என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • சோனி நிறுவனத்தின் PS5 கன்சோல் விலை இந்தியாவில் குறைக்கப்பட இருக்கிறது.
    • விலை குறைப்பு PS5 அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.

    சோனி இந்தியா நிறுவனம் தனது PS5 கன்சோலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக இங்கிலாந்து, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் PS5 கன்சோலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விளம்பர சலுகையாக PS5 கன்சோல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வவரை விலை குறைப்பு வழங்கப்பட இருக்கிறது.

    பிளே ஸ்டேஷன் இந்தியா அனைத்து PS5 வேரியண்ட்களுக்கும் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகை ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்கி, குறுகிய காலத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. சிறப்பு விளம்பர சலுகையின் கீழ் PS5 இந்திய விலை ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ. 39 ஆயிரத்து 990 என்றும் PS5 காட் ஆஃப் வார் ராங்னராக் பண்டில் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என குறைக்கப்பட உள்ளது.

     

    தற்போது PS5 விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும், PS5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் PS5 காட் ஆஃப் வார் ராங்னராக் பண்டில் விலை ரூ. 59 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விலை குறைப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு அமேசான், ப்ளிப்கார்ட், கேம்ஸ் தி ஷாப், ஷாப் அட் எஸ்சி, விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் க்ரோமா உள்ளிட்ட தளங்களில் நடைபெறுகிறது.

    2021 பிப்ரவரி வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே PS5 மாடலுக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலை இருந்து வந்தது. 2022 ஆண்டில் மட்டும் சோனி நிறுவனம் சுமார் பத்து லட்சம் PS5 யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக டிப்ஸ்டரான ரிஷி அல்வானி தெரிவித்து இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் சோனி நிறுவனம் சுமார் 20 ஆயிரம் PS5 யூனிட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்திருக்கிறது.

    • விங்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் கேம் மோட், 40ms அல்ட்ரா லோ லேடன்சி ஆடியோ கொண்டிருக்கிறது.
    • புதிய விங்ஸ் ஃபேண்டம் 380 மாடல் வைட் மற்றும் பிளாக் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

    விங்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபேண்டம் 380 இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விங்ஸ் ஃபேண்டம் 380 முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. ANC மோடில் இந்த இயர்பட்ஸ் 35 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள குவாட் மைக் ENC-இல் நா்கு மைக்குகள் உள்ளன. இவை எவ்வித சூழலில் இருந்து பேசினாலும், மற்றவர்களுக்கு குரல் தெளிவாக கேட்க செய்கிறது.

    புதிய விங்ஸ் ஃபேண்டம் 380 மாடலில் ப்ளூடூத் 5.3, ஸ்பீடு சின்க், ஒபன் அண்ட் ஆன், கேம் மோட், 40ms அல்ட்ரா லோ லேடன்சி ஆடியோ, 13mm ஹை-ஃபிடிலிட்டி கம்போசிட் டிரைவர்கள், போல்டு பேஸ் மற்றும் ENC மைக்குகள் உள்ளன. புதிய இயர்பட்ஸ் மூலம் விங்ஸ் நிறுவனம் ஆஃப்லைன் தளத்தில் கால்பதிக்கிறது.

     

    விங்ஸ் ஃபேண்டம் 380 அம்சங்கள்:

    எர்கோனோமிக் டிசைன்

    13mm ஹை-ஃபிடிலிட்டி கம்போசைட் டிரைவர்

    டிரான்ஸ்பேரண்ட் மோடில் அதிகபட்சம் 30db வரையிலான ANC

    போல்டு பேஸ் தொழில்நுட்பம்

    40ms அல்ட்ரா லோ லேடன்சி வழங்கும் பிரத்யேக கேம் மோட்

    குவாட் ENC மைக்ரோபோன்

    டச் கண்ட்ரோல்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்

    ப்ளூடூத் 5.3, ஸ்பீடு சின்க்

    அதிகபட்சம் 50 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி

    டைப் சி புல்லட் ஃபாஸ்ட் சார்ஜ் சப்போர்ட்

    IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்

    விங்ஸ் சின்க் ஆப் சப்போர்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    விங்ஸ் ஃபேண்டம் 380 மாடல் அறிமுக சலுகையாக பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விங்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

    • ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தனது GT3 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.
    • நத்திங் நிறுவனம் தனது போன் (2) மாடலை அமெரிக்க சந்தையிலும் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது.

    இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவதை பிஐஎஸ் வலைத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியும். புதிய ஸ்மார்ட்போன்கள் ஏதும் பிஐஎஸ் சான்று பெற்றுவிட்டால், இவை இந்திய வெளியீட்டு தயாராகி இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம். அந்த வகையில், ரியல்மி மற்றும் நத்திங் என இரு நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் பிஐஎஸ் சான்று பெற்றுள்ளன.

    ரியல்மி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்த ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் தற்போது பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. பிஐஎஸ் தளத்தில் ரிய்லமி GT3 ஸ்மார்ட்போனஅ RMX3709 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பொதுவாக பிஐஎஸ் தளத்தில் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் தவிர இதர விவரங்கள் எதுவும் இடம்பெற்று இருக்காது. எனினும், ரியல்மி GT3 ஏற்கனவே சர்வதேச சந்தையில் கிடைப்பதால் இதன் அம்சங்கள் அனைவரும் அறிந்ததே.

     

    ரியல்மி தவிர நத்திங் நிறுவனத்தின் புதிய போன் (2) மாடல் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதன் மூலம் நத்திங் போன் (2) மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் போதே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய நத்திங் போன் (2) AIN065 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. நத்திங் போன் (2) மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழஹ்கப்பட இருக்கிறது.

    நத்திங் போன் (2) எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    நத்திங் போன் (2) மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யுஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, OIS சப்போர்ட், போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     

    ஏற்கனவே சர்வதேச சந்தையில் கிடைக்கும் ரியல்மி GT3 மாடலில் 6.74 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மைக்ரோஸ்கோபிக் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 கொண்டிருக்கும் ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாட் 30i ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
    • 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஹாட் 30i 10 வாட் யுஎஸ்பி டைப் சி சார்ஜர் கொண்டுள்ளது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஹாட் 30i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.6 இன்ச் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12 கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 30i ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஆடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 30i அம்சங்கள்:

    6.6 இன்ச் 1612x720 பிக்சல் HD+ IPS LCD 90Hz ரிப்ரெஷ் ரேட்

    பாாண்டா கிளாஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 12

    13MP பிரைமரி கேமரா

    ஏஐ லென்ஸ், டூயல் எல்இடி ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஆடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் 30i ஸ்மார்ட்போன் கிளேசியர் புளூ மற்றும் மிரர் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி துவங்குகிறது.

    • டுவிட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இன்றி காலியாக இருந்தது.
    • ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். கடந்த புதன் கிழமை அனுப்பிய மின்னஞ்சல் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் படி, எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது குறித்து டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

    அதிகாலை 2.30 மணிக்கு எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், "Office is not optional" அதாவது அலுவலகம் விருப்பம் இல்லை என தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இன்றி காலியாக இருந்தது என்று எலான் மஸ்க் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

     

    முன்னதாக எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது அதிகாலை சமயங்களிலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் நள்ளிரவு 2.30 மணிக்கு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அவர்களுக்கு பழகிப் போன ஒன்றுதான்.

    எலான் மஸ்க் கைப்பற்றுவதற்கு முன் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவதற்கான அனுமதி பரவலாக வழங்கப்பட்டு இருந்தது. நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை எலான் மஸ்க் ஆரம்பத்தில் இருந்தே ஊக்குவித்தது இல்லை. கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க், "டெஸ்லா ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணி நேரம் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு செய்யாதவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படுவர்," என்று தெரிவித்து இருந்தார். 

    • ஆப்பிள் நிறுவனம் யுஎஸ்பி சி போர்ட் கொண்ட ஏர்பாட்ஸ் ப்ரோ 2 உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலின் உற்பத்தி குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 பற்றிய தகவல்களை பிரபல வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டுள்ளார்.

    முன்னதாக ஐஒஎஸ் 16.4 பீட்டா வெர்ஷனில் இதுபற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் தொடர்ச்சியாக வல்லுனர்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த இயர்பட்ஸ்-இன் உற்பத்தி இந்த ஆண்டின் இரண்டு அல்லது மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.

     

    ஏர்பாட்ஸ் 2 மற்றும் ஏர்பாட்ஸ் 3 மாடல்களில் யுஎஸ்பி டைப் சி வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்படாது. லைட்னிங் போர்ட்-இல் இருந்து யுஎஸ்பி சி போர்ட்-க்கு மாறும் ஆப்பிள் நிறுவனத்தின் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் விதித்த புதிய விதிமுறைகள் காரணமாக அமைந்துள்ளன.

    சர்வதேச சந்தையில் அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட் மற்றும் இதர மின்சாதனங்களில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்ட மேக் மற்றும் ஐபேட் சாதனங்களை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் ஏர்பாட்ஸ் மற்றும் ஐபோன் மாடல்களில் லைட்னிங் கனெக்டரே வழங்கப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் வெளியான ஐஒஎஸ் 16.4 பீட்டா வெர்ஷனில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 197 விலையில் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிகபட்சம் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை அனைவருக்கும் ஏற்ற விலையில் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

    அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை தேர்வு செய்ய விரும்புவோருக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பிஎஸ்என்எல் புதிய பிரீபெயிட் சலுகையின் விலை ரூ. 197 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இதில் 18 நாட்களுக்கு இலவச பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது டெலிகாம் துறையில் சலுகை விலை மற்றும் பலன் விவரங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகையின் பழைய பலன்கள் மாற்றப்பட்டுவிட்டது.

    அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 197 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா (தினமும் 2 ஜிபி), 100 எஸ்எம்எஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. பலன்களை பொருத்தவரை இந்த சலுகை தினசரி கட்டணம் ரூ. 2.80 என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    இலவச பலன்களின் வேலிடிட்டி 15 நாட்கள் மட்டுமே ஆகும். அதன் பின் இவற்றை பயன்படுத்த கட்டணங்கள் வசூலிக்கப்படும். புதிய பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை பெரும்பாலான டெலிகாம் வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், சில வட்டாரங்களில் இது வழங்கப்படாது என்றே தெரிகிறது.

    • ஜார்டன் மூரெ தொழில்நுட்ப துறையில் முன்னோடியாக விளங்கினார்.
    • சிலிகான் வேலியில் மதிப்புமிக்க மனிதர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார்.

    இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் உயிரிழிந்தார். இன்று புழக்கத்தில் இருக்கும் ஏராளமான கம்ப்யுடிங் சாதனங்கள் உருவாக மூலக் காரணமாக விளங்கியவர்களில் ஜார்டன் மூரெ இடம்பெற்று இருந்தார். மார்ச் 24 ஆம் தேதி அமைதியான முறையில் இவரின் உயிர் பிரிந்ததாக இண்டெல் நிறுவன வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மரணிக்கும் தருவாயில் ஜார்டன் மூரெ அவரின் குடும்பத்தாருடன் ஹவாயில் உள்ள தனது வீட்டில் இருந்துள்ளார். சிலிகான் வேலியில் மதிப்புமிக்க நபர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார். ஜார்டன் மூரெ மறைவுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆகியோர் இரங்கல் தெரிவிக்கும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    "இந்த உலகம் மிகப்பெரிய மனிதரான ஜார்டன் மூரெ இழந்துள்ளது. இவர் சிலிகான் வேலியை உருவாக்கிய தந்தைகளில் ஒருவர் ஆவார். தொழில்நுட்ப துறையில் புரட்சியை ஏற்படுத்த உதவியர்களில் இவரும் ஒரவர் ஆவார். இவர் பின்பற்றிய நாம் அனைவரும் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்," என டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

    "ஆர்.ஐ.பி. ஜார்டன் மூரெ. இவரின் இலட்சியம் நம்மை போன்று பலருக்கு தொழில்நுட்ப துறையில் கவனம் செலுத்த தூண்டியது. இவர் எனக்கு தூண்டுகோளாக இருந்துள்ளார். இவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் இண்டெல் நிறுவனத்தார் அனைவருக்கும் இரங்கல்கள்," என்று சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    1968 ஜூலை மாத வாக்கில் இண்டெல் நிறுவனத்தை ஜார்டன் மூரெ மற்றும் ராபர்ட் நைஸ் இணைந்து துவங்கினர். இருவரும் நீண்டகால நண்பர்கள் ஆவர். மூரெ இண்டெல் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவராக பணியாற்றி வந்தார். பின் 1979 ஆம் ஆண்டு இவர் இண்டெல் நிறுவன நிர்வாக குழு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். 

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • 2022 ஆண்டு சாம்சங் நிறுவனம் இரண்டு வழிகளில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை காட்சிப்படுத்தி இருந்தது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபேன் எடிஷன் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனினை உருவாக்கவில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனிற்கு மாறாக சாம்சங் நிறுவனம் டிரை-ஃபோல்டு டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஒற்றை ஹிஞ்ச் வழங்கப்ப்ட்டு இருக்கிறது. முன்னதாக சாம்சங் நறுவனம் மூன்று மடிக்கும் பாகங்களை கொண்ட கான்செப்ட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது.

     

    டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 FE மாடலை உருவாக்கவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சாம்சங் தனது கேலக்ஸி S21 FE மாடலின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்யவில்லை. கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி S23 FE வெளியீடு பற்றி சாம்சங் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் கவனம் செலுத்துவதற்கு மாற்றாக சாம்சங் நிறுவனம் மேம்பட்ட Z சீரிஸ் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இவை கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் டிரை-ஃபோல்டு டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.

    • நத்திங் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • நத்திங் இயர் (2) மாடல் இந்தியாவில் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இரண்டாவது தலைமுறை இயர் (2) இயர்பட்ஸ்-ஐ இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த இயர்பட்ஸ்-க்கான குறுகிய கால விற்பனையை நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    குறுகிய கால விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா வலைத்தளங்களில் நாளை (மார்ச் 25) மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. இதுதவிர மார்ச் 28 ஆம் தேதி இதன் விற்பனை துவங்க இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் அதன் முந்தைய மாடலை போன்றே டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதுதவிர இந்த மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    நத்திங் இயர் (2) மாடலில் உள்ள 11.6mm கஸ்டம் டிரைவர், புதிய டூயல் சேம்பர் டிசைன் ஒட்டுமொத்த சவுண்ட் தரத்தை மேம்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ் அதிகபட்சம் 40db நாய்ஸ் ரிடக்ஷன், ஸ்மார்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், மேம்பட்ட விண்ட் ப்ரூஃH் மற்று்ம கிரவுட் ப்ரூஃப் க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த வாரம் துவங்க இருக்கும் விற்பனைக்கு முன்பே நத்திங் இயர் (2) மாடலை வாங்க விரும்புவோர் நாளைய சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய நத்திங் இயர் (2) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சைபர் குற்றத்தில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார்.
    • மின்துறையில் இருந்து குறுந்தகவல் அனுப்புவது போல் மோசடி பேர்வழிகள் மும்பை பெண்மணியை ஏமாற்றியுள்ளனர்.

    மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த 65 வயது பெண்மணி சைபர் ஊழலில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்தவில்லை என பெண்மணிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கு பதில் அளித்த பெண்மணி ஹேக்கர்களிடம் சிக்கி, தனது பணத்தை இழந்திருக்கிறார்.

    மின் கட்டணம் செலுத்தவில்லை என ஹேக்கர்கள் அனுப்பிய குறுந்தகவலை நம்பி, அவர்களை பாதிக்கப்பட்ட பெண் தொடர்பு கொண்டிருக்கிறார். மறுபுறம் பெண்மணிக்கு பதில் அளித்த ஹேக்கர்கள் பெண்ணின் கணினியில் டீம் வியூவர் (வேறொரு இடத்தில் இருந்தபடி மற்றவர் கணினியை இயக்கச் செய்யும் சேவை) எனும் செயலியை இன்ஸ்டால் செய்யக் கூறி இருக்கின்றனர்.

     

    இதை கேட்ட பெண், ஹேக்கர்களிடம் தனது கணினியை பயன்படுத்த அனுமதித்துள்ளார். இவ்வாறு செய்த சிறிது நேரத்தில், பெண்மணியின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் எடுக்கப்பட்டதை கூறும் நோட்டிஃபிகேஷன்கள் வந்துள்ளது. இதை பார்த்த பெண்மணி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கிறார்.

    வங்கி பரிவர்த்தனைகள் குறித்து எஸ்பிஐ வங்கியை சேர்ந்த குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மின் கட்டண பாக்கி இருப்பதை கூறும் எஸ்எம்எஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மொபைல் போனிற்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த எஸ்எம்எஸ்-இல் பணத்தை திரும்பி செலுத்த தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பர் இடம்பெற்று இருக்கிறது. இதில், மின் கட்டண பாக்கியை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதன் காரணமாக அந்த பெண் எஸ்எம்எஸ்-இல் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்தே ஹேக்கர்கள் நூதனமாக பேசி பெண்ணிடம் இருந்து அவரின் கணினியை பயன்படுத்தும் வசதியை பெற்றுள்ளனர். இவ்வாறு செய்த பின் பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கியில் இருந்து ரூ. 4 லட்சத்து 62 ஆயிரத்து 959, ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரம் பரிவர்த்தனைக்கான எஸ்எம்எஸ் வந்துள்ளது.

    இதை பார்த்து அதிர்ந்து போன பெண் உடனே எஸ்பிஐ வங்கியை தொடர்பு கொண்டு மோசடி பரிவர்த்தனைகள் பற்றி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் பலருக்கு நடந்துள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • புதிய பேஸ் சலுகைகள் பயனர்களுக்கு ட்ரூ5ஜி டேட்டா மற்றும் இலவசமாக கூடுதல் டேட்டா வழங்குகின்றன.

    2023 ஐபிஎல் போட்டிகள் அடுத்த வாரம் துவங்க இருக்கின்றன. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளை பயனர்கள் ஜியோ சினிமா செயலியில் இலவசமாக கண்டுகளிக்க முடியும். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ மூன்று பிரீபெயிட் சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய ஜியோ பிரீபெயிட் சலுகைகள் அதிகபட்சமாக தினமும் 3 ஜிபி டேட்டா, அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி, கூடுதலாக இலவச டேட்டா வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 999 விலைகளில் மொத்தம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

     

    இவற்றின் வேலிடிட்டி முறையே 14 நாட்கள், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகும். இத்துடன் ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புதிய சலுகைகளில் அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகளுடன் கூடுதல் டேட்டா வழங்கும் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 219 சலுகையுடன் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 25 வவுச்சர், ரூ. 399 சலுகையுடன் 6 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கும் ரூ. 61 வவுச்சர், ரூ. 999 சலுகையுடன் 40 ஜிபி வரையிலான டேட்டா வழங்கும் ரூ. 241 வவுச்சர் வழங்கப்படுகிறது.

    இந்த டேட்டா போதாது என்பவர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளை கிரிக்கெட் பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. இவற்றை நேரலையில் போட்டிகளை ஸ்டிரீம் செய்ய விரும்பும் பயனர்கள் ஆர்வமுடன் பயன்படுத்தலாம். கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ. 222, ரூ. 444 மற்றும் ரூ. 667 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    இதில் ரூ. 222 சலுகையின் வேலிடிட்டி பயனர்கள் பயன்படுத்தும் பேஸ் சலுகை முடியும் வரை வழங்கப்படுகிறது. ரூ. 444 மற்றும் ரூ. 667 விலை சலுகைகள் முறையே 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. டேட்டாவை பொருத்தவரை ரூ. 222 சலுகை 50 ஜிபி, ரூ. 444 மற்றும் ரூ. 667 சலுகைகள் முறையே 100 ஜிபி மற்றும் 150 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    ×