என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nothing Phone"

    • புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் "லைட்" அல்லது "T" பிராண்டிங்கைக் கொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • தற்போதுள்ள மாடல்கள் சந்தையில் சிறப்பாக செயல்படவில்லை.

    நத்திங் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நத்திங் போன் 3a சீரிசை அறிமுகம் செய்தது. இந்த மாத தொடக்கத்தில் நத்திங் போன் 3 மாடலை வெளியிட்டது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட OEM விரைவில் அதன் ஸ்மார்ட்போன்கள் பிரிவை விரிவுபடுத்தி, மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று டிப்ஸ்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் "லைட்" அல்லது "T" பிராண்டிங்கைக் கொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தற்போதுள்ள மாடல்கள் சந்தையில் சிறப்பாக செயல்படவில்லை. சியோமி, ரியல்மி மற்றும் ஒன்பிளஸ் என மற்ற ஸ்மார்ட்போன் பிரான்டுகள் விற்பனையை அதிகரிக்க இதேபோன்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.

    மலிவான 'லைட்' அல்லது 'T' பிராண்டு ஸ்மார்ட்போன்களை நத்திங் வெளியிடலாம் என்று டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh) எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களில் "லைட்" அல்லது "T" பிரான்டிங் இருக்கலாம்.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 79,999 மற்றும் ரூ. 89,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நத்திங் போன் 3a மற்றும் போன் 3a ப்ரோ ஆகியவை முறையே ரூ. 22,999 மற்றும் ரூ. 27,999 விலையில் தொடங்குகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் 3 மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 SoC, 5500mAh பேட்டரி, 6.67-இன்ச் 120Hz 1.5K AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டுள்ளது. மேலும், புதிய கிளிம்ஃப் மேட்ரிக்ஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் கூடிய டிரான்ஸ்பேரன்ட் பேக் பேனல் மற்றும் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    • நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனுக்கான டிராப் நிகழ்வை நடத்துவது இது முதல் முறை அல்ல.
    • கடந்த ஆண்டு, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நத்திங் போன் 2a மாடலுக்கும் டிராப் சலுகையை நத்திங் அறிவித்தது.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3 மாடல் ஜூலை 15 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். இருப்பினும், நிறுவனம் இந்தியாவிற்கான பிரத்யேக டிராப் நிகழ்வை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனின் அனுபவத்தை முன்கூட்டியே வழங்கும்.

    இதுதவிர அதன் அதிகாரப்பூர்வ விற்பனைக்கு முன்னதாக ஸ்மார்ட்போனை வாங்கவும் வாய்ப்பளிக்கும். பெங்களூருவில் நடைபெற உள்ள நிகழ்வில் நத்திங் போன் 3 மாடலை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹெட்ஃபோன் 1 மாடலை இலவசமாக பெற முடியும்.

    சலுகை விவரங்கள்:

    ஜூலை 12-ம் தேதி (நாளை) மாலை 7 மணிக்கு பெங்களூருவின் யுபி சிட்டியில் நத்திங் போன் 3 மாடலுக்கான இந்தியாவிற்கான பிரத்யேக டிராப் நிகழ்வு நடைபெற இருக்கிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நுழைவு வழங்கப்படும்.

    புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு, அதன் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்கவும், அதை நேரடியாகப் பயன்படுத்தவும் விருந்தினர்களுக்கு நத்திங் போன் 3 இந்தியா டிராப் நிகழ்வு வாய்ப்பளிக்கும். இதுமட்டுமின்றி அவர்கள் ஒரு போட்டியிலும் பங்கேற்கலாம்.

    அதைத் தொடர்ந்து அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் ரூ. 21,999 மதிப்புள்ள நத்திங் ஹெட்ஃபோன் 1 ஐ வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நிகழ்வின் மிகப்பெரிய சிறப்பம்சம் நத்திங் போன் 3 கிடைப்பதுதான்.

    இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் விற்பனைக்கு வருவதற்கு முன்பு விருந்தினர்கள் இந்த போனை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இது காத்திருப்புப் பட்டியல்களுக்குப் பதிவு செய்வதையோ அல்லது கைபேசியை முன்கூட்டியே ஆர்டர் செய்வதையோ நீக்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனுக்கான டிராப் நிகழ்வை நடத்துவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நத்திங் போன் 2a மாடலுக்கும் டிராப் சலுகையை நத்திங் அறிவித்தது.

    கடந்த மார்ச் மாதத்தில் நத்திங் போன் 3a சீரிசுக்கான வெளியீட்டு நிகழ்வையும் நத்திங் நடத்தியது. உலகில் உள்ள வேறு எவருக்கும் முன்பே நத்திங் கம்யூனிட்டியை சேர்ந்தவர்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க இந்த டிராப் நிகழ்வு அழைப்பு விடுத்தது.

    நத்திங் போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் தான் வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நத்திங் இயங்குதளத்தை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த நத்திங் போனின் வெளியீட்டு விவரத்தை அதன் நிறுவனர் கார்ல் பெய் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார். இந்த போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரம் உள்ளிட்ட தகவல்களை ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அதன் டிசைன் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது.

    ஸ்லாஸ்லீக் என்கிற தளத்தில் இந்த போனின் தோற்றம் அடங்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் முன் பாகம் தெளிவாக தெரிகிறது. அதில் டாப் செண்டரில் முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. பின் பக்கம் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் அது 3 கேமரா செட்-அப் உடன் உள்ளதை பார்க்க முடிகிறது.

     நத்திங் போன்
    Photo Courtesy: /Leaks

    இது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் இல்லை, பெரும்பாலும் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர், 90Hz டிஸ்ப்ளே, 50MP பிரைமரி சென்சாருடன், மூன்று கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றுடன் வரும் என்று கூறப்படுகிறது.

    நத்திங் போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் தான் வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது. நத்திங் இயங்குதளத்தை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் வெளியீட்டு விவரம் வெளியாக வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    • நத்திங் போன் வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.
    • முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியிட்டது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு பாஸ் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பெற்றவர்களுக்கு மட்டுமே முதலில் நத்திங் போன் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதன் முதற்கட்ட முன்பதிவி முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்தக்கட்ட முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் நத்திங் போனின் முன்பதிவு மீண்டும் தொடங்கி உள்ளது. ஜூலை 20-ந் தேதி நள்ளிரவு வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் நத்திங் போன் விற்பனைக்கு வர உள்ளது.

    • நத்திங் போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
    • நத்திங் போன் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் 2 வாரங்களுக்கு மேல் இருந்தாலும், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    அந்த வரிசையில், நத்திங் போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன் படி இந்திய சந்தையில் புதிய நத்திங் ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB மெமரி வேரியண்ட் ரூ. 31 ஆயிரத்திற்கும், 8GB ரேம் + 256GB மெமரி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 32 ஆயிரமாகவும், 12GB ரேம் + 256GB மெமரி வேரியண்ட் ரூ. 36 ஆயிரத்திற்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.


    நத்திங் போன் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. நத்திங் போன் (1) மாடல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மூலம் ஆப்லைனில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஆன்லைனில் பிளிப்கார்ட் தளம் வாயிலாக வாங்க முடியும்.

    • ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
    • ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.

    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ள ஈவண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அந்த போன் அறிமுகமாகும் முன்பே விற்பனைக்கு வர உள்ளது. அதன்படி 100 போன்களை மட்டும் அந்நிறுவனம் வெளியீட்டு முன் விற்பனை செய்ய உள்ளது.

    இதற்காக ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏலத்தின் அடிப்படையில் இந்த 100 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி ஜூன் 21-ந் தேதி ஸ்டாக் எக்ஸின் தொழில்நுட்ப தளமான டிராப் எக்ஸின் இந்த ஏலம் தொடங்கி உள்ளது. இன்றுடன் இந்த ஏலம் முடிவடைய உள்ளது.


    ஏராளமானோர் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு உள்ளனர். தற்போது வரை இதில் அதிகபட்சமாக ரூ.1.56 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போனின் விலை ரூ.30 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • நத்திங் நிறுவனம் வெளியிட உள்ள அதன் முதல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கும் என கூறப்படுகிறது.
    • நத்திங் போன் இந்தியாவில் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நத்திங் போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக நிகழ்வு வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி இரவு 8:30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாம் முன்கூட்டியே கூறியபடி இந்த போன் டிரான்ஸ்பரண்ட் டிசைனில் வர உள்ளது. தற்போது அதன் அம்சங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதனை பற்றி தற்போது பார்க்கலாம்.

    நத்திங் நிறுவனம் வெளியிட உள்ள அதன் முதல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங், ஸ்நாப்டிராகன் சிப்செட் மற்றும் நத்திங் இயங்குதளம் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த போன் இந்தியாவில் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 6.55 இன்ச் புல் HD + OLED டிஸ்பிளேயை கொண்டிருக்குமாம்.


    குவால்காம் ஸ்நாப்டிராகன் 7 Gen1 சிப்செட்டுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் மெமரி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4,500 அல்லது 5,000 mAh பேட்டரியும், வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர கேமரா பற்றிய தகவல் ரகசியமாகவே உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி, LTE, வைஃபை 6, புளூடூத் 5.2, GPS, டைப் C போர்ட் உள்ளிட்டவை அதில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ×