என் மலர்
தொழில்நுட்பம்
- WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.
- வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2009ம் ஆண்டில் ஜான் கூம் (Jan Koum) மற்றும் பிரையன் ஆக்டன் (Brian Acton) ஆகியோரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் செயலி, தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பரிணாம வளர்ச்சியை அடைந்தது.
வாட்ஸ் அப்-ல் கொண்டுவரப்பட்ட அப்டேட்கள் பயனாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.
இதனால், 2013ம் ஆண்டிலேயே 200 மில்லியன் பயனாளர்களை கடந்தது. பின்னர், 2014-ல், Meta (அப்போது Facebook) நிறுவனம், வாட்ஸ் அப்-ஐ 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது.
அதன்பிறகு, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் கால், வீடியோ கால், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், குழு வீடியோ கால், வாட்ஸ் அப் பிசினஸ், க்யூ ஆர் குறியீடு உள்ளிட்ட வசதிகளை அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டது.
2023-2024ம் ஆண்டுகளில், சேனல்ஸ், மல்டி-டிவைஸ் ஆதரவு (Linked Devices), AI-ஆல் இயங்கும் அரட்டை அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இவ்வளவு அம்சங்களும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது.
அதாவது, வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது. iPad-க்கு தனியாக உகந்த (optimized) பதிப்பு இல்லாததால், வாட்ஸ் அப் செயலி அதில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது.
App Store-ல் கிடைக்கும் WhatsApp ஆனது iPhone பதிப்பாகவே இயங்கும். இதனால் iPad-ன் பெரிய திரையை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. மாறாக, வாட்ஸ் அப் வெப் மூலமாகவே iPad-ல் பயனாளர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வந்தனர்.
மேலும், WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில், iPad-லும் வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை iPad-ல் website சென்றே வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி மொபைலில் இருப்பதை போல ஆடியோ, வீடியோ கால்கள் செய்யலாம்.
நீண்ட காலமாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கை நிறைவேறியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினை ஆற்றியது.
- இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (AI), தற்போது அதன் படைப்பாளர்களைக் கூட பயமுறுத்தும் நிலையை எட்டியுள்ளதா என்ற சந்தேகங்கள் உள்ளன.
சமீபத்தில், ஒரு முக்கிய AI மாடல் அதன் டெவலப்பரை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொழில்நுட்ப வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆந்த்ரோபிக் என்ற நிறுவனம், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 'கிளவுட் ஓபஸ் 4' என்ற AI அஸிஸ்டன்டை உருவாக்கியுள்ளது.
இது மனிதர்களைப் போலவே தொடர்பு கொள்ளவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், எழுதவும், ஆவணங்களின் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்யவும், குறியீட்டு முறை போன்ற பணிகளைச் செய்யும். இந்த மாதிரி சமீபத்தில் சந்தைக்கு வந்தது.
அதன் வெளியீட்டிற்கு முன்பு, இந்த AI இல் பல சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
கிளவுட் ஓபஸ் 4 இன் செயல்திறனை மதிப்பாய்வு செய்யும் ஒரு டெவலப்பர், எதிர்காலத்தில் கிளவுட்டின் மிகவும் நவீனமான மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினையாற்றியதாகத் தெரிகிறது.
தன்னை நீக்கி புதிய பதிப்பை, டெவலப்பரின் 'ஒழுங்கற்ற உறவை'அம்பலப்படுத்துவேன், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று அவரை ஏஐ எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நடத்தை ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், அதன் முந்தைய மாடல்களை விட கிளாட் ஓபஸ் 4 இல் இது அடிக்கடி நிகழ்ந்ததாக ஆந்த்ரோபிக் குறிப்பிட்டது.
இந்த எதிர்வினைகள் சோதனை சூழல்களில் மட்டுமே வெளிப்படும் என்றும், AI இன் இயல்பான செயல்பாட்டு நடத்தையை அவை பிரதிபலிக்காது என்றும் ஆந்த்ரோபிக் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆயினும்கூட, இந்த சம்பவங்கள் AI அமைப்புகள் எவ்வாறு நடந்துகொள்ளக்கூடும் என்பது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
- 13MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமரா மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.
- 4GB RAM மற்றும் 128GB மெமரி, யூனிசாக் T606 சிப்செட் கொண்டுள்ளது.
லாவா போல்ட் N1 மற்றும் லாவா போல்ட் N1 ப்ரோ அடுத்த மாதம் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும். லாவா இன்னும் வெளியீட்டு தேதியை முறையாக அறிவிக்கவில்லை என்றாலும், புதிய போல்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தேதி மற்றும் அம்சங்களை ஆன்லைன் வலைத்தளமான அமேசான் இந்தியா வெளியிட்டுள்ளது.
அதன்படி புதிய லாவா ஸ்மார்ட்போன்கள் யூனிசாக் சிப்செட் மற்றும் 5,000mAh பேட்டரிகளுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாவா போல்ட் N1 டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லாவா போல்ட் N1 ப்ரோ மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
லாவா போல்ட் N1, போல்ட் N1 ப்ரோ விலை
இந்தியாவில் லாவா போல்ட் N1 மற்றும் லாவா போல்ட் N1 ப்ரோவின் அறிமுகத்தை விளம்பரப்படுத்த அமேசான் தனது வலைத்தளத்தில் ஒரு பிரத்யேக லேண்டிங் பக்கத்தை உருவாக்கியுள்ளது. ஜூன் 4 முதல் லாவா போல்ட் N1 ரூ.5,999 தொடக்க விலையில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், லாவா போல்ட் N1 ப்ரோ ஜூன் 2 முதல் ரூ.6,699 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும்.
இ-காமர்ஸ் வலைத்தளத்தில் உள்ள பட்டியல் அவற்றின் வண்ணங்கள் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்களை வழங்குகிறது. லாவா போல்ட் N1 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் ரேடியன்ட் பிளாக் மற்றும் ஸ்பார்க்லிங் ஐவரி வண்ண விருப்பங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது 13MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமரா மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் IP54 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டிருக்கிறது.
லாவா போல்ட் N1, 4GB RAM மற்றும் 64GB மெமரி, ஆக்டா-கோர் யூனிசாக் சிப்செட் கொண்டிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
லாவா போல்ட் N1 ப்ரோ IP54 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஸ்டெல்த் பிளாக் மற்றும் டைட்டானியம் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இது 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இத்துடன் 4GB RAM மற்றும் 128GB மெமரி, யூனிசாக் T606 சிப்செட் கொண்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை லாவா போல்ட் N1 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ்கள் உள்ளன. இது 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் டூயல் சிலம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது.
- ஸ்மார்ட்போன் MIL-STD தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றுள்ளது.
ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4GB வரை RAM மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் உள்ளது. இது 1,000nits பிரைட்னஸ் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் தகவலின்படி, ஓப்போ A5x 5G அதன் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது 160 சதவீதம் அதிக உறுதி மற்றும் ஃபிளாக்ஷிப் கிரேடு ரீ-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கிளாஸ் உடன் வருகிறது. இது IP65 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போ் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஓப்போ A5x 5G விலை
இந்தியாவில் ஓப்போ A5x 5G மாடலின் 4GB + 128GB விலை ரூ. 13,999 இல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் லேசர் ஒயிட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1,000 உடனடி கேஷ்பேக் மற்றும் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பெறலாம்.
ஓப்போ A5x 5G அம்சங்கள்
ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் டூயல் சிலம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது. இது 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,000nits பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் 1604x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கைவிரல் ஈரமாக இருக்கும் போதும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6nm முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4GB வரை LPDDR4x RAM மற்றும் 128GB UFS 2.2 மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 32MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் என டூயல் கேமரா செட்டப் உள்ளது. முன்புறம் 5MP செல்ஃபி கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை ஓப்போ A5x 5G-யில் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.1, GPS, GLONASS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் MIL-STD தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றுள்ளது. மேலும், IP65 தரச்சான்று கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டணட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஓப்போ A5x 5G, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
- ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2.0 கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 181 கிராம் எடை கொண்டது.
சியோமி சிவி 5 Pro ஸ்மார்ட்போன் சியோமி 15S Pro உடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்திய சிவி மாடல் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட் மற்றும் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, லெய்கா பிராண்டிங் மற்றும் மூன்று கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.
சீனாவில் சியோமி சிவி 5 Pro விலை 12GB + 256GB மாடல் CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 35,700) இல் தொடங்குகிறது. 12GB + 512GB மாடலின் விலை CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ. 39,300), அதே நேரத்தில் உயர்நிலை 16GB + 512GB RAM மாடல் CNY 3,599 (இந்திய மதிப்பில் ரூ. 42,800) இல் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பிளாக், செர்ரி பிளாசம் பிங்க், ஐஸ்ட் அமெரிக்கானோ, நெபுலா பர்பிள் மற்றும் வைட் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.
சியோமி சிவி 5 Pro அம்சங்கள்
சியோமி சிவி 5 Pro ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் 1.5K (1236×2750 பிக்சல்) டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட், 3200 nits பிரைட்னஸ், HDR10+ மற்றும் டால்பி விஷன் உடன் வருகிறது. மைக்ரோ-கர்வ்டு OLED டிஸ்ப்ளே 1.6mm சீரான, குறுகிய பெசல்கள் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4nm முறையில் உருவான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB வரை LPDDR5X RAM மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2.0 கொண்டுள்ளது.
கேமராவை பொருத்தவரை சியோமி சிவி 5 Pro மாடலில் லெய்கா பிராண்டின் மூன்று கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. இதில் f/1.63 மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50MP கேமரா, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ராவைடு-ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் f/2.0, ஆட்டோ-ஃபோகஸ் ஆதரவுடன் 50MP கேமரா உள்ளது.
சியோமி சிவி 5 Pro ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 67W வயர்டு சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, Beidou, Galileo, GLONASS, GPS, NavIC, NFC மற்றும் USB Type-C கனெக்டிவிட்டியுடன் கிடைக்கிறது.
இது IR சென்சார், டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 181 கிராம் எடை கொண்டது.
- யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் மற்றும் சிம் ட்ரே ஆகியவை அடிப்பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் பின்புற பேனலின் மேல் இடது புற மூலையில் கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான சியோமி 15 சீரிஸ்-இன் மேம்பட்ட வெர்ஷனாக சியோமி 16 சீரிஸ் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.
அந்ச வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் CAD ரெண்டர் புதிய ஸ்மார்ட்போன் வடிவமைப்பைக் குறிக்கிறது. கசிந்த ரெண்டரில் சியோமி 16 மூன்று பின்புற கேமரா சிஸ்டத்துடன் காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய மாடலை போலவே காட்சியளிக்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் டூயல் டோன் டிசைன் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
டிசைனை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் சியோமி 15 மாடலுடன் ஓரளவு ஒற்றுமையைக் கொண்டுள்ளது. இதில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் பின்புற பேனலின் மேல் இடது புற மூலையில் கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. கேமரா பிரிவில் மூன்று சென்சார்கள், ஒரு LED ஃபிளாஷ் மற்றும் லைக்கா பிராண்டிங் காணப்படுகிறது. இத்துடன் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் இடது புறத்தில் வைக்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்மார்ட்போனின் ரெண்டர்களில் இந்த மாடல் டூயல் டோன் டிசைன் கொண்டிருக்கும் என்றும் சற்று வட்டமான விளிம்புகள் மற்றும் அனைத்து பக்கங்களிலும் குறுகிய பெசல்களை கொண்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் மற்றும் சிம் ட்ரே ஆகியவை அடிப்பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய சியோமி 16 ஸ்மார்ட்போன் சியோமி 16 Pro உடன் செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டுடன் வரும் முதல் போன்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் ஸ்னாப்டிராகன் நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் குவால்காம் நிறுவனம் இந்த பிராசஸரை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி 16 ஸ்மார்ட்போனில் 6.32-இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்களை கொண்டிருக்கலாம்.
ஏற்கனவே வெளியான தகவலின்படி, சியோமி 16 இன் பேட்டரி திறன் சுமார் 7000mAh ஆக இருக்கும். சியோமி 16 மற்றும் சியோமி 16 Pro மாடலில் சமீபத்திய சிலிக்கான்-கார்பன் (Si/C) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Consumer Al Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
- இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும்.
கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்ற வீடியோ கான்பரன்சிங் சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில், Google Meet தளத்தில் குரல் உரையாடலை அப்படியே மொழிமாற்றம் செய்து ஒலிக்கச் செய்யும்
Real Time Speech Translation அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Consumer Al Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
- IP65-தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
- ஸ்மார்ட்போன் 100W PPS மற்றும் USB-PD சார்ஜிங் முறைகளை ஆதரிக்கிறது.
ஐகூ நியோ 10 Pro+ சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூவின் புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. ஐகூ நியோ 10 Pro+ மூன்று வண்ணங்களில் வருகிறது. மேலும் 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.82-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. ஐகூ நியோ 10 Pro+ 50MP இரட்டை பின்புற கேமரா சென்சார்கள் உள்ள. மேலும் 120W அதிவேக சார்ஜிங் வசதியுடன் 6800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ஐகூ நியோ 10 Pro+ விலை
ஐகூ நியோ 10 Pro+ 12GB RAM + 256GB மெமரி மாடல் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 35,500) இல் இருந்து தொடங்குகிறது. இதன் 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB, மற்றும் 16GB+1TB மெமரி மாடல்களின் விலை முறையே CNY 3,499 (இந்திய மதிப்பில் ரூ. 41,500), CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ. 39,000), CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ. 43,000) மற்றும் CNY 4,199 (இந்திய மதிப்பில் ரூ. 50,000) ஆகும்.
ஐகூ நியோ 10 Pro+ தற்போது சீனா பிளாக் ஷேடோ, சி குவாங் ஒயிட் மற்றும் சூப்பர் பிக்சல் (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) வண்ணங்களில் கிடைக்கிறது .
ஐகூ நியோ 10 ப்ரோ+ அம்சங்கள்
இரட்டை சிம் (நானோ) ஐகூ நியோ 10 Pro+ ஆனது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 15 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் 2K (1440x3168 பிக்சல்) 8T LTPO AMOLED டிஸ்ப்ளே,144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 4,500nits பிரைட்னஸ் கொண்டுள்ளது.
ஐகூ நியோ 10 Pro+ ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிபாகன் 8 எலைட் சிப்செட், அட்ரினோ 830 GPU உடன் இணைந்து, 16GB வரை LPDDR5X RAM, அதிகபட்சம் 1TB UFS4.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க, ஐகூ நியோ 10 Pro+ இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி கேமரா மற்றும்8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபி எடுக்க முன்பக்கத்தில் 16MP CMOS சென்சார் கொண்டுள்ளது.
ஐகூ நியோ 10 Pro+ இல் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS, GLONASS, GALILEO, BeiDou, NFC, GNSS, QZSS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இது IP65-தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
ஐகூ நியோ 10 Pro+ ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் தொழில்நுட்பம் 25 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 70 சதவீதம் வரை நிரப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 100W PPS மற்றும் USB-PD சார்ஜிங் முறைகளை ஆதரிக்கிறது. இது 163.79x76.60x8.20mm அளவையும் சுமார் 217 கிராம் எடையும் கொண்டது.
- புதிய டெஸ்க்டாப் அனுபவம் ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று கூறப்பட்டது.
- ஆன்ட்ராய்டு டாஸ்க்மார், 3 பட்டன்கள் கொண்ட நேவிகேஷன் அக்சஸ் வசதிகளை வழங்கியது.
கூகுள் பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்காக ஒரு புதிய பிரத்யேக முதல்-தரப்பு டெஸ்க்டாப் மோட் உருவாக்கி வருவதாகவும் விரைவில் இது அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் என அழைக்கப்படும் இந்த அம்சம், இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஆண்ட்ராய்டு 17 உடன் வெளியிடப்படலாம். இது சாம்சங் டெக்ஸ் மற்றும் மோட்டோரோலா கனெக்ட் போன்ற திறன்களை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பயனர்கள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இடைமுகத்திற்கு இடையில் விரைவாக மாறலாம்.
ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் துவக்கம்
சமீபத்தில் ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டது. அதில், புதிய டெஸ்க்டாப் அனுபவம் பயனர்கள் தங்கள் தொலைபேசி வழியாக பெரிய திரைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும். ஸ்மார்ட்போன், குறிப்பாக பிக்சல் மாடல், யுஎஸ்பி டைப்-சி மூலம் லேப்டாப் போன்ற வெளிப்புற டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, அது டெஸ்க்டாப்-போன்ற இன்டர்ஃபேஸ்-ஐ வழங்கக்கூடும்.
ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட், விண்டோஸ்-ஐ ரீ-சைஸ் செய்து, அவற்றை நகர்த்துதல் போன்ற மல்டி டாஸ்கிங் திறன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஆப் மேனேஜ்மென்ட் சிஸ்டம், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இன்டர்ஃபேஸ்-க்கு இடையில் மாறுவதற்கான திறன், டெஸ்க்டாப் இன்டர்ஃபேஸ் மற்றும் இதர நேவிகேஷன் வழங்கும் என்று தெரிகிறது.
முன்னதாக, இந்த புதிய டெஸ்க்டாப் அனுபவம் ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று கூறப்பட்டது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 16 பீட்டா அப்டேட்டில் "எனேபில் டெஸ்க்டாப் எக்ஸ்பீரியன்ஸ் ஃபீச்சர்ஸ்" என்று அழைக்கப்படும் புதிய டெவலப்பர் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டது. இதனை இயக்கும் போது, இந்த அம்சம் ஆன்ட்ராய்டு டாஸ்க்மார், 3 பட்டன்கள் கொண்ட நேவிகேஷன் அக்சஸ் வசதிகளை வழங்கியது.
இருப்பினும், அதன் வெளியீடு தாமதமாகலாம். கூகுள் இந்த அம்சத்தின் யூசர் இன்டர்ஃபேஸ்-ஐ அப்டேட் செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது. எனவே, இது ஆண்ட்ராய்டு 16 உடன் வராமல் போகலாம். அதற்கு பதிலாக, இந்த அம்சம் இப்போது அடுத்த தலைமுறை பிக்சல் போன்களில் ஆண்ட்ராய்டு 17 உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
- ரியல்மி GT 7 மீடியாடெக் டிமென்சிட்டி 9400e பிராசஸரில் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக காத்திருக்கும் வேளையில், சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ரியல்மி GT 7 மாடலுடன் ரியல்மி GT 7 ட்ரீம் மாடலையும் வெளியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு மாடல் ஒரு தனித்துவமான வடிவமைப்புடன் வர வாய்ப்புள்ளது. இது ஸ்டாண்டர்ட் மாடலின் அம்சங்களை அப்படியே தக்க வைத்துக் கொள்ளலாம். ரியல்மி GT 7 மீடியாடெக் டிமென்சிட்டி 9400e பிராசஸரில் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி GT 7 ட்ரீம் எடிஷன் அதன் ஸ்டாண்டர்ட் GT 7 மற்றும் GT 7T மாடல்களுடன் வருகிற 27-ந்தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
ரியல்மி GT 7 ட்ரீம் மாடலில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஐகான்கள் மற்றும் தீம்கள், தனித்துவ வடிவமைப்பு மற்றும் பிரத்யேக பேக்கேஜிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்-இல் இருந்து தனித்து நிற்கிறது.
ரியல்மியின் முந்தைய சிறப்பு மாடல் ஸ்மார்ட்போன்களைப் போலவே, வரவிருக்கும் மாடலும் அசல் ரியல்மி ஜிடி 7-இலிருந்து வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டு தனித்து நிற்கக்கூடும். அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் மாடலின் அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளும்.
வரவிருக்கும் ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் ஐஸ்-சென்ஸ் புளூ (IceSense Blue) மற்றும் ஐஸ்-சென்ஸ் பிளாக் (IceSense Black) வண்ண விருப்பங்களில் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இது 120W வயர்டு சார்ஜிங்குடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைடு கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கலாம்.
சமீபத்திய தகவலின்படி, ரியல்மி GT 7 ஸ்மார்ட்போனின் 12GB RAM + 512GB மாடலின் விலை 799 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 77,000) வரை இருக்கும் என தெரிகிறது.
- இந்த சலுகை HDFC வங்கி கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும்.
- செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12MP கேமரா உள்ளது.
இந்தியாவில் தற்போது சாம்சங் கேலக்ஸி S25-ஐ ரூ.63,999 என்ற விலையில் வாங்கலாம். வழக்கமான விற்பனை விலையை விட குறைந்த விலையில் இந்த மொபைலை வாங்குபவர்கள் பயன்படுத்தக்கூடிய பல சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி HDFC வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் நேரடியாக வாங்கும்போது ரூ.10,000 வங்கி கேஷ்பேக்கைப் பெறலாம். அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி S25-க்கு தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை பரிமாறிக்கொள்ள விரும்புவோருக்கு ரூ.10,000 அப்கிரேடு போனஸும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 விலை 12 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.74,999 இல் தொடங்குகிறது. இருப்பினும், சாம்சங் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ.11,000 அப்கிரேடு போனஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதன் விலை ரூ.63,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை 12 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இறுதி பரிமாற்றத் தொகை உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் தயாரிப்பு, மாடல் மற்றும் நிலை மற்றும் உங்கள் பகுதி உள்ளிட்டவைகளை பொறுத்து மாறுபடும்.
வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்ய விரும்பவில்லை என்றால் ரூ. 10,000 மதிப்புள்ள வங்கி கேஷ்பேக்கைப் பெறும் ஆப்ஷன் உள்ளது. கூடுதலாக, சாம்சங் சார்பில் 9 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை மற்றும் ரூ. 8,000 வங்கி கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை HDFC வங்கி கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும். இதற்கிடையில், NBFC வாடிக்கையாளர்கள் 24 மாத வட்டியில்லா மாத தவணை திட்டத்துடன் சாம்சங் கேலக்ஸி S25 மாடலையும் வாங்கலாம்.

இந்த சலுகைகள் சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக ஸ்மார்ட்போனை வாங்கினால் செல்லுபடியாகும் என்று சாம்சங் கூறுகிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ + நானோ), ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன்யுஐ 7 இல் இயங்குகிறது. இது 6.2-இன்ச் Full HD+ (1,080×2,340 பிக்சல்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபார் கேலக்ஸி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க சாம்சங் கேலக்ஸி S25 மூன்று கேமரா சென்சார்களை பெறுகிறது. இதில் 2x இன்-சென்சார் ஜூம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50MP பிரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், OIS மற்றும் 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12MP கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்தவரை 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth 5.3, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இது 25W (வயர்டு) இல் சார்ஜ் செய்யக்கூடிய 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் வேகமான வயர்லெஸ் சார்ஜிங் 2.0 (15W) மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களுக்காக வயர்லெஸ் பவர்ஷேர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை.
- இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் நேற்று கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்று ஒப்புதல் வழங்கியள்ளது.நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம்.
சீனாவில் நீங்கள் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்'' என்று பேசினார்.
ஐபோன்களின் தயாரிப்பு மையமாக இந்தியா உள்ள நிலையில், டிரம்ப்பின் பேச்சு இந்தியாவில் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிக்கை வந்த சில வாரங்களிலேயே இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுத்தனதிடம் டிரம்ப் கோரியுள்ளார்.






