search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாகா கமிட்டி"

    • மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர்.
    • விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் தனலட்சுமி தலைமையிலான விசாகா குழுவினர், இந்த விசாரணையை நடத்தினர்.

    கடந்த 10-ந் தேதி விசாரணை தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. புகார் கூறியவர்களில் 21 மருத்துவ மாணவிகள், ஒரு செவிலியர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள், விசாகா கமிட்டி முன்பாக விசாரணைக்கு ஆஜரானபோது, ஒருவித அச்சத்தோடு இருந்தனர். செய்யது தாகிர் உசேன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், கேலியான பெயரை கூறி அழைத்ததாகவும், ஆபரேசன் தியேட்டருக்கு செல்லவே தயக்கமாக இருந்ததாகவும் விசாரணையின்போது, பெரும்பாலானவர்கள் கூறினர்.

    விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனையில் 62 சதவீதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். செய்யது தாகிர் உசேன் மீது 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு புகார்கள் வந்தன. ஆனால் எழுத்துப்பூர்வமாக கிடைக்கவில்லை. ஆனால் தற்போது 23 மாணவிகள் கைப்பட எழுதி புகார் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு பழிவாங்கும் நோக்கம் இல்லை. பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்யது தாகிர் உசேன் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இதுவரை எழுத்துப்பூர்வமாக அளித்த அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் சரண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
    • பாலியல் தொல்லை தொடர்பாக சரண்யா மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னியிடம் புகார் செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் பணிபுரிகின்றனர். அங்கு வரவேற்பாளராக பெண் போலீஸ் சரண்யா (வயது 28) என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் சரண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னியிடம் புகார் செய்தார்.

    அதன்பேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரனுக்கு டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன் மற்றும் போலீஸ்காரர் கண்ணன் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீது விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தெரிவித்துள்ளார்.

    பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலான போக்சோ-2012 சட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக காவல்துறைக்கு அச்சமில்லாமல் தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதனை மறைக்க கூடாது. 

    அதேபோல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி மற்றும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை அச்சிட வேண்டும், விசாகாகமிட்டி அமைக்கப்படாத பள்ளிகளில் உடனடியாக அவற்றை அமைத்திட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    ×