என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை வோடபோன் ஐடியா நவம்பர் மாதத்தில் முந்தியுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிக தரமான வாய்ஸ் கால் சேவை வழங்கி உள்ளது. இதனை அந்நிறுவன பயனர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த தகவல் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டிராய் வலைதளத்தில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என அனைத்து விதமாக நெட்வொர்க்குகளில் பயனர் வழங்கிய விவரங்களை கணக்கிடப்பட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. `மைகால்' டேஷ்போர்டில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகள் அடிப்படையில் வோடபோன் ஐடியா இணைந்து ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

தரமான கால் சேவை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஐடியா 5-க்கு 4.9 புள்ளிகள், வோடபோன் 5-க்கு 4.6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் 5-க்கு 4.1 புள்ளிகள் ஏர்டெல் மற்றும் ஜியோ 5-க்கு 3.8 புள்ளிகள் பெற்று இருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக 88.4 சதவீத பயனர்கள் திருப்திகரமான சேவையை பெற்றதாகவும், 8.24 சதவீதம் பேர் மோசமான சேவையை பெற்றதாகவும், 3.62 சதவீதம் பேர் கால் டிராப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக வலைதளத்தில் தெரிவித்து உள்ளனர்.
போட் நிறுவனத்தின் புதிய எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
போட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் வாட்ச் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக அக்டோபர் மாதத்தில் போட் ஸ்டாம் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை போட் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய போட் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் 1.54 இன்ச் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங், 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 3 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் ப்ளூடூத் 4.2, அழைப்புகள், டெக்ஸ்ட் செடன்டரி அலெர்ட் வைப்ரேஷன், 24/7 இதய துடிப்பு சென்சார், SpO2 / இரத்தத்தின் காற்றோட்டத்தை டிராக் செய்யும் வசதி, உறக்கத்தை மாணிட்டர் செய்யும் வசதி, 8 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்டர் ரெசிஸ்டண்ட் (3ATM / 30 meters) வசதி கொண்டிருக்கும் வாட்ச் எனிக்மா ரிமோட் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் வாட்ச் எனிக்மா மாடல் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
கூகுளில் பயனர்கள் அதிகம் தேடிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் தனது பாரம்பரிய வழக்கப்படி Year In Search 2020 பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பயனர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகளை இந்தியா மற்றும் உலகளவில் பிரித்து பட்டியலிடும்.
அந்த வகையில் இந்த கூகுள் தேடலில் ‘coronavirus’, ‘US election’, ‘IPL’ மற்றும் ‘PM Kisan Yojana’ உள்ளிட்ட தலைப்புகளை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.
இந்திய அளவில் பயனர்கள் ஐபிஎல், கொரோனாவைரஸ், அமெரிக்க தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட தலைப்புகளில் அதிகளவு தேடியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதான் மந்த்ரி கிசான் சம்மன் நிதி திட்டம் பற்றியும் தேடி இரு்கின்றனர்.
இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்
- இந்திய பிரீமியர் லீக்
- கொரோனாவைரஸ்
- அமெரிக்க தேர்தல் முடிவுகள்
- பிரதமர் கிசான் யோஜனா
- பீகார் தேர்தல் முடிவுகள்
- டெல்லி தேர்தல் முடிவுகள்
- தில் பெச்ரா
- ஜோ பைடன்
- லீப் நாள்
- அர்னாப் கோஸ்வாமி
உலகளவில் அதிகம் தேடப்பட்டவை
- கொரோனாவைரஸ்
- தேர்தல் முடிவுகள்
- கோப் ப்ரியன்ட்
- ஜூம்
- ஐபிஎல்
- இந்தியா v நியூ சிலாந்து
- கொரோனவைரஸ் அப்டேட்
- கொரோனாவைரஸ் சிம்ப்டம்ஸ்
- ஜோ பைடன்
- கூகுள் கிளாஸ்ரூம்
ஒட்டுமொத்த பட்டியல் தவிர செய்தி நிகழ்வுகள், பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற தலைப்புகளில் அதிகம் தேடப்பட்டவற்றையும் கூகுள் பட்டியலிட்டு உள்ளது. இத்துடன் How To மற்றும் What is போன்ற கேள்விகள் நிறைந்த தேடல்களும் இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் வழியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என கூறப்படுகிறது. பிரேசில் நாட்டு டெலிகாம் நிறுவன வலைதளத்தில் இருந்து லீக் ஆன விவரங்களில் இந்த தகவல் இடம்பெற்று இருந்ததாக தெரிகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன்களுடன் சார்ஜரை வழங்கவில்லை. இவ்வாறு செய்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது. ஐபோன் 7 சீரிஸ் துவங்கி ஹெட்போன் ஜாக்-ஐ ஆப்பிள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் இந்த ஆண்டு சார்ஜர் இணைந்து கொண்டது. தற்சமயம் சாம்சங் நிறுவனமும் ஸ்மார்ட்போனுடன் சார்ஜரை வழங்காது என கூறப்படுகிறது. சார்ஜர் வழங்காத பட்சத்தில் சாம்சங் என்ன காரணத்தை தெரிவிக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்21 மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் மாடல்களில் FHD+ ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இவை பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் SM-G991U எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போதே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் லஹியானா எனும் குறியீட்டு பெயர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரின் மேம்பட்ட சிப்செட் ஆகும்.
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது கேலக்ஸி எப்62 என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் கிளாஸி பினிஷ், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பாலிகார்பனைட் பில்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை சாம்சங் கிளாஸ்டிக் என அழைக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனில் மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என்றும் டிஸ்ப்ளேவினுள் அல்லது பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் டூயல் சிம் கார்டு வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் எக்சைனோஸ் 9825 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் நொய்டாவில் உள்ள ஆலையில் ஏற்கனவே துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் செய்ய புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இது ஷாப்பிங் அனுபவத்தை மேலும் எளிமையாக்குகிறது. கொரோனா தொற்று காலக்கட்டத்தில் டிஜிட்டல் சேவைகள் பல்வேறு துறைகளிலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் புதிதாக கார்ட்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தில் பயனர்கள் பல்வேறு பொருட்களை ஒரே சமயத்தில் ஒற்றை மெசேஜ் மூலம் ஆர்டர் செய்ய முடியும். இதன் மூலம் வியாபாரம் செய்வோர் ஆர்டர் விவரங்களை சரியாக கண்காணிக்க முடியும்.
`ஆடை விற்பனையகம், உணவகம் போன்ற வியாபாரங்களுக்கு புதிய கார்ட்ஸ் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என வாட்ஸ்அப் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. புதிய கார்ட்ஸ் அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
சாம்சங் நிறுவனம் 600 எம்பி கேமரா சென்சார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் ISOCELL 600 எம்பி கேமரா சென்சாரை உருவாக்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 108 எம்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சாம்சங் புது சென்சார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய 600 எம்பி கேமரா சென்சார் 4கே மற்றும் 8கே ரெக்கார்டிங்கின் போதும் தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய திறன் கொண்ட சென்சாரை உருவாக்க சாம்சங் இன்னும் பல்வேறு தடைகளை கடக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில், இந்த சென்சார் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. சாம்சங் தற்சமயம் உருவாக்கி வரும் ISOCELL 600 எம்பி சென்சார் 1/0.57 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இது தற்போதைய சென்சார்களை விட அளவில் மிகப்பெரியது ஆகும்.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களில் 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் சாம்சங் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் மாடல்களில் 600 எம்பி கேமரா வழங்கப்படாது என்றே தெரிகிறது.
பட்ஜெட் விலையில் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புது ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஆண்ட்ராய்டு 10 மற்றும் மை யுஎக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் மெட்டாலிக் சேஜ் மற்றும் எலெக்ட்ரிக் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் பிரீமியம் விலையில் புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒவர்-இயர் டிசைன், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.
இதில் ஆப்பிள் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட 40எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் ஹெச்1 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிரத்யேக அகௌஸ்டிக் டிசைன் கொண்டுள்ளது. இதன் ஹெட்பேண்ட் பிரேம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இது வளையும் தன்மை மற்றும் தலையில் அணிந்திருக்கும் போது அதிக சவுகரியத்தை வழங்குகிறது. ஹெட்போனில் வழங்கப்பட்டு உள்ள டிஜிட்டல் கிரவுன் கொண்டு வால்யூம், பிளேபேக், அழைப்புகளை ஏற்பது மற்றும் நிராகரிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.
மேலும் இதில் அடாப்டிவ் இகியூ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆடியோ கேட்கும் போது வெவ்வேறு வசதிகளை வழங்குகிறது.
ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் வசதி தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இது 5.1, 7.1 மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற தரவுகளை துல்லியமாக அதிக தரத்தில் அனுபவிக்க வழி செய்கிறது. ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் அதிகபட்சம் 20 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஒவர் இயர் ஹெட்போன் ஸ்பேஸ் கிரே, சில்வர், கிரீன், ஸ்கை புளூ மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 59,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
தற்போது 4ஜி தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறையான 5ஜி சேவை உரிய நேரத்தில் அறிமுகமாக ஒன்றுபட்டு பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி நேற்று கூறினார்.
இதற்கிடையே, 5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
5ஜி நெட்வொர்க் சேவையை அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் அறிமுகப்படுத்துவதில் ஜியோ முன்னோடியாக இருக்கும். இதை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கும், மலிவாகவும், எல்லா இடங்களிலும் கிடைப்பதற்கும் கொள்கைரீதியான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
ஜியோவின் 5ஜி சேவை, முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் அளிக்கப்படும். அச்சேவை, தற்சார்பு இந்தியாவை அடைய உதவும். 5ஜி சேவையால், நான்காம் தொழிற்புரட்சியில் இந்தியா பங்கேற்பதுடன், அதற்கு தலைமை தாங்கும். நிச்சயமாக ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டிப் பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது 4ஜி தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறையான 5ஜி சேவை உரிய நேரத்தில் அறிமுகமாக ஒன்றுபட்டு பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி நேற்று கூறினார்.
இதற்கிடையே, 5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
5ஜி நெட்வொர்க் சேவையை அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் அறிமுகப்படுத்துவதில் ஜியோ முன்னோடியாக இருக்கும். இதை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கும், மலிவாகவும், எல்லா இடங்களிலும் கிடைப்பதற்கும் கொள்கைரீதியான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
ஜியோவின் 5ஜி சேவை, முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் அளிக்கப்படும். அச்சேவை, தற்சார்பு இந்தியாவை அடைய உதவும். 5ஜி சேவையால், நான்காம் தொழிற்புரட்சியில் இந்தியா பங்கேற்பதுடன், அதற்கு தலைமை தாங்கும். நிச்சயமாக ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டிப் பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நோக்கியா நிறுவனத்தின் புதிய பியூர்புக் லேப்டாப் மாடலின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
நோக்கியா பியூர்புக் லேப்டாப் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் லேப்டாப்பின் முன்புறம் காட்சியளிக்கிறது. இதன் மேல்புறம் வெள்ளை நிறமும், கீழ்புறத்தில் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இது சற்றே வளைந்த டிசைன் கொண்டிருக்கிறது.
டீசர்களின் படி புதிய நோக்கியா லேப்டாப் எடை குறைவாகவும் அதிக செயல்திறன் மற்றும் தலைசிறந்த அனுபவம் வழங்கும் என தெரிகிறது. புதிய லேப்டாப் விரைவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
முன்னாதாக NKi510UL85S மற்றும் NKi310UL28S மாடல் நம்பர் கொண்ட இரு லேப்டாப் மாடல்கள் இந்தியாவின் பிஐஎஸ் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தன. வலைதள விவரங்களின் படி புதிய லேப்டாப் இன்டெல் கோர் ஐ3 மற்றும் கோர் ஐ5 பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
வேண்டுமென்றே செய்த காரியத்தால் சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம் என்ன செய்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோணி பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் வேண்டுமென்றே ட்ரோஜன் ஹோர்ஸ் குறியீடுகளை செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலை சீன ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்து இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் ட்ரோஜன் செலுத்தியதன் மூலம் சட்டவிரோதமாக பயனர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வருவாய் ஈட்டும் முயற்சியில் ஜியோணி ஈடுபட்டு வந்திருக்கிறது. இதுபோன்ற ட்ரோஜன் ஹோர்ஸ் குறியீடுகள் சுமார் 2.6 கோடி ஸ்மார்ட்போன்களில் செலுத்தப்பட்டு இருக்கிறது.
ஜியோணியின் தாய் நிறுவனமான ஷென்சென் ஷிபு டெக்னாலஜி கோ லிமிட்டெட் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. டிசம்பர் 2018 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் இந்த நிறுவனம் ஜியோணி ஸ்மார்ட்போன்களில் `ஸ்டோரி லாக் ஸ்கிரீன்' எனும் செயலியை இன்ஸ்டால் செய்தது.
இந்த செயலி தேவையற்ற விளம்பரங்களை புகுத்தி, பயனர்களை நீண்ட நேரம் செயலியை பயன்படுத்த வைத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்துள்ளது. இதுபோன்ற செயல் புல் மெத்தட் என அழைக்கப்படுகிறது. ட்ரோஜன் ஹோர்ஸ் அப்டேட் மூலம் ஜியோணி நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 31.5 கோடி வரை வருவாய் ஈட்டி இருக்கிறது.
குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சு லி, ஷூ யிங், ஜியா ஹென்குயிங் மற்றும் பான் குயி உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 3 முதல் 3.5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 22,60,428 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.






