என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை அறிவித்த நிலையில் தற்போது வோடஃபோனும் அறிவித்துள்ளது.
    இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28-ஆக குறைக்கப்பட்டன.

    இதனால் ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை கடந்த வாரம் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்ததை தொடர்ந்து ஏர்டெல்லும் 30 நாட்கள் வேலிட்டிட்டி திட்டத்தை அறிவித்தது. 

    இந்நிலையில் வோடஃபோனும் தற்போது 30 நாட்கள் வேலிட்டிடியை வழங்கும் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது.

    இந்த திட்டத்தின்படி ரூ.327 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள், மொத்தமாக 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும். 

    இதேபோல ரூ.337-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 100 எஸ்.எஸ்கள், அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் 28 ஜிபி டேட்டா 31 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் விஐ மூவிஸ் மற்றும் டிவி செயலிக்கான சந்தாவும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக், அறிமுக விலையாக ரூ.1,500 வரை தள்ளுபடி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த போனில் 6.6 இன்ச் full HD+ Infinity-V டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12, One UI 4.1-ல் இயங்குகிறது.

    இதில் octa-core 5nm Exynos processor வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை இந்த போனில் f/1.8 அப்பெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார் (120 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 அப்பேர்ச்சருடன்) f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர், f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா இடம்பெற்றுள்ளது. 

    இதில் வழங்கப்பட்டுள்ள கேமராக்கள் போக்கே எஃபெக்ட், சிங்கிள் டே, ஆப்ஜெக்ட் எரேசர், வீடியோ டி.என்.ஆர் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 8 மெகாபிக்ஸல் செல்ஃபி ஷூட்டர் கேமராவும் இதில் தரப்பட்டுள்ளது.

    மேலும் இந்த போனில் 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த போனின் 6ஜிபி+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகும். 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.20,499-ஆகும். இந்த இரு போன்களையும் அறிமுகம் விலையாக ரூ.17,999 மற்றும் ரூ.19,999-க்கு சாம்சங் வழங்குகிறது.

    மேலும் இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக்கும் வழங்கப்படும்.
    இதைத்தவிர வாட்ஸ்ஆப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒன் டைம் மெசேஜ் அம்சத்தை கணினியிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு வருகிறது.
    உலகின் முன்னணி சேட்டிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் ஏகப்பட்ட அம்சங்களை வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி புதிய அப்டேட்டுகளை வழங்கி வ்வருகிறது.

    இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் நமக்கு சேட்டில் வரும் போன் நம்பரை டேப் செய்தவுடன் அந்த நம்பர் வாட்ஸ்ஆப்பில் இருக்கிறதா என ஆராயும். வாட்ஸ்ஆப்பில் இருந்தால் அவற்றிருக்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பலாமா அல்லது கால் செய்யலாமா என கேட்கும். இதற்கு முன் சேட்டில் வரும் போன் நம்பரை டேப் செய்யும்போது கால் செய்யும் அம்சம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. 

    தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.

    இதைத்தவிர வாட்ஸ்ஆப்  ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒன் டைம் மெசேஜ் அம்சத்தை கணினியிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு வருகிறது.
    உடனடி பயணங்களை மேற்கொள்ளும் நபர்கள், குடும்பத்துடன் சுற்றுலா திட்டமிடும் நபர்களுக்கு இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இந்தியாவின் முன்னணி மின்னணு வணிக நிறுவனமான பேடிஎம் போஸ்ட்பெய்ட் வகையில் ரெயில் டிக்கெட் புக் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

    இதன்மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்கு சென்று ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பேடிஎம் வேலெட் வழியாக பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் பெற முடியும். பின் பேடிஎம் நிர்ணயித்துள்ள காலவரையறைக்குள் இந்த பணத்தை நாம் செலுத்தி விட வேண்டும். 

    உடனடி பயணங்களை மேற்கொள்ளும் நபர்கள், குடும்பத்துடன் சுற்றுலா திட்டமிடும் நபர்களுக்கு இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பேடிஎம்மின் போஸ்ட் பெய்ட் சேவை பயனர்களுக்கு கடன் வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த சேவையில் மூலம், 30 நாள்களுக்கு பயன்படுத்துவதற்கு ரூ .60,000 வரை கடன் பெற முடியும். இந்த பணத்தை, குறிப்பிட்ட பில்லிங் தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
    கேமரா, சார்ஜர், க்யூ.ஆர் ஸ்கேனர், வெப்ப கட்டுப்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
    Ixigo நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஷூக்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக நேற்று இணையத்தில் விளம்பரம் செய்தது. 

    இந்த ஷூக்களில் வாட்டர்ப்ரூஃப் யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் தரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாம் நமது ஸ்மார்ட்போனை இந்த ஷூவில் இணைத்து சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதற்கான பேட்டரில் ஷூவின் கீழ்பக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறியது. அதேபோன்று இதில் தரப்பட்டுள்ள 12 மெகாபிக்சல் கேமராக்கள் மூலம் நாம் செல்ஃபியை எடுத்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தது.

    மேலும் இந்த ஷூவில் இருக்கும் அல்ட்ரா வைட் பேக் கேமரா மூலம் நமக்கு பின் யார் வருகிறார்கள் என்பதை ஸ்மார்ட்போனுடன் இணைத்து பார்க்க முடியும். யாராவது இந்த ஷூவை திருடுகிறார்களா என்பதையும் கண்டுபிடிக்க முடியும். நமது உடலை வெப்பத்திற்கு ஏற்றாற்போல இந்த ஷூ வெப்பம் அல்லது குளிர்ச்சியை தரும். க்யூ.ஆர் ஸ்கேனர் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஷூவில் இடம்பெற்றுள்ளதாக Ixigo நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.

    இந்த ஷூவை முன்பதிவு செய்வதற்கான இணைப்பும் அந்த விளம்பரத்தில் தரப்பட்டிருந்தது. அதை ஆவலுடன் வாங்குவதற்காக சென்ற பயனர்கள் லிங்கை கிளிக் செய்து பார்த்தபோது ‘ஏப்ரல் ஃபூல்’ என காட்டப்பட்டது.

    ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் அன்று இணையவாசிகளை ஏமாற்றுவதற்காக இந்த விளம்பரம் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது.
    கூகுள் வெளியிட்டுள்ள இந்த அப்டேட்டில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடங்கியபின் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ வசதியை அறிமுகம் செய்தன. இதையடுத்து அலுவக ஊழியர்கள் சந்தித்துகொள்ள வீடியோ கான்ஃபரன்சிங் மென்பொருட்களின் பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கின. அவற்றில் கூகுள் மீட், ஜூம் போன்றவை மிகவும் பிரபலமானவை.

    இதில் கூகுள் நிறுவனம் தனது கூகுள் மீட் வீடியோ கான்ஃபரன்சிங் தளத்தில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    In-Meeting Reactions

    கூகுள் மீட்டில் புதிய ரியாக்‌ஷன்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோவில் ஒருவர் உரையாடும்போது அவருக்கு எமோஜிக்கள் மூலம் நாம் ரியாக்ட் செய்ய முடியும். தம்ஸ் அப், தம்ஸ் டவுன், சிரிப்பு, ஆச்சரியம், கைத்தட்டுதல் ஆகிய எமோஜிக்கள் மூலம் நாம் நமது எண்ணத்தை பிரதிபலிக்க முடியும்.

    PiP Mode

    கூகுள் மீட்டில் பிக்சர் இன் பிக்சர் என்ற அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாம் வீடியோவில் பேசியபடியே பிரவுசரில் பிற வேலைகளையும் பார்க்க முடியும். நமது பேச்சுக்கு பார்வையாளர்கள் எத்தகைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் நாம் பார்த்துகொள்ள முடியும்.

    Meet in Docs, Sheets and Slides

    கூகுள் மீட் அம்சம் இனி நேரடியாக டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் ஸ்லைட்ஸில் இடம்பெறும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாம் டாக்குமெண்டுகளை பார்த்துகொண்டிருக்கும்போதே மீட்டிங்கை தொடங்க முடியும்.

    பிற அம்சங்கள்...

    இதேபோல கூகுள் மீட்டில் கேள்வி பதில், கருத்துக்கணிப்பு ஆகியவற்றையும் நடத்தமுடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. யூடியூப்பிலும் கூகுள் மீட்டை ஸ்ட்ரீம் செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
    கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த பிரச்சனை ஃபேஸ்புக்கில் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் போலி செய்திகளை பரவுவதை தடுக்க தனது நியூஸ்ஃபீட் ரேங்கிங் அலாகரித்தத்தில் மாற்றத்தை செய்தது. ஆனால் அந்த அலாகரித்தம் போலி செய்திகளை தடுப்பதற்கு பதில் அதிகம் பரவுவதற்கு வழிவகுத்துவிட்டது. இதனால் ஃபேஸ்புகில் போலி செய்திகளின் பரவல் உலகம் முழுவதும் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தவிர ஆபாச பதிவுகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் ஆகியவையும் அதிகம் பரபப்பட்டதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு உருவான இந்த ’பக்’ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தீவிரமாக செயல்பட தொடங்கியது. பின் கடந்த மாதம் மார்ச் 11-ம் தேதி தான் இந்த பிரச்சனையை ஃபேஸ்புக் சரி செய்தது. ஃபேஸ்புக் விஞ்ஞானிகளே கண்டுபிடிக்க முடியாத வகையில் இதன் ஆலாகரித்தம் கடினமாக ப்ரோகிராம் செய்யப்பட்டதால் இந்த பிரச்சனை தீர்க்க முடியாதபடி இருந்துள்ளது.

    இந்த பிரச்சனை காரணமாக ஏராளமான பயனர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையே குறைந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த ’பக்’ முடிவுக்கு வந்துவிட்டதால் இனி பேஸ்புக்கில் போலி செய்திகள், ஆபாச பதிவுகள் பரவுவது பெருமளவில் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் ஃபினான்ஸ்+, ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்பொனுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் 6.7-inch full-HD+ Infinity-O Super AMOLED+ டிஸ்பிளே,800 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இருக்கிறது. மேலும் இதில் cta-core Qualcomm Snapdragon 778G SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை 108 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் (OIS சப்போர்ட்டுடன்), 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 5 மெகாபிக்ஸல் டெப்த் மற்றும் மேக்ரோ சென்சார் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.

    மேலும் இதில் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டால்பி சப்போர்ட்டுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்த போனில் 8ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.41,999-ஆகவும், 8ஜிபி+256ஜிபி வேரியண்டின் விலை ரூ.44,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் ஃபினான்ஸ்+, ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஹெட்போனை முன்பதிவு செய்பவர்கள் ரூ.6,990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் லைவ் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்களை வெறும் ரூ.499-க்கு வாங்கிகொள்ளலாம்.
    இந்த திட்டத்திற்காக iFixit எனப்படும் ஆன்லைன் ரிப்பேர் கம்யூனிட்டியுடன் இணைந்து சாம்சங் செயல்படவுள்ளது.
    சாம்சங் நிறுவனம் புதிய ‘Self Repair' திட்டத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி  சாம்சங் வாடிக்கையாளர்கள் பழுதடைந்த தங்கள் போனை தாங்களே ரிப்பேர் செய்துகொள்ள முடியும். இதற்கான வழிகாட்டலை சாம்சங்கே வழங்கும்.

    இதுகுறித்து சாம்சங் கூறுகையில் இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களின் வாழ்நாளை அவர்களே நீட்டித்துகொள்ள முடியும் என கூறியுள்ளது. இந்த திட்டத்திற்காக iFixit எனப்படும் ஆன்லைன் ரிப்பேர் கம்யூனிட்டியுடன் இணைந்து சாம்சங் செயல்படவுள்ளது.

    இந்த திட்டம் அமெரிக்காவில் மட்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சாம்சங் ஒருநாள் சர்வீஸ் திட்டத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோன்று வீடு தேடி வந்து ரிப்பேர் செய்யும் சேவையையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களே தங்கள் போனை ரிப்பேர் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது இந்த செல்ஃப் ரிப்பேட் திட்டம் கேலக்ஸி எஸ்20 மற்றும் எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும், கேலக்ஸி டேப் எஸ்7+க்கும் மட்டும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் உண்மையான உதிரி பாகங்களுடன், ரிப்பேட் கருவிகள், படக்காட்சிகளுடன் வழிமுறைகள் ஆகியவற்றை பெறுவர்.

    இந்த திட்டம் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் அமலுக்கு வரவுள்ளது.
    இந்த திட்டங்களுடன் 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் எடிஷன், ஃபாஸ்ட்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவையும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28-ஆக குறைக்கப்பட்டன.

    இதனால் ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை கடந்த வாரம் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்ததை தொடர்ந்து தற்போது ஏர்டெல்லும் இரண்டு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

    இதன் படி ரூ.296-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்எம்எஸ்கள், 25ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும்.

    மற்றொரு திட்டத்தில் ரூ.319க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும்.

    இந்த திட்டங்களுடன் 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் எடிஷன், ஃபாஸ்ட்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவையும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் பயனர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் பயனர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபோன் மற்றும் ஐபேட்டுகளுக்கு ஐஓஎஸ் 15.4 அப்டேட்டை வெளியிட்டது. ஆனால் இந்த அப்டேட்டை நிறுவிய ஸ்மார்ட்போன்களில் வேகமாக சார்ஜ் குறையும் பேட்டரி பிரச்சனை எழுந்தது.

    பயனர்கள் முழுதாக சார்ஜ் செய்தாலும் 20 நிமிடங்களில் முழு சார்ஜும் இறங்கிவிடும் வகையில் இந்த அப்டேட்டில் பிரச்சனை இருப்பதாக ட்விட்டரில் புகார் செய்தனர். இதற்கு ஆப்பிள் தரப்பில் பதில் எதுவும் அளிக்கவில்லை.

    இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனையை சரி செய்து ஆப்பிள் புதிய ஐஓஎஸ் 15.4.1 மற்றும் ஐபேட் ஓஎஸ் 15.4.1 என்ற இரண்டு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டுகளில் இதற்கு முன் நிலவி வந்த பேட்டரி பிரச்சனைகள் சரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

     இதுத்தவிர இந்த புதிய அப்டேட்டின் மூலம் பிரைலி சாதனங்களில் நிறுவி வந்த பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஆப்பிள் ஹோம்போட் 15.4.1 என்ற புதிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. இதின் மூலம் அப்பிளின் ‘சிரி’ அம்சத்தில் உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்கு வாட்ச் ஓஎஸ் 8.5.1 சிறிய அப்டேட்டை ஆப்பிள் வெளியிட்டுள்ளது. இது பாதுகாப்பு பிரச்சனைகள் சிலவற்றை சரி செய்யும் என கூறப்படுகிறது. அதேபோல மேக் பயனர்கள் இதுவரை சந்தித்து வந்த ப்ளூடூத் மற்றும் எக்ஸ்டர்னல் டிஸ்பிளே கனெக்‌ஷன் பிரச்சனைகளை சரி செய்ய மேக் ஓஎஸ் மோண்டெரே 12.3.1 அப்டேட்டையும் ஆப்பிள் வெளியிட்டுள்ளது.
    ஜியோமி நிறுவனம் புதிய டீசரின் மூலம் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.
    ஜியோமி நிறுவனம் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

    இந்த ஸ்மார்ட்போனில் 6.73-inch WQHD+ (1,440x3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இடம்பெறும் என கூறப்படுகிறது.

    மேலும் இதன் டிஸ்பிளே குறைந்த வெப்பம் கொண்ட polycrystalline oxide backplane தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த போனில் Snapdragon 8 Gen 1 SoC, 12ஜிபி LPDDR5 ரேம், Sony IMX707 சென்சார் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா (OIS சப்போர்ட்டுடன்), 50 மெகாபிக்ஸல் போட்ரெய்ட் சென்சார், 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார், 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா சென்சார் ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

    4,600mAh பேட்டரி, 120W அதிவேக சார்ஜிங் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.55,100-ஆகவும், 8ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,600-ஆகவும், 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.63,300-ஆகவும் இந்திய மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜியோமி நிறுவனம் புதிய டீசரின் மூலம் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.
    ×