search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் அச்சம்"

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.
    • வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாலபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.

    அப்பகுதியில் மரத்தடியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கு வந்த காட்டு யானை மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றி வந்து சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானை ஊருக்குள் புகுந்து மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வழிப்பறி சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள், சமூக விரோத கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. தனியாக செல்லும் பெண்கள், பூட்டியிருக்கும் வீடுகள் ஆகியவற்றை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர்.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களிடம் மர்ம கும்பல் நகை பறிப்பில் துணிச்சலாக ஈடுபட்டு வருகிறது. விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    நேற்றும்கூட பட்டம்புதூரை சேர்ந்த பலசரக்கு வியாபாரி முருகேசன் என்பவர் தனது மனைவி ஜீவராணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதுஅவரை மறித்த மர்ம நபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றது. இதுபோன்று விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் ஏராளமானோர் நகை-பணத்தை பறி கொடுத்து போலீஸ் நிலையங்களில் அைலந்து வருகின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் சாத்தூரில் 54 பவுன் நகை திருடுபோனது. இதுதொடர்பாக சாத்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

    போலீசாரின் மெத்தன நடவடிக்கையால் சமூக விரோத கும்பல் துணிச்சலாக கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முதியவர்கள், பெண்கள் தனியாக வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

    இதுதவிர மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை, ரேசன் அரிசி கடத்தல் போன்றவையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    ×