search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறுப்பு"

    • நகர்மன்ற தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
    • நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், திருத்துறைப்பூண்டி நகராட்சி இணைந்து தேசிய ஒற்றுமை தின பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம் என்றார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சிற்றரசு, நகராட்சி அலுவலர்கள், மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் திருலோகசந்தர், அலுவலர் கனகதுர்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×