு தீ வைத்து எரிக்கும் பரபர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஓலா ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த டாக்டர் பிரித்விராஜ் அதன் செயல்திறன் மற்றும் ரேன்ஜ் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக இருந்துள்ளதை கண்டு மன வேதனையில் ஆழ்ந்துள்ளார். 

    மூன்று மாதங்களுக்கு முன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரிக்கு எடுத்த நிலையில், பல்வேறு சமயங்களில் இந்த ஸ்கூட்டர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. எனினும், ஓலா சப்போர்ட் ஸ்கூட்டரை ஆய்வு செய்து, அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றே பதில் அளித்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

    இந்த நிலையில், தான் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்த பிரித்விராஜ் அதில் வெறும் 44 கிலோமீட்டர் ஓடியதை அடுத்து ஸ்கூட்டரில் சார்ஜ் இன்றி ஆஃப் ஆகி விட்டது. முன்னதாக மற்றொரு வாடிக்கையாளர் ஒருவர் தனது ஸ்கூட்டரை கழுதையை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. 

    ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாண்ட் கர்லோ ஸ்பெஷல் எடிஷன் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை இந்தியாவில் மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன்பே புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் விற்பனையகம் வரத் துவங்கி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    புகைப்படங்களின் படி ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் மாடல் டொர்னாடோ ரெட் நிறம் கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலை விட வித்தியாசமானதாக மாற்ற மாண்ட் கர்லோ எடிஷனில் மாண்ட் கதர்லோ பிளாக்டு-அவுட் எலிமண்ட்கள், கிளாஸ் பிளாக் ரூஃப், ORVM-கள், ரூப் ரெயில்கள், முன்புற கிரில், புதிய அலாய் வீல்கள், முன்புற ஃபெண்டரில் மாண்ட் ககர்லோ பேட்ஜிங் உள்ளது.

     ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன்
    Photo Source: TeamBHP.com

    இத்துடன் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேடிக் வைப்பர்கள், ஹெட்லேம்ப்கள், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம், சப் வூஃபர், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், டையர் பிரெஷர் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 

    புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 115 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.0 லிட்டர் யூனிட், 150 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. யூனிட் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த எலெக்ட்ரிக் கார் மாடல் எப்போது வெளியாகும் என அறிவித்து இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஐயோனிக் 5EV மாடலை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் புதிய எலெக்ட்ரிக் கார் இங்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    புதிய ஐயோனிக் 5 மாடல் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஐயோனிக் 5 மாடலை காட்சிப்படுத்திய போதே, இதன் இந்திய வெளியீட்டை ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. 

    ஹூண்டாய் ஐயோனிக் 5

    அந்த வகையில் தற்போது ஐயோனிக் 5 வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவித்து விட்டது. இது மட்டுமின்றி 2028 ஆம் ஆண்டிற்குள் இந்திய சந்தையில் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 2WD மற்றும் AWD வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 2WD மாடலில் ரியர் ஆக்சில் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் 217 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இதன் AWD மாடலில் உள்ள மோட்டார் 305 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 2WD முழு சார்ஜ் செய்தால் 451 கிலோமீட்டர் வலரை செல்லும். ஐயோனிக் 5 AWD வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 430 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும். 

    கவாசகி நிறுவனத்தின் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    கவாசகி  நிறுவனம் 2022 EICMA நிகழ்வில் புதிய 2022 வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிள் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது விற்பனை செய்யப்படும் கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மும்பையில் உள்ள அன்சென் கவாசகி விற்பனையகம் வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ. 1.50 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

     கவாசகி வெர்சிஸ் 650

    இந்த தள்ளுபடி ஏப்ல் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் கவாசகி வெர்சிஸ் 650 மாடலுடன் 2+2 ஆண்டுகள் எக்ஸ்டெண்டட் வாரண்டி பேக் தேர்வு செய்வோருக்கு மட்டும் தான் இந்த தள்ளுபடி பொருந்தும். தள்ளுபடியை சேர்த்தால் கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 லட்சத்து 75 ஆயிரமாக குறைந்து விடும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    மிடில்வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளில் புதிய TFT டிஸ்ப்ளே, டிராக்‌ஷன் கண்ட்ரோல், மேம்பட்ட ஸ்டைலிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை தவிர மோட்டார்சைக்கிளின் அடிப்படை அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

    கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் 649சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 66 பி.ஹெச்.பி. பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், சமீபத்தில் தான் புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நபர் ஒருவர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி ஊர்வலம் செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய சில நாட்களிலேயே ஷட் டவுன் ஆனதை அடுத்து, அந்நிறுவனம் கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை என கூறி மகாராஷ்டிரா மாநிலத்தில் வாடிக்கையாளர் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டார். 

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தை சேர்ந்த சச்சின் கீட் என்ற நபர் தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி இழுத்து சென்றுள்ளார். மேலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்று கூறும் பதாகைகளையும் வைத்திருந்தார். ஸ்கூட்டரை கழுதை இழுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     ஓலா ஸ்கூட்டர்

    ஸ்கூட்டர் வாங்கிய முதல் ஆறு நாட்களுக்கு மட்டும் அது சீராக வேலை செய்தது என அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஸ்கூட்டர் பற்றி புகார் அளித்ததற்கு ஓலா தரப்பில் யாரும் வந்து அதனை சரி செய்து கொடுக்கவில்லை என இவர் குற்றம்சாட்டி இருக்கிறார். கஸ்டமர் சேவை அதிகாரிக்கு பல முறை தொடர்பு கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை.

    இதை அடுத்து விரக்தியில் இந்த நபர் இவ்வாறு செய்தி இருக்கிறார். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்றும் ஓலா இருசக்கர வாகனங்களை வாங்க வேண்டாம் என கூறும் பதாகைகளை அவர் தனது ஸ்கூட்டர் மற்றும் கழுதையின் மேல் வைத்துக் கொண்டு ஊர்வலம் வந்தார். 

    ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
     

    தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கிரெட்டா எஸ்.யு.வி. மாடலில் விபத்தின் போது ஏர்பேக் வேலை செய்யாததை அடுத்து இந்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

    ஷைலேந்தர் பட்நாகர் என்ற வாடிக்கையாளர் ஆகஸ்ட் 21, 2015 வாக்கில் ஹூண்டாய் கிரெட்டா 1.6 VTVT SX+ வேரியண்டை வாங்கி இருக்கிறார். 2017 நவம்பர் 16 ஆம் தேதி ஷைலேந்தரின் கிரெட்டா மாடல் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்து டெல்லி மற்றும் பாணிபெட் நெடுஞ்சாலையில் நடைபெற்றது. விபத்தில் கார் முழுக்க பலத்த சேதங்களை எதிர்கொண்டது.

     ஹூண்டாய் கிரெட்டா

    இதில் காரில் பயணம் செய்த ஓட்டுனர் தலை, முகம் மற்றும் மார்பு பகுதிகளில் மிக கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினார். காரில் வைக்கப்பட்டு இருந்த ஏர்பேக் வேலை செய்யாததை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் மீது பட்நாகர் வழக்கு தொடுத்து இருந்தார். இவர் இந்த பிரச்சினையை டெல்லி மாநில நுகர்வோர் கமிஷனில் தெரிவித்து, தென் கொரிய கார் உற்பத்தியாளர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

    டெல்லி மாநில நுகர்வோர் இழப்பீடு கமிஷன் பட்நாகருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதோடு, இவரின் மருத்துவ செலவீனங்களுக்காக ரூ. 2 லட்சம் இழப்பீடு, வருவாய் இழப்புக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் மன உளைச்சலுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. மேலும் மனுதாரரின் வாகனம் ரி-பிளேஸ் செய்யப்படவில்லை என்பதால், கிரெட்டா மாடல் விபத்தில் சிக்கிய நாளில் இருந்து ஆண்டுக்கு ஏழு சதவீதம் வட்டி வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    இந்த உத்தரவை எதிர்த்து ஹூண்டாய் நிறுவனம் தேசிய நுகர்வோர் கமிஷனில் மேல்முறையீடு செய்தது. அங்கும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. எனினும், உச்ச நீதிமன்றத்திலும் ஹூண்டாய் தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    லேண்ட் ரோவர் நிறுவனம் கடந்த ஆண்டு முற்றிலும் புதிய 5th Gen ரேன்ஜ் ரோவர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில், தற்போது மேம்பட்ட ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்ய லேண்ட் ரோவர் முடிவு செய்து இருக்கிறது. புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் மே 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    மேலும் இந்த மாடலுக்கான டீசரையும் லேண்ட் ரோவர் வெளியிட்டு உள்ளது. டீசர்களில் புதிய லேண்ட் ரோவர் ஸ்போர்ட் வெளிப்புற டிசைன், செண்ட்ரல் கன்சோல் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் தனி டீசர் வீடியோவில் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் ஆஃப் ரோடிங் திறன்களை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

     ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்

    வெளிப்புறத்தில் புதிய லேண்ட் ரோவர் ஸ்போர்ட் மாடல் மிக மெல்லிய ஹெட்லேம்ப்கள், முன்புற ஃபெண்டர் மற்றும் ஏ பில்லர் உள்ளிட்டவை டீசரில் காட்டப்படுகின்றன. அதன்படி புதிய ஸ்போர்ட் மாடலிலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 5th Gen ரேன்ஜ் ரோவர் மாடலை தழுவிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலில் 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 4.4 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்களில் வழங்க இருக்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்து எல்க்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    புது எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக நடைபெற்று வருவதாக ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்லோகர்த் டேஷ் தெரிவித்து இருக்கிறார். இந்த கார் இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்களுடன், குறைந்த விலையில் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஓலா எலெக்ட்ரிக் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தானியங்கி தொழில்நுட்பமும் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கென மாடிபை செய்யப்பட்ட கொல்ஃப் கார்ட் பயன்படுத்தப்பட்டது. புது தொழில்நுட்பம் கொண்ட கார் அதிகபட்சமாக மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. 

    இந்த தானியங்கி வாகனத்தில் இரண்டு LiDAR கேமராக்கள், ஒரு வீடியோ கேமரா, GPS பொருத்தப்பட்டு இருந்தது. இந்த தானியங்கி கார் வழியில் யாரேனும் வந்தால் சாமர்த்தியமாக நின்றதோடு, வளைவுகளில் மிகச் சரியாக தானாகவே திரும்பி சென்றது. கான்செப்ட் என்ற முறையில் இந்த மாடல் அதிக நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் ஹிமாலயன் 450 மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹிமாலயன் 450 மாடல் தொடர்ந்து பிரி-ப்ரோக்‌ஷன் டெஸ்ட்களை எதிர்கொண்டு வருகிறது. இதை அடுத்து புதிய ஹிமாலயன் 450 ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. தற்போதைய ஸ்பை படங்களில் புது ஹிமாலயன் 450 மாடலில் டெயில் பகுதி பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. 

    ஹிமாலயன் 450
    Photo Source: Rushlane

    அதன்படி புதிய ஹிமாலயன் மாடலின் எக்சாஸ்ட் கேனிஸ்டர், ஹிமாலயன் 411 மாடலில் உள்ளதை விட அளவில் சிறியதாக இருக்கிறது. மேலும் இது அதிநவீன டிசைன் மற்றும் பிளாக் நிற ஹீட் ஷீல்டு கொண்டிருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய எல்.இ.டி. இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற லைட்கள் இதுவரை எந்த ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்படவில்லை.

    இத்துடன் அப்சைடு டவுன் முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக், இரு புறங்களிலும் டிஸ்க் பிரேக், வயர் ஸ்போக் வீல்கள் உள்ளன. சமீபத்திய ஸ்பை படங்களில் இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு நெருங்கிய நிலையிலேயே காட்சியளிக்கிறது.
    டுகாட்டி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.


    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிள் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900 சீரிஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. F 900 XR மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    புதிய டுகாட்டி மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 5 இன்ச் கலர் TFT டிஸ்ப்ளே, கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், வெஹிகில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த மாடலில் ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் எண்டியுரோ என நான்கு விதமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இதன் எஸ் வேரியணட்டில் குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம், டுகாட்டி கார்னெரிங் லைட்கள் மற்றும் டுகாட்டி ஷிப்ட் அப் அண்ட் டவுன் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. 

    டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிளில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 937சிசி, டெஸ்டா-ஸ்டிரெட்டா, டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த என்ஜின் 111.5 பி.ஹெச்.பி. பவர், 94 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2

    இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த எடை ஐந்து கிலோ குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் மல்டிஸ்டிராடா வி2 மாடலின் எஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கை ஹூக் சஸ்பென்ஷன் இவோ செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மேனுவல் அட்ஜஸ்ட் வசதி கொண்ட செட்டப் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 மில்லிமீட்டர் ரோட்டார்கள் மற்றும் பிரெம்போ மோனோபிளாக் கேலிப்பர்கள், பின்புறம் 265 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் பிரெம்போ கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கிற்கு டுவின் பாட் ஹெட்லைட், செமி ஃபேரிங், உயரமான விண்ட்-ஸ்கிரீன், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 ரெட் லிவரி ரூ. 14 லட்சத்து 65 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 எஸ் கிரெ லிவரி ரூ. 16 லட்சத்து 84 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 
    அதன்படி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் ஸ்கூட்டரில் எந்த பிரச்சினையும் இல்லை என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 ப்ரோ ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் தான் விபத்தில் சிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் தான் காரணம் என அவர் குற்றம்சாட்டி இருந்தார். 

    இந்த விவகாரத்தை பல்விந்தர் சிங் தனது டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். டுவிட்டர் பதிவுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பதில் அளித்திருக்கிறது. அதன்படி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் ஸ்கூட்டரில் எந்த பிரச்சினையும் இல்லை என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. விபத்து ஏற்பட சரியாக முப்பது நிமிடங்கள் முன் வரை ஸ்கூட்டரின் செயல்பாடுகளை ஓலா பரிசோதனை செய்து இருக்கிறது.

    அதன்படி பயனர் ஓலா S1 ப்ரோ மாடலில் பல முறை அதிவேகமாக சென்று இருக்கிறார். 30 நிமிட இடைவெளியில் மட்டும் இந்த இ ஸ்கூட்டர் சுமார் ஐந்து முறை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது. அதன்படி பயனர் அதிவேகமாக சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு இருக்க வேண்டும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்  தெரிவித்து உள்ளது.
    ×