search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடைக்கு முன் படுத்து தூங்கிய ஊனமுற்ற மூதாட்டியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
    X

    போலீசார் ரஷீத்தை அழைத்துச் சென்ற காட்சி.

    கடைக்கு முன் படுத்து தூங்கிய ஊனமுற்ற மூதாட்டியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

    • பாதிக்கப்பட்ட மூதாட்டி கை மற்றும் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
    • மூதாட்டி படுத்திருந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் சித்தாரா சந்திப்பு அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மூதாட்டி ஒருவர், அரை நிர்வாண கோலத்தில் ரத்த வெள்ளத்தில் காயமடைந்து கிடந்தார்.

    இதனை அந்தவழியாக சென்ற பூசாரி மற்றும் ஆட்டோ டிரைவர் பார்த்தனர். மூதாட்டி ரத்தவெள்ளத்தில் காயமடைந்து கிடந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. அவர் யார்? என்று விசாரித்த போது, கொட்டியம் பகுதியை சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி என்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து மூதாட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு கொட்டியம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

    பாதிக்கப்பட்ட மூதாட்டி கை மற்றும் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார். சம்பவத்தன்று இரவு அவர், தனது வீட்டின் அருகே உள்ள கடையின் முன்பு படுத்து தூங்கியிருக்கிறார். அப்போது தான் அவர் அந்த இடத்தில் இருந்து காணாமல் போயிருக்கிறார்.

    அவரை யாரேனும் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆகவே மூதாட்டி படுத்திருந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர், மூதாட்டியை தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த வாலிபர் யார்? என்று போலீசார் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் அந்த வாலிபர் கொட்டாரக்கரை ஓயூரை சேர்ந்த ரஷீத் (வயது33) என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். ஆட்டோவில் மீன் விற்பனை செய்து வந்த அவர், சம்பவத்தன்று இரவு கடையின் முன்பு படுத்து தூங்கிய மூதாட்டியை தாக்கி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

    பின்பு மூதாட்டியை அங்கேயே போட்டுவிட்டு வந்திருக்கிறார் என்ற தகவல் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் ரஷீத்தை போலீசார் கைது செய்தனர். கடையின் முன் படுத்து தூங்கிய உடல் ஊனமுற்ற மூதாட்டியை, வாலிபர் ஒருவர் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கொட்டியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×