search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை அதிகரிப்பு"

    • மழை மற்றும் பனியால் சுரைக்காய் விளைச்சல் குறைந்து வரத்து குறைந்துள்ளது.
    • ரூ.20 முதல் ரூ. 22 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பெருந்துறை:

    பெருந்துறை தினசரி மார்கெட்டிற்கு சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுரைக்காயை கொண்டு விற்பனை செய்து வருகிறார்கள்.

    அவர்களிடம் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சில்லரையில் மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு சுரைக்காய் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது மழை மற்றும் பனியால் சுரைக்காய் விளைச்சல் குறைந்து மார்க்கெட்டிற்கு வரும் சுரைக்காய் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் ஒரு சுரைக்காய் விலை ரூ.20 முதல் ரூ. 22 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • தேனி மாவட்டம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் விளைகின்ற குறுமிளகு மிகுந்த காரத்தன்மையும், மருத்துவ குணமும் நிறைந்ததால் உலக நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உள்ளது.
    • போதிய மழையின்மை காரணமாக வறட்சியான சூழல் நிலவுவதால் மிளகு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் குறுமிளகு விளைச்சல் குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.

    போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான குரங்கணி, டாப் ஸ்டேஷன், போடி மெட்டு மற்றும் கேரள பகுதிகளான வண்டல் மேடு, பியல்ராவ், பூப்பாறை, ராஜா காடு, கஜானா பாறை போன்ற பகுதிகளில் மிளகு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் விளைகின்ற குறுமிளகு மிகுந்த காரத்தன்மையும், மருத்துவ குணமும் நிறைந்ததால் உலக நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உள்ளது.

    ஏலத் தோட்டத்தில் உள்ள மரங்களில் துணைப் பயிராக வளர்க்கப்படும் குறுமிளகு மத்திய அரசின் நறுமண உற்பத்தி பொருள்கள் அமைப்பு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

    ஏலக்காய் போன்று இதுவும் பணப்பயிர்களின் ஒன்றாக கருதப்படுவதாலும் முக்கிய ஏற்றுமதி பயிராக திகழ்வதாலும் மத்திய அரசு நறுமண ஏற்றுமதி பொருள்களின் விதிமுறைகள் இதற்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மிளகு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு 1 கிலோ ரூ. 430 முதல் முதல் ரூ.450 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ. 150 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்து முதல் தர மிளகு கிலோ ரூ. 650 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    வெளிச்சந்தையில் ரூ. 520 வரை விற்கப்பட்ட மிளகு தற்போது அதன் தரத்தை பொறுத்து ரூ.680 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது.

    போதிய மழையின்மை காரணமாக மிளகு சாகுபடி குறைந்து வருவதால் மேலும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விலை உயர்ந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    • நேற்று 1,115 கிலோவாக குறைந்தது. அதே நேரத்தில் பட்டுக்கூடு தேவை அதிகரித்ததால் நேற்று விலை அதிகரித்தது.
    • ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 586-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி, 

    தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,286 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,115 கிலோவாக குறைந்தது.

    அதே நேரத்தில் பட்டுக்கூடு தேவை அதிகரித்ததால் நேற்று விலை அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.22 அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.514-க்கும், குறைந்தபட்சமாக ரூ.310-க்கும், சராசரியாக ரூ.417.53-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 586-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    • மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
    • கடந்த மாதம் ரூ.130 வரை விற்பனையான பாமாயில் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.85 ஆக குறைந்திருக்கிறது.

    சென்னை:

    அரசுக்கு 'பட்ஜெட்' எப்படி முக்கியமோ, அதுபோல குடும்பங்களில் இல்லத்தரசிகள் மாதாந்திர வீட்டு 'பட்ஜெட்'டும் மிகவும் முக்கியமானது. 'பட்ஜெட்'டில் எப்போதுமே முதலிடம் என்றால், அது மளிகை பொருட்களுக்கு தான் இருக்கும். மளிகை பொருட்கள் வாங்கி சமையலறையில் இருப்பு வைத்தாலே, இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும்.

    அவ்வப்போது மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும்.

    அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-

    பொதுவாக தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்து தான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

    உதாரணமாக பருப்பு வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது. துவரம் பருப்பு விலை (கிலோவில்) ரூ.118-ல் இருந்து ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. சீரகத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த மாதம் ரூ.365-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.540-க்கு விற்பனை ஆகிறது. மிளகு விலை ரூ.50 உயர்ந்துள்ளது.

    அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாதா பொன்னி அரிசி விலை ரூ.900-ல் இருந்து ரூ.1,050 ஆக விலை அதிகரித்துள்ளது. மீடியம் பொன்னி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கிறது. பச்சரிசி விலை ரூ.1,500 ஆக அதிகரித்திருக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,100-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்ந்துள்ளது.

    அதேவேளை பாமாயில் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.130 வரை விற்பனையான பாமாயில் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.85 ஆக குறைந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/ மொத்த விலையில்)

    துவரம் பருப்பு- ரூ.160, சிறுபருப்பு- ரூ.110, உளுந்தம் பருப்பு- ரூ.120, உருட்டு கடலை- ரூ.65 முதல் ரூ.70 வரை, கடலை பருப்பு- ரூ.75, மிளகாய் தூள்- ரூ.430, தனியா தூள்- ரூ.224, மஞ்சள் தூள்- ரூ.156, சீரகம்- ரூ.540, சோம்பு- ரூ.290, கடுகு- ரூ.80, மிளகு- ரூ.540, வெந்தயம்- ரூ.80, ஆட்டா (10 கிலோ) - ரூ.490, மைதா (10 கிலோ) - ரூ.430, சர்க்கரை (50 கிலோ மூட்டை) - ரூ.2,050, வெல்லம்- ரூ.58, புளி- ரூ.90, பூண்டு (சாதா) - ரூ.110, பூண்டு (முதல் ரகம்) - 150, முந்திரி- ரூ.890, திராட்சை- ரூ.250, பாமாயில்- ரூ.85, சன் பிளவர்- ரூ.112, நல்ல எண்ணெய்- ரூ.270, தேங்காய் எண்ணெய்- ரூ.180, டால்டா- ரூ.102, ஏலக்காய்- ரூ.1,700, நீட்டு மிளகாய்- ரூ.315, தனியா- ரூ.120, பச்சை பட்டாணி- ரூ.78, வெள்ளை பட்டாணி- ரூ.68, கருப்பு சென்னா- ரூ.69, சாதா பொன்னி (26 கிலோ மூட்டை) - ரூ.1,050, மீடியம் பொன்னி - ரூ.1,200, முதல் ரக பொன்னி- ரூ.1,500, பச்சரிசி- ரூ.1,500, பாசுமதி அரிசி- ரூ.3,400, பிரியாணி அரிசி- ரூ.2,600, இட்லி அரிசி- ரூ.900.

    போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    • கடத்தூரில் வெற்றிலை மார்க்கெட் வாரந்தோறும் கூடும்.
    • வெற்றிலை விலை மிகவும் உயர்ந்துள்ளதாக வியாபா ரிகள் தெரிவித்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரில் வெற்றிலை மார்க்கெட் வாரந்தோறும் கூடும்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வெற்றி லையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் வெற்றிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு வெற்றிலை வரத்து குறைந்து வருகிறது.

    இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.22 ஆயிரம் வரை விற்பனையானது.

    இந்த வாரம் வெற்றிலை விலை மேலும் அதிகரித்தது. ஒரு மூட்டை வெற்றிலை குறைந்த பட்சமாக ரூ.22 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.

    வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால் தேவை அதிகரித்து வெற்றிலை விலை மிகவும் உயர்ந்துள்ளதாக வியாபா ரிகள் தெரிவித்தனர்.

    சமீப காலத்தில் இவ்வளவு கூடுதலான விலை கிடைக்காத நிலையில் இந்த விலை உயர்வு வெற்றிலை விவசாயிகளை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    • யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    வங்கக்கடலில் உரு வாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நாட்டுப்படகு மற்றும் சிறிய வகை பைபர் படகுகளில் சென்று மீன் பிடித்து வந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குறைந்த அளவிலான மீன்கள் வரத்து இருந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதில் ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்பனை செய்த அதலை மீன் 450 ரூபாய்க்கும்,ரூ. 200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படும் பாறை மீன் 350 ரூபாய்க்கும், வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றதை காண முடிந்தது.

    • பெருமாள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனுக்காக பலர் முடி காணிக்கையும் செலுத்தினர்.
    • இந்தவாரம் மீன்கள் விலை சற்று அதி கரித்து காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரி புலியூர் ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு கடலூர் மற்றும் வெளியூரை சேர்ந்த மக்கள் வந்து மீன்கள் வாங்கி செல்வார்கள். புரட்டாசி மாதம் பிறந்த தில் இருந்து கடலூரை சேர்ந்த ஏராளமான மக்கள் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனுக்காக பலர் முடி காணிக்கையும் செலுத்தினர். நேற்றுடன் 3-வது புரட்டாசி சனிக்கி ழமை முடிந்தது. எனவே கடலூரை சேர்ந்த பொது மக்கள் பெருமாளுக்குரிய விரதத்தை முடித்துக் கொண்டனர். இன்று காலை மீன் வாங்குவதற்காக கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், முதுகநர், திருப்பாதிரி புலியூர் மீன் மார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கு போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.

    இதேபோல இறைச்சி கடையிலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூட்டம் அலை மோதியது. இதனால் ஓரளவு விற்ப னையும் அதிகரித்தது.கூட்டம் அதிகரிப்பு காரணமாக கடந்த வாரத்தை விட இந்தவாரம் மீன்கள் விலை சற்று அதி கரித்து காணப்பட்டது. விலை உயர்வு விபரம் வருமாறு:- சங்கரா ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆகவும், வஞ்சரம் ரூ.700-ல இருந்து ரூ.800 ஆகவும், சீலா ரூ.250-ல் இருந்து ரூ.350 ஆகவும், இரால் ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆகவும், கணவாய் ரூ.200-ல் இருந்து ரூ.250 ஆகவும், பாறை ரூ.300-ல் இருந்து ரூ.400 ஆகவும், கானாங்கத்தை ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும் உள்ளது.

    ×