search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வலங்கைமான் அருகே 65 வயது மூதாட்டியை கற்பழித்த விவசாயி கைது
    X

    வலங்கைமான் அருகே 65 வயது மூதாட்டியை கற்பழித்த விவசாயி கைது

    65 வயது மூதாட்டியை விவசாயி கற்பழித்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சேணியாகுளிக்கரை பகுதியை சேர்ந்தவர் சீதை (வயது 65). துப்புரவு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்நத விவசாயி ரமேசுக்கும் (40) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் சீதையும், ரமேசும் ஒன்றாக அமர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சீதை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ், திடீரென சீதையை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக தெரிகிறது.

    அப்போது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் வந்தனர். அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைநத் ரமேஷ், இந்த வி‌ஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    இந்த சம்பவம் பற்றி வலங்கைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சீதையை கற்பழித்த ரமேசை கைது செய்தனர். தற்போது மூதாட்டி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    65 வயது மூதாட்டியை விவசாயி கற்பழித்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

    Next Story
    ×