என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக்கொள்ளலாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடைபெறும் ஆண் டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக குற்றத்த–டுப்பு நடவடிக்கையாக தேர் பவனி வரும் பாதையான 4 ரதவீதிகள், கோவில் உட்பு–றம், வெளிப்பிரகாரம் மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள்,

    உயர் கட்டிடங்களில் பைனாக்குலர், நவீன கேம–ராக்கள் பொருத்தியும், உயர் கண்காணிப்பு கோபு–ரங்கள் அமைத்தும், காவல் துறையி–னர் டிரோன் கேமராக்களை பறக்கவிட்டும் அதன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு குற்ற நடவடிக்கைகளை தடுக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    போக்குவரத்து மாற்றம்

    தேரோட்டத்தை முன் னிட்டு மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் நாளை (22-ந்தேதி) காலை 5 மணி முதல் கிருஷ்ணன்கோவில், பாட் டக்குளம் விலக்கில் இருந்து மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க் கமாக வந்து திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையம் செல்வதற்கும்,

    ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் எம்.பி.கே.–புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சாபுரம், கம்மாப் பட்டி, ஆத்துக்கடை ஜங் ஷன், ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழியாக மதுரை செல்லவும், சிவகாசியில் இருந்து ராஜ–பாளையம் செல்லும் வாக–னங்கள் மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க்கமாக வந்து திருப் பாற்கடல் வழியாக ராஜபா–ளையம் செல்லவேண்டும்.

    மேலும் மதுரையில் இருந்து வரும் அரசு பயணியர் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் சந்திப்பு, பஸ் நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழியாக ராமகிருஷ் ணாபுரம், சர்ச் சந்திப்பு, செங்குளம் விலக்கு, என்.ஜி.ஜி.ஓ. காலனி, திருப்பாற் கடல் வழியாக ராஜபாளைம் செல்லவேண்டும்.

    ராஜபாளைத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்து–கள் எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சா–புரம், கம்மாப்பட்டி, ஆத் துக்கடை ஜங்ஷன், பேருந்து நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழி–யாக ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழி–யாக மதுரை செல்லவேண் டும்.

    வாகன நிறுத்துமிடங்கள்

    மேலும் தேரோட்டத்திற்கு மதுரையில் இருந்து வரும் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூ–ரில் உள்ள மங்காபுரம் பள்ளி மைதானம், கான் வென்ட் பள்ளி மைதானம், ஜி.கே.பர்னிச்சர் வடக்கே உள் மைதானம், ராஜபாளை–யத்தில் இருந்து வரும் வாகனங்கள் பெரியகு–ளம் கண்மாள் சுற்றியுள்ள காலி–யிடங்களிலும், சிவகாசியில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

    • ராஜபாளையத்தில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியிடம் மாரிமுத்து நெருங்கி பழகி உள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாரிமுத்து டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் திருமணம் செய்வதாக கூறி அந்த மாணவியிடம் மாரிமுத்து நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே இந்த விவ காரம் குறித்து ராஜபாளை யம் விரிவாக்க அலுவலர் மேத்தா மேரிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் சம்பவ இடம் சென்று விசாரித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி மாணவியை கர்ப்பிணி யாக்கிய மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

    • காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரவணனை ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
    • திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்ற வாளிகளை தேடி வந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயது மகன் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் திண்டுக்கல் வ.உ.சி. நகர் பகுதியில் வசித்து வந்தார்.

    இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்றபோது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டறை, சரவணனை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று அருப்புக்கோட்டை ஜூடிசியல் கோர்ட்டில் ஆசிப் முகமது, முகமது மீரான், கலீல் அகமது, சதாம் உசேன், முகமது இர்ஃபான், சக்தி மகேஸ்வர், முகமது அப்துல்லா, சேக் அப்துல்லா ஆகிய 8 பேர் சரணடைந்தனர்.

    • முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பழனி (வயது 27). இவர் டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பனைக்குடி பகுதியை சேர்ந்த பாண்டி மகள் முத்துவள்ளி (24) என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது.

    திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தையில்லை. பழனி லாரி டிரைவராக பணிபுரிந்து வருவதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று தங்கிக்கொள்வது வழக்கம். இருந்தபோதிலும் தினமும் மனைவியுடன் செல்போனில் பேசி நலம் விசாரித்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    காலப்போக்கில் மனைவியுடனான நெருக்கம் குறைந்ததாக பழனி எண்ணினார். மேலும் சாவரியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பும் சமயங்களில் மனைவி தன்னுடன் அதிகம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் எண்ணி கவலைப்பட்டார். இதுவே நாளுக்கு நாள் அவரது மனதில் புரையோடி வளர்ந்தது. அது மனைவி முத்துவள்ளியின் நடத்தையில் சந்தேகப்படும் அளவுக்கு வந்தது.

    இதையடுத்து பழனி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரை காலி செய்து விட்டு, மதுரை அவனியாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கு கணவன், மனைவி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். ஒருபுறம் குழந்தை இல்லாத ஏக்கம், மறுபுறம் மனைவியின் நடத்தை மீதான சந்தேகம் இரண்டும் சேர்ந்து பழனியை பாடாய்படுத்தியது.

    அதுவே தம்பதிக்கிடையே பகையாக வளர்ந்து தகராறை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் பழனி, தனது மனைவி முத்துவள்ளியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துவள்ளி கணவரை பிரிந்து, தனது சொந்த ஊரான பனைக்குடி கிராமத்திற்கு சென்றுவிட்டார். அங்கு தாய் முத்துமாரியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இருவீட்டாரின் உறவினர்கள் பழனி, முத்துவள்ளி இருவரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி மீண்டும் கணவருடன் சென்று குடும்பம் நடத்த அனுப்பி வைத்தனர். ஆனால் இருவருக்கிடையேயான பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

    இதற்கிடைய முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அக்காள் கார்த்தீஸ்வரி தங்கையான முத்துவள்ளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

    அதன்பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் அ.முக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட முத்துவள்ளியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது நாடியின் கீழ்பகுதி, நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காணப்பட்ட காயங்களால் சந்தேகமடைந்த போலீசார் அவரது கணவர் பழனியிடம் அதிரடியாக விசாரணையை தொடங்கினர். இதில் பழனி தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று முத்துவள்ளியின் நடத்தையின் மீது ஏற்கனவே ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பழனி, முத்துவள்ளியை அடித்துக்கொன்றதும் தெரிவித்துள்ளார். கொலையை மறைக்கவே முத்துவள்ளி தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி தான் நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து தற்கொலை வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவர் பழனியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பழனி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டதாக வாதம்.

    விருதுநகர்:

    கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார்.

    கடந்த டிசம்பர் 22ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது எனவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஜூன் 27ம் தேதியும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

    • குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தந்து விளம்பர பதாகை வைத்து தெரியப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • போலீஸ் சூப்பி–ரண்டு சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண் டாள் கோவில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா தொடர் பான முன்னேற்பாடு பணி–கள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வானமாமலை மண்டபத்தில் கலெக்ர் ஜெயசீலன் தலை–மை–யில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்திட ஒவ் வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண் டிய முன்னேற்பாடு பணி–கள் குறித்தும், எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக விரிவான ஆலோசனை நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண் டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா வரு–கின்ற 22-ந்தேதி சனிக்கி–ழமை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் தமிழ–கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்ப–டுகிறது.

    தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெ–றும் தேரோட்டங்கள் தங்கு–தடையின்றி, விபத்துகள் இன்றி சிறப்பாக நடைபெ–றுவதை உறுதிபடுத்தும் வித–மாக தமிழக அரசு அறி–வித்துள்ள தேரோட்ட வழி–பாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய அலுவலர் கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்க–ளுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற் பாட்டுப்பணிகளை காவல் துறையினர் மேற்கொள்ள–வும், மேலும், போக்குவரத் தினை ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவல் துறையி–னரும், அவர்களுக்கு துணை–யாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாண–வர்களும், ஊர்க்காவல் படையினர், சாரணர்களும் கூட்ட நெரிசலை ஓழுங்கு–படுத்தும் பணியில் ஈடுப–டவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலை ஒழுங் கு–படுத்த காவல்துறை–யினர் மாற்றுப்பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். குற்றங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்கா–ணிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. வருகின்ற பொது மக்கள் மற்றும் பக்தர்க ளுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை சிறப்பான முறையில் செய் திடவும், நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக தேர் வலம் வரும் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்குகள் அமைத்திடவும், லாரிகள் மூலமும், தண்ணீர் பந்தல் அமைத்தும் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்பட–வுள்ளது.ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி மூலம் தற்காலி–கமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட தேவையான நடவ–டிக்கைகளை மேற்கொள்ள–வும், உணவு விடுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் பயன்ப–டுத்தப்படுகிறதா என்பத–னையும் ஆய்வு செய்ய–வேண்டும். குடிநீர் வசதி, சுகாதார வளாகம், தற்கா–லிகமாக கழிப்பறை, நடமா–டும் கழிப்பறை வசதி போன்ற வசதிகள் எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட் டுள்ளது என்பதை பொது–மக்கள் எளிதாக தெரிந்து–கொள்ளும் வண்ணம் விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

    இப்பணிகளை ஸ்ரீவில்லி–புத்தூர் நகராட்சி ஆணையா–ளர் மேற்கொள்ள அறிவு–றுத்தப்பட்டுள்ளது. தீய–ணைப்பு வண்டிகளுடன் முன்னெச்சரிக்கை நடவ–டிக்கையாக தயார் நிலையில் இருக்கவு உத்தரவிடப்பட் டுள்ளது.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்தி–டும் வகையில் மருத்துவர் குழுவினர் போதிய மருந்து–கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்கவும், ஆம்பு–லன்ஸ்சுகளும் தயார் நிலை–யில் வைக்கவும், கோவில் முன்புறமுள்ள ஆடிப்பூரக் கொட்டகையிலும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, போதிய மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்கவும் அறிவு–றுத்தப்பட்டுள்ளது.

    ஆடிப்பூரத் தேர்த்திரு–விழா அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழக மண்டல போக்குவரத்து அலுவலர், பொது மேலாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் மேற் கொள்ளவேண்டும். வெளி–யூர் பேருந்துகள் நிறுத்துவ–தற்கு வசதியாக தற்காலிக பேருந்துநிலையம் அமைக் கப்பட உள்ளது.

    தேரோட்ட தினத்தன்று சாலையின் குறுக்கே செல் லும் மின் கம்பிகளும், தொலைபேசி இணைப்பு–களும் தற்காலிகமாக தேரோட்டம் முடியும் வரை அகற்றப்பட்டு தேரோட்டம் முடிந்த உடன் சரிசெய்யவும், இப்பணிகளுக்கு உரிய ஏற்பாடுகளை மின்சார வாரிய ஊழியர்களும், தொலை தொடர்புத்துறை ஊழியர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநா–தன், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, தக்கார் ரவிச் சந்திரன் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண் டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் அபார சாதனை படைத்தனர்.
    • மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 49-வது தமிழ்நாடு மாநில அளவி–லா ன ரோடு சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்க–ளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்டனர்.

    மாணவிகள் சாதனை

    இதில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி சி.சுவா–திகா முதலிடத்தை பிடித்து ரூ.9 ஆயிரம் ரொக்கப்பரி–சையும் வென்றார்.

    அதே பள்ளியில் படிக் கும் மாணவி மஞ்சரி இரண்டாமிடம் பிடித்து ரூ.7 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றார். மாநில அளவில் சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி–கள் சி.சுவாதிகா, மஞ்சரி ஆகியோரை பள்ளி தாளா–ளர் ஆர்.வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வர் எம்.சுந்தர–மகாலிங்கம் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஆகி–யோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    பாராட்டு

    அதேபோல் மாணவிக–ளுக்கு உரிய பயிற்சி அளித்து ஆக்கமும், ஊக்கமும் அளித்த உடற்கல்வி ஆசிரி–யர்கள் தர்மராஜ், சக்தி–வேல் ஆகியோரும் பாராட்டி கவுரவிக்கப்பட்ட–னர்.

    • ராஜபாளையம் அருகே அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் தொடங்கப்பட்டது.
    • இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் என ரூ. 4 லட்சம் நிதியில் உயர்தர (ஸ்மார்ட்) வகுப்பறை அமைக்கப் பட்டது. அதனை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனும், யூனியன் சேர்மன் சிங்கராஜூம் மாணவ மாணவிகளின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்த னர்.

    அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாகவும், ஏழை எளிய குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் முதல்கட்டமாக ராஜ பாளையம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம், 30 லட்சம் நிதி ஒதுக்கி ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது அதில் முதல் பள்ளியாக சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டுமெனும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்து நல்லதொரு வழிகாட்டுதலை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கி தந்துள்ளார். இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது.

    ராஜபாளையம் தொகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதன்படி அந்த பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தியிருந்தோம் இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் கல்வித்துறையின் மானியக்கோரிக்கையில் ரூ. 12கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் அழகு ராஜலட்சுமி, கவுன்சிலர் அனுசுயாகண்ணன், கிளைச்செயலாளர்கள் ரத்தினக்கனி, பிள்ளையார், வைரமுத்து ,ரமேஷ், கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் எடுக்க முடியாமல் கர்ப்பிணிகள், நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர்.
    • ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையானது விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை மருத்துவமனை யாக விளங்குகிறது. இந்த அரசு மருத்துவமனையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட உள்புற வெளிப்புற நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    குறிப்பாக அருப்புக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களான ஆத்திப்பட்டி, திருச்சுழி, கல்லூரணி, மண்டபசாலை, ரெட்டியாபட்டி, பரளச்சி, பந்தல்குடி உள்பட பல கிராமங்களில் இருந்து மக்கள் சிகிச்சைக்கு இங்குதான் வருகின்றனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு இங்கு பிரசவத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சி.டி.ஸ்கேன் எடுக்கும் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    கர்ப்பிணி பெண்கள், எலும்பு முறிவு, தலைகாயம் உள்ளிட்டவற்றுக்கு ஸ்கேன் எடுக்க முடியவில்லை. அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.

    குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அலைகழிக்கப்படுகின்றனர். எனவே அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் பிரிவில் ஊழியர்கள் பற்றாக்குறையை நீக்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகரை சேர்ந்தவர்கள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் இயற்கை விவசாய சாகுபடி யில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப் படுவதோடு மண்வளத்தை யும் பாதுகாப்பது விவசாய சாகுபடியாகும்.

    வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணு யிர் கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச்செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகின்றன. நுண்ணுயிர் கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால், மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

    மக்களின் உடல் நலத்தை காக்கவும், மண்வளம், இயற்கை வளம் காப்பதற்கும், நீடித்த நிலையான வேளாண்மையினை உறுதி படுத்தவும் தமிழக அங்கக வேளாண்மை கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

    இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, மற்ற விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.

    நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக்கட்ட ணம் ரூ.100 செலுத்த வேண் டும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டி ருக்க வேண்டும். மேலும், அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும்.

    மாநில அளவில் வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்வர் வழங்க உள்ளார். முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 இலட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.

    விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான வழிமுறைகள் குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அருப்புக்கோட்டைக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் டிசம்பர் முதல் வழங்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    அருப்புக்கோட்டை

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அருப்புக்கோட்டை விருதுந கர், சாத்தூர் ஆகிய நகராட்சி களுக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகி ன்றன. இதில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு மட்டும் .226 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் சீவலப்பேரியிலிருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு பகிர்மான குழாய்கள் மூலம் அருப்புக்கோட்டைக்கு கொண்டு வரப்படும். இதற்காக அருப்புக் கோட்டை நகர் பகுதிகளில் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளது. இதுவரை 90 சதவீத பணிகள் முடி வடைந்துள்ளன. நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும். மேலும் வைகையில் இருந்தும் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகை வறண்ட நிலையில் உள்ளதால் வைகையில் இருந்து வரும் தண்ணீரின் தன்மை குறைந்து சுவை யற்ற நிலையில் வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வைகை யில் இருந்து அருப்புக் கோட்டைக்கு குழாய்கள் மூலம் கொண்டு வரும் குடிநீரை கட்டங்குடியில் ரூ. 6 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து அதன்பின் அருப்புக்கோட்டைக்கு வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

    பழைய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வல்லநாட்டில் இருந்து அருப்புக்கோட்டை வரை 19 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்க ளில் ஆங்காங்கே அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகி வருகிறது. அதையும் நிவர்த்தி செய்யும் வகையில் புதிய குழாய்கள் அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்தி னரிடம் திட்ட மதிப்பீடு தயார் செய்ய கூறியுள்ளேன். திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசுக்கு அனுப்பி நிதியை பெற்று குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும் கட்டங்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பழைய இரும்பு குழாய்களுக்கு பதிலாகரூ. 6 கோடி செலவில் டி.ஐ.பைப் பதிக்கப்பட உள்ளது.

    தற்போது தாமிரபரணி, வைகை ஆகிய 2 குடிநீர் திட்டங்களிலும் குறைந்த அளவே குடிநீர் பெறப்ப டுவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஆணையாளர், அசோக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் தி.மு.க. நகர செயலாளர் ஏ.கே.மணி உடனிருந்தனர்.

    • விஜயகரிசல் குளம் அகழாய்வில் பச்சை குத்தும் கருவி கண்டெடுக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை தொல்லியல் துறை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் சங்கு வளையல்கள், மண் சட்டி, நீர்க்கிண்ணம், யானைத் தந்ததால் செய்யப்பட்ட பகடைக்காய், சுடு மண்ணால் செய்யப்பட்ட பொம்மை, எடை கற்கள், நெசவுத் தொழிலுக்கு பயன்படு த்தப்பட்ட தக்களி, ஏற்றுமதிக்கு பயன்ப டுத்தப்பட்ட முத்திரை கருவி, கல் மணிகள், பாசிமணிகள் என 2800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத் துள்ளன. நேற்று தோண்டப்பட்ட குழியில் பச்சை குத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட அச்சு கிடைத்துள்ளது. அதில் இலைகளுடன் கூடிய அழகாக வடிவமைக் கப்பட்டது. இதன்மூலம் பழங்கா லத்தில் நம் முன்னோர்க ளிடம் பச்சை குத்தும் வழக்கம் இருந்துள்ளது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வு தோண்டப்பட்டதில் 6 குழிகள் முழுமையாக பணிகள் முடிவ டைந்துள்ளன.

    இந்த குழியில் கிடைத்த பொருட்களின் நீளம், அகலம் ஆகியவற்றை வரைபடம் மூலம் ஆவணப்படுத்த முயற்சி மற்றும் அளவீடு செய்யும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும். மேற்கண்ட தகவலை தொல்லியல் துறை இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.

    ×