search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை போக்குவரத்து மாற்றம்
    X

    நாளை போக்குவரத்து மாற்றம்

    • ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக்கொள்ளலாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடைபெறும் ஆண் டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக குற்றத்த–டுப்பு நடவடிக்கையாக தேர் பவனி வரும் பாதையான 4 ரதவீதிகள், கோவில் உட்பு–றம், வெளிப்பிரகாரம் மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள்,

    உயர் கட்டிடங்களில் பைனாக்குலர், நவீன கேம–ராக்கள் பொருத்தியும், உயர் கண்காணிப்பு கோபு–ரங்கள் அமைத்தும், காவல் துறையி–னர் டிரோன் கேமராக்களை பறக்கவிட்டும் அதன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு குற்ற நடவடிக்கைகளை தடுக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    போக்குவரத்து மாற்றம்

    தேரோட்டத்தை முன் னிட்டு மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் நாளை (22-ந்தேதி) காலை 5 மணி முதல் கிருஷ்ணன்கோவில், பாட் டக்குளம் விலக்கில் இருந்து மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க் கமாக வந்து திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையம் செல்வதற்கும்,

    ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் எம்.பி.கே.–புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சாபுரம், கம்மாப் பட்டி, ஆத்துக்கடை ஜங் ஷன், ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழியாக மதுரை செல்லவும், சிவகாசியில் இருந்து ராஜ–பாளையம் செல்லும் வாக–னங்கள் மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க்கமாக வந்து திருப் பாற்கடல் வழியாக ராஜபா–ளையம் செல்லவேண்டும்.

    மேலும் மதுரையில் இருந்து வரும் அரசு பயணியர் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் சந்திப்பு, பஸ் நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழியாக ராமகிருஷ் ணாபுரம், சர்ச் சந்திப்பு, செங்குளம் விலக்கு, என்.ஜி.ஜி.ஓ. காலனி, திருப்பாற் கடல் வழியாக ராஜபாளைம் செல்லவேண்டும்.

    ராஜபாளைத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்து–கள் எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சா–புரம், கம்மாப்பட்டி, ஆத் துக்கடை ஜங்ஷன், பேருந்து நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழி–யாக ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழி–யாக மதுரை செல்லவேண் டும்.

    வாகன நிறுத்துமிடங்கள்

    மேலும் தேரோட்டத்திற்கு மதுரையில் இருந்து வரும் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூ–ரில் உள்ள மங்காபுரம் பள்ளி மைதானம், கான் வென்ட் பள்ளி மைதானம், ஜி.கே.பர்னிச்சர் வடக்கே உள் மைதானம், ராஜபாளை–யத்தில் இருந்து வரும் வாகனங்கள் பெரியகு–ளம் கண்மாள் சுற்றியுள்ள காலி–யிடங்களிலும், சிவகாசியில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

    Next Story
    ×