search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கில்"

    • மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த ஒருவர் திடரென கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தார்.
    • 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.

    தஞ்சாவூர்:

    காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.

    இவரது மனைவி கண்ணம்மை (வயது 51).

    இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலைபார்த்து வருகிறார்.

    இதற்காக அவர்கள் குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தங்கி உள்ளனர்.

    இவரது மகன் அரவிந்த் (20) தஞ்சை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக சுப்பிரமணியன் தனது மனைவி கண்ணம்மை, மகன் அரவிந்த் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு வந்திருந்தார்.

    நேற்று அரவிந்தை அவர் படிக்கும் கல்லூரியில் கொண்டு விடுவதற்காக காரில் காரைக்குடியில் இருந்து தஞ்சைக்கு குடும்பத்துடன் வந்தார்.

    அப்போது மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை அறிந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு காரைக்குடிக்கு செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி 3 பேரும் சாப்பிட்டு விட்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த காரின் அருகில் வந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த மர்ம நபர் ஒருவர் திடரென கண்ணம்மையின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார்.

    இதில் 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.

    இதில் அதிர்ச்சியடைந்த கண்ணம்மை மற்றும் குடும்பத்தினர் திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டனர்.

    ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அவர் தமிழ்பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொருட்கள் வாங்க பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார்.
    • கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சம்பவத்தன்று பல்லடத்தில் உள்ள அரசு வங்கியில் ரூ.60 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு, அதனை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துள்ளார்.

    பின்னர் பொருட்கள் வாங்க பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடையின் முன்பு நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதையடுத்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் கடைவீதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சென்னை அடையாறில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணி செய்து வந்தார்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் கமலதாசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்தவர் கமலதாசன் (வயது 44). இவர் சென்னை அடை யாறில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணி செய்து வந்தார்.

    நேற்று மாலை கமலதாசன், பொன்னேரியில் இருந்து காட்டாவூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கூடுவாஞ்சேரி சாலை அருகில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளை கமலதாசன் திருப்பினார். இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளோடு சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் கமலதாசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கமலதாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காய்கறிகளை வாங்கி கொண்டு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
    • வங்கியில் இருந்து ரூ. 4 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கம்பளியம்பட்டி, அரண்மனைபுதூரை சேர்ந்த பழனிச்சாமி மகன் விஜயராஜ் (வயது 60) ,விவசாயி. இவர் நேற்று வியாழக்கிழமை பகல் 12 மணி அளவில் வெள்ளகோவிலில் திருச்சி -கோவை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து தனது தேவைக்காக ரூ. 4 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு அதை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். பின்பு தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு காய்கறி கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்கி கொண்டு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காங்கேயம் போலீஸ் துணை டி.எஸ்.பி பார்த்திபன் மற்றும் போலீசார் வெள்ளகோவிலில் திருட்டுப் போன இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

    அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும் விஜயராஜ் கடைக்குச் சென்று திரும்புவதற்குள் அவரது மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தில் இன்னும் 2 நபர்கள் கூடுதலாக விஜயராஜை வங்கியில் இருந்து பின்தொடர்ந்து வந்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து பணத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி ரம்யா அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர்.
    • கொள்ளையர்கள் வாகன சோதனையில் சிக்கினர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 1- ம் தேதி அன்று வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பினார்.

    அவர் ஆலக்குடி ரெயில்வே ஸ்டேஷன் அருகே சென்ற போது பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரம்யா அணிந்திருந்த தங்க செயின் மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ரம்யா வல்லம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் கொள்ளையர்களை பிடிக்க வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர சாமிநாதன், போலீஸார் புவனேஸ், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பை அருகே தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தஞ்சை அண்ணா நகரை சேர்ந்த கபினேஷ் (வயது 21 ), தஞ்சை நாவலர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (23) என்பதும், ரம்யாவிடம் செல்போன் மற்றும் நகைகளை பறித்து சென்ற கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வல்லம் இன்ஸ்பெ க்டர் செந்தில்கு மார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து கபினே ஷ்,ரவிச்ச ந்திரன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடை ய மேலும் 2 பேரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    • ேமாட்டார் சைக்கிளில் கிராம நிர்வாக அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறியதில் கீழே விழுந்தில் ஜெயபால் பலத்த காயம் அடைந்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 58) .

    விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்காடு கிராம நிர்வாக அலுவலகம் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலகம் அருகே சற்றுதூரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறியதில் கீழே விழுந்துள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த ஜெயபால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சை க்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபால் உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் சதிஷ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    வீயன்னூர் அருகே மஞ்சாடிவிளை பகுதியை சேர்ந்தவர் யூஜின் (வயது36).

    இவர் திங்கள் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வழக்கம் போல பணியை முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.தக்கலை அருகே சாரோடு பகுதியில் வரும் போது யூஜின் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் விழுந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த இவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் இவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி யூஜின் பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக இவரது மனைவி பிச்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    • கடந்த அக்டோபர் மாதம் பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
    • சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ததில் அடையாளம் தெரிந்தது

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மருதன்கோடு பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.

    இது குறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    தனிப் பிரிவு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் நடத்திய இந்த விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டவன் அடையாளம் தெரியவந்தது. அவனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அடையாளம் காணப்ப ட்டவன் கேரள மாநிலம் பாற சாலை பகுதியைச் சேர்ந்த ஜினில் (வயது 28) என்பது உறுதியானதால் சப்- இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான தனிப் படை போலீசார் கேரளா விரைந்தனர். அவர்கள் பாறசாலையில் பதுங்கி இருந்த ஜினிலை கைது செய்தனர்.தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஜினில், இருசக்கர வாகனத்தில் சென்று பல பெண்களிடம் நகை பறித்து இருப்பதும் அவன் மீது கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் குற்றச் செயலில் ஜினிலுடன் ஈடுபட்டு வந்த அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • சென்னையில் இருந்து, ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.
    • தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    தாராபுரம், எம்.எஸ்.பி., நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி ஆர்த்தி இவர்களுக்கு, யாழினிஎன்ற ஒரு வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் இருந்து,ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.

    தொடர்ந்து, தாராபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் குழந்தைஉட்பட, 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையத்தை அடைந்த போது, வேகத்தடை இருப்பதுதெரியாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஏற்றினார். அப்போது, வண்டியில் அமர்ந்திருந்த ஆர்த்தியின் கையில் இருந்த குழந்தை கை தவறி ரோட்டில் விழுந்து படுகாயமடைந்தது.

    இதையடுத்து தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,பின், திருப்பூருக்கு கொண்டு செல்லும் போதுகுழந்தை பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×