என் மலர்
கணினி
யூடியூப் நிறுவனம் இந்தியாவில் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை துவங்கியுள்ளது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. #YouTubeMusic
யூடியூப் நிறுவனம் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் வெளியிட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கூகுள் தனது பிளே மியூசிக் சேவையை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
புதிய யூடியூப் மியூசிக் சேவையில் அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆல்பம்கள், ஆயிரக்கணக்கான பிளே லிஸ்ட்கள், ஆர்டிஸ்ட் ரேடியோ மற்றும் யூடியூபின் பிரத்யேக ரீமிக்ஸ், நேரலை நிகழ்ச்சிகள், கவர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இவை அனைத்தும் மிக எளிமையாக காட்சியளிப்பதோடு தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
யூடியூப் மியூசிக் சேவை இலவசமாகவும் கிடைக்கிறது. எனினும், இலவச சேவையை பயன்படுத்தும் போது இடையிடையே விளம்பரங்கள் வரும். யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், பேக்கிரவுண்டில் இயக்க முடியும்.

யூடியூப் பிரீமியம் சேவையில் ஆஃப்லைன் டவுன்லோடு வசதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வித விளம்பரங்களும் இன்றி யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையை ரூ.99 மற்றும் குடும்ப சந்தாவுக்கு மாதம் ரூ.149 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப சந்தாவில் தனிநபர் மற்றும் ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.
சிறப்பு அறிமுக சலுகையின் பேரில் யூடியூப் மியூசிக் சேவைக்கான பிரீமியம் சந்தா முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் பயனர்களது கட்டண சந்தா அமலாகும். கூகுள் பிளே மியூசிக் பயனர்களுக்கு யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாவும் சேர்த்து வழங்கப்படும்.

யூடியூப் நிறுவனம் யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்குகிறது. யூடியூப் பிரீமியம் சேவையில் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லா அனுபவம், பேக்கிரவுண்டு பிளே மற்றும் ஆஃப்லைன் வீடியோக்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்10 பயன்படுத்துவோருக்கு யூடியூப் பிரீமியம் சேவை நான்கு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் யூடியூப் மியூசிக் சேவையும் அடங்கும். மற்ற பயனர்களுக்கு மூன்று மாதம் வரை இலவச பிரீமியம் சேவை வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.60 செலுத்தும் பயனர்களுக்கு யூடியூப் பிரீமியம் குடும்ப சந்தா வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பார்க் வளாகத்தில் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. #Apple
ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஏற்கனவே இதுகுறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், ஆப்பிள் சார்பில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி மார்ச் 25 ஆம் தேதி இட்ஸ் ஷோ டைம் (It’s show time) என்ற பெயரில் ஆப்பிள் நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பார்க் வளாகத்தில் இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது.
ஆப்பிள் சிறப்பு நிகழ்வில் புதிய வன்பொருள் சாதனங்கள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக செய்தி மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஸ்டுடியோக்கள் மற்றும் நெட்வொர்க்களுக்கு ஏப்ரல் மாத வெளியீட்டிற்கு தயாராக இருக்க தகவல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்த சேவை முழுமையாக துவங்க மேலும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் நெக்ஸ்ட் இஷூ மீடியாவின் டிஜிட்டல் இதழ் சேவையான டெக்ஸ்ச்சரை கடந்த ஆண்டு கைப்பற்றியது.
இதனால் ஆப்பிளின் செய்தி சேவை, இதழ் சேவையான டெக்ஸ்ச்சர் ஆப்பிள் நியூஸ் சேவையுடன் ஒன்றிணைக்கப்படும் என தெரிகிறது. பிரத்யேக சந்தா சேவையின் மூலம் பல்வேறு பதிப்பகங்களை ஒன்றிணைத்து, ஆப்பிள் மியூசிக் போன்று புதிய சேவையை கொண்டு ஆப்பிள் தனது வருவாயினை அதிகரித்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.
மார்ச் 25 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆப்பிள் விழா ஆப்பிள் பார்க் வளகாத்தினுள் அமைந்திருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழா ஆப்பிள் டி.வி. மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நேரலை செய்யப்படுகிறது.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் தவறான ட்விட்களுக்கு புகார் அளிக்க புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. #Twitter
ட்விட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ட்விட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் ட்விட்களை புகார் அளிக்கும் போது புதிய மெனு திறக்கும். இதில் பயனர்கள் ட்விட் பற்றி அதிகளவு விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பிரச்சனையை விரிவாக புரிந்து கொள்ள முடியும்.
புதிய வசதியை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய ட்விட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர் எதிர்கொள்ளும் ட்விட்கள் பற்றி அதிகளவு விவரங்களை தெரிவிக்க முடியும்.
We want to move faster in reviewing reported Tweets that share personal information. Starting today, you'll be able to tell us more about the Tweet you are reporting. pic.twitter.com/quJ2jqlYIt
— Twitter Safety (@TwitterSafety) March 7, 2019
இத்துடன் ரிப்போர்ட் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெரிவிக்க முடியும். முன்னதாக பயனர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க ட்விட்டர் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இவற்றில் பலரது குற்றச்சாட்டுகள் டாக்சிங் ஆகும். டாக்சிங் என்பது ஒருவரின் அனுமதியின்றி அவரது விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தாகும். இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தீங்கு ஏற்படுத்த காரணமாக அமையும்.
ட்விட்டரில் கருத்து சுதந்திரம் மற்றும் கேலி கிண்டல்களை வித்தியாசப்படுத்துவதில் ட்விட்டர் சிரமப்படுகிறது. அந்த வகையில் புதிய அம்சம் மூலம் அவற்றை எதிர்கொள்ள ட்விட்டர் முயன்று வருகிறது.
ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் ஸ்மாரட் கம்போஸ் அம்சம் புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. #Gmail #Android
கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் செயலியில் பல்வேறு மாற்றங்களை சமீபத்தில் மேற்கொண்டிருந்தது. இதில் இன்பாக்ஸ் அம்சத்தில் சில புதிய வசதிகள் இடம்பெற்றிருக்கிறது.
புதிய தோற்றம் மட்டுமின்றி ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்ளை வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மின்னஞ்சல்களுக்கு வேகமாக பதில் அளிக்க மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 2018 டெவலப்பர் நிகழ்வில் கூகுள் ஸ்மார்ட் கம்போஸ் வசதியை அறிமுகம் செய்தது.
ஜிமெயிலின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம் மிகவேகமாக மின்னஞ்சல்களை எழுத முடியும். மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் மின்னஞசல்களை டைப் செய்யும் போது பொருத்தமான வார்த்தைகளை பரிந்துரைக்கும்.

ஜிமெயில் வெப் தளத்தில் வழங்கப்பட்டதும், ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை கூகுளின் புதிய ஸ்மார்ட்போன்களான பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் ஸ்மார்ட் கம்போஸ் வசதி பிரத்யேக அம்சமாக வழங்கப்பட்டிருந்தது.
தற்சமயம் இந்த அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சம் தானாக வழங்கப்படவில்லை. இதனை பயனர்கள் செயல்படுத்த வேண்டும். அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில் செயலியை வைத்திருப்போர் ஸ்மார்ட் கம்போஸ் பட்டனை ஜிமெயில் கணக்கில் செயல்படுத்தலாம்.
இதை செய்ய ஜிமெயில் ஆப் சென்று மெனுவில் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி அக்கவுண்ட்களில் ஒன்றை க்ளிக் செய்து ஸ்மார்ட் கம்போஸ் வசதியை செயல்படுத்தவும். இதைத் தொடர்ந்து மின்னஞ்சல்களை டைப் செய்யும் போது ஸ்மார்ட் பரிந்துரைகளை பார்க்க முடியும்.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 80 செ.மீ அளவில் வளைந்த எல்.இ.டி. மானிட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Zebronics
ஒரு வழக்கமான பணி நாளுக்குப் பிறகு, வீட்டிற்கு வந்து ஒரு பெரிய திரையில் பொழுதுபோக்கை அனுபவிக்க நீங்கள் விரும்பலாம், திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது கேமிங்கில் அமர்ந்து முடிவில்லாத நேரத்தை கழிக்க விரும்பலாம். பெரியதொரு அகன்ற மற்றும் வளைந்த திரை என்பது நீங்கள் பொழுதுபோக்க விரும்பும் திரைக்காட்சியின் விகிதத்தை சிறந்த அம்சங்கள் பொருந்தியதாகவும் உண்மையான காட்சிகளை பார்க்க கூடிய ஒரு அனுபவத்தையும் சேர்க்கும்.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் இருக்கிறது. ஒலி உபகரணங்கள், மொபைல்/நவநாகரீக வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்களை அறிமுகம் செய்து வரும் ஜெப்ரானிக்ஸ் தற்சமயம் 80 செ.மீ. எல்.இ.டி “ZEB-AC32FHD” என்ற பெயரில் பெரிய திரை கொண்ட வளைந்த மானிட்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ZEB-AC32FHD LED ஒரு மெல்லிய மற்றும் மிகவும் வளைந்த விளிம்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது திரையில் பார்க்கும் அனைத்தும் நிஜத்தில் தோன்றுவது போன்றதான ஒரு உண்மையான அனுபவத்தை பயணர் உணரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காட்சிக்கு மட்டுமில்லாமல் உட்புற ஒலிப்பெருக்கியின் ஒலி ஒரு அசாத்திய அனுபவத்தை வழங்குகிறது.

இந்த மானிட்டர் கண்களுக்கு அயர்ச்சி உண்டாக்காத டிஸ்ப்ளேபோர்ட் மற்றும் HDMI போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதில் காணும் வண்ணங்கள் அடர் கருப்பாகவும், பளீர் வெளுப்பாகவும் உயர்தர நிறங்களையுடையதாகவும் இருக்கும். இது 500000: 1 டைனமிக் காண்ட்ராஸ்ட் மற்றும் 178 டிகிரி பார்வைக் கோணத்தில் தொடர்ந்து கூர்ந்து காணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீண்டநேர கணினி பயன்படுத்துவோருக்கு ஏதுவாக அல்ட்ரா- ஸ்லிம் மெல்லிய திரை அணிவிக்கப்பட்டிருப்பதால் உங்களுக்கு அயர்ச்சி ஏற்படாது. எல்.இ.டி. மானிட்டரின் பின்புறத்தில் மெனு பொத்தான்களை கொண்டுள்ளது மேல் / கீழ் மற்றும் ஆன்/ஆஃப் சுவிட்ச் உள்ளது. இது ஹெட்போன் ஜாக், டிபி மற்றும் HDMI போர்ட் ஆகியவற்றோடு DC உள்ளீடுகளுடன் வருகிறது.
இதன் அறிமுக நிகழ்வில் பேசிய, ஜெப்ரோனிக்ஸ் இந்தியாவின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி, "ஸ்மார்ட் புரோகிராமிங் மானிட்டர்கள் உண்மையிலேயே புரட்சிகரமானவை, அவை மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எங்களது சமீபத்திய LED மானிட்டர் ZEB-AC32FHD, ஒரு 80 செ.மீ. பரந்த வளைந்த எல்.ஈ. டி மானிட்டர், என்பது இந்திய தயாரிப்புகளில் முதன்முதலாக எங்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது உண்மையிலேயே அதிவேக அனுபவத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காக திரைகளில் நேரம் செலவிடுவோரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல நவீனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பிரபல மியூசிக் ஸ்டிரீமிங் சேவையாக இருக்கும் ஸ்பாடிஃபை இந்தியாவில் அறிமுகமான ஒரு வாரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். #Spotify
ஸ்பாடிஃபை டெக்னாலஜி உலகின் அதிக பிரபலமான கட்டண மியூசிக் ஸ்டிரீமிங் சேவையாக இருக்கிறது. இந்தியாவில் சில தினங்களுக்கு முன் இந்த சேவை துவங்கப்பட்டது.
இந்நிலையில், சேவை துவங்கிய ஒரு வாரத்திற்குள் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்பாடிஃபை சேவையை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதில் கட்டணம் மற்றும் இலவச சேவையும் அடங்கும். கடந்த வாரம் செவ்வாய் கிழமை (பிப்ரவரி 26) ஸ்பாடிஃபை இந்தியாவிலும் துவங்கப்பட்டது.
இந்தியாவில் ஸ்பாடிஃபை பயன்படுத்த விரும்புவோர் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் சேவையை பயன்படுத்தலாம். இலவசமாக கிடைக்கும் சேவையில் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும். கட்டண முறையில் பயன்படுத்தும் போது விளம்பரங்கள் இருக்காது.

கட்டண சேவையின் படி பயனர்கள் மாதம் ரூ.119 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வரும் நிலையில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்பாடிஃபை நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இதன் மூலம் அந்நிறுவனம் வருவாய் ரீதியில் வெற்றி பெறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டென்சென்ட் நிறுவனத்தின் காணா செயலியை இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் எட்டு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்பாடிஃபை சேவையை உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 20.7 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர உலகம் முழுக்க ஸ்பாடிஃபை சேவையை சுமார் 9.6 கோடி பேர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் ஸ்பாடிஃபை சேவைக்கு அமேசானின் பிரைம் மியூசிக், ஆல்ஃபாபெட் கூகுள் பிளே மியூசிக் மற்றும் சியோமியின் ஹங்காமா உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் விழா அழைப்பிதழ்களை ஸ்டோரிக்களில் சேர்க்கும் வசதி புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. #Facebook
ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஸ்டோரிஸ் அம்சத்தில் புதிய வசதியை சேர்த்திருக்கிறது. புதிய அம்சம் கொண்டு இனி ஸ்டோரிக்களிலும் விழா அழைப்பிதழ்களை சேர்க்கலாம். இதன் மூலம் அதிகப்படியான ஃபேஸ்புக் நண்பர்கள், உறவினர்களை விழாக்களுக்கு அழைக்க முடியும்.
ஸ்டோரிக்களில் புதிய வசதியை பயன்படுத்த விழாவிற்கான பக்கத்தை க்ளிக் செய்து ஷேர் பட்டனை தேர்வு செய்ய வேண்டும். விழாக்களை தனி போஸ்ட் வடிவிலோ அல்லது மெசஞ்சர் மூலமாகவோ அனுப்பாமல், இனி ஷேர் டு யுவர் ஸ்டோரி அம்சத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஸ்டோரிக்களில் விழா அழைப்பிதழ்களை பார்க்கும் நண்பர்கள் ஸ்டோரியில் இருந்தபடி விருப்பம் தெரிவிப்பதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. ஸ்டோரிக்கு வந்திருக்கும் பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு விழாவில் கலந்து கொள்ள ஸ்டோரி மூலம் விருப்பம் தெரிவித்தவர்களை பார்த்து அவர்களுக்கென க்ரூப் மெசேஜ் ஒன்றும் அனுப்பலாம்.

இதுதவிர விழாவை நண்பர்கள் மறக்காமல் இருக்க நினைவூட்டும் வசதியும் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த அம்சம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பகுதிகளில் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டது. க்ளிக் செய்யக்கூடிய ஸ்டிக்கர் புதிதாக இருப்பதோடு, பயனர் பகிர்ந்து இருக்கும் விழாவிற்கு நண்பர்கள் விருப்பம் மற்றும் கலந்து கொள்வதற்கான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினம் விரைவில் கொண்டாடப்பட இகருக்கும் நிலையில், இந்த அம்சம் சர்வதேச அளவில் வெளியிட சரியான நேரமாக இருக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச மகிளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பிரத்யேக ஃபேஸ்புக் ஸ்டிக்கர்களை உருவாக்க ஃபேஸ்புக் வடிவமைப்பாளர் கெனெஷா ஸ்னீட்டுன் இணைந்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் இயர்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods2
ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் சேவை சார்ந்த புதிய அறிவிப்புகளை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய பசிபிக் சந்தைக்கான விநியோக குழுவில் இடம்பெற்றிருப்போரிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 சாதனத்தையும் மார்ச் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய ஏர்பாட்ஸ் மார்ச் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
இதுதவிர வேறு எந்த ஹார்டுவேர் அறிவிப்புகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறாது என தெரிகிறது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில் மார்ச் 28 ஆம் தேதி தற்சமயம் சந்தைகளில் கிடைக்கும் ஏர்பாட்ஸ் 2 விற்பனை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலம் ஏர்பாட்ஸ் 2 விற்பனையை ஊக்குவிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய ஏர்பாட்ஸ் 2 சாதனத்தில் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ், சிரி இன்டகிரேஷன் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ ஏர்பாட்ஸ் 2 சாதனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தார். ஏர்பாட்ஸ் 2 அறிமுகமானதும் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட மற்றொரு மாடல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த மாடல் 2020 ஆண்டின் முதல் காலண்டில் அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் ஐபோன் பயன்படுத்துவோரில் சுமார் 5 சதவிகிதத்திற்கும் குறைவானோர் ஏர்பாட்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.
உலகம் முழுக்க 100 ஐபோன் பயனர்கள் இருக்கும் நிலையில், புதிய வடிவமைப்புடன் ஏர்பாட்ஸ் விற்பனை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் ட்விட்களை மறைப்பதற்கான வசதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. #Twitter
ட்விட்டர் தளத்தில் ஹைட் ட்விட் (Hide Tweet) எனும் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. ட்விட்டர் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது. புதிய ஹைட் ட்விட் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது உரையாடல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
ட்விட்டரின் புதிய அம்சம் பயனர் ட்விட்களை ஷேர் செய்யும் ஆப்ஷனை க்ளிக் செய்தால் தெரியும். ட்விட்டரில் பயனரை மியூட் அல்லது பிளாக் செய்வதற்கு மாற்றாக உரையாடல்களை கட்டுப்படுத்துவதற்கு ஹைட் ட்விட் பயன்படும்.
இதுதவிர வியூ ஹிடன் ட்விட்ஸ் (View Hidden Tweets) எனும் அம்சத்தை ட்விட்டர் உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதன் மூலம் பயனர்கள் ஏற்கனவே ஹைட் செய்த ட்விட்களை அன்-ஹைட் செய்யலாம். புதிய அம்சம் வழங்கப்படுவதை ட்விட்டர் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.
1/8 Thanks to Jane and @MattNavarra for starting the conversation about the this feature we are developing! We wanted to provide a little more context on it. https://t.co/Ws2rJfa8sl
— Michelle Yasmeen Haq (@thechelleshock) February 28, 2019
தற்சமயம் மியூட் மற்றும் பிளாக் செய்வதை போன்றே இயங்கும் இந்த அம்சம் ட்விட்டரில் அனைவருக்கும் மற்றவர்களை அமைதிப்படுத்தும் வசதியை வழங்கும். இது பயனர்களை மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை க்ளிக் செய்து பார்க்க வேண்டும். மறுபுறம் பயனர் விரும்பும் பதில்களை மட்டும் பதிவிடும் வசதி பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.
ட்விட்டரில் சுமூகமான நடைமுறையை அமல்படுத்தும் முயற்சியில் புதிய அம்சம் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் மற்றவர்களை மியூட் அல்லது பிளாக் செய்வதை விட இந்த அம்சம் கொண்டு அவர்களிடம் இருந்து சற்று தள்ளியிருக்க முடியும்.
கூகுள் க்ரோம் சேவையில் டார்க் மோட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வதற்கான வசதி க்ரோம் கனாரி செயலியின் மூலம் வழங்கப்படுகிறது. #GoogleChrome
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் வலைதளங்களில் டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் டார்க் மோட் வசதியை செயல்படுத்த பயனர்கள் க்ரோம் கனாரியை பயன்படுத்தலாம். சில வலைப்பக்கங்களில் டார்க் மோட் வித்தியாசமாக பிரதிபலிக்கிறது. இந்த வசதி மொபைல் மட்டுமின்றி வலைதளத்திற்கும் கிடைக்கிறது. டார்க் மோட் வசதியினை ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்திலும் எதிர்பார்க்கலாம்.

சாம்சங் பிரவுசர் பயன்படுத்தியதை போன்றே வழிமுறையை க்ரோம் சேவையின் டார்க் மோட் வசதியை செயல்படுத்த கூகுள் பின்பற்றலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதல் டார்க் மோட் வசதியை வழங்குவதில் கூகுள் ஆர்வம் செலுத்தி வருகிறது.
டார்க் மோட் வசதியின் மூலம் இரவு நேர பயன்பாடுகளை சிறப்பானதாக மாற்ற முடியும். முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் சீராக வழங்கப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வலைதளங்களில் அறிமுகமாகி இருக்கிறது.
எனினும், டார்க் மோட் அனைத்து வலைதளங்களுக்கும் சீராக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இவை பயன்பாட்டு காரணங்களுக்காக வழங்கப்பட்டிருப்பதால், இதனால் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. புதிய டார்க் மோட் க்ரோம் கனாரி புதிய வெர்ஷனில் பயன்படுத்த முடியும்.
இந்திய டெலிகாம் சந்தையின் போக்கு பற்றி சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கைகளில் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RelianceJio
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் நாட்டின் முதல் டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும் என பென்ஸ்டெயின் மற்றும் கிரெடிட் சூசி வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் 2016 ஆம் ஆண்டு கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை டேட்டா வழங்கி, குறுகிய காலத்தில் பிரபல நிறுவனமாக மாறியிருக்கிறது. இதற்கென ஜியோ செய்த முதலீடுகளை கடந்து, தற்சமயம் லாபம் ஈட்டி வருவதாக பென்ஸ்டெயின் தெரிவித்திருக்கிறது.
முதலீடுகளின் மீதான லாபத்திற்கு நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகள் மற்றும் ஜியோபோன்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. ஜியோ நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகளை பின்பற்றி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

நீண்ட கால முதலீடுகளில் லாபத்தை ஈட்ட ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயனரிடம் இருந்து பெறும் வருவாயினை அதிகப்படுத்த வேண்டியிருக்கும் என பெயின்ஸ்டெயின் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் 12 மாதங்களில் ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சேவைகளுக்கான வருவாய் உள்ளிட்டவற்றில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போதைய நிதியாண்டின் படி மூன்றாவது காலாண்டின் இறுதியில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 38.7 கோடியாகவும், பாரதி ஏர்டெல் 28.4 கோடியாக இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 28 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MWC2019 #OnePlus5G
ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு இயங்கும் தனது முதல் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.
ஒன்பிளஸ் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் ஆர்.எஃப். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் குவால்காம் டெக்னாலஜீஸ் அரங்கில் ஒன்பிளஸ் 5ஜி கிளவுட் கேமிங்கின் எதிர்கால செட்டிங்கை செயல்படுத்தி காண்பித்தது. இதற்கு பயனர்களிடம் ஸ்மார்ட்போன் மற்றும் கேம்பேட் மட்டும் இருந்தாலே போதுமானது. கிளவுட் பிராசசிங் மற்றும் 5ஜி செயல்பாடு மூலம் பயனர்கள் ஆன்லைனில் மிகப்பெரிய கேம்களையும் சீராக விளையாட முடியும்.
ஸ்னாப்டிராகனின் எலைட் கேமிங் அம்சங்கள் மற்றும் ஆப்டிமைசேஷன்களை கொண்டு பயனர்கள் இதுவரை இல்லாத அளவு ஹெச்.டி. தரத்தில் கேமிங் அனுபவத்தை பெற முடியும். ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை வழங்க ஒன்பிளஸ் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.
லண்டனில் சீரான 5ஜி சேவையை வழங்கும் நோக்கில் இ.இ. நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.






