என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    மோட்டோரோலா நிறுவனத்தின் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் 2019 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மோட்டோரோலா ரேசர் 4ஜி மற்றும் ரேசர் 5ஜி என இரு மடிக்கக்கூடிய மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இரு ஸ்மார்ட்போன்களுக்கான விலை குறைப்பு முன்பை போன்றே குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை குறைப்பு ப்ளிப்கார்ட் தளத்திற்கு மட்டும் பொருந்தும்.

    வலைதள ஸ்கிரீன்ஷாட்

    விலை குறைப்பின் படி மோட்டோரோலா ரேசர் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 89,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 1,24,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மோட்டோரோலா ரேசர் 4ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 54,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூ. 1,49,999 ஆகும்.

    மோட்டோ ரேசர் 5ஜி மாடல் பாலிஷ் கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. மோட்டோ ரேசர் 4ஜி மாடல் நாய்ர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சமாக 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    அதிக மாற்றங்களுடன் புது ஐபேட் மினி மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் மற்றும் ஐமேக் சாதனங்களை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் புது டிசைன் மட்டுமின்றி ஆப்பிள் சிலிகான் பிராசஸர்களையும் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஐபேட் ப்ரோ மாடலில் ஆப்பிள் எம்1 பிராசஸர் வழங்கப்பட்டது. 

    அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினி மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஐபேட் மினி 6 பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐமேக் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஐபேட்

    புதிய ஐபேட் மினி முற்றிலும் புது டிசைன், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஹோம் பட்டன் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்களை பெறும் சாதனமாக புதிய ஐபேட் மினி இருக்கும் என கூறப்படுகிறது. 

    முன்னதாக இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி புது ஐபேட் மினி 206.3mm x 137.8mm x 6.1mm அளவில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. மேலும் இந்த மாடல் சில்வர், பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

     
    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் பலமுறை வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     சியோமி ரெட்மி நோட் 10டி 5ஜி டீசர்

    ரெட்மி நோட் 10டி 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
    - டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1 
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன், புளூ, சில்வர் மற்றும் கிரே நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. 
    நத்திங் நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 5,999 என அறிவித்து இருக்கிறது. இது ஐரோப்பா மற்றும் ப்ரிட்டன் சந்தை விலையை விட குறைவு ஆகும். 

    புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் தலைசிறந்த ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என நத்திங் தெரிவித்து உள்ளது. மேலும் புதிய இயர்பட்ஸ் பற்றிய சிறு வீடியோக்களை நத்திங் வெளியிட்டு உள்ளது.

     நத்திங் இயர் 1

    இந்த அம்சத்திற்கென மூன்று ஹை டெ_ஃபனிஷன் மைக், டிரான்ஸ்பேரன்ட் பாகங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புது இயர்பட்ஸ் பிரீமியம் பில்டு, சிறப்பான அனுபவம் கொண்டிருக்கும். இத்துடன் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 

    புதிய நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இது ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    விவோ நிறுவனம் இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    விவோ நிறுவனத்தின்  Y20A மற்றும் Y20G ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளங்களில் மாற்றப்பட்டு விட்டது.

    முன்னாதாக விவோ y21s மற்றும் y12s மாடல்களின் விலை ரூ. 500 வரை உயர்த்தப்பட்டது. விவோ y21s மாடலின் 2 ஜிபி விலை ரூ. 8,490 மற்றும் விவோ y12s 3 ஜிபி ரேம் விலை ரூ. 10,490 என மாற்றப்பட்டது.

     விவோ ஸ்மார்ட்போன்

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ y20a ரூ. 11,490 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போதைய விலை உயர்வு காரணமாக இதன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,990 என மாறி இருக்கிறது.

    விவோ y20g ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் விலை முறையே 13,990 மற்றும் ரூ. 15,990 என மாறி இருக்கிறது. முன்னதாக இரு மாடல்களும் முறையே ரூ. 12,990 மற்றும் ரூ. 14,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.   
    ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
    ரியல்மி பேட் சாதனம் விரைவில் வெளியாகும் என ரியல்மி ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது இந்த மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புகைப்படத்தில் உள்ள ரியல்மி பேட் சோதனை செய்யப்படுகிறது. தற்போது லீக் ஆகி இருக்கும் புகைப்படங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளது.

    கோப்புப்படம்

    லீக் ஆகி இருக்கும் புகைப்படங்களில் ரியல்மி பேட் கேமரா திறனை ரியல்மி நிறுவன ஊழியர் சோதனை செய்கிறார். புகைப்படங்களின்படி ரியல்மி டேப்லெட் அலுமினியம் அல்லது மெட்டல் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதில் ஒற்றை கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ்., 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி, 64 ஜிபி மெமரி மற்றும் பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. விரைவில் ரியல்மி பேட் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு விளம்பர நோக்கில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 45 விலையில் முதல் ரீசார்ஜ் கூப்பன் (first recharge coupon) சலுகையை அறிவித்து இருக்கிறது. இது விளம்பர நோக்கில் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    45 நாட்கள் வேலிடிட்டி நிறைவுற்றதும், பயனர்கள் தற்போது வழங்கப்படும் இதர சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். புதிய அறிமுக சலுகை ஆகஸ்ட் 6 வரை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இதுதவிர ஜூலை 31 ஆம் தேதி வரை இலவச சிம் சலுகையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது.

    புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 249 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புது மேக்புக் ப்ரோ மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ புது மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், சந்தை வல்லுநரான மிங்-சி கியோ புது டிசைன், மினி-எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ப்ரோ மாடலை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார்.

     மேக்புக் ப்ரோ

    மேலும் புதிய 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களுக்கான உற்பத்தி மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என அவர் தெரிவித்தார். இதுதவிர மினி-எல்.இ.டி. டிஸ்ப்ளே பேனல்களை பெற ஆப்பிள் அதிக முதலீடு செய்கிறது. எதிர்காலத்தில் இந்த பேனல்களை பெரும்பாலன சாதனங்களில் பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறுகிறார்.

    முன்னதாக மினி-எல்.இ.டி. பேனல் கொண்ட முதல் சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்தது. ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் மினி-எல்.இ.டி. பேனல் கொண்டிருக்கிறது. ஐபேட் மாடல்களை தொடர்ந்து மினி-எல்.இ.டி. பேனல்கள் விரைவில் மேக்புக் ப்ரோ சாதனத்திலும் வழங்கப்படலாம். 
    வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புது அம்சம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்படுகிறது. இன்னும் முழுமை பெறாத நிலையில், இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் போது மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது.

    இதுவரை வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் புகைப்படங்களின் தரம் தானாக குறைக்கப்பட்டு விடும். விரைவில் இந்த நிலை மாற இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டா v2.21.14.16 பதிப்பில் இந்த புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சத்தை பயனர்கள் Storage -- Data மெனுவில் உள்ள Photo Upload Quality ஆப்ஷன்களை க்ளிக் செய்து இயக்க முடியும். 

    முந்தைய ஆப்ஷன்களை க்ளிக் செய்ததும் ஆட்டோ, பெஸ்ட் குவாலிட்டி மற்றும் டேட்டா சேவர் என மூன்று தரங்களில் புகைப்படங்களை அனுப்ப வாட்ஸ்அப் வழி செய்கிறது. 

     வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்

    ஆட்டோ (Auto): ஒவ்வொரு புகைப்படத்திற்கும் சிறந்த தேர்வை வாட்ஸ்அப் கண்டறிந்து அனுப்பும் 

    பெஸ்ட் குவாலிட்டி (Best Quality): அதிக தரமுள்ள புகைப்படத்தை வாட்ஸ்அப் அனுப்பும்

    டேட்டா சேவர் (data saver): புகைப்படங்களின் அளவை குறைத்து, அதிவேகமாக அனுப்பும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தின் தரம் குறைந்துவிடும்.

    அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்புவது மட்டுமின்றி, வீடியோக்களிலும் இதேபோன்ற அம்சத்தை முந்தைய பீட்டாவில் வாட்ஸ்அப் வழங்கி இருந்தது. இரு அம்சங்களும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இவை வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என தெரிகிறது.
    கூகுள் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இத்தனை ஆண்டுகள் தொடர் அப்டேட் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி அதன் அம்சங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. 

    அவ்வாறு பிக்சல் 6 மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இரட்டை கேமரா சென்சார்களும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மூன்று கேமரா சென்சார்களும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் பிரத்யேகமாக உற்பத்தி செய்யும் வைட்சேப்பல் பிராசஸர் வழங்கப்பட இருக்கின்றன.

     பிக்சல் 6 ரென்டர்

    இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் என்றும் இவற்றுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் வழங்க கூகுள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், 5 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் அல்லது 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    தற்போது விற்பனையில் இருக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மூன்று ஆண்டுகள் மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. 5 ஆண்டுகளுக்கு அப்டேட் வழங்கும் பட்சத்தில், அப்டேட் வழங்குவதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இணையான நிறுவனமாக கூகுள் இருக்கும்.

    மற்ற நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.


    இந்திய சந்தையில் சியோமி, ஒப்போ மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்கள் விலையை கடந்த வாரம் உயர்த்தின. இந்த நிலையில், சாம்சங் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.

    விலை உயர்வின் படி கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எம்02எஸ் மற்றும் கேலக்ஸி ஏ12 போன்ற மாடல்களின் விலை மாறி இருக்கின்றன. மூன்று மாடல்களின் அனைத்து வேரியண்ட்கள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன.

     சாம்சங் கேலக்ஸி எப்02எஸ்

    புதிய விலை விவரம்:

    கேலக்ஸி எப்02எஸ் 3 ஜிபி+32 ஜிபி ரூ. 9,499 

    கேலக்ஸி எப்02எஸ் 4 ஜிபி+64 ஜிபி ரூ. 10,499

    கேலக்ஸி எம்02எஸ் 3 ஜிபி+32 ஜிபி ரூ. 9,499

    கேலக்ஸி எம்02எஸ் 4 ஜிபி+64 ஜிபி ரூ. 10,499

    கேலக்ஸி ஏ12 4 ஜிபி+64 ஜிபி ரூ. 13,499

    கேலக்ஸி ஏ12 4 ஜிபி+128 ஜிபி ரூ. 14,499

    விலை உயர்வு தவிர, சாம்சங் விரைவில் தனது கேலக்ஸி இசட் போல்டு 3, கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவற்றுடன் கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 
    போக்கோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் டீசர் ஒன்பிளஸ் நிறுவனத்தை சீண்டும் வகையில் உள்ளது.


    போக்கோ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் டீசரை கேலி செய்யும் வகையில் புது டீசரை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

     போக்கோ F3 GT டீசர்

    இதுதவிர போக்கோ F3 GT ஸ்மார்ட்போனும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது டீசர் மூலம் நார்டு 2 மாடலை விட போக்கோ F3 GT அதிக அம்சங்களை வழங்கும் என போக்கோ தெரிவித்து உள்ளது. அந்த வகையில் நார்டு 2 ஸ்மார்ட்போனிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் அம்சங்களுடன் போக்கோ F3 GT வெளியாகும் என தெரிகிறது.

    முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸரை வழங்க இருப்பதாக அறிவித்தது. தற்போது போக்கோ F3 GT மாடலிலும் இதற்கு இணையான பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போக்கோ F3 GT சீனாவில் அறிமுகமான ரெட்மி கே40 கேம் என்ஹான்ஸ்டு எடிஷனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். 
    ×