search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலி
    X

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலி

    • சென்னை அடையாறில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணி செய்து வந்தார்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் கமலதாசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்தவர் கமலதாசன் (வயது 44). இவர் சென்னை அடை யாறில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணி செய்து வந்தார்.

    நேற்று மாலை கமலதாசன், பொன்னேரியில் இருந்து காட்டாவூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கூடுவாஞ்சேரி சாலை அருகில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளை கமலதாசன் திருப்பினார். இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளோடு சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் கமலதாசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கமலதாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×