search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி கற்பழிப்பு"

    • முப்புடாதி மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார்.
    • தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பழனி ஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி முப்புடாதி (வயது 65).

    இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டதால் மகன் ராமருடன் வசித்து வந்தார். ராமருக்கு திருமணமாகியதால் அருகில் உள்ள ஆவுடையானூரில் மனைவியுடன் அவர் வசித்து வருகிறார். இதனால் மூதாட்டி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் முப்புடாதி அங்குள்ள மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், தென்காசி ஏ.டி.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அவர் ஆடை இன்றி நிர்வாண நிலையில் காணப்பட்டார். இதனால் அவர் பாலியல் துன்புறுத்தலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்த ராமர் (72) என்பவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ராமர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட மூதாட்டி கை மற்றும் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
    • மூதாட்டி படுத்திருந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் சித்தாரா சந்திப்பு அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மூதாட்டி ஒருவர், அரை நிர்வாண கோலத்தில் ரத்த வெள்ளத்தில் காயமடைந்து கிடந்தார்.

    இதனை அந்தவழியாக சென்ற பூசாரி மற்றும் ஆட்டோ டிரைவர் பார்த்தனர். மூதாட்டி ரத்தவெள்ளத்தில் காயமடைந்து கிடந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. அவர் யார்? என்று விசாரித்த போது, கொட்டியம் பகுதியை சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி என்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து மூதாட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு கொட்டியம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

    பாதிக்கப்பட்ட மூதாட்டி கை மற்றும் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார். சம்பவத்தன்று இரவு அவர், தனது வீட்டின் அருகே உள்ள கடையின் முன்பு படுத்து தூங்கியிருக்கிறார். அப்போது தான் அவர் அந்த இடத்தில் இருந்து காணாமல் போயிருக்கிறார்.

    அவரை யாரேனும் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆகவே மூதாட்டி படுத்திருந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர், மூதாட்டியை தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த வாலிபர் யார்? என்று போலீசார் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் அந்த வாலிபர் கொட்டாரக்கரை ஓயூரை சேர்ந்த ரஷீத் (வயது33) என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். ஆட்டோவில் மீன் விற்பனை செய்து வந்த அவர், சம்பவத்தன்று இரவு கடையின் முன்பு படுத்து தூங்கிய மூதாட்டியை தாக்கி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

    பின்பு மூதாட்டியை அங்கேயே போட்டுவிட்டு வந்திருக்கிறார் என்ற தகவல் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் ரஷீத்தை போலீசார் கைது செய்தனர். கடையின் முன் படுத்து தூங்கிய உடல் ஊனமுற்ற மூதாட்டியை, வாலிபர் ஒருவர் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கொட்டியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    • மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன் என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் அம்பேத்கர் நகரில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். அந்த மூதாட்டியின் வீடு நேற்று வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு அந்த மூதாட்டி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகமும் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன்(வயது30) என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது அவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

    மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தெருத்தெருவாக சென்று குப்பைகள் மற்றும் பழைய பேப்பர்களை சேகரித்து விற்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்த அவர், தற்போது கொலை வழக்கிலும் சிக்கியுள்ளார்.

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காலையில் நீண்ட நேரமாகியும் மூதாட்டி வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
    • மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவருக்கு கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாததால் அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த 3 வாலிபர்கள் மூதாட்டி வீட்டிற்கு சென்று கதவை தட்டினார்.

    தூக்கத்தில் இருந்த மூதாட்டி எழுந்து வந்து கதவை திறந்தார். அப்போது மூதாட்டியை வீட்டிற்குள் தூக்கிச் சென்றவர்கள் கத்தி கூச்சலிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினர். காலையில் நீண்ட நேரமாகியும் மூதாட்டி வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து கடப்பா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மூதாட்டியை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக உள்ள கட்டிட தொழிலாளியை நெகமம் போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி.

    இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை 6 மணியளவில் மாடுகளை தோட்டத்தில் கட்டி வைப்பதற்காக சென்றார்.

    அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 25 வயது வாலிபர் வந்தார். அவர் திடீரென தான் அணிந்து இருந்த வேட்டியால் மூதாட்டியின் முகத்தை கட்டினார். பின்னர் அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

    வீட்டுக்கு சென்ற மூதாட்டி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் தனது மனைவியை ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து நெகமம் போலீசில் மூதாட்டியின் கணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

    மூதாட்டியை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக உள்ள கட்டிட தொழிலாளியை நெகமம் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×