என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
வி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி டேட்டா வழங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த டேட்டா ரூ. 1499 பிரீபெயிட் சலுகையுடன் வழங்கப்படுகிறது.
கூடுதல் டேட்டா சேர்க்கும் பட்சத்தில் வி ரூ. 1499 பிரீபெயிட் சலுகையில் மொத்தம் 74 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 365 நாட்களுக்கு 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
முன்னதாக வி ரூ. 1499 சலுகையில் மொத்தம் 24 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் வி ரூ. 1499 பிரீபெயிட் சலுகையில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வி செயலி மூலம் வழங்கப்படுகிறது. சிலருக்கு கூடுதல் டேட்டா எஸ்எம்எஸ் மூலம் தெரியப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதன்படி இரு மாடல்களில் 4500 எம்ஏஹெச் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.
தற்சமயம் இரு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான பேட்டரி மாடல்கள் டியுவி ரெயின்லாந்து வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி 4500mAh பேட்டரி CN110 எனும் மாடல் நம்பரும், 5000mAh பேட்டரி WT340 எனும் மாடல் நம்பரை கொண்டு உருவாகி இருக்கிறது.

இரு பேட்டரிகளும் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்குமா என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. இதுவரை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 6.3 அல்லது நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை. இரு புதிய மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இந்த ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா சி1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்தது.
2020 ஆண்டின் டாப் 10 டிரெண்டிங் ஆப்ஸ் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
2020 ஒருவழியாக நிறைவுக்கு வந்து விட்டது. ஆண்டு துவக்கம் முதல் இதுவரை கொரோனாவைரஸ் ஊரடங்கிலேயே கழிந்து விட்டது. நோய் தொற்று ஊரடங்கு உலக வழக்கங்கள் அனைத்தையும் அடியோடு மாற்றி விட்டது. பெரும்பாலான சேவைகள் முழுமையாக ஆன்லைன் மயமாகிவிட்டன.
ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் தளத்தில் சிறப்பாக செயல்பட செயலிகள் பேரளவு உதவியாக இருந்தன. உடல்நலம் துவங்கி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு பிரிவுகளில் செயலிகள் 2020 ஆண்டில் செயலிகள் அதிக பிரபலமாகி இருக்கின்றன.
டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளான கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்டவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று பொழுதுபோக்கு செயலிகள், சமூக வலைதள செயலிகளும் பிரபலமாகி இருக்கின்றன. அந்த வகையில் 2020 டிரெண்டிங் செயலிகளின் டாப் 10 பட்டியலை பார்ப்போம்.

டிக்டாக்
டிக்டாக் செயலி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், டிக்டாக் இந்த ஆண்டு அதிக பிரபல செயலியாக இருக்கிறது. இந்த ஆண்டு இதன் பயனர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. மேலும் இது 2020 ஆண்டு அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலிலும் இடம்பிடித்து இருக்கிறது.
இன்ஸ்டாகிராம்
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் போட்டோ-ஷேரிங் செயலி ஆகும். இது சமூக வலைதள செயலிகளில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் செயலிகளை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறது. பொழுதுபோக்கு மட்டுமின்றி பயனர்களின் திறமையை வெளிப்படுத்தும் தளமாகவும் இது மாறி இருக்கிறது.

ஜூம்
உலகில் தற்சமயம் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக ஜூம் இருக்கிறது. இந்த செயலிக்கான தட்டுப்பாடு கடந்த ஆறு மாதங்களில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் பரவலை தடுக்க மக்கள் வீட்டில் இருந்தபடி வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்க இந்த செயலி உதவுகிறது.
வாட்ஸ்அப்
ஜூலை 2020 நிலவரப்படி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலி உலகம் முழுக்க சுமார் 200 கோடி டவுன்லோட்களை கடந்து உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயனர்கள் அடிக்கடி பயன்படுத்தவில்லை என்ற போதும், வாட்ஸ்அப் செயலியை அன்றாடம் பயன்படுத்துகின்றனர்.
நெட்ப்ளிக்ஸ்
பிரபல ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் பல்வேறு தரவுகளை வழங்குகிறது. வீடியோ ஸ்டிரீமிங் செயலிகள் பிரிவில் நெட்ப்ளிக்ஸ் முதலிடம் பிடித்து இருக்கிறது. இதன் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பேஸ்புக்
மக்கள் தங்களின் உறவினர், நட்பு வட்டாரத்துடன் உலகின் எந்த பகுதியில் இருந்தும் தொடர்பு கொள்ள பேஸ்புக் சிறந்த தளமாக இருக்கிறது. ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் வியாபார வழக்கம் அதிகரித்து இருக்கும் சூழலில் பேஸ்புக் லைவ் மூலம் பொருட்களை நேரடியாக விற்கவும் முடிகிறது.
அமேசான்
2020 ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலிகளில் ஒன்றாக அமேசான் இருக்கிறது. இதேபோன்று நெட்ப்ளிக்ஸ் சேவைக்கு மாற்றாக அமேசான் பிரைம் வீடியோ சேவையை வழங்குகிறது. இத்துடன் அமேசான் பேண்ட்ரி மூலம் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்க முடியும்.
கூகுள் மீட்
ஜூம் செயலிக்கு மாற்றாக கிடைக்கும் கூகுள் மீட் உலகின் முன்னணி வீடியோ கான்பரன்சிங் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றும் போது இந்த செயலி அதிக பிரபலமானது.

பேஸ்புக் மெசஞ்சர்
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிக்கு மாற்றான குறுந்தகவல் செயலியாக பேஸ்புக் மெசஞ்சர் இருக்கிறது. உலகம் முழுக்க இந்த செயலியை பலர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த செயலியில் பேஸ்புக் பல்வேறு புது அம்சங்களை சேர்த்தது.
யூடியூப்
உலகில் அதிகம் பேர் பார்க்கும் தளமாக யூடியூப் இருக்கிறது. மேலும் முன்னணி வீடியோ தளமாகவும் இது இருக்கிறது. இந்த செயலி கொண்டு பயனர்கள் தங்களின் திறமையை உலகிற்கு எடுத்துரைக்க முடியும்.
கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த பிக்சல் 5 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர்-ஸ்கிரீன் செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பது பற்றிய விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கும் காப்புரிமையில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும், இந்த அம்சம் வெளியீட்டு தயார் நிலையில், சீராக இயங்குவதாக கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 6.0 இன்ச் FHD+ 1080x2340 பிக்சல் OLED ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 4080 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இசட்.டி.இ. நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் சியோமி மற்றும் ஒப்போ போன்ற நிறுவனங்கள் இதே தொழில்நுட்பம் கொண்ட மாடல்களின் ப்ரோடோடைப்களை வெளியிட்டு இருக்கின்றன.
மேலும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போனிலும் அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1, 2021 முதல் சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இயங்காது. அதாவது பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.
ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையானவர்கள் புதிய ஒஎஸ் கொண்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் இது பலருக்கு கவலை தரும் செய்தியாக இருக்காது. எனினும், பழைய ஒஎஸ் கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோர் புதிய ஒஎஸ் கொண்ட சாதனங்களுக்கு அப்டேட் செய்வது நல்லது.
இதன்படி ஐபோன் 4எஸ், ஐபோன் 5, ஐபோன் 5எஸ், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6எஸ் உள்ளிட்ட மாடல்களில் இன்னும் சில தினங்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. இந்த மொபைல்களை பயன்படுத்துவோர் தங்களின் மொபைல் சாதனத்தை அப்டேட் செய்வது நல்லது.
லாவா நிறுவனத்தின் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
லாவா மொபைல்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜனவரி 7 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு லாவா மொபைல்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்திய பயனர்களிடையே சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு மனநிலை நிலவுவதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், லாவா மொபைல்ஸ் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இவை ஸ்மார்ட்போன் சந்தையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என லாவா தெரிவித்து உள்ளது.

எனினும், புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக வெளியான தகவல்களில் லாவா நிறுவனம் மொத்தம் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இவற்றின் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய லாவா ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. இந்திய சந்தையில் சியோமி, விவோ, ஒப்போ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
அந்த வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து லாவா நிறுவனமும் புது ஸ்மார்ட்போன்களை மேட் இன் இந்தியா பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் வெளியீட்டு விவரங்கள் பல முறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதியஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் புதிய ஐபேட் தற்போதைய மாடலில் உள்ளதை விட பல மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் 2021 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய ஐபேட் ப்ரோ மாடல் இதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது.

முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் 5ஜி எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த தொழில்நுட்பம் அதிவேக இணைய இணைப்புகளை வழங்கும் திறன் கொண்டது.
அதன்படி 2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்எம்வேவ் வசதி கொண்ட 5ஜி நெட்வொர்க் திறன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED ரக டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி நிறுவனங்களை ஏர்டெல் முந்தி அசத்தி இருக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் அக்டோபர் மாதத்தில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதில் ஏர்டெல் நிறுவனம் அசத்தி இருக்கிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
2020 அக்டோபர் மாத அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் 36.7 லட்சம் வயர்லெஸ் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 14.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஏர்டெல் நிறுவனம் சுமார் 33.02 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2020 அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 40.63 கோடியாக உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ போன்று இல்லாமல் வி நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் கணிசமான அளவு குறைந்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய கியூ2 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் RMX2117 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதால், விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி கியூ2 ப்ரோ மாடலுடன் அக்டோபர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சீன சந்தையில் ரியல்மி கியூ2 மாடல் விலை 1299 RMB இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்தில் துவங்குகிறது.
ஹூவாமி நிறுவனத்தின் புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூவாமி நிறுவனம் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் மசெய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.55 இன்ச் AMOLED ஸ்கிரீன், 50-க்கும் அதிகமான வாட்ச் பேஸ்கள், 24 மணி நேரத்திற்கான இதய துடிப்பு மற்றும் ஆக்சிஜன் மாணிட்டரிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் அணிந்திருப்பவரின் உடல்நலம் மற்றும் இதய ஆரோக்கம் பற்றிய விவரங்களை துல்லியமாக கணக்கிட்டு தெரிவிக்கும் வசதி கொண்டிருக்கிறது. அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் 70-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் ப்ளூடூத் 5.0, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களுடன் இணைந்து இயங்கும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ஹூவாமியின் பயோ டிராக்கர், 2 பிபிஜி சென்சார்கள், கைரோஸ்கோப் சென்சார், GPS+GLONASS, 50 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுதவிர மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல் போன்ற வசதிகளும், 220 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் நார்மல் மோட் பயன்பாட்டில் அதிகபட்சம் 21 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இந்திய சந்தையில் புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் அமேஸ்பிட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் வழங்கி இருக்கும் ரகசிய அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் ஐஒஎஸ் தளம் ஐபோன் பயன்படுத்துவோருக்கு ரிமைண்டர், நோட்ஸ் மற்றும் காலண்டர் என சில பொதுவான அம்சங்களை வழங்கி வருகிறது. இவை அனைத்திற்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகப்படியான மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன.
பெரும்பாலான ஐபோன் பயனர்கள் தங்களது மாடலில் உள்ள மறைக்கப்பட்டு இருக்கும் ரகசிய அம்சங்களை இயக்க தவறிவிடுகின்றனர். அந்த வகையில் ஐபோன் கால்குலேட்டர் செயலியில் மறைக்கப்பட்ட அம்சம் உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கால்குலேட்டர் செயலியில் அறிவியல் கால்குலேட்டர் மோட் மறைக்கப்பட்டு ரகசியமாக வழங்கப்படுகிறது. எனினும், கால்குலேட்டர் செயலிக்கு சென்று பயனர்கள் இதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஐபோனில் கால்குலேட்டர் செயலியை திறந்ததும், போனினை கிடைமட்ட வடிவில் வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது சாதாரண கால்குலேட்டர் செயலி அறிவியல் அம்சங்கள் நிறைந்த கால்குலேட்டராக மாறிவிடும். ஒருவேளை ஐபோனில் டில்ட் அம்சத்தை ஆஃப் செய்து இருப்பவர்கள், அதனை கண்ட்ரோல் சென்ட்டரில் இருந்து Portrait Orientation Lock அம்சத்தை ஆஃப் செய்ய வேண்டும்.
சியோமி நிறுவனம் மூன்றுவித மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை மூன்றும் வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும் என்றும் இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஸ்ப்ளே வடிவமைப்பு வல்லுநரான ரோஸ் யங் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சியோமி நிறுவனத்தின் மூன்று மாடல்கள் - வெளிப்புறம் மடிக்கும் தன்மை, உள்புறம் மடிக்கும் தன்மை மற்றும் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில் வெளிப்புறம் மடிக்கும் தன்மை கொண்ட மாடல் ஹூவாய் மேட் எக்ஸ் போன்று காட்சியளிக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக ரோஸ் யங் ஒப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவனங்கள் ஒன்றிணைந்து நான்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை 2021 ஆண்டு வெளியிடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இது குவாட் கேமரா செட்டப் மற்றும் சுழலும் தன்மை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.






